Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Bengaluru’ Category

“User development fees” at the Bangalore International Airport

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

சர்வதேச விமானநிலைய கட்டண வசூலை நிறுத்திவைக்க யோசனை

பெங்களூர் அருகே உள்ள தேவனஹள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு இந்த விமானநிலைய நிறுவனத்துக்கு மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.

பெங்களூரில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது சர்வதேச விமானநிலையம். இந்த விமானநிலையத்தில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விமானநிலையம் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ளதால் பெரும் முதலீட்டில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான திட்டச் செலவை ஈடுகட்டவும் பராமரிப்புச் செலவைச் சரிக்கட்டவும் இந்த விமானநிலையத்திற்கு வந்துசெல்லும் பயணிகளிடம் தனி மேம்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க முடிவுசெய்யப்பட்டது.

இந்தக் கட்டணத் தொகையானது உள்நாட்டுப் பயணிகளுக்கு சற்று குறைவாகவும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சற்று கூடுதலாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

பெங்களூரில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் எச்ஏஎல் விமானநிலையத்தை ஒப்பிடும்போது தூரம், நேரம், பணம் அதிகமாக விரயமாவதால் புதிய சர்வதேச விமானநிலையத்திற்கு பல தரப்பில் ஆட்சேபம் எழுந்தது.

அதுமட்டுமன்றி, சென்னை உள்ளிட்ட அண்டை மாநில நகர்களுக்கு சர்வதேச விமானத்தில் இருந்து செல்லும்போது காலவிரயமும் பணவிரயமும் கட்டாயமாக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரு விமானநிலையங்களையும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் தேவனஹள்ளி சர்வதேச விமானநிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அபிவிருத்திக் கட்டணம் வசூலிக்கும் முடிவை விமானநிலையத் திட்டச் செலவின் தணிக்கை அறிக்கை வரும்வரை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.

இதுபோன்ற யோசனையை ஹைதராபாத் சர்வதேச விமானநிலைய நிறுவனத்திடம் கூறியபோது அதைப் பரிசீலித்து அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த யோசனைப்படி, முதல் 4 மாதங்களுக்கு உள்நாட்டுப் பயணிகளிடம் விமானநிலைய மேம்பாட்டுக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் மத்திய அமைச்சகம் கூறிய யோசனையைப் பரிசீலித்து முடிவு செய்யவேண்டியது பெங்களூர் சர்வதேச விமானநிலைய நிறுவனத்தின் நிர்வாகத்தின் பொறுப்பு என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பிரன்னர் தெரிவித்தார்.

கட்டண விலக்கு காலமாக அறிவிக்கப்பட்டுள்ள 4 மாத காலத்திற்குள் மேம்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பதை கணக்கிட ஹைதராபாத் சர்வதேச விமானநிலையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பெங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் விமானம் தரையிறங்கிப் புறப்பட்டுச் செல்லும். இந்த விழாவில் கலந்துகொள்ள பெங்களூர் வரும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறைச் செயலர் அசோக் சாவ்லா தலைமையிலான குழு இந்த விஷயம் குறித்து விமானநிலைய நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் பயணிகளிடம் ரூ.675 மற்றும் வரியை மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கவும் வெளிநாட்டுப் பயணிகளிடம் ரூ.955 மற்றும் வரியை வசூலிக்கவும் பெங்களூர் சர்வதேச விமானநிலைய நிறுவனம் முடிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted in AAI, Airport, Andhra, AP, aviation, Bangalore, Bengaluru, Devanahalli, Domestic, Hyderabad, International, Mandakalli, Mysore, UDF, User, Vayudoot | Leave a Comment »

Water supply & distribution in Tamil Nadu – Inter-state relations, Dam Construction, Rivers

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

மூன்று பக்கமும் துரோகம்; ஒரு பக்கம் கடல்!

கே. மனோகரன்

தமிழகம்போல இன்று தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் மாநிலம் இந்தியாவில் வேறொன்று இருக்க முடியாது.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன. நமக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரே நீர்ஆதாரம் கடல்தான். தாகத்துக்கு கடல்நீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய முடியுமா?

தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மல்லு கட்டுவதற்கே ஆண்டுகளை இழந்ததுடன், இருக்கும் ஏரி குளங்களையும் நாம் பாழாக்கி இழந்து வருகிறோம்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது பூண்டி நீர்த்தேக்கம். குசஸ்தலை ஆற்றிலிருந்துதான் இந்த நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீர் வரவேண்டும். இந்த ஆறு பள்ளிப்பட்டில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் 12 கி.மீ. தூரத்தில் தொடங்குகிறது.

அங்குள்ள அம்மபள்ளி என்ற இடத்தில் 1975-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை இருமலைகளையும் இணைத்து அணை கட்டும் பணி நடந்தது. ஆனால் இப்படி ஓர் அணை கட்டப்படுவதுகூட தெரியாமல் தமிழக அரசு அமைதியாக இருந்தது. அதன் பிறகு குசஸ்தலை ஆறு தமிழகத்துக்குத் தண்ணீர் தரவில்லை. தலைவலி தந்தது. வறண்டுபோனது பூண்டி நீர்த்தேக்கம்.

குசஸ்தலை ஆறு தடைபட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பற்றித்தான் கவலைப்பட்டது. ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் பல கோடிகளை தமிழக அரசிடம் பங்குத்தொகையாகப் பெற்ற ஆந்திர அரசு, அந்த நிதியில் சித்தூர், கடப்பா போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள ஏரிகளைப் புனரமைத்தும், மிகப்பெரிய ஏரியான பிச்சாட்டூர் ஏரியை சீரமைத்தும், புதிய நீர்த்தேக்கங்களையும் கட்டி கால்வாய்கள் மூலம் இணைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டது.

சென்னைக்கு தண்ணீர் தருவதாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் “ஜீரோ பாய்ண்ட்’ எனப்பட்ட கண்டலேறு வரை தண்ணீர் வந்ததே தவிர சென்னைக்கு வரவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் புதிய வீராணம் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் பாலாற்றுக்கு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா நீர்த்தேக்கம். கர்நாடகம் படிப்படியாக அதன் கொள்ளளவையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் பாலாற்றின் நீர்வரத்து குறைந்து போனது.

கர்நாடகத்துக்கும், தமிழக எல்லைக்கும் இடையில் பாலாற்றுக்கு வரும் உபநதிகளான மல்லிநாயக்கனஹள்ளி ஆறு, பெட்மடு ஆறு ஆகியவற்றின் குறுக்கே தலா 4 ஏரிகளை ஆந்திர அரசு கட்டிவிட்டது. இதேபோல் தமிழக எல்லையின் 3 கி.மீ. தூரத்தில் 2000-ம் ஆண்டில் பாலாற்றின் உப நதியான மண்ணாற்றின் குறுக்கே பெரியபள்ளம் என்ற இடத்தில் ரூ. 65 லட்சத்திலும், அதே நேரத்தில் எல்லையின் சில நூறு அடிகள் தூரத்தில் பிரம்மதேவர் கொல்லை என்ற லட்சுமிபுரத்தில் ரூ. 1.20 கோடியில் இருமலைகளை இணைத்து ஆந்திர அரசு அணைகளை கட்டியது.

இவற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் தற்போது குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே பெரிய அளவிலான அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் தமிழக அரசு புதிய அணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் காவிரி வடிகாலில் கிடைக்கும் கூடுதல் நீர் சராசரியாக 30 டி.எம்.சி. கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த தண்ணீரில் மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம்.

ஆளியாறு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காத கேரளம், முல்லைப் பெரியாறு அணையில் முரண்டு பண்ணிக்கொண்டு வருகிறது. சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் வகையில், அதன் துணைநதிகளை தனியார் குடிநீர் ஆலைகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது கேரளம்.

காவிரியை தமிழகத்தின் வாய்க்கால் போலக் கருதி, மிகைநீரை மட்டுமே வழங்குகிற திட்டத்தை கர்நாடகம் எப்போதோ தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கான நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த மூன்று மாநிலங்களும் மறித்துக் கொண்டு வருகின்றன.

இழந்த தண்ணீரைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் நீரையாவது உருப்படியாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர்களின் கண்ணீரால் கடல் நீர் மேலும் கரிக்கும்.

————————————————————————————————————————–
பாலாற்றில் விளையாடும் அரசியல்!

ஆர். ராமலிங்கம்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விரைவில் அணை கட்டத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதிபட கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய விவரம் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. தமிழக முதல்வரும் இவ்விஷயத்தில் நம்பிக்கையூட்டும் தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை.

இதை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலாறு விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற தோழமைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.

கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 40 கி.மீ. தூரமும் ஆந்திரத்தில் 31 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக, அவ்வப்போது பெய்யும் கனமழைதான் தமிழக பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையை ஈரப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து இருந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு பேத்தமங்கலத்தில் அணை கட்டியுள்ளது. அந்த மாநிலம் வெளியேற்றும் உபரி நீரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி ஆந்திர அரசு நீர்நிலைகளை நிரப்பி வருகிறது.

மழைக் காலங்களில் அதிர்ஷ்டவசமாக ஆந்திர எல்லையில் இருந்து ஒருசில தினங்கள் வரும் நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் பாலாறு பொய்த்துவிடுமே என தமிழகத்தின் வடமாவட்ட மக்களின் அச்சப்படுகின்றனர்.

தற்போது மணல் சுரண்டல், நீர்வளம் பறிபோதல், தோல் தொழிற்சாலைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுநீரை வெளியேற்றுவதால் படுகை மாசுபடுதல் போன்ற மும்முனைத் தாக்குதலில் தமிழக பாலாற்றுப் பகுதி சிக்கியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1892-ல் தமிழகத்தில் பாயும் 12 ஆறுகளுக்கு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் பாலாறும் இடம் பெற்றுள்ளது.

அன்றைய மைசூர் மற்றும் மதராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 1952 வரை அமலில் இருந்தது. அன்றைக்கு சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பாலாற்று நீர்வளத்தில் ஆந்திர மாநிலத்துக்கும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பாரம்பரிய உரிமை அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழகம் பாலாற்று பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.

இரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாலாற்று பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதில் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, காவிரி நீர் பங்கீட்டை போன்று பாலாற்று நீரில் தனக்குள்ள பங்கீட்டு உரிமையை தமிழகம் நிலைநாட்டுவது ஒன்றே தீர்வாக அமையும்.

நதிநீர் பங்கீடு உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பாலாற்று நீர்வரத்தில் 60 சதவீதத்தை தமிழகம் பெற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு 1956-ல் கொண்டு வந்த நதிநீர் வாரியச் சட்டத்தை பயன்படுத்த முடியும். தமிழக அரசு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இச்சட்டத்துக்கு உயிரூட்டலாம்.

மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை எழுந்தால் இச்சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வாரியத்தை ஏற்படுத்த முடியும்.

அதன் மூலம் மாநிலங்களுக்கிடையே உள்ள நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தக்க அறிவுரையை வழங்க முடியும். புதிதாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஒன்றையும் மாநிலங்களுக்கிடையே ஏற்படுத்த முடியும்.

தமிழக அரசியல் கட்சிகளிடையே மக்களின் பொதுப் பிரச்னைகளில் கூட ஒற்றுமையின்மை நிலவுவது உலகறிந்த உண்மை. இது அண்டை மாநிலங்களுக்கு பலமாக அமைந்துள்ளது.

பாலாறு விஷயத்தில் திமுக அரசும், எதிர்கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி அரசியலாக்குவதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இறங்கினால் மட்டுமே நதிநீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பாலாற்று பிரச்னையில் மத்திய அரசும், நீதிமன்றமும் தலையிடுவதற்கான நெருக்கடியை தமிழகத்தால் ஏற்படுத்த முடியும்.

ஆர்ப்பாட்ட அரசியலைக் காட்டிலும், ஆரோக்கிய அரசியலே ஆபத்தைத் தடுக்க முடியும். தமிழக அரசியல் தலைவர்கள் சிந்திப்பார்களா?

—————————————————————————————————————–
மக்கள் திரள் போராட்டம்-காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்


தமிழ்நாட்டில் ஏரி, குளம், ஆறுகளுக்குப் பஞ்சம் இல்லை. காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் உண்டு. தென்மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள் ஒருபோதும் பொய்த்ததில்லை. முப்புறம் கடலும் உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களும் உள்ளன. உழைப்பதற்குச் சலிக்காத மக்களும் உண்டு. அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வளங்களும் நிறைந்திருந்த தமிழ்நாடு இன்றைக்கு என்னவாகியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வேதனையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.

நீரில்லா ஆறுகள்

தமிழ்நாடு எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மீள முடியாதபடி தவிக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிப்பதற்கு கர்நாடகமும் கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரம் தனது எல்லைக்குள் அணை கட்ட முற்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆறுகளின் மூலம் தமிழ்நாட்டில் இருபது மாவட்டங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் இப்போது இந்த மாவட்டங்கள் பாசனத்திற்குரிய நீரை இழந்து வறண்ட பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக மாறினால் உணவுக்காக பிற மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைமை உருவாகிவிடும்.

விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் போதுமான நீரில்லாமல் நாம் தவிக்கும்போது, ஆறுகளிலும் நிலத்தடியிலும் எஞ்சியுள்ள சிறிதளவு நீரையும் உறிஞ்சி எடுத்து விற்பனைப் பொருளாக “கோகோ கோலா’, “பெப்சி’ போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அவலமும் நடைபெறுகிறது.

நகர்ப்புற மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளை

அண்டை மாநிலங்களின் வஞ்சனையால் வறண்டுவிட்ட இந்த ஆறுகளிலிருந்து மணல் மிக எளிதாகக் கொள்ளை அடிக்கப்படுகிறது. எந்த மாநிலங்கள் நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றனவோ அதே கேரள மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் லாரிலாரியாகத் தமிழக ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக இந்த ஆறுகளில் நீரோட்டம் இல்லாமல் அண்டை மாநிலங்கள் செய்து விட்டனவோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. இந்த ஆறுகள் வறண்டு போவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் தமிழக அரசு இருப்பதற்கு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி ஆளும் கட்சியினரே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழகத்தின் மற்ற ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அடியோடு சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழக ஆறுகளின் இரு பக்கமும் உள்ள கிணறுகளும் நீரூற்றுகளும் வறண்டு போய் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உருவாகிவிடும். மேலும் இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், பாலங்கள் ஆகியவை மணல் கொள்ளையின் விளைவாக பலவீனம் அடைந்து இடியும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னைக்கு அருகே காரனோடை பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறையும் ஏரிகள்

ஆறுகளின் கதி இதுதான் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சுருங்கி வருகின்றன. பல ஏரிகள் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமான 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தமிழக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு இந்த ஏரிகள் பாசன வசதி அளித்து வந்தன. இவற்றின் மூலம் பத்து லட்சம் ஹெக்டேர்கள் பயன் பெற்றன.

1980-ஆம் ஆண்டில் இந்த ஏரிகளின் பாசன வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் மேலும் 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன் பெறும் என மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டபோது அந்தத் தொகையை ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு தருவதாக ஒப்புக்கொண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 27 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது ஏன் என்பதை ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.

தமிழ்நாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள ஏரிகளைப் பொதுப்பணித்துறையும் அதற்குக் குறைவாக உள்ள ஏரிகளை ஊராட்சி ஒன்றியங்களும் நிர்வகித்து வருகின்றன. இவை தவிர அணை நீரைப் பெற்று பாசனம் செய்யும் 100 ஏக்கருக்கும் குறைவான சில ஏரிகளையும் பொதுப்பணித்துறை நிர்வகிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 12 ஆயிரம் ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 27 ஆயிரம் ஏரிகளும் உள்ளன.

கடந்த நாற்பதாண்டுகளில் இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஏரிகளில் மட்டுமல்ல; ஏரிகளுக்கு மழை நீரைக் கொண்டு வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீரை நிலங்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களும்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தனி நபர்கள் ஆக்கிரமித்த ஏரிகளை விட அரசுத் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் இன்னும் அதிகமாகும். நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் ஏரிகளுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளன.

ஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் கட்டடமே உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை.

ஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 27 ஆயிரம் கண்மாய்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் எல்லைகள் சுருங்கி அழிந்து வரும் அபாயம் உள்ளது. ஏரிகளிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்கவும் அதன் நீர் வழி எல்லைகளை வகுக்கவும் அண்மையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கோ அல்லது ஊராட்சித் தலைவர்களுக்கோ இல்லை.

ஆக்கிரமிப்புகள் திடீரென்று ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடவில்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டோ அல்லது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கடமை தவறிய இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற ஆணையில் எதுவும் கூறப்படவில்லை என்பது திடுக்கிட வைக்கும் உண்மையாகும்.

காடுகள் அழிப்பு

1967-ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 23 விழுக்காடாக இருந்தது. இப்போது தமிழகக் காடுகளின் பரப்பளவு என்பது 17 விழுக்காடாகும். 6 விழுக்காட்டிற்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுவிட்டன. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் ஊழலால் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெறாது. இதன் விளைவாக பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கடற்கரை 1000 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பல இடங்களில் கரையோரமாக அலையாற்றுக் காடுகள் இருந்தன. தென் மாவட்டங்களில் கடற்கரை நெடுகிலும் தேரிகள் என அழைக்கப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக அமைந்திருந்தன. ஆனால் இந்தக் காடுகளையும் மரம் வெட்டுபவர்கள் விட்டு வைக்கவில்லை. மணற்குன்றுகளையும் சிதைத்து விட்டார்கள். இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுனாமி அலைகள் வீசியபோது அவற்றைத் தடுக்கும் அலையாற்றுக் காடுகளும் தேரிகளும் இல்லாததன் விளைவாக பேரழிவு ஏற்பட்டது.

மோதல் சாவுகள்

காவல்துறை மக்களை வேட்டையாடும் துறையாக மாறிவிட்டது. ஆளும் கட்சியினரின் ஏவல்படையாக காவல்துறை மாற்றப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான பல்வேறு வகையான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.

சொல்லாமலேயே மற்றொரு பெரும் கொடுமை தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க காவல்துறை முயல்கிறது. அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களிடமிருந்து காவல்துறை, தானே பறித்துக் கொண்டது. இந்தக் குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்துவிட்டதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதில் சமபங்கு காவல் துறைக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள் – சுரண்டப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சமூகவிரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்குதடையின்றி நடத்துகிறது.

மீறப்படும் சட்டமன்ற மரபுகள்

சட்டமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்கள் பேச முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசுக்கு எதிராக யாரும் எதுவும் கூறிவிடாதபடி தடுக்க முயற்சி வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சிதான் இவ்வாறு சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி மதிக்காமல் போனால் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அவ்வாறே நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதே கிடையாது. வெளியே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவதோடு தன் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். அவர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் சட்டமன்றக் கூட்டத்தை அறவே புறக்கணித்தார். முதலமைச்சராக இருந்தால்தான் சட்டமன்றத்திற்கு வருவது. இல்லையேல் வருவது தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என்று இருவருமே கருதுகிறார்கள். சட்டமன்ற ஜனநாயகத்தை உண்மையிலேயே இவர்கள் மதிப்பவர்களாக இருந்தால் சட்டமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் தங்கள் பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும்.

மக்கள் போராட்டம்

சட்டமன்ற மரபுகள் துச்சமாக மதிக்கப்பட்டு மக்கள் பிரச்னைகள் பற்றி அங்கே பேச முடியாத நிலைமையில் வெளியில் மக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய – மாநில அரசுகளின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார சட்டங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுந்துள்ளது.

பதவிகளைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தலுக்குத் தேர்தல் கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

தமிழக அரசியல் சீர்கேடுகளை எதிர்த்தும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மக்கள் திரண்டு எழுந்து போராட முன்வர வேண்டும். அந்தந்த ஊரில் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினால், எத்தகைய அடக்குமுறையாலும் அப்போராட்டத்தை ஒடுக்க முடியாது.

1965ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டமாக நடைபெற்றது. இந்தியை எதிர்த்த திராவிடக் கட்சிகள்கூட அந்தப் போராட்டத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல் பதுங்கின. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1970களின் பிற்பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளின் ஆதரவும் கிடைத்தது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடினார்கள். 1975ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் தொடங்கியபோது மக்கள் பேராதரவு அளித்தனர். பெரும் தியாகசீலரும் தன்னலமற்றவருமான அவரை மக்கள் நம்பினார்கள். மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி இந்திராவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை அவர் நிலைநாட்டினார்.

மேற்கண்ட போராட்டங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொதிப்புணர்வுடன் போராடினார்கள். இந்த மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாடு பூராவிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு திரண்டு எழுந்து போராடுவதென்பது அத்தனை எளிதானதல்ல. மக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல், கள்ளச் சாராயம், மணல் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, காவல் துறையின் காட்டாட்சி மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்து அந்தந்தப் பகுதிகளில் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் நாடு தழுவிய பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்டி அவர்களைத் திரட்டி இத்தகைய வேண்டாத சக்திகளை எதிர்த்துப் போராட முயற்சி எடுக்க வேண்டிய கடமை தன்னலமற்ற மக்கள் தொண்டர்களுக்கு உண்டு.

ஜனநாயகச் சிதைவு, தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் தமிழக மக்களைத் திரட்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்கள் திரள் போராட்டம் நமது கடமை மட்டுமல்ல. வரலாற்றுக் கட்டாயமும் ஆகும்.

இந்த வேலையை நாம் செய்யாமல் நமது சந்ததியினர் செய்யட்டும் என்று விட்டுவிடுவோமானால் எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in Agreements, Agriculture, Alliance, Andhra, AP, Bengaluru, Bethamangala, Blind, Border, Cauvery, Center, Chennai, Construction, Dam, Distribution, DMK, Drink, Drinking, Drinking Water, Farming, Farmlands, Flood, Flow, Govt, Inter-state, Interstate, Intrastate, Karnataka, Kaveri, Kerala, Krishna, Kuchasthalai, Kusasthalai, Lakes, Limits, Madras, Management, Mullai, Mullai Periyar, Mullai Periyaru, Mysore, Nature, Nedumaaran, Nedumaran, Paalar, Paalaru, Palar, Palaru, peasants, Periyar, Periyaru, Pethamangala, Pichathoor, Pichathur, Pichatoor, Pichatur, Politics, Poondi, reservoir, River, Rivers, Sea, Shortage, State, Storage, Supply, Tamil Nadu, TamilNadu, TMC, TN, Waste, Water | Leave a Comment »

Interview with Yediyurappa – State of Karnataka and BJP, Janata Dal, Deve Gowda & Congress

Posted by Snapjudge மேல் நவம்பர் 4, 2007

நிரூபிக்கவேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல!: எடியூரப்பா

எடியூரப்பா – கர்நாடக அரசியலில் கடந்த முப்பது ஆண்டுகளாக பரவலாக மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவர். ஜனசங்க காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் எடியூரப்பாவின் மிகப்பெரிய பலம் நேர்மையானவர், கைசுத்தமானவர் என்கிற நல்ல பெயர். சக்தி வாய்ந்த லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது அடுத்த பலம். எடியூரப்பாவும் குமாரசாமியும் இணைந்து ஆட்சி அமைத்தபோது அது உண்மையிலேயே பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியாக அமைந்தது. காரணம்,

கர்நாடகத்தில் சக்தி வாய்ந்த இரண்டு சாதிப் பிரிவுகளான லிங்காயத்துகளும் வொக்கலிகர்களும் இணைந்த கூட்டணியாக

அது இருந்தது என்பதால்தான். மதச்சார்பற்ற ஜனதா தளம் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்த பிறகும்

அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என்கிற அரசியல் குழப்பத்துக்கு நடுவில் எடியூரப்பாவின் கருத்துகளை அறிந்துகொள்ள முற்பட்டோம். கர்நாடகத்தின் முன்னாள் துணை முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான எடியூரப்பா

“தினமணி’ ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

குமாரசாமி அமைச்சரவையிலிருந்து விலகி, ஆதரவை பாரதிய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டதுதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

எங்களது உடன்பாட்டின்படி ஆட்சி மாற்றத்திற்கு அவர் தயாராக இல்லை என்பதால் நாங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டது உண்மை. சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தலை அறிவித்திருந்தால் அதில் பிரச்னையே இருந்திருக்காது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம்.

அப்படியானால் இப்போது சட்டமன்றத்தைக் கலைத்து, தேர்தலுக்கு வழிகோலுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் யாருக்கும் இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டால் தேர்தலைச் சந்திப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. குமாரசாமி அமைச்சரவைக்கு நாங்கள் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்ட போது அப்படியொரு நிலைமை இருந்தது. அப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது, மதச்சார்பற்ற ஜனதாதளம் எங்களை ஆதரிக்க முன்வந்திருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எங்களது கூட்டணிக்கு இருப்பதால், எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதுதான் நியாயம். அரசியல் சட்டமும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் அதைத்தான் சொல்கின்றன.

உங்களுக்கே இது சந்தர்ப்பவாதமாகப் பட வில்லையா?

அரசியலில் ஈடுபடுவதும், ஆட்சியில் அமர்வதும் மக்களுக்குச் சேவை செய்யவும், நமது கொள்கைகளையும், திட்டங்களையும் அமல்படுத்தவும் நமக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் என்பதுதான் உண்மை. எங்களுக்குப் பெரும்பான்மை இருந்தும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது, மறுக்கப்படுகிறது என்னும் போது நாங்கள் பழி வாங்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை.

பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி வசைமாரி பொழிந்த தேவகௌடா மற்றும் குமாரசாமியின் ஆதரவை நீங்கள் ஏற்றுக் கொள்வது சந்தர்ப்பவாதமில்லையா?

நாங்கள் அவர்களது ஆதரவைக் கோரவில்லை. அவர்கள்தான் வலியவந்து ஆதரவு தந்திருக்கிறார்கள். மேலும் எங்களது ஒப்பந்தப்படி உடனடியாக ஆட்சியை எங்களிடம் ஒப்படைக்காதது தவறு என்று குமாரசாமி பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அதற்கு மக்கள் மன்றத்திடம் மன்னிப்பு கேட்பதாகவும் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகும் அவரது எண்ணத்தையும், செயல்பாடுகளையும் சந்தேகிப்பது நியாயமல்ல. அவரே வலியவந்து ஆதரவு அளித்த பிறகு, எங்களுக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு ஆட்சியமைக்க எங்களை அழைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்பதில் எந்தவித சந்தர்ப்பவாதமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

உங்களிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த குமாரசாமி இப்போது திடீரென்று வலிய வந்து ஆதரவு தருவது ஏன்?

சட்டமன்றம் கலைக்கப்படாமல் இருக்கும் நிலைமை. புதுதில்லியில் கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் நிருபர்களிடம் பேசும் போது, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் யாருக்காவது இருக்குமானால், அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பதில் தனக்குத் தடையேதுமில்லை என்று அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருப்பதாக குமாரசாமி அறிவித்தார். இதுதான் நடந்தது.

அதனால் ஆளுநர் உங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்கிறீர்கள், அப்படித்தானே?

மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எனது தலைமையில் ஆட்சி அமைக்க, தனது ஒப்புதலை அளிக்கிறது. அந்த ஒப்புதல் கடிதத்தை முன்னாள் முதல்வரும், அந்தக் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவருமான குமாரசாமி ஆளுநரிடம் அளிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன். எங்களது கட்சியும்

ஏகமனதாக என்னைத் தேர்வு செய்கிறது. 129 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு இருக்கும் நிலையில், என்னை ஆட்சி அமைக்க அழைப்பதுதானே முறை?.

நீங்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசிய போது அவர் என்னதான் சொன்னார்?

உங்களுக்குப் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பது தெரிகிறது. நான் அரசியல் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டவன். அதற்கு ஏற்றவாறு அறிக்கை தயாரித்து எனது பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறேன் என்று கூறினார்.

அவரது செயல்பாடு குறித்து உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?

ஓர் ஆளுநரின் செயல்பாடுகளைச் சந்தேகிப்பது முறையல்ல. ஆனால், எனக்கு ஒரு விஷயத்தில் ஆளுநரிடம் வருத்தம் உண்டு. குமாரசாமி அமைச்சரவையிலிருந்து நாங்கள் விலகி, எங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டபோது, ஆளுநர் நியாயமாகச் செய்திருக்க வேண்டிய விஷயம், குடியரசுத்தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்வதல்ல. சட்டமன்றத்தில் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைமையில்தான் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அவர் பரிந்துரை செய்திருக்க வேண்டும்.

மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் உங்களுடன் கைகோர்த்துக் கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், நீங்கள் எப்படிப் பெரும்பான்மையை நிரூபித்திருப்பீர்கள்?

அது ஆளுநர் கவலைப்பட வேண்டிய விஷயமல்ல. எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்புப்படி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல. இந்தச் சட்டமன்றத்தைப் பொருத்தவரை அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அந்த வகையில், ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது சரியான முடிவாக எனக்குப் படவில்லை.

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திச் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஆளுநரின் செய்கைகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவில்லை. இந்த முடிவு ஆளுநரால் எடுக்கப்பட்டதா, இல்லை, மத்திய அமைச்சரவையால் எடுக்கப்பட்டதா என்பதும் எனக்குத் தெரியாது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்த்து அல்லது அந்தக் கட்சியில் பிளவு ஏற்படுத்தி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் முயற்சிதான் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்திருப்பது என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. அந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.

இத்தனை குழப்பங்களுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என்கிறீர்களா?

அதிலென்ன சந்தேகம்! தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கிற மனோபாவம் காங்கிரஸ் தலைமைக்கு எப்போதுமே உண்டு. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அவற்றில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் பிரதமரைச் சந்தித்தீர்களே, அவர் என்ன சொன்னார்?

பிரதமரை நாங்கள் சந்தித்தபோது உள்துறை அமைச்சரும் இருந்தார். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நடக்க மாட்டோம் என்று உறுதி அளித்தார்கள். குடியரசுத்தலைவரும் அதையேதான் சொன்னார். ஆனால், ஒரு வார காலமாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லையே?

அவர்களுக்குத் தெரிந்த அரசியல் சட்டத்தில் இப்படித்தான்எழுதப்பட்டிருக்கிறதோ என்னவோ? அரசியல் சட்டப்படி எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு எந்த வழியும் கிடையாது என்பது தான் நிஜம்.

இன்னாரால் நிலையான ஆட்சி அமைக்க முடியும் என்று ஆளுநர் திருப்தி அடைந்தால்தான் ஒருவரை அவர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்கிற பிரிவும் இருக்கிறதே?

எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு இந்தப் பிரிவுக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது. எந்தவொரு அரசின் பெரும்பான்மையும் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு எனக்கு இருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்தப்பட்ட நிலையில் எங்களை ஆட்சி அமைக்க அனுமதித்து, சட்டமன்றத்தில் எங்களது பெரும்பான்மையை நிரூபிக்க கோருவதுதான் ஆளுநர் நியாயமாகச் செய்ய வேண்டிய விஷயம். அவர் அதைச் செய்யத் தவறினால், அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்கிற பழியைச் சுமக்க நேரும்.

ஜனதா தளத்தில் அதிருப்தியாளர்கள் இருப்பதும், அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதும் தெரிந்த பிறகும் உங்களை அவர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது நியாயமா?

அதிருப்தியாளர்கள் இருந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இப்போது இல்லை. பிரகாஷ் எங்களுடன் இருக்கிறார் என்பது மட்டுமல்ல. தனது முழு ஆதரவையும் எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். அது ஒருபுறம் இருக்கட்டும். அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள், கட்சி பிளவுபட வாய்ப்பிருக்கிறது, பெரும்பான்மை கிடையாது போன்ற சாக்கு போக்குகளைச் சொல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதைத்தானே பொம்மை வழக்கின் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது. 224 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் 79 உறுப்பினர்களுடைய பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அடுத்தபடியாக 65 உறுப்பினர்களுடைய காங்கிரஸ் கட்சியும், மூன்றாவதாக 58 உறுப்பினர்களுடைய மதச்சார்பற்ற ஜனதாதளமும் இருக்கின்றன. சட்டமன்றத்தில் அதிக இடங்களை உடைய பெரிய கட்சி என்கிற வகையில் பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் சட்டமன்றத்தைக் கலைப்பது என்பது நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம்.

உங்களுக்குப் பெரும்பான்மை இல்லாதபோது எப்படி ஆட்சி அமைக்க அழைப்பது? சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும் போது மதச்சார்பற்ற ஜனதாதளம் எதிர்த்து வாக்களிக்காது என்பது என்ன நிச்சயம்?

இதைப்பற்றி ஆளுநர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதிக எண்ணிக்கையை உடைய கட்சி என்கிற வகையில் எங்களுக்கு வாய்ப்பளித்த பிறகு, எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதபட்சத்தில் அவர் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதோ, அல்லது சட்டமன்றத்தைக் கலைப்பதோ நியாயம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் அப்படிச் செய்ய முடியாது, செய்யக்கூடாது.

குமாரசாமி மன்னிப்பு கேட்டுவிட்டார், நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருக்கிறார் என்று கூறுகிறீர்கள், ஆனால், அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகெüடா 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறாரே, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பாரதிய ஜனதா கட்சியுடன் 20 மாதங்களுக்கு முன்னால் கூட்டணி அமைத்தது குமாரசாமிதானே தவிர தேவகெüடா அல்ல. முதலில் அவர் அதை எதிர்த்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகளில் பல குமாரசாமிக்கு உடன்பாடானவை என்று கருத முடியாது. இன்னொரு விஷயம். தேவகெüடாவின் நிபந்தனைகள் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைமைக்குத்தான் அனுப்பப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நான் இப்போது விமர்சிக்க விரும்பவில்லை.

இவ்வளவு பிரச்னைகள், மனக்கசப்புகள், பரஸ்பரம் சுமத்திய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் மீண்டும் இணைந்து சுமுகமாகச் செயல்பட முடியும் என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக முடியும். எங்களது 20 மாத கால ஆட்சிதான் அதற்கு உதாரணம். தனிப்பட்ட முறையில் எனக்கும் குமாரசாமிக்கும் உள்ள உறவும் நெருக்கமும் நடந்த சம்பவங்களால் சிறிதும் பாதிக்கப்படவில்லை. இதோ இப்போதுகூட எனது அறையில்தான் அவர் அமர்ந்திருக்கிறார், நீங்கள் பார்த்தீர்களே. எங்களது இந்தக் கூட்டணி 20 மாதங்களில் சாதித்திருக்கும் சாதனைகள் ஏராளம். நாங்கள் ஒன்றுபட்டு இருந்தால் இதைவிட பலமான சக்தி வேறு எதுவும் கிடையாது என்பது ஊரறிந்த ரகசியம். எங்களது கூட்டணியின் சுமுகமான செயல்பாடு குறித்து சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை.

பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி பலமானது என்கிறீர்கள். உங்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்பதால் மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் வெறுப்படைந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். இந்தச் சூழ்நிலையில் தேர்தலைச் சந்தித்து மக்களின் பேராதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டியதுதானே?.

தேவையில்லாமல் மக்கள் மீது தேர்தலைத் திணிப்பது முறையல்ல. இன்னும் 19 மாதங்கள் இந்தச் சட்டமன்றத்திற்கு ஆயுள் இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் என்று சொன்னால், குறைந்தது அடுத்த நான்கு மாதங்களுக்காவது அரசு இயந்திரமே ஸ்தம்பித்துப் போய்விடும். அத்தனை வளர்ச்சிப் பணிகளும் நிறுத்தப்பட்டுவிடும். கடந்த 20 மாதங்களில் நாங்கள் செயல்படுத்தத் தொடங்கிய திட்டங்கள் முழுமை அடையாத நிலைமை என்பது மட்டுமல்ல, அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்படும். வேறு வழியில்லை என்றால் மக்கள் மன்றத்தை சந்திப்பதுதான் முறை. இப்போது வழி இருக்கிறது என்பது மட்டுமல்ல, நிலையான அரசு அமையவும் வாய்ப்பு இருக்கும் நிலையில் தேர்தல் என்பது தேவையில்லாத செலவு.

நீங்கள் தேர்தலைச் சந்திக்க பயப்படுகிறீர்கள் போலிருக்கிறதே?

சொல்லப்போனால் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான். சட்டமன்றம் கலைக்கப்படாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டபோது, நான் தெளிவாகவே ஒரு கருத்தை வலியுறுத்தினேன். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளுமே யாருடனும் சேர்ந்து ஆட்சி அமைப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பார்களேயானால், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று சொன்னவன் நான்தான். காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தல், தேர்தல் என்று உதட்டளவில் சொன்னார்களே தவிர, இப்போதும் அவர்கள் தேர்தலுக்குத் தயாராக இல்லை. காங்கிரஸ் தேர்தலைத் தள்ளிப்போட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் தனது ஆட்சியை நடத்த விரும்புகிறதே தவிர தேர்தலைச் சந்திக்க தயாராக இல்லை. அதனால்தான் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்தார்கள். குமாரசாமி மீண்டும் பாஜகவுடன் கைகோர்ப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

நடந்துமுடிந்த சம்பவங்களால் பாரதிய ஜனதாவின் இமேஜ் குறைந்திருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? ஆட்சிக்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்ய பாஜக துணிந்துவிட்டது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன?

எங்களது இமேஜ் எள்ளளவும் குறையவில்லை. சொல்லப்போனால், அதிகரித்திருக்கிறது. நான் துணை முதல்வராகத் தொடர சம்மதித்திருந்தால், பதவிதான் பெரிது என்று கருதி இருந்தால், இந்தப் பிரச்னைகளே எழுந்திருக்காது. அக்டோபர் 2-ம் தேதிக்குப் பிறகு நான் ஒருநாள்கூடத் துணை முதல்வராகத் தொடர மாட்டேன் என்று சட்டமன்றத்தில் கூறியிருந்தேன். அதேபோல, முதல்வரிடம் எங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துவிட்டோம். ஆட்சிக்கு ஆதரவளித்து வந்ததைத் திரும்பப் பெற்றோம். இவையெல்லாம் எங்களது பதவி ஆசையாலா அல்லது பதவியின் பளபளப்பில் நாங்கள் மயங்காததாலா?

உங்களுடைய கருத்துப்படி ஆளுநர் காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்கிறீர்கள். அப்படித்தானே?

நான் அப்படிச் சொல்லவில்லை. அந்தப் பதவியின் கெüரவத்தை நான் குலைக்க விரும்பவில்லை. ஆனால், மக்கள் அப்படி நினைக்கிறார்கள். ஆளுநர் மாளிகை காங்கிரஸ் கட்சி அலுவலகமாகச் செயல்படுகிறது என்பது மக்கள் மத்தியில் நிலவும் பரவலான கருத்து. நடந்து கொண்டிருக்கும் செயல்களையும், செயலிழந்த நிலையையும் பார்க்கும்போது, மத்திய அரசின் வற்புறுத்தல்களுக்கு ஆளுநர் அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. காங்கிரஸின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்று மக்கள் சந்தேகப்படுவதில் தவறில்லை.

மகாராஷ்டிர ஆளுநர் எஸ்.எம். கிருஷ்ணா பெங்களூருக்கு வந்ததும், சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதும் தேவகெüடாவின் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறதே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எஸ்.எம். கிருஷ்ணா ஒரு ஜென்டில்மேன். அவர் இதுபோன்ற அரசியல் பேரங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது எனது கருத்து. எனக்கு அவர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மரியாதைக்குரிய சிலரில் எஸ்.எம். கிருஷ்ணாவும் ஒருவர்.

ஒரு சின்ன சந்தேகம். ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால், பாரதிய ஜனதா கட்சியின் பலம் அதிகரிக்கும் என்று நினைக்கிறீர்களா? தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?

பாரதிய ஜனதா கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணியாகத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அது நடக்கும் என்று நம்புகிறேன். அடுத்த 19 மாதங்கள் நாங்கள் இணைந்து ஆட்சியில் தொடர்ந்தால், கர்நாடகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் ஆட்சி அமையாது. அந்த அளவுக்கு எங்களது ஆட்சியின் செயல்பாடுகள் அமையும்.

இனி ஆளுநர் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?

எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியே கிடையாது. அரசியல் சட்டப்படி அதுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழி. மேலும், 15 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. எங்களை ஆட்சி அமைக்க அழைக்காமல்போனால், சட்டமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிகோல வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். மேலும், குஜராத் சட்டமன்றத் தேர்தல் வேறு வருகிறது. இங்கே எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதன் தாக்கம் குஜராத்தில் எதிரொலிக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும். அதனால், எந்த நேரத்திலும் ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பளிச்சென்று சொல்லுங்கள். இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் தேவகெüடாவா? காங்கிரசா?

நிச்சயமாக காங்கிரஸ்தான். அதில் காங்கிரஸ்காரர்களுக்கேகூட சந்தேகம் இருக்காது.

—————————————————————————————————————————————–கர்நாடக முதல்வராகிறார் எடியூரப்பா

ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வருகிறார் முதல்வர் பதவியை ஏற்கவுள்ள பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா (இடது). உடன் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி.

பெங்களூர், நவ. 9: ஆட்சி அமைக்க ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்ததையடுத்து கர்நாடக முதல்வராக பாஜகவைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா (64) நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கிறார்.

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்தத் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து எடியூரப்பாவும், முன்னாள் முதல்வர் குமாரசாமியும் வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூரைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும் எனவே புதிய அரசு அமைக்கும்படி எடியூரப்பாவிடம் தாக்கூர் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட எடியூரப்பா, தனது தலைமையில் பாஜக- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கும் என்றார்.

பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நிருபர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:

பாஜக- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அமைச்சரவை நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கும். பதவி ஏற்பு நேரம், இடம் குறித்து நாளைக்குள் முடிவு செய்யப்படும் என்றார்.

குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் -பாஜக கூட்டணி அரசு அக்டோபர் 7-ம் தேதி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 9-ம் தேதி முதல் கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

முதலில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொள்ளாத மதச்சார்பற்ற ஜனதா தளம் பிறகு ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களும், எம்எல்ஏக்களும் அக்டோபர் 27-ம் தேதி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கடிதம் கொடுத்தனர்.

மேலும் பாஜக தலைமையில் கூட்டணி அரசு அமைய ஆதரவு தெரிவிக்கும் 129 எம்எல்ஏ.க்களின் பிரமாணப் பத்திரமும் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிறகும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால் நவம்பர் 6-ம் தேதி தில்லியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் முன் இரு கட்சிகளையும் சேர்ந்த 125 எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தினர்.

இதையடுத்து நவம்பர் 8-ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக்குழு, கர்நாடக ஆளுநர் அளித்த அறிக்கை மீது விவாதித்தது. பிறகு கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள தீர்மானித்தது.

இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார் தாக்கூர்.

கெüடாவுடன் குமாரசாமி, எடியூரப்பா ஆலோசனை

மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெüடாவுடன் பாஜக தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில், கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் அரசு அமைய நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு சிபாரிசு செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து கர்நாடகத்தில் பாஜக -மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு அமைகிறது. வியாழக்கிழமை தில்லி சென்றிருந்த எடியூரப்பா மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வியாழக்கிழமை இரவு பெங்களூர் திரும்பினார்.

வெள்ளிக்கிழமை காலை எடியூரப்பா மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா சென்றார். காவிரி ஆற்றில் குளித்த பிறகு அங்குள்ள சாஸ்வதி மந்திரில் நடத்தப்பட்ட சூர்ய நாராயணா ஹோம பூஜையில் கலந்து கொண்டார்.

பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில், சந்திரமவுளீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிறப்புப் பூஜை செய்து வழிபட்டார்.

ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து பெங்களூர் திரும்பிய எடியூரப்பா, தேவெ கெüடாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது குமாரசாமியும் உடனிருந்தார்.

புதிய கூட்டணி அமைச்சரவை எப்போது பதவி ஏற்பது, யார்-யாருக்கு எந்தெந்த துறைகள் என்பது குறித்து அவர்களுடன் விவாதித்ததாகத் தெரிகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு எடியூரப்பாவும், குமாரசாமியும் ரகசிய இடத்தில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு இருவரும் அங்கிருந்து நேராக ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு, ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்தார்.

தென் மாநிலங்களில் முதன்முதலாக…

தென் மாநிலங்களில் முதல்முறையாக கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை நவம்பர் 12-ம் தேதி அமைக்கிறார் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.

பெரும் போராட்டத்துக்குப் பிறகு கர்நாடகத்தின் 25-வது முதல்வராக வரும் திங்கள்கிழமை பதவி ஏற்கிறார் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா.

அரசியலில் மிக நீண்ட கால அனுபவம் மிக்கவர். பாஜக துவக்கம் முதலே இக்கட்சியில் இருந்து வருகிறார். கர்நாடக அரசியலில் 35 ஆண்டு காலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வந்தவர்.

—————————————————————————————————————————————–

35 ஆண்டு அரசியல் அனுபவம் மிக்கவர் எடியூரப்பா

பெங்களூர், நவ. 9: மண்டியா மாவட்டம் பூகானகெரே கிராமத்தில் 1943-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் பூகானகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா (பி.எஸ். எடியூரப்பா). பிறகு இவரது குடும்பம் ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுராவுக்கு இடம் பெயர்ந்தது. அங்கேயே தனது ஆரம்பக் கல்வியைத் துவக்கினார் எடியூரப்பா.

ஜனசங்கத்தில் சேர்ந்த எடியூரப்பா 1972-ம் ஆண்டு ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விவசாயிகளின் தலைவர் என்று ஹிந்து மதத் தலைவர்களிடையே பிரசித்தி பெற்றவர் எடியூரப்பா. அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் இத்தலைவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே முடிவு எடுப்பார்.

அரசியலில் மிக நீண்ட கால அனுபவம் மிக்கவர். பாஜக துவக்கம் முதலே இக்கட்சியில் இருந்து வருகிறார். கர்நாடக அரசியலில் 35 ஆண்டு காலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வந்தவர்.

1983-ம் ஆண்டு முதன் முதலாக ஷிகாரிபுரா சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து எம்எல்ஏயாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 முறை இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1999-ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இதனால் 2000-ம் ஆண்டு முதல் 2004 வரை சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

கட்சியின் பல்வேறு பொறுப்புக்களை வகித்த இவர், மாநில பாஜக தலைவராக இருமுறை பதவி வகித்துள்ளார். பாஜகவை கிராம அளவில் வளர்த்தத் தலைவர்களில் முக்கிய இடம் பிடிப்பவர் இவர்.

பாஜக நடத்தும் போராட்டங்களில் முன்னின்றி கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார். குறிப்பாக விவசாயிகள் நலனுக்காக ஏராளமான முறை போராட்டங்களை நடத்தியுள்ளார்.

2004-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தாலும், பாஜகவை ஆதரிக்க காங்கிரúஸô, ம.ஜனதாதளமோ முன்வரவில்லை.

இதனால் காங்கிரஸ் தலைமையில் ம.ஜனதாதள கூட்டணி அரசு அமைந்தது. இதனால் முதல் இடத்தைப் பிடித்தும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது பாஜக. இந்நிலையில்தான் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வந்த ம.ஜனதாதள தலைவர் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு அளித்தது.

அப்போது ம.ஜனதாதளத்துக்கு 50 எம்எல்ஏக்கள் மட்டும் இருந்தாலும், 79 எம்எல்ஏக்கள் உடைய பாஜகவுக்கு துணை முதல்வர் பதவியே கிடைத்தது.

இவ்விரு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகவிடம் குமாரசாமி ஒப்படைக்காததால் அக்டோபர் 7-ம் தேதி குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது.

இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து மாநில சுற்றுப்பயணத்தை பாஜக மேற்கொண்டது. இப்போராட்டத்தால் கலக்கம் அடைந்த ம.ஜனதாதளம், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.

ஆனால் தென் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு கர்நாடகம் நுழைவு வாயிலாக ஆகிவிடக்கூடாதே என்ற கவலையில் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணி அரசைத் தடுக்க பல வழிகளில் முயற்சி செய்தது.

ஆனால் இக்கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால் வேறு வழியின்றி பாஜக தலைமையில் அரசு அமைக்க மத்திய அரசு நவம்பர் 8-ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து நவம்பர் 12-ம் தேதி கர்நாடகத்தின் 25-வது முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார் எடியூரப்பா. தென் மாநிலங்களில் அமையும் முதல் பாஜக அரசு இது என்பது குறிப்பிடத்தக்கது.

—————————————————————————————————————————————–
அமைச்சரவையில் சம இடங்கள் வேண்டும்: குமாரசாமி கோரிக்கை

பெங்களூர், நவ. 9: எடியூரப்பா தலைமையில் அமையும் அமைச்சரவையில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு சம அளவில் இடம் அளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடக சட்டப்பேரவையில் 224 உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த சட்டத் திருத்தப்படி, கர்நாடகத்தில் 34 அமைச்சர்களுக்கு மேல் நியமனம் செய்யக் கூடாது.

இந்த வகையில் கூட்டணி ஆட்சி அமையும்போது இரு கட்சிகளும் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை அமைச்சர்கள், எந்தெந்த இலாகாக்கள் என்று பிரித்து ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சி அமைக்கின்றன. 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் -பாஜக கூட்டணி அரசு அமைந்தபோது முதல்வராக ம.ஜனதாதளத்தை சேர்ந்த குமாரசாமி பதவி ஏற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.

அதுபோல் ம.ஜனதாதளத்தைச் சேர்ந்த முதல்வர் உள்பட 16 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். அதுபோல் துணை முதல்வர் உள்பட பாஜகவை சேர்ந்த 18 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். 79 எம்எல்ஏக்களை பாஜக கொண்டுள்ளதால் அக்கட்சிக்கு கூடுதலாக அமைச்சரவையில் இரு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இப்போது 21 மாதங்களுக்குப் பிறகு பாஜக தலைமையில் ம.ஜனதாதள கூட்டணியில் ஆட்சி அமையவுள்ளது. இப்போது முதல்வர் பதவி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், துணை முதல்வர் பதவி ம.ஜனதாதளதுக்கு போகிறது.

இந்த சமயத்தில் அமைச்சர் பதவியை இரு கட்சிகளும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த முறை அமைச்சர்களின் எண்ணிக்கையை பாஜகவும்- ம.ஜனதாதளமும் 50:50 என்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்வோம் என்றார்.

—————————————————————————————————————————————–

அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தை படம் பிடித்து காட்டியது கர்நாடகா

21,புதன், நவம்பர் 2007
கார்த்திகை 05

புதுடில்லி: கர்நாடகாவில் அரசியலில் திடீர் திடீரென ஏற்பட்ட திருப்பங்கள், அம்மாநிலத்தில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களும், அரசியல் கட்சிகளும் சந்தர்ப்பவாதிகள் என்பதை உறுதிப்படுத்துவதாகவே கர்நாடக அரசியல் அமைந்து விட்டது.

காங்., ஆட்சியை கவிழ்த்த, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், மற்ற கட்சிகளால் மதவாதக் கட்சி என்று வர்ணிக்கப் படும் பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது. இதை முதல் சந்தர்ப்பவாதம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். முதலில் பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,க்களை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி துõக்கிய தேவகவுடா, பின்னர் தனது மகன் குமாரசாமியின் ஆட்சிக்கு ஆலோசகராகவே மாறிவிட்டார். இது முதல் பல்டி.

ஒப்பந்தப்படி, 20 மாதத்துக்கு பிறகு பா.ஜ.,விடம் ஆட்சி ஒப்படைக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. அதை தேவகவுடா உறுதி செய்து விட்டார். பா.ஜ., ஆட்சிக்கு வழி விட மறுத்தார். இடைத் தேர்தல் நிலை உருவானது. இந்த குழப்பத் தில் தேர்தலை சந்தித்தால், “அம்பேல்’ தான் எனக் கருதிய தேவகவுடா, பா.ஜ.,வுடன் மீண்டும் பேச்சுக்கு முன்வந்தார். இது இரண்டாவது சந்தர்ப்பவாதம்.

தேவகவுடா சொல்வதற்கெல்லாம் பா.ஜ., தலையைத் தலையை ஆட்டியது. இது பா.ஜ.,வின் சந்தர்ப்பவாதம். எப்படியும், இவர்களின் கூட்டணி அரசு நீடிக்கப் போவதில்லை என்பதை புரிந்து கொண்ட காங்., சட்டசபை கலைப்பை வற்புறுத்தாமல், வேடிக்கை பார்த்தது. இது காங்.,கின் சந்தர்ப்பவாதம்.

சொன்னதற்கெல்லாம் வளைந்து கொடுத்த பா.ஜ.,வுக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக தனது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூலம் கடிதம் கொடுக்க வைத்தார் தேவகவுடா. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதும், தேவகவுடா மூளையில் புதிய யோசனை உதித்தது.

இதுவரை நாடுகளுக்கு இடையில் தான் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல் ஒப்பந்தம் கையெழுத்தாகி வந்தன. முதல் முறையாக, 12 அம்சங்கள் என்ற பெயரில் 12 நிபந்தனைகள் கொண்ட ஒப்பந்தத்தை தயாரித்தார் தேவகவுடா. வளைந்து கொடுத்து வந்த பா.ஜ., இந்த விஷயத்தில் விறைப்பாக நிமிர்ந்து நின்றது. மீண்டும், “யு’ டர்ன் எடுத்த கவுடா, பா.ஜ., ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க மறுத்தார். விளைவு, ஏழு நாள் முதல்வராக பதவி இழந்தார் எடியூரப்பா.

காங்., ஆட்சியை கவிழ்த்த கவுடா, அடுத்ததாக பா.ஜ., ஆட்சியையும் கவிழ வைத்தார். இதனால், கர்நாடகாவில் கவுடாவின் கட்சி தீண்டத்தகாத கட்சி என்ற நிலைக்கு சென்று விட்டது. இனி எந்த கட்சியும் தேவகவுடாவுடன் கூட்டு சேர தயாராக இல்லை.

“அரசியல் தார்மீகத்தை எல்லாம் தாண்டி, கடுமையான மூளை விளையாட்டுகளில் அப்பா தேவகவுடாவும், மகன் குமாரசாமியும் ஈடுபட்டதால் தான் இந்த நிலை’ என்று கவலைப்படும் பா.ஜ., அனுதாப அலையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. தனி மெஜாரிட்டி தான் நிலையான ஆட்சியை ஏற்படுத்தும் என்பதால், தங்களுக்கு ஓட்டுகள் அள்ளிக்கொண்டு போகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது காங்., எப்படியும் புது அரசியல் வியூகங்களை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று கருதுகிறார் தேவகவுடா. தேர்தல் முடிவுகளில் தான் மக்களின் மன நிலை தெரியவரும்.

சர்ச்சையில் சிக்கிய கவர்னர்: கர்நாடகாவில் கவர்னர் ராமேஷ்வர் தாக்கூர் எடுத்த முடிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராமேஷ்வர் தாக்கூர் எடுத்த முடிவுகள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதியும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான ரமா ஜோன்ஸ் விமர்சனம் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மனம் மாறி, பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதாக தேவகவுடாவின் மதசார்பற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் ராமேஷ்வர் தாக்கூரிடம் கடிதம் கொடுத்தனர். பா.ஜ.,வுக்கு முழு மெஜாரிட்டி இருப்பதாக உறுதி செய்த பிறகே, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார். அதன் பின், சட்டசபையிலும் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். இது தேவையற்றது. கர்நாடகாவில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மைக்கு கவர்னர் ராமேஷ்வர் தாக்கூரின் இந்த முடிவு தான் காரணம்.

அதேபோல, ஆதரவை பெறுவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் படி பா.ஜ.,வை மதசார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தியது, சட்டவிரோதமானது; இது அரசியலில் தார்மீகம் என்பதை படுபாதாளத்தில் தள்ளும் செயல். முக்கிய துறைகளை கேட்டு தேவகவுடா பிடிவாதம் பிடித்தது தான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கிய காரணம். முதல்வருக்கு உரிய அந்தஸ்தை தவிர மற்ற எல்லாவற்றையும் அவர் கேட்கிறார். இவ்வாறு ரமா ஜோன்ஸ் கூறியுள்ளார்.
—————————————————————————————————————————————–

கட்சித் தாவலின் மறுவடிவம்?

ஆசை கண்ணை மறைக்கும் எனும் வாழ்வியல் உண்மையை உணர்த்திய அங்கத-துன்பியல்-நாடகம்தான் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்ததும் துறந்ததும்.

நல்ல நாடகங்களில் இறுதி முடிவை முன்கூட்டியே உணர்த்துகின்ற படிமங்கள், காட்சிகள் இடம்பெறுவதைப்போலவே, கர்நாடக அரசியலிலும் இறுதி முடிவின் அடையாளங்கள் தொடக்கம் முதலாகவே தோன்றிக்கொண்டே இருந்தன.

“முன்பாதி நான் முதல்வர்; பின்பாதி நீர் முதல்வர்’ என்ற முதல் ஒப்பந்தமே தார்மிகக் குறைபாடு கொண்டதுதான். 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 79 இடங்களிலும், காங்கிரஸ் 64 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 56 இடங்களையும் கைப்பற்றிய நிலையில், அதிக இடங்களை வென்ற பாஜகதான் முதல்வர் பதவியில் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

ஒப்பந்தப்படி, மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது ஆட்சிக்காலம் முடிந்தவுடன் தாமாக முதல்வர் பதவியை பாஜகவுக்கு மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாதது மட்டுமல்ல, காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்கவும் தயாராகியது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை அதில் உள்ள அதிருப்தியாளர் கோஷ்டி மூலம் பிளவுபடுத்த காங்கிரஸ் முயலுகிறது என்பதால் கோபம் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டு அமைக்க திரும்பி வந்தபோது, அல்லது தேவ கெüடா 12 நிபந்தனைகள் விதித்தபோதாகிலும் பாஜக புரிந்துகொண்டிருக்க வேண்டும். புரியாமல் இருந்திருக்க முடியாது. ஒருவேளை, வாஜ்பாய் 13 நாட்களில் பிரதமர் பதவியை இழந்தார் என்ற களங்கம் மறைய, எடியூரப்பா 8 நாள் முதல்வர் பதவியை ஏற்றிருப்பாரோ! அல்லது, அடுத்த ஆறு மாதத்தில் தேர்தலைச் சந்திக்கும்போது மக்களின் பரிவு வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் யுக்தியாக இருக்குமோ!

எதுவாக இருப்பினும், இன்றைய அரசியலில் நிபந்தனையற்ற ஆதரவு என்பதற்கு என்ன பொருள்?

ஆளுநர் மாளிகையில் எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டமாக அணிவகுத்து நின்று, கடிதம் கொடுத்து, பெரும்பான்மையைக் காட்டி, ஆட்சிக்கு அழைக்கும்படி ஆளுநரைக் கட்டாயப்படுத்திய பின்னர், ஆட்சியில் அமர்த்திய பின்னர், ஆதரவை விலக்கிக் கொள்வது ஜனநாயகத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான கேலிக்கு இலக்காக்கிவிட்டது.

இத்தகைய முறையற்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசரத் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டம் போல, ஆதரவு அளிப்புக்கும் ஒரு தெளிவான, விதிமுறைகளுடன்கூடிய சட்டம் இன்றியமையாதது.

அரசுக்கு ஆதரவை அளிப்பதும் அல்லது பாதியில் ஆதரவை விலக்கிக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவு அளிப்பதும் கட்சித் தாவலின் மறுவடிவம்தான். கட்சித் தாவலில் உறுப்பினர்கள் இடம் மாறி எண்ணிக்கையை சரி செய்வதைப் போன்றதுதான், வெளியிலிருந்து அல்லது உள்ளிருந்து அளிக்கப்படும் ஆதரவு தடம் மாறுவதும்.

இனி வரும் காலங்களில், மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது அரிதாகி வருகிறது. துணையாக வேறு சில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகளே அதிகமாகி வருகின்றன.

தேர்தலில் போட்டியிடும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெற்றிக்காக அக்கட்சி நிறுத்தும் வேட்பாளர்களைத் ஆதரித்து தேர்வு செய்த வாக்காளர்களுக்கு, அவர்கள் எத்தனை மோசடி செய்தாலும் திரும்பப் பெறும் அல்லது நீக்கும் உரிமை இல்லை. அப்படியெனில், மக்களின் ஆதரவைப் பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்த இவர்கள் அளிக்கும் ஆதரவை மட்டும் விருப்பப்படி மாற்றிக்கொள்ளும் உரிமை எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

மக்கள் எப்படி ஆதரவை அளித்துவிட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த தேர்தல் வரை பொறுமை காக்கின்றார்களோ, அதேபோல “நிபந்தனையற்ற ஆதரவு’ தரும் கட்சிகளும் ஐந்து ஆண்டுகளுக்கு, பொறுமை காப்பதுதான் அரசியல் அறமாக இருக்க முடியும். சிறந்த ஜனநாயக மரபாகவும் அமையும். ஆதரவைத் தருவதாகக் கடிதம் கொடுப்பதும், தராமல் கவிழ்ப்பதும், பாதி ஆட்சியில் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று மிரட்டிக்கொண்டே இருப்பதும், ஓர் அரசு முழுமையாக செயல்படுவதற்குப் பெரும் தடையாக இருக்கிறது என்பதே மத்தியிலும் மாநிலத்திலும் இப்போது நாம் காணும் உண்மை நிலை.

ஐந்து ஆண்டுக்கு முற்றாக ஆதரவு “உண்டென்று சொல்; இல்லை அன்றென்று சொல் இந்த திரிசங்கு சொர்க்கம் தேவையில்லை’.
—————————————————————————————————————————————–

தேவ கௌடா கட்சி உடைகிறது

பெங்களூர், நவ. 24: கர்நாடக சட்டப் பேரவையைக் கலைக்கும் அறிவிப்பு வெளியானதும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இரண்டாக உடைந்து, ஒரு பிரிவினர் காங்கிரஸிலும் மற்றொரு பிரிவினர் பாஜகவிலும் சேர்வார்கள் என்று தெரிகிறது.

தேவ கெüடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பாஜகவும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தபோது முதல் 20 மாதங்கள் ம.ஜனதா தளம் தலைமையிலும், அடுத்த 20 மாதங்கள் பாஜக தலைமையிலும் ஆட்சி அமைக்க இரு கட்சித் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகவிடம் ம.ஜனதாதளத் தலைவர் குமாரசாமி ஒப்படைக்கவில்லை. இதனால் குமாரசாமி தலைமையில் இருந்த அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க ம.ஜனதாதளத்தின் மூத்த தலைவரான எம்.பி.பிரகாஷ் முயற்சி செய்தார். காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் திடீரென அக்டோபர் 27-ம் தேதி பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ம.ஜனதாதளம் ஆதரவு தெரிவித்து, ஆட்சியும் அமைக்கப்பட்டது. எடியூரப்பா முதல்வரானார். ஆனால் நவம்பர் 19-ம் தேதி நடக்கவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பா அரசுக்கு எதிராக வாக்களிக்க ம.ஜனதாதளம் முடிவு செய்ததால், எடியூரப்பா அமைச்சரவை ராஜிநாமா செய்தது.

இது மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு அக்கட்சித் தலைவர்கள் தேவ கெüடா, குமாரசாமி ஆகியோர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துவிட்டு, திடீரென பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டதால் பிரகாஷ் கடும் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் மீண்டும் காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்க கெüடா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. கெüடாவுடன் கூட்டுசேர காங்கிரஸ் தலைவர்கள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திய மத்திய அரசு சட்டப் பேரவையை கலைக்கவும் பரிந்துரை செய்தது.

இதுதொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நாடாளுமன்றம் இந்த அறிக்கை மீது திங்கள்கிழமை விவாதம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றே கர்நாடக சட்டப் பேரவை கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப் பேரவையின் பதவிக்காலம் இன்னும் 19 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போது தேர்தலைச் சந்திக்க எந்தக்கட்சி எம்எல்ஏக்களும் விரும்பவில்லை.

இந்த சூழ்நிலைக்குக் காரணம் ம.ஜனதாதள தலைமைதான் என்று அக்கட்சி எம்எல்ஏக்கள் கருதுகிறார்கள். சட்டப் பேரவை கலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியான பிறகு ம.ஜனதாதளம் இரண்டாக பிளவுபடும் என்று கூறப்படுகிறது.

அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.பிரகாஷ் தலைமையில் ஒரு பிரிவினர் காங்கிரஸ் கட்சியில் சேரத் திட்டமிட்டுள்ளனர். இதில் பல முக்கியத் தலைவர்களும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை கூடிய காங்கிரஸ் உயர் நிலைத் தலைவர்கள் கூட்டத்தில் ம.ஜனதாதளத்திலிருந்து பலர் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்திருப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அப்போது கட்சியில் சேருவோருக்கு எல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தீர்மானிக்கப்பட்டது.

இதுபோல் மற்றொரு பிரிவினர் பாஜகவில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமான செலுவராய சுவாமி, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்.

இதை ம.ஜனதாதளத்தின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்பதைவிட பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதையே பெரும்பான்மையினர் விரும்பினர். இந்நிலையில்தான், பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை ம.ஜனதாதளம் விலக்கிக் கொண்டதால் எடியூரப்பா அரசு கவிழ்ந்தது. எனவே செலுவராய சுவாமி உள்பட ம.ஜனதாதளத்தின் பல எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாள்களில் கர்நாடக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
—————————————————————————————————————————————–

Posted in Bangalore, Bengaluru, Biosketch, BJP, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Deve Gowda, Ediyurappa, Faces, Gowda, Interview, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JD, JD(S), JD(U), Karnataka, people, State, Yediyurappa | Leave a Comment »

Election Mela in Karnataka: Tracking Poll Expenses and Party Expenditure

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

கர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு! * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.

மூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.

கர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.

தரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.

குமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.

பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பதற்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

கட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரியும், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.

நேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.

கர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.

கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.

22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.

பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறுகின்றனர்.

வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.

Posted in Accord, Allegations, Alliance, Balance, Bangalore, Bengaluru, BJP, candidates, Clean, CM, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Coomarasami, Coomarasamy, Corruption, Crores, deal, Devegowda, EC, Economy, Election, Elections, Expenditure, Expenses, Forecasting, forecasts, Gowda, Income, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JD, Karnataka, kickbacks, Kumarasami, Kumarasamy, Lakhs, Mela, Minister, MLA, MLC, MP, P&L, parliament, Party, Politics, Poll, Polls, Profit, Projections, Rich | 1 Comment »

BSNL to issue IP TV tenders in six months

Posted by Snapjudge மேல் மே 5, 2007

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 4 நகரங்களில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம்

திருச்சி, மே 5: சென்னை, பெங்களூர் உள்பட 4 நகரங்களில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார் பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே. சின்கா.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:

கடும் போட்டிகளிடையே இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் முன்பிருந்த அரசுத்துறை என்பதை மாற்றி ஒரு கம்பெனி நிர்வாகம் என்ற போக்கில் ஊழியர்களும், அலுவலர்களும் தங்களது மனப்பாங்கை மாற்ற வேண்டும்.

2010-ம் ஆண்டுக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் 90 ஆயிரம் கோடி நிகர வருமானத்தை ஈட்டுமாறு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பணித்துள்ளது.

2000-1 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக நிறுவப்பட்டபோது நிகர வருமானம் ரூ. 22 ஆயிரம் கோடியாக இருந்தது. இதுவே தற்போது ரூ. 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த பெருக்கம் இன்னும் ஊக்கவிக்கப்பட்டால் மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கை எளிதில் அடைந்துவிடலாம்.

சமீபத்தில் புணே நகரில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை விரைவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கோல்கத்தா ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த சேவைக்கு கிடைக்கும் பங்குதாரர்களை வைத்து மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றார் ஏ.கே. சின்கா.

Posted in Airtel, Bangalore, Bengaluru, broadband, BSNL, Business, Chennai, Commerce, content, Economy, Finance, Hyderabad, Internet Protocol TV, IPTV, Kolkata, Reliance, Telecom, Telephony, Television, tenders, TV, Voip | 1 Comment »

Karnataka cities to change their names to be in Kannada

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

கர்நாடகாவில் மேலும் 11 நகரங்களின் பெயர்கள் மாறுகிறது

பெங்களூர், ஜன. 24-

பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ராஸ் சென்னை என்றும், பம்பாய் மும்பை என்றும், கல்கத்தா கொல்கத்தா என்றும், பாண்டிச்சேரி புதுச்சேரி என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதே போல கர்நாடக தலைநகர் பெங்களூர் என் பதை பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு கோரிக்கை வைத்தது. கடந்த ஆண்டு நவம்பர் 19-ந்தேதி பெயர் மாற்றத்திற்காக கடிதம் எழுதி இருந்தது.

மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தின் பல அமைச்சகம், அமைப்புகளிடம் பெயர் மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

இதே போல ரெயில்வே துறை, விமான போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திடமும் கருத்து கேட்கப்பட்டது.

பெங்களூர் பெயர் மாற்றுவதில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ கழித்துதான் பெயர் மாற்றத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

இதே போல மேலும் 11 நகரங்களின் பெயர்களை மாற்றவும் கர்நாடக அரசு கோரிக்கை வைத்து உள்ளது.

  • மைசூர் என்பதை மைசூரு என்றும்,
  • மங்களூரை மங்களூரு என்றும்,
  • பெல்காம் என்பதை பெல்காவி என்றும்,
  • பெல்லாரி என்பதை பல்லாÖì என்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

Posted in Bangalore, Belgaum, Bellary, Bengaluru, Changes, City, Kannada, Karnataka, Mangalore, Mysore, names | Leave a Comment »

Communal violence flares in Bangalore

Posted by Snapjudge மேல் ஜனவரி 22, 2007

பெங்களூர் வன்முறையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 12 வயது சிறுவன் சாவு; ஊரடங்கு உத்தரவு அமல்

பெங்களூர், ஜன. 22: பெங்களூரில் நடந்த வன்முறையில் போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். அதேநேரத்தில் 3 போலீஸôருக்கு கத்திக்குத்து காயமடைந்தனர். இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையைத் தொடர்ந்து, 3 நாள்களாக பதற்றத்துடன் இருந்த சிவாஜிநகர், பாரதிநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் விராட் இந்து மாநாட்டையொட்டி மீண்டும் வன்முறை துவங்கியது.

இந்த வன்முறையில் பல பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் எரிக்கப்பட்டன. ஏராளமான வாகனங்கள் கல்வீச்சில் சேதமடைந்தன.

இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் மாலையில் போலீஸôர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் கலையாததால் பாரதிநகர் காமராஜர் சாலையில் போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் குண்டு காயங்களுடன் பெüரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வன்முறையில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறையில் 3 போலீஸôருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. பலர் கல்வீச்சில் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Posted in Bangalore, Barathi Nagar, Basavaraj Horatti, Bengaluru, Bharathi Nagar, Bharathy Nagar, Bhartinagar, BJP, Cantonment, Elections, Golwalkar, H D Kumaraswamy, Halasur, Hindu, Hinduism, Iraq, Meeting, Politics, Politics & Religion, Religion, RSS, Saddam Hussein, Shivaji nagar, Sivaji Nagar, Ulasuru, Violence, Viraat Hindu Samjotsav | Leave a Comment »