Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘responsibility’ Category

Mannar Residents should move out of their establishments – Tigers leaflet or Sri Lankan Govt Campaigns?

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2007

மன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பினர்கள்
விடுதலைப் புலிகள் அமைப்பினர்கள்

இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இந்தத் துண்டுப் பிரசுரத்தினால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து இராணுவத்தினரின் கவனத்திற்குக் கொண்டுவந்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விடுதலைப் புலிகளினால் வெளியிடப்படவில்லை என்றும், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வைபவங்களைக் குழப்புவதற்காக அரச படையினர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையே இது என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை கிழக்கே அம்பாறை மாவட்டத்தில், விடுதலைப்புலிகள் என்று கூறப்பட்டு இலங்கை விசேட அதிரடிப்படையினரால், சுட்டுக்கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கண்ணகிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கொலைசெய்யப்பட்ட இந்தப் பொதுமக்களின் சடலங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உறவினர்களிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இலங்கை அரசின் விமானப்படை விமானம்
இலங்கை அரசின் விமானப்படை விமானம் ஒன்று

இதற்கிடையில் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இன்று காலை விமானப்படையினர் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவுக்கு மேற்கில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றும், அலம்பில் கடற்கரையோரப்பகுதியில் விடுதலைப் புலிகள் படகுகளை நிறுத்தி வைக்கும் மறைவிடம் ஒன்றும் தாக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதல்களில் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மன்னார், பாலம்பிட்டி பகுதியில் நேற்று மாலை படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதல் ஒன்றில் வாகனம் ஒன்றில் பிரயாணம் செய்த 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொரு மோதல் சம்பவத்தில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Alleged LTTE leaflet in Mannar asking people to vacate their residencesயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பகுதியில் இன்று அதிகாலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த முற்பட்ட ஒருவரைப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவரின் உடைமையில் இருந்த தேசிய அடையாள அட்டையிலிருந்து இறந்தவர் மல்லாகத்தைச் சேர்ந்த ந.மயூரன் என தெரியவந்துள்ளதாகவும் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று மாலை மடுக்கோவில் பகுதியில் வீழ்ந்து வெடித்த எறிகணையினால் படுகாயமடைந்திருந்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றுப் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அலுவலகம் ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டதில், அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மற்றுமொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தேரிவித்துள்ளனர்.


Posted in Airforce, Ambaarai, Ambarai, Arms, Athikkuli, Attacks, Campaigns, dead, defence, Defense, Eelam, Eezham, Govt, Jaffna, Karuna, leaflet, LTTE, Mannaar, Mannar, Military, Mullai, Mullai River, Mullai Theevu, Peace, responsibility, Spin, Sri lanka, Srilanka, Vanni, Wanni, Weapons | Leave a Comment »

Economic Survey: Central Pay Commission Report – Indiscriminate salary raises?

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஊதிய உயர்வும் நிதிச் சுமையும்!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2008-ல், இந்தியா முழுவதும் மாநில அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களும் அதிகரிக்கும். வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பரிசைப் போல அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படவிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

1997 வாக்கில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான 5-வது ஊதியக் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டபோது, அப் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன். அந்த ஊதிய உயர்வுப் பரிந்துரைகளை அமல்படுத்தியதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நிதிச் சுமையை அவை சரிக்கட்டுவதற்கு நான்கைந்து ஆண்டுகளுக்குமேல் ஆனது. வரும் ஆண்டுகளில் அதே நிலைமை மீண்டும் ஏற்படும்.

இன்றைய சூழலில், புதிய ஊதியக் குழு பரிந்துரையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்றே தெரிகிறது. தனியார் துறையில் உள்ள அதிகாரிகளின் ஊதியங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. எனவே தனியார் துறைக்கு இணையாக அரசு அதிகாரிகளுக்கும் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

இதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால், அரசுத் துறைகளைப் பொருத்தவரை, பெருந்தொகையை ஊதியமாகவும் கொடுத்துக்கொண்டு, பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களையும் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என்பதுதான். ஏனென்றால், அரசுத் துறைகளில் இப்போது பல லட்சம் பேர் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றனர். அதில் 90 சதவிகிதமாக இருக்கும் சி மற்றும் டி பிரிவுகளில் தேவைக்கு அதிகமாக ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும். அரசுத் துறைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதுடன், ஒரே வேலையையே வேறு ஊழியர்கள் திரும்பவும் செய்வதையும் தவிர்த்துவிட்டால், பணித் திறனும் வேகமும் அதிகரிக்கும்.

நவீன தகவல் தொடர்பு முறைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு வேலைத்திறனைப் பெருமளவில் அதிகரிக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சி நடைபெறுவதாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முன்வராமல், தனியார் துறைக்கு இணையாக அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்கள் மட்டும் உயர வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. ஏற்கெனவே, பல மாநில அரசுகளின் நிர்வாகச் செலவினங்கள் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்களின் ஊதியம் இன்னும் அதிகரித்தால் கூடுதல் நிதிச் சுமையை அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. அதற்காக, அரசு ஊழியர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வை வழங்கக் கூடாது என்று இங்கு வாதிடவில்லை; மாறாக, சி மற்றும் டி பிரிவு ஊழியர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கலாம்.

“உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதியம்’ குறித்து அவ்வப்போது பேசப்பட்டுவருகிறது. மத்திய, மாநில அரசுத் துறைகளில் நடைபெற்றுவரும் பல்வேறு விதமான பணிகளைக் கருத்தில் கொண்டால், அவற்றை வகைப்படுத்தி, அந்த ஊழியர்களின் உற்பத்தித் திறனை வரையறுக்க ஒரு திட்டவட்டவமான உத்தியை வகுப்பதென்பது அனேகமாக இயலாத காரியமென்றே தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக, காவல் துறை ஆய்வாளரின் உற்பத்தித் திறனை வரையறுப்பது எப்படி? அவர் எத்தனை குற்ற வழக்குகளில் புலனாய்வை முடித்திருக்கிறார் என்பதைக் கொண்டு அவருக்கு ஊதியத்தை வழங்குவதாக வைத்துக்கொள்வோம். அவர் புலனாய்வு செய்த வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் 10 ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கும்; வழக்குகளைச் சரியாகப் புலனாய்வு செய்யாததால், நீதிபதியின் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருக்கக்கூடும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே “புலனாய்வுத் திறமை’க்காக அந்த ஆய்வாளர் ஊக்கத்தொகையையும் பெற்று, அதன் காரணமாகவே பதவி உயர்வும் பெற்றுச் சென்றுவிட்டிருப்பார்.

ஒரு மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித் திறனை எவ்வாறு வரையறுக்க முடியும்? அந்த மாவட்டத்தில் சில விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள்; எனவே அந்த மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்ற முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் விவசாயி தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் அவர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகும்.

தனியார் துறையில் லாபமே நோக்கம். எனவே, அதே அளவுகோலைப் பயன்படுத்தி அரசுத் துறை ஊழியரின் பணியை வரையறுக்க முடியாது.

எடுத்துக்காட்டாக, மத்திய அரசின் பெட்ரோலியத் துறைச் செயலரை எடுத்துக்கொள்வோம். அவர் செய்யும் அதே பணியை தனியார் துறையில் அவர் செய்துகொண்டு இருந்தால், அவரது ஆண்டு ஊதியம் ரூ.5 கோடியாகவோ அல்லது ரூ.10 கோடியாகவோ இருக்கக்கூடும். ஆனால் அரசுத் துறையில் அந்த ஊதியத்தை வழங்குவது குறித்து யோசிக்க முடியுமா?

இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசு ஊழியர்களுக்கு “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய’ முறையை அமல்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதம். ஏனென்றால், அத்தகைய வளர்ந்த நாடுகளில் இருந்து, இந்தியவைப் போன்று, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இடையே வேறு வகையான உறவு நிலவும் நாடுகள் முற்றிலும் மாறுபட்டவை.

நம் நாட்டில், “ஆண்டுதோறும் பணியை மதிப்பிடும் முறை’ ஒன்று ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அது இப்போது செயலற்றுப் போய்விட்டதற்கு இன்றைய பணி நிலைமைகளும், அரசுப் பணிகளில் நிலவும் அரசியல் செல்வாக்கும் தலையீடுகளுமே முக்கிய காரணங்கள். எனவே, “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய முறை’யால், இப்போதைய குறைபாடுகளைப் போக்கிவிட முடியாது.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்பது கேடு விளைவிக்கும் யோசனையாகும். 1997-ல் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிய பொழுதே அதை நான் எதிர்த்தேன். ஆனால், அதன் பிறகு புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, ஊழியர் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திவிட்டது.

ஊழியர்கள் 2 ஆண்டுகள் தாமதமாக ஓய்வுபெறுவர் என்பதால், அவர்களது வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை (கிராஜுட்டி) போன்றவற்றை இரு ஆண்டுகள் கழித்துக் கொடுத்தால் போதும். எனவே புதிய அரசின் முதல் ஆண்டு பட்ஜெட்டில் நிதிச் சுமை குறைவாக இருக்கும். அது புதிய அரசுக்கு உதவியாக இருக்கும் என்று காரணம் கூறப்பட்டது. இந்த வகையான குறுகியகாலப் பயனைக் கருத்தில் கொண்டு ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவது மிகத் தவறானது.

ஓய்வுபெறும் வயது வரம்பு உயர்த்தப்படுவதால், ஏராளமான இளைய வயதினருக்கு பதவி உயர்வுகள் தள்ளிப்போகின்றன. அது அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும். திறமை குறைந்த ஏராளமான பணியாளர்கள் மேலும் 2 ஆண்டுகளுக்குப் பணியில் தொடரும் நிலை ஏற்படும். அடுத்த நிலையில் இருப்போருக்கு அவர்கள் தடைக்கற்களாகவும் மாறிவிடுவார்கள். எனவே, ஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கூடாது.

நிர்வாகச் சீர்திருத்தம் குறித்தும் கூறப்படுகிறது. ஆனால், ஊதியக் கமிஷனின் பரிந்துரையில் நிர்வாகச் சீர்திருத்தம் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிர்வாகச் சீர்திருத்தம் என்று கூறும்பொழுது, பெரும்பாலும் அது தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருக்கிறதே தவிர, நடைமுறைச் செயல்பாடுகளின் தரத்தை உயர்த்த எந்த வகையிலும் உதவவில்லை. அரசியல்வாதிகள் ~ அதிகாரவர்க்கத்துக்கு இடையிலான உறவுகள்தான் நிர்வாகச் சீர்கேட்டுக்குக் காரணமாகும். அதைக் களையாமல் சீர்திருத்தங்களால் எந்தப் பயனும் விளையாது.

உற்சாக மிகுதியில், மாநில அரசுகளால் தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு அபரிமிதமான ஊதிய உயர்வை ஊதியக் குழு பரிந்துரைக்காது என எதிர்பார்ப்போம். அதேபோல, அதை தேர்தலுக்கு முன் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி, அரசியல் நோக்கத்தில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளை மத்திய அரசும் வாரி வழங்கிவிடாது என்று நம்புகிறோம்; இல்லையெனில், அவை மாநில அரசுகளின் நிதி நிலைமைமீது பெருத்த அடியாக அமைந்துவிடும்.

    (Rs. in crores)

 

Year

Gross Revenue

Interest payment per year
Crore

Net
Receipt Pay

Pay
Allowances

% of net
revenue

 


  Pay Bill Pension Bill

Posted in AG, Allowance, Appraisal, Attorney, Budget, Cabinet, Collector, Commission, Compensation, Economy, employee, Expenditure, Expenses, Finance, Govt, Growth, Increase, Inflation, Jobs, Merit, Pandian, Pay, Performance, Price, PSU, PWD, Raise, Rathnavel, Rathnawel, Ratnavel, Recession, recommendations, responsibility, Rise, Roles, Salary, Tariff, Tax | Leave a Comment »

Bill to hike pension for former MLAs, MLCs: Increase in Tamil Nadu Legislature spending

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

நமது கடன்…

ஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்

இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.

இன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே!

இது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்குவரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா?

அவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.

அமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழைகிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்?

மக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்? நமது கடன் வாக்களித்து ஓய்வதே!

————————————————————————————————————————————————-

மக்கள் பிரதிநிதிகள்…?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.

சாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.

1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.

அமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.

சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.

கலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.

மாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.

கடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.

1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.

இத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.

தகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————————————————————–

பயனுள்ளதாகட்டும் நாடாளுமன்றம்!

பி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்

நாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.

மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.

சமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அமளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.

மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. இது மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.

இதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.

இவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

பிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.

ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.

மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில் ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.

நம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்காற்றினர்.

ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.

உண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.

நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.

நாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.

நாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.

1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.

இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.

1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.

அதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமது நாட்டின் 26 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.

ஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.

ஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்ளுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.

இதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”

Posted in 5, ADMK, Allocation, Allowances, Anbalagan, Anbazagan, Anbazhagan, Appraisal, Assembly, Attendance, Bribery, Bribes, Budget, Cell, Checks, Chennai, Citizen, City, Congress, Cops, Corruption, Council, DA, Decorative, Decorum, Democracy, Disqualify, DMK, Economy, Election, Elections, Employed, Employment, Exceptions, Expenses, Exploit, Exploitation, Finance, Freedom, Funds, Government, Governor, Govt, Hike, Impeach, Income, Independence, Issues, IT, JJ, Jobs, kickbacks, KK, Legislature, Lifelong, Limits, Lok Ayuktha, Lok Saba, Lok Sabha, Lokpal, LokSaba, LokSabha, Madras, Metro, MGR, MLA, MLC, MP, MuKa, NGO, Office, Operations, parliament, pension, people, Performance, Phones, Polls, Power, Query, Questions, Raise, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Recall, Representation, Representative, Representatives, responsibility, Retirement, Rich, Role, Ruler, Salary, Senate, service, Sincere, Sincerity, Somnath, State, Suspend, TamilNadu, Tax, Telephone, Terms, Transport, Verification, Verify, Vote, voters, Walkouts, Woes, Years | Leave a Comment »

President Abdul Kalam: ‘Journalists can partner national development’ – Ramnath Goenka Excellence in Journalism Awards Speech

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!

“பத்திரிகைத் துறையில் சிறந்த சேவைபுரிந்தமைக்காக ராம்நாத் கோயங்கா பெயரிலான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுகளையும் விழாவில் பங்கேற்கும் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு, பத்திரிகைச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு, பத்திரிகைகளுக்குத் தணிக்கை என்ற நெருக்கடியான காலகட்டத்தில்கூட பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அஞ்சாமல் பாடுபட்டவர் ராம்நாத் கோயங்கா. சுதந்திரப் போராட்ட வீரர், தொழில் அதிபர், பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அயராது பாடுபடுபவர் என்று பன்முகச் சிறப்பு பெற்றவர் ராம்நாத் கோயங்கா.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பிறகும் அவர் வெளியிட்ட பத்திரிகைகள் அனைத்துமே அவருடைய நாட்டுப்பற்றுக்கும், அச்சமின்மைக்கும் சான்றாகத் திகழ்கின்றன. 1932-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபரானார். பிறகு வெவ்வேறு இந்திய மொழிகளிலும் பத்திரிகைகளைத் தொடங்கினார். அவருடைய சீரிய வழிகாட்டுதலில் எல்லா பத்திரிகைகளும் மக்களால் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாக வெளிவந்தன.

“”பத்திரிகையாளர்கள் தேச வளர்ச்சியின் பங்குதாரர்கள்” என்ற தலைப்பில் இன்று உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.

1944-ல் எனக்கு 13 வயது. இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய அண்ணன் சுதேசமித்திரன், தினமணி ஆகிய நாளிதழ்களுக்கு துணை முகவராக இருந்தார். வேலைக்காக அவர் இலங்கை சென்றதால், ராமேஸ்வரத்தில் இவ்விரு பத்திரிகைகளையும் விநியோகிக்கும் பொறுப்பை நான் ஏற்க நேர்ந்தது. மாணவனாக இருந்த நான், உலகப் போர் குறித்த செய்திகளை ஆர்வமாகப் படித்து வந்தேன். முதலில் தினமணி நாளிதழை வாங்கியதும், ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை ஆர்வமாகப் படிப்பேன். விமானவியலில் எனக்கு ஆர்வத்தை விதைத்ததே தினமணிதான். உலகம் முழுவதுமே மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் அன்றாடம் ஆயிரம் நடக்கலாம். பத்திரிகையாளர்கள் அவற்றை ஊன்றிக் கவனித்து உரிய வகையில் செய்தியாகத் தர வேண்டும்.

1999-ல் டெல் அவிவ் நகருக்குச் சென்றேன். ஹமாஸ் போராளிகள் லெபனான் எல்லையில் ராணுவத்துக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டனர் என்று தொலைக்காட்சியில் முக்கிய செய்தியை அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பத்திரிகைகளை வாங்கியபோது, இந்தச் செய்தியை முதல் பக்கத்திலேயே காண முடியவில்லை. ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த ஒரு விவசாயி, பாலைவனப் பகுதியில் மூன்று ஆண்டுகளாகத் தங்கி காய்கறி, பழச்சாகுபடியை அமோகமாக மேற்கொண்டு சாதனை படைத்திருப்பது குறித்த செய்திதான் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. மக்களும் அச்செய்தியைத்தான் ஆர்வமாகப் படித்தார்கள். பத்திரிகைத் துறையின் சிறந்த பங்களிப்பு என்றே அச் செய்தியை நானும் கருதுகிறேன்.

எல்லா பத்திரிகைகளிலும் ஆராய்ச்சிப் பிரிவு இருக்க வேண்டும். செய்திகளைத் தர, ஆய்வுசெய்ய, முக்கியமானவற்றை எடுத்துரைக்க இதைப் பயன்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் உள்ள பத்திரிகையியல் ஆய்வுப்பிரிவுடன் இந்தப் பிரிவு இணைக்கப்பட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அது ஏன், எதனால் ஏற்படுகிறது, அதற்கு நீண்டகால, குறுகியகால தீர்வு என்ன என்று அறிய இது உதவும். மூத்த பத்திரிகையாளர்களும் இளைஞர்களும் இதில் சேர வேண்டும். இதனால் பத்திரிகையின் தரமும் உயரும்.

வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதை ஆய்வுப்பிரிவுக்கு அனுப்புகின்றனர். அயல்பணி ஒப்படைப்பு என்ற அவுட்-சோர்சிங் முறை குறித்து அமெரிக்காவில் கடுமையான ஆட்சேபம் எழுந்தபோது, ஆய்வு செய்து செய்தி தர ஒரு பத்திரிகையாளர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார். அயல்பணி ஒப்படைப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகள், சாதனங்களில் 90% அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து, செய்தியாக அளித்தார். அது அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு வியப்பை அளித்தது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) எப்படி வளர்ந்திருக்கிறது என்று அறிய “டிஸ்கவரி’ சேனலின், தாமஸ் ஃப்ரீட்மேன் இந்தியாவுக்கு வந்து பெங்களூர் போன்ற ஊர்களில் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கினார். “”தி வேர்ல்ட் ஈஸ் ஃபிளாட்” (உலகம் தட்டையானது) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கும் இப் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியப் பத்திரிகையாளர்களும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யலாம்.

பத்திரிகைகள் சமுதாயத்துக்குப் பயன் தரும் வகையில் செயலாற்ற முடியும் என்பதற்கு இரண்டு சமீபத்திய உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மகாராஷ்டிரத்தில் விதர்பா பகுதிக்கு கடந்த மாதம் சென்றேன். அங்கு விவசாயிகளின் பிரச்னை குறித்து விவசாயிகள், அதிகாரிகள், வேளாண்துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் ஆகியோருடன் விவாதித்தேன். இதேபோல பத்திரிகைகளின் ஆய்வுக்குழுவும் நேரடியாகவே அந்தந்த இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தால் பிரச்னையை அடையாளம் காணவும், அரசுக்கு தீர்வுக்குண்டான வழிகளைச் சொல்லவும் உதவியாக இருக்கும்.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்துக்குச் சென்றேன். பீட்டா காட்டன் என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதியவகை பருத்தியைச் சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் அந்த மாவட்ட விவசாயிகள் மனம் நொந்த நிலையில் இருந்தனர். வறட்சி காரணமாக மகசூல் குறைந்தது; அல்லது சாவியாகிப் போயிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து கிடைத்துவந்தால்தான் பீட்டா காட்டன் விதைகளால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற உண்மை அவர்களுக்கு அனுபவம் வாயிலாகத்தான் கிடைத்தது. இதுவே முன்கூட்டி தெரிந்திருந்தால் அவர்களின் நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியும். தரமான விதை, சாகுபடி முறையில் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, உரிய நேரத்தில் வங்கிக் கடன், விளைபொருளை உடனே சந்தைப்படுத்த நல்ல வசதி, மழை இல்லாமல் போனால் பாசன நீருக்கு மாற்று ஏற்பாடு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு முற்றியிருக்காது.

அடுத்தது பாசனத் தண்ணீர் பற்றியது. வாய்க்கால்களை வெட்டுவது, மடையை மாற்றுவது ஆகிய வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆறே இல்லாத இடங்களில் தண்ணீரை எப்படிக் கொண்டுவருவது? மழைக்காலத்தில் எந்தெந்த வழிகளில் எல்லாம் நீரைச் சேமிக்கலாம் என்பதை விவசாயிகளுக்குச் சொல்லித்தந்து உடன் இருந்து அமல் செய்தால் வறட்சி காலத்தில் அது கைகொடுத்து உதவும். இவை மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகளும் சாகுபடியாளர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு அவர்களுடைய விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்கும் வசதி செய்யப்பட வேண்டும். கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்காமல் இருக்க, எல்லா கிராமங்களுக்கும் வங்கிகளின் சேவை கிடைக்க வேண்டும்.

விவசாயிகள் வேளாண் உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ளவும், விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெறவும் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

பஞ்சாபின் கேரி புத்தார் என்ற இடத்தில் விவசாயிகள், தொழில்துறையினர், ஆய்வு நிலையம், கல்விக்கூடம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பால் பருத்திவிதையின் உற்பத்தித்திறன் இருமடங்காகப் பெருகியது. விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் திட்டங்களை யாருக்குத் தர வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து குறிப்பிட்ட காலவரம்புக்குள் அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிர்வாக அமைப்பும், திட்ட நிறைவேறலுக்கு இன்னின்னார்தான் பொறுப்பு என்ற நிர்வாக நடைமுறையும் அவசியம். விதர்பாவில் பிரச்னை என்ன, தீர்வு என்ன என்பதை பத்திரிகைகளின் ஆய்வுக்குழுக்கள் கண்டுபிடித்து எழுத முடியும்.

போரிலும், உள்நாட்டுக் கலவரங்களிலும் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளிலும் பிற நெருக்கடிகளிலும் இறப்பவர் எண்ணிக்கை நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இப்படி இறப்பவர்கள் அல்லது காயம்படுகிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த 10 லட்சம் பேரைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த, உதவித் திட்டம் அவசியம். ஆந்திர மாநிலத்தில் அப்படியொரு திட்டம் அற்புதமாகச் செயல்படுத்தப்படுகிறது. நெருக்கடிகால மேலாண்மை-ஆய்வு என்ற அமைப்பு ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

சாலை விபத்து, பிரசவ காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் ஆபத்துகள், கிரிமினல் நடவடிக்கைகளால் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்து, வீடுகளில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் ஏற்படும் தீ விபத்து, மின்சார விபத்து, ரசாயன விபத்து, நில நடுக்கம், ஆழிப் பேரலை, மிருகங்களால் விபத்து என்று எதுவாக இருந்தாலும் தகவல் கிடைத்த 30 நிமிஷங்களுக்குள் அந்தப் பகுதிக்கு முதலுதவி ஆம்புலன்ஸ்களுடன் சென்று சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றி, உயர் சிகிச்சைக்குத் தாமதம் இன்றி, அமைப்பின் தகவல் தொடர்பு-வாகன வசதிகளைப் பயன்படுத்தி கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இந்த முறை. இதற்கு முதல்படியே, நெருக்கடி காலத்தில் 108 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு என்ன நெருக்கடி, எந்த இடம் என்ற தகவலைச்சுருக்கமாக, தெளிவாகச் சொன்னால் போதும், மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த அமைப்பு ஏற்பட்ட பிறகு ஆந்திரத்தின் 23 மாவட்டங்களில் 380 ஆம்புலன்ஸ்கள் அவசர உதவி, மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன. இதுவரையில் 11,500 பேரின் உயிர் உரிய நேரத்தில் உதவிகள் அளித்து காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் வாரம் முழுவதும் கிடைப்பது இதன் தனிச்சிறப்பு. இச் சேவையைப் பிற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் அரசும், தனியார் நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் இதில் முக்கியத் தொடர்பாளர்களாக இருந்து சேவை புரியலாம்.

பத்திரிகை என்பது வாசகர்களுக்குத் தகவல்களையும் கல்வியையும் அளிப்பது. பத்திரிகைகள் நன்கு செயல்பட்டால் தேசம் வலுவடையும். பரபரப்பு செய்திக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் தரக்கூடாது. துணிச்சலாக, உண்மையாக, உத்வேகம் ஊட்டுகிற வகையில் செய்திகளைத் தருவதுதான் உண்மையான பத்திரிகையியலாகும். அது தேசத்தின் பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு உதவும். பத்திரிகைகளால் இளைஞர்களின் மனத்தை மாற்ற முடியும் என்பதால், ஆக்கபூர்வமாகச் செயல்படுவது மிகமிக அவசியம்.

100 கோடி இந்தியர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, பத்திரிகையியலுக்கான ராம்நாத் கோயங்கா விருதில் மேலும் 2 பிரிவுகளையும் தொடங்க வேண்டும்.

1. ஊரக வளர்ச்சிக்கு உதவும் வகையில் செய்தி தருவதற்கும்,

2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்கும்

என்று 2 விருதுகளை 2007-08 முதல் வழங்க வேண்டும்.

(ராம்நாத் கோயங்கா பெயரிலான பத்திரிகையியல் விருதுகளை வழங்கி தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் சுருக்கம்)

————————————————————————————————-
பெருமைக்குப் பெருமை…

“எந்தவொரு பதவிக்கும் அதற்கான பெருமையோ, அதிகாரமோ கிடையாது. அதை அலங்கரிக்கும் நபர்கள் நடந்துகொள்ளும் விதத்தால்தான் பதவிகள் பெருமைகளையும் அதிகாரங்களையும் பெறுகின்றன’ – இந்த வாசகங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை உலகத்துக்கு உணர்த்தி இருக்கிறார் இன்று தனது பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறும் நமது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

இந்தியக் குடியரசின் தலைவர்களாக இருந்த ஒவ்வொருவரும் அந்தப் பதவிக்குச் சில கௌரவங்களைச் சேர்த்தார்கள். அவர்களது தனித்தன்மையால் அந்தப் பதவி மேலும் பரிமளித்தது. ஓரிரு சம்பவங்களைத் தவிர, பெரிய அளவில் இந்தியக் குடியரசின் தலைமைப் பதவி அதை அலங்கரித்தவர்களால் களங்கப்பட்டதில்லை. களங்கம் என்று அரசியல் பார்வையாளர்களால் குறிப்பிடப்படும் சம்பவங்களும்கூட, அன்றைய ஆட்சியாளர்களின் தவறால் நிகழ்ந்தவையே தவிர குடியரசுத் தலைவராக இருந்தவரால் ஏற்படவில்லை.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், எந்த அளவுக்கு இந்தப் பதவிக்கு கௌரவம் சேர்ப்பார் என்று தெரியாத நிலையில்தான் அந்தப் பதவியில் அமர்ந்தார் அப்துல் கலாம். ஐந்து ஆண்டுகள் கடந்து இப்போது பதவியிலிருந்து அவர் ஓய்வுபெறும்போது, இப்படி ஒரு குடியரசுத் தலைவர் இனி இந்தியாவுக்கு எப்போது கிடைக்கப்போகிறார் என்ற ஆதங்கத்தை அனைவரது இதயங்களும் வெளிப்படுத்தும் அசாதாரணப் புகழோடு விடைபெறுகிறார்.

அரசியல்வாதி அல்லாத ஒருவர், குழப்பமான அரசியல் சூழ்நிலையில் செயல்பட முடியுமா என்பதற்கு விடையளித்திருப்பதுதான் அப்துல் கலாமின் முதல் வெற்றி. அரசியல்வாதிகள் மீது அதிகரித்து வரும் அதிருப்திக்கு நடுவிலும், நாளைய இந்தியா பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தனது குடியரசுத் தலைவர் பதவியைத் திறம்பட நிர்வகித்தது அப்துல் கலாமின் அடுத்த வெற்றி. இனிமையாகவும் எளிமையாகவும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் செயல்பட்டு, ஓர் உண்மையான மக்களின் குடியரசுத் தலைவராக வாழ்ந்து காட்டியது அவரது மிகப்பெரிய வெற்றி.

குடியரசுத் தலைவரின் ஆணைப்படி ஒரு விஷயம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை ரகசியமாகக் காக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அவரைச் சந்தித்து அவருடன் ஒரு சில நாள்கள் தங்கிப்போக விழைந்தனர் அவரது உறவினர்கள். குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின்படி, ராமேஸ்வரத்திலிருந்து புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவரது 53 உறவினர்களும், குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்களால் வரவேற்கப்பட்டு, ஊர் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கான எல்லா உபசரிப்புகளுடனும் கவனிக்கப்பட்டனர். ஒரு வாரம் தங்கியிருந்து விடையும் பெற்றனர்.

அவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக, ஒருமுறைகூட அரசு வாகனம் பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல, அவர்களது உணவுக்கான செலவைக்கூடத் தனது தனிப்பட்ட கணக்கில் சேர்த்து அதற்கான கட்டணத்தை வசூலித்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார் குடியரசுத் தலைவர். தனது சம்பளப் பணத்திலிருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாயை அரசுக் கணக்குக்கு மாற்ற உத்தரவிட்டார் ஒரு குடியரசுத் தலைவர் என்று நாளைய குடியரசுத் தலைவர் மாளிகை ஆவணங்கள் இதை வெளிப்படுத்தும்.

இரண்டே இரண்டு பெட்டிகளுடன் வெளியேற இருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெருமையை இந்திய வரலாறு பக்கம் பக்கமாக எழுத இருக்கிறது. அந்த அளவுக்கு, அந்தப் பதவிக்கு அவர் பெருமை சேர்த்ததற்குக் காரணம், அவரது நேர்மையும் எளிமையும்; தனது மனதுக்குத் தவறு என்று பட்டதை தைரியமாக வெளிப்படுத்திய உள்ளத்தூய்மை. நாளைய தலைமுறைக்கு நம்பிக்கை அளித்தவர் என்பதுதான் இந்தியக் குடியரசுக்கு அப்துல் கலாமின் மிகப்பெரிய பங்களிப்பு.

இவரைத் தொடர்ந்து இனி யார் அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திச் செல்வது – அப்துல் கலாமின் தனி முத்திரை. இதுவரை குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் பதவி ஓய்வுபெற்ற பிறகுதான் “பாரத ரத்னா’ பட்டம் பெற்றார்கள். “பாரத ரத்னா’ குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முன்னுதாரணம் அப்துல் கலாமால்தான் நிகழ்ந்தது.

இவர்போல இன்னொருவர்…? வருவார், வரவேண்டும். அதுதான் அப்துல் கலாமின் எதிர்பார்ப்பும். அது பொய்த்துவிடலாகாது!

——————————————————————————————————————–
அப்துல் கலாமின் 10 கட்டளைகள்

புது தில்லி, ஜூலை 25: வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற, 10 கட்டளைகளைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாம் (75).

மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம்-ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

5 ஆண்டு பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகழ்த்திய கலாம் பேசியதாவது:

“நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து, “”நம்மால் முடியும்” என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன்.

பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.

இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

1. நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.

2. அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.

3. மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

4. அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

5. அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக் கூடாது.

6. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.

7. எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.

8. நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை: விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான-பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

9. ஏழைகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.

10. மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது, மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது, பழைய மரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.

நம் நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும், படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும்-குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.

திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடிவரும் வகையில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் கல்வி: சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பு தரப்பட வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முப்படையினர் தியாகம்: நமது ராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால், நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன்; சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். “”சுகோய்-30” ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய ராணுவ வீரர்களின் அறிவு, திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டேன்.

ஆப்பிரிக்க தொலைத்தகவல் தொடர்பு: ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல்-தொழில்நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க, “”அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்” என்ற இணையதள வசதியைச் செய்துதரும் இந்திய அரசின் திட்டம் மகோன்னதமானது.

இதன் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாசார வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்; இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்’ என்றார் கலாம்.

Posted in 10, Abdul Kalaam, Abdul Kalam, Analysis, APJ, APJ Abdul Kalaam, APJ Abdul Kalam, Attention, Awards, Bharat Ratna, Bharath, Bharath Rathna, Bharath Ratna, Biosketch, Dev, Development, Education, Excellence, Express, Faces, Freedom, Future, Goenka, Honest, Honesty, Independence, Indian Express, Integrity, Journal, journalism, journalist, Journalists, Kalam, Mag, magazine, Media, MSM, Nation, News, Newspaper, Op-Ed, Opportunity, Path, people, Plan, Planning, Politician, Politics, President, Principle, Prizes, Profits, Ramnath, Ramnath Goenka, Ratna, Reporter, responsibility, revenue, RNG, sales, Sensation, Sensationalism, solutions, Suggestions | Leave a Comment »

Dinamalar ‘Andhumani’ Ramesh vs Dinakaran & Sun TV Uma – Saga, Sexual Harassment

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

தினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்

Full Resignation letter Uma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationசற்றுமுன்…: தினமலர் நிர்வாகி “அந்துமணி” ரமேஷ் மீது பாலியல் புகார்

சற்றுமுன்…: உமா நடத்தும் பித்தலாட்ட நாடகம் – “தினமலர்” சட்டபூர்வமாக சந்திக்கும்

சற்றுமுன்…: “அந்துமணி” ரமேஷ் பாலியல் புகார் – சன் செய்திகள் வீடியோ

‘Andhumani’ in Abusive SMS Scam « Views and Reviews

Dinamalar strikes back refuting alleged charges as false claims on political moves « Views and Reviews

சும்மா டைம் பாஸ் மச்சி…..: தினமலர் ரமேஷ் சார்!

ஓசை செல்லாவின் செக்ஸ் SMS புகழ் அந்துமணி … பா.கே.ப.ஓ!!

காசிப்ஸ்: தினமலர் – தினகரன் மோதல் பிண்ணனி!

எனக்கு தெரிந்தது…: தினமலர், தினகரன், சன் டிவி நிறுவனஊழியர்களிடம் ஓர் “”மறைமுக” நேர்காணல்…

PRINCENRSAMA: ிழிந்து தொங்கும் ‘அந்துமணி’ முகமூடி!

real_not_ reel: முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பார்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா?

சற்றுமுன்…: தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு

——————————————————————————————-

பெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை தினமலர் ரமேஷ் மீது நடவடிக்கை

மாதர்சம்மேளனம் இன்று ஆலோசனை

சென்னை, ஜூலை 17: தினமலர் நாளேட்டின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு பற்றி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ரமேஷின் தொல்லை தாங்க முடியவில்லை
தினமலர் நாளிதழில் நிருபராக பணியாற்றிய உமா(28), அடையாறு காவல் நிலையத்தில் 13ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘தினமலர் நாளிதழில் ஏழு ஆண்டுகளாக நிருபராக பணியாற்றினேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். வந்து கொண்டே இருந்தது. தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் இவ்வாறு செய்துள்ளார். இவர் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகன். இவரதுRamesh Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation தொல்லை தாங்காமல்தான் 3 மாதம் முன்பு ராஜினாமா செய்தேன். இப்போது தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறேன். இப்போது, Ôஉன்னையும் உன் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன். உயிருடன் கொளுத்தி விடுவேன்Õ என்று மிரட்டுகின்றனர். எனக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பெண் ஊழியரை பத்திரிகை முதலாளியே பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமலர் ஆசிரியரின் மகன் ரமேஷ§க்கு மகளிர் அமைப்புகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி கூறியதாவது:

7 மணி தாண்டிய பின்
விதிமீறிய போலீஸ்
யாரோ கொடுத்த ஏதோ ஒரு புகார் என்ற பெயரில் உமாவையும், எஸ்.டி.டி. பூத்தில் பணியாற்றும் பெண்ணையும் இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுவே தவறானது. இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்துக்கு பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்ற விதியை போலீசார் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன் அடிப்படையில், பல அலுவலகங்களில் பாலியல் புகார் விசாரணைக் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. சட்டப்படியான இந்த ஏற்பாட்டில் பத்திரிகை அலுவலகங்களுக்கு விதிவிலக்கு கிடையாது.
முதலாளியை யார் மிரட்ட முடியும்?

ஒரு பத்திரிகையின் நிர்வாகிக்கும், அந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் உமா கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. எந்தவித பண பலமும், செல்வாக்கும் இல்லாத ஒரு பெண்ணால், ஒரு பத்திரிகையின் முதலாளியை எப்படி மிரட்ட முடியும்? உமா மீதான இத்தகைய குற்றச்சாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

7 வருடமாக எப்படி நீடித்தார்?
உமா மனநிலை சரியில்லாதவர் என்று தினமலர் நிர்வாகத்தின் பெயரில் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண் அதை வெளியே சொல்லாமல் சகித்துக் கொள்ளும் கோழைத் தனத்தை உதறிவிட்டு, நீதி கேட்டு பகிரங்கமாகப் போராடத் துணிந்தால் அவள் நடத்தை கெட்டவள், மனநிலை சரியில்லாதவள் என்று எளிதில் குற்றம் சுமத்தி விடுவார்கள் என்பதை தொடர்ந்து பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அதுதான் நடக்கிறது. உமா மனநிலை சரியில்லாதவர் என்றால் தினமலர் நிருபராக 7 ஆண்டுகள் வேலை செய்ய அவரை எப்படி அனுமதித்தனர்? இப்போது பணி புரியும் புதிய இடத்தில் அவர் எப்படி சேர்ந்திருக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல முடியுமா?

அதற்கும் இவரே
காரணமாவார்
தினமலர் நிர்வாகம் சொல்வதுபோல ஒரு வேளை உண்மையிலேயே உமாவின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லைதான் என்று கூறலாம். தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு கடுமையாக மனஉளைச்சல் ஏற்படும் என்பது எதார்த்தமானது. எனவே, உமா கொடுத்த புகார் மீது காவல்துறை தாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு வாசுகி கூறினார்.

இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா கூறியதாவது:
பணியிடங்களில் பல பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்வதில்லை. சில பெண்கள் மட்டுமே துணிச்சலுடன் வெளியே சொல்ல முன்வருகின்றனர். தினமலர் நிர்வாகியே தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக உமா கூறியுள்ளார். இவ்வளவு தைரியமாக அவர் வெளியே சொல்லி இருக்கிறார் என்றால், அதில் நிச்சயம் உண்மை இருக்கும். இப்புகார் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி, ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பத்திரிகை முதலாளி மீது குற்றச்சாட்டு கூறியிருக்கும் பெண்ணுக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உமாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுசீலா கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பத்மாவதி கூறியதாவது:
பாதுகாப்பு அளிக்க வேண்டும்
பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றி புகார் கொடுத்தால் காவல் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை. போராட்டம் நடத்திய பிறகுதான் புகார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது. மாதர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், 17ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து அதில் முடிவு எடுப்போம்.
இவ்வாறு பத்மாவதி கூறினார்.

————————————————————————————————————————-

மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதே இவர்களின் தொழில்

வேண்டாதவர்கள் மீது அவது£று பரப்புவது என்பது தினமலர் நிர்வாகத்துக்கு கைவந்த கலை என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். பெண் நிருபர் உமா, தமக்கு தினமலர் உரிமையாளர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறார் என்று புகார் கூறியதும், அதனை மறுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், புகார் கூறிய உமா மனநிலை சரியில்லாதவர் எUma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationன்று அவது£றுகளை பரப்புவதே இதற்கு உதாரணம்.

தமிழர் தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார். தொழில் போட்டியில் வெற்றிபெற முடியாத ஆத்திரத்தில், தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனர் என்ற ஒரே காரணத்துக்காக ஆதித்தனாரைப் பற்றி அவது£றாக கேலி செய்து செய்தி வெளியிட்டு பின்னர் தினமலர் வாங்கிக் கட்டிக்கொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

தினமலருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை கிண்டலான அடைமொழியோடு தினமலர் பல ஆண்டுகள் கேலி செய்து வந்தது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விளம்பரங்கள் தினமலருக்கு தரப்படவில்லை என்ற ஆத்திரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு பிளாக்மெயில் செய்ததும், பின்னர் துணைவேந்தரே தினமலரின் உள்நோக்கம் பற்றி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததும் தினமலரின் விஷமத்தனத்தை அம்பலப்படுத்தியதும் தினமலரின் மோசடித்தனத்துக்கு ஒரு உதாரணம்.

கொள்கை ரீதியாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கட்சிகளையும் குறிப்பாக தமிழக தலைவர்களையும் தரக்குறைவாக விமர்சிப்பதும், அவர்களின் பெயர்களை சுருக்கி அவர்களை கேலி கிண்டல் செய்வதும் தினமலருக்கு வாடிக்கையான ஒன்று.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியை பற்றி நீண்ட நெடுங்காலமாக அவது£று செய்திகளை வெளியிட்டு ஆனந்தப்பட்டது தினமலர்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர்திருமாவளவன் போன்றவர்களை பற்றியும் அவது£று பரப்ப தவறியதில்லை.

தமிழகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவை இன்றுவரை ‘அண்ணாதுரை’ என்றே குறிப்பிட்டு எழுதும் தினமலர் நிர்வாகம், பலமுறை கண்டனங்கள் எழுந்தபோதும் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரைப்பட கலைஞர்களும் தினமலரில் கேலி, கிண்டல், அவது£றுகளுக்கு தப்பவில்லை.

தொடர்ந்து தமிழ் திரைப்படக் கலைஞர்களை கேலி கிண்டல் செய்து அவர்களின் மனம் புண்படும்படி செய்திகளை வெளியிட்ட பெருமை தினமலருக்கு உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கி சிபி வரைக்கும் அத்தனை கலைஞர்களையும் காயப்படுத்தி வருகிறது தினமலர்.

காலங்காலமாக தமிழ் தலைவர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அவது£றாக விமர்சித்து எழுதி வந்த தினமலர் தற்போது அந்தரங்க அசிங்கங்களை அம்பலப்படுத்திய உமா மீது அவது£றுகளை அள்ளிவீசுவதொன்றும் ஆச்சரியமில்லை.
பாரம்பரியமிக்க நிறுவனம் என்று தங்களை சொல்லிக்கொண்டு பத்திரிகை பலத்தை தவறாக பயன்படுத்தி வரும் தினமலர் நிர்வாகம் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி பாவ விமோசனம் தேடாமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி விளக்கம் அளிப்பது பிரச்னையை திசை திருப்பி குற்றச்சாட்டில் இருந்து தப்பியோடும் முயற்சியாகும்.

மேலும், தினமலர் உரிமையாளரின் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் தினகரனில் செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல தினகரன் அலுவலகத்தை தேடிவந்தன.

தினமலர் இதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பான வாரமலரில் அவ்வப்போது ‘தொழில் அதிபருக்கு பெண் கம்பேனியன் தேவை’ என்ற விளம்பரத்தின் மறுபக்க மர்மம் அவற்றில் ஒன்று.

இவ்வாறு வரும் விளம்பரங்களின் பின்னணியில் இருந்தது யார் என்பதும், போலி விளம்பரங்கள் கொடுத்து பல பெண்களை வளைத்த கதைகளும் எங்களின் நேரடி கவனத்திற்கே வந்தது. இவ்வாறு விளம்பரம் கொடுத்த, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு, நிர்வாகியே நேரில் வந்து பெண் பார்த்த கதையையும் சம்மந்தப்பட்ட பெண்ணே நம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார்.

இது பற்றியும் நாம் விரிவாக விசாரித்து வருகிறோம். எனவே தினமலர் நிர்வாகம் இனிமேலாவது மற்றவர்கள் மீது பாய்வதை விட்டுவிட்டு தன் தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

——————————————————————————————————————

மாதர் சம்மேளனம் ஆதரவு

Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation
இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம், சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ., மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவு குறித்து தலைவர் சுசீலா கூறியதாவது:

தினமலர் பத்திரிகை உரிமையாளர் ரமேஷ், தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக அப்பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய உமா புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். இந்த விஷயம் குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இப்பிரச்னையில் உமாவுக்கு ஆதரவு கொடுத்து போராடுவோம். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூடி விரைவில் முடிவு செய்வோம்.
இவ்வாறு சுசீலா கூறினார்.

——————————————————————————————————————

பட்டியலிட்டு உமா கண்ணீர் தினமலர் ரமேஷ் செய்த கொடுமைகள்

சென்னை, ஜூலை 18: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி கீழ்த்தரமான முறையில் தனக்கு பல கொடுமைகளை தினமலர் நிர்வாகி ரமேஷ் செய்ததாக முன்னாள் பெண் நிருபர் உமா கண்ணீருடன் பட்டியலிட்டுள்ளார். தினமலரில் பணியாற்றிய பலர் கசப்பான அனுபவங்களால்தான் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களிடம் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பெண் நிருபர் உமா புகார் கொடுத்திருக்கிறார். அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ரமேஷ் பற்றிய உண்மைகளை வெளியில் சொன்னதால் தினமும் என்னைப் பற்றிய அவதூறு தகவல்களை தினமலர் நிர்வாகம் பரப்பி வருகிறது.

தினமலரில் நான் பணியாற்றியபோது பல தவறுகளை செய்ததாகவும், அப்போதெல்லாம் அழுது மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், நான் சிறப்பாக பணியாற்றுகிறேன் என்று ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியே பல நேரங்களில் என்னை பாராட்டியுள்ளார். செய்திப் பிரிவிலும் எனக்கு நல்ல பெயர்தான் இருந்தது.

தினமலரில் நிருபர்களாக இருப்பவர்களுக்கு செய்தி சேகரிக்கும் பணியைவிட நிர்வாகத்தினரின் குடும்ப வேலைகளைத்தான் அதிகம் கொடுத்துள்ளனர். நானும் அப்படித்தான் அவர்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கே அதிக நேரம் வேலை செய்தேன். அங்கு முறையான வேலை நேரம் என்பது கிடையாது. ஒவ்வொரு வேலைகளையும் விசுவாசமாகத்தான் செய்து கொடுத்தேன்.

பணியில் தவறு செய்திருந்தால் எனக்கு மெமோ கொடுக்க வேண்டியதுதானே. இதுவரை நான் அங்கு எந்த மெமோவும் வாங்கியதில்லை. மெமோ கொடுக்காமல் எப்படி நான் மன்னிப்பு கேட்டதாக கூற முடியும்?

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஜெயா டி.வி.க்கு விண்ணப்பித்தேன் என்ற காரணத்துக்காக என்னை வடசென்னைக்கு டிரான்ஸ்பர் செய்தார்கள். 50 ஆண்டு பாரம்பரியம் என்று கூறும் தினமலரில் ஊழியர்கள் அடிமையாக நடத்தப்படுவதுதான் உண்மை.
ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்ததோடு ரமேஷ் நிற்கவில்லை.

வெளியில் சொல்லவே நா கூசுகின்ற பல கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கி என்னை நோகடித்திருக்கிறார். மேலும், என் வண்டியை பஞ்சர் செய்வது, வண்டியின் சீட்டை கிழிப்பது, செருப்பை பையில் போட்டு வண்டியில் மாட்டுவது போன்ற அற்பத்தனமான காரியங்களையும் அரங்கேற்றினார். வீட்டில் நான் என்ன பேசுகிறேன் என்று கண்காணிக்க ஆள் அனுப்புவது, என்னைப் பற்றி ஆபீசில் ஆபாசமாக பேசுவது, வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புவது என்று ரமேஷ் செய்த கொடுமைகள் ஏராளம்.

நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்தேன். ரமேஷின் தொல்லைகள் பற்றி செய்திப் பிரிவில் உள்ளவர்களிடம் பல முறை சொல்லி அழுதேன். அவர்களும், போராடுங்கள் என்று கூறி என்னை தேற்ற முயற்சி செய்வார்கள்.

தொல்லை எல்லை மீறி போனதால்தான் இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்று ராஜினாமா செய்தேன். அப்போது Ôதொழில் தகராறு காரணமாகÕ என்று எழுதப்பட்ட 5 ஸ்டாம்ப் பேப்பரில் என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினர். பிரச்னை ஒழிந்தது என்று வேறு வேலைக்குச் சென்றால் அங்கு வந்தும் தொல்லை கொடுக்கின்றனர்.
செய்தி நிறுவனங்களில் பணி கிடைக்காததால்தான் மக்கள் தொடர்பு அதிகாரி வேலையில் நான் சேர்ந்ததாக கூறியுள்ளனர். இது மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பதவியை கேவலப்படுத்தும் செயல்.

Ôதினமலர் – உண்மையின் உரை கல்Õ என்று போஸ்டர் வைப்பது கண்துடைப்பு வேலை. அங்கு பணிபுரிபவர்களுக்கும், தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் அந்துமணி ரமேஷ் ஆகியோரின் மனசாட்சிக்கு தெரியும் எது உண்மை என்று.
இவ்வாறு உமா கூறினார்.

——————————————————————————————————————

உண்மையை சொன்னால் மனநிலை பாதித்தவள் என்பதா?

தினமலர் நிர்வாகி மீது அவதூறு வழக்கு

பெண் நிருபர் உமா பேட்டி

சென்னை, ஜூலை 16: ÔÔசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த உண்மையை சொன்னதால¢ என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறுகின்றனர். இதனால் தினமலர் நிர்வாகம் மற்றும் அந்துமணி ரமேஷ் மீது அவதூறு வழக்கு தொடருவேன்ÕÕ என்று தினமலரில் பணிபுரிந்த நிருபர் உமா கூறியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் இன்று கூறியதாவது:

தினமலர் நிர்வாகி அந்துமணி ரமேஷ் தொடர்ந்து எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால்தான் பொறுமை இழந்து புகார் கொடுத்தேன். உண்மையை வெளிப்படுத்தியதால் என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள். என் எதிர்காலத்தை சீரழிக்க நினைக்கும் அவர்களின் எண்ணத்தை முறியடிப்பேன். என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்.

போன் மூலம் மிரட்டல் விடுத்தேன் என்று பொய்ப் புகார் கூறி என்னை விசாரிப்பதற்காக 2 போலீசார் மாலை 7 மணிக்கு என் அலுவலகத்துக்கு வந்தனர். Ôபுகாரை காட்டுங்கள், உங்களுடன் வருகிறேன்Õ என்றேன். அதற்கு அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை.
இரண்டு மணி நேரம் விசாரணை செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருந்தனர். காரணத்தைக்கூட சொல்லவில்லை. சட்டப்படி மாலை 6 மணிக்குமேல் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது. போலீசார் அந்த சட்டத்தை பின்பற்றவில்லை. விசாரணைக்கு தயார் என்று எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். மீடியா என்ற பலத்தை வைத்துக் கொண்டு காவல்துறையை என் மீது பிரயோகம் செய்கின்றனர். நாட்டின் 4-வது தூண் பத்திரிகை. அதில் வேலை பார்த்ததால் பிரச்னையை எதிர்கொள்ள எனக்கு தைரியம் இருக்கிறது. ஆனால், சராசரி மனிதர்களால் இவர்களின் பழிவாங்கும் போக்கை எப்படி சமாளிக்க முடியும். அவர்களுக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளை பத்திரிகைகளில் வெளியிட்டு பழிவாங்கும் எண்ணமுடையவர்தான் அந்துமணி ரமேஷ்.

நிர்வாகம் சார்பில் இன்று தன்னிலை விளக்கத்தை அவர்கள் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கு நான் போன் செய்து மிரட்டினேன் என்று கூறியுள்ளனர். எனக்கு சிரிப்புதான் வருகிறது. அங்கு வேலை பார்ப்பது பாதுகாப்பு இல்லை என்று கருதி நான் வெளியேறினேன். வேலையை விட்டுவந்து 3 மாதங்கள் ஆகிறது. மேலும் ஸ்ரீபிரியாவோடு எனக்கு அவ்வளவு பழக்கமுமில்லை. தினமலரை மிரட்டினேனா அல்லது ஸ்ரீபிரியாவை மிரட்டினேனா என்பதை முதலில் தெளிவுபடுத்தட்டும். ஸ்ரீபிரியாவை மிரட்டினேன் என்றால் அவர்தானே என் மீது புகார் கொடுக்க வேண்டும். அது எப்படி நிர்வாகம் ஆக முடியும்.

நான்தான் போன் செய்து மிரட்டினேன் என்கிறார்கள். எல்லாம் பொய். அங்கிருந்து வெளியேறிய பிறகு நான் எதற்கு அவர்களை மிரட்ட வேண்டும். தற்போது பணியாற்றும் அலுவலகத்தில் இருக்கும் வேலையை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அவர்களை மிரட்டுவது என் வேலையல்ல. அவர்களின் தன்னிலை விளக்கம் ஆதாரமில்லாமல் இருக்கிறது.

அங்கு 7 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். என்னுடைய குரல் அவர்களுக்கு தெரியாதா? எனவே போன் மூலம் நான்தான் மிரட்டினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். தொலைபேசி எண், தொடர்பு கொண்ட நாட்கள், நேரம் எல்லாவற்றையும் வெளியிடட்டும். மருத்துவமனையில் உள்ள பூத்தில் போலீசார் வந்து சோதனை செய்தபோது, டயல் செய்த நம்பர்களில் தினமலர் நம்பர் டயல் செய்யப்படவில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

அதனால்தான் விசாரணை செய்யாமல் என்னை வீட்டுக்கு போகச் சொன்னார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. ஜோடிக்கப்பட்டவை. ஆள் வைத்து பேசுவது, மிரட்டுவது இதெல்லாம் அவர்களுக்குத்தான் கைவந்த கலை. எனக்கில்லை. அதற்கு அவசியமும் இல்லை. பத்திரிகை துறையில் இருந்தேன் என்பதற்காக மற்றDinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation பத்திரிகைகள் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். அப்படியானால் ஏன் 7 வருடம் அங்கு வேலைக்கு வைத்து எனக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்? மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றால் எனக்கு எப்படி வேறு வேலை கிடைத்திருக்கும். இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றதால் தினமலர் நிர்வாகம் மீதும் அந்துமணி ரமேஷ் மீதும் அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.

தினமலரில் Ôபிளாக் மெயில் ஜர்னலிசம்Õ பிரசித்தி பெற்றது. அதைத்தான் எப்போதும் செய்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அங்கு வேலை செய்பவர்களை பலவகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். நான் பயந்து ஓடவில்லை. பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வேன். இவ்வாறு உமா கூறினார்.

——————————————————————————————————————

தினமலர் நாளிதழை பழிக்க இது தந்திரம் ஆதாரமற்ற புகாரைக் கூறும் உமா யார்?

சென்னை :தினமலர் நாளிதழில் பணியாற்றிய பெண் நிருபர் உமா நேற்று “குறிப்பிட்ட ஊடகத்தின்’ மூலம் அளித்த புகார் பேட்டியை உற்று நோக்கினால், இது உள்நோக்குடன் எழுந்த புகார் என்று புரியும்.

ஐம்பது ஆண்டுகளாகத் தமிழக மக்களின் உணர்வோடு ஒன்றிய நாளிதழின் பங்குதாரரின் மகனைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது வேடிக்கையானது.

Resignation letter Uma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationதினமலர் நாளிதழில் தற்போது இவர் பணியாற்றவில்லை. சிறிது காலம் முன்பு மணமுடித்துக் கொண்டார். இவர் போலீசில் ஏற்கனவே அளித்த புகார் மனு, இவருடன் பழகிய அருண் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசிடம் எழுதிக் கொடுத்த மனு ஆகியவை இவர் எவ்வித மனப்போக்கு கொண்டவர் என்பதைக் காட்டுபவை. ஏ.ஓ.அருண் என்பவர் தன்னிடம் உமா “ரிலாக்ஸ்’ ஆக இருப்பதற்காக பேசுவது உண்டு என்று போலீசாரிடம் மனுக்கொடுத்திருக்கிறார்.

உமாவும் தான் அளித்த புகாரில், “பணியில் மனப்பிரச்னை இருந்தது என்றும் அதனால் டைபாய்டு வந்தது’ என்றும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக நிருபர் பணி என்பது மிகவும் சவாலான பணி, அதை இவர் நிறைவேற்றுவதில் அடிக்கடி குறை ஏற்படுவதும், அதனால் மறுநாள் அந்தச் செய்தியின் உண்மையைப் போட வேண்டிய கட்டாயமும் செய்திப் பிரிவிற்கு ஏற்பட்டிருக்கிறது.

அது மட்டும் அல்ல, தற்போது மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் உமா, ஏன் தினமலர் பணியை விட்டு விலகிய பின் மூன்று மாதகாலம் காத்திருந்து, அடிப்படை இல்லாத “எஸ்.எம்.எஸ்’ கொண்டு ஆவேசப்படுகிறார் என்பதும் கேள்விக்குறி.கடந்த சில நாட்களுக்கு முன், இவர் தினமலர் அலுவலகத்தில் செய்திப்பிரிவில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு அடிக்கடி போன் தொடர்பு கொண்டபோது, அதை தினமலர் நிர்வாகம் கண்டுபிடித்து “சைபர் கிரைம்’ போலீசார் விசாரித்த பின்பே இவ்வளவு மலிவாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் உமா.

Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationஅதேசமயம் சைபர் கிரைம் போலீசார் உமாவை வெள்ளிக்கிழமை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகுதான் அவர் தினமலருக்கு எதிராக மனு கொடுத்துள்ளார்.ஆனால், தினமலர் நாளிதழைக் களங்கப்படுத்தும் வகையில், ஒரு தனியார் “டிவி’ மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த சில நாளிதழ்கள் “மாஜி நிருபர்’ உமா புகாரை ஒளிபரப்பியும், பிரசுரித்தும் வருவது வேதனை தருகின்றன.

சட்டத்தின் நியாயவழிப்படி உமா புகாரை சந்தித்து பொய் என்று நிரூபிக்கவும் தினமலர் தயங்காது. இச் செய்தியை இடை விடாது பரப்பும் ஊடகங்களுக்கும் தினமலர் சார்பில் மறுப்பு அறிக்கை முறைப்படி அனுப்பப்பட்டிருக்கிறது. மறுப்பை அவர்கள் பெற்றுக் கொண்ட பிறகும், அதை ஒளிபரப்பாமல் மீண்டும், மீண்டும் ஒருதரப்புச் செய்தியை ஒளிபரப்பியது அந்த “டிவி’ சானலின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

——————————————————————————————-

பெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை

உமா மீதும் வழக்குப்பதிவு தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு

சென்னை, ஜூலை 19: தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், தினமலர் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உமா (28) என்பவர் சென்னை தினமலர் அலுவலகத்தில் ஏழாண்டுகள் நிருபராக பணியாற்றி, மார்ச் மாதம் அங்கிருந்து விலகி, தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13ம் தேதி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

தினமலரில் பணியாற்றியபோது ஓராண்டு முன் என் செல்போனுக்கு திடீரென்று ஆபாச எஸ்.எம்.எஸ். வந்தது. பின்னர் அது தொடர்கதையானது. இதற்கு தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் காரணம் என்று தெரிந்தது. சக பத்திரிகையாளர்களிடம் இதை பலமுறை தெரிவித்தேன். அவர்களால் ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது. குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து அங்கேயே பணியாற்றினேன். தொல்லை அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்தேன்.

அதன்பின்னர், என் மீதும் குடும்பத்தினர் மீதும் கஞ்சா வழக்கு போடப்படும், கொலை செய்யப்படுவீர்கள் என்று மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. நான் மனநிலை சரியில்லாதவள் என்றும் ரமேஷ் தரப்பில் கேலி செய்தனர். இதுபற்றி மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தினமலர்தான் பொறுப்பு என்றும் அதில் கூறியிருந்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மருத்துவமனையில் பணியாற்றுகிறேன். எனக்கு சைபர் கிரைம் போலீசார் மூலம் தொந்தரவு கொடுக்கின்றனர்.

இவ்வாறு புகாரில் உமா கூறியிருந்தார்.

இந்தப் புகார் மீது நேற்றுவரை வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது. நேற்று திடீரென்று தினமலர் நிர்வாகி ரமேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507 (மிரட்டுதல்), 509 (ஆபாசமாக பேசுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சைபர் கிரைம் போலீசில் தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், உமா மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507, 508 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டு சிறை:

தினமலர நிர்வாகி ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.
இ.பி.கோ. 507 என்ற பிரிவில், 3 மாத சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், 509 என்ற பிரிவில், 100 ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.

——————————————————————————————-

முன் ஜாமீன் கேட்டு ரமேஷ் மனு

செக்ஸ் தொல்லை கொடுப்பதாக உமா கொடுத்த புகாரை ஏற்று, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

————————————————————————————————-

ஆபாச எஸ்.எம்.எஸ். கொடுத்து பாலியல் தொல்லை வழக்கு

காவல் நிலையத்தில் தினமலர் ரமேஷ் கையெழுத்திட வேண்டும்

முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு இதே நிபந்தனையுடன் உமாவுக்கும் முன்ஜாமீன்

சென்னை, ஜூலை 21: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ§க்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் பெற்ற பிறகு அவர், தொடர்ந்து 3 நாட்களுக்கு அடையாறு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.

தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரில் உமாவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி, செக்ஸ் தொல்லை தந்ததாக போலீசில் முன்னாள் பெண் நிருபர் உமா புகார் கொடுத்தார். அதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல், தினமலர் பெண் ஊழியர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதாக உமா மீது தினமலர் தரப்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் உமா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இப்புகார்கள் தொடர்பாக ரமேஷ், உமா இருவரும் தனித்தனியாக முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ரமேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி ரகுபதி முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, Ôஉமாவுடன், ரமேஷ் சமரசம் செய்து கொள்ள தயாரா?Õ என்று கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக ரமேஷிடம் ஆலோசித்து பதிலளிப்பதாக அவரது வக்கீல் கோபிநாத் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரமேஷ் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவும், உமாவின் முன்ஜாமீன் மனுவும் நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம் வருமாறு:

நீதிபதி: உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்திற்கு சென்று சமரசம் செய்து கொள்ள தயாரா என்று நேற்று கேட்டேன். அதுபற்றி உங்கள் பதில் என்ன?

தினமலர் ரமேஷின் வக்கீல் கோபிநாத்: இத்தகைய வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்று கருதுகிறோம். சமரசத்துக்கு நாங்கள் தயாராக இல்லை. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

நீதிபதி (உமா வக்கீலை பார்த்து): உங்கள் வாதம் என்ன?

உமாவின் வக்கீல் சுதா ராமலிங்கம்: தினமலர் அலுவலகத்தில் நிருபராக 2001ம் ஆண்டு முதல் ஏழாண்டுகள் உமா பணியாற்றி உள்ளார். அப்போது, தினமலர் நிர்வாகி ரமேஷ் அவருக்கு ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். அதனால் உமா வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் ரமேஷ் தரப்பிலிருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன.

இப்போது அவர் தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி, தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், உமாவை விசாரித்துக் கொண்டு அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அடையாறு போலீசார் வந்துள்ளனர். அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் சில தொலைபேசி எண்கள் குறித்து எழுத்துபூர்வமாக தகவல் தருமாறு கேட்டுள்ளனர்.

பின்னர் விசாரணைக்காக அடையாறு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு உமாவை அழைத்துள்ளனர். பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு உமா மற்றும் அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள எஸ்டிடி பூத்தில் பணியாற்றும் மல்லிகா என்ற பெண்ணும், அவரது தாயாரும் அடையாறு போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு உமாவிடம் போலீசார் எந்த விசாரணையும் செய்யாமல், வேண்டுமென்றே காக்க வைத்திருந்தனர். இரவு 10 மணி அளவில் துணை கமிஷனர் சேஷசாயி வந்த பிறகு தான், உமாவை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளார். உமாவை போலீசார் அலைக்கழித்ததற்கு காரணம் தினமலர் நிர்வாகத்தின் தூண்டுதல் தான். அவர்கள் உமா மீது பொய்யான புகார் கொடுத்திருக்கிறார்கள். எனவே உமாவுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

வக்கீல் கோபிநாத்: அவர்கள் புகாரில் கூறியிருப்பது பொய். அதை ஏற்க கூடாது.
நீதிபதி: இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தார்களா?

வக்கீல் சுதா ராமலிங்கம்: எங்களை மட்டும் தான் விசாரணைக்கு அழைத்தனர்.
வக்கீல் கோபிநாத்: நாங்கள் விசாரணைக்கு செல்லவில்லை. புகார் மட்டும் தான் கொடுத்தோம்.

நீதிபதி: நீங்கள் புகார் கொடுத்ததும் போலீசாரை வற்புறுத்தியிருப்பீர்கள். அதனால்தான் போலீசார் அவர்களை மட்டும் அழைத்து விசாரித்துள்ளார்கள். ஒருபத்திரிகை பெண் நிருபரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் அலைக்கழித்துள்ளனர்.

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா (போலீஸ் தரப்பு): புகார் வந்தவுடன் போலீசார் உமாவை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி: மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் தருகிறேன். ரமேஷ், உமா இருவரும் ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், இரு தனிநபர் ஜாமீனும் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். முன்ஜாமீன் உத்தரவு நகல் பெற்ற உடன், ரமேஷ் சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜார்ஜ்டவுன் 7வது மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து உமா முன்ஜாமீன் பெற வேண்டும். அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு ஆஜராகி தொடர்ந்து 3 நாட்களுக்கு கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறினார்.
————————————————————————————————-

SMS Cellphones Mobile Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani

————————————————————————————————-
பெண் நிருபருக்கு பாலியல் தொல்லை வழக்கு

தினமலர் ரமேசுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது

அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு

சென்னை, ஜூலை 20: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தினமலர் நிர்வாகி ரமேஷ§க்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தியின் மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நிருபர் உமா புகார் கொடுத்தார். இதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

ரமேஷ் தரப்பு மூத்த வக்கீல் கோபிநாத்: சமீபத்தில் தினமலர் அலுவலகத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்தன. பேசிய பெண், அங்கு சுருக்கெழுத்தாளராக பணியாற்றும் பெண்ணை மிரட்டியிருக்கிறார். விசாரணையில், அந்தப் பெண் தினமலரில் நிருபராக பணியாற்றி ராஜினாமா செய்த உமா என்பது தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தோம். விசாரணைக்காக உமாவை போலீசார் அழைத்தனர். இதையடுத்து, ரமேஷ் மீது உமா புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 507, 509 ஆகியவை ஜாமீனில் விடக் கூடிய குற்றம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் 4 வது பிரிவின் கீழும் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவு. இருந்தாலும், உமா கொடுத்தது பொய் புகார் என்பதால் ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

நீதிபதி: சட்டப் பிரிவு 4க்கு என்ன தண்டனை என்று கூறப்பட்டுள்ளது?
வக்கீல் கோபிநாத்: குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம்.
நீதிபதி: பெண் நிருபரை எப்போது மிரட்டியதாக புகார் கூறியுள்ளார்?

வக்கீல் கோபிநாத்: 7 ஆண்டுகள் அவர் பணியில் இருக்கும்போது ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், ராஜினாமா செய்த பிறகும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருக்கிறார். அது உண்மை என்றால் முன்பே புகார் கொடுத்திருக்க வேண்டும்.

அவர் மீது தினமலர் புகார் கொடுத்த பிறகுதான், போட்டிக்கு ரமேஷ் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே, ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: தினமலரில் பணியாற்றிய போது, ரமேஷ் 11 செல்போன் நம்பர்களை பயன்படுத்தி தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார்; பணியை விட்டு சென்ற பிறகும் அவரையும் அவர் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாகவும், உயிருடன் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டினார் என்று உமா கூறியுள்ளார். ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை நடந்துவருகிறது. எனவே ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.
நீதிபதி: நெருப்பு இல்லாமல் புகையாது. இருவருமே திருமணம் ஆனவர்களா?

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: உமாவுக்கு திருமணமாகி விட்டது.

வக்கீல் கோபிநாத்: ரமேஷ§க்கும் திருமணமாகி விட்டது.

நீதிபதி: இருவருமே திருமணமானவர்கள். போட்டி போட்டு புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்துக்கு சென்று சமரசம் செய்து கொள்ளலாமே? இது பற்றி மனுதாரர் ரமேஷிடம் கருத்து கேட்டு கூறுங்கள். விசாரணையை நாளை தள்ளி வைக்கிறேன்.

இவ்வாறு வாதம் நடந்தது.
————————————————————————————————-

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

———————————————————————————————-
தினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்

தினமலர் நிர்வாகிகளில் ஒருவரான அந்துமணி ரமேஷ் மீது, முன்னாள் நிருபர் உமா பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். சைதாப்பேட்டை கோர்ட்டில் 2 நபர் ஜாமீன் பெற்று, விசாரணை அதிகாரி முன்பு 3 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த செய்திகளை எல்லாம், பெரிது பெரிதாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், எப்படியாவது கோர்ட்டில் ஆஜராகும் படத்தை எடுத்து பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்று தனது நிருபர்கள் நான்கு பேரை நியமித்திருந்தது. அவர்களுடம் சன் டி.வி. படக்குழுவினரும் கோர்ட்டில் கூடியிருந்தனர். வேறு எந்த பத்திரிகை நிருபர்களும் வரவில்லை.

ஆனால் அந்துமணி ரமேஷ் கோர்டுக்கு வரவே இல்லை. தினகரன் நிருபர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கீதா முன்பு ஆஜராகி கையெழுத்திட்டு சென்று விட்டார்.

இது எப்படி சாத்தியமானது. உயர் நீதி மன்றம் தீர்ப்பு கூறிய மறுநாளே, நீதிபதியை அனுகி, நீதி மன்றம் செல்லாமல் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக அனுமதி கேட்டுள்ளனர். அவரும் ஒப்புக் கொள்ளவே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டதாக தெரிகிறது.

இதன் அடிப்படையில் விசாரணை அதிகாரியிடம் நேரடியாக ஆஜராகிவிட்டார், அந்துமணி ரமேஷ். இதுதெரியாத தினகரன், அவருக்காக கோர்ட்டில் காத்திருப்பது வேடிக்கை

————————————————————————————————–

Posted in Agenda, Allegation, Andhumani, Andumani, Anthumani, Bathmavathi, Bathmavathy, Blackmail, Broadcast, CEO, Challenged, channel, Claim, Compensation, Courts, Dailythanthi, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dhinakaran, Dhinamalar, Dhinathanthi, Dinagaran, Dinakaran, Dinamalar, Disabled, DMK, Editor, Email, Ethics, Female, Feminism, Freedom, Harass, Harassment, HR, Images, imbroglio, Jokes, journalism, journalist, Justice, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Krishnamurthy, Law, Lawsuit, lens mama, Letter, Liberation, Mag, magazine, Management, Manipulation, Maran, MD, Media, Mental, MLA, Mogul, MSM, network, News, Order, paparazzi, Paprazzi, Pathmavathi, Pathmavathy, pension, Photos, Physical, Pictures, Police, Porn, Press, Process, Ramesh, Reference, Reporter, responsibility, Scam, Schizo, Schizophrenia, schizophrenic, Settlement, Sex, Sexual, SMS, Strategy, Sun, SunTV, tactics, Tamil, Thinagaran, Thinakaran, Thinamalar, Thinathanthi, TN, Torture, TV, Vaaramalar, Varamalar, Varamalara, Women, Work, Workplace | 41 Comments »

How to stop Corruption using Law and Order – Formation of higher level Committees

Posted by Snapjudge மேல் மே 3, 2007

ஊழலை ஒழிக்க உயர்நிலை அமைப்புகள்

கே.வீ. ராமராஜ்

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு ஒப்பந்தமானது கடந்த 2005 டிசம்பர் 5 அன்று நடைமுறைக்கு வந்தது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது. எனவே ஊழல் ஒழிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமையாகும்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழு இந்தியாவில் “லோக்பால்’, “லோக் ஆயுக்தா’ அமைப்புகளை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

  • திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது
  • மறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.
  1. பதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,
  2. விதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,
  3. நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,
  4. சுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,
  5. ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல்,
  6. பொது நலனுக்கு ஊறு விளைவித்தல் போன்ற வகைகளில் ஊழல் நடைபெறுகிறது.

இத்தருணத்தில் “லோக்பால்’ அமைப்பைக் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதும் அலசி ஆராய்வதும் அவசியமாகும். “லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமை வகித்த நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1966 ஆம் ஆண்டு தமது அறிக்கையில் தேசிய அளவில் “லோக்பால்’, மாநில அளவில் “லோக்ஆயுக்தா’ என்ற இரு வகையான லஞ்சத்தை களையும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.

இதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்

  • கர்நாடகம்,
  • மத்தியப் பிரதேசம்,
  • ராஜஸ்தான்,
  • பஞ்சாப்,
  • அசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை.

இதனால் தேசிய அளவிலும் மாநிலங்களிடையேயும் ஒத்துழைப்பும் தகவல் தொடர்பும் மிக்கதாக உள்ள வகையில் “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ என்ற இரண்டடுக்கு முறையை நாடாளுமன்றச் சட்டம் மூலம் உருவாக்க வேண்டிய காலம் இதுவாகும். இவ்வமைப்பு முறையை உருவாக்கத் தேவைப்பட்டால் அரசியல்சாசன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளலாமென அரசியல்சாசன மறு ஆய்வு குழு தெரிவித்துள்ளது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

“லோக்பால்’ மூலம் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் உயர் பதவி வகிப்பவர்கள் உள்ளிட்டோர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகளையும் “லோக்ஆயுக்தா’ மூலம் முதல்வர், மாநில அமைச்சர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வழி செய்வதன் மூலமாக நாடு முழுவதும் லஞ்சத்தை ஒழிப்பதற்கான ஒருமித்த அமைப்பு முறை உருவாகும். இத்தகைய அமைப்பு முறையை உருவாக்க 40 ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தபோதிலும் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் முழுமையான ஆதரவு இல்லாததால்தான் இம் மசோதா நிறைவேறவில்லையென மாநில “லோக்ஆயுக்தா’ அமைப்புகளின் ஏழாவது மாநாட்டில் மத்தியப் பிரதேச “லோக்ஆயுக்தா’ அமைப்பு தெரிவித்துள்ளது.

“லோக்பால்’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உச்ச நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் “லோக்ஆயுக்தா’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உயர் நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் குறையாத தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

தேவைக்கேற்ப மத்தியிலும் மாநிலத்திலும் “உப லோக்பால்’, “உபலோக் ஆயுக்தா’ அமைப்புகளை நியமிக்கலாம். இவர்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமனம் செய்ய வேண்டும். இப்பதவிகளில் காலியிடம் ஏற்படும்போது நீண்ட காலம் யாரும் பணியில் அமர்த்தப்படாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் காலக்கெடுவும் மாற்றுத் திட்டமும் சட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் சூழ்நிலை ஏற்படுமானால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் கையாளும் விசாரணை முறையைப் பின்பற்றலாம்.

“லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தன்னாட்சி பெற்றவைகளாக விளங்குவதோடு இவற்றின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளும் செயல்பாடுகளில் நீதிமன்றக் குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வமைப்புகளுக்குத் தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். இப் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு எத்தகைய அரசுப் பணியும் வழங்கப்படக் கூடாது.

மாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது. இதைப்போல உத்தேசிக்கப்பட்டுள்ள “லோக்பால்’ அமைப்புகள் செயல்படக் கூடாது. மாறாக “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு நீதிமன்றத் தீர்ப்புகளைப் போன்ற சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். இப் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் மட்டுமே மேல் முறையீடு செய்யும் வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும். தம்மிடம் தாக்கல் செய்யப்படும் முறையீடுகள் மீது ஓராண்டுக்குள் தீர்வு காண சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது மத்திய அரசின் கடமையாகும்.

வேலியே பயிரை மேய்வதுபோல அரசு மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் கடமையைச் செய்யாமல் இருப்பதாலும் பிறர் கடமைகளில் குறுக்கிடுவதாலும் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துவதாலும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. நேர்மையான அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் தவறு செய்பவர்களை இனம் காண உதவ வேண்டும்.

லஞ்சத்தைக் களைய வேண்டுமாயின் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலே போதுமானது. நாடு தன்னிறைவு அடையவும் வல்லரசாக மாறவும் நாம் கனவு காணும்போது லஞ்சத்தை ஒழிக்க “லோக்பால்’ போன்ற அமைப்புகளை நம் நாட்டில் இன்னும் உருவாக்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல. மேலும் லஞ்ச லாவண்யமற்ற அரசைப் பெறும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு உண்டு என்றால் மிகையல்ல.

சரியான பணிகளை முடிப்பதில்கூட அரசு அலுவலகங்களில் ஏற்படும் கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கிறது. ஆட்சி நிர்வாக அமைப்பில் எந்தவொரு நிலையிலும் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது என்பதே நல்லாட்சித் தத்துவம்.

முதலாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையை போலவே இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களும் தன்னார்வ அமைப்புகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஒசூர் நகர வழக்கறிஞர்.)

—————————————————————————————-

நிர்வாகத்தில் பொறுப்புணர்வு!

கே. ராமமூர்த்தி
“”நிர்வாகத்தில் பொறுப்புணர்வு” என்பது இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம். அரசு நிர்வாகத்தின் மீது இப்போது பொதுவாகவே எல்லோருக்கும் அதிருப்தி நிலவுகிறது; அத்துடன் ஜனநாயக உரிமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பதால் இந்த விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.

“மேலை நாட்டவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் பொறுப்புணர்வு; அலுவலகத்திலோ, நிர்வாகத்திலோ உங்களுடைய நிலை எதுவாக இருந்தாலும் உங்களுடைய வேலைக்கு நீங்கள்தான் பொறுப்பு. இந்தியாவிலோ, உயர் பதவியில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு பொறுப்பு குறைவு!

மத்திய அரசில் முக்கிய பதவியில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகக் கூறினார், “”வருமான வரி செலுத்த வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மறந்துவிட்டேன்” என்று. அதற்குப் பிறகும் தண்டனை, நடவடிக்கை ஏதும் இல்லாமல் அவர்பாட்டுக்கு செயல்பட்டு வந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அரசுத்துறை நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், ஒரு தலைமை நிர்வாகிமீது கூட இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை!

அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதாலேயே, அரசியல் சட்டத்தில் அதற்கு உரிய ஏற்பாடுகளை நமது முன்னோர் செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட அரசாங்கம் என்பதே அதிகபட்ச திறமை, அதிகபட்ச பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான். அரசின் வரவு, செலவுகளை ஆராய்ந்து நாட்டு மக்களுக்கும் தெரிவித்து, அரசையும் தட்டிக்கேட்கத்தான், “”தலைமைக் கணக்கு – தணிக்கையாளர்” என்ற உயர் கண்காணிப்புப் பதவி அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம் என்பது பொதுக்கணக்குக்குழு என்ற அமைப்பைக் கொண்டு இதே பணியைச் செய்கிறது. அதற்கு தலைமைக் கணக்கு தணிக்கையாளர் நண்பனாய், நல்லாசிரியனாய், வழிகாட்டியாய் செயல்படுகிறது.

“நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் செலவுகள் முறையாகச் செய்யப்படுகின்றனவா, திட்டங்கள் ஒழுங்காக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொதுக் கணக்குக்குழுவுடன், மதிப்பீட்டுக் குழு, அரசின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் குழு போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசுத்துறை நிறுவனங்களின் பொறுப்புணர்வை உறுதி செய்ய, கம்பெனிகள் சட்டத்தில் 1956-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி மன்றங்களைப் பொருத்தவரை சிறப்பு தணிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிர்வாகமே தனது ஊழியர்களின் பொறுப்புணர்வைச் சோதிக்கவும், மேம்படுத்தவும் அக அமைப்புகளையும் வழி முறைகளையும் கொண்டுள்ளது. புற ஏற்பாடாக, பொதுமக்களுடன் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் சந்திப்பு, புகார்-ஆலோசனைகளைப் பெறுவதற்கான நேரடி சந்திப்புக் கூட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது.

அரசு நிர்வாகத்தின் உள்ளேயும் வெளியேயும் இத்தனை ஏற்பாடுகள் இருந்தபோதும், அரசுத்துறையிலும் அரசு நிறுவனங்களிலும் யாருமே பொறுப்பானவர்கள் இல்லை என்ற எண்ணம்தான் மக்களிடம் வலுத்திருக்கிறது.

ஒரு வேலையை எடுத்தால் குறிப்பிட்ட நேரத்துக்குள் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உணர்வு ராணுவத்தில்தான் அதிகமாக இருக்கிறது; நீதித்துறையில்தான் அது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதில் அதிகாரக் கட்டமைப்பு மட்டும் இந்த வேறுபாட்டுக்குக் காரணம் அல்ல, அமைப்பு ரீதியாகவே செய்துள்ள ஏற்பாடும், நிர்வாக நடைமுறைகளும்தான் இதற்கு முக்கியக் காரணம்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உள்ள ஏற்பாடுகள் அனைத்தும் “”பெயரளவுக்குத்தான்” செயல்படுகின்றன என்றே மக்கள் கருதுகின்றனர். தவறுகளையும் தாமதத்தையும் தண்டிக்கவோ, கண்டிக்கவோ, திருத்தவோ நிர்வாகத்தில் எந்தவித ஏற்பாடும் இல்லை என்பதே அவர்களுடைய மனக்குமுறல்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அமைப்புகளின் செயல்பாட்டில் பளிச்செனத் தெரியும் அம்சங்கள் இரண்டு.

பொறுப்பாக்குவதும் தணிக்கை செய்வதும், சம்பவம் நடந்து முடிந்த பிறகு தரும் ஆய்வறிக்கையாகவே இருக்கின்றன. எனவே, தவறு நடந்துவிடுகிறது அல்லது உரிய காலத்தில் நடைபெறாமல் மிகவும் தாமதமாக நடக்கிறது. இதற்குக் காரணமானவர்களை அல்லது தவறு செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குக்கூட நீண்ட காலம் பிடிக்கிறது.

ஒரு செயலுக்கு யார் பொறுப்பு என்பதை அறிய, மறைமுகமாக கேள்விகளைக் கேட்பதும், அதையும் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்காமல் -அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களைக் கேட்பதாகவும் இருக்கிறது.

இந்தியாவில் பொது நிர்வாகத்தின் மீது நாடாளுமன்றத்துக்கு உள்ள கட்டுப்பாடு குறித்து 1952-1966 வரை மேற்கொண்ட ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

“”அரசியல்சட்டப்படி, அரசு நிர்வாகத்தின்மீது நாடாளுமன்றத்துக்கு முழு கட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை. அப்படியே அதற்கு அதிகாரம் இருந்தாலும் அதை அமல் செய்யும் உள்ள உறுதி அதனிடம் இல்லை.

இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. நிர்வாகத்தை முழுமையாக ஆராய்ந்து, தவறுகளைக் கண்டுபிடித்து, உரிய திருத்த நடவடிக்கைகளையோ, தண்டனை நடவடிக்கைகளையோ எடுக்க நாடாளுமன்றத்துக்கு அவகாசம் இல்லை. நீண்ட நேரம் அமர்ந்து பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஆராயவோ, விவாதிக்கவோ அவை உறுப்பினர்களுக்கு ஆர்வம் இல்லை. அவையின் கூட்ட நேரத்தை அதிகப்படுத்த அரசுக்கும் விருப்பம் இல்லை. அவை நடவடிக்கைகளில் உறுப்பினர்களுக்கு ஆர்வம் குறைவு; இதனாலேயே பல நேரங்களில் அவையில் குறைந்தபட்ச (மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம்) “”கோரம்” கூட இல்லை என்று மணி அடிக்கப்படுகிறது. பெரும்பாலான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பயிற்சியோ, அரசியல் விழிப்புணர்வோ, நிர்வாகத்தை நாடாளுமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமோ கிடையாது.

நிர்வாகத்தின் நெளிவுசுளிவுகளைத் தெரிந்துகொண்டு அதன் செயல்களை ஆராய்ந்து குறைகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலருக்குக் கிடையாது. நிர்வாகத்தின் பிரச்னைகள், அமைப்புமுறை, நிர்வாக நடைமுறை போன்றவை பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுயேச்சையான சிந்தனை உணர்வும் கிடையாது. இந்த அறிக்கை வந்து 40 ஆண்டுகள் ஆனபிறகும் கூட, நிலைமை பெருமளவுக்கு மாறிவிடவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல்படி செய்யப்படும் தொகுதி வளர்ச்சி நிதி என்ற செலவினத்தை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். 1993-ல் தலா ரூ.5 லட்சம் என்று மொத்தம் ரூ.37.5 கோடி ஒதுக்கப்பட்டது. 1994-ல் தலா ரூ.1 கோடி என்று உயர்த்தப்பட்டு ரூ.790 கோடியானது. பிறகு அதுவே ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இதே திட்டம் சட்டமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இந்த திட்டங்களிலும் இறுதிப்பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதில் 25% தான் போய்ச் சேருகிறது என்று தெரியவருகிறது.

இந்த நிலைமாற பின்வரும் பரிந்துரைகளைப் பரிசீலிக்கலாம்:

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதற்கு முரணாக உள்ள, அரசு ரகசியங்கள் காப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் தகவல் அறியும் சட்டம் வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே அது உருவான விதம், அதற்காக முதலில் மதிப்பிடப்பட்ட தொகை, செலவழிக்கப்பட்ட தொகை, அடைந்த பயன், திட்டம் தோல்வியா, வெற்றியா, சாதகம் அதிகமா பாதகம் அதிகமா என்பதைத் தொகுத்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

நிர்வாக நடுவர் மன்றம் போன்றவை வலுப்படுத்தப்பட்டு, விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். மனித வள மேம்பாட்டை அளக்கும் வழிமுறையைப் பின்பற்றி, ஒவ்வொரு சமூக நலத் திட்டத்தின் வளர்ச்சியையும் அளக்க வேண்டும். அரசு என்ற அமைப்புக்குப் பதிலாக, சமூகம் என்பதை ஊக்குவித்து அவர்களின் நன்மைக்கான திட்டங்களை அவர்களைக் கொண்டே அமல்படுத்தும் நவீன முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

காலாவதியாகிவிட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர தனிச்சட்டம் இயற்ற வேண்டும். ஆம்புட்ஸ்மேன், லோக்பால் என்பது வெறும் புகார்களைப்பெறும் அமைப்பாக நின்றுவிடாமல், நிர்வாகத்தினரைப் பதில்சொல்ல வைக்கும் அமைப்பாகச் செயல்பட வலுப்படுத்தப்பட வேண்டும். பொறுப்பாக்குதல் என்ற பெயரில் அரசு நிர்வாகப்பணியாளர்களின் செயல்பாட்டுச் சுதந்திரம், திறமை, நேர்மை, நியாயமான அணுகுமுறை ஆகியவற்றை நசுக்கும்படியான கட்டுப்பாடுகளைத் திணித்துவிடக்கூடாது.

(கட்டுரையாளர்: உறுப்பினர் – மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்.)

———————————————————————————————-

ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேட்டை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை: ப.சிதம்பரம் வேதனை

திண்டுக்கல், ஜூலை 10: ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதுதான் நம்முடைய மிகப் பெரிய தோல்வி என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரை:

கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவிகிதத்துக்கும் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், நமது மக்களிடம் எப்படி இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதுதான் அனைவரிடமும் உள்ள முக்கியக் கேள்வி.

உலகமயமாக்குதலின் பயன்கள் கிராமப்புற இந்தியாவையும் சென்று அடைந்திருப்பது தெளிவு. பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக் கணிப்புகளில் இந்தியாவின் ஏழ்மை விகிதம் கிராமப்புறங்களில் 37.3 சதவிகிதத்தில் இருந்து 28.3 சதவிகிதமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்று வேலைவாய்ப்பும், குறிப்பாக மகளிர் வேலைவாய்ப்பு கிராமப்புறங்களில் அதிகரித்து இருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகி உள்ளது.

கிராமப்புறங்களில் வளர்ச்சி இருந்தாலும், அது உணரும்படியாக இல்லாததற்குக் காரணம் மாற்றம் மிக மெதுவாக நடைபெற்று வருவதுதான். வளர்ச்சியை வேகப்படுத்துவதுதான் நம்முன் இருக்கும் சவாலாகும். இதற்கு முக்கியமாக கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள், நல்ல கல்வி, கூடுதலான வருவாய் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

இந்திய கிராமங்களில் குறைவான தொழில் முதலீடு, குறைந்த தொழில்நுட்ப வசதி, சந்தையை தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவைதான் தடைக்கற்களாக உள்ளன.

ஒதுக்கப்பட்ட கோடிகள் எங்கே?

  • கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 7 லட்சம் கிராமங்களுக்காக ரூ. 1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 88 ஆயிரம் கோடியும்,
  • குடிநீர் வசதிக்காக ரூ. 21 ஆயிரம் கோடியும்,
  • தரிசு நில மேம்பாட்டுக்காக ரூ. 5 ஆயிரம் கோடியும்,
  • பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்காக ரூ. 6,700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சராசரியாக இதன் மூலம் 7 லட்சம் கிராமங்களுக்கும் தலா ரூ. 17 லட்சம் கிடைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பள்ளி, குடிநீர் வசதி, கிராமச் சாலைகள் எளிதாக ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், உண்மையில் அவ்வாறு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன? பதில் கிடைக்க வேண்டும்.

கிராமப்புற இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்கி பாரத் நிர்மாண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 1.74 லட்சம் கோடி செலவில் 2009-ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

இத் திட்டத்தின் மூலம் கூடுதலாக நீர்ப்பாசன வசதியுடன் ஒரு கோடி ஹெக்டேர் பயிர் நிலத்தை உருவாக்கவும், 1,000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களுக்கு இணைப்புச் சாலை வழங்கவும், 60 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரவும் இன்னும் குடிநீர் வசதி பெறாத 74 ஆயிரம் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வசதி செய்து தரவும், மின் இணைப்பு இல்லாத 2.3 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும், தொலைபேசி வசதி இல்லாத 66,822 கிராமங்களுக்குத் தொலைபேசி வசதி செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நமது தவறுகள்

சாலைகளைப் போடுகிறோம். ஆனால், அவற்றைப் பராமரிக்க நிதி ஒதுக்குவதில்லை. மின்சாரத்தை வழங்குகிறோம். ஆனால், மின் திருட்டைத் தடுக்கவோ, மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கவோ தவறுகிறோம். வீடுகளைக் கட்டித் தருகிறோம். ஆனால், அவை குடியிருப்பதற்கு தகுதியில்லாத அளவுக்குக் கட்டப்படுகின்றன.

நீர்ப் பாசனத் திட்டங்களை உருவாக்குகிறோம். ஆனால், அதில் மக்கள் பங்களிப்பு இல்லை.

எல்லாவற்றையும்விட நாம் ஒதுக்கும் நிதியை தவறாக செலவிடுபவர்கள் மற்றும் முறைகேடு செய்பவர்களைக் தண்டிப்பதில்லை. அதோடு ஊழல், நிர்வாகச் சீர்கேடு மற்றும் திறமையின்மை ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டோம்.

புதிய நிர்வாக முû

மாநில அரசு என்பது மிகப் பெரிய நிர்வாகம் ஆகவும், ஊராட்சி மிகச் சிறிய நிர்வாகமாகவும் இருப்பதால் இடைப்பட்ட ஒரு நிர்வாகம் தேவை. எனவே ஒவ்வொரு 10 லட்சம் மக்கள்தொகைக்கும் ஒரு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான 10 உறுப்பினர்களை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், சாலைகள், குடிநீர் போன்ற அனைத்துத் துறைகளையும் மாவட்ட நிர்வாகம் கவனிக்கும். தேவைப்படும் நிதியை அரசு ஒதுக்கும். இதை நடைமுறைப்படுத்த அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை.

மத்திய, மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் போதும் என்றார் அமைச்சர் ப. சிதம்பரம்.

—————————————————————————————————————————

ஊழல் விசாரணை பணிகளுக்கும் “அவுட் சோர்சிங்’ மகாராஷ்டிராவில் புரட்சி

மும்பை: நிறுவனங்கள், வங்கிகள் உட்பட பல நிறுவனங்களும், தங்கள் பணிகளில் சிலவற்றை இன்னொரு நிறுவனத்திடம், ஒப்படைத்து, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம்; ஆனால், அரசு ஊழியர் நடத்தை, ஊழல் குறித்து விசாரிக்கும் பொறுப்பை, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வது பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், இப்படி ஒரு புரட்சியை செய்துள்ளது மகாராஷ்டிர அரசு.

இதனால், ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை கொந்தளித்துள்ளனர். இந்த அமைப்பு, முழு சுதந்திரமாக இயங்கும். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் தலைமையில் இயங்கும். அவருக்கு உதவ, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு சம்பளம் தரப்படும். இந்த அமைப்பிடம், எல்லா துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விவகாரங்களும் ஒப்படைக்கப்படும். அதை விசாரித்து, அரசின் ஊழியர் நலத்துறைக்கு அறிக்கையை அனுப்பிவிடும். அதன் பேரில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை, ஊழியர் நலத்துறை வெளியிட்டவுடன், ஊழியர்கள் பலரும் கொதித்தனர். “அரசுக்கு தொடர்பே இல்லாத மாஜி அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தினால், நியாயம் கிடைக்காது. மேலும், ஊழல் தான் அதிகரிக்கும்’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் சொல்வதை ஏற்க அரசு தயாரில்லை. பல துறைகளில் உள்ள விசாரணை பிரிவுகளை அரசு கலைத்துவிட்டது. “ஊழியர்கள் பற்றிய எந்த ஒரு விசாரணையும் புதிய அமைப்பிடம் தான் ஒப்படைக்க வேண்டும்’ என்று துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

——————————————————————————————————-
தூய்மையாகுமா பொதுவாழ்க்கை?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

“”முறையற்ற செயல்களை மேற்கொண்டு குடிமக்களை வருத்தும் அரசன் கொலைகாரர்களைவிட கொடியவன்.” – என்ற குறட்பாவின்படி ஆட்சியாளர்களுடைய நேர்மையின் கீழ்தான் நாடு நலம் பெறும்.

ஆளவந்தவர்களும் நிர்வாகத்தில் இருப்போரும் மக்களுக்குப் புகார் அற்ற தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும்.

இன்றைக்கு பொது வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றும் தங்களால், தங்களுக்காக ஆளப்படுகின்ற ஆட்சி என்ற நோக்கிலும் அரசை நடத்துகின்றனர்.

இந்த அவலப்போக்கை மாற்ற லோக்பால் மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் ஆகாமல் நின்றுபோனது. ஆனால் ஒப்புக்கு நாடாளுமன்றத்தில் பலமுறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக மேல்தட்டில் இருக்கின்றவர்களையும் தட்டிக் கேட்கின்ற மசோதா இன்றைய சூழலில் அவசியம் தேவை. பொது வாழ்வில் தூய்மையை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான அரசியல் வளரவும் இம்மசோதா வழிசெய்யும்.

பங்குபேர ஊழல், சர்க்கரைப்பேர ஊழல், டெலிகாம் ஒப்பந்த ஊழல், ஹவாலா ஊழல் என்று தொடங்கி இந்தியாவில் சர்வநிலையிலும் புரையோடிவிட்டது.

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது கூறப்பட்ட ரூ. 950 கோடி தீவன ஊழல் இந்தியாவையே ஆட்டி வைத்தது.

முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மருமகளுக்கு சட்டத்திற்குப் புறம்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களை சதீஷ் சர்மா ஒதுக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றம் மூலம் உண்மை எனத் தெரியவந்தது. இன்று சரத்பவார் மீது கோதுமை இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்திய வரலாற்றில் ஊழல்கள் தொடர் கதையாக இருக்கின்றன. பஞ்சாப் மாநில அன்றைய முதல்வர் பிரதாப் சிங் கைரான் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரு பிரதமராக இருந்தபோது அதுபற்றி விசாரிக்க எஸ்.ஆர். தாஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.

1958-ஆம் ஆண்டு பெரோஸ் காந்தி மக்களவையில் முந்திரா ஊழல் பிரச்னையை கிளப்பினார். ரூ. 1.25 கோடி மதிப்புள்ள பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் முறைகேடாக விற்பனை செய்தது சம்பந்தமாக ஊழல் குற்றச்சாட்டை பெரோஸ் காந்தி பேசினார். இது சம்பந்தமாக ஆவணங்களை மக்களவையில் வைக்கும்படி வேண்டி அன்றைய மக்களவைத் தலைவர் அனந்தசயன அய்யங்காரிடம் கோரினார். ரகசியக் கோப்புகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அய்யங்கார் முந்திரா ஊழல் சம்பந்தமான ரகசியக் கோப்புகள் அனைத்தையும் அவையில் வைக்கும்படி தீர்ப்பு வழங்கினார்.

இதன் பின்பு, பண்டித நேரு ஆணையின் பேரில் அன்றைய பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சி. சுக்லா இதுகுறித்து விசாரணை நடத்தினார். இறுதியில் பங்கு பேர ஊழலில் முந்திரா சம்பந்தப்பட்டுள்ளார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியில் இருந்து விலகினார். அம்மாதிரி கிருஷ்ணமேனன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிரதாப் சிங் கைரோனுக்குப் பிறகு பக்ஷி குலாம் முகமது மீதும், 1957-ல் கேரளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் அரசு, ஆந்திரத்திலிருந்து அரிசி வாங்கப்பட்ட ஊழல் முதல் இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் வரை செய்த ஊழல்களை ஒரு நீண்ட பட்டியலாக இடலாம்.

புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வி. காமத் மூன்றாவது மக்களவையில் சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் சீராஜின் ஊழலை அம்பலப்படுத்தினார். ஐந்தாவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய வணிகத் துறை அமைச்சர் எல்.என். மிஸ்ரா ஏற்றுமதி உரிமம் வழங்கியதில் ஊழல் செய்துள்ளார் என்ற பிரச்னை எழுப்பப்பட்டது. அன்றைய மக்களவைத் தலைவர் ஜி.எஸ். தில்லான், இது சம்பந்தமான ரகசிய ஆவணங்களைப் பார்வையிட அனுமதி வழங்கினார். இறுதியில், இந்தப் பிரச்னையில் ஊழல் நடந்தது என்று நாடாளுமன்றம் உறுதிபட கூறியது.

பாரத ஸ்டேட் வங்கியில் நடந்த நகர்வாலா ஊழலை அனைவரும் அறிவார்கள். ரூ. 60 லட்சம் தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்தினால் அந்த வங்கியின் அதிகாரி மல்கோத்ரா மூலம் வழங்கப்பட்டது என்ற பிரச்னை நாடு முழுவதும் எதிரொலித்தது.

இந்தச் சூழலில் நகர்வாலா மர்மமாக இறந்துவிட்டார். இந்தக் கிரிமினல் வழக்கு 32 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. யார் குற்றவாளி என்று இதுவரை நீதிமன்றம் தீர்ப்பு தரவில்லை என்பது வேதனையான செய்தி ஆகும். அந்தப் பணம் கொடுத்த வங்கி அதிகாரி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சஞ்சய் காந்தியின் மாருதி கார் தொழிற்சாலையில் பணியில் அமர்த்தப்பட்டார்.

ஐந்தாவது மக்களவையில் மாருதி கார் ஊழல் சம்பந்தமாக பல சட்ட விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்தப் பிரச்னை சம்பந்தமான விவரங்களைத் தொழில் அமைச்சகம் மக்களவையில் வைக்கவிடாமல் தடுத்தது என்ற குற்றச்சாட்டு அன்றைய இந்திரா காந்தி மீது சுமத்தப்பட்டது. அவசர நிலை காலத்தில் ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு ஷா கமிஷன் அமைக்கப்பட்டது.

ஏ.ஆர். அந்துலே, “”இந்திராகாந்தி அறக்கட்டளை அமைப்புக்கு’ பணம் வசூல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இது சம்பந்தமான ஆவணங்கள் மக்களவையில் வைக்கப்பட்டது. இறுதியாக நீதிபதி லின்டன் தீர்ப்பின்படி மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து அந்துலே விலகினார்.

பரபரப்பான போபர்ஸ் ஊழல் நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தது. இதனால் ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை மக்கள் அகற்றினார்கள். இந்த பேரத்தில் அவர் ரூ. 64 கோடி கமிஷனாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. ஒன்பதாவது மக்களவையில் தேசிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது போபர்ஸ் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டது.

போபர்ஸ் ஊழல் விசாரணை முடிவுறாத நிலையில் இன்றைக்கும் நிலுவையில் உள்ளது. குவாத்ரோச்சியை ஆட்சியில் உள்ளவர்கள் தற்போது பாதுகாக்கின்ற நிலை.

செயிண்ட் கிட்ஸ் பிரச்னை, வீட்டு வசதி ஊழல், ஜெ.எம்.எம். ஊழல், யூரியா இறக்குமதி ஊழல், ஹெக்டே மீது கர்நாடகத்தில் நில மோசடி குற்றச்சாட்டு என ஊழல்கள் பட்டியலும் நீண்டு கொண்டுள்ளன.

10-வது மக்களவையில் பங்கு வியாபாரி ஹர்ஷத் மேத்தா நேரிடையாக பல அரசியல் தலைவர்களிடம் பணம் கொடுத்தேன் என்று கூறினார். இறுதியாக, இது சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடப்பட்டது. இப் பிரச்னை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

சர்க்கரை பேர ஊழல், டெலிகாம் ஊழல் விவகாரம் போன்றவை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசப்பட்டன. இது சம்பந்தமாக, அன்றைய அமைச்சர் சுக்ராம் டெண்டர்களை கடைசி நிமிடத்தில் மாற்றி ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ. 20,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெரும் புள்ளிகளும், தொழிலதிபர்களும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாக 5729 நபர்கள் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இன்றும் அந்த ரகசியப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தவறு செய்யும் ஆட்சியாளர்களை விசாரிக்க “லோக்பால்’ போன்ற அமைப்பு தேவை என வலியுறுத்தப்பட்டது. 1960-ம் ஆண்டு கே. சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஊழல்கள் அதிகமாகிப் பரவி வருவதைப்பற்றியும் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் அரசுக்குப் பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தக் குழுக்கள் அனுமந்தையா, வெல்லோடு உன்னிநாதன், மாத்துர் போன்றோர் தலைமையில் அமைக்கப்பட்டன. 1966-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் மக்கள் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஊழல், தவறுகளைப் பற்றிய புகார்களை ஆராய ஓர் அமைப்பு தேவையென வலியுறுத்தியது.

“லோக்பால்’ போன்ற அமைப்பு செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் பிரதிநிதிகள் இதயசுத்தியோடு அணுகவில்லை என்பதே ஆகும்.

மக்கள் மத்தியில் லோக்பால் பற்றி பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டும் நடைமுறைக்கு வராத அளவில் அணை போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம்தான் வலுத்துள்ளது.

“”இதோ புலி வருகிறது…” என்பது போன்று லோக்பால் மசோதாவின் கதையும் உள்ளது. லோக்பாலுக்கு எப்போது விடிவுகாலம் வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in abuse, Chidhambaram, Collector, Commissioner, Corruption, Court, Democracy, Economy, Education, Election, Employment, Finance, Gandhi, GDP, Governor, Govt, Growth, Honesty, IAS, Improvements, Inflation, Influence, infrastructure, IPS, Jobs, Judge, Jury, Justice, kickbacks, Law, Lecture, Lok Ayuktha, Lokpal, Metro, Money, Officer, Order, Party, Planning, Police, Politics, Poor, Poverty, Power, Public, Ramamurthy, Ramaraj, Recession, Republic, responsibility, revenue, Rich, Rural, service, Suburban, Wealthy | Leave a Comment »

Karnatka CM Kumarasamy’s son pelts stones and intimidates hotel workers

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006

நான் முதல்-மந்திரி பையன்; ஓட்டலை தகர்ப்பேன்: ஊழியரை மிரட்டிய குமாரசாமி மகன்

அரசியல்வாதிகளின் மகன்கள் அவ்வப்போது பிரச்சினைகளில் சிக்கி மாட் டிக்கொள்வது வழக்கம். மறைந்த பாரதீயஜனதா பொதுச் செயலாளர் பிரமோத்மகாஜன் மகன் பிரவீன்மகாஜன், அரி யானா மந்திரி மகன் மனுசர்தா ஆகியோர் சமீபத் தில் பிரச்சினைகளில் சிக்கி னார்கள்.

இதே போல கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில்குமாரும் சர்ச் சையில் சிக்கினார். பெங்க ளூரில் உள்ள ஒருஓட்ட லில் அவர் தனது நண்பர் கள் மஞ்சுநாத், சையத் ஆகி யோருடன் சேர்ந்து தகராறு செய்தார். அதிகாலையில் சாப்பாடு இல்லை என்று கூறியதால் அவர்கள் ஓட் டல் மீது கல்வீசி ரகளை செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் முதல்-மந்திரி மகன் மீது தாக்கினார்கள். இருதரப்பிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில் நிகில்குமார் முதல்-மந்திரியின் மகன் என்று குறிப்பிடவில்லை.போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

நேற்று அதிகாலை ஓட்டலுக்கு வந்தபோது நிகில்குமார் கவுடா மற்றும் அவரது நண்பர்கள் குடி போதையில் இருந்து உள்ளனர். நான் முதல்-மந்திரி மகன் நான் நினைத்தால் ஓட்டலை தகர்த்து விடுவேன் அல்லது மூடி விடுவேன் என்று ஓட்டல் ஊழியரை மிரட்டியுள்ளார். இதை ஓட்டல் ஊழியர் தெரி வித்தார். நிகில் குமார் கல்லூரியில் ஏற்கனவே நீக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

Posted in abuse, Arrest, case, Chief Minister, CM, FIR, Food, Haryana, Hotel, Karnatka, Kumarasamy, Nikhil Kumar, Police, Power, Pramod Mahajan, responsibility, Syed | Leave a Comment »