TN handloom minister NKKP Raja in property row: Victims charge DMK Cabinet holder for abduction
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2008
அமைச்சர் தூண்டுதலால் கடத்தப்பட்டதாக புகார்:
3 பேர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்
சென்னை, ஜுலை.30-
அமைச்சரின் தூண்டுதலால் 3 பேர் கடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்படும் 3 பேரும் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடத்தல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பள்ளிக்காட்டு தோட்டம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் கேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். 10 ஏக்கர் நிலத்தை பெறுவதற்காக தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர் ஒருவரை கடத்தி சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக மனுவில் கூறியிருந்தார்.
கைத்தறித்துறை அமைச்சரின் ஆட்களால் 3 பேரும் கடத்தப்பட்டதாகவும், அவர்களை மீட்டு, ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
ஐகோர்ட்டில் ஆஜர்
கடத்தப்பட்டதாக கூறப்படும் பழனிச்சாமி, மலர்விழி, சிவபாலன் ஆகியோர் நேற்று ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் நீதிபதிகள் ரகசிய விசாரணை நடத்தினார்கள். பழனிச்சாமியும், மலர் விழியும், தங்கள் உறவினர் ஜெகநாதன் சென்னை அடையாறில் வசித்து வருகிறார் என்றும், அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று உதவி போலீஸ் கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் ஆஜரான சிவபாலனை வீட்டிற்கு செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர். இதே போன்று இன்னொருவர் கடத்தப்பட்டதாக இளங்கோவன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா இன்னும் நோட்டீசு பெறவில்லை என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். தங்களை விடுவிக்கும்போது, இந்த விவரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று குண்டர்கள் மிரட்டியதாக மலர்விழியும், பழனிச்சாமியும் மனு ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
நிலத்துக்காக 3 பேர் கடத்தப்பட்டார்களா?
அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, ஜுலை.26-
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த முள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கேபியஸ் கார்பஸ் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மாமனார் மற்றும் அவரது தம்பிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அமைச்சர் ஒருவரும், அவருடைய ஆட்களும் கேட்டு மிரட்டி வந்தார்கள்.
நிலத்தை விற்க சம்மதிக்காததால், எனது மாமனார், மாமியார், மைத்துனர் ஆகிய 3 பேரையும், அமைச்சரின் ஆட்கள் கடத்தி சென்று சட்டவிரோதமாக எழுதி வாங்க மிரட்டி வருகிறார்கள். எனது மாமனாரின் தம்பியையும் கடத்த முயற்சித்து வருகிறார்கள். சட்டவிரோத பிடியில் இருக்கும் 3 பேரையும் தேடி கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சொக்கலிங்கம், வெங்கட்ராமன் ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். போலீஸ் தரப்பில் இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்