Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Police’

Traffic Ramasamy attacked for asking Lawyers to Return to work: Public interest writ petition filed by social activists

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

டிராபிக் ராமசாமியை தாக்கியதாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸôருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலை அடுத்து, வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அனுமதிக்கப்படாத இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு புகார் தந்தி அனுப்பியுள்ளார்.

இது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | 1 Comment »

India: Violence against Christians: No let-up in Orissa, Karnataka mob attacks: Police station torched

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 17, 2008

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மத்திய அரசு கர்நாடகத்துக்கு அறிவுரை

கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுரை அனுப்பியிருக்கிறது.

ஒரிஸ்ஸா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் கடந்த சில தினங்களாக கிறிஸ்த தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நடந்துவருகிறது.

இந்து கடும்போக்கு அமைப்புக்கள் இதற்குக் காரணம் என்றும், ஆனால் பாஜக தலைமையிலான மாநில அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த பிரச்சினையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக மத்திய உள்துறைச் செயலர் மதுகர் குப்தா தெரிவித்தார்.

ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் சட்டத்தின் 355-வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அனுப்பக்கூடும் என்று தில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மாநில அரசைக் கலைப்பதற்குப் பயன்படுத்தப்படும் 356-வது பிரிவுக்கு முந்தைய நடவடிக்கை இது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

மத்திய அரசின் இந்த உத்தரவு, வெறும் அறிவுரை மட்டும்தான் என்றும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.



இந்து – கிறிஸ்தவ மோதல்கள் இந்தியாவில் தொடர்கிறது

மோதலில் எரிக்கப்பட்ட ஒரு தேவாலயம்
மோதலில் எரிக்கப்பட்ட ஒரு தேவாலயம்

இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு இடையில் முருகல் நிலை தொடரும் பின்னணியில் மேலதிக வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே மோதல்கள் இடம்பெற்ற கந்தமால் மாவட்டத்தில், சுமார் 500 பேர் கொண்ட கும்பல் ஒன்று காவல் நிலையத்தை தாக்கி தீவைத்ததில் ஒரு காவலதிகாரி கொல்லப்பட்டார். மற்ற காவலர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடித்தப்பினார்கள்.

ஹிந்து மத தலைவர் ஒருவர் ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதை தொடர்ந்து தற்போதைய மதக்கலவரங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இந்த மோதல்கள் கடந்த சில தினங்களில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவுக்கும் பரவியிருக்கிறது.

Posted in Govt, India, Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Attorneys threaten to paralyse courts, besiege parliament: Top lawyers Anand & Khan debarred for bribing witness: Guilty of contempt – BMW hit-and-run expose verdict: Bar associations, Lawyers on strike, protest

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 22, 2008

நீதிக்கு தடையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு தண்டனை

இந்தியாவில், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர், ஒரு வழக்கில் முறையான நீதி கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருந்ததாகக் கூறி, அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது.

புதுடெல்லியில் கடந்த 1999-ம் ஆண்டு பி.எம்.டபுள்யு. கார் ஒன்று மோதியதில், 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், காரை ஓட்டிச் சென்ற சஞ்சீவ் நந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், ஆயுத முகவர் சுரேஷ் நந்தாவின் மகன்.

அந்த வழக்கில், சுனில் குல்கர்னி என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

சஞ்சீவ் நந்தா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும், காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.யு. கானும் ஆஜரானார்கள்.

அவர்கள் இருவரும் சேர்ந்து, சுனில் குல்கர்னி இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியபோது, தொலைக்காட்சி சானல் ஒன்றின் சார்பில், அது ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே அந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் ஆனந்தும், ஐ.யு. கானும் எதிரெதிர் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து, நீதி வழங்கப்படுவதற்குத் தடைக்கல்லாக செயல்பட்டதாக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரு வழக்கறிஞர்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் ஆஜராகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பதவியை அவர்களிடமிந்து பறிப்பதற்கும் நீதிமனறம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் இருவரும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Bhutanese temple thieves get life

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2008

பூட்டானில் ஆலயத் திருட்டுக்கு ஆயுள் தண்டனை

பூட்டானில் ஒரு புத்த மடாலயம்
பூட்டானில் ஒரு புத்த மடாலயம்

இமயமலைப்பகுதி நாடான பூடானில் புத்த விஹாரங்கள் மற்றும் கோவில்களில் இருந்து விலைமதிப்மிக்க கலைப்பொருட்களை திருடியதற்காக, பல திருடர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குப்புற மாவட்டமான பாரோவில் இரண்டு திருடர் கும்பல்கள் செயல்பட்டுவந்தன.

செல்வந்த பூடானியர்கள் நகைகள், தங்கத்தினாலான புத்தர் சிலைகள் மற்றும் பிற பொக்கிஷங்களை கோவில்களுக்கு காணிக்கைப் பொருட்களாக அடுக்கடி கொடுப்பதுண்டு.

இந்த பொருட்களை திருடுவது என்பது 1970களில், மேலை நாட்டு சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பூடானுக்கு வர அனுமதிக்கப்பட்டபோது தொடங்கியது.

வெளிநாடுகளிலிருந்து வாங்குவோருக்காக, உள்ளூர் திருடர்கள் இவைகளை திருடியிருக்கலாம் என்ற கவலை நிலவுகிறது.

Posted in Law, Order | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Naxalites target cops on boat; 54 security men feared drowned in Maoist attack in Orissa

Posted by Snapjudge மேல் ஜூன் 30, 2008

ஒரிஸ்ஸாவில் மாவோயியவாதிகள் தாக்குதலில் ஐம்பது பொலிசார் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் மாவோயியவாதிகள் நடத்திய ஒரு தாக்குதலில் ஒரு படகு ஏரியில் கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் ஐம்பது பொலிசார் காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கிளர்ச்சிக்காரர்களுடன் மோதுவதற்காக விசேட படையணி ஒன்று படகில் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது.

மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் ஏரி ஒன்றில் படகு சென்றிருந்த வேளை அருகிலிருந்த மலைக் குன்றுகளிலிருந்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

படகில் இருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே நீந்திக் கரையேறியதாகத் தெரிகிறது.

Posted in India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

June 23, 24: Eezham, Sri Lanka, LTTE, Refugees in Tamil Nadu, Batticaloa Updates

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

தமிழகத்தில் சொத்து வாங்கிய இலங்கை அகதிகளின் விவரம் திரட்டப்படுகிறது

தமிழகத்தில் நிலம், வீடு அல்லது மோட்டார் வாகனங்கள் வாங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த விவரங்களை தமிழக அரசு சேகரிக்கத் தொடங்கியிருககிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி, அகதிகள் இவ்வாறு சொத்துகள் வாங்குவது குற்றம், அனுமதிக்கப்படக்கூடாது, உண்மையான அகதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம், ஆனால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தார்.

ஆனால், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக நிறுவனர் சந்திரஹாசன், இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துகளை சில நியதிகளுக்கு உட்பட்டு வாங்கமுடியும் என்கிறார்.

ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அட்டை போன்றவற்றை அகதிகள் பெறுவதாகக் கூறப்படுவது தவறு என்ற அவர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால் இலங்கைத் தமிழர்கள் நலனை பாதிக்கும் வகையில் தமிழக அரசு நடந்துகொள்ளாது என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கிளேமோர் தாக்குதலில் பொலிசார் 3 பேர் பலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியில் திங்கள் மாலை இடம்பெற்ற கிளெமோர் குண்டுத் தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மற்றுமொரு பொலிஸ்காரர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறுகிறார்கள்.

ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இந்தப் பொலிஸ்காரர்கள் அங்குள்ள நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றுக்கு குளிக்கச் சென்றிருந்தபோது, குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் இந்தக் குண்டு அங்கு பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதி ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கைப் படையினரால், கடந்த ஆண்டில் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் காவலிலிருந்த சந்தேக நபரொருவர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடமொன்றை காட்டுவதற்காக இன்று அதிகாலை கிளாலிவெட்டைக்கு இந்நபர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு விடுதலைப் புலிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டதாக சமப்வம் தொடர்பாக பொலிசார் கூறுகின்றனர்.


வட இலங்கை மோதல்கள்

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் போர்முனைப் பிரதேசங்களில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண்கள் மீது ஞாயிறன்று மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து இடம்பெற்ற மோதல்களில் 33 விடுதலைப் புலிகளும், 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இராணுவச் சிப்பாய் ஒருவரைக் காணவில்லை என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

இதேவேளை, வவுனியா பாலமோட்டை பகுதியில் ஞாயிறு காலை 3 முனைகளில் தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இந்தச் சண்டைகளின்போது 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இராணுவத்தினரின் 3 சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். நல்ல நிலையில் இருந்த ஒரு சடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 7 விடுதலைப் புலிகளின் சடலங்களை இன்று பிற்பகல் புளியங்குளம் சோதனைச்சாவடியில் விடுதலைப் புலிகளிடம் தாங்கள் கையளித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.


பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இடைக்காலத் தீர்வுக்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் சர்வ மதத்தலைவர்கள் வேண்டுகோள்

இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள்
இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள்

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை ஆராய்கின்ற சர்வகட்சிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஒரு இடைக்காலத் தீர்வாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வமத தலைவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்தக் குழுவில் இடம்பெற்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு கூறியுள்ளார்.

இலங்கையில் நடக்கின்ற மனித உரிமை மீறல்கள், கொலைகள், காணாமல் போதல்கள், குறிப்பாக வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவை குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சர்வமதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் பொதுமக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் சிக்கி துன்பப்படுகின்ற நிலைமைகளை அறிந்து, மக்களுக்கு நிவாரணம் செய்ய வேண்டும் என்று மதத்தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரியதாகவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.


Posted in Govt, India, Law, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

N Vittal – Indian Justice System Reformations: Law & Order

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

நீதித்துறையின் மறுநிர்மாணம்!

என். விட்டல்

அரசாட்சியின் மூன்று முக்கியத் தூண்களாக சட்டமியற்றும் துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது நமது அரசியல் சட்டம். இந்தியா விடுதலையானது முதல் நாட்டில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதில் நீதித்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தனித்துவமான மக்களாட்சி இந்தியாவில் நிலைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.

தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காப்பதில் நீதித்துறை திறமையாகச் செயலாற்றி வந்திருக்கிறது. நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைக்கும் சட்டமியற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் வகையிலோ, அடிப்படை உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலோ அந்தச் சட்டங்கள் அமைந்துவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது குற்ற வழக்குகள், சொத்துகள் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இவையெல்லாம், நாட்டின் நல்லாட்சி நடைபெறுவதை உறுதி செய்ய நீதித்துறை எடுத்துக் கொண்ட முயற்சிகள்.

அரசு நிர்வாகம் எங்கெல்லாம் தோற்றுப்போனதோ அங்கெல்லாம் தலையிட நீதித்துறை தவறியதேயில்லை. அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் போக்கை பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பு மூலம் ஒழுங்குபடுத்தியது நீதிமன்றம். கூட்டாட்சியை வலுப்படுத்தியதுடன் மக்களாட்சியை உறுதி செய்யவும் இது உதவியது.

1997-ம் ஆண்டில் ஹவாலா வழக்குகளில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் தலையிடக்கூடாது என்றும், மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு மட்டும் இதை விசாரிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும் நீதிபதி வர்மா தீர்ப்பளித்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுடன், சட்டப் பூர்வமான பாதுகாப்பும் கிடைக்கும் என்பதை வலியுறுத்திய தீர்ப்பு இது.

இப்படிச் சாதனைகள் செய்துவரும் நீதித்துறையின்மீது சில பொதுவான புகார்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.

ஒரு நல்ல நிர்வாகம் மூன்று சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்தாக வேண்டும். முதலாவது சட்டத்தின் ஆட்சி நடத்துவதை உறுதி செய்வது. இரண்டாவதாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மூன்றாவதாக, மனித வளம், இயற்கை வளம், நிதி போன்ற எந்த வளமும் வீணாகக்கூடாது.

சட்டத்தின் ஆட்சி திறமையாக இருக்க வேண்டுமெனில் விரைவாக நீதி கிடைக்க வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் நீதிகூட அநீதிதான். அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதமே ஊழல் பெருகக் காரணம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். குற்றவாளிகளை உடனடியாகத் தண்டித்தால்தான் ஊழல் குறைய வாய்ப்பு ஏற்படும். இதுவரை நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கும் வழக்குகளை இதே வேகத்தில் நடத்தினால் அனைத்து வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்குவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்.

விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் விரும்பும் நிலையில், ஏன் நமது நீதித்துறை மெதுவாகச் செயல்பட வேண்டும்? அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்தத் தாமதத்தால் பயனடையும் ஒரு கூட்டமும் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முக்கியமான காரணம்.

நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பயனடைவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் வழக்கறிஞர்கள். ராம்ஜேட்மலானி சட்ட அமைச்சராக இருந்தபோது நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதற்கு சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டார். ஆனால், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்தச் சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக இன்றுவரை மாற்றங்கள் எதையும் செய்ய முடியவில்லை.

தாமதத்துக்கு மற்றொரு காரணம் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் அடிக்கடி கேட்கும் வாய்தா. இறுதித் தீர்ப்பை தள்ளிப்போடுவதற்காக பயன்படுத்தப்படும் இந்த உத்தியால் வழக்கு இழுத்துக் கொண்டே போகிறது.

வழக்குகளில் தீர்ப்புகள் தள்ளிப்போவதால், கிரிமினல்களும் ஊழல்வாதிகளும்கூடப் பயனடைகிறார்கள். ஒட்டுமொத்தமாக 6 சதவீதத்துக்கும் குறைவான கிரிமினல் வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான வழக்குகளில்கூட குற்றவாளிகள் தப்பிவிடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்தப் போக்கு குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் கொடுக்கப்படும் மறைமுகக் காப்பீடு.

நம்நாட்டில் அரசியல்வாதிகளும் நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பெரும்பயனடைந்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் மீதான குற்ற வழக்குகளை அறிவித்தாக வேண்டும் என நீதிமன்றம் கூறியதால், வேட்பாளர்களில் 20 முதல் 25 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்பது சாதாரண மக்களுக்குக்கூடத் தெரிந்திருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தீர்ப்பு வழங்குவதில் நீதித்துறை தாமதித்து வருகிறது. அதனால் அவர்கள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு இது சரியான உதாரணம்.

பெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக அளவில் வரி செலுத்தும் நிலையில் இருப்போர் ஆகியோருக்குத் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதம் சாதகமாக இருக்கிறது. வரி செலுத்துவதற்குப் பதிலாக நீதிமன்றங்களை அணுகி தொடர்ந்து தடை வாங்கியே காலத்தைக் கழித்துவிடுவதில் இவர்கள் கில்லாடிகள். இது போன்று நீதித்துறையில் ஏற்படும் தாமதங்களை அருண்செüரி தனது புத்தகங்களில் பட்டியலிட்டுள்ளார்.

நீதித்துறையில் தாமதம் ஏற்படுவதை மூன்று காரணிகள் ஊக்குவிக்கின்றன. முதலாவது மேல்முறையீடு, மறு ஆய்வு, மறுவிசாரணை என்பன போன்ற வழிகள் நமது நீதிவழங்கும் முறையில் இருப்பது. இரண்டாவதாக, மிகக் குறைவாக இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை. மூன்றாவது, நீதித்துறைக்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படாதது. இந்த மூன்று காரணிகளின் அடிப்படையில் நீதித்துறையை மறுசீரமைக்க வேண்டும்.

நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பது நீதித்துறையைச் சீரமைப்பதில் முதல்படியாக இருக்கும். இரு வழிகளில் தாமதத்தைக் குறைக்கலாம். ஒன்று, தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை நேரடியாகக் களைவது. மற்றொன்று நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெங்கடாசலய்யா இருந்தபோது, புதிய தொழில்நுட்பங்களை நீதித்துறையில் பயன்படுத்துவதை ஊக்குவித்தார்.

தற்போது நீதித்துறையில் இருக்கும் விதிமுறைகளுக்கு மாற்றாக புதிய விதிகளை தொழில்துறைப் பொறியியலின் 5 கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கலாம். அவை, 1. நீக்குதல், 2. சேர்த்தல், 3. மறுவரிசைப்படுத்துதல், 4. திருத்தம், 5. பதிலீடு. இந்த 5 கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மேல்முறையீட்டின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். அதேபோல் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு கால வரம்பை நிர்ணயிக்கலாம். அதன்படி, ஊழல்வழக்குகளில் அதிகபட்சமாக ஓராண்டு அல்லது 18 மாதங்களுக்குள் குற்றவாளியைத் தண்டிக்க முடியும்.

அடுத்ததாக நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவேண்டும். நீதிமன்றக் கட்டணங்கள் முதலியவற்றை நீதித்துறையே பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு, பிரிட்டன் நீதித்துறையில் உள்ள நடைமுறையை நாமும் பின்பற்றலாம்.

