Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 21, 2008
இந்தியாவில் மாவோயியவாதிகள் தாக்குதலில் பொலிஸார் பலி
 |
|
சத்தீஸ்கர் வனப் பகுதியில் தங்கி மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். |
இந்தியாவின் மத்தியப் பகுதியிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய அரசின் காவல் படையினர் மீது மாவோயிய கிளர்ச்சியாளர்கள் மறைந்திருந்து தாக்குதலை நடத்தியதாக அந்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஏழை விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாகக் கூறும் அந்த கிளர்ச்சியாளர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் செயற்பட்டு வருகிறார்கள்.
ஆனால் இதுவரை இந்தத் தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை.
Posted in Economy, Finance, Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: Agriculture, Assets, Bijapur, Chattisgarh, Communism, Communists, CRPF, Farmers, Farming, Land, Mao, Marx, Marxism, Naxals, Poor, Property, Rich | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008
இந்தியாவின் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
 |
|
இந்திய வங்கிகளில் வேலை நிறுத்தம் |
இந்தியாவில் அரசாங்கத்தால் நடத்தப்படும் வங்கிகளைச் சேர்ந்த ஒன்பது லட்சம் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள இருநாள் வேலை நிறுத்தத்தின் முதல் நாளான இன்று பல பகுதிகளில் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.
பொதுத் துறையில் உள்ள வங்கிகளை தனியார்மயப் படுத்துவதை எதிர்த்தும், பொதுத் துறை வங்கிகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதை எதிர்த்தும் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்புகள் பல இணைந்து இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இந்தியாவில் நடக்கும் வங்கிப் பரிவர்தனைகளில் 90சதவீத அளவு பொதுத் துறை வங்கிகளாலேயே கையாளப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: Communism, CPI, CPI(M), Economy, Finance, Holiday, India, Jobs, Leave, M&A, Marxist, Mergers, Security, Strike, Work | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2008
ஒலிம்பிக்கின் போது ஆர்பாட்டங்களுக்கென தனியான பூங்காக்கள்
 |
|
சீன பூங்கா ஒன்று |
சீனாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது சட்டபூர்வமான போராட்டங்களை மூன்று பொதுப் பூங்காக்களில் நடத்த அனுமதியளிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கான போராட்டக்காரர்களின் விருப்பம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமன்பாட்டை காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரியான லியூ ஷாவூ தெரிவித்துள்ளார்.
போட்டிகளின் போது போராட்டங்களை அனுமதிக்க வேண்டிய தேவையை சீன அதிகாரிகள் அங்கீகரிக்கும் ஒரு நகர்வே இது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
எனினும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: Ban, China, Communism, Games, Left, Media, Olympics, Oppression, Protest, Sports | 1 Comment »