Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Justice’

Traffic Ramasamy attacked for asking Lawyers to Return to work: Public interest writ petition filed by social activists

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

டிராபிக் ராமசாமியை தாக்கியதாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸôருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலை அடுத்து, வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அனுமதிக்கப்படாத இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு புகார் தந்தி அனுப்பியுள்ளார்.

இது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | 1 Comment »

Nalini release: HC quashes advisory board order on Nalini’s plea

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008

நளினி விடுதலை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நளினி மற்றும் அவரது கணவர் முருகன்
நளினி மற்றும் அவரது கணவர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினியை விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு விதிமுறைகளின்படி அமைக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

விதிமுறைகளின்படி புதிய குழுவை அமைத்து, நளினியை விடுதலை செய்யக் கோரும் மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், நீதிபதி நாகமுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து, நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்களின் பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in India, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Thailand’s long-running political crisis: Lawmakers to Choose Prime Minister After Samak Sundaravej Forced Out

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 10, 2008

தாய்லாந்துப் பிரதமர் பதவி விலக நீதிமன்றம் கெடு

பிரதமர் சமக் சுந்தரவெஜ்ஜும்
பிரதமர் சமக் சுந்தரவெஜ்ஜும்

தாய்லாந்துப் பிரதமர் சமக் சுந்தரவெஜ்ஜும் அவரது அமைச்சரவையும் அடுத்த முப்பது நாட்களுக்குள் பதவி விலக வேண்டும், ஏனெனில் நாட்டின் அரசியல் சாசன விதிமுறையை பிரதமர் மீறியுள்ளார் என்று அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமரான பின்னரும் ஒரு தொலைக்காட்சி சமையல்கலை நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து தோன்றிவந்ததன் காரணமாக, வெளி வியாபார நலன்களைத் தொடரக்கூடாது என்ற பிரதமருக்கான அரசியல் சாசன விதிமுறையை அவர் மீறிவிட்டார் என ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட பென்ச் தீர்மானித்துள்ளது.

இத்தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ஆளும் கூட்டணிக்குத் தலைமை ஏற்றுள்ள மக்கள் அதிகாரக் கட்சியின் அதிகாரிகள், தாங்கள் சமக் அவர்களையே மீண்டும் அதிபராக மீண்டும் தெரிவுசெய்யப்போவதாகக் கூறியுள்ளனர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

DMK Internal Squabbles: Govt told to pay relief for police apathy – Mu Ka Alagiri

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.

அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.

வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.

அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.

Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Attorneys threaten to paralyse courts, besiege parliament: Top lawyers Anand & Khan debarred for bribing witness: Guilty of contempt – BMW hit-and-run expose verdict: Bar associations, Lawyers on strike, protest

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 22, 2008

நீதிக்கு தடையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு தண்டனை

இந்தியாவில், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர், ஒரு வழக்கில் முறையான நீதி கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருந்ததாகக் கூறி, அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது.

புதுடெல்லியில் கடந்த 1999-ம் ஆண்டு பி.எம்.டபுள்யு. கார் ஒன்று மோதியதில், 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், காரை ஓட்டிச் சென்ற சஞ்சீவ் நந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், ஆயுத முகவர் சுரேஷ் நந்தாவின் மகன்.

அந்த வழக்கில், சுனில் குல்கர்னி என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

சஞ்சீவ் நந்தா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும், காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.யு. கானும் ஆஜரானார்கள்.

அவர்கள் இருவரும் சேர்ந்து, சுனில் குல்கர்னி இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியபோது, தொலைக்காட்சி சானல் ஒன்றின் சார்பில், அது ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே அந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் ஆனந்தும், ஐ.யு. கானும் எதிரெதிர் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து, நீதி வழங்கப்படுவதற்குத் தடைக்கல்லாக செயல்பட்டதாக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரு வழக்கறிஞர்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் ஆஜராகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பதவியை அவர்களிடமிந்து பறிப்பதற்கும் நீதிமனறம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் இருவரும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Bhutanese temple thieves get life

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2008

பூட்டானில் ஆலயத் திருட்டுக்கு ஆயுள் தண்டனை

பூட்டானில் ஒரு புத்த மடாலயம்
பூட்டானில் ஒரு புத்த மடாலயம்

இமயமலைப்பகுதி நாடான பூடானில் புத்த விஹாரங்கள் மற்றும் கோவில்களில் இருந்து விலைமதிப்மிக்க கலைப்பொருட்களை திருடியதற்காக, பல திருடர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குப்புற மாவட்டமான பாரோவில் இரண்டு திருடர் கும்பல்கள் செயல்பட்டுவந்தன.

செல்வந்த பூடானியர்கள் நகைகள், தங்கத்தினாலான புத்தர் சிலைகள் மற்றும் பிற பொக்கிஷங்களை கோவில்களுக்கு காணிக்கைப் பொருட்களாக அடுக்கடி கொடுப்பதுண்டு.

இந்த பொருட்களை திருடுவது என்பது 1970களில், மேலை நாட்டு சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பூடானுக்கு வர அனுமதிக்கப்பட்டபோது தொடங்கியது.

வெளிநாடுகளிலிருந்து வாங்குவோருக்காக, உள்ளூர் திருடர்கள் இவைகளை திருடியிருக்கலாம் என்ற கவலை நிலவுகிறது.

Posted in Law, Order | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sex allegations: Malaysia’s Anwar Ibrahim seeks refuge at Turkish embassy after sodomy claim – Denounces new sex charges as ‘fabrication’

Posted by Snapjudge மேல் ஜூன் 30, 2008

முன்னாள் மலேஷியப் பிரதமர் துருக்கியத் தூதரகத்தில் தஞ்சம்

முன்னாள் மலேஷியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் கோலம்பூரிலுள்ள துருக்கியத் தூதரகத்தில் அடைக்கலம் தேடியுள்ளார்.

தகாத பாலுறவுக் குற்றச்சாட்டுகளுடன் அவர் மீது புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் தன்னைப் பிடித்து தடுத்து வைத்திருக்கும் சமயத்தில் ஏற்படக் கூடிய தனக்கு ஆபத்து குறித்து தான் அஞ்சுவதாக பி.பி.சி.யிடம் தெரிவித்த அன்வர் அவர்கள், தான் துருக்கியிடம் அரசியல் தஞ்சம் எதுவும் கேட்கவில்லை என்றும், மாறாகத் தன்னுடைய பாதுகாப்புக்கு மலேசிய அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதத்தையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தன் மீது மீண்டும் அபாண்டமாகப் பழிசுமத்த அரசாங்கம் குற்றச்சாட்டுகளைச் சோடிக்கிறது என்றார்.

ஆனால் மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி அவர்கள் அதை மறுக்கிறார்.

1998இல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட அன்வர் அவர்கள் முறையற்ற பாலுறவு மற்றும் ஊழல் தொடர்பாக ஐந்தாண்டு சிறைவாசம் கண்டவர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் அவர், அவை அரசியல் காரணங்களுக்காகத் தன் மீது சுமத்தப்பட்டவை என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

இவ்வாண்டு முற்பகுதியில் மீண்டும் வெளி அரசியலில் பெரிதாகப் புகுந்து கொண்டார்.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

N Vittal – Indian Justice System Reformations: Law & Order

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

நீதித்துறையின் மறுநிர்மாணம்!

என். விட்டல்

அரசாட்சியின் மூன்று முக்கியத் தூண்களாக சட்டமியற்றும் துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது நமது அரசியல் சட்டம். இந்தியா விடுதலையானது முதல் நாட்டில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதில் நீதித்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தனித்துவமான மக்களாட்சி இந்தியாவில் நிலைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.

தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காப்பதில் நீதித்துறை திறமையாகச் செயலாற்றி வந்திருக்கிறது. நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைக்கும் சட்டமியற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் வகையிலோ, அடிப்படை உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலோ அந்தச் சட்டங்கள் அமைந்துவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது குற்ற வழக்குகள், சொத்துகள் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இவையெல்லாம், நாட்டின் நல்லாட்சி நடைபெறுவதை உறுதி செய்ய நீதித்துறை எடுத்துக் கொண்ட முயற்சிகள்.

