Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Eelam People’s Revolutionary Liberation Front’ Category

April 06 Week – LTTE, Viduthalai Pulikal, Sri Lanka, Eelam: BBC Tamil – News, Attacks

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 7, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஏப்ரல், 2008

இலங்கையின் மடு மற்றும் மாந்தை பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் சண்டைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தைச் சேர்ந்த மடு மற்றும் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து 6500 பாடசாலை மாணவர்கள் உட்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வெள்ளாங்குளம் பிரதேசத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உயிலங்குளம் ஊடான மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கான பாதை மூடப்பட்டிருப்பதனால், மன்னார் நகரில் அமைந்துள்ள அந்த மாவட்டத்தின் அரச செயலகத்திற்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் இடையிலான நிர்வாக ரீதியிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண உதவிச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக மன்னார் அரசாங்க அதிபர் நீக்கிலாஸ்பிள்ளை கூறுகின்றார்.

ஆசிரியப் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அரசாங்கம் வழங்கும் இலவச பாட நூல்கள் சென்று கிடைக்காமை போன்ற பல்வேறு சிரமங்களுக்கு இந்த மாணவர்கள் முகம் கொடுக்க நேரிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடபகுதியில் தற்போது நடந்துவரும் சண்டை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகிவருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் எழுபது பேர் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அண்மித்த முன்னரங்கப் பகுதிகளில் பெரும்பாலும் நடந்த மோதல்களில் அரச படைத் தரப்பில் பத்து பேர் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் சார்பாகப் பேசவல்லவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் விடுதலைப் புலிகளோ, தமது தரப்பில் மூன்று பேரை மட்டுமே இழந்திருப்பதாகவும், இராணுவத்தினர் முப்பது பேருக்கும் அதிகமானோரை தாங்கள் கொன்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இலங்கையில் சித்திரையே தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாட இந்துமா மன்றம் முடிவு

அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ்
அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ்

இந்தியாவில் தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பிற்குப் பதிலாக தைப்பொங்கல் தினத்தையே அங்குள்ள தமிழர்கள் தமது வருடப்பிறப்பாகக் கடைப்பிடிக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை இந்துமா மன்றம் அண்மையில் கொழும்பில் ஒரு கருத்தரங்கு ஒன்றினை நடத்தியிருந்தது. இதில் பிரபல சிவாச்சாரியார்கள், ஆலய அறங்காவலர்கள், தர்மகர்த்தாக்கள், சோதிடர்கள் என்று பலரும் கூடி தமிழ்வருடப்பிறப்பு தையிலா அல்லது சித்திரையிலா என்பது குறித்து தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் இலங்கையின் சமுதாயக்கட்டமைப்பில் காலங்காலமாக கொண்டாடப்பட்டு வந்த சித்திரை வருடப் பிறப்பே தொடந்தும் வருடப்பிறப்பாகக் கொண்டாட வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக கொழும்பு செய்தியாளர் பி. கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 ஏப்ரல், 2008


இலங்கை போர்முனைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுப்பட்ட கருத்து வெளியிடல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கை அரசப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ள நிலையில், இந்தாண்டில் மட்டும் சுமார் 2000 விடுதலைப் புலிகளை கொன்றுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

போர்முனைகளுக்கு செல்வதற்கு வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் சொல்லும் எண்ணிக்கையை சரி பார்க்க முடியாத நிலை உள்ளது.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக இருத்தரப்பும் மாறுப்பட்ட கருத்துக்களை கூறுகின்றனர். இது தொடர்பாக பிபிசியின் இலங்கை செய்தியாளர் ரோலண்ட் பேர்க் அவர்கள் அனுப்பியுள்ள செய்தி குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 ஏப்ரல், 2008


சிங்கள மீனவர்கள் 10 பேரை தமிழக மீனவர்கள் சென்னைக்கு கொண்டுவந்துள்ளனர்

இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கடலில் மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலைத் தொடர்ந்து 10 சிங்கள மீனவர்களை சென்னை மீனவர்கள் சிறைபிடித்து அவர்களை சென்னை காசி மேடு மீனவர் துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தமிழக காவல் துறை தெரிவித்திருக்கிறது.

