Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2008
மலேசியாவில் ஹிண்ட்ராப் அமைப்புக்கு தடை
மலேசியாவில் வாழும் சிறுபான்மை இந்திய வம்சாவளிகளுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்று கோரி போராடி வரும் ஹிண்ட்ராப் அமைப்பை மலேசிய அரசு தடை செய்துள்ளது.
ஹிண்ட்ராப் எனப்படும் இந்து மக்கள் உரிமை நடவடிக்கை குழு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக உள்துறை கூறியுள்ளது. மலேசியாவில் வாழும் இருபது லட்சம் இந்திய வம்சாவளிகளுக்கு வேலைகளிலும், கல்வி வாய்ப்புகளிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து ஹீண்ட்ராப் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது.
மலேசியாவின், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹிண்ட்டிராப் அமைப்பின் 5 தலைவர்கள் காலவரையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத பெருமளவிலான மக்கள் பங்கேற்ற எதிர்புப்பு போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட இந்திய வம்சாவளியினர் காவல் துறையுடன் மோதியும் உள்ளனர்.
Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: Asia, Democracy, Etnicity, Free, Freedom, Hindraf, Independence, India, KL, Liberation, Malaysia, PAK, Pakistan, Politics, Polls, Regional, Security, Speech, Tamils, voters | 1 Comment »
Posted by Snapjudge மேல் மே 15, 2008
 |
|
ஹிண்டிராப் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் |
மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 தமிழர்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மலேசிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இவர்களின் கைது குறித்த முன்னைய நீதி ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இந்து உரிமைகளுக்கான செயலணிக்குழுவின் (ஹிண்டிராப்) உறுப்பினர்களான இவர்களது கைது சட்டபூர்வமானது என்று அறிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறும் ஹிண்டிராப் அமைப்பின் தலைவரான வேதமூர்த்தி அவர்கள், இந்த மனு குறித்து மற்றுமொரு மறு ஆய்வு மனுவைத் தாம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: Arrest, Elections, Hindraf, Hindu, Islam, Law, Malaysia, Muslim, Order, Polls, Tamils | Leave a Comment »