அரசு நிர்வாகம் எங்கெல்லாம் தோற்றுப்போனதோ அங்கெல்லாம் தலையிட நீதித்துறை தவறியதேயில்லை. அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் போக்கை பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பு மூலம் ஒழுங்குபடுத்தியது நீதிமன்றம். கூட்டாட்சியை வலுப்படுத்தியதுடன் மக்களாட்சியை உறுதி செய்யவும் இது உதவியது.

1997-ம் ஆண்டில் ஹவாலா வழக்குகளில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் தலையிடக்கூடாது என்றும், மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு மட்டும் இதை விசாரிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும் நீதிபதி வர்மா தீர்ப்பளித்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுடன், சட்டப் பூர்வமான பாதுகாப்பும் கிடைக்கும் என்பதை வலியுறுத்திய தீர்ப்பு இது.

இப்படிச் சாதனைகள் செய்துவரும் நீதித்துறையின்மீது சில பொதுவான புகார்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.

ஒரு நல்ல நிர்வாகம் மூன்று சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்தாக வேண்டும். முதலாவது சட்டத்தின் ஆட்சி நடத்துவதை உறுதி செய்வது. இரண்டாவதாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மூன்றாவதாக, மனித வளம், இயற்கை வளம், நிதி போன்ற எந்த வளமும் வீணாகக்கூடாது.

சட்டத்தின் ஆட்சி திறமையாக இருக்க வேண்டுமெனில் விரைவாக நீதி கிடைக்க வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் நீதிகூட அநீதிதான். அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதமே ஊழல் பெருகக் காரணம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். குற்றவாளிகளை உடனடியாகத் தண்டித்தால்தான் ஊழல் குறைய வாய்ப்பு ஏற்படும். இதுவரை நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கும் வழக்குகளை இதே வேகத்தில் நடத்தினால் அனைத்து வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்குவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்.

விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் விரும்பும் நிலையில், ஏன் நமது நீதித்துறை மெதுவாகச் செயல்பட வேண்டும்? அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்தத் தாமதத்தால் பயனடையும் ஒரு கூட்டமும் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முக்கியமான காரணம்.

நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பயனடைவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் வழக்கறிஞர்கள். ராம்ஜேட்மலானி சட்ட அமைச்சராக இருந்தபோது நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதற்கு சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டார். ஆனால், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்தச் சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக இன்றுவரை மாற்றங்கள் எதையும் செய்ய முடியவில்லை.

தாமதத்துக்கு மற்றொரு காரணம் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் அடிக்கடி கேட்கும் வாய்தா. இறுதித் தீர்ப்பை தள்ளிப்போடுவதற்காக பயன்படுத்தப்படும் இந்த உத்தியால் வழக்கு இழுத்துக் கொண்டே போகிறது.

வழக்குகளில் தீர்ப்புகள் தள்ளிப்போவதால், கிரிமினல்களும் ஊழல்வாதிகளும்கூடப் பயனடைகிறார்கள். ஒட்டுமொத்தமாக 6 சதவீதத்துக்கும் குறைவான கிரிமினல் வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான வழக்குகளில்கூட குற்றவாளிகள் தப்பிவிடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்தப் போக்கு குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் கொடுக்கப்படும் மறைமுகக் காப்பீடு.

நம்நாட்டில் அரசியல்வாதிகளும் நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பெரும்பயனடைந்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் மீதான குற்ற வழக்குகளை அறிவித்தாக வேண்டும் என நீதிமன்றம் கூறியதால், வேட்பாளர்களில் 20 முதல் 25 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்பது சாதாரண மக்களுக்குக்கூடத் தெரிந்திருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தீர்ப்பு வழங்குவதில் நீதித்துறை தாமதித்து வருகிறது. அதனால் அவர்கள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு இது சரியான உதாரணம்.

பெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக அளவில் வரி செலுத்தும் நிலையில் இருப்போர் ஆகியோருக்குத் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதம் சாதகமாக இருக்கிறது. வரி செலுத்துவதற்குப் பதிலாக நீதிமன்றங்களை அணுகி தொடர்ந்து தடை வாங்கியே காலத்தைக் கழித்துவிடுவதில் இவர்கள் கில்லாடிகள். இது போன்று நீதித்துறையில் ஏற்படும் தாமதங்களை அருண்செüரி தனது புத்தகங்களில் பட்டியலிட்டுள்ளார்.

நீதித்துறையில் தாமதம் ஏற்படுவதை மூன்று காரணிகள் ஊக்குவிக்கின்றன. முதலாவது மேல்முறையீடு, மறு ஆய்வு, மறுவிசாரணை என்பன போன்ற வழிகள் நமது நீதிவழங்கும் முறையில் இருப்பது. இரண்டாவதாக, மிகக் குறைவாக இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை. மூன்றாவது, நீதித்துறைக்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படாதது. இந்த மூன்று காரணிகளின் அடிப்படையில் நீதித்துறையை மறுசீரமைக்க வேண்டும்.

நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பது நீதித்துறையைச் சீரமைப்பதில் முதல்படியாக இருக்கும். இரு வழிகளில் தாமதத்தைக் குறைக்கலாம். ஒன்று, தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை நேரடியாகக் களைவது. மற்றொன்று நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெங்கடாசலய்யா இருந்தபோது, புதிய தொழில்நுட்பங்களை நீதித்துறையில் பயன்படுத்துவதை ஊக்குவித்தார்.

தற்போது நீதித்துறையில் இருக்கும் விதிமுறைகளுக்கு மாற்றாக புதிய விதிகளை தொழில்துறைப் பொறியியலின் 5 கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கலாம். அவை, 1. நீக்குதல், 2. சேர்த்தல், 3. மறுவரிசைப்படுத்துதல், 4. திருத்தம், 5. பதிலீடு. இந்த 5 கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மேல்முறையீட்டின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். அதேபோல் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு கால வரம்பை நிர்ணயிக்கலாம். அதன்படி, ஊழல்வழக்குகளில் அதிகபட்சமாக ஓராண்டு அல்லது 18 மாதங்களுக்குள் குற்றவாளியைத் தண்டிக்க முடியும்.

அடுத்ததாக நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவேண்டும். நீதிமன்றக் கட்டணங்கள் முதலியவற்றை நீதித்துறையே பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு, பிரிட்டன் நீதித்துறையில் உள்ள நடைமுறையை நாமும் பின்பற்றலாம்.

இந்த முறைகள் மூலம் நீதிவழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியவில்லையெனில் வேறொரு உத்தியைக் கையாளலாம். அதற்கு “ஜுஜுத்ஷு உத்தி’ என்று பெயர். அதாவது, இப்போது நீதித்துறையால் ஏற்படும் தாமதத்தால் யாருக்கெல்லாம் பலன் கிடைத்து வருகிறதோ, அவர்களுக்கெல்லாம் தாமதித்து கிடைக்கும் தீர்ப்புகள் எதிராக அமைவது போன்று விதிகளை மாற்றுவது. அப்படிச் செய்யும்போது, யாரும் தாமதத்தை விரும்ப மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், குற்றவழக்குகளில் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தால், வழக்குகளைத் துரிதப்படுத்தவே அரசியல்வாதிகள் விரும்புவர்.

அடுத்து, நீதித்துறையின் அடிப்படைப் பண்புகள் சிலவற்றை மாற்றியாக வேண்டும். குறிப்பாக நீதிமன்ற அவமதிப்பு. உண்மையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் தரப்பு நியாயங்கள் ஏற்கப்படுவதேயில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும். நீதிபதிகள் யாராவது ஊழல் செய்ததாகத் தெரியவந்தால், அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதித்துறையில் மாற்றப்பட்டாக வேண்டிய சில மரபுகள் இருக்கின்றன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட “நீதிமன்ற கோடை விடுமுறை’ இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் நீதிபதிகள் தங்கள் நாட்டுக்குச் சென்று வருவதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கடைசியாக, தீர்ப்பு வழங்கும் முறை. வழக்கு விசாரணையை ஒரு நீதிபதி நடத்த, தீர்ப்பை வேறொரு நீதிபதி எழுதும் நடைமுறை பெரும்பாலான வழக்குகளில் இருக்கிறது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டால், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நீதித்துறையை மறுசீரமைக்கும் முயற்சிகளில் நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்).

Posted in Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »