Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Hindu’

Kashmiri Hindus Suspend Protest On New Pact, Muslims Reject Accord: Amarnath pact: Curfew re-imposed in some areas

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

காஷ்மீர் கோயில் விவகாரத்தில் புதிய உடன்பாடு

காஷ்மீர் ஆர்ப்பாட்டங்கள்
காஷ்மீர் ஆர்ப்பாட்டங்கள்

இந்தியாவின் காஷ்மீரில், கோயில் ஒன்றை சுற்றியிருக்கின்ற நிலத்தை பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சையில், அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டத்தை இந்துக்கள் கைவிட்டுள்ளனர்.

கோயிலை நடத்தும் வாரியத்திற்கு மேலதிகமாக நிலங்களை கொடுப்பதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த சர்ச்சையால் இரு மதத்தினரும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இப்போது நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், சர்சைக்குரிய நிலத்தை, வாரியத்தினர் தற்காலிகமாக பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் ஒப்பு கொண்டுள்ளனர்.

இந்த செய்தியானது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரில் புதிய ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Stampede at Naina Devi Temple in Bilaspur HP: 145 Dead, 30 Injured – ‘Police cane-charged us’: Stampede survivors

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2008

இந்தியக் கோவிலில் கூட்ட நெரிசல்; குறைந்தது 140 பேர் பலி

வட இந்தியாவில் ஒரு இந்துக் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தபட்சம் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறுகின்றனர். தவிர ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஒரு குன்றின்மேல் அமைந்துள்ள நைனா தேவி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிராவண மாத நவராத்திரி சிறப்புப் பூஜைக்காக சென்றுகொண்டிருக்கையில், பாதையின் விளிம்பி உள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழ, ஜனநெரிசல் ஏற்பட்டததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.

இறந்தவர்களில் சுமார் நாற்பது பேர் சிறார்

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Malaysian Indian challenges dead brother’s conversion: Hindu family in court to reclaim relative’s body set to be buried as Muslim

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008

மலேசியாவில் “சடலமும் சர்ச்சையும்”

மலேசியாவில் தொடரும் மத சர்ச்சைகள்
மலேசியாவில் தொடரும் மத சர்ச்சைகள்

மலேசியாவில் தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் சடலத்துக்கு இறுதி கிரியைகளை செய்வது தொடர்பில், இந்து மதத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கும், அந்த நாட்டின் இஸ்லாமிய மத திணைக்களத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இலங்கேஸ்வரன் என்னும் பிறப்பால் இந்துவான, 34 வயதுடைய, தற்கொலை செய்துகொண்ட இந்த நபர், தனது குடும்பதுக்கு தெரியாமலேயே இஸ்லாத்துக்கு மாறி விட்டதாகக் கூறும் இஸ்லாமிய திணைக்களம், அவரது இறுதி அடக்கத்துக்காக, சடலத்தை தம்மிடம் தர வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால், அவரது மத மாற்ற சான்றிதழில், அவரது கையெழுத்தோ அல்லது விரலடையாளமோ இல்லாத காரணத்தால், அவரது மதமாற்றத்தை ஏற்க முடியாது என்று கூறும் அவரது குடும்பத்தவர், அவரை தமது இந்து முறைப்படி அடக்கம் செய்ய சடலத்தை தம்மிடம் தரவேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இஸ்லாமிய நாடான மலேசியாவில், சிறுபான்மையினத்தவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் மத விவகாரத்தில் தொடருகின்ற முறுகலான உறவினை வெளிப்படுத்தும் அண்மைய சம்பவம் இதுவாகும்.

மரணத்தின் போதான பிணக்குகளை தவிர்ப்பதற்காக, மதம் மாறும் எவரும் அது பற்றி தமது குடும்பத்தினருக்கு அறிவிக்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் இந்த வருட முற்பகுதியில் கூறியிருநந்தார்.

