Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Karnatka CM Kumarasamy’s son pelts stones and intimidates hotel workers

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006

நான் முதல்-மந்திரி பையன்; ஓட்டலை தகர்ப்பேன்: ஊழியரை மிரட்டிய குமாரசாமி மகன்

அரசியல்வாதிகளின் மகன்கள் அவ்வப்போது பிரச்சினைகளில் சிக்கி மாட் டிக்கொள்வது வழக்கம். மறைந்த பாரதீயஜனதா பொதுச் செயலாளர் பிரமோத்மகாஜன் மகன் பிரவீன்மகாஜன், அரி யானா மந்திரி மகன் மனுசர்தா ஆகியோர் சமீபத் தில் பிரச்சினைகளில் சிக்கி னார்கள்.

இதே போல கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில்குமாரும் சர்ச் சையில் சிக்கினார். பெங்க ளூரில் உள்ள ஒருஓட்ட லில் அவர் தனது நண்பர் கள் மஞ்சுநாத், சையத் ஆகி யோருடன் சேர்ந்து தகராறு செய்தார். அதிகாலையில் சாப்பாடு இல்லை என்று கூறியதால் அவர்கள் ஓட் டல் மீது கல்வீசி ரகளை செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் முதல்-மந்திரி மகன் மீது தாக்கினார்கள். இருதரப்பிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில் நிகில்குமார் முதல்-மந்திரியின் மகன் என்று குறிப்பிடவில்லை.போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

நேற்று அதிகாலை ஓட்டலுக்கு வந்தபோது நிகில்குமார் கவுடா மற்றும் அவரது நண்பர்கள் குடி போதையில் இருந்து உள்ளனர். நான் முதல்-மந்திரி மகன் நான் நினைத்தால் ஓட்டலை தகர்த்து விடுவேன் அல்லது மூடி விடுவேன் என்று ஓட்டல் ஊழியரை மிரட்டியுள்ளார். இதை ஓட்டல் ஊழியர் தெரி வித்தார். நிகில் குமார் கல்லூரியில் ஏற்கனவே நீக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: