Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Peace’

Kosovo: Ex-President Of Finland Martti Ahtisaari wins Nobel Peace Prize for a (failed) plan: Honored for efforts as international mediator

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 12, 2008


ஃபின்லாந்தின் முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நொபெல் பரிசு

மார்த்தி அஹ்திஸாரி

சமாதானத்துக்கான இந்த வருட நோபல் பரிசு ஃபின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரான மார்த்தி அஹ்திஸாரி அவர்கள்க்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் ஒரு சிறந்த மத்தியஸ்தர் என்றும், முப்பது வருடத்துக்கும் அதிகமான காலப்பகுதியில், உலகின் பல பாகங்களில் முரண்பாடுகளை தீர்க்க அவர் உதவியுள்ளார் என்று நோபல் பரிசுக்குழு கூறியுள்ளது.

மிகவும் சிக்கலான பிரச்சினைகளான கொசோவா பிரச்சினை மற்றும் இந்தோனேசியாவின் அச்சே மாகாண பிரச்சினை ஆகியவற்றை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் நடுநாயகமாக அவர் திகழ்ந்துள்ளார் என்றும் அந்தக் குழு கூறியுள்ளது.

அனைத்து முரண்பாடுகளும் தீர்த்து வைக்கப்படக் கூடியவைதான் என்ற முடிவுக்கு தான் வந்துள்ளதாகக் கூறும் அஹ்திஸாரி அவர்கள், தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை தொடர்ந்து வைத்திருப்பது, சர்வதேச சமூகத்துக்கு ஒரு அபகீர்த்தி என்று குறிப்பிட்டுள்ளார்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Looming humanitarian crisis in Vanni: Civilians flee SLA shelling in Northern Mannaar

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2008

வன்னி மோதல்களால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக விடுதலைப்புலிகள் கூறுகிறார்கள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை காரணமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் தெரிவித்திருக்கின்றது.

வன்னிப்பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடை நடவடிக்கைகளினால், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான அவசர நிவாரண உதவிகளை வழங்குவதில் உள்ளுர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் கூறியிருக்கின்றது.

இடம்பெயர்ந்துள்ளவர்களில் 35,000 பேர் முன்பள்ளிகளுக்குச் செல்லும் சிறுவர்கள் உள்ளிட்ட மாணவர்கள் என்றும், இடப்பெயர்வு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரசாங்கம் வன்னிப் பிரதேசத்தில் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைச் செயற்கையாக ஏற்படுத்தியிருப்பதனால், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி தேவையாகிய உணவுப் பொருட்களைக் கூட வழங்க முடியாத நிலையேற்பட்டிருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

வன்னிப் பிரதேசத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை அப்பகுதிக்குக் கொண்டு செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அங்குள்ள பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளைச் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பற்றாக்குறையும் நிலவுவதாகவும் அங்குள்ள அரச அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.


கறுப்பு ஜூலையின் கால் நூற்றாண்டு- சிறப்புப் பெட்டகம்

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு கலவரம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.

ஆனால், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், இழப்புகளும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனதில் ஆறாத வடுக்களாகப் பதிந்துவிட்டன.

இந்த நிலையில், அந்த நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பதுடன், அதன் விளைவுகள் குறித்தும், இலங்கையில் இன ஐக்கியத்துக்காக எடுக்கப்படக்கூடிய முயற்சிகள் குறித்தும் ஆராயும் பெட்டகத்தின் முதலாவது பகுதியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

JVP call for the island wide strike in Sri Lanka; Opposition MP Joseph Michael Perera blames army for attacks on media

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2008

09 ஜுலை, 2008

இலங்கையில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஜே வி பி அழைப்பு

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவிற்கு முகம் கொடுக்கும் நோக்கில் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களிற்கு 5000 ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும், தோட்டத்துறை ஊழியர்களுக்கு நாளாந்த சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும் என்பனபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி வியாழக்கிழமை நாடுதழுவிய ரீதியில் பொதுவேலை நிறுத்தப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த ஏற்பாடுகள் குறித்து கருத்துவெளியிட்டுள்ள ஜே.வி.பி யின் தொழிற்சங்கங்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.டி.லால்காந்த, அரச துறையிலுள்ள சுமார் 90 சதவீதமான தொழிற்சங்கங்கள் நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுவேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள சம்மதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இது ஒரு அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் மட்டுமே எனக்கூறியுள்ள லால்காந்த இந்தப் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்காது போனால் இவ்வாறான போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பின் 14வது சரத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தினைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரசு பொய்யான பிரச்சாரங்களிலும், எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் ஜே.வி.பி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஜே.வி.பியின் இந்த பொதுவேலை நிறுத்த அழைப்பிற்கு பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கம் இதனை முறியடிக்கும்படி தனது உறுப்பினர்களிற்கு இன்று அழைப்பு விடுத்திருக்கிறது.


செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு இலங்கை இராணுவத் தளபதியே காரணம் என்று குற்றச்சாட்டு

இலங்கை இராணுவத் தளபதி ஃபொன்சேகா
இராணுவத் தளபதி லெப். ஜென். சரத் ஃபொன்சேகா

இலங்கையில் செய்தியாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு அந்நாட்டின் மிக மூத்த இராணுவ அதிகாரியே காரணம் என்று முக்கிய எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான ஜோசப் மைக்கேல் பெரேரா, இவ்வாறு செய்தியாளர்கள் மீதான தாக்குதலை நடத்துவதற்காகவே ஒரு சிறப்பு குழு இராணுவத் தளபதி லெப்டிண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக கூறியுள்ளார்.

ஆனால் இராணுவப் பேச்சாளர் இதை மறுத்துள்ளார்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு முழு யுத்தத்தை அரசு நடத்தி வரும் நிலையில், ஊடகச் சுதந்திரம் குறித்து மனித உரிமை அமைப்புகளின் அதிகரித்து வரும் கவலைகளுக்கு இடையே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி மீதான இந்தக் குற்றச்சாட்டை எதிர் கட்சி உறுப்பினரான ஜோசப் மைக்கேல் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவரது இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார இது குறித்த ஆதாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வசம் இருக்குமாயின் அவர் போலீஸிடம் அதை எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த வாரம், எந்த ஒரு நிறுவனத்தையும் சாராமல், ராணுவ விவகாரங்கள் குறித்து எழுதி வரும் ஒரு தனிப்பட்ட செய்தியாளரும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியும் ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தப்போது மறைந்திருந்தவர்களால் உருட்டுக் கட்டைகளினால் தாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் செய்தியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடக்கம் இதுவரை ஊடகத்துறையைச் சேர்ந்த 12 பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போர் செய்திகளை வெளியிடுபவர்கள் துரோகிகள்

இலங்கையின் வடக்கே கடும் போர் நடைபெற்றுவருகிறது
இலங்கையின் வடக்கே கடும் போர் இடம்பெறுகிறது

இதனிடையே நாட்டில் நடைபெற்று வரும் போர் தொடர்பான செய்திகளை, ஒருதலைப் பட்சமாகவும் பொறுப்பற்ற வகையிலும் வெளியிடுவதாக தாம் கருதுவதற்கு எதிராக தமது கடுமையான ஆட்சேபணைகளை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

போரின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்படும் இழப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக இராணுவம் வெளியிடும் தகவல்கள் குறித்த கேள்விகளை எழுப்புவது, இராணுவத்தில் வழங்கப்படும் பதவி உயர்வுகளை வினவுவது, இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டுவது போன்ற செய்திகளை வெளியிடுபவர்களை துரோகிகள் என்றும் விரோதிகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் முத்திரை குத்தியுள்ளது.


யாழிலிருந்து கொழும்பு செல்ல புதிய கட்டுப்பாடுகள்

யாழ் பஸ் நிலையம்
யாழ் பஸ் நிலையம்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ் பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்குப் படையினரால் வழங்கப்படும் பிரயாண அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றம் காரணமாக பிரயாண அனுமதி பெறுவதற்கு சுமார் 2 வாரம் காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு செல்லும் ஒருவர் தனது பிரயாணத்திற்கான காரணத்தை ஆதாரபூர்வமாகத் தெளிவுபடுத்தும் அதேவேளை, அங்கு தங்கியிருக்கப் போகும் உறவினர் அல்லது நண்பர்கள், தெரிந்தவர்களின் முழு விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பதுடன், இந்த விபரங்கள் பொலிசாரின் ஊடாக அங்கு சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்குக் கிடைத்த பின்பே பிரயாண அனுமதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் பாக்கி

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பனம் இல்லை
கிரிக்கெட் வாரியத்திடம் பணம் இல்லை?

சமீபத்தில் ஆசியக் கோப்பையில் வெற்றிவாகை சூடிய, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முந்தைய ஒப்பந்தம் பிப்ரவரிமாதத்தில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதாலும், அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றிருந்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும் இந்த பிரச்சினை குறித்து வியாழக்கிழமையன்று விவாதிக்கவுள்ளனர்.


07 ஜுலை, 2008

மன்னார் படுகை எண்ணெய் அகழ்வாய்வு: இலங்கை அரசுடன் இந்திய நிறுவனம் உடன்படிக்கை

மன்னாய் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை அகழ்வாய்வு செய்யும் அனுமதிக்கான பெட்ரோலிய வள உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கமும், கெயின் இந்தியா நிறுவனமும் திங்களன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் மூத்த அமைச்சர்மார் முன்னிலையில் கைச்சாத்திட்டுக்கொண்டன.

அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட வைபவமொன்றில் இலங்கை அரசின் சார்பில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியும், கெயின் இந்தியா நிறுவனத்தின் சார்பின் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிதி அலுவலருமான இந்திரஜித் பனர்ஜியும் கைச்சாத்திட்டனர்.

பின்னர் இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய இந்திரஜித் பனர்ஜி, இலங்கைக் கடற்பரப்பில் மன்னார் படுகை அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவில்லை என்பதால் அந்த வகையில் அது ஒரு முன்னிலை பெட்ரோலிய வலயத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

அத்துடன் ஆசியப் பிராந்தியத்தில் எண்ணெய் அகழ்வாய்வு வேலையில் அனுபவம்மிக்க தமது நிறுவனம், இங்கே வர்த்தகப்படுத்தக்கூடிய அளவிற்கு ஹைட்ரோகாபன் இருக்கிறதா என்பதனை உறுதிப்படுத்த பல மில்லியன் டாலர்கள்களை முதலீடுசெய்து, சிறந்த தொழில்நுட்பங்கள், மற்றும் தொழில்துறை நடைமுறைகளை பிரயோகிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

இலங்கையின் வடக்கே கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த ஓமந்தை சோதனைச் சாவடி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திங்களன்று பிற்பகல் திறக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சோதனைச் சாவடியில் உள்ள தமது அலுவலகத்தை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் மூடியிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு பிரதிநிதிகள் ஆகியோரின் பாதுகாப்பு உரிய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்படும் வரையில் இந்த சோதனைச் சாவடியில் இருந்து தாங்கள் தற்காலிகமாக விலகியிருக்கப்போவதாக என்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கூறியிருந்தனர்.

தற்போது ஓமந்தை சோதனைச் சாவடி தொகுதியில் பொதுமக்களினதும், தமது பிரதிநிதிகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, புதன் பிற்பகல் 3 மணிக்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தை சோதனைச் சாவடிக்குத் திரும்பியுள்ளதாக அந்தக் குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கடமைக்குத் திரும்பியதை அடுத்து திறக்கப்பட்ட ஓமந்தை சோதனைச் சாவடி திங்களன்று சுமார் ஒரு மணித்தியாலம் மாத்திரமே திறந்திருந்ததாகவும், அரச ஊழியர்கள், பொதுமக்கள் என சுமார் 50 பேர்வரையில் மாத்திரமே வன்னிப்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் ஓமந்தை சோதனைச்சாவடிக்குச் சென்று தமது பிரயாணத்தைத் தொடரமுடியாமல் மீண்டும் வவுனியா நகருக்குத் திரும்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வன்னிப்பிரதேசத்திலிருந்து எவரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இன்று வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நாளை முதல் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பிரதேசத்திற்கான அத்தியாவசிய பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து என்பன வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

June 23, 24: Eezham, Sri Lanka, LTTE, Refugees in Tamil Nadu, Batticaloa Updates

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

தமிழகத்தில் சொத்து வாங்கிய இலங்கை அகதிகளின் விவரம் திரட்டப்படுகிறது

தமிழகத்தில் நிலம், வீடு அல்லது மோட்டார் வாகனங்கள் வாங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த விவரங்களை தமிழக அரசு சேகரிக்கத் தொடங்கியிருககிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி, அகதிகள் இவ்வாறு சொத்துகள் வாங்குவது குற்றம், அனுமதிக்கப்படக்கூடாது, உண்மையான அகதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம், ஆனால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தார்.

ஆனால், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக நிறுவனர் சந்திரஹாசன், இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துகளை சில நியதிகளுக்கு உட்பட்டு வாங்கமுடியும் என்கிறார்.

ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அட்டை போன்றவற்றை அகதிகள் பெறுவதாகக் கூறப்படுவது தவறு என்ற அவர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால் இலங்கைத் தமிழர்கள் நலனை பாதிக்கும் வகையில் தமிழக அரசு நடந்துகொள்ளாது என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கிளேமோர் தாக்குதலில் பொலிசார் 3 பேர் பலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியில் திங்கள் மாலை இடம்பெற்ற கிளெமோர் குண்டுத் தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மற்றுமொரு பொலிஸ்காரர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறுகிறார்கள்.

ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இந்தப் பொலிஸ்காரர்கள் அங்குள்ள நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றுக்கு குளிக்கச் சென்றிருந்தபோது, குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் இந்தக் குண்டு அங்கு பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதி ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கைப் படையினரால், கடந்த ஆண்டில் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் காவலிலிருந்த சந்தேக நபரொருவர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடமொன்றை காட்டுவதற்காக இன்று அதிகாலை கிளாலிவெட்டைக்கு இந்நபர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு விடுதலைப் புலிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டதாக சமப்வம் தொடர்பாக பொலிசார் கூறுகின்றனர்.


வட இலங்கை மோதல்கள்

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் போர்முனைப் பிரதேசங்களில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண்கள் மீது ஞாயிறன்று மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து இடம்பெற்ற மோதல்களில் 33 விடுதலைப் புலிகளும், 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இராணுவச் சிப்பாய் ஒருவரைக் காணவில்லை என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

இதேவேளை, வவுனியா பாலமோட்டை பகுதியில் ஞாயிறு காலை 3 முனைகளில் தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இந்தச் சண்டைகளின்போது 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இராணுவத்தினரின் 3 சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். நல்ல நிலையில் இருந்த ஒரு சடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 7 விடுதலைப் புலிகளின் சடலங்களை இன்று பிற்பகல் புளியங்குளம் சோதனைச்சாவடியில் விடுதலைப் புலிகளிடம் தாங்கள் கையளித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.


பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இடைக்காலத் தீர்வுக்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் சர்வ மதத்தலைவர்கள் வேண்டுகோள்

இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள்
இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள்

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை ஆராய்கின்ற சர்வகட்சிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஒரு இடைக்காலத் தீர்வாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வமத தலைவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்தக் குழுவில் இடம்பெற்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு கூறியுள்ளார்.

இலங்கையில் நடக்கின்ற மனித உரிமை மீறல்கள், கொலைகள், காணாமல் போதல்கள், குறிப்பாக வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவை குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சர்வமதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் பொதுமக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் சிக்கி துன்பப்படுகின்ற நிலைமைகளை அறிந்து, மக்களுக்கு நிவாரணம் செய்ய வேண்டும் என்று மதத்தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரியதாகவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.


Posted in Govt, India, Law, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Italian Dragnet Arrests 28 for Financing Tamil Tigers; Sri Lankan Gun Battles Kill 25 Rebels, 7 Soldiers

Posted by Snapjudge மேல் ஜூன் 18, 2008

TamilNet: 16.06.08 Italian Tamils express support for Eezham homeland: “Diaspora Tamils in Northern Italy gathered Sunday for Pongku Thamizh rally held in Piazza Argentina in Milan, one of the largest cities in Italy, from 3:00 p.m. to 6:00 p.m., and voiced their support for Eezham Tamil homeland, Tamils right to self-determination, and protested against the Sri Lankan state’s aerial bombardment of Tamil civilians and rights violations of the Tamil people in Sri Lanka. Burani Vainer, a renown lawyer in Italy for his legal defence of freedom struggles, addressed the audience as a chief guest, on the principles of the right to self determination.

Around 50,000 Sinhalese expatriates live in Northern Italy. ”

இத்தாலியில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் முப்பதுக்கும் அதிகமானோர் கைது

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் முப்பதுக்கும் அதிகமானோரை இத்தாலி எங்கிலும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையொன்றின் போது அந்த நாட்டுப் பொலிஸார் புதன்கிழமை கைது செய்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், இத்தாலியில், உள்ள மக்களிடம் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக, மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற சந்தேகத்தின் மீது, இலங்கை தமிழர்களான இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இருநூறுக்கும் அதிகமான பொலிஸாரால் நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையின் மூலம், இத்தாலியில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு நிர்மூலம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் வடக்கே ஜெனோவா நகர் முதல், மத்திய தரைக்கடலின் தீவான சிசிலியின், பலர்மோ நகர் வரை, அதிகாலைப் பொழுதில் ஒரே நேரத்தில், எட்டு வெவ்வேறு நகரங்களில் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மறைவிடங்களில் இத்தாலியப் பொலிஸார் தேடுதல் நடத்தினார்கள்.

இத்தாலியில் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டிப் பணம் பறித்து, இலங்கையில் மோதலில் ஈடுபடும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அனுப்புவதாக கடந்த இரண்டு வருடங்களாக இத்தாலியில் வாழும் இலங்கையரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தாம் புலன் விசாரணை செய்து வந்ததாக பொலிஸார் கூறுகிறார்கள்.

இத்தாலிய வட்டகையில் இருந்து ஒளிபரப்பான விடுதலைப்புலிகளின் சட்டவிரோத பிரச்சார தொலைக்காட்சி ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன்னர் இத்தாலிய அதிகாரிகள் மூடினார்கள்.

இத்தாலியில் சுமார் ஐம்பதினாயிரம் இலங்கையர்கள் குடியேறி வாழ்கிறார்கள்.

பெரும்பாலும் சட்டவீரோதமாக அங்கு வந்த அவர்கள், அங்கு வேலை மற்றும் வதிவிட அனுமதியைப் பெற்று வாழ்கிறார்கள்.


வட இலங்கை மோதல்களில் பலர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரப் பொது விளையாட்டரங்கு காவல் நிலை மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொருவர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலை அந்த காவல்நிலையில் கடமையிலிருந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் எதிரத்தாக்குதல் நடத்தி முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா ஓமந்தை இராணுவ முகாம் மீது நேற்றிரவு விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், இராணுவ முகாமில் பணியாற்றிய சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா, முகமாலை நாகர்கோவில் ஆகிய முன்னரங்க பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இன்று அதிகாலை வரையிலான இந்தத் தாக்குதல் சம்பவங்களில் இராணுவ தரப்பில் மொத்தமாக 7 இராணுவத்தினரும், இராணுவ ஊழியரான சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், 10 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் பெரியமடு பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 3 சடலங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கி;ன்றது, இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Trial of physician and rights activist: Call to drop all charges against Dr Binayak Sen: Tribal doctor – A Prisoner of Paradox?

Posted by Snapjudge மேல் மே 15, 2008

மனித உரிமை செயற்பாட்டாளரை விடுவிக்க நோபல் பரிசு பெற்றவர்கள் கோரிக்கை.

கம்பிகளுக்கு பின்னால் பினாயக் சென்
கம்பிகளுக்கு பின்னால் பினாயக் சென்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு சிறையில் ஒரு வருடமாக அடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரான டாக்டர் பினாயக் சென் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று நோபல் பரிசை பெற்றுள்ள இருபதுக்கும் மேலானவர்கள் இந்திய அரசிடம் ஒரு கூட்டு வேண்டுகோளை வைத்துள்ளனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் செயல்படும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.

ஆனல், கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் விதம் குறித்து அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஆயுததாரிகளை அவர் விமர்சித்தார் என்கிற காரணத்தினாலேயே அவர் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் பினாயக் சென் அவர்களின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

Binoy Kampmark: The Case of Binayak Sen: “Indian Jailbirds By BINOY KAMPMARK”

Binayak Sen: A Prisoner of Paradox? | Anita Ratnam | Indiainteracts.com

BBC NEWS | South Asia | Dr Binayak Sen: Tribal doctor

Governing Human Rights Violation And Dr. Binayak Sen By Arpita Banerjee

Posted in Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Fresh battles kill more combatants in Sri Lanka: Eezham Clashes Claim Lives of Tamil Tigers & Soldiers

Posted by Snapjudge மேல் மே 5, 2008

பாலம்பிட்டி பாலத்தைக் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வட மேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பாலம்பிட்டியில் உள்ள பாலம் ஒன்றினை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இந்தப் பகுதியில், விடுதலைப் புலிகளுடன் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற மோதல்களின்போது, முன்னேறிச் சென்ற படையினருக்கு ஆதரவாக, இலங்கை விமானப்படையினர் பாலம்பிட்டி பாலத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் தளம் ஒன்றின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

இந்தப் பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.


பிள்ளையான் செவ்வி

பிள்ளையான்
பிள்ளையான்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களது இருப்பிடத்தில் இல்லாவிட்டாலும், அதற்கு அருகில் இருக்கின்ற இடத்தில் குடியேற்ற முயல்வேன் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அந்த அமைப்பின சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிடுபவருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தமது மாகாண சபைக்கு உட்பட்ட விவகாரமாக இல்லாத பட்சத்திலும், அந்த மக்கள் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது விடயத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பினரின் பாதுகாப்பு கருதியே தாம் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறும் பிள்ளையான், விடுதலைப்புலிகள் பலவீனமடைந்து, தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் தாம் ஆயுதங்களைக் களைவோம் என்றும் கூறினார்.

பிள்ளையான் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணத் தேர்தல் குறித்து இடம்பெயர்ந்த மக்கள்

இடம்பெயர்ந்தோரின் குடியிருப்புகள்
இடம்பெயர்ந்தோரின் குடியிருப்புகள்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒன்றைரை வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் மக்களில் பலர், இந்தத் தேர்தல்கள் குறித்து தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் பற்றிய தமது கருத்துக்கள், வேட்பாளர்களின் வாக்குறுதிகள், வாக்களிப்பதில் தமக்கு ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பவை பற்றியெல்லாம், அங்கு சென்ற தமிழோசைத் தயாரிப்பாளர் சுவாமிநாதனிடம் அவர்கள் பேசியுள்ளனர்.

இவை குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் சில மாகாணங்களில் மர்மமான சிறுநீரக நோயினால் 6000 பேர் பாதிப்பு

சிறுநீரகம்
சிறுநீரகம்

இலங்கையின் வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அண்மைக்காலமாக அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயின் தாக்கத்திற்கு சுமார் ஆறாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஆளாகியிருப்பதாகவும், சில உயிரிழப்புக்கள் இடம்பெற்றதாகவும் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்தநோயின் காரணிகள் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காகவும், நோய்க் காரணியைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் வகையிலும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின், உலக சுகாதார நிறுவனத்தின் உயர் நிபுணத்துவக் குழுவொன்று இன்று இலங்கை வந்திருக்கிறது.

இந்த நோயின் தாக்கம் குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட, உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தேசிய நிபுணர், டாக்டர் ஆர். கேசவன், இந்த நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோரின் சிறுநீரகம் செயலிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆனாலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இதற்கான காரணிகளைக் கண்டறிய முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நோய் கடந்த ஐந்து வருடங்களாக இருந்துவருகின்ற போதிலும், அண்மைக்காலமாக இது குறித்த முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 மே, 2008


விடுதலைப் புலிகளை ஆதரித்ததாக பிரித்தானியாவில் மேலும் ஒருவர் கைது.

விடுதலைப் புலிகள்-ஆவணப் படம்
விடுதலைப் புலிகள்-ஆவணப் படம்

இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரத்தானிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் தென்மேற்கு நகரமான ஸ்விண்டனில் 51 வயதான ஒருவர்,
வெளிநாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளை நடத்த ஏற்பாடு செய்து, அதற்கு ஊக்குவித்து ஏற்பாடுகளை செய்தார் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

இதே விசாரணை தொடர்பாக கடந்த வாரம் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பிரிட்டன் 2001 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மே, 2008

இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார்

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த்.

புதுதில்லியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் கூட்டணி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் விஜயகாந்திடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “தமிழர்களுக்கு எதிராகக் கொடுப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள். அது வியாபார ரீதியாகக்கூட இருக்கலாம்’’ என்றார்.

“சீனாவையும், பாகிஸ்தானையும் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள இலங்கை விரும்புகிறது. அது நடக்கக்கூடாது என்று இந்தியா கருதுகிறது. அதுதான் அங்கிருக்கும் சின்னச் சின்னப் பிரச்சினைகள். அதனால், அதுபற்றி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் விஜயகாந்த்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கில் ஜனநாயக ரீதியான தேர்தலை உறுதிப்படுத்தும்படி ஐ.தே.க தேர்தல் ஆணையாளரிடம் மனு

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர்

இலங்கையின் கிழக்கில் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி நடக்கவுள்ள மாகாணசபைத் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடாத்தப்படுவதனை உறுதிப்படுத்தும்படி கோரி இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சி இன்று கொழும்பு ராஜகிரிய தேர்தல் செயலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.

கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ரவி கருணாநாயக்க, மூத்த பாராளுமன்ற உறுப்பினர் மஹரூப், மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் முன்னணியின் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்குள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைத் தேர்தலுக்கு முன்னர் களையும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதன் பின்னர் தேர்தல் ஆணையாளரிடம் இது தொடர்பில் இவர்கள் சார்பில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.


வவுனியாவில் கிளெமோர் தாக்குதலில் இருவர் பலி

இலங்கையின் வடக்கே வவுனியா நகர மத்தியில், நீதிமன்ற வளாகத்திற்கும் பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் இன்று மாலை 5.45 மணியளவில் இராணுவத்தினருக்கு உணவு எடுத்துச் செல்லும் ட்ரக் வண்டியை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இரண்டு சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாகனம் சிறு சேதத்திற்கு உள்ளாகியதாகவும், படையினருக்குப் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

புளொட் உறுப்பினர் சுட்டுக்கொலை

இதற்கு சற்று முன்னதாக புளொட் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரும் முக்கியஸ்தருமாகிய பவன் என்றழைக்கப்படும் செல்வராசா என்பவர் பூந்தோட்டம் சந்திக்கருகில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவருடன் பயணம் செய்த மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வீதியோரத்தில் மறைந்திருந்தவர்கள் துப்பாக்கிப்பிரயோகத்தின் பின்னர் கொல்லப்பட்டவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளையும் துப்பாக்கிப்பிரயோகம் செய்தவர்கள் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மன்னார் முன்னரங்கப் பகுதியில் முன்னேறி வரும் இராணுவத்தினர் சாளம்பைக்குளம் என்ற கிராமத்தை நேற்று அதிகாலை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போது கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 05 மே, 2008

‘வன்முறை காரணமாக நியாயமான தேர்தலுக்கான சூழல் இலங்கை கிழக்கு மாகாணத்தில் இல்லை’

இலங்கையில் எதிர்வரும் சனிக்கிழமை மாகாண சபைக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இதுவரை 50க்கும் மேற்பட்ட தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் தேர்தல் செயலகத்தின் தகவல்களின்படி அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் தீவைப்பு உட்பட அம்பாறை மாவட்டத்தில் 29 வன்முறைகள் குறித்த முறைப்பாடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 முறைப்பாடுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 12 முறைப்பாடுகளும் என இது வரை 61 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும் இது தேர்தல் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கஃபே அமைப்பின் பேச்சாளரான கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் வாக்காளர் அட்டைகள் பறிக்கப்பட்டதாகவும், இவை குறித்த முறைப்பாடுகளை தாம் தேர்தல் ஆணையர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு கொண்டுசெல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தற்போது கிழக்கு மாகாணத்தில் உருவாகிவருகின்ற நிலைமை அங்கு ஒரு நியாயமான, நீதியான தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்பதையே காட்டுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

சித்தார்த்தன்

இதனிடையே, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க் கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழோசையிடம் பேசிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், வேட்பாளர்கள் மிரட்டப்படுகின்ற மற்றும் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவரவே செய்வதாகக் கூறினார்.

வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுவது ஒருபுறம் இருந்தாலும், வாக்காளர்களாகிய மக்கள் அச்சுறுத்தப்படுகின்ற விடயமே தமக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும், இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக மக்கள் உண்மையாகவே பயந்துபோயிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இப்படிப்பட்ட மிரட்டல்களைச் செய்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் சார்பில் பேசவல்ல ஆஸாத் மௌலானா மறுத்துள்ளார்ர்.

அமைச்சர் தேவானந்தா

இலங்கை சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் கருத்து வெளியிடுகையில், ஓரளவு பிரச்சினைகள் இருப்பது உண்மைதான் என்றாலும் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட நிலைமையே காணப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
இவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


முகமாலையில் உக்கிர சண்டை – சேத விபரங்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்

இலங்கையின் வடக்கே முகமாலை மற்றும் வடமேற்கே மன்னார் பகுதிகளில் இராணுவத்தினருடன் திங்களன்று இடம்பெற்ற சண்டைகளில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20 படையினர் காயமடைந்துள்ளதாகவும் கொல்லப்பட்ட படையினரின் 2 சடலங்களையும் இராணுவ தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாக விடுதலைப் புலிகளின் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் இந்தத் தாக்குதல்களில் 5 படையினரே கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், 2 படையினர் காணாமல் போயிருப்பதுடன், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகளிடமிருந்து தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதியின் முன்னணி காவலரண்களைத் தாக்கி உட்புகுவதற்கு விடுதலைப் புலிகள் திங்கட்கிழமை காலை முயற்சித்ததாகவும், அந்த முயற்சி படையினரின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த மோதல்கள் குறித்து மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றில் தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பகுதியை உடைத்துக்கொண்டு இராணுவமே முன்னேறுவதற்கு முயற்சித்ததாகவும், அந்த முயற்சி தமது எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 மே, 2008


இலங்கையின் வடக்கில் தொடரும் வன்முறை

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் இரு தரப்பிலும் 14 பேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் மற்றும் மணலாறு பிராந்திய முன்னரங்குகளில் இடம்பெற்ற நேரடி மோதல்கள் மற்றும் வீதியோரக் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் என்பவற்றில் 11 விடுதலைப் புலிகளும் 3 படையினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.

இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் வியாழக்கிழமை மன்னார் திருக்கேதீஸ்வரத்திலிருந்து வேட்டையாமுறிபை நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினரை கறுக்காய்குளம் பகுதியில் விடுதலைப் புலிகள் எதிர்த்து தாக்குதல் நடத்தி அவர்களின் முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளதாகவும், இந்தச் சண்டைகளின்போது 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையே, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடைபெற இன்னமும் 7 நாட்களே இருக்கும் வேளையில், இது வரை 53 தேர்தல் வன்முறைகள் பதிவாகியிருப்பதாக பொலிஸ் தேர்தல் செயலகம் கூறுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் 26 வன்முறைகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வன்முறைகள், திருகோணமலை மாவட்டத்தில் 9 வன்முறைகள் என பதிவாகியுள்ளது.

இந்த வன்முறைகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தேர்தல் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மே, 2008

இலங்கையில் தொடரும் மோதல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடபகுதியில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மேலும் கடும் மோதல்கள் எனச் செய்திகள் கூறுகின்றன.

அரச பாதுகாப்புத்துறை அறிக்கையொன்று மன்னார் மாவட்டத்தில் நடந்த மோதலில் குறைந்தது 13 புலிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு அரச படையினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.

ராணுவத் தரப்பின் வேறொரு செய்தி, மணலாறு – வெலிஓயா பகுதியில் மேலும் 17 புலிகளும் 7 படையினரும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.

விடுதலைப் புலிகளிடமிருந்து இவை குறித்து எந்த தகவலும் கிடையாது.

சண்டை நடக்கும் பகுதிகளுக்குச் செய்தியாளர்கள் செல்வதற்கு அரசு தடையிருப்பதால் இத்தகைய செய்திகளை ஆராயந்து சொல்வது வழமையாக கடினமாது.


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் 3 முக்கிய சட்டங்கள் – ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க

ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றுமானால் மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் 3 முக்கியமான சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுகிழமையன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, இந்த சட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக தமது கூட்டணிக் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைதல், இயற்கை மற்றும் யுத்த அனர்த்தங்களின் போது இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தல்,சுதந்திரமான முறையில் மீன் பிடித் தொழில் ஆகியவற்றறை உள்ளடக்கியே உத்தேசிக்கப்பட்டுள்ள 3 சட்டங்களும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் வடக்கில் அரசு இன்னமும் எதனையும் கைப்பற்றவில்லை என்றும், வடக்கு இன்னும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அங்கே இடைக்கால நிர்வாகம் எதற்கு என்றும் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.


மடுக்கோவில் பிரதேசத்தை யுத்தமில்லாத அமைதிப்பிரதேசமாக்க வேண்டும் என வலியுறுத்தல்

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

இலங்கையின் வடமேற்கே இராணுவத்தின் பாதுகாப்பில் வந்துள்ள மடுக்கோவில் பிரதேசத்தை யுத்தமில்லாத அமைதிப்பிரதேசமாக்க வேண்டும் என மன்னார் ஆயரும், இலங்கையின் ஆயர் மன்றமும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், இத்தகைய கோரிக்கை அரசாங்கத்திடம் விடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

ஆயினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், மடுக்கோவில் அமைதிப்பிரதேசமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் ஒரு வருடத்திற்கு முன்பே எழுத்து மூலமாக விடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்பின்பு நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவரும், ஜனாதிபதியுமாகிய மகிரந்த ராஜபக்ச அவர்களை இரண்டு தடவைகள் நேரடியாகச் சந்தித்து இந்தக் கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தியதாகவும் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அத்துடன் இந்தக் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் கொழும்பு ஆயர், மற்றும் மடுக்கோவில் பரிபாலகர் ஆகியோர் உடன் இருக்க தமக்கு உறுதியளித்ததாகவும், ஆயினும் உரிய நடவடிக்கைகள் எதுவும் அது தொடர்பில் எடுக்கவில்லை என்றும் மன்னார் ஆயர் தெரிவித்தார்.

இது குறித்த மேலதிக தகவல்களுடன், இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும் எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


பிரிட்டனில் விடுதலைப்புலிகள் குறித்த விசாரணைக்காக மூவர் கைது

படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் இருவர் வேல்சில் கைது செய்யப்பட்டதாகவும் மூன்றாவது நபர் லண்டனில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளில் தீவிரவாதச் செயல்களை, ஏற்பாடுகளை செய்ய முற்பட்டது, தீவிரவாத செயல்களை தூண்டியது அல்லது தீவிரவாத செயல்களுக்காக தயார் செய்தது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு 2001 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.


Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »