Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008
முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
 |
|
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி |
2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.
அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.
அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.
வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.
அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.
Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: abuse, Alagiri, Alakiri, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Burn, cable, Courts, Criminal, dead, Destruction & Loss, Dhinagaran, Dhinakaran, Dinagaran, Dinakaran, DMK, Donation, Dravidainism, Dravidian, Dravidianism, Govt, HC, ITI, Judges, Justice, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanithi, Karunanithy, Killed, Law, Madurai. Royal, Mob, MuKa, News, Order, Power, Property, Public Properties Prevention, RCV, relative, SC, Stalin, Sun, Thinagaran, Thinakaran, Thirunagar, TN, TV, Venkateswara Industrial Training Institute, Violence | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008
கைமாறுகிறதா கழகம்?
கடலூர், ஜூன் 15: கடலூர் மக ளிர் அணி மாநாடு திமுகவில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அங்கீகாரம் தேடித் தருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்பதைவிட, திமுகவின் வருங்காலத் தலை மைக்கான பதவிப் போட்டியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த பிள்ளையார் சுழி போட்டிருக்கி றது என்பதுதான் பார்வையா ளர்களின் கருத்து.
முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடக்கும் “நிழல் யுத்தத்தின்’ வெளிப்பாடுதான் இந்த மாநாடு என்று கருதும் வகையில் உள்ளாட்சித் துறை அமைச்சரும், துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான மு.க. ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் மாநாட்டில் கலந்து கொள்ளாததைச் சுட்டிக் காட்டுகிறார்கள். உடல்நிலை சரியில்லை என்று மு.க. ஸ்டா லின் தரப்பில் கூறப்பட்டாலும், அவரது சார்பில் ஏன் மகன் உதய நிதி கூடக் கலந்து கொள்ள வில்லை என்கிற கேள்வி எழுப் பப்படுகிறது.
மு.க. அழகிரியின் மகள் கயல் விழியின் கன்னிப்பேச்சு மகளிர் அணி மாநாட்டில் முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது என்பது மட்டுமல்ல, மு.க. அழகிரி, அவ ரது மகன் துரை தயாநிதி என்று அழகிரி குடும்பமே திரண்டு வந் திருந்தது.
முதல்வரின் மனைவி தயாளு அம்மையார், துணைவி ராஜாத்தி அம்மாள் என்று குடும் பத்தினர் அனைவரும் ஆஜராகி இருந்தபோது, மு.க. ஸ்டாலி னின் குடும்பத்தினர் யாருமே வராதது தொண்டர்கள் மத்தியி லேயே பல வதந்திகளைக் கிளப் பிவிட்டிருக்கிறது.
“”உடல்நிலை சரியில்லை என் பது ஒருபுறம் இருக்க, மு.க. அழ கிரியைப்போல் எதிரிகளைச் சமாளிக்கும் சாமர்த்தியம் தள பதி ஸ்டாலினுக்குக் கிடையாது என்று தலைவர் தீர்மானித்து விட்டார். இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக விரைவிலேயே மு.க. அழகிரி கட்சியின் துணைப் பொதுச்செயலாள ராக அறிவிக்கப்படுவார்” என்று தொண்டர்கள் மத்தியில் பரவ லாகவே பேசப்பட்டது.
தனது ஆதரவாளர்களை அமைச்சர் ஸ்டாலின் பாதுகாப் பதில்லை என்பதும், அவர்க ளுக்கு ஆதரவாகக் குரல் எழுப் பாமல் மௌனம் சாதிக்கிறார் என்பதும் அவரைப் பற்றிய பரவ லான குற்றச்சாட்டு.
- ஸ்டாலி னின் தீவிர ஆதரவாளரான தா.கிருட்டிணன் கொலைக்கு, அமைச்சர் ஸ்டாலினின் பதில் மௌனம்தான் என்பதும்,
- அவ ரது ஆதரவாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகா பறிப்பு,
- பூங்கோதை யின் ராஜிநாமா,
- கருப்பசாமிப் பாண்டியன் ஓரங்கட்டப்படுதல் போன்ற நிகழ்வுகளும் மு.க.
ஸ்டாலினின் ஆதரவாளர்களை மிகவும் சோர்வடைய வைத்தி ருக்கின்றன.
“”பாவம், தளபதியின் குரல் இப் போதெல்லாம் எடுபடுவ தில்லை. அவரும் மிகவும் மென் மையாகவும், ஜென்டிலாகவும் நடக்க விரும்புவதால், அந்த பல வீனத்தை மற்றவர்கள் பயன்ப டுத்திக் கொள்கிறார்கள். தலைவ ரின் குடும்பத்தில் இப்போதெல் லாம் மு.க. அழகிரி வைத்தது தான் சட்டம். உடல்நிலையைக் காரணம் காட்டி தளபதி விரை விலேயே ஓரங்கட்டப்படுவார்” என்று போதையில் இருந்தாலும் தெளிவாகவே பேசினார் தொண்டர் ஒருவர்.

அடுத்த தேர்தலில் ஜெயலலி தாவுக்குப் போட்டியாக கனி மொழியும் கயல்விழியும் பிரசா ரத்தில் இறங்குவார்கள் என்றும், அது திமுகவுக்கு பெண்களின் வாக்குகளை அள்ளித் தந்துவி டும் என்றும் மாநாட்டிற்கு வந்தி ருந்த சில பெண்கள் நிஜமாகவே நம்புகிறார்கள்.
மாநாட்டுக்கு வந்திருந்த மூத்த தலைவர் ஒருவர் வருத்தத்துடன் கூறிய விஷயம்~ “தலைவர் இப் படி அதிகார மையங்களை அதி கரித்துக் கொண்டே போவது கட்சியின் வருங்காலத்திற்கு நல் லதல்ல. ஒன்று அல்லது இரண் டுக்கு மேல் அதிகார மையங்கள் இருந்தால், வாரிசுப் போட்டி ஏற் பட்டு வருங்காலத்தில் கட்சி சின் னாபின்னாமாகி விடும். இது ஏன் எங்கள் தலைவருக்குப் புரிய வில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது’.
வாரிசுப் போட்டியில் வலுக்கி றது அழகிரியின் கரங்கள் என் பதை மாநாடு தெளிவாக்கியது.
Posted in DMK, Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: Alagiri, Azakiri, Azhagiri, DMK, family, Feuds, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Kayalvizhi, Politics | 2 Comments »