Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rails’ Category

Mine attack on bus in northern Sri Lanka kills at least 15, Wounds 38

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

அநுராதபுரத்தில் பொதுமக்கள் பேருந்து மீது தாக்குதல்: 15 பேர் பலி

இலங்கையின் அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளெமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து பதவியா ஜானகபுரவுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே இந்தத் தாக்குதலுக்கு உள்ளானதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கெப்பிட்டிக்கொல்லாவவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அபிமானிபுர என்ற இடத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார முன்னதாக தமிழோசைக்குத் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் கெப்பிட்டிக்கொல்லாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


வட இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கின்றன: இரு தரப்பிலும் இழப்புகளும் அதிகரிப்பு

மோதல்கள் அதிகரித்துள்ளன
மோதல்கள் அதிகரித்துள்ளன

இலங்கையின் வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதல்களில் இன்று மாத்திரம் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இந்த மோதல்களில் 30 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள சின்னசிப்பிக்குளம் பகுதியில் படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில், 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள், படையினரின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதே பகுதியில் பிற்பகல் 12.50 மணியளவில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 2 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.

மன்னார் அடம்பன் மேற்கு, முள்ளிக்குளம் பரப்பாங்கண்டல் மற்றும் நரிக்குளம் ஆகிய வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களின்போது, 30 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

அதேவேளை மன்னார் நரிக்குளம், யாழ்ப்பாணம் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது, 20 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 2 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அது கூறுகிறது.

கிளாலி முன்னரங்க பகுதியில் நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியிலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் தெரிவித்திருக்கின்றனர். இந்த மோதலில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ள போதிலும், தமது தரப்பில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும், தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சி கடுமையான எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியாவில் தொண்டர் அமைப்பு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

 

இதற்கிடையில், வவுனியா மாவட்டத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இன்று ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.

அடையாளம் தெரியாதவர்களின் அச்சுறுத்தல்கள், கப்பம் கோரி விடுக்கப்படும் எச்சரிக்கைகள் போன்றவற்றினால் இந்த பணியாளர்கள் அச்சமடைந்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள், இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் சுதந்திரமாக, அச்சமின்றி பணிகளில் ஈடுபடக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியிருக்கின்றது.


மீண்டும் வவுனியாவுக்கு ரயில் சேவை

 

கடந்த ஒரு வார காலமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் வடபகுதிக்கான ரயில் சேவை உடனடியாக வழமைக்குத் திரும்பும் எனவும், ஜனாதிபதியின் அனுமதியோடு இதற்கான பணிப்புரை ரயில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

இதனை உறுதி செய்த ரயில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், இரண்டு ரயில்கள் இன்றிரவு வவுனியாவை வந்தடையும் என்றும் நாளை காலை முதல் அனைத்து ரயில்களும் வழமைபோல வவுனியாவில் இருந்து கொழும்புக்குச் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் வவுனியா ஒமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கு இடம்பெற்று வந்த பொதுப் போக்குவரத்து நடைமுறையில் படையினர் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்பட்டதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

வவுனியாவிலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குச் செல்பவர்களை படையினர் அனுமதித்திருந்தார்கள் எனினும் வன்னிப்பகுதியில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வவுனியாவுக்குள் வருவதற்குப் பொதுமக்கள் எவரையும் படையினர் அனுமதிக்கவில்லை.

இந்த கட்டுபபாடுகள் இன்று தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து, விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய புளியங்குளம் பகுதியில் பலநாட்களாகக் காத்துக்கிடந்த பொதுமக்களில் ஒரு தொகுதியினர் இன்று வவுனியாவை வந்தடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இது பற்றி இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான பொதுப் போக்குவரத்து இன்று முதல் தொடர்ந்து வழமைபோல நடைபெறும் என அவர் கூறினார்.


Posted in Aid, Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Attacks, Bribery, Bus, Corruption, dead, Economy, Eelam, Eezham, Extortions, Finance, Help, kickbacks, LTTE, Mannaar, Mannar, Mine, mines, Money, NGO, Rails, Railways, ransom, relief, Security, service, Sri lanka, Srilanka, Threats, Trains, Transport, Transportation, TRO, UN, UNESCO, Vanni, Vavuniya, Vawuniya, Volunteer, Volunteering, Wanni, wavuniya, Wawuniya, Wounded | Leave a Comment »

Nov. 28 – Sri Lanka, Batticaloa News & Updates: Bomb Blast reactions

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

 


கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கை ரயில்

நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனியா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வருவதற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.


இலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி

யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை

இந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.


 

கொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்சியில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

அதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.


கொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

இந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.

அத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.

இதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.

இதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை

அடையாளம் தெரியாத ஆட்களால் கொலை
அடையாளம் தெரியாத ஆட்களால் கொலை

மட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்தம் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.

மேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Posted in Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arms, Attacks, Batticaloa, Blasts, Bombs, Cleansing, Colombo, Communications, Concerns, dead, Douglas, Eelam, Eezham, ethnic, EU, Extremism, Extremists, Freedom, LTTE, Mobility, Rails, Railways, reactions, Security, Sri lanka, Srilanka, Suicide, Terrorism, Terrorists, Trains, Transport, Vavuniya, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, wavuniya, Weapons | Leave a Comment »

Institutions averse to parting with information under RTI: Report

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை

‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.

தகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.

இதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.

தேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.

கட்டணம் உயர்வு?

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.

மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Affairs, Afraid, Architecture, authority, Avoid, BHEL, Buildings, CBI, Central Information Commission, CIC, Construction, Consumer, Corruption, Courts, CPSC, Customer, Delays, Delhi, Disclosure, DMRC, Economy, Exempt, Express, family, Fast, Government, Govt, HC, Health, Hide, HR, immunity, Info, Information, Intelligence, Judges, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Metro, mines, NBCC, Order, OSA, parliament, Protect, Protection, PSU, PSUs, Rails, Railways, Recommendation, rights, RTI, SC, Scared, Secrets, Security, Trains, Transparency, Transport, Violation, Welfare | Leave a Comment »

Project report on Chennai Metro soon

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2007

சென்னையில் மெட்ரோ ரயில்: ரூ. 9,757 கோடி திட்டம்

சென்னை, நவ. 7: சென்னையில் ரூ. 9,757 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை தமிழக அமைச்சரவை வழங்கியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவையின் 23-வது கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. அதில் முக்கியமாக மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொதுமக்களின் விருப்பத்தின் பேரிலும், நிர்வாகக் காரணங்களுக்காகவும் பெரம்பலூரை இரண்டாகப் பிரித்து புதிய அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அரியலூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை வட்டங்களை உள்ளடக்கியதாகவும், பெரம்பலூர் மாவட்டம் தற்போதைய தலைமையிடத்துடன் பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களைக் கொண்டதாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த கொள்கை அளவில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தில்லி மெட்ரோ ரயில் கழகம் வழங்கியுள்ள விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் இது இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளதாய் இருக்கும்.

முதலாவதாக வண்ணாரப்பேட்டை முதல் எழும்பூர், தேனாம்பேட்டை வழியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும், இரண்டாவது வழித்தடம் கோட்டை முதல் அண்ணா நகர், வடபழனி, அசோக் நகர், ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரையிலும் அமைக்கப்படும். இவ்விரு வழித்தடங்களில் மொத்தம் உள்ள 46.5 கி.மீ. நீளத்தில் ஏறத்தாழ 20 கி.மீ. நீள தூரம் தரைப்பகுதிக்குக் கீழும், எஞ்சிய தூரம் தரைப் பகுதிக்கு மேலெழும்பியும் அமையும்.

மத்திய அரசின் நிதியுதவி மற்றும் கடனுதவி மூலம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் நாட்டின் சர்வதேச வங்கி நிதியுதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் நிதி முதலீட்டுடன் தொடங்கப்படும் “சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்’ எனும் பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

குழு நியமனம்: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக தலைமைச் செயலாளரின் தலைமையில் தொழில்துறைச் செயலர், நிதித்துறைச் செயலர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக் குழு அளிக்கும் வரைவுக் கொள்கையை முதல்வர் நியமிக்கும் துணைக் குழு விவாதித்து அளிக்கும் பரிந்துரைகளுடன் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறக்க முயற்சி: மதுராந்தகத்தை அடுத்த படாளத்தில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பாண்டியராஜபுரத்தில் உள்ள மதுரா சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஆலைகளும் தனியாரின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும். அதற்காக வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மின் உற்பத்தி மற்றும் எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய விரிவாக்கம்: சென்னை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1070 ஏக்கர் நிலப்பகுதியை இந்திய விமான நிலைய ஆணையக் குழுமத்துக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

——————————————————————————————————————————————————-
2 தடங்களில் அமைக்கப்படவுள்ள
சென்னை `மெட்ரோ ரெயில்’ திட்ட அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல்
டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்

சென்னை, செப்.11-

ரூ.11 ஆயிரம் கோடியிலான சென்னை `மெட்ரோ ரெயில்’ திட்ட ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தரைக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் திட்டத்தை இங்கு அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இத்திட்டம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டம் இந்தியாவில் டெல்லியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு இந்த பாதாள ரெயில் திட்டத்தினை டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (டி.ஆம்.ஆர்.சி.), வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

விரிவான அறிக்கை தாமதம்

இதைத் தொடர்ந்து, சென்னையிலும் இத்திட்டத்தினை அமல்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கான, மண் ஆய்வுப் பணியினை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டி.எம்.ஆர்.சி. மேற்கொண்டது. அப்போது சில இடங்களில் பாதாள ரெயில் திட்டம் அமைப்பதற்கேற்ற மண் வளம் இல்லை என்பதை கண்டறிந்தது.

இதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. அதன்பின்னர், இத்திட்டம் தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை தயார் செய்து தரும் பொறுப்பினை டி.எம்.ஆர்.சி.யிடம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டு காலமாக இது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் அந்த அறிக்கை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது தொடர்ந்து தாமதமாகிக்கொண்டு வருகிறது.

டெல்லி பாதாள ரெயிலில் `நேரு’

இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சில் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் தலைவர் என்ற முறையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். அதன்பிறகு, டெல்லி நகரில் ஓடும் பாதாள ரெயிலில் (மெட்ரோ ரெயில்) அவர் பயணம் செய்தார். அத்திட்டம் மிகவும் அற்புதமானது என்றும், அரசுக்கு லாபம் தரும் வகையில் சிறப்பாக இருப்பதாகவும் அவர் பாராட்டினார் என்று டி.ஆம்.ஆர்.சி. நேற்று தெரிவித்துள்ளது.

வண்ணாரப்பேட்டை-விமான நிலையம்

மெட்ரோ ரெயில் திட்டத்தின்படி சென்னையில் 2 தடங்களில் பாதாள ரெயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்னை துறைமுகத்தில் இருந்து பரங்கிமலை வரை மற்றொரு பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக 2 இருப்புப்பாதைகள் மொத்தம் 46 கிலோ மீட்டர் தூரத்துக்குஅமைக்கப்படுகிறது. இதில், 14.25 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் தரைக்கு அடியிலும், மீதமுள்ள 31.75 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் அந்தரத்திலும் (மேம்பாலத்தில்) செல்லும். இத்திட்டத்துக்காக ரூ.11 ஆயிரம் கோடி செலவாகும் என்று டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப் போவதாகவும், அதன் பின்னர் அத்திட்டத்தை செயல்படுத்துவது முழுக்க முழுக்க தமிழக அரசின் கையில் உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

————————————————————————————————–
சாலை சந்திப்பு திடல்களில் பண்பாட்டுக் கலாசார சிற்பங்கள்

சென்னை, செப். 25: சென் னையில் உள்ள சாலை சந்திப்பு திடல்களில் தமிழர் பண் பாடு, கலாச் சாரத்தைக் குறிக்கும் வகையில் சிற்பங்கள் அமைக் கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித் தார்.

இது தொடர்பாக சென் னையில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட் சிக் கூட்டத்தில் மேயர் பேசி யது: சென்னையில் 471 பூங் காக்களை மாநகராட்சி பரா மரித்து வருகிறது. இந்தப் பூங்காக்களை மேம்படுத்த வும், புதிய பூங்காக்கள் அமைக்கவும் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஸ்டாலின் ரூ.22 லட்சம் மதிப்பிலான பூங்காவை வள்ளுவர் கோட் டம் எதிரில் திறந்து வைத் துள்ளார். திரு.வி.க. பூங்கா ரூ.64 லட்சத்திலும், அண் ணாநகர் டவர் பூங்கா ரூ.3.05 கோடியிலும், மற்றும் நடே சன் பூங்கா உள்ளிட்ட பூங் காக்கள் எழிலூட்டும் பணி கள் நடைபெற்று வருகின் றன.

காந்தி, ஜீவா, காமராஜர், அண்ணா, பெரியார், கலை ஞர் பெயரில் உள்ள பல் வேறு தலைவர்களின் பெயர் களில் உள்ள பூங்காக்களின் முன்பு அந்தத் தலைவர்க ளின் வாழ்க்கை வரலாற்று டன் உருவம் பதிந்த கல் வெட்டு அமைக்கப்பட உள் ளது. அந்தக் கல்வெட்டுக் களை அத்தலைவர்களின் வாரிசுதாரர்கள் மூலம் மிக விரைவில் திறந்து வைக்க நட வடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னையில் சாலை சந் திப்பு திடல்களில் தமிழர் பண்பாடு, கலாசாரம் குறிக் கும் வகையில் சிற்பங்களை அமைப்பதற்கான வடிவங் கள் 56 சிற்பிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சிற்பங் கள் அமைப்பது தொடர் பான கருத்துக்களை அனைத்துக் கட்சி தலைவர்க ளும் எழுத்துப் பூர்வமாக 4 நாட்களுக்குள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகி றது. வடிவமைப்பு தேர்ந்தெ டுக்கப்பட்ட பின்பு தொழில் நுட்பக்குழு தேர்வு செய்து இறுதி வடிவம் மற்றும் மதிப்பு நிர்ணயிக்கப்படும் என்றார். இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, மன்ற ஆளுங்கட்சித்தலைவர் ந.ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ப.ரவி மற் றும் மன்றத்தின் அனைத்துக் கட்சி தலைவர்களும் பங் கேற்றனர்.

Posted in Airport, Auto, Bus, car, Chennai, Commute, Commuter, Delhi, Fort, Govt, Home, Madras, Meenambakkam, Metro, Mode, Nehru, Office, Parangimalai, Parankimalai, Port, Project, Rail, Rails, Raliways, Report, School, St. Thomas Mount, Tamil Nadu, TamilNadu, Tariff, Thrisoolam, Thrisulam, Train, Trains, Transport, Transportation, Traveler, Trisoolam, Trisulam, Vannarapet, Vannarapettai, Vannarpet, Washermenpet, Work | Leave a Comment »