சிங்கள மீனவர்கள் வந்த இரண்டு படகுகளும் தமிழக மீனவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மோதலில் சிங்கள மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல் துறை கூறுகிறது. மீனவளத் துறை அதிகாரிகளால் சிங்கள மீனவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 ஏப்ரல், 2008


ஜேவிபியில் மோதலுக்கு என்ன காரணம்-ஆய்வு

உறவும் பிரிவும்
உறவும் பிரிவும்

இலங்கையின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்கள் காரணமாக அந்தக் கட்சி பிளவுபடும் நிலையில் இருக்கிறது என்பது தொடர்பான செய்திகள் தமிழோசையில் ஏற்கனெவே ஒலிபரப்பகியிருந்தன.

ஜே வி பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியானது மார்க்ஸிய சித்தாந்தம் மற்றும் சிங்கள தேசியவாதம் ஆகிய இரு கொள்கைகளையுமே கடைபிடித்து வருகிறது என்றும். அவர்களின் அடிப்படை கொள்கை திட்டங்களான போரை முன்னெடுத்துச் செல்வது மற்றும் தனியார் மயமாதலை நிறுத்துவது போன்ற செயல்களை தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷாவே செய்து வருவதால், எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும், அரசை எதிர்ப்பதற்கு எந்த விடயமும் அதன் கையில் இல்லை என்று ஜேவிபி குறித்த ஆய்வை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர் ராஜேஷ் வேணுகோபால் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசை எதிர்ப்பதற்கு எந்த விடயமும் அவர்களிடத்தில் இல்லாத நிலையில் கட்சியில் ஒரு பிரிவினர் ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் பெரும்பான்மையாக இருக்கும் குழுவினர் ஜனாதிபதியை மேலும் கடுமையாக எதிர்க்கும் நிலையையும் எடுத்துள்ளார்கள் எனவும் தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.

கட்சி மாநாட்டில் தொண்டர்கள்-ஆவனப்படம்
ஜேவிபி மாநாடு ஒன்றில் தொண்டர்கள்-ஆவனப் படம்

கட்சியில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவானது மஹிந்த ராஜபக்ஷவுக்கு வலு சேர்க்கும் எனக் கூறும் அவர், வரக்கூடிய தேர்தல்களில் சிங்களவாத கட்சிகளான ஜேவிபி மற்றும் ஜேஹெச்யூ போன்ற கட்சிகளுக்கான ஆதரவுக் குறையக்கூடும் எனவும் கூறுகிறார்.

கட்சிக்குள் தொண்டர்களின் ஆதரவு, போட்டிக் குழுவின் தலைவரான விமல் வீரவன்ச அவர்களுக்கே அதிகம் இருக்கக் கூடும் என தான் கருதுவதாக ஆராய்ச்சியாளர் ராஜேஷ் வேணுகோபால் கூறினார்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 ஏப்ரல், 2008

புனித இருதயநாதர் ஆலயத்தை தாம் சேதப்படுத்தவில்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கே மடு மாதா தேவாலய வளாகத்தில் உள்ள புனித இருதயநாதர் தேவாலயத்தை இலங்கை இராணுவம் எறிகணைகளை ஏவி சேதப்படுத்தியதாக விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

தேவாலய வளாகத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் வகைதொகையின்றி எறிகணைகளை ஏவியதாக விடுதலைப்புலிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். அந்த வளாகத்தில் உள்ள ஒரு தேவாலயம் மிகவும் கடுமையாக சேதமடைந்திருப்பதை அண்மையில் வந்த ஒரு புகைப்படம் காண்பிக்கிறது.

