Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Factory’ Category

When Sparklers Light Up Diwali Sky – Sivakasi Fireworks & Manual Labor: Need for the automation in Industrialization

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2007

பட்டாசுத் தயாரிப்பில் இயந்திரமயம் காலத்தின் கட்டாயம்

சிவகாசி, நவ. 5: பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பைத் தடுக்க அந்தத் தொழிலில் இயந்திரமயமாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முழுவதும் தனிநபர்களின் முதலீடுதான் உண்டு. சிறுசிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வர்த்தகத்தின் அளவு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.

சிவகாசியில் தொடக்க காலத்தில் கலர் மத்தாப்பு தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொழில் வளர்ச்சி அடைந்து இப்போது ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

சுமார் 600-க்கும் மேல் பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1.30 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 25 சதவீத தொழிலாளர்கள் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொழிலில் சுமார் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆலைகளில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை பணியில் அமர்த்தி 3 ஆண்டு கழித்து ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுப்பதால் இங்கிருந்து பலர் அங்கு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர் பற்றாக்குறையால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் அதிகரித்துவிட்டது.

பட்டாசு முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பல ஆலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பெருகியதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே இப்போது தொழில் நலிவடைவதைத் தடுக்க பட்டாசு ஆலையில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது.

சரவெடி பின்னுவதற்கு தொழிலாளர் கிடைக்காததால் இப்போது சரவெடி பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சீனாவில் பட்டாசு தயாரிப்பில் இயந்திரம் புகுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சீனத் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே போல பட்டாசு ஆலைகளிலும் ஒரு சில பணிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் திப்பெட்டி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் ஜே.லாசர் கூறியது:

பல தொழிலாளர்கள் வேறுபணிக்கு சென்றுவிட்டனர் என்பது உண்மைதான். பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி குறைவாகக் கிடைக்கிறது. ஆண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 40, பெண்களுக்கு ரூ.30 தான் கிடைக்கிறது.

பட்டாசு தயாரிப்பில் ஒப்பந்தமுறை உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிலாளர் தங்கள் தேவையை நிறைவேற்றும் பணிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றார்.

பட்டாசு ஆலை அதிபர் சீனிவாசன் கூறியது:

தீப்பெட்டி ஆலைகளில் இயந்திரம் வைக்க சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.

எனவே நினைத்தவுடன் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த இயந்திரத்தை அமைக்க ஆலையின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். இது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு முடியாத காரியம். எனினும் படிப்படியாக இயந்திரமயமாக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.

Posted in Activists, Automation, Ban, Biz, Business, Child, Compensation, Crackers, Deepavali, Deepavalli, Diwali, Economy, employees, Factory, Fire works, Fireworks, Govt, Hours, Industrialization, Industry, Inhumane, Jobs, Labor, rules, Sector, Sivagasi, Sivakasi, Sparklers, Work, workers | Leave a Comment »

Simpsons – Vedanthangal in Chennai: A retreat for migrating birds (North Madras)

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

சுற்றுச்சூழல்: சென்னையில் ஒரு வேடந்தாங்கல்!

சென்னை என்றாலே ஒருவருக்கு என்ன நினைவுக்கு வரும்?

போக்குவரத்து நெரிசல். புழுதிபடிந்த சாலைகள். வாகனப்புகை நடுவில் சிக்கித் திணறும் மனிதர்கள். வீடுகளில் தோட்டம் வைக்க முடியாத அளவுக்கு இட நெருக்கடி. சாலையில் 30 நிமிஷம் நடந்தால் 300 வகையான மாசுகள் படிந்துவிடும் அளவுக்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள். நடக்கவே முடியாத இட நெருக்கடி. ஏதோ கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் வேண்டுமானால் கொஞ்சம் பச்சைப் பசேல் செயற்கைப் புல் வெளிகளைப் பார்க்கலாம்.

மாநகராட்சியின் புண்ணியத்தால் எங்கேயாவது தென்படும் பூங்காக்கள்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் நகர்ப்புறங்களில் விழுந்துவிட்ட இடைவெளி என்னவோ அதிகரித்துக் கொண்டே போகிறது.

அதிலும் வடசென்னையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கும் குப்பைகள். தெருவில் வழிந்தோடும் சாக்கடை. தொழிற்சாலைகளின் புகை மண்டிய வானம். நெடி வீசும் காற்று. அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் மனித இயந்திரங்கள். மனிதர்கள் நிம்மதியாக வாழ்வது சந்தேகம் என்று கூறும் அளவுக்கு நெருக்கடி. புறாக் கூண்டு குடியிருப்புகள்.

ஆனால் இந்த வடசென்னைப் பகுதியில் வனம் போல் ஒரு பகுதி; அங்கே பல வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. ஆம்! இங்கே ஒரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது. நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் இது உண்மை.

நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள். ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள். வேடந்தாங்கல் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சென்னையில் வேடந்தாங்கல் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம் அது இருப்பது சென்னை செம்பியம் பகுதியில்தான்.

தொழிற்சாலை என்றாலே அது சுற்றுச் சூழலைக் கெடுக்க வந்தது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆம் இந்த சென்னை வேடந்தாங்கல் உருவானதே ஒரு தொழிற்சாலையால்தான்.

நிலம் கிடைத்ததா? அதில் தொழிற்சாலையைத் தொடங்கினோமா? லாபம் சம்பாதித்தோமா? என இருக்கும் பல தொழிற்சாலை நிர்வாகங்களின் மத்தியில் வித்தியாசமாக, கிடைத்த நிலத்தில் இருந்த குளங்களை நல்லபடியாகப் பாதுகாத்து, தொடர்ந்து பராமரித்து வந்தது சிம்சன் நிறுவனம். அதன் விளைவாக வந்து சேர்ந்தனர் பல வெளிநாட்டுப் பறவை விருந்தினர்கள்.

முதன் முதலில் 1978-ல் இங்கு “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரிய வகை பறவைகள் இருப்பதைத் தற்செயலாகப் பார்த்தனர். அடடா! நம் பகுதியை நாடி பறவைகள் வர ஆரம்பித்துவிட்டனவே! என ஆச்சரியப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் இங்குள்ள 2 குளங்களையும் அட்டகாசமாகப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.

சென்னையில் மழை வருவதே அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான். அதிகம் போனால் ஒரு பத்துநாட்கள் பெய்யும். அப்புறம் ஆண்டு முழுதும் வாட்டி வதைக்கும் வெயில்…வெயில்…தண்ணீர் பஞ்சம்…பற்றாக்குறை.

சில வருடங்களில் இந்தப் பத்து நாள் மழையும் கூட ஏமாற்றிவிடும். மக்கள் குடிக்கத் தண்ணீரின்றி படும்பாடு சொல்லி மாளாது. அப்படிப்பட்ட சிங்காரச் சென்னை மாநகரில் ஒரு குளத்தை வற்றாமல் பாதுகாப்பது என்பது சாதாரண விஷயமா? என்ன?

இந்த வளாகத்தில் பெய்யும் மழை நீரில் ஒரு துளி கூட வீணாகாமல் அனைத்தையும் சேகரித்து இந்தக் குளங்களுக்கு வழங்கும் சிறந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பு இங்கு செயல்படுகிறது.

அதன் விளைவாக – முறையான இயற்கை வழி பராமரிப்பின் காரணமாக – அந்த 2 குளங்களும் தற்போது பறவைகள் சரணாலயமாக மாறியுள்ளன. சென்னையில் மிக வேகமாக அழிந்து வரும் “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரியவகை கொக்கு, முக்குளிப்பான், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், கொண்டை நீர்க்காகம், பாம்புதாரா, சின்ன கொக்கு, உன்னி கொக்கு, குருட்டு கொக்கு, செங்குருகு, கம்புள் கோழி, தாழைக்கோழி, நாமக்கோழி, நீர்க்கோழி, நில தாழைக்கோழி, மேற்கத்திய பொன் முதுகு மரங்கொத்தி போன்ற 110 வகை பறவைகள் இங்கு வந்து இளைப்பாறிச் செல்கின்றன.

இவற்றில் இரவில் உணவு தேடும் வக்கா உள்ளிட்ட சில வகைப் பறவைகள் இந்த குளங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.

இவை மட்டுமல்லாது ஐரோப்பா, இலங்கை போன்ற அயல் நாடுகளில் இருந்து “பிட்டா’ உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன.

“”சிம்சன் நிறுவனத்தால் சுமார் 29 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இந்த குளங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 22 ஆயிரம் பறவைகள் இருந்தன. அப்போது, பி.என்.எஸ். எனப்படும் மும்பையை சேர்ந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடம் உலக அளவிலான பறவைகள் சரணாலயங்கள் பட்டியலில் இடம் பெற்றது” என்றார் செம்பியம் எஸ்டேட் மேலாளர் பி. சிவராமமூர்த்தி.

“வக்கா’ எனப்படும் பறவைகள் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமாக அப்போது இருந்தனவாம்.

நிறையப் பேருக்கு இப்படியோர் அதிசயம் இருப்பது தெரியாது என்றாலும் தெரிந்தவர்கள் இங்கு வந்து குவிவது சாதாரண நிகழ்வு.

இந்த சரணாலயம் இருக்கும் செம்பியம் பகுதி மட்டுமல்லாது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து கண்டுகளிக்கின்றனர். இதற்கு நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

இங்கு வந்து இந்த குளங்களையும், அதில் தங்கும் பறவைகளையும் பார்த்து செல்கின்றனர்.

இந்தப் பறவைகளின் பழக்க வழக்கங்கள், நீர் நிலைகளின் சுற்றுச்சூழல் தன்மை போன்றவை குறித்து நீர்ப்பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் சென்னை கால்நடை அறிவியல் கல்லூரி மாணவர்களும் ஆராய்ச்சி கட்டுரைகளை உருவாக்கியுள்ளனர்.

110 வகையான பறவைகள் வந்து சென்ற இந்தப் பகுதியில் தற்போது 10, 12 வகைகளை சேர்ந்த சில நூறு பறவைகள் மட்டுமே வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் குளங்கள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி இருந்த மற்ற நீர் நிலைகள் மிக வேகமாக அழிந்து வரும் நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவது கவலை தரக்கூடிய ஒன்றாகும்.

“”இந்த இடத்தைச் சிறப்பாகப் பராமரிக்க விரும்புகிறோம், இது தொடர்ந்து நடைபெறும், பறவைகள் வந்தாலும், வராவிட்டாலும் இந்தக் குளங்கள் இதே அளவு முக்கியத்துவத்துடன் சிறப்பாகப் பராமரிக்கப்படும்” என்று உறுதியாகக் கூறுகிறார்கள் சிம்சன் நிர்வாகத்தினர்.

சென்னை மக்கள் தொழில் வளர்ச்சி, புதிய குடியிருப்புகள் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இவர்களே பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சென்று வேடந்தாங்கலை ரசிப்பார்கள். நம்மிடம் அதுபோன்ற இடம் இல்லையே என அப்போது அங்கலாய்ப்பார்கள். இதற்குக் காரணம் இப்படியோர் இடம் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்தச் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள பிற நீர்நிலைகளைக் கான்கிரீட் வனங்களாக மாற்றாமல் இருந்தால்தான் இங்கு பறவைகள் தொடர்ந்து வரும்.

ஆனால் செம்பியம் வளாகத்துக்கு அருகில் இருந்த மாதவரம் ஏரி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

“சிம்சன்’ நிறுவனம் மட்டும் இந்தப் பகுதியைத் தொடர்ந்து பறவைகள் சரணாலயமாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.

ஆனால் நீர் நிலைகளை அரசும், மக்களும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் பலருக்கும் தெரியாத இந்தப் பறவைகள் சரணாலயம் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது.

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகையில் அமைந்த இந்தக் குளிர்வனம் காய்ந்து போவதை யார்தான் கற்பனை செய்ய முடியும்?

Posted in Chennai, employees, Environment, Factory, Industry, job, Kathir, Lakes, Madras, migration, Migratory, Nature, Protection, Rains, Rainwater, retreat, Simpsons, Source, Stream, Summer, Tanks, Vedandhaangal, Vedandhangal, Vedanthaangal, Vedanthangal, Water, Winter, workers | Leave a Comment »

Textile Industry: Current Trends, analysis – S Gopalakrishnan (Garment Exports)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

ஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.

2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.

ஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.

எனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.

சீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.

இந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.

மத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

எனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.

அதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.

இது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.

இந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.

அதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in America, Bangladesh, Budget, Capital, Cash, China, Commerce, Conversion, Dollar, Dress, Dresses, Economy, Employment, EU, Europe, Exchange, Exports, Factory, Fashion, Garments, GDP, Govt, Honduras, Imbalance, Incentives, Income, Indonesia, Industry, Inflation, Jobs, Knit, Loss, Monetary, Money, Nicaragua, Profit, revenue, Rupee, Srilanka, Tariffs, Tax, Textiles, Thirupoor, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tiruppoor, Tiruppur, Tirupur, Trade, US, USA | Leave a Comment »

Tamil Nadu signs MoUs with Caparo, Fenner – SIPCOT pact with two industries

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தமிழகத்தில் 2 புதிய தொழிற்சாலை: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை, செப். 13:தமிழகத்தில் 2 புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை கையெழுத்தானது.

ஃபென்னர் இந்தியா நிறுவனம் மற்றும் கெப்பாரோ இன்ஜினீயரிங் இந்தியா (பி) நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.

இவ்விரு நிறுவனங்களும் சிப்காட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது, கட்டுமான வசதி மற்றும் திட்ட வசதிகள் குறித்து எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சிப்காட் மேலாண் இயக்குநர் கோவிந்தன் மற்றும் ஃபென்னர் இந்தியா நிறுவனம் சார்பில் எல். ராம்குமார் ஆகியோரும் கெப்பாரோ என்ஜினீயரிங் சார்பில் சுனில் ஹிலாஜனி ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

ஃபென்னர் இந்தியா நிறுவனம் டயர் பேப்பர், சிமென்ட், பால் பண்ணை, அக்ரோ ஜெனிடிக்ஸ் மற்றும் பிற பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் இந்நிறுவனத்தின் முதலீடு ரூ. 200 கோடியாகும்.

தற்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழில் பூங்காவில் ஆயில் சீல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தொடங்க முன்வந்துள்ளது. அத்துடன் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பெல்ட் தயாரிப்புக்கான தொழிற்சாலை ஒன்றை, பின்தங்கிய பகுதியான நிலக்கோட்டையில் தொடங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ. 35 கோடி முதலீட்டிலான இத்தொழிற்சாலை மூலம் நேரடியாக 150 பேருக்கும் மறைமுகமாக 150 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிறுவனம் ஓராண்டில் உற்பத்தியைத் தொடங்கும்.

லண்டனில் வாழும் இந்தியத் தொழிலதிபர் ஸ்வராஜ்பாலின் குழும நிறுவனம் கெப்பாரோ இன்ஜினீயரிங். இந்நிறுவனம் சென்னையை அடுத்த ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை தொடங்க உத்தேசித்துள்ளது. அத்துடன் இயந்திர வில்லைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிலக்கோட்டையில் தொடங்கவும் இந்நிறுவனம் முன்வந்துள்ளது. ரூ. 40 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இத்தொழிற்சாலை மூலம் 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 2009-ம் ஆண்டு அக்டோபரில் இத்தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கும் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Agriculture, Belts, Caparo, Commerce, Conveyor, DMK, Economy, Employment, Factory, Farming, Fenner, Genetics, Industry, Jobs, milk, MoU, Nilakkottai, Nilakottai, oil, Seal, Seals, SIPCOT, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, Sriperumputhoor, Sriperumputhur, Stalin, Tamil Nadu, Work | Leave a Comment »

Titanium dioxide, titanium(IV) oxide or titania – Seashore Wealth

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

டாட்டா டைட்டானியம்

Thinnai – Tata, Sathankulam, Titanium Di Oxide Project: “நேற்று அரேபியா! இன்று தேரிக் காடு!! அசுரன், இரா.இரமேஷ், கு.காமராஜ்”

1. “Titanium – How it is made?” http://www.madehow.com/Volume-7/Titanium.html

2. “Titanium”, 2005 Minerals Yearbook, United States Geological Survey http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/titanium/

3. “Mineral Sands – Fact Sheet 10” www.doir.wa.gov.au/documents/gswa/GSD_Fact_Sheet_10.CV.pdf

4. ” Advancing Development of Kwale Project in Kenya” TIOMIN Resources Inc., June 2006 www.tiomin.com/i/pdf/Tiomin_Facts_Sheet.pdf

5. “Zircon Development in Coburn Mine, Western Australia” www.gunson.com.au/files/reports/ABN%20AMRO30.1.06.pdf

6. ” THE NEW MINERAL SANDS PLANT OF THE 3rd MILLENNIUM… HOW DIFFICULT-TO-TREAT FEEDSTOCKS CAN GET A NEW LEASE ON LIFE” J.M. ELDER, and W.S. KOW Outokumpu Technology Inc, Jacksonville, FL, www.outotec.com/28719.epibrw

7. “TITANIUM TETRACHLORIDE PRODUCTION BY THE CHLORIDE ILMENITE PROCESS”, Office of Solid Waste U.S. Environmental Protection Agency http://www.epa.gov/epaoswer/other/mining/minedock/tio2/

8. “Titanium Di Oxide”, www.tidco.com/images%5CTITANIUM%20DIOXIDE.doc

9. ” Project Profile on Titanium Tetrachloride / Titanium Dioxide ” – Mott MacDonald http://www.vibrantgujarat.com/project_profile/chemicals_petrochemicals_pharmaceuticals/chemicals-petrochemicals/titanium-dioxide23.pdf

10. “Opportunities in the Electrowinning of Molten Titanium from Titanium Dioxide” http://doc.tms.org/ezMerchant/prodtms.nsf/ProductLookupItemID/JOM-0510-53/$FILE/JOM-0510-53F.pdf?OpenElement

11. http://webmineral.com/data/

12. http://blonnet.com/2002/11/24/stories/2002112401310200.htm

கடற்கரையில் டைட்டானியப் புதையல்!

சிங்கநெஞ்சன்

1791ஆம் ஆண்டு~இங்கிலாந்தில் வில்லியம் க்ரீகர் எனும் புவி அறிவியல் ஆர்வலர், ஆற்றோரம் படிந்திருந்த மணலில் கறுப்பு நிற மணலை மட்டும் பிரித்து ஆராய்ந்தார். காந்தத்தால் ஓரளவு ஈர்க்கப்பட்ட அந்த கறுப்பு மணலில் இரும்பு ஆக்ûஸடு மட்டுமல்லாமல் வேறொரு உலோக ஆக்ûஸடும் சேர்ந்திருந்தது. அதுவரை அறியப்பட்ட உலோகங்களிலிருந்து அந்த உலோகம் வேறுபட்டிருந்தது – அதுதான் டைட்டானியம். அந்த கறுப்பு மணலின் பெயர் இல்மனைட்.

ஆனால் அதற்கு டைட்டானியம் என்று பெயர் வைத்தவர் மார்ட்டின் க்ளாப்ராத் எனும் ஜெர்மானிய வேதியியல் அறிஞர். 1795-ல் இவர் ரூட்டைல் எனும் மற்றொரு கனிமத்திலிருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுத்தார். டைட்டன் என்ற சொல்லுக்கு “வலிமையானவன்’ என்னும் பொருள் உண்டு.

டைட்டானியம் ஓர் உலோகத் தனிமம். இயற்கையில் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் சேர்மமாகக் கிடைக்கிறது. பூமியின் மேற்பகுதியில் அதிக அளவில் உள்ள தனிமங்கள் என்று பார்த்தால் டைட்டானியத்திற்கு 9-வது இடம். பெரும்பாலான தீப்பாறைகளிலும் சில வகை உருமாற்றுப் பாறைகளிலும், இப்பாறைகள் சிதைந்து அதன் விளைவாக உருவான படிவுப்பாறைகளிலும் டைட்டானியம் சிறிதளவு உள்ளது.

இந்த உலோகம் அலுமினியத்தைப்போல் இலேசானது. ஆனால் எஃகுவைப்போல் உறுதியானது. அதிக வெப்பம், வேதியியல் அரிமானங்களைத் தாங்கக்கூடியது.

இத்தனை சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த டைட்டானியம் உலோகத் தனிமத்தை டைட்டானியம் – டை – ஆக்ûஸடு எனும் அதன் சேர்மத்திலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சி வணிக ரீதியில் வெற்றி பெற்றது 1946}ல் தான். அதன்பிறகும் கூட டைட்டானியத்தின் உபயோகங்கள் முழுமையாக உணரப்படவில்லை.

1950-களிலும் 1960-களிலும் நடந்து கொண்டிருந்த பனிப்போரின்போது அன்றைய சோவியத் யூனியன், டைட்டானியத்தை போர் விமானங்களிலும் மற்றைய போர் தளவாடங்களிலும் பயன்படுத்தத் தொடங்கியது. அதன்பின்னரே டைட்டானியத்தின் போர்க்கால முக்கியத்துவம் முழுமையாக உணரப்பட்டது.

டைட்டானியம் கலந்த எஃகு தற்போது உயர் தொழில்நுட்ப விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், விண்வெளி ஓடங்கள், மருத்துவ அறுவை சிகிச்சைக் கருவிகள், மின் சாதனங்கள் மற்றும் பல உயர் தொழில் நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அரிமானத்தை எதிர்க்கும் ஆற்றல் உள்ளதால் கடல் நீரைக் குடிநீராக மாற்றப் பயன்படுத்தப்படும் சாதனங்களிலும் இந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது.

டைட்டானியம் டை ஆக்ûஸடு பெரும்பாலும் பெயின்ட் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் மாவுபோல் இருக்கும் டைட்டானியம் டை ஆக்ûஸடு நிறமியிலிருந்து தயாரிக்கப்படும் வர்ணப்பூச்சுகள் தரமானவை. சிறந்த ஒளிர்தன்மை, நிறைந்த உழைக்கும் திறம், தூய வெண்மை நிறம், ஒளியை உள்ளே புகவிடா தன்மை இவையெல்லாம் டைட்டானியம் – டை – ஆக்ûஸடு நிறமிக்கு உரித்தானவை.

சாதாரண ஈய வர்ணப் பூச்சுகளிலுள்ள நச்சுத்தன்மை டைட்டானியம் டை ஆக்ûஸடு பூச்சுகளில் இல்லை. இந்த நிறமிகள் ரப்பர் தொழில், பிளாஸ்டிக் தொழில், தோல் மற்றும் துணி உற்பத்தி, அழகு சாதனத் தயாரிப்பு மற்றும் காகித ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பற்பசைகளிலும் டைட்டானியம் – டை – ஆக்ûஸடு பயன்படுகிறது.

இல்மனைட் எனும் கரிய நிற கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் வெள்ளை நிற நிறமியின் மிக முக்கிய தாதுப்பொருள். ரஷியாவின் “இல்மன்’ மலை மற்றும் ஏரிப் பகுதிகளில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தக் கனிமத்திற்கு “இல்மனைட்’ என்று பெயரிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் கிடைக்கும் இல்மனைட் கருமணலில் 55 சதவிகிதம் டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.

“ரூட்டைல்’ எனும் கனிமத்தில் 92 சதவிகிதம் முதல் 96 சதவிகிதம் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாகிய பாறைகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வெப்பத்தில் விரிந்தும் குளிரில் சுருங்கியும் சிறிது சிறிதாகச் சிதைவுறத் தொடங்குகின்றன. இந்தச் சிதைவுறுதலின்போது பாறைகளில் உள்ள கனிமங்கள் உதிர்கின்றன. இவ்வாறு உதிர்ந்த கனிமத்துகள்கள் மழைநீரால் அரிக்கப்பட்டு சிற்றோடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்படும் இக் கனிமங்கள் ஓரளவிற்கு ஆற்றங்கரைகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் வண்டல்களாகப் படிகின்றன. கணிசமான அளவு கனிமங்கள் கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடிப்பகுதியில் பல மீட்டர்கள் கனத்திற்குப் படிவங்களாகப் படிந்து போகின்றன.

கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடியில் படிந்த இப் படிவங்களில் உள்ள இல்மனைட், ரூட்டைல் போன்றவை அவைகளுடன் சேர்ந்து படிந்துள்ள குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்ற கனிமங்களை விட அடர்த்தி அதிகமானவை. எனவே இவை அடர் கனிமங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

கரையோரமுள்ள கடலின் கீழ் படிந்த மணலும், கடற்கரையோரமுள்ள மணலும் அலைகளில் சிக்கி முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்படும்போது அடர்த்தி மிகுந்த இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்ற கனிமங்கள் கரையோரம் படிந்து அளவில் மிகுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெறுவதால் பல லட்சக்கணக்கான டன்கள் அளவிற்கு இக் கனிமங்கள் சேர்ந்து விடுகின்றன.

இதுபோன்று உருவாகும் படிவங்களை புவி அறிவியல் வல்லுநர்கள் ஒதுங்கு படிவங்கள் (ப்ளேசர் டெபாசிட்) என்று அழைக்கிறார்கள். தாய்ப்பாறைகளில் ஒரு சதவிகிதம் அளவிற்கே இருக்கும் இந்த அடர் கனிமங்கள் ஒதுங்கு படிவங்களில் 30 முதல் 35 சதவிகிதம் வரை இருப்பது இயற்கையின் விளையாட்டால் ஏற்பட்ட இனிய விளைவே ஆகும்.

இந்த ஒதுங்கு படிவங்கள் தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமல்லாது, கடற்கரையை ஒட்டியுள்ள தேரி மணற்திட்டுப் பகுதிகளிலும் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் இல்மனைட் மற்றும் ரூட்டைல் அடர் கனிமங்கள் கிடைக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. கேரளம், ஆந்திரம், ஒரிசா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரக் கடற்கரைப் பகுதிகளிலும் ஒதுங்கு படிவங்கள் உள்ளன.

இந்தப் படிவங்கள் குறித்து பூர்வாங்க ஆய்வுகளை இந்திய புவி அறிவியல் ஆய்வுத்துறையினர் (ஜி.எஸ்.ஐ.) மேற்கொண்டனர். தொடர்ந்து மத்திய அணுக் கனிம ஆய்வு இயக்ககம் விரிவான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வு இந்தியக் கடற்கரையில் சுமார் 2,400 கி.மீ. நீளத்திற்கு நடத்தப்பட்டது.

தென் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 மீட்டர் ஆழம்வரை இந்தக் கனிமங்கள் உள்ளதாக அணுக் கனிம இயக்கக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடற்கரை மணலில் சுமார் 13 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை அடர் கனிமங்கள் உள்ளன. அணுசக்தித் துறையில் பயன்படும் தோரியம் அடங்கியுள்ள மானோசைட், தொழில்துறைகளில் பயன்படும் கார்னெட், சில்லிமினைட் மற்றும் ஜிர்க்கான் கனிம மணல்களும் இப் பகுதிகளில் கிடைக்கின்றன.

தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9.8 கோடி டன் இல்மனைட்டும் சுமார் 0.5 கோடி டன் ரூட்டைலும் உள்ளதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன. இவை இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள பெருங்கொடை. அந்த இயற்கை அன்னைக்கு ஊறு விளைவிக்காமல், இயற்கைச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் இந்த அரிய செல்வத்தை அதற்கென வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி அளவோடு எடுத்துப் பயன்பெறுவதே அறிவுடைமை ஆகும்.

(கட்டுரையாளர்: புவி அறிவியலாளர்)

——————————————————————————————————————————–

டைட்டானியம் டை ஆக்ஸைடு-வரமா, சாபமா?

டி .எம். விஸ்வநாத்

டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலை – செய்தி ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மாநிலம் தழுவிய அளவில் இந்த விஷயம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தனது குழுவை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அனுப்பி அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் பதிலளித்தே மாய்ந்து போகிறார்கள். ஆனால் இவ்வாறு கட்சிகள் கருத்து கேட்பதால் அப்பகுதி மக்கள் ஒரு தெளிவுக்கு வந்து விட்டார்கள். பொட்டல் காடு என்று தங்களது நிலப்பரப்பை நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அங்கு டைட்டானியம் டை ஆக்ûஸடு என்ற விலைமதிக்க முடியாத கனிமம் உள்ளது என்ற தெளிவுதான் அது.

எனவே இனிமேல் ரத்தன் டாடாவே நேரில் வந்து கேட்டாலும்கூட நிலத்திற்குக் கூடுதல் விலை கேட்க அப்பகுதி மக்கள் தயங்க மாட்டார்கள். டைட்டானியம் டை ஆக்ûஸடின் மதிப்பு அப்படி!

நமது பகுதிகளில் உள்ள மணலில் ஒருவித கருப்பு மணல் இருக்கும். இந்த மணலில் உள்ள ஒருவித கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு. மணலைச் சூடுபடுத்தி அதில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்கும்போது ஒருவித வெள்ளை நிறப்பொடி கிடைக்கிறது. அதுதான் டைட்டானியம் டை ஆக்ûஸடு. இது வெப்பத்தைத் தாங்கக்கூடியது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை படைத்தது.

இக்கனிமம் “அலாய்’ உலோக வகையைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுடையது. குறிப்பாக, விமான என்ஜின்கள், ராக்கெட் மற்றும் ராணுவப் பயன்பாட்டுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல் நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மற்றும் முகத்தில் தடவும் லோஷன்களிலும் இந்த டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது. இது ஒரு விஷயம்.

மற்றொரு விஷயம், மணலைச் சூடுபடுத்தி அதில் இருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுக்கும்போதே தோரியம் போன்ற பிற கனிமங்களும் கிடைக்கும். இந்த தோரியம் அணு உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியது. எனவே டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலை என்பது சாதாரண விஷயம் அல்ல; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயமும் கூட. எனவேதான் இந்த விஷயத்தில் இவ்வளவு எதிர்ப்பு.

பலன்கள் என்கிற ரீதியில் பார்த்தால் – டாடா நிர்வாகம் சொல்லும் பலன்கள் இவைதான் – அதாவது, ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் டன் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். இங்கு ஆலை அமைத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்ûஸடை நாமே உற்பத்தி செய்ய முடியும்; இந்த ஆலையால் சுமார் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 3 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும். மேலும் அப்பகுதிகளில் பள்ளி, பூங்கா, தண்ணீர் தொட்டி அமைத்தல் போன்ற “சமூக’ சேவைகளையும் செய்து அப்பகுதி மக்களுக்குத் தங்களால் உதவ முடியும் என்பது டாடா நிறுவனத்தின் வாக்குறுதிகள்.

ஆனால், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் பார்வை வேறுவிதமாக உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி அதில் உள்ள லட்சக்கணக்கான தென்னை, பனை மரங்களை வெட்டி வித்து, அப்பகுதிகளில் உள்ள மணலை எடுத்து அதில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து பின்னர் மீண்டும் அந்தக் குழிகளை நிரப்பினால், அதன் பிறகு அந்த நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியுமா? அவ்வாறு பயன்படுத்த வேண்டுமானால் ரசாயன உரங்களைப் போட்டு அந்த நிலத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவினங்களை யார் ஏற்பது? மேலும் அவ்வாறு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் நிலத்தின் தன்மை, விவசாயத்திற்கு உகந்ததாக இருக்குமா?

ஏனெனில் கனிமங்களைப் பிரித்தெடுத்தபின் அந்த மணல் கனிம வளங்கள் உறிஞ்சப்பட்ட வெறும் சக்கையாகத்தான் இருக்கும். மேலும் அதில் புவி ஈர்ப்பு விசையும் குறைந்துபோய் பலமிழந்து இருக்கும். அதில் தண்ணீரே நிற்காது. கனிம வளங்களோடு இருக்கும் மணல் பிரதேசத்தில் 4.5 என்ற அளவில் புவி ஈர்ப்பு விசை இருக்கும். கனிமத்தை எடுத்துவிட்டால் வெறும் 2 என்ற அளவில்தான் ஈர்ப்பு விசை இருக்கும். இதுமட்டுமல்லாது இதற்குப் பிறகு இந்த நிலங்களால் டாடா ஆலைக்கு எந்தவிதப் பிரயோஜனமும் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் அந்த நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படுமா?

இதுதவிர, மணலில் இருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுக்கும்போது அதில் கதிர்வீச்சு ஏற்படும். அது ஆலைகளில் பணிபுரிவோருக்கும், ஆலையைச் சுற்றி வசிப்பவர்களுக்கும் உடல் ரீதியான பாதிப்பை உண்டாக்கும். கொல்லத்தில் உள்ள சவரா பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு ஆஸ்துமா, சரும வியாதிகள், மனநோய், பெண்களுக்கு கருச்சிதைவு ஆகியவை அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. மீன்வளம் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கை முறை தலைகீழாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. டைட்டானியம் ஆலையால் பாதிப்பு பன்மடங்காக இருக்கும்.

வேலைவாய்ப்பு என்கிற ரீதியில் பார்த்தாலும்கூட, இந்த ஆலை பெரும்பாலும் இயந்திரங்கள் மூலம்தான் இயக்கப்படும். ஏனெனில் மனித உழைப்பு என்பது குறைவுதான். எனவே வேலைவாய்ப்பு என்பதும் வெறும் கண்துடைப்பு நாடகம்தான். கடற்கரைப் பகுதிகளில் கடல் அரிப்பு மற்றும் கடல் நீர் நிலத்தடி நீரோடு கலப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தைச் சுட்டிக்காட்டி, டைட்டானியம் ஆலைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், டைட்டானியம் டை ஆக்ûஸடு தயாரிப்பில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, ஐரோப்பிய கமிஷனின் அறிக்கையின்படி முகத்தில் பூசும் லோஷன்கள் வாயிலாக டைட்டானியம் டை ஆக்ûஸடு உடலுக்குள் ஊடுருவுகிறது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த “டைட்டானியம் டை ஆக்ûஸடில்’ உள்ள நுண்பொருள் புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்றும் ஐரோப்பிய கமிஷன் அறிக்கை கூறுகிறது.

இதனையெல்லாம் நாங்கள் கருத்தில்கொண்டுதான் ஆலையை அமைக்கிறோம் என்று டாடா நிர்வாகம் சொல்லுமானால், டாடா நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது யார்? ஏனெனில் ஒரு மணல் குவாரியைக் கூட அரசால் ஒழுங்குபடுத்த முடியவில்லை. ஒதுக்கப்பட்ட பகுதிகளில் 3 அடி ஆழத்திற்கும் மேல் மணலை எடுக்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும்கூட அது நடைமுறையில் உள்ளதா என்றால் இல்லை. பல இடங்களில் மணல் அள்ளுபவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, அதுவும் பல மீட்டர் ஆழம் வரை மணலைச் சுரண்டி வருகிறார்கள். இதனால் பல ஆறுகளின் படுகைகள் வறண்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி செலவில் டாடா நிறுவனம் அமைக்கும் ஆலையில் எந்த அளவுக்கு மணல் அள்ளுகிறார்கள், எந்த அளவு இயற்கை வளம் சுரண்டப்படுகிறது என்பதைக் கண்காணிப்பது யார், அவ்வாறு முறைகேடுகள் நடந்தாலும்கூட அதனைத் தட்டிக்கேட்பது யார்? என்ற கேள்வி எழுகிறது.

நீண்டகாலத்திற்கு அப்பகுதி நிலங்களில் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார ரீதியான பாதிப்புகளைப் பற்றி கணக்கிடாமல் டைட்டானியம் ஆலை அமைக்கப்படுமானால், அது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்களுக்கு வரம் அல்ல; சாபமாகத்தான் அமையப்போகிறது!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்).

———————————————————————————————————————————————————-

டைட்டானியம் ஆலை யாருக்கு லாபம்?

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, அக். 10: டைட்டானியம் ஆலை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கும் அங்கு கிடைக்கும் கனிம வளத்தின் பண மதிப்புக்கும் இடையிலான இடைவெளி மிக அதிக அளவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், சாத்தான்குளம் பகுதியில் இருந்து எடுக்கப்படும் கனிம வளத்தைப் பயன்படுத்தி என்ன வகையான பொருள்கள் தயாரிக்கப்பட உள்ளன என்பது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் “டைட்டானியம் டை ஆக்ûஸடு’ ஆலைகளுக்கு தேவையான “இல்மனைட்’ உள்ளிட்ட கனிமங்கள் அதிக அளவில் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு இங்கு “ரூடேல்’ அதிக அளவில் இருக்கும் இல்மனைட் கனிமத்தைப் பயன்படுத்துவதற்கான ஆலையை அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து இங்குள்ள சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனம் கையகப்படுத்த (வாங்க) உள்ளது.

ஏழை மக்களின் நிலத்தை டாடா நிறுவனத்துக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய பல்வேறு அரசியல் கட்சியினர் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று அதன் அடிப்படையில் அறிக்கைகளையும் அரசுக்கு அளித்தன.

அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் கருத்துகளைப் பெற்று அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அளித்தது. இந் நிலையில் டாடா நிறுவனமே மக்களிடம் நேரடியாக நிலங்களை வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இல்மனைட் பயன் என்ன?: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் டைட்டானியம் டை ஆக்ûஸடு ஆலைக்குத் தேவையான இல்மனைட் அதிக அளவில் இருக்கிறது. இதிலிருந்து பெயின்ட் தயாரிக்க உதவும் “ரூடேல்’, “அனடேஸ்’ உள்ளிட்ட ரசாயனப் பொருள்கள் கிரிஸ்டல் வடிவில் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வெளிப்புற பூச்சுகளுக்கான பெயின்ட்களில் மிக அதிக அளவு பளபளப்பு தருவது, நீடித்து உழைக்கும் தன்மை ரூட்டேலில் அதிகம். தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே பயன்படுத்தப்படுவதால் இதன் விலையும் அதிகம்.

இந்தியாவில் இதில் சின்தடிக் ரூடேல் கேரளத்தில் உள்ள ஒரு ஆலையில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. அதுவும் வெளிப்புறப் பூச்சுக்கான பெயின்ட்களில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் டாடா ஆலைக்கு முக்கியததுவம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

தோரியம் இல்லை: இல்மனைட்டில் அணுசக்தி உற்பத்திக்கு தேவையான தோரியம் இருப்பதாக கூறப்படுவது தவறு. தோரியம் மானசைட்டிலிருந்துதான் கிடைக்கும். இதைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடைவெளி அதிகமா? இந்த ஆலை அமைக்க கையகப்படுத்தப்படும் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு ஏக்கருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் கிரயமாக வழங்க டாடா நிறுவனம் முன் வந்து அதற்கான பணிகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் மொத்தம் 10 கோடி டன் இல்மனைட் இருப்பதாகவும், சாத்தான்குளம், குட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 65 முதல் 70 சதவீதம் இல்மனைட் இருப்பதாக தமிழக அரசின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதில் இருந்து சுமார் 50 லட்சம் டன்கள் வரை ரூடேல் கிடைக்கும். இந்த பகுதியில் சில இடங்களில் ரூட்டேல், அனடேஸ் ஆகியவை தனியாகவும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

உத்தேச சந்தை மதிப்பின் படி சர்வதேச சந்தையில் ஒரு டன் ரூடேல் ரூ. 40 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் ரூடேல் உற்பத்தியில் வேறு பெரிய நிறுவனங்கள் இல்லாததால் டாடா நிறுவனம் வைப்பதே இறுதி விலையாக இருக்கும். இதன் மூலம் ரூடேல் உற்பத்தியில் டாடா நிறுவனம் முற்றொருமை சக்தியாக உருவெடுக்கும்.

இந்த மதிப்பின்படி பார்த்தால் டாடா நிறுவனம் இந்த திட்டத்துக்காக ஒதுக்கியுள்ள மொத்த தொகையான ரூ. 2,500 கோடியில், நிலத்துக்காக ரூ. 50 கோடி மிகவும் குறைவான தொகை என கூறப்படுகிறது.

குறிப்பிட்ட ஆண்டுகள் வரையே இங்கு தாதுப் பொருள் எடுக்கப்படும் என்பதால் இங்கு மக்களிடம் குத்தகை அடிப்படையில் நிலங்களைப் பெற்று ஆலை திட்டம் முடிந்தவுடன் நிலத்தை அவர்களிடமே அளிக்கலாம் என்ற யோசனையும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது.

ஆனால், டாடா நிறுவனம் இறக்குமதி தரத்திலான “ரூடேலை’ தயாரித்தால் மட்டுமே, இந்த திட்டம் மதிப்பு மிக்கதாக இருக்கும் என ரசாயன ஆராய்ச்சி வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இங்கு எடுக்கப்படும் இல்மனைட்டிலிருந்து டைட்டானியம் ஆக்சைடு பிரித்தெடுக்கப்பட்டவுடன் எஞ்சியிருக்கும் இரும்பு ஆக்ûஸடு நிலத்தில் விடப்பட்டால் இப் பகுதி நிலங்கள் எந்த காலத்திலும் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

டைடானியம் ஆலை முற்றிலும் தனியார் நிறுவனமாக லாப நோக்கத்தில் செயல்பட உள்ளதால் இதற்கு நிலம் அளிப்பவர்களுக்கு உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும்.

இதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை விலையைவிட, அதில் கிடைக்கும் லாபத்தில் நிலத்தின் பங்களிப்பு அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.

Posted in ADMK, Alloy, Arms, cancer, carcinogen, Chemical, Chemistry, CPI, CPM, Discovery, DMK, Effects, Employment, Engg, Engineering, Explore, Factory, Fighter, Flights, Jobs, Manufacturing, medical, Medicinal, Mine, Mineral, Missiles, Nadar, Ocean, Planes, Plant, PMK, Project, Sathankulam, Science, Sea, Shore, surgery, TATA, Technology, titania, titanium, Titanium dioxide, Uses, Value, War, Weapons | 1 Comment »

S Gopalakrishnan – Banking services in Rural Areas

Posted by Snapjudge மேல் ஜூலை 23, 2007

கிராமங்களில் வங்கிச் சேவை

எஸ். கோபாலகிருஷ்ணன்

பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.

இதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.

மேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.

இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.

ஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.

1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.

கிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.

1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.

நல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.

வங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.

தற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.

இதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.

கிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

——————————————————————————————————————————
சீரழியும் சிறுதொழில்கள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

கைதயாரிப்பு தீப்பெட்டித் தொழிலில்

  • சிவகாசி,
  • ராஜபாளையம்,
  • கோவில்பட்டி,
  • எட்டயபுரம்,
  • கழுகுமலை,
  • சங்கரன்கோவில்,
  • வாசுதேவநல்லூர்,
  • குடியாத்தம்,
  • செய்யாறு

போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.
வானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.

இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.

ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.

இதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.

விலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.

இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.

நெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.

சிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.

  • திண்டுக்கல் பூட்டு,
  • சுருட்டுத் தொழில்,
  • கும்பகோணம் பாத்திரத்தொழில்,
  • நெசவுத் தொழில் மற்றும்
  • உடன்குடி பகுதியில் பனைத்தொழில் –
  • சில்லுகருப்பட்டி,
  • பவானி ஜமுக்காளம்,
  • மதுரை சுங்கடி,
  • கூறைப்புடவை போன்றவற்றோடு
  • மீன்பிடித் தொழில்,
  • கருவாடு தொழில் என
  • நடுத்தர,
  • கீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.

மதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக

  • நெல்லை அல்வா,
  • கடம்பூர் போளி,
  • உடன்குடி சில்லுக்கருப்பட்டி,
  • குற்றாலம் முறுக்கு,
  • திருவில்லிபுத்தூர் பால்கோவா,
  • கல்லிடைக்குறிச்சி அப்பளம்,
  • தூத்துக்குடி மக்ரோன்,
  • கோவில்பட்டி கடலை மிட்டாய்,
  • சாத்தூர் சேவு,
  • திண்டுக்கல் மலைப்பழம்,
  • குடந்தை வெற்றிலை சீவல்

போன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.
இத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.

ஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.

வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.

உலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

————————————————————————————————–

கிராம மக்களுக்கு கடன் வசதி

எஸ். கோபாலகிருஷ்ணன்

கந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி?

இந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.

தேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.

அதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.

தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.

சட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன்? கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.

2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.

கிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:

கிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.

கிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.

கிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.

ஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.

வங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.

இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.

குழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.

கடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.

வங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.

தொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Al, Aluminium, APR, Assets, Auto, Balance, Ballpoint, Banking, Banks, Biz, branch, Business, Calendar, Cellphone, Cheyyaar, Cheyyaaru, Cheyyar, Citi, City, Commerce, Compensation, Crackers, Diary, Dindugul, Dindukal, Dindukkal, Economics, Education, Educational, Employment, Ettayapuram, Exim, Expenses, Export, Exporters, Factory, Finance, Fireworks, Garments, GDP, Globalization, Growth, Gudiatham, Gudiyatham, Home, Housing, ICICI, Imports, Income, Industry, Installment, Instalment, Interest, ITC, Jobs, Kalugumalai, Kalukumalai, Kazhugumalai, Kazhukumalai, Kazugumalai, Koilpatti, Kovilpatti, Kudiatham, Kudiyatham, Loans, match, Matchbox, Matches, Metro, Mobile, Monetary, Motor, Nibs, Opportunity, Pen, Private, Profit, Purchase, Purchasing, Rajapalayam, Rates, RBI, Refill, Revenues, Reynolds, Rural, Sangarankoil, Sangarankovil, Sangarankoyil, Sankarankoil, Sankarankovil, Sankarankoyil, SBI, Sivakasi, Small Biz, Small scale, SSI, Tamil, Textiles, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thoothukudi, Thuthukudi, Tuticorin, VaiGo, VaiKo, Vasudevanalloor, Vasudevanallur, Villages, Wimco, Work, Writing | Leave a Comment »

Waste Management – Power generation from Garbage

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

நகர்ப்புற திடக்கழிவுகளிலிருந்து எரிசக்தி!

என். விட்டல்

அரசியல்வாதிகளுக்கும் காந்தியவாதிகளுக்கும் கிராமப்புறங்கள் புனிதமானவை. கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று உணர்ந்ததால், இந்தியாவின் எதிர்காலத்தையே கிராம ராஜ்யத்தின் வலுவோடு வளப்படுத்த காந்திஜி கனவுகண்டார்.

பெரும்பாலான வாக்காளர்கள் இன்னமும் கிராமங்களில்தான் வாழ்கின்றனர் என்பதால் நமது அரசியல்வாதிகளுக்கும் கிராமப்புறம் புனிதமானதாகத் திகழ்கிறது.

எது எப்படியிருந்தாலும் இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் நகர்மயமாதல் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு நகரங்களில்தான் என்பதால் நம் நாட்டின் 40 சதவிகித மக்கள் நகரங்களில்தான் இப்போது வசிக்கின்றனர். எல்லா ஊர்களிலும் பெரு நகரங்களிலும் சேரிப்பகுதிகள் வளர்ந்து கொண்டே வருவது இதற்கு நல்ல ஆதாரம்.

நகர்ப்புற வசதிகளைக் கிராமங்களிலேயே ஏற்படுத்தினால், நகர்ப்புறமயத்தைத் தடுக்கலாம் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் ஐ.ஐ.டி.யின் பேராசிரியர் பி.வி. இந்திரேசனும் எப்போதிருந்தோ கூறி வருகின்றனர். இருந்தாலும், இந்தியா மேலும் மேலும் நகர்மயமாவதைத் தடுக்க முடியாது. நகர்ப்புறப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைத் திறமையாக, ஒழுங்காக நிர்வகிப்பது எப்படி என்று ஆலோசிப்பதே இப்போதைய தேவை.

நகரப்பகுதிகளுக்கு மிகவும் சவாலான பணியாக இருப்பது, குப்பைகளை எப்படி அகற்றுவது அல்லது பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பதுதான். நகரங்களில் சேரும் குப்பைகளின் அளவும், தரமும் நகரவளர்ச்சியோடு நேரடியாகத் தொடர்பு உடையது என்பது வேடிக்கையானது! இந்தியாவில் நகர்ப்புறங்களில் ஒரு நாளில் ஒரு நபருக்கு 400 கிராம் வீதம் குப்பைகள் சேருவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் நபர் வாரி குப்பை அளவு தலா ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை இருக்கிறது. இதுதான் உலகிலேயே அதிகபட்ச அளவாகும்.

இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் வீதம் குப்பை சேருகிறது. இதில் பெரிய நகரங்களின் பங்கு 60 சதவிகிதத்துக்கும் மேல். அதாவது 40 சதவிகித மக்கள்தொகை 60 சதவிகித குப்பைகளைக் கொட்டுகின்றனர்.

குப்பைகளை அகற்றுவதும், அவற்றைப் பயனுள்ளதாக மாற்றுவதும் நகர நிர்வாகங்களுக்குச் சவால் விடும் வேலையாகும். பொதுவாக நகர்ப்பகுதிகளில் குப்பைகளை அகற்றினால் அவற்றைத் திறந்த வெளியில் எங்காவது பள்ளம் பார்த்து கொட்டி நிரப்புவதே நடைமுறையாக இருக்கிறது.

இப்படி குப்பைகளைத் திறந்தவெளிப் பள்ளங்களில் கொட்டி நிரப்பிய பிறகு அடுத்த சுகாதார பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. அவற்றைப் பெருச்சாளிகளும் பன்றிகளும் தோண்டி துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குப்பைகளிலிருந்து வடியும் கழிவுநீர் நிலத்தில் ஊறி, நிலத்தடி நீர்மட்டத்தையும் தரைக்கடியில் உள்ள நீரோட்டத்தையும் பாழ்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல, “”குப்பையை எங்கள் பகுதியில் கொட்டாதே!” என்று ஆங்காங்கே போர்க்குரல்கள் எழுகின்றன. எங்கு பணக்காரர்கள் இல்லையோ, எங்கு செல்வாக்கானவர்கள் இல்லையோ அந்த இடம் பார்த்து குப்பைகளைக் கொட்டிவிடுகின்றனர் உள்ளாட்சிமன்ற அதிகாரிகள்.

குப்பைகளை அகற்றுவதற்கு 3 வழிகள் உள்ளன.

1. குப்பைகளை எரிப்பது. அதன்மூலம் 90 சதவிகித குப்பைகளைக் குறைத்துவிடலாம்.

2. மண்புழுக்கள் போன்றவை மூலம் குப்பைகளை மக்கவைத்து எருவாக மாற்றுவது.

3. குப்பைகளைத் தொட்டியில் போட்டு, வெளிச்சமும், காற்றும் படாமல் மறைத்து அதிலிருந்து மீத்தேன் வாயுவைத் தயாரிப்பது.

இதே குப்பை மலைபோலக் குவிந்தால் இந்த மூன்று முறையில் ஏதாவது ஒன்றை கடைப்பிடிப்பது கூட கடினமான பணிதான்.

இப்படி குப்பைகளைப் பரத்தி கொட்டவும் பிறகு வேறு வடிவத்துக்கு மாற்றவும் நிறைய நிலப்பகுதியும் ஆள்பலமும் தேவை. அவை உள்ளாட்சி மன்றங்களிடம் இல்லை. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, வேறு வடிவத்துக்கு மாற்றவும் எரிபொருளாகப் பயன்படுத்தவும் முன்னுரிமை தரவேண்டும்.

மேலை நாடுகளில் குளிர்காலத்தின்போது வீடுகளை கதகதப்பாக வைத்திருக்க எரிபொருள்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த எரிபொருளை உள்ளாட்சி மன்ற நிர்வாகம் குப்பைகளிலிருந்து தயாரித்து குழாய் வழியாக எல்லா வீடுகளுக்கும் அனுப்புகிறது. இதனால் குப்பையும் பயனுள்ள பொருளாகிறது, எரிபொருள் செலவும் மிச்சப்படுகிறது. பெட்ரோல், டீசல் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் செலவும் கணிசமாக மிச்சப்படுகிறது.

ஐரோப்பா முழுவதும் 5 கோடி டன் எடையுள்ள குப்பைகளை, 400 சிறு ஆலைகள் மூலம் எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் மக்கள் நெருக்கமாக வாழும் நகரங்களில் இந்த வழியையே பின்பற்றுகின்றனர். அமெரிக்காவில் உள்ள இத்தகைய 100 ஆலைகள் 2,800 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கின்றன. இதனால் 104 கோடி காலன் எரிபொருள் மிச்சப்படுகிறது. 2002-ல் அமெரிக்காவின் 15 மாநிலங்கள், இத்தகைய எரிசக்தி ஆலைகளுக்கு 85 சதவிகித குப்பைகளை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பையை எரிபொருளாக மாற்றுவது இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல் பகுதி கழிவுகளிலிருந்து எரிபொருளைத் தயாரிப்பது. கரி உருண்டைகளைப் போல சிறு கழிவு உருண்டைகளைத் தயாரிப்பது முதல் கட்டம். நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு இந்த கரி உருண்டைகள் மிகவும் பயன்படும்.

உதாரணத்துக்கு ஹைதராபாதில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.1,800. குப்பையிலிருந்து பெறப்படும் கரி உருண்டையின் விலை ரூ.1,000. இதை ஹைதராபாத் பகுதி தொழிற்சாலைகளும் ஏழைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த உருண்டைகளைத் தயாரிக்கும் ஆலைகள் டன்னுக்கு ரூ.200 கூடுதலாக விலை வைத்தாலும் வாங்குகிறவர்களுக்கு அது குறைந்த விலைதான். கரி உருண்டையைத் தயார் செய்யும் ஆலைக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் என்ற உயர் அமைப்பு ஆந்திரத்தின் ஹைதராபாத், விஜயவாடா ஆகிய இரு நகரங்களில் சோதனை அடிப்படையில் இத்தகைய கரி உருண்டைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆலையை நிறுவியது. இரண்டின் உற்பத்தித்திறன் தலா 6 மெகாவாட். இதில் ஹைதராபாத் ஆலை 50 சதவிகிதம் திறனுடனும், விஜயவாடா ஆலை 80 சதவிகிதம் திறனுடனும் செயல்படுகின்றன. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கரி உருண்டைகளைத் தயாரிப்பது, மின்சாரத்தைத் தயாரிப்பதைவிட லாபகரமானது.

இதேபோன்ற ஆலைகளை நாடு முழுவதும் நிறுவி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாண்டு கரி உருண்டைகளைத் தயாரித்தால் 20 டன் எடையுள்ள கரி உருண்டைகளைப் பெறலாம். இது ஒவ்வொன்றும் 10 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும். இந்த ஆலைக்கு மிகக்குறைந்த நிலப்பரப்பு இருந்தால் போதும். இதனால், சுகாதாரம் சீர்கெடுவதும் தடுக்கப்படும்.

50 டன் எடையுள்ள குப்பைகளை அன்றாடம் கையாளும் திறன் உள்ள எரிபொருள் தயாரிப்பு ஆலையை நிறுவ ரூ.80 லட்சம் செலவாகும். கரி உருண்டைகளை டன் ரூ.1,000 என்று விற்கலாம். இந்த ஆலை மழைக்காலத்தில் செயல்படாது. எனவே ஆண்டில் 10 மாதங்கள்தான் இதில் உற்பத்தி இருக்கும். அன்றாடம் 20 டன் கரி உருண்டைகளைத் தயாரிக்க முடியும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் இதில் வருமானம் கிடைக்கும்.

இந்த ஆலையின் வடிவமைப்பு, இயங்கு திறன் ஆகியவற்றை மேலும் சீரமைத்து, ஆலைக்கான பாகங்களை நல்ல தரத்தில் தயாரித்து நாடு முழுவதும் வழங்கினால் இதன் உற்பத்தித்திறன் பலமடங்கு அதிகரிக்கும். அடுத்து இந்த ஆலையை நிறுவ வங்கிகளைத் தேர்வு செய்து அல்லது நிதியங்களை நியமித்து அவற்றின் மூலம் முதலீடு செய்யலாம்.

மாநில அரசுகளும் உள்ளாட்சி மன்றங்களும் இதில் தீவிர அக்கறை காட்டி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாளும் எரிபொருள் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். குப்பைகள் கிடைப்பதைப் பொருத்து இந்தத் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். காலவரம்பு நிர்ணயித்து இதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் நிர்வாகத்துடன் ஊழியர்களும் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளும் அதே வழிமுறையைக் கையாண்டால் இந்த ஆலைகளால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கும். நகர்ப்புற திட்டமிடலில் தொடர்புள்ள அனைவரும் இதில் கவனம் செலுத்துவது நல்ல பொருளாதார பலன்களைத் தரும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்.)

Posted in Alternate, Andhra, AP, APJ, Bhogi, Bogi, Burn, City, Coal, Disposal, Electricity, Employment, energy, Factory, Fuel, Gandhi, Garbage, Gas, Hyderabad, Jobs, Kalam, Mahathma, Mahatma, Management, Megawatt, Methane, Metro, Municipality, MW, Pongal, Poor, Power, Recycle, Rich, Rural, Sprawl, Suburban, Trash, Vijayawada, Villages, Waste, Water | 6 Comments »

Rubber industry park – Kanyakumari plantations are forest areas

Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007

இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவு கலைகிறது: குமரி மாவட்டத்தில் கனரக ரப்பர் ஆலை அமையுமா?

நாகர்கோவில், ஜூன் 12: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக ரப்பர் ஆலை அமைவது கனவாகிப்போவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

ரப்பர் பூங்கா என்று தற்போது பேசிவரும் திட்டச் செயல்பாடும் ஆமை வேகத்தில் இருக்கிறது. இதன்மூலம் எதிர்பார்க்கும் அளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரமுடியாது என்பது அதிர்ச்சியான விஷயம்.

நாட்டின் ரப்பர் உற்பத்தியில் 8 சதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. நாட்டிலேயே தரம் உயர்ந்த ரப்பர் இங்குதான் கிடைக்கிறது என்று தேசிய ரப்பர் வாரியமே சான்று அளித்துள்ளது.

மாவட்டத்தில் தமிழக அரசுக்குச் சொந்தமான 5 ஆயிரம் ஹெக்டேர் வன பூமியில் ரப்பர் மரங்களால் 2,500 தொழிலாளர்கள் நேரடியாக வேலை பெற்று வருகிறார்கள். தனியார் பதிவு தோட்டங்களும், சிறு தோட்டங்களுமாக மேலும் 15 ஆயிரம் ஏக்கரிலும் ரப்பர் பயிர் செய்யப்படுகிறது.

குறிப்பாக கல்குளம், விளவங்கோடு, தோவாளை வட்டங்களும், மலையோரப் பகுதிகளில் ஆறுகாணி முதல் காட்டுப்புதூர் வரை சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது.

ரப்பர் மரத்திலிருந்து பால் வடிப்புத் தொழிலில் மட்டும் 2,500 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் சுமார் 40 டன் “ரப்பர் லாக்டஸ்’ கிடைக்கிறது. ஒரு வாரத்தில் ரூ.2 கோடிக்கான ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாவட்டத்திலிருந்து ரப்பர் லாக்டஸ் தமிழகத்தின் பிற தொழில் மையங்களுக்கும், இதர மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. டயர், டியூப். பலூன்கள், ஸ்பாஞ்சுகள், கையுறைகள் உள்ளிட்ட பொருள்கள் இவற்றில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்திலேயே இந்த ரப்பரை பயன்படுத்தி கனரக ரப்பர் ஆலை அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இயற்கை அளித்த கொடையான இந்த ரப்பரை பயன்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்று படித்த இளைஞர்கள் ஆண்டாண்டு காலமாகக் காத்திருக்கிறார்கள்.

கனரக ரப்பர் ஆலைத் திட்டம் குறித்து தொழிற்சங்கங்கள் தரப்பில் பேசப்பட்டு வந்தாலும், அதைச் செயல்படுத்த பிள்ளையார் சுழி போடக் கூட ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் முன்வரவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆலை அமைக்கப்படும் என்று, கடந்த 1991-ம் ஆண்டே முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிகள் மாறிமாறி வந்தும் அதைச் செயல்படுத்தவோ, அதுகுறித்த ஆய்வு நடத்தவோ, நிதி ஒதுக்கவோ யாரும் முன்வரவில்லை.

கனரக ரப்பர் ஆலைத் திட்டம் குறித்து சட்டப் பேரவையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் பேசியும் அரசுத் தரப்பிலிருந்து சாதகமான பதில்கள் தெரிவிக்கப்படவில்லை.

இச் சூழ்நிலையில்தான் செண்பகராமன்புதூரில் ரப்பர் பூங்கா திட்டம் குறித்து சமீபகாலமாகப் பேசப்படுகிறது. ஆனால், அதற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆமைவேகத்தில் இருக்கின்றன.

இளைஞர்கள் நலன் கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆலை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Posted in Aini, balloons, cardamom, Chenbagaraman, Chenbakaraman, coffee, Construction, CPI, CPI (M), CPI(M), Development, DMK, Economy, Employment, Environment, Estates, Exports, Factory, Forest, Gloves, Industry, Jobs, Kaattuputhoor, Kaattuputhur, Kalkulam, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Lactex, Leather, Manufacturing, marudam, Marxists, Mountains, Nagarcoil, Nagarkoil, Nagarkovil, Nagercoil, Nagerkoil, Nagerkovil, Natural, Opportunity, plantations, Planters, Preservation, Resource, rosewood, Rubber, Senbagaraman, Senbakaraman, Sponges, Tea, Teak, thomba, Thovaalai, Thovalai, Trade, Trees, Tubes, Tyres, Vilavancode, Vilavangode, Youth | Leave a Comment »

Breath with care – Oxygen Supply, Carbon Monoxide poisoning

Posted by Snapjudge மேல் மே 18, 2007

நெட்டில் சுட்டதடா…: சுவாசிக்கும் முன் யோசி!

ராமன் ராஜா

சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்?

சில மாதங்களுக்கு முன்னால் -பூனாவில் ஒரு கல்லூரி ஹாஸ்டல். பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது. திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி. வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது. அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை. விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியின் மிச்சங்கள்தான்.

கத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில்தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்ûஸடு வாயுவை சுவாசித்ததால் இறந்திருக்கிறார்கள். இந்த கார்பன் மோனாக்ûஸடு (சுருக்கமாக கா.மோ.) என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரிவிகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும். பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லாவிட்டால் ஏராளமாக கா.மோ வாயுதான் உற்பத்தியாகும். வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்ûஸடைத் துப்பும் எமன்கள்! (சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கா.மோ.தான் ஜாக்கிரதை). புகைபோக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம்தான் குட்டிச்சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை. அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்துகொண்டால் சில நிமிடங்களில் மரணம்தான்.

கார்பன் மோனாக்ûஸடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம். ரத்தத்தில் உள்ள ஹிமோக்ளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்துவிடுவதால், எழுந்து ஜன்னலைத் திறக்கவேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்துவிடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்ûஸடைச் சுவாசித்து இறக்கிறார்கள். மேலை நாடுகளில் கா.மோ சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை; நமக்கு கார்பன் மோனாக்ûஸடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்: காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா? அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா? தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா? ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கா.மோ.வை சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்; காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள்; சரியாகிவிடும். கார்பன் மோனாக்ûஸடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவதுதான். காரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது.

மூடிய அறைக்குள்தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறுவிதமான பேராபத்து காத்திருக்கிறது! போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா? அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக்கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால்தான் தலைப்புச் செய்தியாகிறது; ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது.

கடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ், அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகைதான் இத்தனை விதத்தில் நாறுகிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா அரசாங்கம், 1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பொழுதன்னிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத்தான் பாவம், போக்கிடமே இல்லை. சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சுமிட்டாய் நிறத்தில் வருகிறது. பயங்கரம்!

நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோகோனியாசிஸ் என்ற வியாதி வரும். கரித் தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்துவிடும். சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு. மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது: ‘நிமோனோ…’ என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி. இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை! (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)

டோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள். நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக்கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது அனுதாபம் ஏற்படுகிறது. (அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும்போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன?) மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன.

இவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம். இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்துவிட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க, கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும் அந்த நிலையைத்தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு? அரை மணி மூச்சு விடுவதற்கு இருநூற்றைம்பது ரூபாய் வரை ஆகும்.

கவலைப்படாதீர்கள். இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா? அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும்போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்துவிடும்.


கல்கத்தா பொலிஸாருக்கு பிராணவாயு ஊக்குவிப்புக் கருவிகள்

கல்கத்தா போக்குவரத்துப் பொலிஸார்
கல்கத்தா போக்குவரத்துப் பொலிஸார்

இந்திய நகரான கல்கத்தாவில் தெருக்களில் பணிபுரியும் போக்குவரத்துப் பொலிஸார், அங்கு சுற்றாடலில் காணப்படும் மாசுபடிந்த வாயுவின் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்வதற்காக, அவர்களுக்கு பிராண வாயுவின் மட்டத்தை ஊக்குவிக்கும் சிறப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த நகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8 மணிநேர பணியை முடித்த பிறகு குறைந்தபட்சம் பொலிஸார் 20 நிமிடங்களுக்காவது பிராணவாயுவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளதாக, கல்கத்தாவின் போக்குவரத்துப் பொலிஸின் தலைவர் கூறியுள்ளார்.

அந்த நகரவாசிகளில் சுமார் 70 வீதமானவர்கள், ஒருவகையான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் போக்குவரத்துப் பொலிஸாரும் அடங்குகிறார்கள் என்றும் தேசிய புற்றுநோய் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in Air, Auto, bhopal, Breath, Calcutta, cancer, Carbon, Carbon Monoxide, Coal, emissions, Environment, Factory, Fuel, Fumes, Gas, Global Warming, Health, Healthcare, Kolkata, Lignite, Lung, Mine, mines, Oxygen, Ozone, Petrol, Poison, poisoning, Pollution, Poor, Ramanraja, Tamil, toxic, Tunnel, UCC, vehicle, Warming, Worker | 1 Comment »

Tamil Nadu to set up electronics export center, TIDEL-III Park

Posted by Snapjudge மேல் மே 9, 2007

மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மே 9: தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில்

  • சென்னை தரமணி,
  • ஸ்ரீபெரும்புதூர்,
  • அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன.

இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:

மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும்.

ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.

சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.

  • காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர்,
  • பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.
  • கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும்
  • சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும்
  • திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும்
  • மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.
  • நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.

இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.

இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்” என்றார் கருணாநிதி.

———————————————————————————–

புதிய ஜமீன்தார்கள்!

கல்கி – Kalki 10.06.2007 (தலையங்கம்)

நந்தி கிராமில் டாடா நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை ஒதுக்கித் தந்து, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாயிற்று மேற்கு வங்க அரசு. கலவரம், உயிர்ச் சேதம் என்று பிரச்னை வளர்ந்து, கடைசியில் திட்டம் ரத்தாயிற்று.

உ.பி.யில் அதே விதமான நில ஒதுக்கீட்டை ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக முலாயம்சிங் அரசு செய்திருந்தது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்துவிட்டு, “தொழிலதிபர்கள் வேண்டுமானால் சந்தை விலைக்கு நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளட்டும்; அரசு கையகப்படுத்தி சலுகை விலையில் அவர்களிடம் விற்காது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

ஆனால், தமிழ்நாட்டில் விஷயம் நேர்மாறாக இருக்கிறது.

இராணிப்பேட்டையில் இரண்டு கொரிய நிறுவனங்களுக்கு ஆற்காடு வீராசாமி நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக வாக்களித்திருக்கிறார். இதற்காக அரசு மக்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தும்! காஞ்சிபுரம் அருகே ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ, ஒரு துபாய் நிறுவனம் ஒன்று, 350 ஏக்கர் நிலம் வாங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது!

ஐம்பதாயிரம் பேருக்கு இந்த மண்டலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிறார்கள். ஆனால், அதற்கு 350 ஏக்கர் நிலம் என்பது மிக மிக அதிகம். ஐ.டி. சார்ந்த தொழிலகங்கள் ஐம்பது ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் மீதி நிலம் வாழிடம், பள்ளி, ஷாப்பிங் மால் போன்றவற்றுக்கு என்றும் விவாரிக்கிறார்கள்!

பெரிய தொழிலதிபர்கள் சலுகை விலையில் அரசிடமிருந்து நிலம் பெறும் ஏற்பாட்டை இரு தரப்பினரும் துஷ்பிரயோகம் செய்வது வழக்கமாகிவிட்டது. அதிகார வர்க்கம் இலஞ்ச – ஊழலில் ஈடுபடுகிறது. தொழிலதிபர்களோ, தேவைக்கதிகமான நிலத்தை வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் அதன் விலை உயரும்போது, லாபம் சம்பாதிக்கிறார்கள். நிலத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயரவும் இவர்கள் காரணமாகிறார்கள். இது ஏழைகளையும் சராசாரி மக்களையும்தான் வதைக்கிறது.

‘உணவு உற்பத்தி, விவசாயப் பெருக்கம் நோக்கி அரசின் திட்டப் பணிகள் திசை திரும்ப வேண்டும்’ என்று தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், தமிழகத்தில் என்ன செய்கிறார்…? விவசாயம் சார்ந்த பகுதியில், அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொழில்நுட்ப நிறுவனம் கிளை பரப்ப வழி செய்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குப் பலமான அஸ்திவாரம் அமைக்கிறார்.

ஒரு குடிசை அமைத்துக்கொள்ளக்கூட நிலமின்றி அவதிப்படும் இலட்சக்கணக்கானோர் வாழும் நாடு இது. இங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலம் பொதுமக்களின் சொத்து. அதைக் கண்ணை மூடிக்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலதிபர்களுக்கு வாரி வழங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! தனியார் நிலமாயினும் பெரிய தொழிலதிபர்கள் 300 ஏக்கர் 500 ஏக்கர் என்று தேவைக்கு அதிகமாக வாங்கி, வளைத்துப் போட அனுமதிப்பது பெரும் அநீதி!

பெரிய தொழிலதிபர்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஏராளமான வேறு பல சலுகைகளையும் பெறுகிறார்கள். மொத்தத்தில், விவசாய ஜமீன்தாரி முறையையும் பெரிய மிராசுதாரர்களையும் ஒழிக்கப் போராடி சட்டமும் இயற்றிய நமது ஆட்சியாளர்கள், இன்றைக்குப் புதிய சலுகைகள் மூலம் நவீன ஜமீன்தாரி தொழிலதிபர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

Posted in 3, Ambathur, Ambattoor, Ambattur, Biotech, Chennai, Coimbatore, College, computers, Development, Education, Electronics, Employment, Export, Factory, Industry, InfoTech, IT, ITES, Jobs, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjipuram, Karunanidhi, Kottoor, Kottur, Kovai, Madras, Madurai, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MNC, multinational, Nellai, Orgadam, Paper, Perumpakkam, Research, Salem, Science, scientist, SEZ, SIPCOT, Software, Special, Sriperumputhoor, Sriperumputhur, Students, Tamil Nadu, TamilVU, Tax, Tech, Technology, Tharamani, Thiruchi, Thiruchy, Thirunelveli, Three, Thruchirappalli, TIDEL, TIDEL-III, TN, Trichirappalli, Trichy, University, Virtual, Virtual University, VU | Leave a Comment »

Mahindra and Mahindra plans to shift its manufacturing plant from AP to TN

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

ஆந்திரத்தில் தொடங்கவிருந்த மோட்டார் ஆலையை தமிழ்நாட்டுக்கு மாற்றுகிறது மஹீந்திரா நிறுவனம்

சங்கா ரெட்டி, ஏப். 27: ஆந்திரத்தின் மேடக் மாவட்டத்தில் சஹீராபாதில் அமைக்கவிருந்த மோட்டார் வாகன தயாரிப்பு ஆலையை, தமிழ்நாட்டின் ஸ்ரீ பெரும்புதூருக்கு மாற்ற மஹீந்திரா மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்திருக்கிறது.

இந்த ஆலையை ஆந்திரத்திலேயே தொடங்குமாறு ஆலை நிர்வாகத்திடம் மன்றாடி கேட்டுக் கொள்வது என்ற முடிவை ஆந்திர தொழில்துறை அமைச்சகம் எடுத்திருக்கிறது.

2004-ல் ஆந்திரத்தில் காங்கிரஸ் அரசு ஏற்பட்டவுடன், மஹீந்திரா ஆலை நிறுவனம் கனரக, நடுத்தர ரக எடையுள்ள மோட்டார் வாகனங்களைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது. அதற்காக சில அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று ஆந்திர அரசிடம் கேட்டுக்கொண்டது.

ஆந்திர அரசும் அதனுடன் பேசி, அது கேட்ட எல்லா வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்தது. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் முக்கிய வசதிகளை அதனால் செய்து தர முடியாமல் இருப்பதால் ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகிலேயே ஆலையைத் தொடங்க முடிவு செய்திருக்கிறது.

கேட்ட வசதிகள் என்ன?

1. ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் வீதம் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இலவசமாக தண்ணீர்,

2. விற்பனை வரிச் சலுகைகள்,

3. ஒரு யூனிட் 2 ரூபாய் என்ற விலையில் தரமான, தடையற்ற மின்சார சப்ளை,

4. 4 வழிச்சாலை,

5. சஹீராபாதுக்கும் ஹைதராபாதுக்கும் இடையில் உயர் வேக புறநகர் மின்சார ரயில் வசதி,

6. இப்போது அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துதல்,

7. தொழிலாளர்கள், அதிகாரிகளின் குழந்தைகள் படிக்க தரமான பள்ளிக்கூடங்களை நிறுவுதல் ஆகியவை அந் நிறுவனம் முன்வைத்த கோரிக்கைகளாகும்.

ஆந்திர அரசுடன் கையெழுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்கூட தயாராகிவிட்டது. ஆனால் ஆந்திர அரசு ஒப்புக்கொண்டபடி வசதிகளைச் செய்துதருவதில் தாமதமும் அதனால் சிக்கலும் ஏற்பட்டது. கோதாவரியிலிருந்து தண்ணீர் பெற்றுத்தருவதாக அரசு கூறியிருந்தது. அதற்கு வாய்ப்பு சுருங்கிவிட்டதால் பிரச்சினை தோன்றியது. எனவே மஹீந்திரா நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் நெருக்குதலைத் தந்து, இந்த உடன்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் ஆலையை நிறுவும் முடிவு எடுக்கப்பட்டது.

Posted in Andhra, AP, Auto, Exports, Factory, Hyderabad, Incentives, Industry, infrastructure, Jeep, M&M, Mahindra, Mahindra and Mahindra, Manufacturing, Medak, Motor, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, State, TN, Zaheerabad | Leave a Comment »

Hyundai exports 4000 Getz Prime to Germany from Chennai plant

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

சென்னை துறைமுகத்தில் ரூ.100 கோடியில் இரண்டு பலஅடுக்கு கார் நிறுத்தும் இடம் ஓராண்டில் அமைக்கத் திட்டம்: துறைமுகத் தலைவர் தகவல்

சென்னை, மார்ச் 27: ஏற்றுமதிக்கு முன்பாக கார்களை நிறுத்தி வைப்பதற்கு வசதியாக, சென்னை துறைமுகத்தில் ரூ. 100 கோடியில் இரண்டு பலஅடுக்கு கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 50 கோடி செலவிடப்பட உள்ளது.

மேலும், வணிக வளாகமும், உணவகமும் துறைமுகத்தில் திறக்கப்படும் என்று துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கே. சுரேஷ் தெரிவித்தார்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் “நியூ கெட்ஸ்’ வகைக் கார், சென்னை துறைமுகத்தில் இருந்து ஜெர்மனிக்கு திங்கள்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டன. மொத்தம், 4,000 கார்கள் கப்பல் மூலம் செல்ல உள்ளன.

இதற்கான நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கே. சுரேஷ் கூறியது:

சென்னை துறைமுகத்தில் இருந்து, பன்னாட்டு கம்பெனிகளின் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஏற்றுமதி செய்வது தொடர்பாக, ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த ஒப்பந்தம் தொடர்கிறது.

ஏற்றுமதிக்கு முன்பாக, கார்களை நிறுத்த துறைமுகத்தில் இடம் உள்ளது. அந்த இடத்தில் 6,000 கார்கள் வரை நிறுத்தலாம். ஆனால், அந்த இடம் போதாது எனக் கூறுகின்றனர். இதனால், துறைமுகத்தில் பல அடுக்கு கார் நிறுத்தும் இடங்கள் இரண்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு ரூ. 100 கோடி மதிப்பிடப்பட்டு உள்ளது. உரிய நிறுவனங்களை அழைத்துப் பேசி, ஓராண்டுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், உயர்தர உணவகமும், வணிக வளாகமும் அமைக்கப்படும் என்றார் கே.சுரேஷ்

நிகழ்ச்சியில், தொழில்துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எச்.எஸ்.ஹீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
==================================================================
திமுக ஆட்சியில் ரூ.10,750 கோடி அன்னிய முதலீடு: ஸ்டாலின்

ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.75 கோடி முதலீட்டில் ஜப்பான் நாட்டின் கொமாட்சு கனரக வாகன உற்பத்தி ஆலையை புதன்கிழமை துவக்கி வைத்தார்
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின். உடன் (இடமிருந்து) தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், கொமாட்சு தலைவர் எம்.சகானே, ஜப்பான் துணைத் தூதர் ஓய், கோடாகி, தொழில் துறைச் செயலர் சக்திகாந்ததாஸ், டி.யசோதா எம்.எல்.ஏ.

காஞ்சிபுரம், மார்ச் 29: திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் ரூ.10,750 கோடி நேரடி அன்னிய முதலீடு வந்துள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், ரூ.75 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டின் கொமாட்சு கனரக வாகனங்கள் தயாரிப்பு ஆலையை புதன்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:

தமிழகம் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளதால், 10 மாதங்களில் 10 பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

ரூ.10,750 கோடி நேரடி அன்னிய முதலீடு பெறப்பட்டதுடன், 39 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 65 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது. முதல்வர் கருணாநிதியின் சீரிய முயற்சியால் தமிழகம் தொழில் துறையில் மேன்மேலும் வளர்ந்து வருகிறது.

ஒரகடம் தொழிற்பூங்காவில் தேசிய மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம், நிசான் மோட்டார் ஆலை உள்பட பல்வேறு பெரிய நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை இங்கு அமைக்கவுள்ளன. மோட்டார் வாகன உற்பத்தி தொழிலுக்கு ஏற்ற இடமாக ஒரகடம் மாறி உள்ளது.

முதலீட்டாளர்களின் அனைத்து தேவைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்றார் ஸ்டாலின்.

கொமாட்சு இந்தியா ஆலை மேலாண் இயக்குநர் எஸ்.யுயுனோ வரவேற்றார். தலைவர் எம்.சகானே ஆலை குறித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், தொழில்துறைச் செயலர் சக்திகாந்ததாஸ், ஜப்பான் துணைத் தூதர் ஒய்.கோடாகி, எல் அன்ட் டி நிறுவனத் தலைவர் ஏ.எம்.நாயக், ஆ.கிருஷ்ணசாமி எம்.பி, டி.யசோதா எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர்.

ஆட்சியர் பிரதீப் யாதவ், எம்.எல்.ஏ.க்கள் கே.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.துரைசாமி, ஒன்றியக் குழுத் தலைவர் ஆ.மனோகரன், எஸ்.பி. அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Posted in Atoz, Auto, Automotive, Cars, Chennai, Development, Employment, Exports, Factory, Germany, Getz, Harbor, Harbour, Hyundai, Industry, infrastructure, Investment, Jobs, Korea, MK Stalin, MPT, Plan, Port, Project, Santro, Shipping, Stalin | Leave a Comment »

Labour Unions – Industry workers association need to get rejuvenated

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

துயிலெழ வேண்டும் தொழிலாளர் துறை

எஸ். சம்பத்

தொழிலாளர்களுக்கும், தொழிலக நிர்வாகிகளுக்கும் இடையே பாலமாக, சமரச அலுவலராக, நீதித்துறை இணை அதிகாரத்துடன் செயல்பட்டு பிரச்சினைகளை விரைவாக தீர்த்துவைக்க வேண்டியது தொழிலாளர் நலத்துறை.

அந்த அமைப்பு இப்போது “”அதிகாரமற்ற அமைப்பு போல” தூக்கத்தில் இருப்பதால் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிவிட்டது.

தொழிலாளர் நலச் சட்டங்களிலேயே முக்கியமானது 1947-ல் இயற்றப்பட்ட தொழில் தகராறுகள் சட்டம்தான்.

தொழிலாளர்கள் தரப்பில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி எளிதாகப் பலன்களைப் பெற முடிகிறதா என்று பார்த்தால், இல்லை என்ற பதிலே விடையாகக் கிடைக்கும். இது கடந்த பத்தாண்டு காலமாக தமிழகத்தில் நிலவும் நிலைமை.

தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுவது, தொழிலகத்தில் அமலில் உள்ள நடைமுறைகளை முன் அறிவிப்பின்றி மாற்றுவது, தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்துவது, நிர்வாகத்துக்கும் தொழிலாளிக்கும் இடையே வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தொழிலாளியை வேலை நீக்கம் செய்வதாக இருந்தால் (தொழிலாளர் நலத்துறையிடம்) முன் அனுமதி பெறுவது, நியாயமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன் நிலுவையைக் கோருவது போன்றவை தொடர்பாகத்தான் அடிக்கடி தகராறுகள் எழுகின்றன.

சமீப கணக்கெடுப்புகளின்படி சென்னையில் மட்டும் கடந்த ஆண்டில் சுமார் 7,600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்தால் நூற்றுக்கணக்கில் வருகின்றன.

தொழில் தகராறு சட்டங்கள் பொருந்தி வருகிற நிறுவனங்களில் பணிபுரிகிற தொழிலாளர்கள், தங்கள் பிரச்சினைகளுக்காக நேரடியாக உயர் நீதிமன்றம் செல்ல முடியாது.

மாறாக, சமரச அலுவலர் முன்பு இப் பிரச்சினையை எழுப்பி அதில் சமரச முறிவு ஏற்பட்ட பின்னர், இதை நீதிமன்றத் தீர்ப்புக்கு விடலாமா, கூடாதா என்று அரசின் தொழிலாளர் துறை முடிவு செய்த பின்னரே வழக்கு தொடுக்க முடியும். அப்படியே தொடுத்தாலும் அந்த வழக்கில் தீர்ப்பு வர பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

அப்படியே தொழிலாளர் நீதிமன்றமோ, தீர்ப்பாயமோ ஒரு தீர்ப்பை தொழிலாளருக்குச் சாதகமாக வழங்கிவிட்டாலும், உடனடியாக நிர்வாகத்தின் தரப்பில் அதற்கு மேல் முறையீடு செய்யப்பட்டு நியாயம் கிடைப்பது மேலும் தாமதப்படுத்தப்படும்.

நடுநிலையான தொழிலாளர்துறை ஆணையர்கள் பணியில் இருந்தபோது தொழிலாளி மீதும் நிர்வாகத்தின் மீதும் தமது அதிகாரத்தை சரியாகப் பிரயோகப்படுத்தும் நிலைமை முன்னர் இருந்தது. அவற்றை நிர்வாகங்களும் ஏற்கும் நிலைமையும் இருந்தது.

இப்போது தொழிலாளி தரப்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டால், எதிர் மனுதாரராகிய நிர்வாகத்திடம் ஒருமுறைக்கு இருமுறை கேட்டுக் கொண்ட பிறகே வழக்கை விசாரணைக்கு எடுப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யப்படுகிறது.

இதையெல்லாம் மீறி ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று பல வருடங்கள் வாதிட்ட பிறகு, “”அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று தீர்ப்பு வருவது தொழிலாளர்களுக்கு பேரிடியாக அமைகிறது. சமீப காலத்தில் இப்படிச் சில தீர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

அரசு போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 23 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995-ல் பொது நிலையாணைகள் உருவாக்கி சான்றிடப்பட்டது. அதில் சில அம்சங்களை எதிர்த்து நிர்வாகமும், தொழிற்சங்கங்களும் தனித்தனியே மேல்முறையீடு செய்தன.

கடந்த 11 வருடங்களாக தொழிலாளர் துறையால் அவை விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வராததால், போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 34 ஆண்டுகள் ஆனபிறகும் பொது நிலையாணை ஏற்படாத அவல நிலை தொடர்கிறது.

2001-ல் போனஸ் தொடர்பான வழக்கு நிலுவையிலிருக்கும்போது போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் அனைத்திலும் சுமார் 600 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அது தொடர்பாக, தொழில் தகராறு சட்டப்பிரிவு 33 (1) (ஏ)-ன்படி வேலை நீக்கத்துக்கு ஒப்புதல் கேட்ட மனுக்கள் மீது இன்னமும் முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. இதனால் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்த உதாரணம் அரசுத்துறை நிறுவனத்தைப் பொறுத்தது. தனியார் துறை தொடர்பாக எப்படி இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

தொழிலாளர் நலத்துறையை தட்டி எழுப்பி, நிலுவையிலிருக்கிற வழக்குகளை முடித்து வைத்தால் மட்டுமே, “”தொழில் தாவா சட்டம்” இயற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.

(கட்டுரையாளர்: தொழிற்சங்க நிர்வாகி).

Posted in Benefits, Biz, Commerce, Communism, Communist, employee, Employer, Employment, Factory, Finance, Fire, HR, Human Resources, Industry, Insurance, Jobs, Judge, Justice, Labor, Labour, Law, Layoff, Management, Minister, Ministry, Order, Permanent, Strike, Temporary, Union, Wages, workers | Leave a Comment »

63 SEZ – 900 Crore unit in Ennore; Chennai: 2

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

எண்ணூரில் 900 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டலம்: சென்னையில் 2 } திருவள்ளூரில் 3

எம். ரமேஷ்

சென்னை, மார்ச் 16: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் ரூ.900 கோடியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 14 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் திட்டமிடப்பட்டன. அவற்றுள் நான்கு செயல்பட்டு வருகின்றன. புதிதாக 10 இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திருவள்ளூரில்…: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் ரூ. 900 கோடி முதலீட்டில் பல தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2,650 ஏக்கர் நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் “ஆட்டோ சிட்டி’ என்ற பெயரில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமையும். என்எம்சி ஆட்டோமோடிவ் இன்ஃபிராஸ்டிரக்சர் (பி) நிறுவனம்-டிட்கோ இணைந்து இந்த “ஆட்டோ சிட்டி’-யை அமைக்கின்றன.

மூன்றாவதாக சிங்கப்பூர் நிறுவனம் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் எலெக்ட்ரானிக், ஹார்ட்வேர் சார்ந்த ஐடி மற்றும் ஐடிஇஎஸ், லாஜிஸ்டிக்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை திருவள்ளூரில் அமைக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த அசென்டாஸ் நிறுவனம் இதை உருவாக்குகிறது.

சென்னையில்…: சென்னையில் இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகின்றன. இவை இரண்டும் டைடல்-2, டைடல்-3 என்ற பெயரில் தரமணியில் அமைகின்றன. டைடல்-2 சிறப்புப் பொருளாதார மண்டலம் 26.39 ஏக்கர் நிலப்பரப்பிலும், டைடல்-3 பொருளாதார மண்டலம் 25 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைகிறது.

கோவையில்…: டைடல்-4 என்ற பெயரிலான மற்றொரு சிறப்புப் பொருளாதார மண்டலம் கோவையில் உருவாக்கப்பட்டு வருகிறது. “எல்காட்’ நிறுவனத்தின் கூட்டுடன் இது உருவாக்கப்படுகிறது.

ஒசூரில் ரூ. 500 கோடி முதலீட்டில் 2,600 ஏக்கரில் பல தொழில்களை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பல தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் ரூ. 500 கோடி முதலீட்டில் உருவாக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் ரூ. 14.52 கோடி செலவில் ரப்பர் பொருள்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலம் தேர்வு செய்யப்படுகிறது.

==========================================
63 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அறிவிப்பு

புதுதில்லி, மார்ச் 16: நாடு முழுவதும் 237 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 63 மண்டலங்கள் குறித்து இதுவரை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அசாமில் 2006-07ம் ஆண்டில் தேயிலை தொழிலுக்கான மானியமாக ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டது. தேயிலை சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைய தேயிலை நிதியை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விவசாயிகளை அவர்களின் விளை நிலங்களிலிருந்து வெளியேற்றியது. மக்கள் இடம் பெயர்ந்தது ஆகியவை குறித்து தெரிவிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. எனவே இவை குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று ஊரக மேம்பாட்டு அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் கூறினார்.

ஆயுதமற்ற விண்வெளிக்கு ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி

விண்வெளியை அமைதியான முறையில் அனைவரும் பயன்படுத்தவும், ஆயுதங்களை அங்கே வைக்காமல் இருக்கவும், விண்வெளியில் உள்ள பொருள்களின் மீது ஆயுதங்களைப் பயன்படுத்தி சோதனை செய்வதற்கு எதிராகவும் உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த அரசு அக்கறை காட்டி வருகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

10 சதவீத வளர்ச்சிக்கு வரைவு அறிக்கை

2011-12-ம் ஆண்டில் 10 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டும் இலக்குடன் 11-வது ஐந்தாண்டு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேசிய வளர்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் எம்.வி.ராஜசேகரன் கூறினார்.

விக்ராந்த் போர்க்கப்பலின் ஆயுளை நீட்டிக்க ஆய்வு

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க் கப்பலின் ஆயுள் காலத்தை 2012-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய கப்பல் படை ஆய்வு மேற்கொண்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

சில கோளாறுகளை சரி செய்வதன் மூலமும், குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு செய்வதன் மூலம் இக்கப்பலின் ஆயுளை நீட்டிக்கலாம் என கப்பல் படை நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 44 ஆயிரம் டன் எடை கொண்ட அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க் கப்பலை இந்தியா வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

ரூ.267 கோடியில் தில்லி-ஆக்ரா புதிய சாலை

தில்லி-ஆக்ரா இடையே ரூ.267 கோடியில் போக்குவரத்து சிக்னல் இல்லாத நெடுஞ்சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

Posted in 237, 63, Agriculture, Assam, Chennai, Coimbatore, Commerce, Economy, Employment, Ennoor, Ennore, Exports, Factory, Farmer, Farmlands, Hosur, Human Rights, Industry, Jobs, Kamalnath, Kovai, Land, Madras, Manufacturing, Nagercoil, Nagerkovil, Perambaloor, Perambalur, SEZ, Special Economic Zone, Thiruvalloor, Thiruvallur, TIDEL | 1 Comment »

Tiruppur, Coimbatore Electricity shutdowns – Power cuts & Textile Industry’s impact

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

ரூ.240 கோடி மின்கட்டணம் செலுத்தும் நகரம்: மின்தடையால் அவதியுறும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்

திருப்பூர்,பிப். 14: ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி மின் கட்டணம் செலுத்தும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில், நாள்தோறும் ஏற்படும் மின்தடையால் பனியன் தொழில் நிறுவனங்களில் பெருமளவில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

திருப்பூர் நகருக்கு ஈரோடு அருகே உள்ள ஈங்கூர் துணை மின் நிலையம், கோவை அருகே உள்ள அரசூர் துணை மின் நிலையம் ஆகிய 2 இடங்களிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு, நகரில் உள்ள 10 துணை மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பூர் பகுதியில்,

  • வீட்டு இணைப்புகள் 99 ஆயிரத்து 450,
  • தொழிற்சாலை மின் இணைப்புகள் சுமார் 22 ஆயிரத்து 250,
  • மேலும் தெருவிளக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 157 மின் இணைப்புகள் உள்ளன.
  • ஒட்டு மொத்தமாக திருப்பூர் பகுதியிலிருந்து மாதம் தோறும் சுமார் ரூ.20 கோடி மின் கட்டணம் வசூலாகிறது.
  • ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி திருப்பூர் பகுதியில் மின் கட்டணம் செலுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் மின் கட்டணம் செலுத்தும் நகரம் திருப்பூர்.

உற்பத்தி அடிப்படையில் கூலி பெறும் பனியன் தொழிலாளர்களுக்கு மின்வெட்டு காரணமாக கூலியில் வெட்டு விழுகின்றது.

பாதிப்பு குறித்து “”டிப்” சங்கத் தலைவர் அகில்மணி கூறியது:

உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பின்னலாடை இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் “”இன்வென்டர்” பழுதாகின்றன. டீசல் செலவு அதிகமாகிறது. அதிக அளவில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுகின்றது என்றார்.

நகரில், சாய ஆலைகள் அமைத்து வரும் சாயக்கழிவுநீர் மறுசுத்திகரிப்பு நிலையங்களுக்கும், பனியன் தொழில் நிறுவனங்கள் தொழிற்கூடங்களை விரிவாக்கம் செய்து வரும் நிலையிலும், எதிர்வரும் காலத்தில் பனியன் தொழிற்துறை உபயோகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.

மின் வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,

  • பல்லடம் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 முதல் 6 மாதங்களுக்கு இப்பணி முடிவடையும்.
  • இதன் பின் திருப்பூர் நகரில் பெருமளவில் மின் வெட்டு இருக்காது.
  • இதேபோல் பெருமாநல்லூர் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது.
  • நகரில்
    • நொச்சிபாளையம்,
    • மங்கலம் சாலை,
    • அருள்புரம்,
    • மண்ணரை,
    • திருவள்ளுவர் நகர்,
    • மாதேஸ்வரா நகர்,
    • கே.ஜி.புதூர் கல்லூரி சாலை ஆகிய 8 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றனர்.

கர்நாடகத்தில் மின்தடை அமலாகிறது: முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு

பெங்களூர்,பிப்.23-

கர்நாடக மின்சார கழகத்தின் உயர்மட்ட குழு கூட்டமும், மின்சார தட்டுப்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்காக மந்திரி சபை கூட்டமும் நேற்று விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தபின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் தீவிர மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியை நாங்கள் நாடினோம். மத்திய தொகுப்பில் இருந்த 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுக்க இயலாது என்று கூறிவிட்டது.

மின் துண்டிப்பு செய்வது என்பது அரசின் நோக்கம் அல்ல. மாநில மக்களுக்கு சிறந்த மின் வினியோகத்தை வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.

மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறோம். ஒரு வேளை மின்சாரம் கிடைக்க வில்லை என்றால் மின் துண்டிப்பு செய்யப்படும் நிலை ஏற்படும். அதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

மின்சார துறை மந்திரி ரேவண்ணா கூறியதாவது:-

தற்போது மாநிலத்தில் மாணவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. எப்படியாவது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி கூறி உள்ளார். வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முயற்சித்து வருகிறோம். மின்சாரத்தை துண்டிக்கும் முடிவு இன்னும் எடுக்கவில்லை. வருகிற மந்திரி சபை கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

மின் வினியோக கழகத்தில் இருந்து 50 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெறுவது குறித்து பேசி வருகிறோம்.

இவ்வாறு மந்திரி ரேவண்ணா கூறினார்.

============================================================

செய்தி வெளியீடு எண்-193 நாள்-2.4.2007
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தின் எல்லா மின் நுகர்வோருக்கும் தடையில்லாத, நம்பகமான, தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு

  • வடசென்னை,
  • எண்ணூர்,
  • மேட்டூர் மற்றும்
  • தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் நிறுவுதிறனை 2500 மெகாவாட் அளவுக்கு அதிகரித்திட ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இவற்றைத் தவிர, நீலகிரி மாவட்டத்தில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின் திட்டத்தை செயலாக்கி வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற உள்ள இந்த நிறுவுதிறன் அதிகரிப்புத் திட்டங்கள் அதிக அளவு மின் உற்பத்தி செய்வது மட்டுமின்றி மின் செலுத்துகை மற்றும் விநியோகக் கட்டமைப்பினையும் வலிவாக்கும். மாநில மின்சார அமைப்பிற்கு (GRID)) மின்சாரத்தை ஏற்றுவதற்குத் தேவையான மின் செலுத்துப் பாதைகள் நிறுவுவதற்கான செலவு உட்பட மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த திட்ட முதலீடு 16 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி அளித்திட ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (Rural Electrification Corporation)) முன் வந்துள்ளது. இது ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், தமிழ்நாட்டுக்கு அளித்துள்ள கடனுதவிகளில் மிகப் பெரியதாகும். இது தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு, நிதித் தட்டுபாடின்றி அதன் விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற உதவிடும். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்திட மின்சார வாரியத்துக்கும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding)) ஏற்பட்டுள்ளது. இதில் 2.4.2007 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வாரியத் தலைவர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்களும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.அனில் கே.லகினா அவர்களும் கையெழுத்திட்டனர்.

மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு நா.வீராசாமி அவர்களும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.எல்.கே.திரிபாதி, நிதித் துறைச் செயலாளர் மற்றும் சிறப்பு ஆணையர் திரு.கு.ஞானதேசிகன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஆர்.சத்பதி, தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (கணக்கியல்), திரு.ச.கதிரேசன், தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (உற்பத்தி) திரு.ச.அருணாசலம், திரு.பால் முகுந்த், இயக்குநர் (தொழில் நுட்பம்), ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி, திரு ரமா ராமன், செயலாண்மை இயக்குநர், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி ஆகியோரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் நிகழ்ச்சியின் பொழுது உடனிருந்தனர்.
***
வெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.

Posted in Arasoor, Arasur, Bangalore, Banian, Business, Coimbatore, Coomarasami, Coomarasamy, Diesel, Economy, Electricity, Engoor, Engore, Engur, Environment, Erode, Factory, Filtration, Garments, Generator, Incentives, Industry, Inverter, Karnataka, Kovai, Kumarasami, Kumarasamy, Palladam, Perumanalloor, Perumanallur, Pollution, Power, Power Cuts, Power Station, retail, Small Business, Textiles, Thiruppoor, Thiruppur, Tiruppoor, Tiruppur, UPS, Waste Water | 2 Comments »