இந்த முறைகள் மூலம் நீதிவழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியவில்லையெனில் வேறொரு உத்தியைக் கையாளலாம். அதற்கு “ஜுஜுத்ஷு உத்தி’ என்று பெயர். அதாவது, இப்போது நீதித்துறையால் ஏற்படும் தாமதத்தால் யாருக்கெல்லாம் பலன் கிடைத்து வருகிறதோ, அவர்களுக்கெல்லாம் தாமதித்து கிடைக்கும் தீர்ப்புகள் எதிராக அமைவது போன்று விதிகளை மாற்றுவது. அப்படிச் செய்யும்போது, யாரும் தாமதத்தை விரும்ப மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், குற்றவழக்குகளில் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தால், வழக்குகளைத் துரிதப்படுத்தவே அரசியல்வாதிகள் விரும்புவர்.

அடுத்து, நீதித்துறையின் அடிப்படைப் பண்புகள் சிலவற்றை மாற்றியாக வேண்டும். குறிப்பாக நீதிமன்ற அவமதிப்பு. உண்மையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் தரப்பு நியாயங்கள் ஏற்கப்படுவதேயில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும். நீதிபதிகள் யாராவது ஊழல் செய்ததாகத் தெரியவந்தால், அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதித்துறையில் மாற்றப்பட்டாக வேண்டிய சில மரபுகள் இருக்கின்றன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட “நீதிமன்ற கோடை விடுமுறை’ இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் நீதிபதிகள் தங்கள் நாட்டுக்குச் சென்று வருவதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கடைசியாக, தீர்ப்பு வழங்கும் முறை. வழக்கு விசாரணையை ஒரு நீதிபதி நடத்த, தீர்ப்பை வேறொரு நீதிபதி எழுதும் நடைமுறை பெரும்பாலான வழக்குகளில் இருக்கிறது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டால், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நீதித்துறையை மறுசீரமைக்கும் முயற்சிகளில் நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்).

Posted in Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sri lanka: Ambarai District – Two policemen murdered

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2008

அம்பாறையில் இரு போலீசார் கொலை

அம்பாறை நகர்
அம்பாறை நகர்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் கல்முனை நகரப் பகுதியில் இன்று காலை இரண்டு பொலிஸ்காரர்கள், அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர்கள் இருவரும், கல்முனை நீதிமன்றத்துக்கு கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், தரவை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி தாரிகளினால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீதே பொலிஸார் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், அதாவது கடந்த 40 நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பேருமாக மொத்தம் 9 பொலிஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, திருகோணமலை மாவட்டம், மூதூர் மணற்சேனை என்னும் இடத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தாம் சுட்டுக்கொன்றதாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றின்போது, கொல்லப்பட்டவர், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்டத்துக்கான தென்பிராந்திய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான, தங்கன் என்று அழைக்கப்படும் சௌந்திரராஜன் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Trial of physician and rights activist: Call to drop all charges against Dr Binayak Sen: Tribal doctor – A Prisoner of Paradox?

Posted by Snapjudge மேல் மே 15, 2008

மனித உரிமை செயற்பாட்டாளரை விடுவிக்க நோபல் பரிசு பெற்றவர்கள் கோரிக்கை.

கம்பிகளுக்கு பின்னால் பினாயக் சென்
கம்பிகளுக்கு பின்னால் பினாயக் சென்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு சிறையில் ஒரு வருடமாக அடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரான டாக்டர் பினாயக் சென் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று நோபல் பரிசை பெற்றுள்ள இருபதுக்கும் மேலானவர்கள் இந்திய அரசிடம் ஒரு கூட்டு வேண்டுகோளை வைத்துள்ளனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் செயல்படும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.

ஆனல், கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் விதம் குறித்து அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஆயுததாரிகளை அவர் விமர்சித்தார் என்கிற காரணத்தினாலேயே அவர் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் பினாயக் சென் அவர்களின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

Binoy Kampmark: The Case of Binayak Sen: “Indian Jailbirds By BINOY KAMPMARK”

Binayak Sen: A Prisoner of Paradox? | Anita Ratnam | Indiainteracts.com

BBC NEWS | South Asia | Dr Binayak Sen: Tribal doctor

Governing Human Rights Violation And Dr. Binayak Sen By Arpita Banerjee

Posted in Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »