Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Waste Water’ Category

Tiruppur, Coimbatore Electricity shutdowns – Power cuts & Textile Industry’s impact

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

ரூ.240 கோடி மின்கட்டணம் செலுத்தும் நகரம்: மின்தடையால் அவதியுறும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்

திருப்பூர்,பிப். 14: ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி மின் கட்டணம் செலுத்தும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில், நாள்தோறும் ஏற்படும் மின்தடையால் பனியன் தொழில் நிறுவனங்களில் பெருமளவில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

திருப்பூர் நகருக்கு ஈரோடு அருகே உள்ள ஈங்கூர் துணை மின் நிலையம், கோவை அருகே உள்ள அரசூர் துணை மின் நிலையம் ஆகிய 2 இடங்களிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு, நகரில் உள்ள 10 துணை மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பூர் பகுதியில்,

  • வீட்டு இணைப்புகள் 99 ஆயிரத்து 450,
  • தொழிற்சாலை மின் இணைப்புகள் சுமார் 22 ஆயிரத்து 250,
  • மேலும் தெருவிளக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 157 மின் இணைப்புகள் உள்ளன.
  • ஒட்டு மொத்தமாக திருப்பூர் பகுதியிலிருந்து மாதம் தோறும் சுமார் ரூ.20 கோடி மின் கட்டணம் வசூலாகிறது.
  • ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி திருப்பூர் பகுதியில் மின் கட்டணம் செலுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் மின் கட்டணம் செலுத்தும் நகரம் திருப்பூர்.

உற்பத்தி அடிப்படையில் கூலி பெறும் பனியன் தொழிலாளர்களுக்கு மின்வெட்டு காரணமாக கூலியில் வெட்டு விழுகின்றது.

பாதிப்பு குறித்து “”டிப்” சங்கத் தலைவர் அகில்மணி கூறியது:

உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பின்னலாடை இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் “”இன்வென்டர்” பழுதாகின்றன. டீசல் செலவு அதிகமாகிறது. அதிக அளவில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுகின்றது என்றார்.

நகரில், சாய ஆலைகள் அமைத்து வரும் சாயக்கழிவுநீர் மறுசுத்திகரிப்பு நிலையங்களுக்கும், பனியன் தொழில் நிறுவனங்கள் தொழிற்கூடங்களை விரிவாக்கம் செய்து வரும் நிலையிலும், எதிர்வரும் காலத்தில் பனியன் தொழிற்துறை உபயோகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.

மின் வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,

  • பல்லடம் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 முதல் 6 மாதங்களுக்கு இப்பணி முடிவடையும்.
  • இதன் பின் திருப்பூர் நகரில் பெருமளவில் மின் வெட்டு இருக்காது.
  • இதேபோல் பெருமாநல்லூர் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது.
  • நகரில்
    • நொச்சிபாளையம்,
    • மங்கலம் சாலை,
    • அருள்புரம்,
    • மண்ணரை,
    • திருவள்ளுவர் நகர்,
    • மாதேஸ்வரா நகர்,
    • கே.ஜி.புதூர் கல்லூரி சாலை ஆகிய 8 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றனர்.

கர்நாடகத்தில் மின்தடை அமலாகிறது: முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு

பெங்களூர்,பிப்.23-

கர்நாடக மின்சார கழகத்தின் உயர்மட்ட குழு கூட்டமும், மின்சார தட்டுப்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்காக மந்திரி சபை கூட்டமும் நேற்று விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தபின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் தீவிர மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியை நாங்கள் நாடினோம். மத்திய தொகுப்பில் இருந்த 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுக்க இயலாது என்று கூறிவிட்டது.

மின் துண்டிப்பு செய்வது என்பது அரசின் நோக்கம் அல்ல. மாநில மக்களுக்கு சிறந்த மின் வினியோகத்தை வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.

மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறோம். ஒரு வேளை மின்சாரம் கிடைக்க வில்லை என்றால் மின் துண்டிப்பு செய்யப்படும் நிலை ஏற்படும். அதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

மின்சார துறை மந்திரி ரேவண்ணா கூறியதாவது:-

தற்போது மாநிலத்தில் மாணவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. எப்படியாவது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி கூறி உள்ளார். வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முயற்சித்து வருகிறோம். மின்சாரத்தை துண்டிக்கும் முடிவு இன்னும் எடுக்கவில்லை. வருகிற மந்திரி சபை கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

மின் வினியோக கழகத்தில் இருந்து 50 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெறுவது குறித்து பேசி வருகிறோம்.