மடு தேவாலயத்தின் மூலத் திருச்சொரூபம் ஏற்கனவே ஆலயத்தில் இருந்து அகற்றப்பட்டு வேறு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மடுவை அண்மித்த பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெறுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

இந்த புனித இருதயநாதர் ஆலயம் சேதமடைந்ததா,இல்லையா என்பது குறித்து தமக்கு இதுவரை பக்கசார்பற்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்கிறார் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வரான அருட்தந்தை விக்டர் சூசை. ஊடகங்கள் மூலமே தாமும் அந்த தகவலை அறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு பாதிரிமாரோ, அல்லது கன்னியாஸ்திரிகளோ எவரும் இல்லாத காரணத்தினால் அந்தத் தகவலை தம்மால் உறுதி செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயினும் போர் மோதல்கள் நடக்கின்ற பரப்பாங்கண்டல், வடமுனை பகுதிகளில் உள்ள பல ஆலயங்கள் சேதமடைந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தமக்கு தகவல் தந்ததாகவும் அவர் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கட்சியில் இருந்து தான் விலக்கப்பட்டதாகக் கூறுகிறார் வீரவன்ச

இலங்கையின் அரசியல் களத்தில் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாகக் கருதப்படும் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளரும், அதன் பாராளுமன்றக் குழுத்தலைவருமான விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றியுள்ள உரையொன்றில் தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற தலைமைப்பீடம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் கட்சியின் இந்த முடிவானது எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவிருப்பதாகவும் அவர் இன்று பாராளுமன்றில் தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஜே.வி.பிக்குள் உட்கட்சிப்பூசலினால் பிளவு ஏற்பட்டிருப்பதாக அண்மையில் வெளியான செய்திகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதேவேளை, கட்சியின் இந்த முடிவுக்கு எதிப்புத் தெரிவித்தும், வீரவன்சவிற்கு ஆதரவு தெரிவித்தும் அந்தக் கட்சியின் 37 பாராளுமன்ற உறுப்பினர்களில், சுமார் 11 உறுப்பினர்கள் இன்று கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடொன்றினைக் கூட்டி, கட்சியின் தலைமைப் பீடத்திலுள்ள சில உறுப்பினர்கள் ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சியின் வலையில் சிக்கி, கட்சியின் பிரதான கொள்கைகளிற்கு எதிராகச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டினர்.

இவை குறித்து மேலதிக செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஏப்ரல், 2008

விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகளை தாக்கி அழித்துள்ளோம்: இலங்கை விமானப் படை

இலங்கையின் வடக்கே மாங்குளம் மற்றும் முகமாலை பகுதிகளில் விமானப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தளம் ஒன்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான பின்னணி தளம் ஒன்றும் அழிக்கப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை, வவுனியா, மன்னார் வெலிஓயா எனப்படும் மணலாறு ஆகிய போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

இந்தப் பகுதிகளில் ஞாயிரன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 50க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஒரு சில இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

விடுதலைப் புலிகள் இது குறித்து உடனடியாக கருத்து எதனையும் வெளியிடாத போதிலும், மன்னார் போர்க்கள முனைகளில் இந்த மாதத்தின் முதல் 5 தினங்களிலும் இடம்பெற்ற சண்டைகளில் 35 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் போன்றவற்றில் சிக்கியவர்கள் உட்பட இந்தக் காலப்பகுதியில் 120 படையினர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள். எனினும் இந்த விபரங்கள் குறித்து படைத்தரப்பிடமிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


அமைச்சர் ஜெயராஜ் படுகொலைக்கு சர்வதேச நாடுகள் கண்டனம்

படுகொலை செய்யப்பட்ட அமைச்சர் ஜெயராஜ்

இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகே கடந்த ஞாயிறன்று நடந்த ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே உட்பட சுமார் 14 சிவிலியன்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினை அமெரிக்கா மிகவும் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கொடூர பயங்கரவாதச் சம்பவத்தினை மேற்கொண்டவர்கள் இலங்கை மக்களுக்கு மேலும் இன்னல்களை விளைவித்திருப்பதனைத் தவிர வேறெதனையும் அடையவில்லை எனத் தெரிவித்திருப்பதோடு, தொடர்ச்சியான வன்முறைகளால் அல்லாது, அரசியல் தீர்வொன்றினைக் காணுவதே இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காண்பதற்கான ஒரேவழி என்றும் தெரிவித்திருக்கிறது.

கனடா, பிரான்ஸ், ஐரோப்பியன் ஆணையம் ஆகியவையும் இந்தத் குண்டுத் தாக்குதலை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.


மடு பிரதேசத்தில் சண்டைகள் முடிவுக்கு வரவேண்டும் எனக் கோரி விசேட பிரார்த்தனை

அரசாங்க அதிபரிடம் மகஜரைக் கையளிக்கிறார் மன்னார் ஆயர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்கின்ற உக்கிரச் சண்டைகளில் சிக்கியிருக்கும் மடுமாதா ஆலயப் பகுதியை யுத்த சூழலற்ற சமாதான வலயமாக்க வேண்டும் எனக் கோரி வவுனியாவில் இன்று விசேட வழிபாடு நடைபெற்றுள்ளது.

இந்த வழிபாட்டையடுத்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் வவுனியா அரசாங்க அதிபரிடம் மன்னார் ஆயர் தலைமையிலான கத்தோலிக்க மதகுருக்களினால் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பூஜை வழிபாடு இன்று வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மடு பிரதேசப் பகுதியில் இடம்பெறுகின்ற கடுமையான மோதல்கள் காரணமாக மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்புக்காக அங்கிருந்து வேறிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது

மடுமாதாவும் யத்தச் சூழலினால் பாதிக்கப்பட் பொதுமக்களைப் போன்று இடம்பெயர்ந்துள்ளமையானது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையைத் தோற்றுவித்திருக்கின்றது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


இலங்கை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 12 பேர் பலி

அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையின் மேல்-மாகாணத்திலுள்ள கம்பஹா மாவட்டத்தில் ஞாயிறு காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலொன்றில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே உட்பட சுமார் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஞாயிறு காலை கம்பஹா மாவட்டத்தில் வலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் புத்தாண்டையொட்டிய மராதான் ஓட்டப்போட்டியொன்றில் பிரதான விருந்திரனாக கலந்துகொண்டிருந்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே, அந்த ஓட்டப் போட்டியினை தொடக்கிவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது.

இதில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயுடன், இலங்கையின் முன்னாள் தடகளவீரரும், தெற்காசிய மராதான் ஓட்டப் போட்டியில் தங்கப்பதங்கம் வென்றிருந்தவருமான கே.எஸ் கருணாரட்ண மற்றும் தேசிய தடகளப் பயிற்றுவிப்பாளருமான லக்ஸ்மன் டீ அல்விஸ் உட்பட சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 90க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரியான எஸ்.எஸ்.பி. ஹெக்டர் தர்மசிறி உட்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கம்பஹா, மற்றும் ராகம தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் மிகவும் மோசமான நிலையிலிருந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளூர் தொலைக்காட்சிகளில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும், அதன் பின்னர் மராதான் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையும் விசேட செய்தி அறிவித்தல்களின்போது காண்பிக்கப்பட்டன.

பாதுகாப்புத்தரப்பினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனாலும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து இந்தக் குண்டுவெடிப்புக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியே காரணம் என்று ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தேசிய தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குண்டுத்தாக்குதலையும், அமைச்சரின் படுகொலைச் சம்பவத்தையும் விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயலெனக் கண்டித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கும் தனது அரசின் நடவடிக்கைகளிலும், திடசங்கற்பத்திலும் எவ்வித மாறுதல்களையும் இது ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியுடன், அமைச்சர் ஜெயராஜ்
இலங்கை ஜனாதிபதியுடன், அமைச்சர் ஜெயராஜ்

55 வயதான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஒரு சட்டத்தரணி ஆவார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததோடு, தனது அரசியல் வாழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து, கிறிஸ்தவ விவகாரங்கள், இனவிவகாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பல துறைகளில் பலவருடங்கள் அமைச்சராகவும் பதவிவகித்திருக்கிறார்.