ஆனால், இந்த அறிக்கை பின்பற்றப்படுவதில்லை என்றும், ஒருவரது சடலம் அவருக்கு முன்பின் தெரியாதவர்களால் உரிமை கோரப்படும் சம்பவம் ஒன்று மீண்டும் நிகழ்ந்துள்ளது என்றும் மத நல்லிணக்கு குழு ஒன்று கூறியுள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Geetha, Ladies, Varnasramam: Kanimozhi speech in DMK Women Conference at Cuddalore

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன?

– கி. வீரமணி

இதோ ஆதாரங்கள்:
ஜாதி (வர்ணமதர்ம) பாதுகாப்பு, கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள்,

“இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்தி லிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;
பெண்ணின் துர்புத்தியால் தான்
இங்கு வருணாசிரம தர்மம்
அழியப் போகிறது என்று!
அப்படியானால் உங்களுக்கெல்லாம் இருக்கும் பொறுப்பு என்ன என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனமாற்றத்தினால்தான் இந்த ஜாதி அழியும் என்ற பொறுப்பை 4000 ஆண்டுகளுக்கு முன்னால், அர்ஜுனன் நம்மீது ஏற்றி வைத்து விட்டுப் போயிருக்கிறான். ஆனால் கீதையே, இப் படி பல இடங்களில் திரும்பத் திரும்ப ஜாதியத்தை வலியுறுத்தி, அது இந்த எதிர்ப்புகளுக்கு எதிர்ப்பான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்று சுட்டிக்காட்டியுள்ளார், கீதை ஒரு கொலை நூல் என்பதை யும் திலகருடைய மேற்கோள் ஒன்றையும்கூட பொருத்தமாகச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் கவிஞர் கனிமொழி.
இதை எதிர்த்து விநாயகர் வி. முரளி அறிக்கை ஒன்றை இன்றைய (`தினமணி 17.6.2008) நாளேடு ஒன்றில் விடுத்துள்ளார்.
“பகவத் கீதையில் இல்லாததை திரித்துக் கூற வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இந்து இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் விநாயகர் வி. முரளி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
`பெண்களால்தான் வருணாசிரம தர்மம் அழியும் என்று கீதையில் அர்ஜூனன் கூறுகிறார் என கடலூரில் நடைபெற்ற தி.மு.க., மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியிருக்கிறார்.
இது போன்ற கருத்துகள் பகவத் கீதையில் இல்லை. இவ்வாறு இல்லாத கருத்துகளை திரித்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று விநாயகர் வி. முரளி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். என்று `தினமணியில் செய்தி வந்துள்ளது.
அப்படி எதுவும் கீதையில் இல்லை; இல்லாததை கனிமொழி கூறியுள்ளார். என்று கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான செய்தியாகும். திராவிடர் இயக்கப் பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ (திருமதி கனிமொழி உட்பட) ஆதாரமில்லாமல் எதையும் பேச மாட்டார்கள்.
கீதையின் முதல் அத்தியாயத்திலேயே உள்ள சுலோகங்களில் உள்ள கருத்தைத் தான் கவிஞர் கனிமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
“கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப்பெண்கள் கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ணசாங்கரியம். (குலங்களின் கலப்பு) ஏற்பட்டு விடும்.

“அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸ்ங்கர:
(அத்.1 – சுலோகம் – 41)

இந்த உண்மையைத்தான் ஆதாரப்பூர்வமாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.
கீதையைப் பரப்புபவர்களைவிட எதிர்ப்பவர்கள்தான் உள்ளபடியே படித்து ஆதாரப் பூர்வமாகக் கூறுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

கீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை

– கனிமொழி எம்.பி.

சென்னை, ஜூன் 19- பகவத் கீதையை திரித்துக் கூறவேண் டிய அவசியம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப் பினர் கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்: ஜூன் 17 அன்று வெளியான தினமணி யில் விநாயகர் வி. முரளி என்பவர் கீதையில் இல்லாத கருத்துகளை கடலூரில் நடந்த தி.மு.க. மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசி யிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் பகவத்கீதையில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதர்மாபி பவாத் க்ருஷ் ணப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய; ஸ்தரீஷீ துஷ்டாஸு வார் ஷனேய ஜாயதே வர்னாஸங் கர

இது கீதையின் முதல் அத் தியாத்தில் 40-ஆவது பாடல். கிருஷ்ணனை நோக்கி சொல் வதாக வருகிறது. விருஷ்ணி குலத்தில் பிறந்தவனே, குடும் பத்தில் அறமின்மை தலை யெடுக்கும்போது குடும்பப் பெண்கள் களங்கப்படுகின் றனர். பெண் சீரழிந்து கெட் டுப்போவதால்தான் வருணா சிரம தர்மம் அழிந்து தேவை யற்ற சந்ததிகள் பிறக்கின்றன என்பது அதன் பொருள்.

இந்தக் கடைசி வரியைத் தான் நான் மாநாட்டில் சுட் டிக்காட்டிப் பேசினேன். கீதையை மேற்கோள் காட் டுவதோ, உபநிஷத்தை, மகா பாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை, திருக் குறளை மேற்கோள் காட்டுவ தென்பதோ தடை செய்யப் பட்ட ஒன்றல்ல. கீதையை திரித்துக் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு கருத்தாக்கமோ, சமூக வழக்கமோ, அது பாரம் பரியமானதாக இருந்தாலும் கூட அதை இன்றைய கால கட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அதன் நிறை குறைகளை பாதிப்புகளை ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

உலகத்தின் அத்தனை மரபு களும், மதங்களும், கோட் பாடுகளும் இன்று ஒரு மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்பட் டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கி றோம்.

மதத்தின் பெயரால், பாரம் பரியத்தின் பெயரால் பழம் பெருமையின் பெயரால் பெண்கள் ஒடுக்கப்பட்டது என்பது நிதர்சனம். அதை எதிர்க்கும் குரல்கள் எழும் போது இப்படிப்பட்ட கண் டனங்கள் எழும் என்பதும் நிதர்சனம். ஆனால், பகவத் கீதை யைக் காக்க கொடி தூக்குப வர்கள், அதில் என்ன இருக் கிறது என்பதைப் படித்துவிட்டு அதைச் செய்வது உத்தமம் என்று அவ்வறிக்கையில் கனி மொழி தெரிவித்துள்ளார்.

Posted in DMK, Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

மலேசியாவில் 5 தமிழர்களின் விடுதலைக்கான மனு நிராகரிப்பு

Posted by Snapjudge மேல் மே 15, 2008


ஹிண்டிராப் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்

மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 தமிழர்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மலேசிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இவர்களின் கைது குறித்த முன்னைய நீதி ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இந்து உரிமைகளுக்கான செயலணிக்குழுவின் (ஹிண்டிராப்) உறுப்பினர்களான இவர்களது கைது சட்டபூர்வமானது என்று அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறும் ஹிண்டிராப் அமைப்பின் தலைவரான வேதமூர்த்தி அவர்கள், இந்த மனு குறித்து மற்றுமொரு மறு ஆய்வு மனுவைத் தாம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Dasavatharam & Hindu outfits: Kamal vs Vaishnavism – KS Ravikumar

Posted by Snapjudge மேல் மே 14, 2008

“தசாவதாரம் படத்தில் மத உணர்வு காட்சிகள் இல்லை’: நீதிமன்றத்தில் தணிக்கை குழு பதில்

சென்னை, மே 13:   “தசாவதாரம்’ படத்தில் மத உணர்வை தூண்டக்கூடிய காட்சிகள் இல்லை. அப்படத்தை நன்கு தணிக்கைக்கு உட்படுத்திய பின்னரே “யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது.

“தசாவதாரம்’ என்ற தலைப்பை யாரும் காப்புரிமை செய்யவில்லை என்பதால் அதனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளார்.

“ஆஸ்கார் பிலிம்ஸ்’ தயாரித்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி கமலஹாசன் நடித்த “தசாவதாரம்’ படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து சுவாமி கோவிந்த ராமானுஜ தாசா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மத உணர்வை தூண்டும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்கிய பின்னரே தசாவதாரம் படத்தை வெளியிட வேண்டும். “தசாவதாரம்’ என பெயர் வைக்கவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக தணிக்கை குழு மண்டல அலுவலர் பாபு ராமசாமி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விபரம்:

“தசாவதாரம்’ என்ற தலைப்பு ஏன், எப்படி? இந்து மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளது என்பதை மனுதாரர் விளக்கவில்லை. இந்த தலைப்பு சினிமா ஒளிப்பதிவு சட்டத்தை மீறுவதாக இல்லை. இதற்கு முன் “நவராத்திரி’, “கல்கி’, என்ற பெயரிலும் படங்கள் வெளியாகி உள்ளன.

சைவத்திற்கும், வைஷ்ணவத்திற்கும் இடையே மோதல்கள் ஏற்படுவது போன்ற காட்சிகள் படத்தில் இல்லை. பிரணவ மந்திரத்தின் மேல் கமலஹாசன் ஏறுவது போன்றோ, பகவத் கீதையை கிழிப்பது போன்றோ காட்சிகள் இல்லை. அதற்கு சான்றிதழும் வழங்கப்படவில்லை.

சைவத்தின் மீது பற்றுடைய இரண்டாம் குலோத்துங்க சோழன் எப்படி வைஷ்ணவத்தையும் சார்ந்து இருந்தான் என்பது தொடர்பான காட்சிகளே இடம் பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் படத்திற்கு “யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராமானுஜர் வேடத்தில் கமல் நடிக்கவில்லை. ரங்கராஜன் நம்பி என நடித்துள்ளார்.

படம் குறித்த தகவலை முழுமையாக அறியாமல், கற்பனையாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு:

“தசாவதாரம்’ படத்தை தகுதி வாய்ந்த அமைப்பு பார்த்த பின்னரே அதற்கு “யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தை பார்க்காமல் அதன் ஒரு சில காட்சிகளை மட்டும் பார்த்து விட்டு வழக்குப் போட்டுள்ளனர். இது கேலிக்கூத்தானது.

12-ம் நூற்றாண்டின் வரலாற்று அடிப்படையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சமய மோதல் காட்சிகள் இல்லை. “தசாவதாரம்’ தலைப்பு தவறாக பயன்படுத்தவில்லை. இத் தலைப்பிற்கு யாரும் காப்புரிமை பெறவில்லை. எனவே தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை

படத்தின் கதை ராமானுஜர் வாழ்க்கைப் பற்றியோ அல்லது ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றியதோ இல்லை. ராமானுஜரை, ஸ்ரீரங்கநாதர் சிலையுடன் கட்டி கடலில் வீசுவது போன்ற காட்சிகள் இல்லை.

எனவே தணிக்கை குழுவால் “யு’ சான்றிதழ் அளிக்கப்பட்ட காட்சிகளை நீக்கவேண்டியதில்லை. கருத்து சுதந்திரம் தடுக்கப்படக்கூடாது. படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி முடிவாகவில்லை:

நீதிபதிகள் எம்.சத்யநாராயணன். ராஜசூர்யா அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன் “தசாவதாரம்’ பட வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது படம் வெளியாகும் தேதி முடிவாகி விட்டதா? என நீதிபதிகள் கேட்டனர். இன்னும் முடிவாகவில்லை என தெரிவித்ததால் அடுத்த வாரத்திற்கு வழக்கை தள்ளி வைத்தனர். இதனால் “தசாவதாரம்’ படம் மே 15-ம் தேதி வெளியாவது தள்ளி போகிறது.

Posted in Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »