Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Bihar’

Bihar raw deal: Tit for tat: Cong seals deal with JMM in Jharkhand: Shibu Soren to fight both LS and assembly polls

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

ஜார்க்கண்டில் பங்கீடு: காங்கிரஸ்-7, ஜே.எம்.எம்.-5

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 7 மக்களவைத் தொகுதியிலும், சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 5 இடங்களிலும் போட்டியிடும். லாலு பிரசாத் கட்சிக்கு எஞ்சிய 2 தொகுதிகள் விடப்பட்டுள்ளன. இம் மாநிலத்தில் மொத்தமே 14 மக்களவைத் தொகுதிகள்தான்.

பிகாரில் காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் அதற்கு 3 தொகுதிகளை மட்டுமே விட்டுவைத்துவிட்டு எஞ்சியவற்றை லாலு பிரசாதும் ராம்விலாஸ் பாஸ்வானும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். அதற்குப் பதிலடி தருவதைப்போல இந்த ஒதுக்கீடு அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு நடந்த பேச்சில் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளும் லாலு கட்சிக்கு 3 தொகுதிகளும் தரப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இப்போது லாலு கட்சிக்கு ஓரிடத்தைக் குறைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடத்தை அதிகப்படுத்திவிட்டனர்.

லாலு இதை ஏற்பாரா என்று தெரியவில்லை.

கோதர்மா, ஹஸôரிபாக் ஆகிய இரு தொகுதிகள் யாருக்கு என்பதில்தான் காங்கிரஸ் ஆர்ஜேடி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி இருந்தது. கடந்த முறை கோதர்மாவில் பாபுலால் மராண்டியும், ஹஸôரிபாக் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றன. பாபுலால் மராண்டி முன்னாள் பாஜக தலைவர். சுயேச்சையாக கோதர்மாவில் வென்றார். ஹஸôரிபாக்கில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே இல்லை. எனவே இத் தொகுதிகளைப் பெறுவதில் இரு கட்சிகளுக்கும் இடையில் போட்டி நிலவியது.

இந்த இரண்டைத் தவிர எஞ்சிய 12 தொகுதிகளும் காங்கிரஸ் ஜேஎம்எம் ஆர்ஜேடி ஆகிய 3 கட்சிகளுமே போட்டியிட்டு வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Angry north Indians torch train to protest attacks: Anti-MNS (Maharashtra Navnirman Sena) protesters go on rampage in Bihar: Raj Thackeray

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2008


பீஹார் மாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைப்பு

தலைநகர் பாட்னாவில் ஆர்ப்பாட்டங்கள்
தலைநகர் பாட்னாவில் ஆர்ப்பாட்டங்கள்

இந்தியாவின் மும்பை நகருக்கு வேலை தேடி வந்த வட மாநிலமான பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக பிகார் மாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.

சாலைகளில் மறியல் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். கல்லெரிந்த கலகக் காரர்களை கலைக்க காவல் துறையினர் ஒரு இடத்தில் துப்பாக்கிச் சூடு செய்துள்ளனர். ஒரு போலீஸ்காரர் உட்பட, ஒரு டஜனுக்கு மேற்பட்டோர் அங்கே காயமடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மும்பைக்கு வருவதை எதிர்க்கும் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற வன்முறைகளை தூண்டியதாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


Posted in Economy, Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

Brahmaputra & endangered rhinos: Over 2.1 million displaced in Assam floods: 18 Assam districts under severe flood

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 8, 2008

அசாம் வெள்ளத்தில் மேலும் பலர் பலி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக 8 பேர் கொல்லப்பட்டதுடன், கடந்த வாரம்முதல் இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

அந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ள நிலையில் அங்கு நிலைமை இன்னமும் மோசமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஒற்றைக்கொம்புடைய காண்டா மிருகத்துக்குப் பெயர்போன, அந்த மாநிலத்தின் காசிரங்கா தேசியப் பூங்காவின் அரைவாசி நீரில் மூழ்கியுள்ளது.

தப்பிச்செல்ல முயன்ற 4 காண்டாமிருகங்கள் வெள்ளத்தில் பலியானதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Aid Agencies Warn of Threat of Disease, Epidemic in India’s flood – Bihar authorities were warned about risk before monsoon hit

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 3, 2008

பீஹார் வெள்ளத்துக்கு அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமா என்பதை ஆராய விசாரணை

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பெரும் சீரழிவை ஏற்படுத்திய வெள்ள நிலமைக்கு அதிகாரிகளின் கவனக் குறைவே காரணமா என்பதனை ஆராய மேலும் ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கோசி நதிக்கரைகளில் உடைப்பு ஏற்பட்டதன் விளைவாக சுமார் ஆயிரம் கிராமங்கள் நீரில் மூழ்கின; மேலும் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த விசாரணைகளில் பருவ மழைக்கு முன்னதாக கரைகளை வலுப்படுத்தும் நவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டுமா என்பது குறித்தும், பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

பரந்துபட்ட அளவில் இடம் பெற்ற ஊழலே இதில் ஒரு பெரும் பங்காற்றியிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக புதுடில்லியிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்


பீஹார் வெள்ளத்தில் சிக்கியுள்ள 4 லட்சம் பேரை இன்னமும் மீட்க வேண்டியுள்ளது

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், பெருமளவு நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள வெள்ளத்தில் இருந்து இன்னும் குறைந்தது 4 லட்சம் பேரை மீட்க வேண்டியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

பருவ மழை காரணமாக கோஷி ஆறு, தனது பாதையையே மாற்றி ஓடத்தொடங்கியதால், இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த வெள்ளத்தினால் உருவான பேரழிவை எதிர்கொள்ள முடியாது அரசாங்கம் தடுமாறுகிறது.

தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள பல லட்சக் கணக்கான மக்கள் மத்தியில் தொற்று நோய்கள் பரவுவதற்கான அபாயம் இருப்பதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »