Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Karnataka’ Category

1.5 mn Commercial (lorry) vehicles keep off roads in Karnataka – Truckers strike enters second day

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.

கர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

சென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி
தமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

சென்னை, பிப்.24-

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.

லாரிகள் வேலைநிறுத்தம்

கர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.

இந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

பல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

மேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.

விலை உயர வாய்ப்பு

சென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-

வழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சேலம்

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

லாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு சென்னகேசவன் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் தொடரும்

இதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Posted in Accidents, Biz, commercial, Dangerous, dead, Death, drivers, DUI, DWI, Economy, Employment, Erode, Exports, Finance, Food, Freight, Goods, Impact, Jobs, Karnataka, Law, Limits, Lorry, Loss, Operators, Order, Parcel, Perishable, Profit, Salem, Services, Speed, Strike, Transport, Transporters, Truckers, Trucks, Vegetables | Leave a Comment »

Amrutha Publications: Interview with Prabhu Thilak on Chennai Book Fair 2008

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

முகங்கள்: படித்தது மருத்துவம் பிடித்தது புத்தகம்!

அவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர். தற்போது சேலம் வினாயக மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்தியல்துறையில் எம்.டி.படிக்கும் மாணவர். ஆனால் அவர் புத்தகங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். அம்ருதா பதிப்பகம் என்கிற பெயரில் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபுதிலக்.

அவர் காவல்துறை உயர் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதியின் மகன்.

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான புத்தக வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்…

“”நான் படித்தது மருத்துவம் என்றாலும் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். காரணம் எங்கள் வீட்டு கிச்சன் முதல் பெட்ரூம் வரை புத்தகங்கள் எப்போதும் இருக்கும். அம்மா ஒரு பெரிய இலக்கியவாதி. இந்தச் சூழலில் வளர்ந்த எனக்குப் புத்தகங்களின் மேல் எப்போதும் விருப்பம் அதிகம்.

அம்ருதா அறக்கட்டளையின் சார்பாக இந்தப் பதிப்பகத்தை 2005 இல் ஆரம்பித்தோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.

ஏற்கனவே நிறையப் பதிப்பகங்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் புத்தகப் பதிப்பில் இறங்கும் போது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.

புத்தக வெளியீடு என்பது இப்போது வியாபாரம் ஆகிவிட்டது. இதற்கு எழுத்தாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன. பதிப்பாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன.

நிறைய எழுத்தாளர்களுக்கு தங்களுடைய புத்தகங்களை வெளியிட நல்ல பதிப்பகம் அமைவதில்லை. தான் எழுதியவை புத்தகமாக வெளிவருமா என்று புத்தகம் வெளியிட வாய்ப்புக் கிடைக்காத எழுத்தாளர்கள் ஏங்கும் நிலை உள்ளது.

அதிலும் கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் முன் வருவதில்லை.

சில பதிப்பகங்கள் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை வெளியிடுகின்றன.

இம்மாதிரியான சூழ்நிலையில் அதிகம் அறிமுகம் ஆகாத எழுத்தாளர் என்றாலும் தரமான படைப்பு என்றால் வெளியிடுகிறோம். உதாரணமாக சேலம் இலா.வின்சென்ட் என்பவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாப்லோ அறிவுக் குயிலின் “குதிரில் உறங்கும் இருள்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாலுசத்யாவின் “காலம் வரைந்த முகம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.

மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அதிலும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். மொழிபெயர்ப்பு நூல்கள் என்றால் முதலில் ரஷ்ய நூல்கள், அமெரிக்க நூல்கள், பிரெஞ்ச் நூல்கள் என்றுதான் மொழிபெயர்த்தார்கள். இப்போது லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அவற்றிற்கு நிகரான இலக்கிய வளம் நமது ஆசிய நாட்டு இலக்கியங்களுக்கு உள்ளது. மிகப்பெரிய அமெரிக்காவைப் போரில் வீழ்த்திய வியட்நாம் அதன் ஆயுத பலத்தால் மட்டுமா வீழ்த்தியது? அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம்? அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா? அந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடத் தீர்மானித்தோம்.

மலையாள இலக்கியவாதி என்றால் பெரும்பாலோருக்கு தகழி சிவசங்கர பிள்ளையைத் தெரியும். வைக்கம் முகம்மது பஷீரைத் தெரியும். பிற எழுத்தாளர்களை அவ்வளவாகத் தெரியாது. பொற்றேகாட், கேசவதேவ், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், சி.ஏ.பாலன் போன்றோரைச் சிலருக்குத்தான் தெரியும்.

பால்சக்கரியாவின் “அன்புள்ள பிலாத்துவுக்கு’ என்ற நாவலை வெளியிட்டோம். நாங்கள் பலருக்கும் தெரியாத பி.சுரேந்திரன் என்ற மலையாள எழுத்தாளரின் “மாயா புராணம்’ என்ற நாவலை வெளியிட்டோம். கோயில் நுழைவுப் போராட்டத்தை மையமாக வைத்து கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலை “பாரதிபுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறோம். தாகூரின் “சிதைந்த கூடு’ நூலை வெளியிட்டிருக்கிறோம்.

எங்கள் பதிப்பக வெளியீடுகள் எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையும் எடுப்பதில்லை. மனித மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்கு உதவும் நூல்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யாரையும் யாரும் காயப்படுத்தக் கூடாது. இவைதான் எங்கள் நோக்கம். விருப்பம்.

நமது மகாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் இல்லாத விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா?

நல்லது கெட்டது, கெட்டதில் உள்ள நல்லது எல்லாம் மகாபாரதத்தில் உண்டு. எல்லாரும் மன்னிக்கும்தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய இதிகாசங்கள் தோன்றின. ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி உள்ளது? கொலை, கொள்ளை, வெறுப்பு, இப்படி ஆரோக்கியமில்லாத சமூகமாகிவிட்டது. அர்த்தமுள்ள பொழுது போக்குகள் இல்லை. இவற்றை மாற்றி நல்ல சமுதாயத்தை அமைக்க விரும்பும் பலர் குதிரைக்குக் கண்பட்டை அணிந்ததுபோல் ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் மனித மேம்பாட்டுக்கு உரிய நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.

அதனால்தான் “கிறிஸ்து மொழிக் குறள்’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம். “நபி(ஸல்) நமக்குச் சொன்னவை’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம்.

“சல்வடார் டாலி’ என்ற பெண்ணியச் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இதில் இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இதில் பெண்ணின் வாழ்வு யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணிய நோக்கில். பெண்ணியம் என்றால், “நீ சிகரெட் பிடித்தால் நான் சிகரெட் பிடிப்பேன்’ “நீ ஜீன்ஸ் போட்டால் நானும் போடுவேன்’ என்கிற மாதிரியான பெண்ணியம் அல்ல. பெண்ணின் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.

விட்டல்ராவ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். இன்றைய எந்த இலக்கியக் குழுவிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அவர் தமிழ்நாட்டின் பல கோட்டைகளுக்கும் நேரில் போய் அந்தக் கோட்டைகளின் வரலாறு, புவியியல், மக்கள் வரலாறு , மக்களின் கலை, கலாச்சாரம் எனப் பலவற்றை ஆராய்ந்து “தமிழகக் கோட்டைகள்’ என்ற நூல் எழுதியுள்ளார். அந்த அருமையான நூலை முக்கியமான பதிப்பகங்கள் வெளியிடத் தயங்கிய சூழ்நிலையில் நாங்கள் அதை வெளியிட்டோம்.

சிறந்த எழுத்தாளர்கள் 18 பேரின் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்து மாணவர் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. அதுவும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் போக்கு அறவேயில்லை. முந்திய தலைமுறையைச் சேர்ந்த எம்.வி.வி., ந.பிச்சமூர்த்தி, தி.ஜ.ர. போன்றவர்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏன் இன்னும் சொல்லப் போனால், ந.பிச்சமூர்த்தியின் இனிஷியல் “ந’ வா? “நா’ வா? என்று கேட்டால் பல இலக்கியவாதிகளே குழம்பினார்கள். எனவே மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூல் வரிசையைக் கொண்டுவந்திருக்கிறோம்.

இன்று மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. பணம் சம்பாதிப்பதே நோக்கமாகக் கொண்ட சமூக மனோபாவம் வந்துவிட்டது. ஆனால் பணம் சம்பாதிப்பது சந்தோஷத்திற்கான வழிகளில் ஒன்று. பணத்தால் வெளியே ஜில்லென்று குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஏஸியை வாங்கிவிடலாம். ஆனால் மனதுக்கு குளிர்ச்சியைப் பணத்தால் ஏற்படுத்த முடியுமா? அது நல்ல இலக்கியங்களாலும், நூல்களாலும்தான் முடியும். அதனால்தான் இந்தப் பதிப்பக முயற்சியில் “அணில் கை மணல் போல’ நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறோம்.

Posted in Amruta, Amrutha, Authors, Books, Chennai, Collections, Culture, Essays, Fiction, History, Kannada, Karnataka, Kerala, Literature, Malayalam, publications, Publishers, Readers, Students, Tagore, Tamil, Thilagavathi, Thilagavathy, Thilakavathi, Thilakavathy, Thinkers, Translations, UR, URA, Writers | Leave a Comment »

Water supply & distribution in Tamil Nadu – Inter-state relations, Dam Construction, Rivers

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

மூன்று பக்கமும் துரோகம்; ஒரு பக்கம் கடல்!

கே. மனோகரன்

தமிழகம்போல இன்று தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் மாநிலம் இந்தியாவில் வேறொன்று இருக்க முடியாது.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன. நமக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரே நீர்ஆதாரம் கடல்தான். தாகத்துக்கு கடல்நீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய முடியுமா?

தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மல்லு கட்டுவதற்கே ஆண்டுகளை இழந்ததுடன், இருக்கும் ஏரி குளங்களையும் நாம் பாழாக்கி இழந்து வருகிறோம்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது பூண்டி நீர்த்தேக்கம். குசஸ்தலை ஆற்றிலிருந்துதான் இந்த நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீர் வரவேண்டும். இந்த ஆறு பள்ளிப்பட்டில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் 12 கி.மீ. தூரத்தில் தொடங்குகிறது.

அங்குள்ள அம்மபள்ளி என்ற இடத்தில் 1975-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை இருமலைகளையும் இணைத்து அணை கட்டும் பணி நடந்தது. ஆனால் இப்படி ஓர் அணை கட்டப்படுவதுகூட தெரியாமல் தமிழக அரசு அமைதியாக இருந்தது. அதன் பிறகு குசஸ்தலை ஆறு தமிழகத்துக்குத் தண்ணீர் தரவில்லை. தலைவலி தந்தது. வறண்டுபோனது பூண்டி நீர்த்தேக்கம்.

குசஸ்தலை ஆறு தடைபட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பற்றித்தான் கவலைப்பட்டது. ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் பல கோடிகளை தமிழக அரசிடம் பங்குத்தொகையாகப் பெற்ற ஆந்திர அரசு, அந்த நிதியில் சித்தூர், கடப்பா போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள ஏரிகளைப் புனரமைத்தும், மிகப்பெரிய ஏரியான பிச்சாட்டூர் ஏரியை சீரமைத்தும், புதிய நீர்த்தேக்கங்களையும் கட்டி கால்வாய்கள் மூலம் இணைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டது.

சென்னைக்கு தண்ணீர் தருவதாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் “ஜீரோ பாய்ண்ட்’ எனப்பட்ட கண்டலேறு வரை தண்ணீர் வந்ததே தவிர சென்னைக்கு வரவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் புதிய வீராணம் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் பாலாற்றுக்கு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா நீர்த்தேக்கம். கர்நாடகம் படிப்படியாக அதன் கொள்ளளவையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் பாலாற்றின் நீர்வரத்து குறைந்து போனது.

கர்நாடகத்துக்கும், தமிழக எல்லைக்கும் இடையில் பாலாற்றுக்கு வரும் உபநதிகளான மல்லிநாயக்கனஹள்ளி ஆறு, பெட்மடு ஆறு ஆகியவற்றின் குறுக்கே தலா 4 ஏரிகளை ஆந்திர அரசு கட்டிவிட்டது. இதேபோல் தமிழக எல்லையின் 3 கி.மீ. தூரத்தில் 2000-ம் ஆண்டில் பாலாற்றின் உப நதியான மண்ணாற்றின் குறுக்கே பெரியபள்ளம் என்ற இடத்தில் ரூ. 65 லட்சத்திலும், அதே நேரத்தில் எல்லையின் சில நூறு அடிகள் தூரத்தில் பிரம்மதேவர் கொல்லை என்ற லட்சுமிபுரத்தில் ரூ. 1.20 கோடியில் இருமலைகளை இணைத்து ஆந்திர அரசு அணைகளை கட்டியது.

இவற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் தற்போது குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே பெரிய அளவிலான அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் தமிழக அரசு புதிய அணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் காவிரி வடிகாலில் கிடைக்கும் கூடுதல் நீர் சராசரியாக 30 டி.எம்.சி. கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த தண்ணீரில் மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம்.

ஆளியாறு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காத கேரளம், முல்லைப் பெரியாறு அணையில் முரண்டு பண்ணிக்கொண்டு வருகிறது. சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் வகையில், அதன் துணைநதிகளை தனியார் குடிநீர் ஆலைகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது கேரளம்.

காவிரியை தமிழகத்தின் வாய்க்கால் போலக் கருதி, மிகைநீரை மட்டுமே வழங்குகிற திட்டத்தை கர்நாடகம் எப்போதோ தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கான நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த மூன்று மாநிலங்களும் மறித்துக் கொண்டு வருகின்றன.

இழந்த தண்ணீரைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் நீரையாவது உருப்படியாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர்களின் கண்ணீரால் கடல் நீர் மேலும் கரிக்கும்.

————————————————————————————————————————–
பாலாற்றில் விளையாடும் அரசியல்!

ஆர். ராமலிங்கம்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விரைவில் அணை கட்டத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதிபட கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய விவரம் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. தமிழக முதல்வரும் இவ்விஷயத்தில் நம்பிக்கையூட்டும் தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை.

இதை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலாறு விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற தோழமைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.

கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 40 கி.மீ. தூரமும் ஆந்திரத்தில் 31 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக, அவ்வப்போது பெய்யும் கனமழைதான் தமிழக பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையை ஈரப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து இருந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு பேத்தமங்கலத்தில் அணை கட்டியுள்ளது. அந்த மாநிலம் வெளியேற்றும் உபரி நீரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி ஆந்திர அரசு நீர்நிலைகளை நிரப்பி வருகிறது.

மழைக் காலங்களில் அதிர்ஷ்டவசமாக ஆந்திர எல்லையில் இருந்து ஒருசில தினங்கள் வரும் நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் பாலாறு பொய்த்துவிடுமே என தமிழகத்தின் வடமாவட்ட மக்களின் அச்சப்படுகின்றனர்.

தற்போது மணல் சுரண்டல், நீர்வளம் பறிபோதல், தோல் தொழிற்சாலைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுநீரை வெளியேற்றுவதால் படுகை மாசுபடுதல் போன்ற மும்முனைத் தாக்குதலில் தமிழக பாலாற்றுப் பகுதி சிக்கியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1892-ல் தமிழகத்தில் பாயும் 12 ஆறுகளுக்கு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் பாலாறும் இடம் பெற்றுள்ளது.

அன்றைய மைசூர் மற்றும் மதராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 1952 வரை அமலில் இருந்தது. அன்றைக்கு சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பாலாற்று நீர்வளத்தில் ஆந்திர மாநிலத்துக்கும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பாரம்பரிய உரிமை அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழகம் பாலாற்று பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.

இரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாலாற்று பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதில் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, காவிரி நீர் பங்கீட்டை போன்று பாலாற்று நீரில் தனக்குள்ள பங்கீட்டு உரிமையை தமிழகம் நிலைநாட்டுவது ஒன்றே தீர்வாக அமையும்.

நதிநீர் பங்கீடு உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பாலாற்று நீர்வரத்தில் 60 சதவீதத்தை தமிழகம் பெற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு 1956-ல் கொண்டு வந்த நதிநீர் வாரியச் சட்டத்தை பயன்படுத்த முடியும். தமிழக அரசு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இச்சட்டத்துக்கு உயிரூட்டலாம்.

மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை எழுந்தால் இச்சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வாரியத்தை ஏற்படுத்த முடியும்.

அதன் மூலம் மாநிலங்களுக்கிடையே உள்ள நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தக்க அறிவுரையை வழங்க முடியும். புதிதாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஒன்றையும் மாநிலங்களுக்கிடையே ஏற்படுத்த முடியும்.

தமிழக அரசியல் கட்சிகளிடையே மக்களின் பொதுப் பிரச்னைகளில் கூட ஒற்றுமையின்மை நிலவுவது உலகறிந்த உண்மை. இது அண்டை மாநிலங்களுக்கு பலமாக அமைந்துள்ளது.

பாலாறு விஷயத்தில் திமுக அரசும், எதிர்கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி அரசியலாக்குவதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இறங்கினால் மட்டுமே நதிநீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பாலாற்று பிரச்னையில் மத்திய அரசும், நீதிமன்றமும் தலையிடுவதற்கான நெருக்கடியை தமிழகத்தால் ஏற்படுத்த முடியும்.

ஆர்ப்பாட்ட அரசியலைக் காட்டிலும், ஆரோக்கிய அரசியலே ஆபத்தைத் தடுக்க முடியும். தமிழக அரசியல் தலைவர்கள் சிந்திப்பார்களா?

—————————————————————————————————————–
மக்கள் திரள் போராட்டம்-காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்


தமிழ்நாட்டில் ஏரி, குளம், ஆறுகளுக்குப் பஞ்சம் இல்லை. காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் உண்டு. தென்மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள் ஒருபோதும் பொய்த்ததில்லை. முப்புறம் கடலும் உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களும் உள்ளன. உழைப்பதற்குச் சலிக்காத மக்களும் உண்டு. அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வளங்களும் நிறைந்திருந்த தமிழ்நாடு இன்றைக்கு என்னவாகியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வேதனையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.

நீரில்லா ஆறுகள்

தமிழ்நாடு எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மீள முடியாதபடி தவிக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிப்பதற்கு கர்நாடகமும் கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரம் தனது எல்லைக்குள் அணை கட்ட முற்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆறுகளின் மூலம் தமிழ்நாட்டில் இருபது மாவட்டங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் இப்போது இந்த மாவட்டங்கள் பாசனத்திற்குரிய நீரை இழந்து வறண்ட பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக மாறினால் உணவுக்காக பிற மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைமை உருவாகிவிடும்.

விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் போதுமான நீரில்லாமல் நாம் தவிக்கும்போது, ஆறுகளிலும் நிலத்தடியிலும் எஞ்சியுள்ள சிறிதளவு நீரையும் உறிஞ்சி எடுத்து விற்பனைப் பொருளாக “கோகோ கோலா’, “பெப்சி’ போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அவலமும் நடைபெறுகிறது.

நகர்ப்புற மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளை

அண்டை மாநிலங்களின் வஞ்சனையால் வறண்டுவிட்ட இந்த ஆறுகளிலிருந்து மணல் மிக எளிதாகக் கொள்ளை அடிக்கப்படுகிறது. எந்த மாநிலங்கள் நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றனவோ அதே கேரள மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் லாரிலாரியாகத் தமிழக ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக இந்த ஆறுகளில் நீரோட்டம் இல்லாமல் அண்டை மாநிலங்கள் செய்து விட்டனவோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. இந்த ஆறுகள் வறண்டு போவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் தமிழக அரசு இருப்பதற்கு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி ஆளும் கட்சியினரே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழகத்தின் மற்ற ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அடியோடு சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழக ஆறுகளின் இரு பக்கமும் உள்ள கிணறுகளும் நீரூற்றுகளும் வறண்டு போய் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உருவாகிவிடும். மேலும் இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், பாலங்கள் ஆகியவை மணல் கொள்ளையின் விளைவாக பலவீனம் அடைந்து இடியும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னைக்கு அருகே காரனோடை பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறையும் ஏரிகள்

ஆறுகளின் கதி இதுதான் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சுருங்கி வருகின்றன. பல ஏரிகள் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமான 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தமிழக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு இந்த ஏரிகள் பாசன வசதி அளித்து வந்தன. இவற்றின் மூலம் பத்து லட்சம் ஹெக்டேர்கள் பயன் பெற்றன.

1980-ஆம் ஆண்டில் இந்த ஏரிகளின் பாசன வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் மேலும் 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன் பெறும் என மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டபோது அந்தத் தொகையை ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு தருவதாக ஒப்புக்கொண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 27 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது ஏன் என்பதை ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.

தமிழ்நாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள ஏரிகளைப் பொதுப்பணித்துறையும் அதற்குக் குறைவாக உள்ள ஏரிகளை ஊராட்சி ஒன்றியங்களும் நிர்வகித்து வருகின்றன. இவை தவிர அணை நீரைப் பெற்று பாசனம் செய்யும் 100 ஏக்கருக்கும் குறைவான சில ஏரிகளையும் பொதுப்பணித்துறை நிர்வகிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 12 ஆயிரம் ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 27 ஆயிரம் ஏரிகளும் உள்ளன.

கடந்த நாற்பதாண்டுகளில் இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஏரிகளில் மட்டுமல்ல; ஏரிகளுக்கு மழை நீரைக் கொண்டு வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீரை நிலங்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களும்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தனி நபர்கள் ஆக்கிரமித்த ஏரிகளை விட அரசுத் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் இன்னும் அதிகமாகும். நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் ஏரிகளுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளன.

ஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் கட்டடமே உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை.

ஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 27 ஆயிரம் கண்மாய்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் எல்லைகள் சுருங்கி அழிந்து வரும் அபாயம் உள்ளது. ஏரிகளிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்கவும் அதன் நீர் வழி எல்லைகளை வகுக்கவும் அண்மையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கோ அல்லது ஊராட்சித் தலைவர்களுக்கோ இல்லை.

ஆக்கிரமிப்புகள் திடீரென்று ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடவில்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டோ அல்லது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கடமை தவறிய இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற ஆணையில் எதுவும் கூறப்படவில்லை என்பது திடுக்கிட வைக்கும் உண்மையாகும்.

காடுகள் அழிப்பு

1967-ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 23 விழுக்காடாக இருந்தது. இப்போது தமிழகக் காடுகளின் பரப்பளவு என்பது 17 விழுக்காடாகும். 6 விழுக்காட்டிற்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுவிட்டன. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் ஊழலால் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெறாது. இதன் விளைவாக பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கடற்கரை 1000 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பல இடங்களில் கரையோரமாக அலையாற்றுக் காடுகள் இருந்தன. தென் மாவட்டங்களில் கடற்கரை நெடுகிலும் தேரிகள் என அழைக்கப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக அமைந்திருந்தன. ஆனால் இந்தக் காடுகளையும் மரம் வெட்டுபவர்கள் விட்டு வைக்கவில்லை. மணற்குன்றுகளையும் சிதைத்து விட்டார்கள். இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுனாமி அலைகள் வீசியபோது அவற்றைத் தடுக்கும் அலையாற்றுக் காடுகளும் தேரிகளும் இல்லாததன் விளைவாக பேரழிவு ஏற்பட்டது.

மோதல் சாவுகள்

காவல்துறை மக்களை வேட்டையாடும் துறையாக மாறிவிட்டது. ஆளும் கட்சியினரின் ஏவல்படையாக காவல்துறை மாற்றப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான பல்வேறு வகையான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.

சொல்லாமலேயே மற்றொரு பெரும் கொடுமை தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க காவல்துறை முயல்கிறது. அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களிடமிருந்து காவல்துறை, தானே பறித்துக் கொண்டது. இந்தக் குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்துவிட்டதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதில் சமபங்கு காவல் துறைக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள் – சுரண்டப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சமூகவிரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்குதடையின்றி நடத்துகிறது.

மீறப்படும் சட்டமன்ற மரபுகள்

சட்டமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்கள் பேச முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசுக்கு எதிராக யாரும் எதுவும் கூறிவிடாதபடி தடுக்க முயற்சி வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சிதான் இவ்வாறு சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி மதிக்காமல் போனால் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அவ்வாறே நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதே கிடையாது. வெளியே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவதோடு தன் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். அவர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் சட்டமன்றக் கூட்டத்தை அறவே புறக்கணித்தார். முதலமைச்சராக இருந்தால்தான் சட்டமன்றத்திற்கு வருவது. இல்லையேல் வருவது தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என்று இருவருமே கருதுகிறார்கள். சட்டமன்ற ஜனநாயகத்தை உண்மையிலேயே இவர்கள் மதிப்பவர்களாக இருந்தால் சட்டமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் தங்கள் பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும்.

மக்கள் போராட்டம்

சட்டமன்ற மரபுகள் துச்சமாக மதிக்கப்பட்டு மக்கள் பிரச்னைகள் பற்றி அங்கே பேச முடியாத நிலைமையில் வெளியில் மக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய – மாநில அரசுகளின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார சட்டங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுந்துள்ளது.

பதவிகளைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தலுக்குத் தேர்தல் கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

தமிழக அரசியல் சீர்கேடுகளை எதிர்த்தும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மக்கள் திரண்டு எழுந்து போராட முன்வர வேண்டும். அந்தந்த ஊரில் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினால், எத்தகைய அடக்குமுறையாலும் அப்போராட்டத்தை ஒடுக்க முடியாது.

1965ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டமாக நடைபெற்றது. இந்தியை எதிர்த்த திராவிடக் கட்சிகள்கூட அந்தப் போராட்டத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல் பதுங்கின. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1970களின் பிற்பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளின் ஆதரவும் கிடைத்தது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடினார்கள். 1975ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் தொடங்கியபோது மக்கள் பேராதரவு அளித்தனர். பெரும் தியாகசீலரும் தன்னலமற்றவருமான அவரை மக்கள் நம்பினார்கள். மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி இந்திராவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை அவர் நிலைநாட்டினார்.

மேற்கண்ட போராட்டங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொதிப்புணர்வுடன் போராடினார்கள். இந்த மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாடு பூராவிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு திரண்டு எழுந்து போராடுவதென்பது அத்தனை எளிதானதல்ல. மக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல், கள்ளச் சாராயம், மணல் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, காவல் துறையின் காட்டாட்சி மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்து அந்தந்தப் பகுதிகளில் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் நாடு தழுவிய பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்டி அவர்களைத் திரட்டி இத்தகைய வேண்டாத சக்திகளை எதிர்த்துப் போராட முயற்சி எடுக்க வேண்டிய கடமை தன்னலமற்ற மக்கள் தொண்டர்களுக்கு உண்டு.

ஜனநாயகச் சிதைவு, தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் தமிழக மக்களைத் திரட்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்கள் திரள் போராட்டம் நமது கடமை மட்டுமல்ல. வரலாற்றுக் கட்டாயமும் ஆகும்.

இந்த வேலையை நாம் செய்யாமல் நமது சந்ததியினர் செய்யட்டும் என்று விட்டுவிடுவோமானால் எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in Agreements, Agriculture, Alliance, Andhra, AP, Bengaluru, Bethamangala, Blind, Border, Cauvery, Center, Chennai, Construction, Dam, Distribution, DMK, Drink, Drinking, Drinking Water, Farming, Farmlands, Flood, Flow, Govt, Inter-state, Interstate, Intrastate, Karnataka, Kaveri, Kerala, Krishna, Kuchasthalai, Kusasthalai, Lakes, Limits, Madras, Management, Mullai, Mullai Periyar, Mullai Periyaru, Mysore, Nature, Nedumaaran, Nedumaran, Paalar, Paalaru, Palar, Palaru, peasants, Periyar, Periyaru, Pethamangala, Pichathoor, Pichathur, Pichatoor, Pichatur, Politics, Poondi, reservoir, River, Rivers, Sea, Shortage, State, Storage, Supply, Tamil Nadu, TamilNadu, TMC, TN, Waste, Water | Leave a Comment »

TJS George – Blind Leaders and Greedy Sons form a deadly dynasty for the Indian Thrones

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2007

நவீன திருதராஷ்டிரர்கள்!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

திருதராஷ்டிரரின் சிக்கலான குணநலன்களுக்கு அடிப்படையாக அமைந்த அம்சம் என்னவென்றால், தனது ஆவி, பொருள் அத்தனையையும் செலவழித்தாவது தனது மகன்களை மாமனிதர்களாக்கிவிட வேண்டும் என்னும் அவரது ஆசைதான்.

தனது மகன்களின் நலனை தன் ராஜ்ஜியத்தின் நலன்களுக்கும் மேலானதாகக் கருதினார் அவர். செயல்களில் நேர்மை குறித்த கேள்வி ஒருபொழுதும் அவரது நெஞ்சில் எழவில்லை.

வியாசர் இப்பொழுது இருந்திருப்பாரானால், 21-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பற்றியும் எழுதியிருப்பார். அதில் ஒரே வேறுபாடு என்னவென்றால், அக்கால இந்திரப்பிரஸ்தத்தில் நூறு மகன்களைக் கொண்ட ஒரே ஒரு திருதராஷ்டிரர்தான் இருந்தார். ஆனால் இன்று ஒன்று அல்லது இரு மகன்களைக் கொண்ட நூறு திருதராஷ்டிரர்கள் இருக்கின்றனர்.

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகியவை அடங்கிய இன்றைய இந்திரப்பிரஸ்தத்தில் நாம் காண்பது என்ன?

பொது வாழ்க்கையின் அடிப்படை நாகரிகங்களையெல்லாம் உதறிவிட்டு, தமது வாரிசுகளை மட்டுமே தலைவர்களாக்குவதற்காக தமது திறமை, சாதுர்யம் அனைத்தையும் பயன்படுத்தும் அபிநவ திருதராஷ்டிரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அந்த வியாசருக்கே ஓரிரு சகுனிவித்தைகளைக் கற்றுக்கொடுக்கக்கூடியவர் ஒருவர் உண்டென்றால், அது தேவ கௌடாதான். அவரை நெருங்கிவந்துகொண்டிருப்பவர்கள் கருணாநிதியும் கருணாகரனும். தில்லியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பி.க்களைக் கொண்டிருப்பதால் கிடைத்திருக்கும் தாற்காலிக செல்வாக்கால் ஒருவர் தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.

இன்னொருவரோ, அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு மகனுக்காக எதையெதையோ செய்துகொண்டு, தள்ளாடிக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய நபராகிவிட்டார்.

தேவ கெüடாவின் பிடியும் நழுவிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் தனது நிலையை மாற்றிக்கொள்வதுடன், தனக்குத்தானே முரண்பாடான நிலைகளை மேற்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார் அவர். தனது எதிரிகளே மிரளும் அளவுக்கு வில்லங்கமான சதித் திட்டங்களைத் தீட்டக்கூடிய மூளை அவருக்கு. இப்போதோ அவரது நண்பர்களே அஞ்சி நடுங்கும் மனிதராகிவிட்டார் அவர். இதைப்பற்றி பாஜகவினரைக் கேட்டால் தெரியும்.

கெட்டிக்கார திருதராஷ்டிரராக இருக்க வேண்டுமென்றால், வஞ்சகப் புத்தி மட்டும் இருந்தால் போதாது; இரக்கமற்ற கல்நெஞ்சராகவும் இருந்தாக வேண்டும். நவீன யுகத்தின் மிக வெற்றிகரமான வம்சத் தலைவராக இந்திரா காந்தியை ஆக்கியவை அந்தக் குணங்களே ஆகும். அவர் மறைந்து 23 ஆண்டுகள் ஆன பிறகும் உறுதியாக, வலிமையாக, வெற்றி கொள்ள முடியாததாக, தகர்க்க முடியாததாக… ஓர் அரசாட்சியைப்போல அவரது வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அது முடிவின்றி நீள்வதைப்போலத் தோன்றுகிறது; மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து ராகுல் காந்தி வரவிருக்கிறார்; அவருக்குப் பின் பிரியங்கா காந்தி வருவார். இந்திரா காந்தியில் தொடங்கி வழிவழியாக வந்ததைப்போல மீண்டும் அடுத்த வாரிசுகளின் வரிசை தொடங்கிவிடும்போலத் தோன்றுகிறது.

அதனுடன் ஒப்பிட்டால் கெüடாவின் வம்சாவளி ஒன்றுமே இல்லை. அவர் காங்கிரûஸக் காலைவாரி விட்டுவிட்டு பாரதிய ஜனதாவுடன் கைகோத்தபோது, தனது மகனை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு அவர் மேற்கொண்ட சாதுர்யமான நடவடிக்கையாக அது கருதப்பட்டது.

பிறகு காங்கிரஸýடன் உறவு கொள்வதற்காக பாஜகவைக் காலைவாரிவிட்டார் அவர். பின்னர் மீண்டும் பாஜகவைக் கரம்பிடிக்க காங்கிரûஸக் கைகழுவினார். பிறகு ஏறக்குறைய பாஜகவைக் கவிழ்க்கும் வகையில் புதிய “12 கட்டளைகளை’ அறிவித்தார் கெüடா. அதன் மூலம் அவர் விடுத்த செய்தி என்னவென்றால், பாவப்பட்ட மனிதரான எடியூரப்பா முதல்வராகிவிட்டாலும் சரி, ஒருநாள்கூட அவர் நிம்மதியாக உறங்கிவிட முடியாது என்பதுதான். காலைவாருவதில் மன்னரான கெüடா, அவரை தன் விருப்பம்போல ஆட்டுவித்துவிடுவார் என்பது நிச்சயம்.

இருந்தபோதிலும், தேவ கெüடாவுக்கும் பரிதாபகரமான ஒரு பக்கம் உள்ளது. மதச்சார்பின்மை என்ற துரும்பைப் பிடித்துக்கொள்ள அவர் செய்யும் முயற்சிதான் அது. “மதச்சார்பற்ற ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் -செக்யூலர்) என்பதற்கு, “மகன்களின் ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் ~ சன்ஸ்) என்று எப்பொழுதோ விளக்கம் கொடுத்துவிட்டனர் கர்நாடக மக்கள்.

ஆனால், அதன் மூத்த தலைவரால்தான் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள இயலவில்லை. மாறாக, பாஜகவுடன் கூட்டணி வைப்பதாலேயே தான் மதச்சார்பற்றவர் என்பது இல்லை என்றாகிவிடாது என்று கஷ்டப்பட்டு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் கெüடா. அதாவது, மதச்சார்பின்மை என்பது இனி “நேர்மையின்மை’ என்பதாகிவிடும்.

இவ்வளவு அனுபவம் மிக்க மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இதற்கான பதிலை எப்பொழுதோ யுகாந்தவில் கூறிவிட்டார் ஐராவதி கார்வே.

“”திருதராஷ்டிரருக்கு யோசனை கூறும்போது, பேராசையின் அறிவீனம் குறித்தும், நீதியின் அவசியம் குறித்தும், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்தும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் விதுரர். ஆனால், அந்த யோசனைகளுக்கு அவர் செவிசாய்க்கவுமில்லை; அதனால் பயன்பெறவும் இல்லை. விழலுக்குப் போய்ச் சேர்ந்தன அந்த யோசனைகள். சரியெது, தவறெது என்று பிரித்தறியும் திறனை இழந்துபோய்விட்டார் திருதராஷ்டிரர்” என்று அப்பொழுதே கூறிவிட்டார் கார்வே.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

—————————————————————————————————————————-
சாணக்கியருக்கு ஒரு தர்மசங்கடம்

நீரஜா செüத்ரி

அரசியல் சாணக்கியர் எனக் கருதப்படும் எச்.டி. தேவ கெüடாவுக்கே இப்போது ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதா, வேண்டாமா என்பதுதான் அது. அவருக்கோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. பாஜகவின் ஆதரவு இல்லாமலே அவரது மகனின் அரசு தொடரட்டும் என்று முதலில் நினைத்தார். இப்போதோ பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்; அதே நேரத்தில் அதை முழுமையாகத் தாம் ஆதரிக்கவில்லை என்று காட்டிக்கொள்ளவும் விரும்புகிறார். இதுதான் இப்போது சிக்கலாகிவிட்டது.

இதே கெüடாதான், 1997-ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை சீதாராம் கேசரி திரும்பப் பெற்றவுடன், பாஜக ஆதரவு தர முன்வந்தபோதிலும், அதை நிராகரித்துவிட்டு பிரதமர் பதவியில் இருந்து இறங்கினார் என்பதை மறந்துவிட முடியாது.

2006-ல் பாஜகவுடன் அவரது மகன் கூட்டணி சேர்ந்தவுடன், அதைத் “துரோகச் செயல்’ என்று வர்ணித்தார் கெüடா. தனது பாஜக எதிர்ப்பு நிலையை நிரூபிப்பதற்கு அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகளில் அதுவும் ஒன்று. அப்போது, “துரோகம்’ செய்ததற்காக தனது மகனைத் தகுதி நீக்கம் செய்யுமாறும், மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.பி. பிரகாஷை நியமிக்குமாறும் கோரி கர்நாடக ஆளுநருக்கு 2006-ல் கடிதம் எழுதினார் கெüடா. “மனந்திருந்திய மைந்தனை’ சில வாரங்களிலேயே அவர் வரவேற்றுச் சேர்த்துக்கொண்டபோதிலும், அவர் எழுதிய கடிதத்துக்குப் பதிலாக வேறு கடிதம் எதையும் அவர் அனுப்பவில்லை.

இப்போது பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ள போதிலும், 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறார் கெüடா. அந்த நடவடிக்கையில் இருந்து தான் விலகியிருப்பதாகக் காட்டிக்கொள்வதே அதன் நோக்கம். கர்நாடகத்தை ஹிந்துத்துவா சோதனைச்சாலையாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது என்று கூறியே, முதலில் அக் கட்சிக்கு ஆதரவு தர ம. ஜனதா தளம் மறுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.

கூட்டணி உடன்பாட்டின்படி, பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவதற்கு வழிவிட்டு அக்டோபர் 3-ல் எச்.டி. குமாரசாமி பதவியில் இருந்து விலகியாக வேண்டிய நிலை இருந்தது; அப்பொழுது, காங்கிரஸýடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், அக் கட்சிக்குத் தூது விட்டார் கெüடா. ஆனால், அந்தத் தூண்டிலில் காங்கிரஸ் சிக்கவில்லை; சோனியாவையும் அவரால் சந்திக்க முடியாமல் போனதால், எரிச்சலடைந்தார் கெüடா.

நம்ப முடியாததாகத் தோன்றும் இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துவிட்ட பிறகு, மாநில சட்டப் பேரவையைக் கலைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடந்த வாரம் தேவெ கெüடா கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுவதுதான். பாஜகவுடன் கைகோப்பதைவிட தேர்தலைச் சந்திப்பதற்கு அவர் தயாராக இருந்தார் என்பதைப் பதிவுசெய்வதாக அது இருக்கும் என்று நினைத்திருக்கக்கூடும்.

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள வொக்கலிகர் சமுதாயத்தின் பெருந்தலைவராகக் கருதப்படும் அவர், முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார். அண்மையில்தான், கட்சியின் மாநிலத் தலைவராக ஒரு முஸ்லிமை அவர் நியமித்தார். அண்மையில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றியை மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றது. சிறுபான்மைச் சமுதாயத்தினர் அக் கட்சிக்கு வாக்களித்திருக்காமல் அந்த வெற்றி கிடைத்திருக்காது. பாரம்பரியமாக ஜனதா தளத்துக்கு இருந்துவந்த முஸ்லிம்களின் ஆதரவில் குறிப்பிடத் தக்க பங்கை தேவெ கெüடா சுவீகரித்துக்கொண்டிருக்கிறார்.

உள்ளாட்சி மன்றத் தேர்தலில், தனது பலத்தை முன்பிருந்ததைவிட மும்மடங்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் அக் கட்சியைப் பொருத்தவரை தேர்தலைச் சந்திப்பதற்கு இது சரியான நேரமல்ல என்று கருதியதால்தான் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் ஆவதற்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவுக்கு கெüடா குடும்பம் வந்தது.

கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், “தந்தை-மகன்’ கூட்டணியால் ஏமாற்றப்பட்டதால், பாஜக மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுவிட்டது. நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (எடியூரப்பா) மாநிலத்தின் தலைமைப் பதவிக்கு வருவதைத் தடுத்துவிட்டார்களே என்று லிங்காயத்து சமுதாயத்தினரும் கோபமுற்றனர். அந்தச் சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால், பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்திருக்கும். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மற்றவற்றைவிட அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது பாஜகவே என்பது கவனிக்கத்தக்கது.

இன்றைய அரசியலில் வர்த்தக நோக்கங்களும் ஒரு முக்கியப் பங்கை வகித்துக்கொண்டு இருக்கின்றன. பெங்களூர்- மைசூர் அடிப்படைக் கட்டமைப்பு வளாகத் திட்டத்தை நிறைவேறாமல் முடக்கிவிட கெüடாக்கள் விரும்பினர் என்பது அனைவரும் அறிந்ததுதான். பலநூறு கோடியில், “புது பெங்களூர்’ நகரத்தை நிர்மாணிப்பது குறித்தும் பேச்சு இருக்கிறது. உறவை முறித்துக்கொள்வது என்ற முடிவை பாஜகவும் ம. ஜனதா தளமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவ்விரு கட்சிகளையும் அத் திட்டத்தில் அக்கறை கொண்ட சக்திகள் வலியுறுத்தி இருக்கவும்கூடும்.

கெüடாவுடன் கூட்டணி வைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெரும்பான்மையினர் அதற்கு எதிராக உள்ளனர். அதுவேதான் காங்கிரஸ் மேலிடத்தின் நிலையும். ஏற்கெனவே கூட்டணி வைத்து, கையைச் சுட்டுக்கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே, தேவ கெüடாவை நம்ப முடியாது என அக் கட்சி கருதுகிறது. அதோடு, கெüடாவுடன் கைகோப்பது அரசியல் ரீதியில் பயன்தரக்கூடியதுதல்ல என்றும் காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.

அதோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து பிரிந்துவந்து காங்கிரஸில் சேர்ந்திருக்கும் சித்தராமய்யாவைப் பகைத்துக்கொள்வதாகவும் அது ஆகிவிடும். மேலும், கர்நாடகத்தின் மூன்றாவது பெரிய சமூகமான குருபா சமூகத்தைச் சேர்ந்தவர் சித்தராமய்யா. அவர்களது ஆதரவு காங்கிரஸýக்குப் பலம் சேர்ப்பதாக அமையும்.

கெüடாவும் அவரது மகனும் இல்லாத மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து காங்கிரஸ் ஆலோசித்திருக்கக்கூடும். ஆனால், 12 எம்எல்ஏக்களுடன் தில்லியில் முகாமிட்டிருந்த ம. ஜனதா தளத்தின் மூத்த தலைவரான எம்.பி. பிரகாஷால், தேவையான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களைத் திரட்ட முடியவில்லை.

கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைவது, விந்திய மலைக்குத் தெற்கே அக் கட்சி முதல் முறையாகக் காலூன்ற வழிவகுத்துவிடும் என்பதால், மாநில சட்டப் பேரவையைக் கலைத்துவிட வேண்டும் என்று சில காங்கிரஸôர் கூறுகின்றனர்.

வேறு சிலர் அதற்கு மாறாக வாதிடுகின்றனர். முதலாவதாக, பேரவையைக் கலைத்தால் உடனடியாகக் கண்டனங்கள் எழும். பாஜக -ம. ஜனதா தள கூட்டணிக்கு 129 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. குடியரசுத் தலைவர் முன் 125 எம்எல்ஏக்களின் அணிவகுப்பையும் நடத்திவிட்டனர். குடியரசுத் தலைவர் ஆட்சியை கர்நாடகத்தில் பிரகடனம் செய்தபொழுதே சட்டப் பேரவையையும் கலைத்துவிட்டிருந்தால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

ஆனால் அப்பொழுது அதை பிரதமர் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பொம்மை வழக்கின் தீர்ப்பு, பிகார் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்சினையில் இடதுசாரிகளுடனான உரசலை மனத்தில் கொண்டும், இந்த நேரத்தில் இன்னொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கருதியும் பிரதமர் அவ்வாறு முடிவுசெய்திருக்கலாம்.

அது மட்டுமல்லாமல், அரசியல் நோக்கங்களும் உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைக்குமானால், அதற்கு அனுதாப ஆதரவு என்பது இனி இருக்க வாய்ப்பில்லை. தேவ கெüடா விதித்திருக்கும் நிபந்தனைகளால் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து, ஆட்சி சுமுகமாக நடைபெறுவதைக் கடினமாக்கிவிடும். எனவே, தேர்தல் இப்போது வந்தாலும் சரி, பிறகு வந்தாலும் சரி, பொறுத்திருப்பதன் மூலம் சிறப்பான வெற்றியைப் பெற முடியும் என நினைக்கிறது காங்கிரஸ் கட்சி.

—————————————————————————————————————————-

சந்தர்ப்பவாதமும் வாரிசு அரசியலும்

பொதுவாக, மன்னராட்சி மீதான மோகமும், அடிமைத்தன சிந்தனையும் படித்தவர்கள் மத்தியிலும் பரவலாகவே காணப்படுகிறது என்பதுதான் உலகம் ஒத்துக்கொண்டிருக்கும் உண்மை.

பிரிட்டன், பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் பெயரளவிலாவது மன்னராட்சி முறை தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதும் பிரிட்டிஷ் மகாராணியின் தலைமைக்குத் தலைவணங்குவதாகப் பெயரளவில் சொல்லிக் கொள்கின்றன. இந்தியாவிலும் சரி, முன்னாள் மகாராஜாக்கள் மட்டுமல்ல, ஜமீன்தார்களும் பண்ணையார்களும் இப்போதுகூட அவரவர் இடங்களில் மரியாதைக்குரியவர்கள்தான். இவர்களில் பலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் வம்சாவளியாகத் தொடர்கின்றனர்.

நிலைமை இப்படி இருக்கும்போது, தெற்கு ஆசியாவில் வாரிசு அரசியல் தொடர்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், அனைத்து மாவட்டங்களிலும், சொல்லப்போனால் தாலுகா வரையில் அனைவருக்கும் தெரிந்த அரசியல் குடும்பம் நிச்சயமாக நேரு குடும்பம் மட்டும்தான். அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், இந்தியாவை ஒரு நாடாகப் பிணைத்து வைத்திருக்கும் பல விஷயங்களில் நேரு குடும்பத்தின் செல்வாக்கும் ஒன்று.

மன்னராட்சி வாரிசுகளுக்கும், இப்போதைய மக்களாட்சி வாரிசுகளுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அரச குடும்பத்தினர், அவர்கள் ஆண்ட நாட்டைத் தங்களது உரிமைக்கு உள்பட்ட சொத்து என்று கருதினார்கள். அதனால்தானோ என்னவோ, அரசர்களில் பலரும் தனது நாடும் மக்களும் செழிப்புடன் திகழ வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். ஆனால் அரசியல் வாரிசுகள் அந்த அளவுக்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார்களா என்று கேட்டால், தயக்கம்தான் தலைதூக்குகிறது. அதற்குக் காரணம், எந்தவிதத் தியாகமும் செய்யாமல், உரிமையும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக அடைந்த பதவிகள் பொறுப்புணர்வையும் கடமையுணர்வையும் தருவதில்லை.

அரசியலை ஒரு வியாபாரம் அல்லது தொழில்போலக் கருதி தங்களது வாரிசுகளை கட்சியின்மீதும் ஆட்சியின்மீதும் திணிக்கும் தலைவர்கள், தங்களை மன்னர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தங்களது வாரிசுகளைத் தயார்படுத்துகின்றனர். அந்த வாரிசுகளுக்கு நாடாளும் திறமை இருக்கிறதா என்று யோசிப்பதில்லை. அதனால்தான், எல்லா வாரிசுகளாலும் அரசியலில் வெற்றி பெற முடிவதில்லை.

மக்களாட்சியில் ஒரு மிகப்பெரிய நன்மை உண்டு. மன்னராட்சியில் இருப்பதுபோல, இறைவனால் அனுப்பப்பட்டவன்தான் அரசன் என்கிற மனப்போக்கு இங்கே செல்லுபடியாகாது. மக்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாவிட்டால், என்னதான் திணித்தாலும் எந்த வாரிசாலும் தாக்குப்பிடிக்க முடியாது. தங்களை நிலைநிறுத்திக் கொண்ட வாரிசுகளைவிட, வந்த சுவடு தெரியாமல் காற்றோடு கலந்த வாரிசுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் ஆனாலும் திறமை மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதுதான் மக்களாட்சி மலர்ந்ததால் ஏற்பட்டிருக்கும் மகத்துவம். வாரிசு என்கிற அடையாளம் நுழைவுச்சீட்டாக இருக்க முடியுமே தவிர துருப்புச் சீட்டாக முடியாது.

அனுதாப அலையை சாதகமாக்கி அரசியல் லாபம்தேட வாரிசுகளைக் களமிறக்குவது என்பது தெற்கு ஆசியாவின் அத்தனை நாடுகளிலும் பலமுறை கையாளப்பட்ட யுக்திதான். அந்த வரிசையில் இப்போது பேநசீர் புட்டோவின் 19 வயது மகன் பிலாவலைக் களமிறக்கி இருக்கிறது பாகிஸ்தான் மக்கள் கட்சி. பிலாவல் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்பதை காலம்தான் கணிக்க வேண்டும்.

ஆனால், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். வாரிசுகளை முன்னிறுத்தி அனுதாபம் தேடும் சந்தர்ப்பவாதம் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. நிலையான வெற்றிக்கு உத்தரவாதம் திறமையே தவிர பரம்பரை பாத்தியதை அல்ல!

Posted in Asia, Belgium, Benazir, Bhutto, Congress, DMK, dynasty, Ediyurappa, Greed, India, Jan Morcha, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JD, JD(S), JD(U), Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karnataka, Karnatata, Karnatka, Karuna, Karunagaran, Karunakaran, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kerala, Leaders, Maharaja, Monarchy, Money, Muraleetharan, Muralitharan, Neeraja, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Neerja, PAK, Pakistan, Politics, Portugal, Power, Raja, Spain, Throne, UK, Yediyurappa | 2 Comments »

Interview with Yediyurappa – State of Karnataka and BJP, Janata Dal, Deve Gowda & Congress

Posted by Snapjudge மேல் நவம்பர் 4, 2007

நிரூபிக்கவேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல!: எடியூரப்பா

எடியூரப்பா – கர்நாடக அரசியலில் கடந்த முப்பது ஆண்டுகளாக பரவலாக மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவர். ஜனசங்க காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் எடியூரப்பாவின் மிகப்பெரிய பலம் நேர்மையானவர், கைசுத்தமானவர் என்கிற நல்ல பெயர். சக்தி வாய்ந்த லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது அடுத்த பலம். எடியூரப்பாவும் குமாரசாமியும் இணைந்து ஆட்சி அமைத்தபோது அது உண்மையிலேயே பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியாக அமைந்தது. காரணம்,

கர்நாடகத்தில் சக்தி வாய்ந்த இரண்டு சாதிப் பிரிவுகளான லிங்காயத்துகளும் வொக்கலிகர்களும் இணைந்த கூட்டணியாக

அது இருந்தது என்பதால்தான். மதச்சார்பற்ற ஜனதா தளம் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்த பிறகும்

அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என்கிற அரசியல் குழப்பத்துக்கு நடுவில் எடியூரப்பாவின் கருத்துகளை அறிந்துகொள்ள முற்பட்டோம். கர்நாடகத்தின் முன்னாள் துணை முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான எடியூரப்பா

“தினமணி’ ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

குமாரசாமி அமைச்சரவையிலிருந்து விலகி, ஆதரவை பாரதிய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டதுதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

எங்களது உடன்பாட்டின்படி ஆட்சி மாற்றத்திற்கு அவர் தயாராக இல்லை என்பதால் நாங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டது உண்மை. சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தலை அறிவித்திருந்தால் அதில் பிரச்னையே இருந்திருக்காது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம்.

அப்படியானால் இப்போது சட்டமன்றத்தைக் கலைத்து, தேர்தலுக்கு வழிகோலுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் யாருக்கும் இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டால் தேர்தலைச் சந்திப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. குமாரசாமி அமைச்சரவைக்கு நாங்கள் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்ட போது அப்படியொரு நிலைமை இருந்தது. அப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது, மதச்சார்பற்ற ஜனதாதளம் எங்களை ஆதரிக்க முன்வந்திருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எங்களது கூட்டணிக்கு இருப்பதால், எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதுதான் நியாயம். அரசியல் சட்டமும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் அதைத்தான் சொல்கின்றன.

உங்களுக்கே இது சந்தர்ப்பவாதமாகப் பட வில்லையா?

அரசியலில் ஈடுபடுவதும், ஆட்சியில் அமர்வதும் மக்களுக்குச் சேவை செய்யவும், நமது கொள்கைகளையும், திட்டங்களையும் அமல்படுத்தவும் நமக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் என்பதுதான் உண்மை. எங்களுக்குப் பெரும்பான்மை இருந்தும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது, மறுக்கப்படுகிறது என்னும் போது நாங்கள் பழி வாங்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை.

பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி வசைமாரி பொழிந்த தேவகௌடா மற்றும் குமாரசாமியின் ஆதரவை நீங்கள் ஏற்றுக் கொள்வது சந்தர்ப்பவாதமில்லையா?

நாங்கள் அவர்களது ஆதரவைக் கோரவில்லை. அவர்கள்தான் வலியவந்து ஆதரவு தந்திருக்கிறார்கள். மேலும் எங்களது ஒப்பந்தப்படி உடனடியாக ஆட்சியை எங்களிடம் ஒப்படைக்காதது தவறு என்று குமாரசாமி பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அதற்கு மக்கள் மன்றத்திடம் மன்னிப்பு கேட்பதாகவும் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகும் அவரது எண்ணத்தையும், செயல்பாடுகளையும் சந்தேகிப்பது நியாயமல்ல. அவரே வலியவந்து ஆதரவு அளித்த பிறகு, எங்களுக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு ஆட்சியமைக்க எங்களை அழைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்பதில் எந்தவித சந்தர்ப்பவாதமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

உங்களிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த குமாரசாமி இப்போது திடீரென்று வலிய வந்து ஆதரவு தருவது ஏன்?

சட்டமன்றம் கலைக்கப்படாமல் இருக்கும் நிலைமை. புதுதில்லியில் கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் நிருபர்களிடம் பேசும் போது, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் யாருக்காவது இருக்குமானால், அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பதில் தனக்குத் தடையேதுமில்லை என்று அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருப்பதாக குமாரசாமி அறிவித்தார். இதுதான் நடந்தது.

அதனால் ஆளுநர் உங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்கிறீர்கள், அப்படித்தானே?

மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எனது தலைமையில் ஆட்சி அமைக்க, தனது ஒப்புதலை அளிக்கிறது. அந்த ஒப்புதல் கடிதத்தை முன்னாள் முதல்வரும், அந்தக் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவருமான குமாரசாமி ஆளுநரிடம் அளிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன். எங்களது கட்சியும்

ஏகமனதாக என்னைத் தேர்வு செய்கிறது. 129 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு இருக்கும் நிலையில், என்னை ஆட்சி அமைக்க அழைப்பதுதானே முறை?.

நீங்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசிய போது அவர் என்னதான் சொன்னார்?

உங்களுக்குப் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பது தெரிகிறது. நான் அரசியல் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டவன். அதற்கு ஏற்றவாறு அறிக்கை தயாரித்து எனது பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறேன் என்று கூறினார்.

அவரது செயல்பாடு குறித்து உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?

ஓர் ஆளுநரின் செயல்பாடுகளைச் சந்தேகிப்பது முறையல்ல. ஆனால், எனக்கு ஒரு விஷயத்தில் ஆளுநரிடம் வருத்தம் உண்டு. குமாரசாமி அமைச்சரவையிலிருந்து நாங்கள் விலகி, எங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டபோது, ஆளுநர் நியாயமாகச் செய்திருக்க வேண்டிய விஷயம், குடியரசுத்தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்வதல்ல. சட்டமன்றத்தில் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைமையில்தான் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அவர் பரிந்துரை செய்திருக்க வேண்டும்.

மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் உங்களுடன் கைகோர்த்துக் கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், நீங்கள் எப்படிப் பெரும்பான்மையை நிரூபித்திருப்பீர்கள்?

அது ஆளுநர் கவலைப்பட வேண்டிய விஷயமல்ல. எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்புப்படி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல. இந்தச் சட்டமன்றத்தைப் பொருத்தவரை அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அந்த வகையில், ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது சரியான முடிவாக எனக்குப் படவில்லை.

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திச் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஆளுநரின் செய்கைகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவில்லை. இந்த முடிவு ஆளுநரால் எடுக்கப்பட்டதா, இல்லை, மத்திய அமைச்சரவையால் எடுக்கப்பட்டதா என்பதும் எனக்குத் தெரியாது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்த்து அல்லது அந்தக் கட்சியில் பிளவு ஏற்படுத்தி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் முயற்சிதான் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்திருப்பது என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. அந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.

இத்தனை குழப்பங்களுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என்கிறீர்களா?

அதிலென்ன சந்தேகம்! தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கிற மனோபாவம் காங்கிரஸ் தலைமைக்கு எப்போதுமே உண்டு. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அவற்றில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் பிரதமரைச் சந்தித்தீர்களே, அவர் என்ன சொன்னார்?

பிரதமரை நாங்கள் சந்தித்தபோது உள்துறை அமைச்சரும் இருந்தார். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நடக்க மாட்டோம் என்று உறுதி அளித்தார்கள். குடியரசுத்தலைவரும் அதையேதான் சொன்னார். ஆனால், ஒரு வார காலமாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லையே?

அவர்களுக்குத் தெரிந்த அரசியல் சட்டத்தில் இப்படித்தான்எழுதப்பட்டிருக்கிறதோ என்னவோ? அரசியல் சட்டப்படி எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு எந்த வழியும் கிடையாது என்பது தான் நிஜம்.

இன்னாரால் நிலையான ஆட்சி அமைக்க முடியும் என்று ஆளுநர் திருப்தி அடைந்தால்தான் ஒருவரை அவர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்கிற பிரிவும் இருக்கிறதே?

எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு இந்தப் பிரிவுக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது. எந்தவொரு அரசின் பெரும்பான்மையும் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு எனக்கு இருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்தப்பட்ட நிலையில் எங்களை ஆட்சி அமைக்க அனுமதித்து, சட்டமன்றத்தில் எங்களது பெரும்பான்மையை நிரூபிக்க கோருவதுதான் ஆளுநர் நியாயமாகச் செய்ய வேண்டிய விஷயம். அவர் அதைச் செய்யத் தவறினால், அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்கிற பழியைச் சுமக்க நேரும்.

ஜனதா தளத்தில் அதிருப்தியாளர்கள் இருப்பதும், அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதும் தெரிந்த பிறகும் உங்களை அவர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது நியாயமா?

அதிருப்தியாளர்கள் இருந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இப்போது இல்லை. பிரகாஷ் எங்களுடன் இருக்கிறார் என்பது மட்டுமல்ல. தனது முழு ஆதரவையும் எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். அது ஒருபுறம் இருக்கட்டும். அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள், கட்சி பிளவுபட வாய்ப்பிருக்கிறது, பெரும்பான்மை கிடையாது போன்ற சாக்கு போக்குகளைச் சொல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதைத்தானே பொம்மை வழக்கின் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது. 224 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் 79 உறுப்பினர்களுடைய பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அடுத்தபடியாக 65 உறுப்பினர்களுடைய காங்கிரஸ் கட்சியும், மூன்றாவதாக 58 உறுப்பினர்களுடைய மதச்சார்பற்ற ஜனதாதளமும் இருக்கின்றன. சட்டமன்றத்தில் அதிக இடங்களை உடைய பெரிய கட்சி என்கிற வகையில் பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் சட்டமன்றத்தைக் கலைப்பது என்பது நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம்.

உங்களுக்குப் பெரும்பான்மை இல்லாதபோது எப்படி ஆட்சி அமைக்க அழைப்பது? சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும் போது மதச்சார்பற்ற ஜனதாதளம் எதிர்த்து வாக்களிக்காது என்பது என்ன நிச்சயம்?

இதைப்பற்றி ஆளுநர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதிக எண்ணிக்கையை உடைய கட்சி என்கிற வகையில் எங்களுக்கு வாய்ப்பளித்த பிறகு, எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதபட்சத்தில் அவர் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதோ, அல்லது சட்டமன்றத்தைக் கலைப்பதோ நியாயம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் அப்படிச் செய்ய முடியாது, செய்யக்கூடாது.

குமாரசாமி மன்னிப்பு கேட்டுவிட்டார், நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருக்கிறார் என்று கூறுகிறீர்கள், ஆனால், அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகெüடா 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறாரே, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பாரதிய ஜனதா கட்சியுடன் 20 மாதங்களுக்கு முன்னால் கூட்டணி அமைத்தது குமாரசாமிதானே தவிர தேவகெüடா அல்ல. முதலில் அவர் அதை எதிர்த்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகளில் பல குமாரசாமிக்கு உடன்பாடானவை என்று கருத முடியாது. இன்னொரு விஷயம். தேவகெüடாவின் நிபந்தனைகள் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைமைக்குத்தான் அனுப்பப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நான் இப்போது விமர்சிக்க விரும்பவில்லை.

இவ்வளவு பிரச்னைகள், மனக்கசப்புகள், பரஸ்பரம் சுமத்திய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் மீண்டும் இணைந்து சுமுகமாகச் செயல்பட முடியும் என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக முடியும். எங்களது 20 மாத கால ஆட்சிதான் அதற்கு உதாரணம். தனிப்பட்ட முறையில் எனக்கும் குமாரசாமிக்கும் உள்ள உறவும் நெருக்கமும் நடந்த சம்பவங்களால் சிறிதும் பாதிக்கப்படவில்லை. இதோ இப்போதுகூட எனது அறையில்தான் அவர் அமர்ந்திருக்கிறார், நீங்கள் பார்த்தீர்களே. எங்களது இந்தக் கூட்டணி 20 மாதங்களில் சாதித்திருக்கும் சாதனைகள் ஏராளம். நாங்கள் ஒன்றுபட்டு இருந்தால் இதைவிட பலமான சக்தி வேறு எதுவும் கிடையாது என்பது ஊரறிந்த ரகசியம். எங்களது கூட்டணியின் சுமுகமான செயல்பாடு குறித்து சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை.

பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி பலமானது என்கிறீர்கள். உங்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்பதால் மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் வெறுப்படைந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். இந்தச் சூழ்நிலையில் தேர்தலைச் சந்தித்து மக்களின் பேராதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டியதுதானே?.

தேவையில்லாமல் மக்கள் மீது தேர்தலைத் திணிப்பது முறையல்ல. இன்னும் 19 மாதங்கள் இந்தச் சட்டமன்றத்திற்கு ஆயுள் இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் என்று சொன்னால், குறைந்தது அடுத்த நான்கு மாதங்களுக்காவது அரசு இயந்திரமே ஸ்தம்பித்துப் போய்விடும். அத்தனை வளர்ச்சிப் பணிகளும் நிறுத்தப்பட்டுவிடும். கடந்த 20 மாதங்களில் நாங்கள் செயல்படுத்தத் தொடங்கிய திட்டங்கள் முழுமை அடையாத நிலைமை என்பது மட்டுமல்ல, அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்படும். வேறு வழியில்லை என்றால் மக்கள் மன்றத்தை சந்திப்பதுதான் முறை. இப்போது வழி இருக்கிறது என்பது மட்டுமல்ல, நிலையான அரசு அமையவும் வாய்ப்பு இருக்கும் நிலையில் தேர்தல் என்பது தேவையில்லாத செலவு.

நீங்கள் தேர்தலைச் சந்திக்க பயப்படுகிறீர்கள் போலிருக்கிறதே?

சொல்லப்போனால் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான். சட்டமன்றம் கலைக்கப்படாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டபோது, நான் தெளிவாகவே ஒரு கருத்தை வலியுறுத்தினேன். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளுமே யாருடனும் சேர்ந்து ஆட்சி அமைப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பார்களேயானால், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று சொன்னவன் நான்தான். காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தல், தேர்தல் என்று உதட்டளவில் சொன்னார்களே தவிர, இப்போதும் அவர்கள் தேர்தலுக்குத் தயாராக இல்லை. காங்கிரஸ் தேர்தலைத் தள்ளிப்போட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் தனது ஆட்சியை நடத்த விரும்புகிறதே தவிர தேர்தலைச் சந்திக்க தயாராக இல்லை. அதனால்தான் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்தார்கள். குமாரசாமி மீண்டும் பாஜகவுடன் கைகோர்ப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

நடந்துமுடிந்த சம்பவங்களால் பாரதிய ஜனதாவின் இமேஜ் குறைந்திருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? ஆட்சிக்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்ய பாஜக துணிந்துவிட்டது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன?

எங்களது இமேஜ் எள்ளளவும் குறையவில்லை. சொல்லப்போனால், அதிகரித்திருக்கிறது. நான் துணை முதல்வராகத் தொடர சம்மதித்திருந்தால், பதவிதான் பெரிது என்று கருதி இருந்தால், இந்தப் பிரச்னைகளே எழுந்திருக்காது. அக்டோபர் 2-ம் தேதிக்குப் பிறகு நான் ஒருநாள்கூடத் துணை முதல்வராகத் தொடர மாட்டேன் என்று சட்டமன்றத்தில் கூறியிருந்தேன். அதேபோல, முதல்வரிடம் எங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துவிட்டோம். ஆட்சிக்கு ஆதரவளித்து வந்ததைத் திரும்பப் பெற்றோம். இவையெல்லாம் எங்களது பதவி ஆசையாலா அல்லது பதவியின் பளபளப்பில் நாங்கள் மயங்காததாலா?

உங்களுடைய கருத்துப்படி ஆளுநர் காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்கிறீர்கள். அப்படித்தானே?

நான் அப்படிச் சொல்லவில்லை. அந்தப் பதவியின் கெüரவத்தை நான் குலைக்க விரும்பவில்லை. ஆனால், மக்கள் அப்படி நினைக்கிறார்கள். ஆளுநர் மாளிகை காங்கிரஸ் கட்சி அலுவலகமாகச் செயல்படுகிறது என்பது மக்கள் மத்தியில் நிலவும் பரவலான கருத்து. நடந்து கொண்டிருக்கும் செயல்களையும், செயலிழந்த நிலையையும் பார்க்கும்போது, மத்திய அரசின் வற்புறுத்தல்களுக்கு ஆளுநர் அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. காங்கிரஸின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்று மக்கள் சந்தேகப்படுவதில் தவறில்லை.

மகாராஷ்டிர ஆளுநர் எஸ்.எம். கிருஷ்ணா பெங்களூருக்கு வந்ததும், சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதும் தேவகெüடாவின் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறதே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எஸ்.எம். கிருஷ்ணா ஒரு ஜென்டில்மேன். அவர் இதுபோன்ற அரசியல் பேரங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது எனது கருத்து. எனக்கு அவர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மரியாதைக்குரிய சிலரில் எஸ்.எம். கிருஷ்ணாவும் ஒருவர்.

ஒரு சின்ன சந்தேகம். ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால், பாரதிய ஜனதா கட்சியின் பலம் அதிகரிக்கும் என்று நினைக்கிறீர்களா? தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?

பாரதிய ஜனதா கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணியாகத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அது நடக்கும் என்று நம்புகிறேன். அடுத்த 19 மாதங்கள் நாங்கள் இணைந்து ஆட்சியில் தொடர்ந்தால், கர்நாடகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் ஆட்சி அமையாது. அந்த அளவுக்கு எங்களது ஆட்சியின் செயல்பாடுகள் அமையும்.

இனி ஆளுநர் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?

எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியே கிடையாது. அரசியல் சட்டப்படி அதுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழி. மேலும், 15 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. எங்களை ஆட்சி அமைக்க அழைக்காமல்போனால், சட்டமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிகோல வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். மேலும், குஜராத் சட்டமன்றத் தேர்தல் வேறு வருகிறது. இங்கே எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதன் தாக்கம் குஜராத்தில் எதிரொலிக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும். அதனால், எந்த நேரத்திலும் ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பளிச்சென்று சொல்லுங்கள். இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் தேவகெüடாவா? காங்கிரசா?

நிச்சயமாக காங்கிரஸ்தான். அதில் காங்கிரஸ்காரர்களுக்கேகூட சந்தேகம் இருக்காது.

—————————————————————————————————————————————–கர்நாடக முதல்வராகிறார் எடியூரப்பா

ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வருகிறார் முதல்வர் பதவியை ஏற்கவுள்ள பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா (இடது). உடன் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி.

பெங்களூர், நவ. 9: ஆட்சி அமைக்க ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்ததையடுத்து கர்நாடக முதல்வராக பாஜகவைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா (64) நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கிறார்.

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்தத் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து எடியூரப்பாவும், முன்னாள் முதல்வர் குமாரசாமியும் வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூரைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும் எனவே புதிய அரசு அமைக்கும்படி எடியூரப்பாவிடம் தாக்கூர் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட எடியூரப்பா, தனது தலைமையில் பாஜக- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கும் என்றார்.

பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நிருபர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:

பாஜக- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அமைச்சரவை நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கும். பதவி ஏற்பு நேரம், இடம் குறித்து நாளைக்குள் முடிவு செய்யப்படும் என்றார்.

குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் -பாஜக கூட்டணி அரசு அக்டோபர் 7-ம் தேதி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 9-ம் தேதி முதல் கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

முதலில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொள்ளாத மதச்சார்பற்ற ஜனதா தளம் பிறகு ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களும், எம்எல்ஏக்களும் அக்டோபர் 27-ம் தேதி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கடிதம் கொடுத்தனர்.

மேலும் பாஜக தலைமையில் கூட்டணி அரசு அமைய ஆதரவு தெரிவிக்கும் 129 எம்எல்ஏ.க்களின் பிரமாணப் பத்திரமும் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிறகும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால் நவம்பர் 6-ம் தேதி தில்லியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் முன் இரு கட்சிகளையும் சேர்ந்த 125 எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தினர்.

இதையடுத்து நவம்பர் 8-ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக்குழு, கர்நாடக ஆளுநர் அளித்த அறிக்கை மீது விவாதித்தது. பிறகு கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள தீர்மானித்தது.

இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார் தாக்கூர்.

கெüடாவுடன் குமாரசாமி, எடியூரப்பா ஆலோசனை

மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெüடாவுடன் பாஜக தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில், கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் அரசு அமைய நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு சிபாரிசு செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து கர்நாடகத்தில் பாஜக -மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு அமைகிறது. வியாழக்கிழமை தில்லி சென்றிருந்த எடியூரப்பா மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வியாழக்கிழமை இரவு பெங்களூர் திரும்பினார்.

வெள்ளிக்கிழமை காலை எடியூரப்பா மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா சென்றார். காவிரி ஆற்றில் குளித்த பிறகு அங்குள்ள சாஸ்வதி மந்திரில் நடத்தப்பட்ட சூர்ய நாராயணா ஹோம பூஜையில் கலந்து கொண்டார்.

பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில், சந்திரமவுளீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிறப்புப் பூஜை செய்து வழிபட்டார்.

ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து பெங்களூர் திரும்பிய எடியூரப்பா, தேவெ கெüடாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது குமாரசாமியும் உடனிருந்தார்.

புதிய கூட்டணி அமைச்சரவை எப்போது பதவி ஏற்பது, யார்-யாருக்கு எந்தெந்த துறைகள் என்பது குறித்து அவர்களுடன் விவாதித்ததாகத் தெரிகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு எடியூரப்பாவும், குமாரசாமியும் ரகசிய இடத்தில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு இருவரும் அங்கிருந்து நேராக ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு, ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்தார்.

தென் மாநிலங்களில் முதன்முதலாக…

தென் மாநிலங்களில் முதல்முறையாக கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை நவம்பர் 12-ம் தேதி அமைக்கிறார் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.

பெரும் போராட்டத்துக்குப் பிறகு கர்நாடகத்தின் 25-வது முதல்வராக வரும் திங்கள்கிழமை பதவி ஏற்கிறார் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா.

அரசியலில் மிக நீண்ட கால அனுபவம் மிக்கவர். பாஜக துவக்கம் முதலே இக்கட்சியில் இருந்து வருகிறார். கர்நாடக அரசியலில் 35 ஆண்டு காலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வந்தவர்.

—————————————————————————————————————————————–

35 ஆண்டு அரசியல் அனுபவம் மிக்கவர் எடியூரப்பா

பெங்களூர், நவ. 9: மண்டியா மாவட்டம் பூகானகெரே கிராமத்தில் 1943-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் பூகானகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா (பி.எஸ். எடியூரப்பா). பிறகு இவரது குடும்பம் ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுராவுக்கு இடம் பெயர்ந்தது. அங்கேயே தனது ஆரம்பக் கல்வியைத் துவக்கினார் எடியூரப்பா.

ஜனசங்கத்தில் சேர்ந்த எடியூரப்பா 1972-ம் ஆண்டு ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விவசாயிகளின் தலைவர் என்று ஹிந்து மதத் தலைவர்களிடையே பிரசித்தி பெற்றவர் எடியூரப்பா. அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் இத்தலைவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே முடிவு எடுப்பார்.

அரசியலில் மிக நீண்ட கால அனுபவம் மிக்கவர். பாஜக துவக்கம் முதலே இக்கட்சியில் இருந்து வருகிறார். கர்நாடக அரசியலில் 35 ஆண்டு காலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வந்தவர்.

1983-ம் ஆண்டு முதன் முதலாக ஷிகாரிபுரா சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து எம்எல்ஏயாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 முறை இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1999-ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இதனால் 2000-ம் ஆண்டு முதல் 2004 வரை சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

கட்சியின் பல்வேறு பொறுப்புக்களை வகித்த இவர், மாநில பாஜக தலைவராக இருமுறை பதவி வகித்துள்ளார். பாஜகவை கிராம அளவில் வளர்த்தத் தலைவர்களில் முக்கிய இடம் பிடிப்பவர் இவர்.

பாஜக நடத்தும் போராட்டங்களில் முன்னின்றி கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார். குறிப்பாக விவசாயிகள் நலனுக்காக ஏராளமான முறை போராட்டங்களை நடத்தியுள்ளார்.

2004-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தாலும், பாஜகவை ஆதரிக்க காங்கிரúஸô, ம.ஜனதாதளமோ முன்வரவில்லை.

இதனால் காங்கிரஸ் தலைமையில் ம.ஜனதாதள கூட்டணி அரசு அமைந்தது. இதனால் முதல் இடத்தைப் பிடித்தும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது பாஜக. இந்நிலையில்தான் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வந்த ம.ஜனதாதள தலைவர் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு அளித்தது.

அப்போது ம.ஜனதாதளத்துக்கு 50 எம்எல்ஏக்கள் மட்டும் இருந்தாலும், 79 எம்எல்ஏக்கள் உடைய பாஜகவுக்கு துணை முதல்வர் பதவியே கிடைத்தது.

இவ்விரு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகவிடம் குமாரசாமி ஒப்படைக்காததால் அக்டோபர் 7-ம் தேதி குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது.

இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து மாநில சுற்றுப்பயணத்தை பாஜக மேற்கொண்டது. இப்போராட்டத்தால் கலக்கம் அடைந்த ம.ஜனதாதளம், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.

ஆனால் தென் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு கர்நாடகம் நுழைவு வாயிலாக ஆகிவிடக்கூடாதே என்ற கவலையில் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணி அரசைத் தடுக்க பல வழிகளில் முயற்சி செய்தது.

ஆனால் இக்கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால் வேறு வழியின்றி பாஜக தலைமையில் அரசு அமைக்க மத்திய அரசு நவம்பர் 8-ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து நவம்பர் 12-ம் தேதி கர்நாடகத்தின் 25-வது முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார் எடியூரப்பா. தென் மாநிலங்களில் அமையும் முதல் பாஜக அரசு இது என்பது குறிப்பிடத்தக்கது.

—————————————————————————————————————————————–
அமைச்சரவையில் சம இடங்கள் வேண்டும்: குமாரசாமி கோரிக்கை

பெங்களூர், நவ. 9: எடியூரப்பா தலைமையில் அமையும் அமைச்சரவையில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு சம அளவில் இடம் அளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடக சட்டப்பேரவையில் 224 உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த சட்டத் திருத்தப்படி, கர்நாடகத்தில் 34 அமைச்சர்களுக்கு மேல் நியமனம் செய்யக் கூடாது.

இந்த வகையில் கூட்டணி ஆட்சி அமையும்போது இரு கட்சிகளும் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை அமைச்சர்கள், எந்தெந்த இலாகாக்கள் என்று பிரித்து ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சி அமைக்கின்றன. 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் -பாஜக கூட்டணி அரசு அமைந்தபோது முதல்வராக ம.ஜனதாதளத்தை சேர்ந்த குமாரசாமி பதவி ஏற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.

அதுபோல் ம.ஜனதாதளத்தைச் சேர்ந்த முதல்வர் உள்பட 16 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். அதுபோல் துணை முதல்வர் உள்பட பாஜகவை சேர்ந்த 18 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். 79 எம்எல்ஏக்களை பாஜக கொண்டுள்ளதால் அக்கட்சிக்கு கூடுதலாக அமைச்சரவையில் இரு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இப்போது 21 மாதங்களுக்குப் பிறகு பாஜக தலைமையில் ம.ஜனதாதள கூட்டணியில் ஆட்சி அமையவுள்ளது. இப்போது முதல்வர் பதவி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், துணை முதல்வர் பதவி ம.ஜனதாதளதுக்கு போகிறது.

இந்த சமயத்தில் அமைச்சர் பதவியை இரு கட்சிகளும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த முறை அமைச்சர்களின் எண்ணிக்கையை பாஜகவும்- ம.ஜனதாதளமும் 50:50 என்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்வோம் என்றார்.

—————————————————————————————————————————————–

அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தை படம் பிடித்து காட்டியது கர்நாடகா

21,புதன், நவம்பர் 2007
கார்த்திகை 05

புதுடில்லி: கர்நாடகாவில் அரசியலில் திடீர் திடீரென ஏற்பட்ட திருப்பங்கள், அம்மாநிலத்தில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களும், அரசியல் கட்சிகளும் சந்தர்ப்பவாதிகள் என்பதை உறுதிப்படுத்துவதாகவே கர்நாடக அரசியல் அமைந்து விட்டது.

காங்., ஆட்சியை கவிழ்த்த, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், மற்ற கட்சிகளால் மதவாதக் கட்சி என்று வர்ணிக்கப் படும் பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது. இதை முதல் சந்தர்ப்பவாதம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். முதலில் பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,க்களை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி துõக்கிய தேவகவுடா, பின்னர் தனது மகன் குமாரசாமியின் ஆட்சிக்கு ஆலோசகராகவே மாறிவிட்டார். இது முதல் பல்டி.

ஒப்பந்தப்படி, 20 மாதத்துக்கு பிறகு பா.ஜ.,விடம் ஆட்சி ஒப்படைக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. அதை தேவகவுடா உறுதி செய்து விட்டார். பா.ஜ., ஆட்சிக்கு வழி விட மறுத்தார். இடைத் தேர்தல் நிலை உருவானது. இந்த குழப்பத் தில் தேர்தலை சந்தித்தால், “அம்பேல்’ தான் எனக் கருதிய தேவகவுடா, பா.ஜ.,வுடன் மீண்டும் பேச்சுக்கு முன்வந்தார். இது இரண்டாவது சந்தர்ப்பவாதம்.

தேவகவுடா சொல்வதற்கெல்லாம் பா.ஜ., தலையைத் தலையை ஆட்டியது. இது பா.ஜ.,வின் சந்தர்ப்பவாதம். எப்படியும், இவர்களின் கூட்டணி அரசு நீடிக்கப் போவதில்லை என்பதை புரிந்து கொண்ட காங்., சட்டசபை கலைப்பை வற்புறுத்தாமல், வேடிக்கை பார்த்தது. இது காங்.,கின் சந்தர்ப்பவாதம்.

சொன்னதற்கெல்லாம் வளைந்து கொடுத்த பா.ஜ.,வுக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக தனது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூலம் கடிதம் கொடுக்க வைத்தார் தேவகவுடா. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதும், தேவகவுடா மூளையில் புதிய யோசனை உதித்தது.

இதுவரை நாடுகளுக்கு இடையில் தான் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல் ஒப்பந்தம் கையெழுத்தாகி வந்தன. முதல் முறையாக, 12 அம்சங்கள் என்ற பெயரில் 12 நிபந்தனைகள் கொண்ட ஒப்பந்தத்தை தயாரித்தார் தேவகவுடா. வளைந்து கொடுத்து வந்த பா.ஜ., இந்த விஷயத்தில் விறைப்பாக நிமிர்ந்து நின்றது. மீண்டும், “யு’ டர்ன் எடுத்த கவுடா, பா.ஜ., ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க மறுத்தார். விளைவு, ஏழு நாள் முதல்வராக பதவி இழந்தார் எடியூரப்பா.

காங்., ஆட்சியை கவிழ்த்த கவுடா, அடுத்ததாக பா.ஜ., ஆட்சியையும் கவிழ வைத்தார். இதனால், கர்நாடகாவில் கவுடாவின் கட்சி தீண்டத்தகாத கட்சி என்ற நிலைக்கு சென்று விட்டது. இனி எந்த கட்சியும் தேவகவுடாவுடன் கூட்டு சேர தயாராக இல்லை.

“அரசியல் தார்மீகத்தை எல்லாம் தாண்டி, கடுமையான மூளை விளையாட்டுகளில் அப்பா தேவகவுடாவும், மகன் குமாரசாமியும் ஈடுபட்டதால் தான் இந்த நிலை’ என்று கவலைப்படும் பா.ஜ., அனுதாப அலையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. தனி மெஜாரிட்டி தான் நிலையான ஆட்சியை ஏற்படுத்தும் என்பதால், தங்களுக்கு ஓட்டுகள் அள்ளிக்கொண்டு போகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது காங்., எப்படியும் புது அரசியல் வியூகங்களை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று கருதுகிறார் தேவகவுடா. தேர்தல் முடிவுகளில் தான் மக்களின் மன நிலை தெரியவரும்.

சர்ச்சையில் சிக்கிய கவர்னர்: கர்நாடகாவில் கவர்னர் ராமேஷ்வர் தாக்கூர் எடுத்த முடிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராமேஷ்வர் தாக்கூர் எடுத்த முடிவுகள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதியும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான ரமா ஜோன்ஸ் விமர்சனம் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மனம் மாறி, பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதாக தேவகவுடாவின் மதசார்பற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் ராமேஷ்வர் தாக்கூரிடம் கடிதம் கொடுத்தனர். பா.ஜ.,வுக்கு முழு மெஜாரிட்டி இருப்பதாக உறுதி செய்த பிறகே, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார். அதன் பின், சட்டசபையிலும் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். இது தேவையற்றது. கர்நாடகாவில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மைக்கு கவர்னர் ராமேஷ்வர் தாக்கூரின் இந்த முடிவு தான் காரணம்.

அதேபோல, ஆதரவை பெறுவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் படி பா.ஜ.,வை மதசார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தியது, சட்டவிரோதமானது; இது அரசியலில் தார்மீகம் என்பதை படுபாதாளத்தில் தள்ளும் செயல். முக்கிய துறைகளை கேட்டு தேவகவுடா பிடிவாதம் பிடித்தது தான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கிய காரணம். முதல்வருக்கு உரிய அந்தஸ்தை தவிர மற்ற எல்லாவற்றையும் அவர் கேட்கிறார். இவ்வாறு ரமா ஜோன்ஸ் கூறியுள்ளார்.
—————————————————————————————————————————————–

கட்சித் தாவலின் மறுவடிவம்?

ஆசை கண்ணை மறைக்கும் எனும் வாழ்வியல் உண்மையை உணர்த்திய அங்கத-துன்பியல்-நாடகம்தான் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்ததும் துறந்ததும்.

நல்ல நாடகங்களில் இறுதி முடிவை முன்கூட்டியே உணர்த்துகின்ற படிமங்கள், காட்சிகள் இடம்பெறுவதைப்போலவே, கர்நாடக அரசியலிலும் இறுதி முடிவின் அடையாளங்கள் தொடக்கம் முதலாகவே தோன்றிக்கொண்டே இருந்தன.

“முன்பாதி நான் முதல்வர்; பின்பாதி நீர் முதல்வர்’ என்ற முதல் ஒப்பந்தமே தார்மிகக் குறைபாடு கொண்டதுதான். 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 79 இடங்களிலும், காங்கிரஸ் 64 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 56 இடங்களையும் கைப்பற்றிய நிலையில், அதிக இடங்களை வென்ற பாஜகதான் முதல்வர் பதவியில் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

ஒப்பந்தப்படி, மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது ஆட்சிக்காலம் முடிந்தவுடன் தாமாக முதல்வர் பதவியை பாஜகவுக்கு மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாதது மட்டுமல்ல, காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்கவும் தயாராகியது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை அதில் உள்ள அதிருப்தியாளர் கோஷ்டி மூலம் பிளவுபடுத்த காங்கிரஸ் முயலுகிறது என்பதால் கோபம் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டு அமைக்க திரும்பி வந்தபோது, அல்லது தேவ கெüடா 12 நிபந்தனைகள் விதித்தபோதாகிலும் பாஜக புரிந்துகொண்டிருக்க வேண்டும். புரியாமல் இருந்திருக்க முடியாது. ஒருவேளை, வாஜ்பாய் 13 நாட்களில் பிரதமர் பதவியை இழந்தார் என்ற களங்கம் மறைய, எடியூரப்பா 8 நாள் முதல்வர் பதவியை ஏற்றிருப்பாரோ! அல்லது, அடுத்த ஆறு மாதத்தில் தேர்தலைச் சந்திக்கும்போது மக்களின் பரிவு வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் யுக்தியாக இருக்குமோ!

எதுவாக இருப்பினும், இன்றைய அரசியலில் நிபந்தனையற்ற ஆதரவு என்பதற்கு என்ன பொருள்?

ஆளுநர் மாளிகையில் எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டமாக அணிவகுத்து நின்று, கடிதம் கொடுத்து, பெரும்பான்மையைக் காட்டி, ஆட்சிக்கு அழைக்கும்படி ஆளுநரைக் கட்டாயப்படுத்திய பின்னர், ஆட்சியில் அமர்த்திய பின்னர், ஆதரவை விலக்கிக் கொள்வது ஜனநாயகத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான கேலிக்கு இலக்காக்கிவிட்டது.

இத்தகைய முறையற்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசரத் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டம் போல, ஆதரவு அளிப்புக்கும் ஒரு தெளிவான, விதிமுறைகளுடன்கூடிய சட்டம் இன்றியமையாதது.

அரசுக்கு ஆதரவை அளிப்பதும் அல்லது பாதியில் ஆதரவை விலக்கிக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவு அளிப்பதும் கட்சித் தாவலின் மறுவடிவம்தான். கட்சித் தாவலில் உறுப்பினர்கள் இடம் மாறி எண்ணிக்கையை சரி செய்வதைப் போன்றதுதான், வெளியிலிருந்து அல்லது உள்ளிருந்து அளிக்கப்படும் ஆதரவு தடம் மாறுவதும்.

இனி வரும் காலங்களில், மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது அரிதாகி வருகிறது. துணையாக வேறு சில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகளே அதிகமாகி வருகின்றன.

தேர்தலில் போட்டியிடும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெற்றிக்காக அக்கட்சி நிறுத்தும் வேட்பாளர்களைத் ஆதரித்து தேர்வு செய்த வாக்காளர்களுக்கு, அவர்கள் எத்தனை மோசடி செய்தாலும் திரும்பப் பெறும் அல்லது நீக்கும் உரிமை இல்லை. அப்படியெனில், மக்களின் ஆதரவைப் பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்த இவர்கள் அளிக்கும் ஆதரவை மட்டும் விருப்பப்படி மாற்றிக்கொள்ளும் உரிமை எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

மக்கள் எப்படி ஆதரவை அளித்துவிட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த தேர்தல் வரை பொறுமை காக்கின்றார்களோ, அதேபோல “நிபந்தனையற்ற ஆதரவு’ தரும் கட்சிகளும் ஐந்து ஆண்டுகளுக்கு, பொறுமை காப்பதுதான் அரசியல் அறமாக இருக்க முடியும். சிறந்த ஜனநாயக மரபாகவும் அமையும். ஆதரவைத் தருவதாகக் கடிதம் கொடுப்பதும், தராமல் கவிழ்ப்பதும், பாதி ஆட்சியில் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று மிரட்டிக்கொண்டே இருப்பதும், ஓர் அரசு முழுமையாக செயல்படுவதற்குப் பெரும் தடையாக இருக்கிறது என்பதே மத்தியிலும் மாநிலத்திலும் இப்போது நாம் காணும் உண்மை நிலை.

ஐந்து ஆண்டுக்கு முற்றாக ஆதரவு “உண்டென்று சொல்; இல்லை அன்றென்று சொல் இந்த திரிசங்கு சொர்க்கம் தேவையில்லை’.
—————————————————————————————————————————————–

தேவ கௌடா கட்சி உடைகிறது

பெங்களூர், நவ. 24: கர்நாடக சட்டப் பேரவையைக் கலைக்கும் அறிவிப்பு வெளியானதும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இரண்டாக உடைந்து, ஒரு பிரிவினர் காங்கிரஸிலும் மற்றொரு பிரிவினர் பாஜகவிலும் சேர்வார்கள் என்று தெரிகிறது.

தேவ கெüடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பாஜகவும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தபோது முதல் 20 மாதங்கள் ம.ஜனதா தளம் தலைமையிலும், அடுத்த 20 மாதங்கள் பாஜக தலைமையிலும் ஆட்சி அமைக்க இரு கட்சித் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகவிடம் ம.ஜனதாதளத் தலைவர் குமாரசாமி ஒப்படைக்கவில்லை. இதனால் குமாரசாமி தலைமையில் இருந்த அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க ம.ஜனதாதளத்தின் மூத்த தலைவரான எம்.பி.பிரகாஷ் முயற்சி செய்தார். காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் திடீரென அக்டோபர் 27-ம் தேதி பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ம.ஜனதாதளம் ஆதரவு தெரிவித்து, ஆட்சியும் அமைக்கப்பட்டது. எடியூரப்பா முதல்வரானார். ஆனால் நவம்பர் 19-ம் தேதி நடக்கவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பா அரசுக்கு எதிராக வாக்களிக்க ம.ஜனதாதளம் முடிவு செய்ததால், எடியூரப்பா அமைச்சரவை ராஜிநாமா செய்தது.

இது மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு அக்கட்சித் தலைவர்கள் தேவ கெüடா, குமாரசாமி ஆகியோர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துவிட்டு, திடீரென பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டதால் பிரகாஷ் கடும் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் மீண்டும் காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்க கெüடா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. கெüடாவுடன் கூட்டுசேர காங்கிரஸ் தலைவர்கள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திய மத்திய அரசு சட்டப் பேரவையை கலைக்கவும் பரிந்துரை செய்தது.

இதுதொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நாடாளுமன்றம் இந்த அறிக்கை மீது திங்கள்கிழமை விவாதம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றே கர்நாடக சட்டப் பேரவை கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப் பேரவையின் பதவிக்காலம் இன்னும் 19 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போது தேர்தலைச் சந்திக்க எந்தக்கட்சி எம்எல்ஏக்களும் விரும்பவில்லை.

இந்த சூழ்நிலைக்குக் காரணம் ம.ஜனதாதள தலைமைதான் என்று அக்கட்சி எம்எல்ஏக்கள் கருதுகிறார்கள். சட்டப் பேரவை கலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியான பிறகு ம.ஜனதாதளம் இரண்டாக பிளவுபடும் என்று கூறப்படுகிறது.

அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.பிரகாஷ் தலைமையில் ஒரு பிரிவினர் காங்கிரஸ் கட்சியில் சேரத் திட்டமிட்டுள்ளனர். இதில் பல முக்கியத் தலைவர்களும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை கூடிய காங்கிரஸ் உயர் நிலைத் தலைவர்கள் கூட்டத்தில் ம.ஜனதாதளத்திலிருந்து பலர் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்திருப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அப்போது கட்சியில் சேருவோருக்கு எல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தீர்மானிக்கப்பட்டது.

இதுபோல் மற்றொரு பிரிவினர் பாஜகவில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமான செலுவராய சுவாமி, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்.

இதை ம.ஜனதாதளத்தின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்பதைவிட பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதையே பெரும்பான்மையினர் விரும்பினர். இந்நிலையில்தான், பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை ம.ஜனதாதளம் விலக்கிக் கொண்டதால் எடியூரப்பா அரசு கவிழ்ந்தது. எனவே செலுவராய சுவாமி உள்பட ம.ஜனதாதளத்தின் பல எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாள்களில் கர்நாடக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
—————————————————————————————————————————————–

Posted in Bangalore, Bengaluru, Biosketch, BJP, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Deve Gowda, Ediyurappa, Faces, Gowda, Interview, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JD, JD(S), JD(U), Karnataka, people, State, Yediyurappa | Leave a Comment »

Election Mela in Karnataka: Tracking Poll Expenses and Party Expenditure

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

கர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு! * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.

மூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.

கர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.

தரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.

குமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.

பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பதற்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

கட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரியும், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.

நேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.

கர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.

கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.

22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.

பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறுகின்றனர்.

வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.

Posted in Accord, Allegations, Alliance, Balance, Bangalore, Bengaluru, BJP, candidates, Clean, CM, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Coomarasami, Coomarasamy, Corruption, Crores, deal, Devegowda, EC, Economy, Election, Elections, Expenditure, Expenses, Forecasting, forecasts, Gowda, Income, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JD, Karnataka, kickbacks, Kumarasami, Kumarasamy, Lakhs, Mela, Minister, MLA, MLC, MP, P&L, parliament, Party, Politics, Poll, Polls, Profit, Projections, Rich | 1 Comment »

Notorious criminal Vellai Ravi & associate killed in encounter

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

Kumudam Reporter – Interview with Don ‘Vellai’ Ravi « Tamil News – வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?:

07.06.07 – குமுதம் ரிப்போர்ட்டர் :: தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.


தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெள்ளை ரவிசென்னை, ஆக. 3: சென்னை வியாசர்பாடி சஞ்சய்நகரைச் சேர்ந்த சாமி -மாரியம்மா தம்பதியின் மகன் ரவி (எ) வெள்ளை ரவி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.1991 முதல் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.இதில் 5 கொலை வழக்குள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 5 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.எச்சரிக்கை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சேராவும், வெள்ளை ரவியும் எதிரெதிர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள். 2001-ல் ஷகீல் அக்தர் துணை கமிஷனராக இருந்த போது இருவரையும் அழைத்து சமரசமாக செல்லும்படி எச்சரித்தார். அச்சமயத்தில் இருவரும் சமாதான புறா பறக்கவிட்டனர்.தேர்தலில் போட்டி:2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 2,702 வாக்குகள் பெற்றார்.அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வெள்ளை ரவி, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பு வகித்த சமயத்தில் ரவுடிகள் வீரமணி, ராஜாராம், வெங்கடேச பண்ணையர் உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.இதனால் பயந்து போன ரவுடிகள், சென்னையில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர்.

2002 முதல் தலைமறைவாக இருந்த இவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவி கமலாவும், மகன், இரண்டு மகள்களும் உள்ளனர்.
————————————————————————————————

அடுத்த குறி யார்?

சென்னை, ஆக. 3: ரௌடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த குறி யார்? என்ற பேச்சு ரௌடிகள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.

ஆள் கடத்தல், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரௌடி வெள்ளை ரவி, ஓசூரில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் சுடப்பட்டார்.

இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ரௌடிகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ரௌடிகள் பட்டியல்:

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ரௌடிகள்

  • மாலைக்கண் செல்வம்,
  • காதுகுத்து ரவி,
  • கேட் ராஜேந்திரன்,
  • நாகேந்திரன்,
  • சேரா,
  • காட்டான் சுப்பிரமணியன்,
  • ஜெர்மன் ரவி,
  • கருப்பு பாலு,
  • ஸ்டாலின்,
  • திண்டுக்கல் பாண்டியன்

என போலீஸின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இவர்களில் ஒவ்வொரு ரௌடிக்கும் 10 முதல் 20 வழக்குகள் வரை உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரௌடிகளின் நடமாட்டத்தை போலீஸôர் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் நாகேந்திரன் மட்டும் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்ற ரௌடிகளும், அவரது ஆள்களும் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பதாகப் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
——————————————————————————————————————————–
வெள்ளை ரவி விவகாரத்தில் என் பெயரா?

ஒசூர், ஆக. 3: ரெüடி வெள்ளை ரவியை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் என்னுடைய பெயரைப் போலீஸôர் தேவையின்றிப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தியுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

நிருபர்களிடம் வெங்கடசாமி அளித்த பேட்டி:

புதன்கிழமை மாலை 7 மணிக்கு மத்திய கப்பல், போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை வரவேற்க தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் நின்றிருந்தேன்.

அப்பொழுதுதான் ஒசூரில் போலீஸôர் நடத்திய மோதலில் 2 ரெüடிகளைச் சுட்டுக் கொன்ற விவரம் எனக்குத் தெரிந்தது.

என்னை ஏன் கடத்தப் போகிறார்கள்? என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இது குறித்து டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “அவர்கள் உங்களை கடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சென்னையில் இருந்து ஒசூருக்குப் போலீஸ் குழுவினர் வந்தனர்’ எனக் கூறினார்.

என்னைக் கடத்தப் போவதாகக் கூறினால், போலீஸôர் முதலில் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் இப்படி பேட்டி கொடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி ஃபேக்ஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறினார்.

——————————————————————————————-
வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட குணா சாராய வியாபாரி

ஓசூர், ஆக. 3 –

ஓசூர் அருகே ரவுடி வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளி குணா, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாராயம் விற்று வந்தவர் என்ற பரபரப்பான தகவல் தெரியவந்து உள்ளது.

உறவினர்கள் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஈச்சங்கூர் பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைரவியும் அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களது பிணங்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

அவர்களது உடல்களை அடையாளம் காட்டவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த உடல்களை பெற்றுச்செல்லவும் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெள்ளைரவி மற்றும் குணா ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.

அடையாளம் காட்டினர்

வெள்ளைரவி தரப்பில் அவனது தாய் மாரியம்மா, தம்பி தனசேகர், மைத்துனர் பாபு மற்றும் மோகன் ஆகியோரும், குணா தரப்பில் அவனது மனைவி தமிழ்அரசி, தம்பிகள் சுட்டு, இச்சப்பா மற்றும் ராஜு ஆகியோரும் வந்திருந்தனர். ஆஸ்பத்திரியில் அவர்கள் கதறி அழுதபடி வெள்ளைரவி, குணா இருவரின் உடல்களையும் அடையாளம் காட்டினர்.

ஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சுட்டுக்கொல்லப்படவர்களின் உறவினர்கள் கூடியதால் அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

4-வது மகன்

முன்னதாக வெள்ளைரவியின் தாய் மாரியம்மா கூறுகையில் வெள்ளைரவி எனக்கு 4-வது மகன். அவன் சுட்டுக்கொல்லப்பட்டதை டெலிவிஷனில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். `எனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றது ஏற்கனவே நிர்ணயித்து செய்த சதி’ ஆகும். அவனுக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர் என்று தெரிவித்தார்.

குணாவின் மனைவி தமிழ் அரசி கூறியதாவது:-

காய்கறி வியாபாரம்

நானும் எனது கணவர் குணசேகர் என்கிற குணாவும் கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் பெல்லாரியில் உள்ள கவுல்பஜார் மாரியம்மன் கோவில் அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.

எனது கணவர் ஒருவரிடம் கூலிக்கு கமிஷன் அடிப்படையில் சாராய வியாபாரமும் செய்து வந்தார். தற்போது சாராய விற்பனைக்கு கர்நாடக அரசு தடைவிதித்து விட்டதால் என்னுடன் சேர்ந்து கணவரும் காய்கறி வியாபாரமே செய்து வந்தார்.

தமிழில் பேசுவோம்

வெள்ளை ரவி தனது மனைவியுடன் பெல்லாரிக்கு வந்து 9 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது காய்கறி வாங்க வெள்ளைரவி அடிக்கடி எங்கள் கடைக்கு வருவார். அவர் நன்கு தமிழில் பேசுவார். நாங்களும் தமிழில் பேசுவோம். இதனால் வெள்ளை ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

அடிக்கடி கடைக்கு வந்து செல்வதால் எனது கணவர் குணாவுக்கும் வெள்ளை ரவிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவியை நானும் பார்த்து பேசி இருக்கிறேன்.

எனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளை ரவியின் மனைவி தான் டெலிபோன் செய்து என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான், நான் பெல்லாரியில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டு வந்தேன்.

இவ்வாறு தமிழ்அரசி கூறினார்.

——————————————————————————————-

லாட்ஜில் தங்கி இருந்தவரை சமரசத்துக்கு அழைத்துசென்று சுட்டு கொன்றுவிட்டனர்: வெள்ளைரவி அக்காள் பேட்டி

சென்னை, ஆக. 2-

சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி வெள்ளைரவி. ஓசூர் அருகே நேற்று போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியில் வசிக்கும் அவரது அக்காள் வாசுகி (54), கதறி அழுதார்.

வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி வாசுகி கூறியதாவது:-

என் தம்பி ரவி கடந்த சில மாதங்களாக ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தான். ஆனால் போலீசார் அவனை நிம்மதியாக வாழவிடவில்லை. ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள். போலீசாரின் திட்டம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்தார்கள்.

எப்படியாவது ரவியை சுட்டு கொன்றுவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு அழைத்து சென்று தீர்த்துகட்ட பார்த்தார்கள். அதுவும் அவர்களால் முடியவில்லை. செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு என் தம்பி மீது புதிதாக ஒரு வழக்கு போட்டார்கள். அதில் அவன் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்கள்.

அந்த ராஜ்குமார் அசாம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன். வெடி மருந்துகள், ஆயுதங்கள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் எந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் தம்பியை சுட்டுக்கொல்ல கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள்.

நேற்று முன்தினம் ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் என் தம்பி தங்கி இருந்தான். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவனது அறைக்கு போலீசார் சென்றுள்ளனர். சமாதானம் பேசி முடித்துவிடுவோம். அதன் பிறகு உனக்கும் பிரச்சினை இருக்காது என்று நைசாக பேசி அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இதை அறிந்ததும் உறவினர் மூலம் ரவியை எங்கே வைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டோம். நாங்கள் பிடிக்கவில்லை என்று மாலை வரை போலீசார் மறுத்தனர். திடீரென்று மாலை 5 மணிக்கு போலீசாருடன் நடந்த சண்டையில் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் தந்தார்கள்.

அவனை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். அவனை அழைத்து சென்று பேரம் பேசி இருக்கிறார்கள். அவன் எந்த விதமான பேரத்துக்கும் உடன்பட வில்லை. அதனால் சுட்டு கொன்றுவிட்டார்கள்.

கடந்த 6 மாதமாக இரவு, பகல் எப்போதும் போலீசார் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். என் மகன்களையும் பிடித்து சென்று கொடுமை படுத்தினார்கள். அநியாயமாக என் தம்பியை கொன்றவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
——————————————————————————————-

வெள்ளை ரவி கூட்டாளிகள்: 7 ரவுடிகளை சுட்டு பிடிக்க முடிவு

சென்னை, ஆக. 2-

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவன் வெள்ளை ரவி. பிரபல ரவுடியான இவன் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையை கலக்கி வந்தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், கொலை- கொள்ளை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்து வந்த இவன், போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தான்.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டூழியம் செய்து வந்த ரவுடிகளை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் பயந்து போய் சென்னையை விட்டே ஓட்டம் பிடித்த வெள்ளை ரவி ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.

இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்ற வெள்ளை ரவி, அவரை விடுவிப்பதற்காக ரூ.2 கோடி வரை பேரம் பேசினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளை ரவியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே வைத்து வெள்ளை ரவியையும், அவனது கூட் டாளிகள் சிலரையும் சுற்றி வளைத்தனர்.

ஆனால் அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் வெள்ளை ரவி தப்பி ஓடிவிட்டான். கூட்டளிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளை ரவிக்கு அடைக்கலம் கொடுத்த அவனது காதலி சானியாவும் போலீசில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை ரவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.

இந் நிலையில் வெள்ளை ரவி ஓசூர் அருகே சொகுசு குடிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த உதவி கமிஷனர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஓசூர் விரைந்தனர்.

பின்னர் வெள்ளை ரவி பதுங்கி இருந்த சொகுசு குடிலை சுற்றி வளைத்தனர். அங்கு வெள்ளை ரவியுடன் அவனது கூட்டாளிகள் 8 பேரும் இருந்தனர். போலீசை கண்டதும் கூட்டாளிகள் 7 பேர் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

ஆனால் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் போலீசில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் பார்த்து போலீசார் சரண் அடைந்து விடுங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெள்ளை ரவி மற்றும் அவளது கூட்டாளி குணா ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு கள் பாய்ந்தது. இருவரும் பலியானார்கள்.

இதனையடுத்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 7 பேருரையும் சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓசூர் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே ரவுடிகள் 7 பேரும் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அங்கும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவனது உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்கள். ——————————————————————————————-

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்

ஓசூர், ஆக. 2-

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வெள்ளை ரவி (வயது 42), பிரபல ரவுடியான இவன் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் தொழில் அதிபர் உள்பட பலரை கடத்தி பணம் பறித்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டான்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயற்சி செய்தான். வெள்ளை ரவியை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடிவிட்டான்.

கடந்த 2 மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவன் நேற்று முன்தினம் இரவு ஓசூரை அடுத்த தமிழக -கர்நாடக எல்லையில் பாகலூர் அருகே ஈச்சாங்கூர் என்ற இடத்தில் தனியார் சொகுசு குடிலில் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தான்.

நேற்று இரவு ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தவருமான வெங்கடசாமியை கடத்தி ரூ.1 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தான்.

இந்த தகவல் கிடைத்தும் சென்னையில் இருந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் உதவி கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் வந்தனர்.

வெள்ளை ரவி தங்கிய சொகுசு குடில் அருகே போலீசார் பதுங்கி நின்ற னர். குடிலுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகள் 2 பேரும் உள்ளே சென்று போலீசார் வந்து இருப்பதை கூறி விட்டனர்.

இதைத் தொடர்ந்து வெள்ளை ரவியும், அவ னது கூட்டாளிகளும் 2 டாடாசுமோ கார்களில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். மேலும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திரும்பி சுட்டனர். இதில் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளை ரவி சம்பவ இடத்தில் பலியானான். அவனது கூட்டாளி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப் படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவனைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியாததால் அவனது உறவினர்கள் வந்த பிறகு தான் அவனது உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ் பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அவர்கள் ஓசூரிலேயே தங்கி உள்ளனர்.

வெள்ளை ரவியின் மனைவி- குழந்தைகள் எங்கே?

சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவியின் தாயார் மாரிம்மாள் மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். வெள்ளை ரவியின் மனைவி கமலா மற்றும் அவரது குழந்தைகள் வரவில்லை. அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகிறார்கள். ——————————————————————————————-

வெள்ளை ரவி உடல் அடக்கம்: வியாசர்பாடியில் பலத்த பாதுகாப்பு

பெரம்பூர், ஆக. 3-

சென்னையை கலக்கிய பிரபல தாதா வெள்ளை ரவி ஓசூர் அருகே போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

நேற்றிரவு வெள்ளை ரவி உடல் போலீஸ் வேன் மூலம் ஓசூரிலிருந்து சொந்த ஊரான சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவுக்கு கொண்டு வரப்பட் டது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் வந்து சேர்ந்தது.

இதையொட்டி பக்தவச்சலம் காலனி முழுவதும் டிïப் `லைட்’கள் கட்டப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் வீட்டு முன்பு காத்திருந்தனர். வெள்ளை ரவி உடல் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அவன் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் உடல் வைக்கப்பட்டது.

அவன் உடல் அருகே வெள்ளை ரவி மகள் பாக்கிய லட்சுமி, மகன்கள் கோகுல், நவீன் மற்றும் வெள்ளை ரவி அக்காள் வாசுகி, தாய் மாரியம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தனர்.

பக்தவச்சலம் காலனி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளை ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் வரிசையில் செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் வெள்ளை ரவி உடல் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள இடு காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதை யொட்டி வியாசர்பாடி பகுதியில் தெரு தெருவாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உதவிக் கமிஷனர்கள் ராஜாராம், விமலா, சந்திரன் ஆகியோர் வியாசர்பாடியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவி மனைவி கமலா கூறியதாவது:-

எனக்கு சொந்த ஊர் மைசூர் அருகில் உள்ள ரெய்ச்சூர் பர்மா காலனி. வெள்ளை ரவி தொழில் காரணமாக அடிக்கடி எங்க ஊர் பகுதிக்கு வருவார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்தது.

அதன் பிறகு நான் ரெய்ச்சூரில் என் வீட்டிலேயே இருந்தேன். வெள்ளை ரவி மட்டும் சென்னை வந்து செல்வார். நான் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வேன்.

செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது அண்ணன் சேகர் ஆகியோரும் என் கணவ ருடன் சேர்ந்து அசாம் மாநி லத்தில் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்கள். சேகருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது என் கணவர்தான் உதவிகள் செய்தார்.

பின்னர் சேகரும், ராஜ்குமா ரும் பெரிய பணக்காரர்கள் ஆகி விட்டனர். அசாமில் அவர்களுக்கு பலரோடு தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மீது வழக்குகள் உள்ளது.

என் கணவர் சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் என்னோடும், குழந்தை களுடனும் வசித்து வந்தார். ஆனால் என் கணவர் மைசூரில் என்னுடன் தங்கி இருந்த போது ராஜ்குமாரை கடத்தியதாக பொய் வழக்கு போட்டனர்.

எப்படியாவது என் கண வரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். போலீஸ் தேடலுக்கு பயந்து என் கணவர் என் வீட்டிலேயே தங்கி இருந்தார். அங்கும் போலீசார் வந்து விட்டனர்.

இதனால் அவர் மைசூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பிலி எனும் ஊரில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அவருக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. இதனால் துணைக்கு ஒரு வாலிபரை கூடவே தங்க வைத்திருந்தார்.

அப்போது எனக்கு லாட்ஜில் இருந்து அடிக்கடி போன் செய்வார். உப்பிலியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்வார். அங்கு நாங்கள் சந்தித்துப் பேசுவோம். அப் போது வீட்டு செலவுக்கு பணம் தருவார்.

அதே போல சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்தார். காலை 6 மணிக்கு உப்பிலி வந்து விடு என்றார். நானும் அன்று இரவே புறப்பட்டு அதிகாலை உப்பிலி சென்றேன்.

ஆனால் குறிப்பிட்டப்படி அவர் வரவில்லை. அவரிடம் 3 செல்போன்கள் உண்டு. நான் அந்த 3 செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டேன். 3 சொல்போன்களுமுë சுவிட்-ஆப்” செய்யப்பட்டிரு ந்தது.

அதன் பிறகுதான் இரவோடு இரவாக என் கணவரை போலீசார் பிடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. அன்று இரவே அவரை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். வேண்டும் என்றே என் கணவரை கொன்று விட்டனர்.

இவ்வாறு வெள்ளை ரவி மனைவி கமலா கூறினார்.

———————————————————————————————————————

வெள்ளைரவி வேட்டைக்கு “ஆபரேஷன் ஒயிட்” பெயர் – நடிகை சானியா தகவல் மூலம் சிக்கினான்

சென்னை, ஆக. 4-

Vellai ravi photoசென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவில் வசித்து வந்தவன் வெள்ளை ரவி. படித்த காலத்தில் ஒழுக்கமானவாக இருந்த இவன் பிறகு தகாத சேர்க்கையால் ரவுடியாக மாறினான். 18 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த இரும்புக்கடை சுப்பையாவை இவன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிக் கொன்றான். வெள்ளை ரவி செய்த முதல் கொலை இதுதான்.

அதன் பிறகு ஆள் கடத்தல், செம்மரம் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என்று இவன் பெரிய தாதா ஆகி விட்டான். வீரமணி, பங்க் குமார் உள்பட தற்போது சென்னையில் ரவுடியிசம் செய்யும் பலர் வெள்ளை ரவியால் வளர்க்கப்பட்டவர் களாகும். எனவே தாதா குழு வுக்கு “மூளை”யாக இருந்த வெள்ளை ரவி மீது போலீசார் ஒரு கண் வைத்தப்படியே இருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ரவுடி தொழிலை விட்டு விட்டு திருந்தி விட்டதாக போலீசாரிடம் கூறினான். 2001ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வாங்கினான். அதன் பிறகு அவனது பழைய கட்ட பஞ்சாயத்து கொடூரங்கள் மீண்டும் தலை தூக்கின.

இதனால் சென்னை போலீசார் வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். முதல் கட்டமாக அவனால் வளர்க்கப்பட்ட வீரமணி, பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மைசூர், அசாம், பர்மா என்று வெள்ளை ரவி ஓட்டம் பிடித்தான்.

வெள்ளை ரவி தலைமறை வாக இருந்து கொண்டே சென்னையில் உள்ள பல தொழில் அதிபர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இதனால் அவனை வேட்டையாடும் பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இந்த “வேட்டைக்குழு”வுக்கு தலைமை தாங்கினார்.

இந்த படையின் வேலைக்கு “ஆபரேஷன் ஒயிட்” என்று பெயரிடப்பட்டது. இந்த படை யினர் தனி தனி பிரிவுகளாக பிரிந்து வெள்ளை ரவிக்கு வலை விரித்தனர். இது வெள்ளை ரவிக்கும் தெரிய வந்தது.

போலீஸ் கைகளில் சிக்கா மல் இருக்க வெள்ளை ரவி கர்நாடகாவுக்கு தப்பிச் சென் றான். இதனால் வெள்ளை ரவியின் தாய் மாரியம்மாள், அண்ணன் தனசேகரன் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து வியாசர்பாடி, செங்குன்றம் பகுதியில் வெள்ளை ரவிக்கு நெருக்க மானவர்களிடம் போலீசார் தகவல்களை திரட்ட முயன் றனர். அவர்கள் வெள்ளை ரவி மூலம் ஏதாவது ஒரு வகையில் பலன் அடைந்திருந்ததால், யாருமே வெள்ளை ரவி பற்றி வாயை திறக்கவில்லை. இதனால் வெள்ளைரவி மறை விடத்தை கண்டு பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவா லாக இருந்தது.

இந்த நிலையில்தான் போலீ சாருக்கு கை கொடுக்கும் வகையில் நடிகை சானியா கிடைத்தார். “சிவாஜி” பட துணை நடிகையான சானியா, வெள்ளை ரவியின் கள்ளக்காதலி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக சானியாவை அவன் ஆசை நாயகியாக வைத்திருந்தான்.

சானியா தன் கணவன் சபியுல்லாவுடன் பெரம்பூரில் வசித்து வருகிறாள். வெளிïர்களில் மிகவும் போரடித்து விட்டால் வெள்ளை ரவி மிகவும் ரகசியமாக பெரம்பூர் வந்து சானியாவுடன் இருந்து விட்டுப்போவான். சானி யாவுக்காக அவன் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளான்.

சமீபத்தில் ராஜ்குமார் என்பவரை வெள்ளைரவி ஆட்கள் கடத்தி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில் நடிகை சானியாவும் பிடி பட்டாள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவள் கடந்த வாரம் விடுதலை ஆனாள்.

அவளை கொத்தி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீ சார் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி விசாரித்தனர்.
அப்போது வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கி இருக்கும் தகவலை சானியா கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்தே போலீசார் ஹூப்ளி சென்று வெள்ளை ரவியை பிடித்து வந்து ஓசூர் அருகில் வைத்து “என் கவுண்டர்” செய்திருப்பதாக தெரிகிறது.

ஆனால் வெள்ளை ரவியை சானியா மூலம்தான் பிடித்தனர் என்பதை சானியா தரப்பினர் ஒத்துக் கொள்ள வில்லை. போலீசார் ஏற்கனவே வெள்ளை ரவியை பிடித்து வைத்திருந்தனர். நேரம் பார்த்து போட்டுத் தள்ளி விட்டனர் என்கிறார்கள்.

இதற்கிடையே ஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்துக்காரன் ஒருவன் தங்கி இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு போய் விட்டு வருவதாக கூறிய அவன் மாயமாகி விட்டான். அவன் மூலம் போலீசார் வெள்ளை ரவியை பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியோ போலீசாரின் “ஆபரேஷன் ஒயிட்” சக்சஸ் ஆகிவிட்டது.

—————————————————————–
காசிப்ஸ்: அமைச்சர் உத்தரவால் சரண் அடைந்த தாதா:

வட சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் பிரபல தாதா மாலைக்கண் செல்வம். இவர் ஷாக் அடிக்கும் துறையின் அமைச்சருக்கு வலது கரம். சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்தே அந்த அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவர் மாலைக் கண் செல்வத்துடன் வலம் வருவதாக புகார் கூறினார். அவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அமைச்சர் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால் துணை கமிஷனர் முருகன் பிடிவாதமாக இருந்ததோடு, அந்த தாதா, அமைச்சரின் பாதுகாப்பில் இருப்பதாக கமிஷனர் மூலமாக முதல்வருக்கு நோட் அனுப்பிவிட்டார்.

அதோடு, அவரை தீவிரமாக தேட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில் பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய தாதா, அவர் உத்தரவுபடி கமிஷனரிடம் 8ம் தேதி சரண் அடைந்தான். இதுவரையில் எந்த கமிஷனரும் இது போன்ற தாதாக்கள், ரவுடிகளை சந்தித்ததில்லை. அவர்களை போலீஸ் நிலையத்திலோ, அல்லது கோர்ட்டிலோ சரண் அடைய செய்வார்கள்.

திருந்திவிட்டதாக சொன்ன ரவுடிகள் எல்லாம், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்குத்தான் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் குமரன், அமைச்சரின் உத்தரவை ஏற்று தாதாவை சந்தித்து, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 150 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது பெரிய அவமானம் என்று ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பியிருக்கிறார்.

———————————————————————————————————————
ரௌடி “மாலைக்கண் செல்வம்’ போலீஸில் சரண்!

சென்னை, ஆக. 9: ரவுடி “மாலைக்கண் செல்வம்’ (41) போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.

ரெüடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக் குறி மாலைக்கண் செல்வம்தான் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது.

இந்நிலையில் மாலைக்கண் செல்வம் தனது வழக்கறிஞர்களுடன் புதன்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து தான் சரண் அடையப் போவதாகத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாலைக்கண் செல்வத்தை வெளியே அழைத்து வந்த கமிஷனர் நாஞ்சில் குமரன், நிருபர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கேள்விகளை கேட்டார்.

எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார் நாஞ்சில்குமரன். அதற்கு மாலைக்கண் செல்வம் 5 பேர் உள்ளதாகத் தெரிவித்தார்.

சாதாரண ஆளாக இருக்கிறாய், உன் மீது எவ்வளவு கொலை வழக்குகள் உள்ளன? முதலில் 3 கொலை வழக்குகள் என்ற மாலைக்கண் செல்வம், இவையெல்லாம் பொய் வழக்கு என்று தெரிவித்தார்.

உடனே கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் குறுக்கிட்டு, 4 கொலை வழக்குகள் உள்ளன என்று பதில் அளித்தார்.

ரெüடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸôர் எடுத்து வருகிறோம். எனவே, குழந்தைகளை நன்றாக படிக்க வை. இல்லையெனில் போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நாஞ்சில் குமரன் எச்சரித்தார்.

நான் எதையும் செய்யவில்லை என்று மாலைக்கண் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மாலைக்கண் செல்வத்தை கைது செய்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு மாதவரத்தில் செந்தில்குமார் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாலைக்கண் செல்வத்தை கைது செய்வதாக இணை கமிஷனர் எம். ரவி தெரிவித்தார்.

“போலீஸ் பொய் வழக்கு’ ரௌடி மாலைக்கண் செல்வம் மீது போலீஸôர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றார் மாலைக்கண் செல்வத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணபிரசாத்.

3 கொலை வழக்குகள்: மாதவரத்தில் மனைவி, 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாலைக்கண் செல்வம் மீது 1988-ல் முதல்முதலாக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராயபுரத்தில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி மாதவரம் பால்பண்ணையில் குடும்பத்துடன் குடியேறினார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மூன்று வழிப்பறி கொள்ளை வழக்குகளும், இரண்டு போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இறுதியாக மாதவரத்தில் மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளி நித்யானந்தன் என்பவர் எதிர் கும்பலைச் சேர்ந்த ரவுடி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் மாலைக்கண் செல்வம் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் மூன்று கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.

———————————————————————————————–

என்கவுண்டருக்கு பயந்து ரவுடி மாலைக்கண் செல்வம் போலீசில் திடீர் சரண் – கொலைசதி வழக்கில் கைது

சென்னை, ஆக. 8-

சென்னை மக்களுக்கு இடைïறாக இருக்கும் மேலும் 15 ரவுடிகள்
மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அறிவித்தார்.

போலீசாரின் விசாரணை யில் வடசென்னையில் ரவுடித்தனம் செய்து வந்த செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் அத்துமீறி செயல்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை சுட்டுப்பிடிக்க போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தர விட்டார்.

அதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் வடசென்னை இணைக் கமிஷனர் ரவி ஆகியோர் “ஆபரேசன்” நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். போலீ சார் பல்வேறு சிறு குழுக்களாக பிரிந்து மாலைக் கண் செல்வத்தை தேடும் வேட் டையில் ஈடுபட்டனர்.

கடந்த 2 தினங்களாக மாலைக்கண் செல்வம் எங்கு பதுங்கி இருக்கிறான் என்ற விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.

என்கவுண்டர் மூலம் தன்னை தீர்த்துக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிந்ததும் மாலைக்கண் செல்வம் அதிர்ச்சி அடைந் தான். இனியும் தாமதித்தால் போலீசார் பிடித்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்தான். எனவே போலீசில் சரண் அடைய முடிவு

செய்தான்.இன்று மதியம் 12 மணிக்கு மாலைக்கண் செல்வம் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தான். அவனுடன் வக்கீல் கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் நாதன், ராஜ்குமார், கிருபா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்பு மாலைக் கண் செல்வம் சரண் அடைந் தான்.

மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக் கில் மாலைக்கண் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தான். அந்த வழக்குக்காக அவன் கைது செய்யப்பட்டான்.

மாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த மாலைக்கண் செல்வத் துக்கு 45 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே இவன் ரவு டித்தனம் செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நெருக்கடி கொடுத் ததும் 3 லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தான்.

நல்லவன் போல காட்டு வதற்காக சென்னை துறை முகத்தில் ஒப்பந்ததார ராகவும் இருந்து வந்தான்.

மாலைக்கண் செல்வம் மீது 4 கொலை வழக்குகள் உள் ளன. இது தவிர கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என்று 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவனுக்கு பயந்து யாரும் சாட்சி சொல்ல வராததால் இவன் மீதான எந்த வழக்கிலும் இவனது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.

3 தடவை இவனை போலீ சார் கைது செய்தனர். உடனே இவன் விடுதலை ஆகி விடு வான். முக்கிய ரவுடிகளை போலீ சார் வேட்டையாடியதும் இவன் சில மாதங்கள் சென் னையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். கடந்த 5 ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வந்தான்.

சமீபத்தில் மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் படு கொலை செய்யப்பட்டார். தன் உறவினரை கொன்றதற் காக பழிக்கு பழி வாங்க செந்தில் குமாரை மாலைக்கண் சதி திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டி இருப்பது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது. எனவே அவன் கொட்டத்தை ஒடுக்க சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்தனர்.

அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலை யில் தான் அவனை பற்றிய முழு தகவல்கள் கமிஷனர் நாஞ்சில்குமரனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாலைக்கண் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே அவன் பயந்து போலீஸ் கமிஷனர் முன்பு இன்று சரண் அடைந்து விட் டான்.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கமிஷனர் நாஞ் சில் குமரன் விசாரணை நடத்தினார்.

போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் மாலைக்கண் செல்வம் கூறியதாவது:-

எனது பெயர் செல்வம் என்ற மாலைக்கண் செல்வம். நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை. என்னுடன் இருப்பவர்கள் செய்த தவறுக் காக 3 வழக்குகளில் என்னை பிடித்து சென்றனர். என் மீது எத்தனை வழக்குகள் உள் ளன என்பது தெரியாது.

நான் ரவுடியாக வாழ வேண்டும் என்று நினைக்க வில்லை. எந்த குற்றமும் செய்ய வில்லை இருந்தாலும் என்னைப் பற்றி சிலர் போலீசாரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் அத னால் போலீசார் என்னை தேடி வருவதாக அறிந்தேன் எனவே இங்கு வந்து சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உன்னை பற்றி போலீஸ் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். 1990ல் ரவுடியாக ஆரம்பித்து 92ல் என்னmaalaikkan selvam arcot veerasamy DMK Politics Party affiliations rowdy dada arrest செய்தாய்பயார்-யாரை எல்லாம் கொலை செய்திருக் கிறாய்ப எத்தனை வழக்குகள் உன்மீது உள்ளனப எப்படி யெல்லாம் நீ தப்பித்து கொண் டிருக்கிறாய் என்பதை போலீஸ் துறை நன்கு அறியும்.

சென்னையில் யாரும் ரவுடியிசம் செய்யலாம் என்ற கனவில் திரிய கூடாது அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிந்து பயந்து போய் எங்களிடம் ஓடி வந்து இருக்கிறாய். இனி மேலாவது திருந்தி வாழ முயற்சி செய். நீ இது போல ரவுடியாக திரிந்தால் உனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் யார் மதிப் பார்கள்ப உன்னுடைய குழந் தைகள் என்ன செய்கி றார் கள்ப என்று அவர் கேட் டார்.

அதற்கு பதில் அளித்த மாலைக்கண் செல்வம் எனது மனைவி பெயர் வடிவு. 5 குழந் தைகள் உள்ளனர். மூத்த மகள் பிளஸ்-2 படித்து வருகிறாள். போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதால் அவர்களுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அதனால் ரவுடி தொழிலை விட்டு நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நல்ல தொழில் செய்து வாழ் வேன் என் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டாம் என்னை பற்றி பார்த்து பழகியவர்களிடம் கேட்டு பாருங்கள் தவறாக சொல்ல மாட்டார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி னான்.

இதனால் கோபம் அடைந்த கமிஷனர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய் சமீபத்தில் கூட மாதவரத்தில் உனது மைத் துனர் அகஸ்தீஸ்வரன் கொலைக்கு பழிக்குபழியாக செந்தில்குமார் என்பவரை கொலை செய்திருக்கிறாய். திருந்தி வாழ்ந்தால் உனக்கு நல்லது. போலீசாரை ஏமாற்ற நினைத்தால் கடும் தண்டனை நிச்சயம் உண்டு என்றுஹ எச்சரித்தார்.

உடனே மாலைக்கண் செல்வம் கமிஷனரை பார்த்து இருகைகளையும் தூக்கி கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதான். இனி திருந்தி வாழ்வேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.

பின்னர் அவனை கோர்ட் டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.

———————————————————————————————–
அக்கா மகனை கொன்றதால்
பழிக்கு பழி வாங்கியதாக ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம்
புழல் சிறையில் அடைப்பு

செங்குன்றம், ஆக.10-

அக்கா மகனை கொன்றதால் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என்று சரண் அடைந்த ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுட்டு பிடிக்க உத்தரவு

சென்னை காசிமேடு புதுமனை குப்பம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மாதவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் சரண் அடைந்தனர். 2 பேர் கைதாகினர்.

இதில் ரவுடி மாலைக்கண் செல்வம் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது. இதனால் செல்வம் தலைமறைவானார். அவரை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் செல்வம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

செல்வம் கொடுத்த தகவலின் பேரில் காசிமேட்டை சேர்ந்த சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் மாதவரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து திருவொற்றிïர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக இந்த கொலை தொடர்பாக மாலைக்கண் செல்வம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பழிக்கு பழி

கடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னுடைய அக்கா மகன் அகத்தீஸ்வரனை செந்தில் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எண்ணூர் அருகே கொலை செய்தனர். இதனால் செந்திலை பழிக்கு பழி வாங்க காத்திருந்தேன். இதை அறிந்த செந்தில் தலைமறைவானார்.

கடந்த மாதம் 23-ந் தேதி செந்தில் அவருடைய குடும்பத்தை பார்க்க காசிமேடு வந்ததாக தகவல் கிடைத்தது. என்னுடைய கூட்டாளிகளை ஏவி விட்டு மாதவரம் புதிய மேம்பாலம் அருகே செந்திலை கொலை செய்தேன். என்னை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றதால் சரண் அடைந்தேன். இனி திருந்தி வாழ போகிறேன்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

———————————————————————————————–

Posted in ACP, Akhthar, Akthar, Alcohol, Arcadu, Arcaud, Arcot, Arcot N Veerasamy, Arkadu, Arms, Arrack, Assassin, Assassination, Assembly, Bagalur, Bangalore, BJP, Bombs, Cabinet, Chennai, Cinema, Commissioner, CoP, Crime, Criminal, CSI, Dada, DCP, dead, Election, Electricity, Encounter, Extortion, Faces, gang, Guna, Hide, Hideout, Hijack, Hosoor, Hosur, HR, ICF, Illicit, Karnataka, Kidnap, kidnappping, Kumaran, Law, Leaders, Liquor, Maalaikan, Maalaikkan, Madras, Minister, MLA, Money, Movies, Murder, Murugan, Murukan, N Veerasamy, Nanjil, Nanjil Kumaran, National Highway, Neta, Netha, nexus, NH, Order, Osur, people, Peramboor, Perambur, Police, Poll, Raichoor, Raichur, Rajaram, ransom, Ravi, Rich, rights, Rowdy, Santhapuram, Selvam, Selvaraghavan, Shakeel, Story, TASMAC, Toddy, Veerachami, Veerachamy, Veeramani, Veerasami, Veerasamy, Vellai, Vellai Ravi, Venkatasaami, Venkatasaamy, Venkatasami, Venkatasamy, Venkatesa Pannaiyaar, Venkatesa Pannaiyar, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayakumar, Vijaykumar, Weapons | Leave a Comment »

Shankar, Rajni & AVM’s Sivaji release details in Puthuseri & Karnataka

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

சினிமா டிக்கெட் வெளியிட்ட புதுவை முதல்வர்

ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தின் டிக்கெட்டை புதன்கிழமை வெளியிடுகிறார் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி (வலது). உடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

புதுச்சேரி, ஜூன் 14: புதுச்சேரியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாக ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான சிவாஜி பட டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இந்த இரு கோஷ்டியினரின் டிக்கெட்டுகளையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் பிரபலமான நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதும் ரசிகர் மன்றக் காட்சியின்போதும் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இதனை அடுத்து புதுச்சேரி திரையரங்குகளில் ரசிகர் மன்றக் காட்சிகளைத் தடை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

ஆனால் பெரும் வரவேற்புடன் வரும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று திரையரங்குகளில் சிவாஜி படம் வெளியாவதால் ஆங்காங்கே கட்-அவுட்கள், பேனர்கள் என்று வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் புதுச்சேரியில் புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு கோஷ்டியாகவும், புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றனர்.

நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கூறுகின்றனர். நாங்கள்தான் முறையாகத் தலைமையின் உத்தரவுப்படி செயல்படும் அமைப்பு என்று புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சிவாஜி படம் திரையிடப்படும் மூன்று திரையரங்குகளிலும் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரஜினிசங்கர் உள்ளிட்டோர் வந்து ஒரு திரையரங்குக்கான ரசிகர் மன்றக் காட்சிக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனை புதுவை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து புதுவை மாநில அனைத்து ரஜினிகாந்த் மன்றங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானேவேல், கோபி, காமராஜ் உள்ளிட்டோர் மற்றொரு குழுவாக வந்து மற்ற இரு திரையரங்குகளின் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமியே வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இரு தரப்பினரும் ரஜினிகாந்த் திரைடப்படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ரங்கசாமிக்கு மாலை அணிவித்தனர்.

ரஜினிகாந்த் ரசிகர்கர்கள் திரையரங்கில் சேர்களை உடைத்தல், திரைகளை கிழித்தல், குறிப்பிட்ட காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்ப திரையரங்கு ஊழியர்களை வற்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ரசிகர் மன்றங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் ரசிகர் மன்றக் காட்சி டிக்கெட்டுகளின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

——————————————————————————
சிவாஜி திரைப்படத்தை கர்நாடகத்தில் நான்கு தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம்: கன்னட சங்கத் தலைவர் அறிவிப்பு

பெங்களூர், ஜூன் 14: நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தை கர்நாடகத்தில் 4 தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரக்ஷணா வேதிகே அறிவித்துள்ளது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ~ ஷ்ரேயா நடித்த “சிவாஜி’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் உலகம் முதல் திரையிடப்படுகிறது.

சங்கர் இயக்கத்தில் இப்படம் பல கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருப்பதால் இப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை கன்னட சங்கங்கள் சில மாதங்களாக தடுத்து வந்தன.

இதையும் மீறி தமிழ் படம் திரையிட்ட திரையரங்குகள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

அண்மையில்தான் தமிழ்ப்படங்கள் கர்நாடகத்தில் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது.

இந் நிலையில் சிவாஜி படத்தை திரையிட கர்நாடகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இவர்களது படங்கள் திரையிடப்படும்.

ஆனால் சிவாஜி படத்தை கர்நாடகம் முழுவதும் நான்கு தியேட்டர்களிலேயே திரையிட வேண்டும் என்று கன்னட ரக்ஷணா வேதிகே கூறி வருகிறது.

இதுகுறித்து ரக்ஷணா வேதிகேயின் தலைவர் நாராயண கெüடா கூறியதாவது:

பிறமொழிப்படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது சில கட்டுப்பாடுகளை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ளது.

இதன்படி கர்நாடகத்தில் திரையிடப்படும் கன்னடம் அல்லாத பிற மொழிப்படங்களை நான்கு தியேட்டர்களில் மட்டுமே திரையிட வேண்டும்.

மேலும் சுவரொட்டிகள் கன்னடத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு ஒட்டப்பட வேண்டும். இதுபோல் பிற விளம்பரங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் கன்னடத்திலேயே வெளியிடப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகள்படி ரஜினிகாந்த் படத்தை திரையிட நாங்கள் எதிர்க்கவில்லை.

இதை மீறி பல தியேட்டர்களில் திரையிட்டால் அந்த தியேட்டர்களில் படச்சுருளை கன்னட ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் பறிமுதல் செய்வர்.

இயக்குநர் சங்கரின் 23-வது புலிகேசி திரைப்படம் கர்நாடகத்தைச் சேர்ந்த புலிகேசி மன்னனை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

இதனால் இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட நாங்கள் அனுமதிக்கவில்லை.

அதுபோல் சிவாஜி திரைப்படத்திலும் ஏதாவது ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால் அதற்கு எங்களது எதிர்ப்புகளைத் தெரிவிப்போம்.

இதற்காக ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் டிக்கெட் எடுத்து தியேட்டருக்குச் சென்று கண்காணிப்பார்கள் என்றார் அவர்.

13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை: இதற்கிடையே சிவாஜி படத்தை பெங்களூரில் 13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 13 தியேட்டர்களிலும் வியாழக்கிழமை முன்பதிவு செய்யப்படுகிறது.

Posted in ARR, AVM, Bangalore, Cauvery, Cinema, Fans, Films, Kannada, Karnataka, Kaviri, Movies, Mysore, Pondicherry, pondichery, Pondy, Pondycherry, Previews, Pudhucherry, Puducherry, Puthucehrry, Puthucherry, Puthuchery, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Rehman, release, River, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Sreya, Sriya, State, Theaters, Theatres | 2 Comments »

Other backward castes – Information & Statistics on various Indian State Population

Posted by Snapjudge மேல் மே 8, 2007

உ.பி.யில் 7 கோடி பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

புதுதில்லி, மே 8: உத்தரப்பிரதேச மாநில மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 7 கோடி என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பிகார்,
  • ஆந்திரம் மற்றும் கர்நாடகம்
  • ஆகிய மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை தலா 3 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவலின்படி இந்த புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில பஞ்சாயத்து ராஜ் அமைப்பு 2001-ம் ஆண்டு மேற்கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநில மக்கள்தொகையில் 7 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 83 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஆந்திரத்தில் 1986-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரத்து 924 என அவர் தெரிவித்தார்.

பிகாரில் 1994-ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் இயக்குநரகம் மாவட்டவாரியாக மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 3 ஆயிரத்து 226.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 88 லட்சத்து 7 ஆயிரத்து 652, கர்நாடகத்தில் 3.61 கோடி, மத்தியப் பிரதேசத்தில் 1.84 கோடி பேர் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில் 1.21 கோடி, அந்தமான் நிகோபர் தீவுகள், தாத்ரா- நாகர் ஹவேலி மற்றும் திரிபுரா ஆகியவற்றில் முறையே 1.54 கோடி, 2966 மற்றும் 6.74 லட்சம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.

  • அருணாசல பிரதேசம்,
  • மிஜோரம்,
  • நாகாலாந்து,
  • லட்சத்தீவுகள் ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லை.

மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அளிக்கவில்லை என்றும் அவர் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Andaman, Andhra, Andhra Pradesh, AP, Arunachal, Arunachal Pradesh, backward, Bengal, Bihar, Castes, Census, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Community, Dadra Nagar Haveli, Demographics, Demography, Empowerment, Goa, Information, Justice, Karnataka, Lakshadweep, MBC, Mizoram, Nagaland, Nicobar, OBC, Panchayat, Population, Reservation, SC, Social, ST, State, Statistics, Stats, Tripura, Union Terrirtory, UP, UT, Uttar Pradesh, Welfare, West Bengal | 1 Comment »

Supreme Court upholds ban on Kannada book

Posted by Snapjudge மேல் மே 7, 2007

புத்தகங்களையும் பத்திரிகைகளையும் தடை செய்ய அரசுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புது தில்லி, மே 7: பொதுநலனைச் சீர்குலைக்கும் வகையில் உள்ள புத்தகம், பத்திரிகை ஆகியவற்றைத் தடை செய்யவும், பறிமுதல் செய்யவும் அரசுக்கு உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் பி.பி. சிங், எச்.எஸ். பேடி இந்த வழக்கை விசாரித்தனர்.

வழக்கு என்ன? கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பி.வி. நாராயணா என்பவர், “தர்மகாரணா” என்ற நாவலை எழுதியிருந்தார். அது கர்நாடகத்தில் 12-வது நூற்றாண்டில் வாழ்ந்த பசவேஸ்வரர் என்ற அவதார புருஷரைப் பற்றியது. பசவண்ணா என்றும் அவரை அழைப்பர். அதில் இருந்த சில பகுதிகள் பசவண்ணாவின் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து கர்நாடக அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95-வது பிரிவின் கீழ், அந்த புத்தகத்துக்கு தடை விதித்தது. நாராயணாவும் வேறு சிலரும் இந்தத் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அரசின் முடிவு சரியே என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. பிறகு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அரசியல் சட்டம் தங்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளான எழுத்துரிமை, கருத்து உரிமை ஆகியவை இத் தடையால் மறுக்கப்பட்டிருப்பதாக வாதிட்டனர்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: “தடை செய்யப்பட்ட புத்தகத்தைப் படித்துப் பார்த்தோம். தேவை இல்லாமலும், போதிய ஆதாரம் இல்லாமலும் சில விஷயங்கள் நாவலில் கூறப்பட்டுள்ளன.

தனி மனித உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்பது உண்மையே என்றாலும், பொது நலனை கட்டிக்காக்க வேண்டிய முக்கிய கடமையும் அதற்கு இருக்கிறது. எனவே பொது நலனை காப்பதற்காக, தனி நபர் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதும் தடுப்பதும் தவிர்க்க முடியாததாகிறது.

இந்த நாவலையே திருத்தி எழுதினால் வெளியிட அனுமதிக்கத் தயார் என்று கூறிய பிறகும், நாவலாசிரியர் செய்த மாற்றங்கள் வெறும் ஒப்புக்காகத்தான் என்பது புலனாகிறது. எனவே புத்தகத்துக்கு அரசு விதித்த தடை செல்லும்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

Posted in Akkanagamma, Ban, Basavana, Basavanna, Book, Censor, Channabasaveshwara, Court, Criminal, Culture, Dharmagaarana, Dharmakaarana, Dharmakarana, Freedom, Government, Govt, Judges, Jury, Justice, Kannada, Karnataka, Law, minority, Moral, Newspapers, offense, Offensive, Order, Police, Protest, publications, SC, Secular, Tharmagarana, Tharmakaarana, Tharmakarana, Values | Leave a Comment »

Hubli clashes between two communities – 40 arrested

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

ஹூப்ளியில் இரு சமூகத்தவர் இடையே மோதல், கல்வீச்சு: 40 பேர் கைது

ஹூப்ளி, மார்ச் 27 ஹுப்ளி அருகே இருவேறு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதல், கல்வீச்சு தொடர்பாக 40 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

ஹூப்ளி மாவட்டம், காமேரிபேட் காவல் சரகம், டார்வி ஹக்கல் பகுதியில் பண்ணி மகாகாளி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மகோட்சவ திருவிழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அந்த இன்னிசை நிகழ்ச்சியில் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கலந்துகொண்டார். அதற்கு அங்கிருந்த சில சமூக விரோதிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட நபர் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ஆத்திரம் அடைந்த அக்கும்பல், மேடையின் பின்புறத்தில் இருந்து எதிரே இருந்த குறிப்பிட்ட சமூகத்தினர் மீது கற்களை வீசித் தாக்கினார்களாம்.

இதையடுத்து இரு சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் சரமாரித் தாக்கிக்கொண்டனர். மேலும் அங்கிருந்த வாகனங்களும் கல்வீசித் தாக்கப்பட்டன.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸôர், வன்முறையில் ஈடுபட்டோர் மீது தடியடி நடத்தி அமைதியை ஏற்படுத்தினர்.

இச்சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கர்நாடக மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (கிம்ஸ்) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இருசமூகத் தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டு மோதல் போக்கை கைவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Posted in Arrest, clash, Community, Festival, Hindu, Hinduism, Hubli, Karnataka, Law, Order, Police, Temple | Leave a Comment »

B Kanagaraj: Border dispute between Karnataka & Maharashtra – Belgaum: Analysis, History, Backgrounder

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

சிக்கலாகும் எல்லைப் பிரச்சினை

பி. கனகராஜ்

கர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது.

பெல்காம் மட்டுமல்ல; நமது நாட்டின் பல மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

வரலாற்றிலேயே முதன்முறையாக கர்நாடக சட்டமன்றத்தின் கூட்டம் தலைநகரான பெங்களூரை விட்டு பெல்காமில் கூட்டப்பட்டது. கர்நாடக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெல்காமை கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் சட்டமன்றக் கூட்டத்தை இங்கு கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்குப் போட்டியாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் அமைப்பான “மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி’ ஒரு எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தியது. மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இவ்வாறு பெல்காம் எல்லைப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிடையே அரசியல் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.

கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முக்கோணமாக பெல்காம் மாவட்டம் உள்ளது. “மூங்கில் கிராமம்’ என்ற பொருள்படும் சமஸ்கிருதப் பெயரைப் பெற்றிருக்கும் பெல்காம் 1956ஆம் ஆண்டு வரை மராட்டியர்கள் அதிகம் வாழ்ந்த பம்பாய் மாநிலத்தில்தான் இருந்தது.

பஸல் அலி கமிஷன் பரிந்துரையால் ஏழாவது அரசியல்சாசன திருத்தச் சட்டம் மொழிவாரி மாநில சீரமைப்பை அமல்படுத்தியதால் பெல்காம் மாவட்டம் அண்டை மாநிலமான மைசூருக்கு வழங்கப்பட்டது.

அன்று முதல் இன்றுவரை “மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ பெல்காம் மீட்பு போராட்டத்தை மராட்டியர்களுக்காக நடத்தி வருகிறது. மராட்டியர்களின் “சம்யுக்த மஹாராஷ்டிரம்’ என்ற நீண்டகால கனவின் முக்கிய துருவமாக பெல்காம் உள்ளது.

“மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இம்மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளிலும் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. பெல்காம் மாநகராட்சி மன்றம் சென்ற ஆண்டு மகாராஷ்டிரத்துடன் இணைய தீர்மானம் இயற்றியது. எரிச்சலுற்ற கர்நாடக மாநில அரசு மாநகராட்சி மன்றத்தையே கலைத்து விட்டது.

இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே இப் பிரச்சினை வெடிப்பதற்கு மொழி, பொருளாதார, மற்றும் கலாசார காரணங்கள் உள்ளன. மராட்டியர்கள் தற்போது தங்களது கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவதற்கு கர்நாடக மாநில அரசின் மொழிக் கொள்கை முக்கியக் காரணமாகும்.

கர்நாடகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கன்னட மொழியில் கட்டாயமாக பாடம் போதிக்கப்பட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பெல்காமில் பெரும்பான்மையாக உள்ள மராட்டியர்கள் கன்னட மொழித் திணிப்பை எதிர்க்கின்றனர்.

நமது அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மொழியினருக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று மாநிலங்களை அறிவுறுத்துகிறது. கர்நாடக அரசின் மொழிக்கொள்கை அரசியலமைப்புச் சட்டத்தின் இப்பிரிவை மீறுவதாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் எதிர்க்கின்றனர். மராட்டிய மொழியைப் பாதுகாக்க போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

பொருளாதாரக் காரணமும் இப்பிரச்சினையைப் பெரிதாக்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பெல்காம் மாவட்டம் இதமான தட்பவெப்ப நிலையில் அமைந்துள்ளது. விவசாய வளத்தைப் பெற்றுள்ள இம்மாவட்டம் கரும்பு உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவேதான் விவசாய ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பெல்காமை மகாராஷ்டிரத்துடன் இணைக்க மராட்டியர்கள் விரும்புகின்றனர்.

இரண்டு மாநிலங்களும் பெல்காமின் மேல் விருப்பம் காட்டுவதற்கு பெல்காமின் கல்வி வளர்ச்சியும் ராணுவ முக்கியத்துவமும் காரணமாக உள்ளன. பெங்களூருக்கு அடுத்தபடியாக கல்வி வளர்ச்சி பெற்ற நகரம் பெல்காமாகும். மேலும் இந்திய ராணுவத்தின் பல பயிற்சி மையங்கள் இங்கு உள்ளன. இதனை “தரைப்படையின் தொட்டில்’ என்றே பலர் வர்ணிக்கின்றனர்.

ஆகவே மகாராஷ்டிரம் இம்மாவட்டத்தைப் பெறுவதற்கு ஆரம்பம் முதலே தீவிரம் காட்டி வருகிறது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநில சீரமைப்புச் சட்டம் அமலானபோது உருவான குழுவின் முன் தனது கோரிக்கையை வைத்தது. மேலும் 1966ம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாஜன் தலைமையில் நடுவர் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. ஆனால் மகாஜன் குழு தனது பரிந்துரையில் பெல்காம் மாவட்டம் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டது.

இம்மாவட்டத்தில் மகாராஷ்டிரம் கோரும் 864 கிராமங்களில் 264 கிராமங்களை அதற்கு வழங்க இக்குழு பரிந்துரை செய்தது. மேலும் மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடகம் கோரும் 516 கிராமங்களில் 247 கிராமங்களை அதற்கு வழங்கவும் இக்கமிஷன் அறிவுறுத்தியது. இக்கமிஷனின் பரிந்துரைகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டாலும் மகாராஷ்டிரம் நிராகரித்து விட்டது.

இல கார்புசர் என்ற கட்டட வல்லுநரால் நிர்மாணிக்கப்பட்ட, சண்டி என்ற கிராம காவல் தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் சண்டீகர் ஒரு நீண்ட கால எல்லைப் பிரச்சினை ஆகும். 1966ம் ஆண்டு முதல் ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடையே, சண்டீகர் யாருக்குச் சொந்தம் என்பதில் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. சீக்கிய தீவிரவாதிகள் காலிஸ்தான் என்ற தனி நாடு கோரியபோது சண்டீகர் நகரம் அரசியல் சச்சரவின் மையமாக இருந்தது. தற்போது தீவிரவாதம் தணிந்து போனாலும் பஞ்சாபியர்களின் நீண்ட கால ஏக்கமாகவே உள்ளது சண்டீகர் நகரம்.

கர்நாடகத்தில் உள்ள மங்களூரை கேரளம் கோரி வருகிறது. கேரளத்தில் உள்ள காசர்கோடு பகுதியை கர்நாடகம் கோருகிறது.

அண்மையில்கூட அசாம் மற்றும் அதனுடைய அண்டை மாநிலங்களில் இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க ஒரு கமிஷனை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பரஸ்பர பேச்சுவார்த்தைதான் சரியான வழிமுறைகளாகும். விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இப்பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும். விடவும் மாட்டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற குறுகிய மனப்பான்மையுடன் மாநிலங்கள் செயல்படக் கூடாது. பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

“கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற உயரிய கொள்கையை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. தேசிய வலிமைக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் அமைதிக்கும் இக் கொள்கை அவசியமானதாகும்.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், அரசியல் அறிவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோவை).

Posted in Analysis, Backgrounder, Belgaum, Bombay, Border, British, Chandigarh, Civic body, Climate, Commerce, Conflict, Coop, Cooperative, Defense, Dispute, Economy, Education, Facts, Goa, Growth, Haryana, History, India, Industry, Issues, Kannada, Karnataka, Kasargode, Kerala, Khalisthan, Language, Mahajan, maharashtra, Mangalore, Marathi, Military, Mumbai, Municipality, Op-Ed, Province, Punjab, Race, Region, Research, Rural, Society, State, Unity, Village | Leave a Comment »

Rich deposits of gold found by Australian company in Rajasthan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

ராஜஸ்தானில் 3.85 கோடி டன் அளவுக்கு மாபெரும் தங்கப் படிவம் கண்டுபிடிப்பு

ஜெய்பூர், பிப். 22: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில், 3.85 கோடி டன் அளவுக்கு மாபெரும் தங்கப் படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கப் படிவ ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள, இன்டோ கோல்டு மைன்ஸ் (ஐஜிஎல்) லிமிடெட் என்ற ஆஸ்திரேலிய தனியார் நிறுவனம் இதைக் கண்டுபிடித்துள்ளது.

அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக் ஹிக்கின்ஸ் ஜெய்பூரில் நிருபர்களிடம் புதன்கிழமை இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

பன்ஸ்வாரா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கம் உலகத் தரம் வாய்ந்தது. அங்கு ரூ.2,000 கோடியில், நவீன தொழில்நுட்பத்துடன் தங்கச் சுரங்கம் அமைக்கப்படும். இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் அங்கு ஆண்டுக்கு 8 டன் வீதம் தங்கம் வெட்டி எடுக்கும் பணி துவக்கப்படும்.

தங்கச் சுரங்கம் அமைக்கும் பணியில், மெட்டல் மைனிங் இந்தியா (எம்எம்ஐ) பிரைவேட் லிமிடெட் என்ற இந்திய நிறுவனத்துடன் இணைந்து எங்கள் நிறுவனம் கூட்டாகச் செயல்படும்.

தங்கச் சுரங்கம் அமைப்பதற்காக மொத்தம் 2,135 சதுர கி.மீ. நிலப் பரப்பு எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும் அனுமதி அளித்துவிட்டது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ராயல்டி தொகையால் ராஜஸ்தான் மாநில அரசுக்கு பயன் கிடைக்கும் என்றார் மைக் ஹிக்கின்ஸ்.

தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக கோலார் தங்கச் சுரங்கம் கடந்த 2003-ல் மூடப்பட்டது. அதற்குப் பிறகு இந்தியாவில் தங்க உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.

Posted in Australia, Banswara, Brisbane, Deposits, Gold, Hutty, Indo Gold, Jagpura, Karnataka, Kolar, Metal Mining India, Minerals, mines, Rajasthan, Raw Materials | Leave a Comment »

Ganga-Cauvery water inter-linking – National River Integration

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

கங்கை-காவிரி இணைப்பு-பலிக்குமா பாரதியின் கனவு?

இராமசாமி

“”இந்திய நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், கங்கை – காவிரி இணைப்பு என்பது இன்னும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது.

செயற்கைக்கோள் படங்களை வைத்து இக் கட்டுரையாளர் மற்றும் அவருடைய ஆராய்ச்சி மாணவர்களும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொலையுணர்வு மையத்தில் இந்திய விண்வெளி நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடத்திய ஆய்வுகளின்படி, காவிரி நதி சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒக்கேனக்கல்லில் இருந்து (1) வடகிழக்காக தர்மபுரி-ஆம்பூர்-வாணியம்பாடி-வாலாஜாபேட்டை-திருவள்ளூர் வழியாக ஓடி, சென்னைக்கு வடக்கே கடலில் கலந்தது தெரியவருகிறது.

அப்போது சென்னைப் பகுதியில் பூமி மேலே எழும்பிய காரணத்தால் இப்பாதையை, காவிரி விட்டு விட்டு தற்போது மேட்டூர் அணையிருக்கும் இடத்திலிருந்து தோப்பூர் ஆறு – வாணியாறு(2) – பொன்னையாற்றின் தற்போதைய பாதை(3) வழியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடி கடலூர் பகுதியில் கடலில் கலந்திருக்கிறது.

இக்கால கட்டத்தில், அடிக்கடி ஏற்பட்ட கடல் அலைகளின் சீற்றத்தாலும், மேலும் இன்றைய மேட்டூர் அணையிலிருந்து ஈரோடு வழியாக வடக்கு – தெற்காக ஒரு பெரிய பூமி வெடிப்பு (4) உருவான காரணத்தாலும், இந்த இரண்டாவது பாதையையும் விட்டுவிட்டு, தற்போதைய மேட்டூர் அணைப்பகுதியில் இருந்து தெற்காகத் திரும்பி அப்பூமி வெடிப்பின் வழியாக ஓடி, கரூர் – திருச்சி பகுதியை சுமார் 2300 ஆண்டுவாக்கில் அடைந்து இருக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

பின்னர், திருச்சியில் இருந்து கிழக்காக பல கிளை நதிகளாகப் பிரிந்து ஓடிக் கடலில் கலந்து இருக்கிறது. இக்கிளை நதிகள் தெற்கே தற்போது உள்ள புதுக்கோட்டை வெள்ளாறு(5), அம்புலியாறு, அக்னியாறு பகுதிகளில் இருந்து வடக்கே தஞ்சாவூர், கும்பகோணம், பூம்புகார் வரை வியாபித்து ஓடியிருக்கிறது.

தற்போதுள்ள கொள்ளிடம் (6) பாதையின் வயது சுமார் 750 ஆண்டுகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பகுதியில் ஓடிய காவிரி கொஞ்சம் கொஞ்சமாக தெற்கே புதுக்கோட்டை வரை தடம் மாறி ஓடி, பின் வடக்காகத் திரும்பி கொள்ளிடமாக நிலை பெற்ற பின், காவிரி விட்டுச் சென்ற பழைய பாதைகளைத்தான் பாலாறு, பொன்னை ஆறு புதுக்கோட்டை வெள்ளாறு, அக்னி ஆறு, அம்புலியாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி போன்ற பல நதிகள் பின்னாளில் ஆக்கிரமித்துக் கொண்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வைகை நதி(7) முன்பு குண்டாறு வழியே ஓடி பின் வடப் பக்கமாகத் திசைமாறி ஓடி, தற்போது ராமேசுவரம் அருகே கடலை அடைகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில், நதிகளை இணைப்பதற்காக மிகப் பெரிய இணைப்புக் கால்வாய்களை வெட்டுவதற்குப் பதிலாக, நிலவியல் மாற்றங்கள், நதிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பல புதையுண்ட நதிகளைப் பயன்படுத்தி இந்திய நதிகளை இணைக்கலாம் என்று இவ்வாய்வு கூறுகிறது.

ஏனெனில், இப்புதையுண்ட பாதைகளைத் தேர்ந்தெடுப்பதால் குறைந்த அளவே ஆழப்படுத்தும் பணி தேவைப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் புதிய கால்வாய்களை உருவாக்குவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகளும் இருக்காது.

மேலும் இப்புதையுண்ட பழைய பாதைகள், ஏற்கெனவே நதிகள் ஓடும் பாதைகளாக இருந்ததனால், எளிதாக புதிய நீர்வளத்தை ஏற்றுக்கொள்ளும். வெள்ளமோ அல்லது சுற்றுப்புறச்சூழல் கேடோ ஏற்படுத்தாது. ஆகவே இவ்வாய்வின் மூலம் முதற்கட்டமாக எவ்வாறு தமிழக நதிகளை இணைக்க முடியும் என்ற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அ. ஒக்கேனக்கல் பகுதிகளில் காவிரியில் வரும் வெள்ளத்தை சென்னைக்கு காவிரியின் பழைய புதையுண்ட பாதை(1) வழியாகக் கொண்டு செல்லுதல்.

1. ஒக்கேனக்கல் – வாணியம்பாடி இடையே சுரங்கப்பாதை (8) ஏற்படுத்தி காவிரி நீரைக் கொண்டு செல்லுதல்.

2. வாணியம்பாடி – வாலாஜாபேட்டை இடையே பாலாற்றில் (9) காவிரி நீரை ஓடச் செய்தல்

3. வாலாஜாபேட்டை வரை பாலாற்றில் கொண்டு வந்த காவிரி நீரை வாலாஜாபேட்டைக்கு கிழக்கே ஒரு தடுப்பு அணையைக்கட்டி நீரின் ஒரு பகுதியை வாலாஜாபேட்டை – திருவள்ளூர் – சென்னை வரை, காவிரியின் புதையுண்ட பாதையை (10) சற்று ஆழப்படுத்தி, அதன் வழியாகக் கொண்டு செல்லுதல். மீதி காவிரி நீரை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியின் மேம்பாட்டிற்காக பாலாற்றில் ஓடச் செய்தல்.

ஆ. ஒக்கேனக்கல்லில் இருந்து – சென்னைக்கு காவிரி நீரைக் கொண்டு செல்ல மாற்று வழிப்பாதை

4. மேற்கூறிய (பகுதி அ-வில் கூறப்பட்டவை) இணைப்பு சாத்தியமில்லையெனில் கீழ்க்கண்ட மாற்று வழியைப் பயன்படுத்தலாம். மேட்டூர் நீர்த் தேக்கத்திற்கு கிழக்காக காவிரியின் பழைய பாதையில் தற்போது ஓடும் தொப்பூர் ஆறு மற்றும் வாணியாறுகளை (2) சிறிது ஆழப்படுத்தி, காவிரியின் நீரை மேட்டூர் அணையிலிருந்து சாத்தனூர் நீர்த்தேக்கத்துக்குக் (11) கொண்டு செல்லுதல்.

5. சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 8 – 10 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கே அமைந்துள்ள முட்டனூர் வரை ஒரு கால்வாய் அமைத்து, காவிரி நீரை செய்யாற்றுக்கு கொண்டு சென்று செய்யாற்றில் (12) ஓடச் செய்தல்.

6. இவ்வாறு செய்யாற்றுக்கு கொண்டு வந்த காவிரி நீரை, பூனாம்பலம் அருகே செய்யாற்றில் ஒரு தடுப்பு அணையைக் கட்டி, அதோடு பூனாம்பலத்தில் இருந்து வடக்கே வாலாஜாபேட்டை (8) வரை ஒரு கால்வாயை சுமார் 10 – 12 கிலோ மீட்டருக்கு (13) அமைத்து, காவிரி நீரை பாலாறுக்கு கொண்டு செல்லுதல். வாலாஜாபேட்டையில் இருந்து இந்நீரை திருவள்ளூர் – சென்னை வரை காவிரியின் பழைய பாதையில் கொண்டு செல்லுதல்.

7. சாத்தனூர் அணையிலிருந்து (11) மீதம் உள்ள காவிரி நீரை பொன்னையாறு (3) வழியாகக் கொண்டு சென்று விழுப்புரம் பகுதியை வளமுறச் செய்தல்.

இ. காவிரியை புதுக்கோட்டை வெள்ளாற்றோடு இணைத்தல்

8. எஞ்சியுள்ள காவிரி வெள்ள நீரின் ஒரு பகுதியை, திருச்சி – முக்கொம்பு அருகே ஒரு சிறிய தடுப்பு அணையை அமைத்து, முக்கொம்பு – வெம்பனூர் இடையே காணப்படும் காவிரியின் புதையுண்ட ஒரு கிளை நதி வழியாகக் கொண்டு சென்று, புதுக்கோட்டை வெள்ளாறு (5) வழியாக ஓடச் செய்து, வறட்சிப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தின் நீர் வளத்தை மேம்படுத்துதல்.

ஈ. காவிரியை அம்புலியாறு – அக்னியாறோடு இணைத்தல்

9. மேற்கூறியவாறே, திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே மேலும் ஒரு தடுப்பு அணையை அமைத்தோ அல்லது கல்லணையைப் பயன்படுத்தியோ கல்லணைக்கு தெற்கே காணப்படும் காவிரியின் புதையுண்ட இக்கிளை நதிகளின் வழியாக காவிரி நீரை புதுக்கோட்டை வெள்ளாற்றிற்கு வடக்கே உள்ள காவிரியின் புதையுண்ட கிளை நதிகளில் தற்போது ஓடும் அக்னியாறு மற்றும் அம்புலியாறுக்கு திருப்பி விடுதல்.

உ. தஞ்சை வண்டல் பகுதியில் நீர் வளத்தை மேம்படுத்துதல்

10. மேலும் தஞ்சை பகுதிகளில் காவிரியின் புதையுண்ட பழைய கிளை நதிகளில் தற்போது ஓடும் வெண்ணாறு, வெட்டாறு, அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆறுகளை ஆழப்படுத்தி காவிரி வெள்ள நீரின் வரத்தை அதிகம் செய்து நீர்வள மேம்பாடு செய்தல்.

ஊ. காவிரியை மணிமுத்தாறு – வைகையோடு இணைத்தல்

11. புதுக்கோட்டைக்கு மேற்கே வேம்பனூர் அருகே புதுக்கோட்டை வெள்ளாற்றில் ஒரு தடுப்பு அணையை அமைத்து, வேம்பனூர் – பொன்னமராவதி – சேந்தலப்பட்டி வழியாக மதுரைக்கு வடமேற்கு வரைக்கும் கால்வாய் அமைத்து (14), காவிரியை வைகையாறோடு இணைத்து, அந்நீரை வறட்சி மாவட்டங்களான சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் காணப்படும் புதையுண்ட கிளை நதிகளின் மூலம் கொண்டு சென்று அம்மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரி/ குளங்களில் சேமித்து நீர் வளத்தை மேம்படச் செய்தல்.

12. தேவகோட்டைக்கு மேற்கே சேந்தலப்பட்டியில் இருந்து மேற்கூறிய வேம்பனூர் – பொன்னமராவதி – சேந்தலப்பட்டி – மதுரை கால்வாயில் இருந்து ஒரு பகுதி காவிரி நீரை மணிமுத்தாறில் (15) ஓட வைத்து தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான ஏரி / குளங்களில் சேமித்து நீர் வளத்தை மேம்படச் செய்தல்.

இந்த ஆய்வு தமிழக நதிகளை இணைத்து அதன் மூலம் காவிரியின் மிகுந்து வரும் வெள்ளத்தைக் கடலில் வீணாக்காமல் நீர் வள மேம்பாடு செய்வதில் ஒரு புதிய கண்ணோட்டத்தை வெளிக் கொணர்ந்துள்ளது.

காவிரியின் வெள்ளத்தோடு கோதாவரி, கிருஷ்ணா அல்லது கங்கை போன்ற எந்த ஒரு நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் கொண்டு வந்தாலும் அதன் நுழைவு வாயில் ஒக்கேனக்கல்லாகத்தான் இருக்க வேண்டும் என்பது புவியியல் அமைப்பு கூறும் ஒரு மிகப் பெரிய உண்மை.

அப்போதுதான் தமிழ்நாடு முழுவதும் மேற்கூறியவாறு நீர்வள மேம்பாடு செய்ய இயலும். அதைவிடுத்து, இந்நதி இணைப்புத் திட்டத்தில், கடலோரத்தில் கால்வாய் அமைத்து, பெண்ணாறு – காவிரி இணைப்பு செய்தால், வண்டல் மற்றும் கடலோர மக்கள் மட்டுமே பயன் பெற முடியும். தமிழ்நாட்டின் பெரும்பகுதிகள் பயனடையாது.

இவ்வாறு தமிழக நதிகளை இணைப்பது சாத்தியமானதாக இருப்பதால், புவியியல் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் இணைந்து செயலாற்றி, நதிகள் இணைப்புத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: இயக்குநர் மற்றும் தலைவர், தொலையுணர்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி).

திருப்தி அளிக்காத தீர்ப்பு

ஆர். கருப்பன்

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என்கிற இளங்கோவடிகளின் கூற்று 1974ம் ஆண்டு முதல் இன்றுவரை பலமுறை பொய்த்துக் கொண்டே வந்திருக்கின்றது.

1974ம் ஆண்டு, காவிரி ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என கர்நாடகம் பொய்ப்பிரசாரம் செய்தது. இதை தமிழ்நாட்டுத் தலைவர்களும் நம்பினார்கள்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் வற்புறுத்தலால், கர்நாடக அரசின் விடாப்பிடி போக்கினால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது. அவசியமானால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையோடு வாபஸ் பெறவில்லை எனக் கூறி மீண்டும் வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது என்கிற சட்ட ஆலோசனையால் தமிழகம் தவித்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது தமிழகத்துக்கு 377 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடகம் ஒப்புக்கொண்டது. அதை அன்று ஏற்க மறுத்துவிட்டனர். அதுவும் சரியே. காரணம் தமிழகத்தின் பங்கு 533 டி.எம்.சி.க்கு மேல் எனக் கருதி வந்தோம்.

கர்நாடகம் அதிவேகமாக காவிரி நதி நீரை முழுமையாகப் பயன்படுத்த எண்ணி ரகசியமாக புதிய அணைகளையும், புதிய பாசனத் திட்டங்களையும் தொடங்க ஆரம்பித்தது. மேட்டூருக்கு தண்ணீர் திறந்து விடுவது நின்று போனது. கர்நாடகம் தன் தேவைக்கு மேல் தண்ணீரைத் தேக்கி வைக்க ஆரம்பித்தது. பயிர்களைப் பாதுகாக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கர்நாடக அரசிடம் தமிழக அரசு கெஞ்சுவதும், கர்நாடகம் மறுப்பதும் பின்னர் ஏதோ பிச்சை போடுவது போல சில டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதும் வாடிக்கையாகப் போனது.

கர்நாடகத்தின் போக்கு நியாயத்திற்கும் தர்மத்திற்கும் மாறாக இருப்பதும் அதனால் தமிழக விவசாயிகள் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாவதையும் பொறுக்க இயலவில்லை. 1924ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் கர்நாடகம் புளுகிவருவதுபோல காலாவதியாகவில்லை என்பது புலனானது.

1924ம் ஆண்டின் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் அனைத்துலக நதிநீர்ச் சட்டத்தின்படி, உருவெடுக்கும் நாட்டிற்கு மட்டும் நதி சொந்தமில்லை. அது ஓடிப் பாய்ந்த கடைசி நாடு வரை பங்கு கோரலாம் என்ற விதி நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தக் காரணங்களை முன்னிறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் 1983ம் ஆண்டு முதல் கர்நாடகம் முரண்டு பிடிக்கும் போதெல்லாம் வழக்குத் தொடுத்து வந்தேன். காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததுபோல் மேட்டூருக்கு தண்ணீர் வருவதும், வழக்கு தள்ளுபடியாவதும் வழக்கமானது.

இத்தகைய சூழலில் 1988ம் ஆண்டு ஒரு பொது நல வழக்கைத் தொடுத்தேன். கர்நாடகம் இம்முறை இசைந்து வரவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசை திருப்பி அனுப்பிவிட்டு, விசாரணையின்போது ஆஜராக மறுத்துவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சினை குறித்து நதிநீர்த் தீர்ப்பாயம்தான் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கர்நாடகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மறுவிசாரணைக்குள் அவசர அவசரமாக கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என வேண்டியது. அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு வழக்கு தில்லிக்கு மாற்றப்பட்டது.

காவிரி வழக்கு புத்துயிர் பெற்றது. தமிழக அரசும் இவ்வழக்கில் ஆர்வம் காட்டியது. இதையடுத்து எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பாயத்தில் முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் முடிவெடுத்து, தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தீர்ப்பாயம் பல்வேறு நிலைகளை ஆய்வுசெய்து 1991-ம் ஆண்டு தனது இடைக்கால உத்தரவை வெளியிட்டது.

கர்நாடக சட்டமன்றம் கூடி, காவிரி தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவை ஏற்கமறுத்து அதை ரத்துசெய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு என்கிற அவசரச் சட்டத்தையும் பிறப்பித்தது.

தீர்ப்பாயம் இந்திய அரசியலைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது. அதில் அங்கம் வகித்தவர்கள் நீதிபதிகள்.

இந்நிலையில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தது. கர்நாடக அரசியல்வாதிகள் ஒருமித்த குரலில், தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்கிற அறிவிப்பினை வெளியிட ஆரம்பித்தனர்.

உறுதியான நீர்வரத்து 50 சதவீதம் என்கிற அடிப்படையில் பங்கீடு செய்துள்ளதாக தீர்ப்பாயம் கூறியுள்ளது. முழு அளவு நீர் அதாவது 100 விழுக்காடு அளவு வந்தால் உபரியாக வரும் 50 சதவீதம் அளவு நீர் கர்நாடகத்திற்கு அல்லவா போய்ச் சேரும். அது எப்படி நியாயமாகும்?

சரி தீர்ப்பாயப்படி தமிழகத்திற்குத் தேவையான அளவு வெறும் 200 டி.எம்.சி. அளவுதான் என்றாலும் உபரியான 350 டி.எம்.சி. நதிநீர் தமிழகத்தின் பங்கு அல்லவா? 1976 முதல் 2007 வரை கணக்கிட்டு காவிரிப்படுகை விவசாயிகளுக்கு வழங்கிட உத்தரவிட்டிருக்க வேண்டுமல்லவா?

தமிழகத்தின் நீரை கர்நாடகத்திற்கு தீர்ப்பாயம் தாரை வார்ப்பது கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல் அல்லவா இருக்கிறது.

கர்நாடகம் ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கால் தமிழகத்துக்கு நேரிட்ட சேதத்துக்கு இழப்பீடு ஏதும் கொடுக்காதது ஏன்?

1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி புதிதாக விவசாயத்திற்கு கொணர்ந்த நன்செய் நிலங்களில் சாகுபடி செய்யக் கூடாது என உத்தரவு கோரியிருந்த வேளையில், புதிய நன்செய் சாகுபடியை கர்நாடகம் ஆமோதித்தது. அத்துடன் அத்துமீறி புன்செய் சாகுபடியையும் விரிவுபடுத்தியது.

அதே தருணம் தமிழகத்தில் விரிவுபடுத்திய புதிய சாகுபடி நிலங்களைப் பயிரிட வேண்டாம் என்றல்லவா கூறிவிட்டது. இதன் மூலம் தெளிவாவது என்னவென்றால், காவிரியின் நீர்வரத்து 1000 டி.எம்.சி. அளவுக்கு இருக்கும்; அதை வேண்டுமென்றே குறைவாக மதிப்பிட்டு மிகக் குறைவான பங்கீட்டை தமிழகத்திற்கு கொடுக்க நடந்த மோசடி நாடகத்தின் முடிவுதான் இறுதித் தீர்ப்பு.

தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு நம்முடைய எழுச்சியையும், எதிர்ப்பையும் கர்நாடகத்துக்கு காட்ட வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்க வழிபிறக்கும்.

ஆரம்ப நாள் முதலே கர்நாடகம் செய்வது அடாவடித்தனம்; சட்டரீதியான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை; நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டேன்; அதைத் தள்ளுபடி செய்து விட்டோம் எனப் பிரகடனப்படுத்துவது, கர்நாடக வாழ் தமிழர்களுக்கு எதிராக தாக்குதலை கட்டவிழ்த்துவிடுவது. இவற்றையே கர்நாடகம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

எனவே உரிய நிவாரணங்களைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனே வழக்குத் தொடர வேண்டும். தீர்ப்பாயத்திடம் மறு ஆய்வுக்குச் செல்லுவதால் எந்தப் பலனும் நேராது. வெறும் கால இழப்புதான் மிஞ்சும். தவறான தீர்ப்பை மறு ஆய்வு என்கிற பேரால் எந்தத் தீர்ப்பாயம் திருத்தி எழுதும்?

முன்போல் காவிரிப்படுகை விவசாயிகளின் பிரதிநிதிகள், தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தள்ளுபடி செய்து, அவர்கள் கோரிய நிவாரணம் வேண்டும் எனத் தனியாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்).

——————————————————————————-

சிக்கலில் சிந்து நதிநீர் ஒப்பந்தம்

எம். மணிகண்டன்

சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீர்ப்பங்கீடு குறித்த உடன்பாடு 1960-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டபோது, அத்துடன் இருநாடுகளுக்கு இடையே நிலவிவந்த நீர்ப்பங்கீட்டு பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகவே அனைத்துத் தரப்பினரும் நினைத்தனர். ஆனால் 1980க்குப் பிறகு எழுந்த நவீன காலப் பிரச்னைகள் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சிந்து மற்றும் அதன் கிளை நதிகளான

* ஜீலம்,
* சீனாப்,
* பியாஸ்,
* ரவி,
* சட்லெஜ்

ஆகியவற்றில் மேற்கு பக்கம் இருக்கும் சிந்து, ஜீலம், சீனாப் ஆகியவை பாகிஸ்தானுக்கும், மற்ற மூன்று நதிகள் இந்தியாவுக்கும் “உரிமையானவை’ என சிந்து நதிநீர் ஒப்பந்தம் கூறுகிறது.

இந்த நதிகளின் போக்கை மாற்றாமல் அணைகளைக் கட்டிக் கொள்ளலாம் எனவும் இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது. வளர்ச்சிப் பணிகளைக் காரணம் காட்டி பாகிஸ்தான் உரிமை பெற்ற நதிகளின் குறுக்கே இந்தியா அணைகளைக் கட்டுவதும், அதற்குப் பாகிஸ்தான் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஜீலம் நதியில் கோடைக்காலத்தில் படகுப் போக்குவரத்தை சீரமைப்பதற்காக கட்டப்பட்ட ஊலர் தடுப்பணை, பக்லிஹார் மற்றும் கிஷன்கங்கா நீர்மின் திட்டங்கள் ஆகியவை இந்தியாவின் “பிரச்னைக்குரிய’ திட்டங்கள். தற்போது ஊரி நீர்மின் திட்டமும் இப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட எந்தத் திட்டத்திலும் பாசனத்துக்காக நதிநீரை இந்தியா பயன்படுத்தவில்லையே? பிறகு ஏன் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்று ராஜதந்திரம் தெரியாதவர்கள் அப்பாவியாகக் கேட்கக் கூடும்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் எழுச்சியைக் கண்டு பொறாமை கொண்ட பாகிஸ்தான் இது போன்ற தேவையற்ற வேலைகளில் ஈடுபடுகிறது என்றுகூட நம்மில் சிலர் நினைக்கலாம். இவற்றைப் பற்றி பார்ப்பதற்கு முன் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்.

சிந்து நதிநீர் ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்கு உரிமையான நதியின் வேகத்தை அணையைக் கட்டி இந்தியா தடுக்கக்கூடாது. அதாவது பாகிஸ்தானுக்குள் செல்லும்போது அந்த நதி சீரான வேகத்தில் செல்ல வேண்டும். ஆனால் ஊலர் தடுப்பணை, பக்லிஹார் நீர்மின் திட்டம், ஊரி நீர்மின் திட்டம் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள அணைகள், நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதே பாகிஸ்தானின் குற்றச்சாட்டு.

சாதாரணமான நேரங்களில் இந்த அணைகளைக் கொண்டு பாகிஸ்தானுக்கு பிரச்னை எதையும் ஏற்படுத்தாமல் சமர்த்தாக நடந்து கொள்ளும் இந்தியா, போர்க்காலங்களில் இவற்றையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்று பாகிஸ்தான் பலமாகச் சந்தேகிக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டில் பக்லிஹார் அணை திடீரெனத் திறக்கப்பட்டதால் பாகிஸ்தான் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அந்நாடு சுட்டிக் காட்டுகிறது. இது தவிர, விவசாயத்தை நம்பியிருக்கும் பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப் மாகாண மக்கள் இந்த அணைகளால் பாதிக்கப்படுவார்கள் என்ற பிரச்னையையும் பாகிஸ்தான் முன்வைக்கிறது.

இந்தியாவைக் கடந்துதான் பாகிஸ்தானுக்குள் இந்த நதிகள் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு மிகவும் சாதகமான அம்சம். உலக அரங்கில், ஒப்பீட்டளவில் செல்வாக்கு மிகுந்த நாடான இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்கும் என்பது பாகிஸ்தானை எரிச்சலடைய வைக்கும் மற்றொரு விஷயம். ஏற்கெனவே, பக்லிஹார் நீர்மின் திட்ட விவகாரத்தில் “கிட்டத்தட்ட’ வெற்றியைப் பெற்றுவிட்ட இந்தியாவுக்கு, தற்போது ஊரி நீர்மின் திட்டத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு ஒன்றும் தலைபோகும் விஷயமல்ல.

பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எழுந்த பிரச்னைகள் எதுவும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. இரு நாடுகளும் அணுஆயுத சக்திகளாக மாறிவிட்ட பிறகு இந்த பிரச்னைகளின் வீரியம் கூடியிருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. இந்நிலையில், புதிய பிரச்னைகள் உருவாவது அல்லது உருவாக்குவது போன்றவை, ஏற்கெனவே பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு இப்பிரச்னைகள் தீராத தலைவலியாக இருக்கும் என்பதுதான் நிபுணர்கள் கருத்து.

அதனால் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து அதிகரித்து வரும் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா வளைந்து கொடுப்பதுதான் சரியான ராஜதந்திரமாக இருக்கும். அதுமட்டுமல்ல, மின்திட்டங்கள் அமைப்பதற்காக வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு நல்ல சேதி இல்லை.

Posted in 1974, Byas, Cauvery, Chenab, Dam, Devakottai, Ganga, Hogenakal, Hogenakkal, Interlink, Issue, Jhelum, Karnataka, Karuppan, Kaviri, Kollidam, Pakistan, Pyas, R Karuppan, Rain, Ravi, River, Sathanoor, Sathanur, Season, Seyyar, Sindhu, Sutlej, Tamil Nadu, Thiruchirappalli, TMC, Trcihy, Vaaniyambadi, Wallajapet, Water | Leave a Comment »

Congress Members Suspended from Legislative Council – Karnataka

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

மேலவை காங். உறுப்பினர்கள் 26 பேர் சஸ்பெண்ட்: அவைத் தலைவர் நடவடிக்கை

பெங்களூர், பிப். 14: கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்கள் 26 பேர் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கர்நாடக சட்ட மேலவைத் தலைவர் பதவி கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. தாற்காலிகத் தலைவராக துணைத் தலைவர் சச்சிதானந்தா கோட் இருந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் நடந்த சாலை விபத்தில் கோட் காயம் அடைந்தார்.

இந்நிலையில் சட்ட மேலவைக்கூட்டம் கடந்த ஜனவரி 25-ம் தேதி துவங்கியது. இதையடுத்து மூத்த உறுப்பினர் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த என். திப்பண்ணாவை தாற்காலித் தலைவராக அரசு நியமித்தது.

ஆனால் இவரது நியமனத்தை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. இந்நிலையில் மேலவைத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மேலவை கூடிய ஜனவரி 25-ம் தேதி முதல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேலவை கூட்டத்தை நடத்தவிடாமல் தர்ணா மேற்கொண்டுவந்தனர். இதனால் அவை நடந்த அனைத்து நாள்களும் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எச்.கே. பாட்டீல் தலைமையில் வழக்கம்போல எழுந்து நின்று தர்ணா மேற்கொண்டனர். இதற்கு ஆளும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்துப் பேசினர். அவையை நடத்தவிடாமல் தடுப்பதுசரியல்ல என்று அவர்கள் கூறினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

அவைத் தலைவர் திப்பண்ணா பலமுறை கேட்டுக் கொண்டும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிய வண்ணமிருந்தனர். இதனால் பொறுமை இழந்த அவைத் தலைவர் திப்பண்ணா, காங்கிரஸ் உறுப்பினர்கள் 26 பேரையும் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுவதாகக் கூறி அவையை மறுநாளைக்கு ஒத்திவைத்தார்.

Posted in Banaglore, Basavaraj Bommai, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), D H Shankaramurthy, Deve Gowda, H K Patil, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha Dal, JD(S), Karnataka, Koomarasamy, Kumarasami, Kumarasamy, Legislative Council, M P Nadagowda, MLC, N Thippanna, Politics, Secular Janata Dal, T N Chaturvedi | Leave a Comment »