இவ்வாறு மந்திரி ரேவண்ணா கூறினார்.

============================================================

செய்தி வெளியீடு எண்-193 நாள்-2.4.2007
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தின் எல்லா மின் நுகர்வோருக்கும் தடையில்லாத, நம்பகமான, தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு

  • வடசென்னை,
  • எண்ணூர்,
  • மேட்டூர் மற்றும்
  • தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் நிறுவுதிறனை 2500 மெகாவாட் அளவுக்கு அதிகரித்திட ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இவற்றைத் தவிர, நீலகிரி மாவட்டத்தில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின் திட்டத்தை செயலாக்கி வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற உள்ள இந்த நிறுவுதிறன் அதிகரிப்புத் திட்டங்கள் அதிக அளவு மின் உற்பத்தி செய்வது மட்டுமின்றி மின் செலுத்துகை மற்றும் விநியோகக் கட்டமைப்பினையும் வலிவாக்கும். மாநில மின்சார அமைப்பிற்கு (GRID)) மின்சாரத்தை ஏற்றுவதற்குத் தேவையான மின் செலுத்துப் பாதைகள் நிறுவுவதற்கான செலவு உட்பட மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த திட்ட முதலீடு 16 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி அளித்திட ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (Rural Electrification Corporation)) முன் வந்துள்ளது. இது ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், தமிழ்நாட்டுக்கு அளித்துள்ள கடனுதவிகளில் மிகப் பெரியதாகும். இது தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு, நிதித் தட்டுபாடின்றி அதன் விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற உதவிடும். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்திட மின்சார வாரியத்துக்கும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding)) ஏற்பட்டுள்ளது. இதில் 2.4.2007 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வாரியத் தலைவர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்களும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.அனில் கே.லகினா அவர்களும் கையெழுத்திட்டனர்.

மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு நா.வீராசாமி அவர்களும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.எல்.கே.திரிபாதி, நிதித் துறைச் செயலாளர் மற்றும் சிறப்பு ஆணையர் திரு.கு.ஞானதேசிகன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஆர்.சத்பதி, தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (கணக்கியல்), திரு.ச.கதிரேசன், தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (உற்பத்தி) திரு.ச.அருணாசலம், திரு.பால் முகுந்த், இயக்குநர் (தொழில் நுட்பம்), ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி, திரு ரமா ராமன், செயலாண்மை இயக்குநர், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி ஆகியோரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் நிகழ்ச்சியின் பொழுது உடனிருந்தனர்.
***
வெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.

Posted in Arasoor, Arasur, Bangalore, Banian, Business, Coimbatore, Coomarasami, Coomarasamy, Diesel, Economy, Electricity, Engoor, Engore, Engur, Environment, Erode, Factory, Filtration, Garments, Generator, Incentives, Industry, Inverter, Karnataka, Kovai, Kumarasami, Kumarasamy, Palladam, Perumanalloor, Perumanallur, Pollution, Power, Power Cuts, Power Station, retail, Small Business, Textiles, Thiruppoor, Thiruppur, Tiruppoor, Tiruppur, UPS, Waste Water | 2 Comments »

Waster water management – Pollution Control treatment plants: Tirupur Exporters Strike

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

திருப்பூர் சாய ஆலைகள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டன.

சுத்திகரிப்பு செய்யப்படாத ஆலைக் கழிவுநீருக்கான அபராதத் தொகையில் (லிட்டருக்கு 6 காசு) ஒரு பகுதியைப் பகிர்ந்துகொள்வது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்வந்துள்ளதால் (சாய ஆலைகள் செலுத்த வேண்டிய இழப்பீட்டிலும் ஒரு பங்கை ஏற்க முன்வரக்கூடும்) இந்தப் பிரச்சினை இப்போதைக்கு அமைதி கண்டுள்ளது.

தடையற்ற உற்பத்திக்கான தொழிற்சூழல் உருவாதல் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கம் – சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு ஆற்றில் கலப்பதை தடுக்க நிரந்தர வழிமுறை காண வேண்டும் என்பதுதான். லிட்டருக்கு 6 காசு அபராதம் செலுத்தி, சாயக்கழிவுகளை தொடர்ந்து ஆற்றில் கொட்டிக்கொண்டே இருப்பது அல்ல.

அபராதத் தொகையை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வது பற்றி பேசியவர்கள் நச்சு இல்லா இயற்கைச் சாய முறைகளுக்கு மாறுவது குறித்தும் பேசியிருந்தால் மகிழ்ச்சி தருவதாக இருந்திருக்கும்.

இன்று உலகின் முக்கிய நாடுகளில் இயற்கைச் சாயத் துணிகளுக்குத்தான் மதிப்பு தரப்படுகிறது. ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்கள் இயற்கைச் சாய நூல்களை மட்டுமே வாங்குவது என்ற முடிவை மேற்கொண்டால், சாய ஆலைகளும் இயற்கைச் சாய முறைகளுக்கு மாறும்.

பத்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்த இந்த சாயக் கழிவு விவகாரத்தில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் முனைப்புடன் செயல்பட்டிருந்தால் நிலைமை கட்டுக்குள் இருந்திருக்கும். சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்பட்டிருக்கும்.

நொய்யல் ஆறு என்பது திருப்பூருடன் முடிவது அல்ல. அதன் சாயக் கழிவுகள் நிலத்தடி நீரையும் பாதித்துள்ளன. ஒரத்துப்பாளையம் அணை திறக்கப்பட்டால், விஷநீர் துணைநதிகள் மூலம் காவிரி வரை வந்து சேர்கிறது.

இந்தத் தீர்ப்பு ஏதோ திருப்பூர் நகருக்கு மட்டுமே உரியதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் அனைத்து நதிகள் குறித்தும் கவலை தெரிவிக்கும் தீர்ப்பு என்பதை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதேபோன்ற மோசமான நிலைமை பாலாற்றிலும், காவிரி, பவானி, அமராவதி என அனைத்து நதிகளிலும் நிலவுகிறது. ஆனால் இவைதான் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரம்.

குடிநீருக்காக ஆற்றிலிருந்து பெண்கள் தண்ணீர் எடுத்து வந்த காலம் கனவாய், பழங்கதையாய் மெல்லக் கழிந்து வருகிறது. காவிரியில் குளித்துக் கரையேறும் சுற்றுலாப் பயணிகள் பாட்டில் தண்ணீர் குடித்துத் தாகம் தணிக்கும் நிலைதான் உள்ளது.

அனைத்து நகரக் கழிவுகளும் ஆற்றில்தான் கலக்கின்றன. கழிவுநீரைச் சுத்திகரித்து அவற்றிலிருந்து விவசாயத்துக்கான எரு தயாரிக்கும் திட்டங்கள் எந்த நகரிலும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.

வீட்டுக் கழிவுகள் போதாதென்று தொழிற்கூடங்களும் தங்களது சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகளை ஆற்றில் தள்ளிவிடுகின்றன. சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ளதாகச் சொல்லும் சில தொழிற்கூடங்களும்கூட, மழை நாளில், ஆற்று வெள்ளத்தில் கழிவுகளைத் தள்ளி காலி செய்கின்றன. ஆற்றில் மணல் இருந்த காலத்தில் இந்த கழிவுகள் மணலால் வடிகட்டப்பட்டன. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது ஆறுகள் அனைத்தும் மணல் இழந்து, கறம்பாகி, படுகையில் செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன. இவை கழிவுகளை தடுத்து நிறுத்திக் கொள்கின்றன. இத்தகைய ஆறுகள் தான் நமது குடிநீர் ஆதாரம்.

Posted in Clean, Cloth, Clothings, Drinking Water, Environment, Exports, Mills, Noyyal River, Orathupaalayam Dam, Orathupalayam, PCB, Pollution, Pollution Control Board, Rivers, Strike, Thirupoor, Thirupur, Tiruppur, Tirupur, Treatment Plants, Waste, Waste Water, Water | Leave a Comment »

M Karunanidhi – Airport Expansion, Super-Fast Intra-city Service et al.

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

சென்னை விமான நிலைய விரிவாக்கம்: திருவள்ளூவர்-தொல்காப்பியர் பெயரில் விருதுகள்: பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மோட்டார் வாகன தொழிலை மேம்படுத்த சென்னை அருகே ஒரகடத்தில் வாகன சோதனை ஆராய்ச்சி மையத்தை இங்கு அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தோம். பிரதமர் மன்மோகன்சிங் மதுரையில் சேதுசமுத்திர திட்ட விழாவை தொடங்கி வைக்க வந்தபோது இந்த கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார்.

அதன்படி இன்று அடிக்கல் நாட்ட வந்துள்ளார். ஏறக்குறைய 300 ஏக்கர் நிலத்தில் இந்த வாகன மையம் அமைகிறது. நீண்ட காலம் நெஞ்சில் கனவாக இருந்த இந்த திட்டம் இன்று எழுச்சியுடன் தொடங்கி உள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தியும் தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உதவி இருக்கிறார்கள்.

150 ஆண்டுகள் கனவாக இருந்த சேதுசமுத்திர திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. 100 ஆண்டு கோரிக்கையான தமிழ் மொழியை செம்மொழி ஆக்கும் எண்ணத்துக்கும் வடிவம் கொடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நோக்கியா உள்பட பல தொழிற்சாலைகள் வர ஒத்துழைப்பு அளித்துஉள்ளனர். தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.1553 கோடி செலவில் இரும்பு உருட்டாலை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை அருகே வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு கேட்டதை கேட்டபடி வழங்கி வரும் பிரதமர் மன்மோகன்சிங், கூட்டணி தலைவர் சோனியாவுக்கு தமிழக மக்கள் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை பல திட்டங்கள் வழங்கி இருந்தாலும் இன்னும் சில கோரிக்கைகளையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

குமரி மாவட்டம் குளச்சலில் பெரியதுறைமுகம் அமைக்கப்பட வேண்டும். 1.1.07 முதல் தமிழ்நாட்டில் மதிப்பு கூட்டுவரி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான இழப்பீட்டையும் ஈட்டுத் தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை உருவாக்குதல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி நவீன மயமாக்குதல், சென்னை, மதுரை, சென்னை-கோவை இடையே அதிவேக புல்லட் ரெயில் விட ஏற்பாடு செய்தல், தமிழை செம்மொழி ஆக்கினாலும் அது தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வழி வகுக்கப்பட வேண்டும். செம்மொழி பெயரில் ஆண்டுதோறும் “வள்ளுவர் விருது” “தொல்காப்பியர் விருது” ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

மேலும் பல கோரிக்கைகளை கடிதம் வாயிலாகவும் நேரிலும் தெரிவித்து இருக்கிறோம். அவற்Ûயும் நிறைவேற்றி தர வேண்டும்.

தமிழக அரசு மத்திய அரசுடன் ஒரு இணக்கமான உறவை கடைபிடித்து வருகிறது. இது மேலும் தொடரும். அந்த வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மோட்டார் வாகனம் தொடர்பான முதலீடு இந்திய அளவில் 50 ஆயிரம் கோடி. இதில் 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி நடக்கிறது.

தமிழ்நாடு மோட்டார் வாகன தொழிலில் முதன்மை பெற்று திகழ்கிறது. ஏற்கனவே அசோக் லேலண்ட், டி.வி.எஸ். போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

1996-க்கு பிறகு போர்டு, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வாகன உற்பத்தியை தொடங்கி இருக்கின்றன. இந்திய அளவில் தமிழ்நாட்டில் 35 சதவீத மோட்டார் உதிரிப்பாகங்கள் தயார் ஆகின்றன. 20 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகின்றன.

இந்த ஆராய்ச்சி மையத்தில் இந்திய அளவிலான முதலீடு 1718 கோடி. இதில் ரூ.470 கோடி முதலீட்டில் இங்கு ஆய்வு மையம் தொடங்கப்படுகிறது. இந்த ஆய்வு மையத்தில் ஐரோப்பிய விதிமுறைப்படி சோதனை சான்றிதழ் பெற முடியும். பல்வேறு நவீன அமைப்புகளை வாகனங்களில் புகுத்த முடியும்.

1.8 கிலோ மீட்டர் நீள சோதனைப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். உள்ளூர் தொழிலாளர்கள்தான் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் 5 தொழிற்சாலைகள் இங்கு வந்துள்ளன. 24 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 26 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைத்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் இந்த வாகன சோதனை மையம் மூலம் 5 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

2015-க்குள் 6 அல்லது 7 மடங்கு இது வளர்ச்சி பெறும். 17 முதல் 20 மில்லியன் டாலர் அளவு ஏற்றுமதி பெருகும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

Posted in Airport, Chennai, desalination, Expansion Project, Kulachal, Kumari Harbour, Madras, Manmohan Singh, New Harbor, Pozhichaloor, Projects, Sea water, Sethu Samuthiram, Sidha Research, Sonia Gandi, Tamil Nadu, Thiruvalluvar Award, Tholkappiyar Prize, TN, Treatment Plant, Waste Water | Leave a Comment »