இறக்கும்போது இவர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், பொருளாளராகவும் கடமையாற்றியிருந்ததோடு, அடுத்தமாதம் கிழக்கு மாகாணசபைக்காக இடம்பெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிய வருகிறது.

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் பின்னர் தென்னிலங்கையில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 8ம் திகதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற தேசநிர்மாண அமைச்சர் தஸ்ஸநாயக, ஜா-எல பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அமைச்சர் கொல்லப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து தடைகள்

ஏ9 பாதை
ஏ9 பாதை

இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, வவுனியாவுக்குத் தெற்கே ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதவாச்சி சோதனைச்சாவடியை பொலிசார் உடனடியாக மூடியதாகவும். இதனால் பல மணித்தியாலங்கள் இந்த சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டதாகவும் மதவாச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதவாச்சி சோதனைச்சாவடி மூடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சோதனைச்சாவடியின் இருபக்கங்களிலும் வந்து குவிந்த பயணிகள் பிற்பகல் ஒரு மணியளவிலேயே சோதனைச்சாவடியைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் இந்தச் சோதனைச்சாவடி பிற்பகல் 3 மணிக்கு மூடப்பட்டு, பொதுமக்கள் போக்குவரத்து மாலை 5 மணிவரையில் தடுக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையில் பயணத் தடை காரணமாக மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் ஒரு மணித்தியாலம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் மன்னார், வவுனியா, மணலாறு ஆகிய இடங்களில் உள்ள போர்முனைகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் வெளியேற்றம்

விவசாய வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் வெளியேற்றம்
விவசாய வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் வெளியேற்றம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடைக்காக வெளிமாவட்டங்களில் இருந்து சென்றிருந்த விவசாயத் தொழிலாளர்கள் அங்கு தங்கியிருப்பதற்கு இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து, கடும் மழையினால் அழிந்ததன் பின்னர் எஞ்சியுள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலத்திலான நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக மன்னார் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடைக்கான இயந்திரங்களை மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகக் கொண்டு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்துள்ள போதிலும், வயல்களில் இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் அவற்றைப் பயன்படுத்தி நெல் அறுவடை செய்ய முடியாத நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பதாக நானாட்டான் பிரதேச செயலாளர் திருஞானசம்பந்தர் அவர்கள் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் வவுனியா பிரதேசங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்திருந்த விவசாய தொழிலாளர்களைப் பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினர் வெளியேறுமாறு கூறியிருப்பதை மன்னார் அரசாங்க அதிபர் நீக்கிலாஸ்பிள்ளை உறுதி செய்தார். இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.


மடுமாதாகோவில் பிரதேசத்தை மோதல்கள் அற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை

மடுமாதா
மடுமாதா

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்கள் காரணமாக மடுக்கோவிலில் இருந்து எடுத்துச செல்லப்பட்டுள்ள மடுமாதா திருச்சொரூபத்தைத் தற்காலிகமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டியில் தொடர்ந்து வைத்திருப்பது என்றும், மடுக்கோவில் பகுதியை மோதல்களற்ற சமாதான பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி அதனை அமைதி வலயமாக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் நேரடியாக வலியுறுத்துவது என்றும், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் ஆயர் தலைமையில் அமைக்கப்படுகின்ற விசேட குழு, கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து தமது கோரிககை குறித்து வலியுறுத்தி எடுத்துக் கூறுவது என்றும், அதேவேளை, இலங்கை ஆயர் மன்றத்தின் ஊடாக மடுக்கோவில் சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கத்திடம் வலியுறுத்துவது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மன்னார் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சூசை அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட
அருட்தந்தையர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், மடுக்கோவிலில் இருந்து மடுமாதாவின் சொரூபம் தேவன்பிட்டியில் உள்ள தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து மடுக்கோவில் நிலைமைகள் குறித்து அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மடுக்கோவில் பிரதேசத்தில் தொடரும் உக்கிரச் சண்டைகளின் பின்னணியில் மடுக்கோவில் பற்றிய உண்மையான நிலைமை குறித்து அறிக்கையொன்றின் மூலம் வெளிக்கொணர்வது என்றும், மடுக்கோவில் பிரதேசத்தை சமாதான வலயமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்துக்களைச் சேகரிப்பது என்றும், வவுனியாவில் பேரணியொன்றை நடத்துவதுடன், மன்னார் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட கத்தோலிக்கத் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமைகள் தோறும் உண்ணா நோன்பிருந்து விசேட வழிபாடுகள் நடத்தி பிரார்த்திப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் மன்னார் குருமுதல்வர் விக்டர் சூசை அவர்கள் கூறினார்.


Posted in Eelam, Eelam People's Democratic Party, Eelam People's Revolutionary Liberation Front, Eelam Revolutionary Organisation, Eezam, Eezham, LTTE, Srilanka, Velupillai Prabhakaran, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal | Leave a Comment »

Sri Lanka to ban Tamil Tigers, abrogate CFA, says Gotabhaya

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகல்

இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை பார்ப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதற்கு மாறாக தேசத்தின் பாதுகாப்பு பலவகையிலும் அச்சுறுத்தப் படுவதாகவும் ரம்புக்கவெல்ல கூறினார்.

ஒவ்வொருநாளும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை இனிமேலும் நடைமுறைப் படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை இன்றிலிருந்தே தாங்கள் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

 


கொழும்பில் குண்டுத்தாக்குதல்-நான்கு பேர் பலி 28 பேர் காயம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் பயணம் செய்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகி, இருபத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கொழும்பின் இதயப் பகுதியான கொம்பனி வீதியில் இராணுவ பஸ் வண்டியை இலக்கு வைத்து, இன்று-புதன் கிழமை காலை நடத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண். பதினொரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டியொன்றும் சேதமடைந்திருக்கிறது.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

இராணுவத் தலைமையகம், விமானப்படைத்தலைமையகம் போன்ற பல்வேறு பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள நிப்பொன் ஹோட்டல் சந்திக்கு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் மிகவும் மோசமாக காயமடைந்திருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குண்டுவெடிப்பில் நிப்பொன் ஹோட்டலின் முன்புறம் மோசமாகச் சேதமடைந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதோடு, இந்தப்பகுதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.

குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து
குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து

இன்றைய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று கலை சுமார் 9.30 மணியளவில் நோய்வாய்ப்பட்டுள்ள இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டியை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் புலிகள் இதை மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு நிப்பொன் ஹோட்டலின் குளிரூட்டும் இயந்திரத்தின் வெளிப்பாகத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான புலன் விசாரணைகளை காவ்ல்துறையினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.

 


மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்
படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்

இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்

மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்.

அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

Posted in Agreement, Blasts, Bombs, Ceasefire, Ceylon, CFA, Colombo, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelam Revolutionary Organisation, Eezham, EPRLF, EROS, Fight, Gotabaya, Gotabhaya, Liberation Tigers of Tamil Eelam, LTTE, Magesvaran, Mageswaran, Mahesvaran, Maheswaran, Murder, Parliamentary Tamil United Liberation Front, Peace, People's Liberation Organisation of Tamil Eelam, plot, PLOTE, Rajapaksa, Rajapakse, Sri lanka, Srilanka, Tamil, Tamil Eelam Liberation Organisation, TELO, Temple, Thimpu, Tigers, TULF, War | Leave a Comment »

LTTE vs Sri Lanka – Eezham imbroglio: Lack of interest by Indian Leaders

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஏன் இந்தத் தயக்கம்?

விடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.

மூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.

கடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி?

பிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம்? மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்?

ஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.

இலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.

ஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்?

Posted in ADMK, AFB, Air Force, Airforce, Anuradapura, Anuradhapura, Anurathapura, Arms, Assassin, Assassination, Attack, Attacks, Bombs, Citizens, Colombo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Cyanide, Danger, dead, DMK, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelctions, Eezam, Eezham, Extremism, Extremists, Flights, guns, India, Initiatives, Jaffna, Kill, Killed, Leaders, LTTE, Military, Party, Peace, people, Politics, Sri lanka, Sri Lankan Navy, Srilanka, Suicide, terror, Terrorism, Terrorists, Vanni, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Wanni, Weapons | 1 Comment »

Tamil Nationalist Movement leader P. Nedumaran and Supporters of Freedom for Tamil Eelam Coordination Committee members stopped

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

மனிதாபிமானம் மடிந்துவிட்டதா?

இலங்கைத் தமிழர்களுக்கு உதவி வழங்க பொருள்களுடன் படகில் புறப்பட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்களிடமிருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் வியப்பை அளிக்கவில்லை. உதவிப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு இதுதான் வழி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இலங்கைவாழ் தமிழர் பிரச்னையில் பாராமுகமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு யதார்த்த நிலைமையைப் புரியவைப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை என்பதால், இந்த முயற்சியை நாம் ஓர் அடையாளப் போராட்டமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசு நமக்கு நட்பு அரசு என்றும், நாம் இலங்கை அரசைப் பகைத்துக்கொண்டால் இன்னோர் அண்டை நாடு நமக்கு எதிராளியாகிவிடும் என்றும் நமது வெளியுறவுத் துறையினர் கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. பண்டாரநாயகே காலத்திலிருந்தே இலங்கை அரசு எந்தவொரு விஷயத்திலும் இந்தியாவுக்கு ஆதரவு நாடாக இருந்ததில்லை. உலகச் சந்தையில் ரப்பர் மற்றும் தேயிலையில் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாகவும் போட்டி நாடாக மட்டுமே இலங்கை தொடர்ந்திருக்கிறது. அதனால், இலங்கையின் நட்பு தேவை என்பதற்காக எல்லா விஷயங்களிலும் நாம் மௌனம் காக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தென் ஆசியாவில் மக்கள்தொகை அடிப்படையிலும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ பலத்தின்படியும் இந்தியாதான் வல்லரசு என்கிற ஞானோதயம் நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்குமே இல்லை எனும்போது நமது வெளிவிவகாரக் கொள்கை எப்படித் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும்? இந்திராகாந்தியிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும், தைரியமும் அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களிடம் காணாமல்போனதன் விளைவுதான் இப்போது உதவிப்பொருள்களைப் பாதிக்கப்பட்ட வடஇலங்கை மக்களுக்கு அனுப்ப முடியாத அவலநிலைக்குக் காரணம்.

வெளிவிவகாரக் கொள்கையை விட்டுவிடுவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் மனிதாபிமானம் கூடவா இந்தியாவுக்கு இல்லாமல் போய்விட்டது என்று சரித்திரமும், நாளைய சந்ததியும் நம்மை எள்ளி நகையாடுமே என்று சிந்தித்துப் பார்க்கக்கூடவா நம்மால் முடியாமல் போய்விட்டது? 1957-ல் இலங்கையில் வெள்ளச்சேதம் ஏற்பட்டபோது, உடனடியாக உதவிப்பொருள்களை அனுப்பி வைத்த அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவையும் 1987-ல் இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்டு ஆதரவற்றிருந்த யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு, இலங்கை அரசிடம் அனுமதி பெறாமலே உணவுப் பொட்டலங்களையும் உதவிகளையும் விமானம் மூலம் அனுப்ப உதவிய அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனையும் இன்று பதவியில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பசி, பட்டினி என்கிற கூக்குரல்கள் யாழ்வாழ் மக்களிடமிருந்து எழுகின்றன. சப்தம் கேட்கிறது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இலங்கை அரசு சொல்கிறது. அங்கே பிரச்னையே இல்லை என்கிறது சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம். அது என்ன என்று மனிதாபிமான அடிப்படையில் கேட்கக்கூட ஆள் இல்லை. சரி, உணவுப்பொருள்கள், மருந்துகளும் சேகரிக்கப்பட்டுவிட்டன. அதை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொண்டு சேர்க்க அரசு உதவுகிறதா என்றால் அதுவுமில்லை. அதுதான் ஏன் என்று புரியவும் இல்லை.

தமிழ் உணர்வும், தமிழினத்தின் மீது அக்கறையும் இல்லாதவர்கள் பதவியில் இருப்பதால்தான் இந்த நிலைமை என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனிதாபிமான அடிப்படையில்கூட செயல்பட முடியாத நிலையில்தானா மத்தியிலும் மாநிலத்திலும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்? தட்டிக்கேட்க வேண்டியவர்கள் கைகட்டி நிற்கும் நிலைமை வந்தால், நெஞ்சு பொறுக்குதில்லையே…

Posted in Arms, Democracy, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eezam, Eezham, Fight, Food, Freedom, Health, Help, Independence, Leader, Liberation, LTTE, Medicines, Nation, Nationalism, Nationalist, Nedumaaran, Nedumaran, Netumaran, Republic, Srilanka, Tamil, UN, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Weapons | 2 Comments »

Norway’s attempts ot Mediate the Peace Process in Sri Lanka

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

பிரபாகரன், இலங்கை அதிபரை சந்திக்க வருகிறார் நார்வே தூதர்: அமைதிப் பேச்சு வார்த்தை

புதுதில்லி, செப். 29: இலங்கை அரசும், விடுதலைப் புலிகள் அமைப்பும் மீண்டும் அமைதிப் பேச்சை தொடங்குவது பற்றி விவாதிக்க நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹான்ஸன் பாயர், வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்கிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைதிப் பேச்சை மீண்டும் தொடர புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் ஜான் ஹான்ஸன் பாயரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்லும் ஹான்ஸன் பாயர் முதலில் இலங்கை அரசின் முக்கியத் தலைவர்களை சந்திக்கிறார். பின்னர் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்திக்கிறார். அமைதிப் பேச்சை எங்கு, என்ன தேதியில் தொடங்குவது என்பது குறித்து பிரபாகரனிடம் அவர் விவாதிப்பார்.

இலங்கையில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்ததும் நார்வே நாட்டின் சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் எரிக் சோல்ஹைம் இலங்கை சென்று அதிபரையும், புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்திக்க இருக்கிறார்.

இந்த ஆண்டு ஜனவரியில் சோல்ஹைம், புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து வன்முறைகள் ஓய்ந்து அமைதிப் பேச்சு தொடங்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை.

2002-ல் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு இருதரப்பினரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.

இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாயினர். ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேறினர்.

இதற்கிடையே இலங்கைக்கு நிதி உதவி செய்யும் நாடுகள் கூட்டம் வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இரு தரப்பினரும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்தியாவும் இதே கருத்தை வலியுறுத்தி வந்துள்ளது. சமீபத்தில் தில்லி வந்திருந்த எல்.டி.டி.ஈ. ஆதரவு இலங்கை எம்.பிக்கள் மற்றும் புலிகள் எதிர்ப்பு இயக்கங்களான

  • தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் வி.ஆனந்தசங்கரி,
  • தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் தலைவர் டி.சித்தார்த்தன்,
  • ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த டி.ஸ்ரீதரன் ஆகியோரிடமும் இனப் பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை இந்தியா நேரில் வலியுறுத்தியது

Posted in Anand Sankari, Anandasangaree, D Sitharthan, D Sritharan, Eelam People's Revolutionary Liberation Front, Eezham, EPRLF, LTTE, Norway, Peace, People's Liberation Organisation of Tamil Eelam, plot, SLFP, Sri lanka, Sri Lanka Freedom Party, Tamil, Tamil United Liberation Front, TULF, United National Party, UNP | Leave a Comment »