Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஏப்ரல் 14th, 2008

Sri Lanka Updates: Apr 13 – Minister of Science and Technology Professor Tissa Vitharana

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 26 ஏப்ரல், 2008

குண்டுவெடிப்பை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே பிலியந்தளை என்னும் இடத்தில், பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துவிட்டது. தற்போதைய நிலவரம் தொடர்பாக இலங்கை துணை பொலிஸ்மா அதிபர் இலங்க கோன் அவர்கள் கூறும் போது, இந்த சம்பவம் தொடர்பாக இது வரையில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் அவர்கள் யார் என்பது குறித்து தற்போது கூற முடியாது என கூறினார்.

அத்தோடு இந்த சம்பவங்கள் விடுதலைப்புலிகளால் தான் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்று தாங்கள் தெளிவாக நம்புவதாகவும், புதிய பாதுகாப்பு திட்டங்கள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், இதற்கு காரணம் நீதவான் தாமதமாக வந்ததே என கொழும்பு கலுபோவில் மருத்துவமனையில் உள்ள குண்டுவெடிப்பில் சிக்கியவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.


உரிய பொருட்கள் இருந்தால் மடுமாதா தேவாலயத்தை விரைவில் சீரமைக்கலாம் – பாதிரியார்

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

மன்னார் மடு வளாகத்தை தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ள நிலையில், மடு கோயில் வளாகத்துக்கு இன்று சென்ற மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை அங்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட அவர், தேவாலயம், குருக்கள் வாழும் இடங்கள் ஷெல் வீச்சினால் சேதம் அடைந்திருப்பதாகவும், குறிப்பாக திருஇருதய ஆண்டவர் ஆலயம் முற்றாக சேதம் அடைந்திருப்பதாக கூறினார்.

மேலும் இராணுவத்தின் காவலரண்கள் எதுவும் தேவாலய வளாகத்திற்குள் இல்லை என்றும், இன்னும் ஒரு சில நாட்களில் தேவாலயத்தை சீரமைக்க சில மதகுருமார்களையும், பணியாளர்களை அனுப்புவதை பற்றி தாங்கள் யோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு உரிய பொருட்கள் கிடைத்தால் விரைவாக சீரமைக்க கூடிய நிலையிலே தேவாலயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை பாதுகாப்பு வலயமாக அறிவித்து விடுதலைப்புலிகளும், இராணுவத்தினரும் எப்போது செயற்படுகின்றார்களோ அப்போது மடுமாத திருச்சொரூபத்தை தேவாலயத்தில் மீண்டும் வைப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை தெரிவித்தார்.


இலங்கையில் பெண்கள் பிரசவிக்கும் போது அவர்களது கணவரும் உடனிருக்க ஏற்பாடு

பச்சிளங்குழந்தை
பச்சிளங்குழந்தை

இலங்கையில் பெண்கள் பிரசவிக்கும் போது அவர்களது கணவரும் உடனிருப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என அறிவித்துள்ள இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இது தொடர்பாக வைத்திய சேவை அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபடும் என்றும் கூறியுள்ளார்.

இது ஒரு வரவேற்க்கதக்க திட்டம் என கூறியுள்ள பிரபல டாக்டர் ராணி சிதம்பரப்பிள்ளை, ஆனால் இலங்கையில் உள்ள 99 சதவீதமான தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளில் இதற்கான வசதி கிடையாது என கூறினார்.

இது குறித்து கொழும்பு செய்தியாளர் பி.கருணாகாரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 ஏப்ரல், 2008

இலங்கை பேருந்து குண்டு வெடிப்பில் 24 பேர் பலி

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே பிலியந்தளை என்னும் இடத்தில், பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்ததாகவும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேருந்து நிலையம் ஒன்றை இந்தப் பேருந்து அடைந்தவேளை அதிலிருந்த பார்சல் குண்டு வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது, இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நானயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் வெளியேறியதை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் முதல் அங்கு வன்செயல்கள் அதிகரித்துள்ளன.


இலங்கை இராணுவத்தினர் வசம் மன்னார் மடுக்கோவில்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க மடுக்கோவில் பகுதி தற்போது இராணுவத்தின் வசமாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

மோதலில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அரசியல், இராணுவ ரீதியில் முக்கியத்துவம் மிக்க கேந்திர தளமாக விளங்கிய மடுக்கோவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தின் கைகளுக்குத் தற்போது மாறியிருக்கின்றது.

வடக்கில் தீவிரமடைந்த சண்டைகளினால் இந்த ஆலயத்திற்குப் பேரழிவு ஏற்படும் என்று பலராலும் அச்சம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்த மாதா சொரூபம் பாதுகாப்பு கருதி ஆலய குருக்களினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்காரா, இராணுவத்தினர் சென்றபோது விடுதலைப் புலிகள் ஆலய வளாகத்தில் இருக்கவில்லை எனக் கூறினார்.

மடுக்கோவில் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து புலிகள் தரப்பிலிருந்து கருத்து எதுவும் வெளியாகவில்லை.

மடுமாதாவின் திருச்சொரூபம் மீண்டும் மடுக்கோவிலுக்கு எப்போது கொண்டுவரப்படும் என்பது குறித்து மன்னார் ஆயர் ராயப்பு ஜோசஃப் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


யுத்த சேதம் செய்தி வழங்க ஊடகவியலாளருக்கு மறைமுகத் தடை: சுதந்திர ஊடக இயக்கம் குற்றச்சாட்டு

அண்மைய காலமாக மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன

இலங்கையில் மோதல்களில் காயமடைந்த இராணுவத்தினர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைகள் மற்றும் உயிரிழந்த படையினர் வைக்கப்பட்டுள்ள மலர்ச் சாலைகள் ஆகியவற்றுக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் செல்வதை அரசாங்கத்தினர் தடுத்துள்ளனர் என்று இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் மீது அரசாங்கத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக நடந்துவரும் யுத்தம் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்துகொள்வது தொடர்பில் மக்களுக்கு இருக்கும் உரிமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவ்வியக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கொல்லப்பட்டோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டு யுத்தம் குறித்து துல்லியமான செய்திகளை பக்கச்சார்பற்ற ஊடகங்கள் வழங்க அரசாங்கத்தினரும் விடுதலைப் புலிகளும் இடம்தர மறுக்கிறார்கள் என்று சுதந்திர ஊடக இயக்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவ்வமைப்பின் சார்பாகப் பேசவல்ல சிவகுமார் மற்றும் இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார ஆகியோர் தமிழோசைக்கு தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வெளியேற்றத்தை நினைவுகூரும் மூதூர் அகதிகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னமும் 2 வாரங்கள் இருக்கும் இவ்வேளையில், திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கிலிருந்து 2006ம் ஆண்டு யுத்த அகதிகளாக வெளியேறிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வெளியேற்றத்தின் 2வது ஆண்டு நிறைவை வெள்ளியன்று அகதி முகாம்களிலும் உறவினர்கள்-நண்பர்கள் வீடுகளிலும் நினைவுகூர்ந்தனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் இடம்பெயர்வின்போது உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்காகவும் தீபங்கள் ஏற்றப்பட்டு சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்ட அமைதிப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

மட்டக்களப்பு சாகிரா முகாமில் பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதான வைபவத்தில் உரையாற்றிய இடம்பெயர்ந்தோருக்கான நலன் புரி சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன், 2006ம் ஆண்டு இதேநாளில் மது பிரதேசத்தை நோக்கி ஏவப்பட்ட எறிகணை வீச்சுக்களும் விமானக் குண்டு தாக்குதல்களுமே தமது இடப்பெயர்வுக்கு அடித்தளமாக அமைந்ததாகக் கூறினார்

சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு உதவியுடன் அனல் மின் உற்பத்தி நிலையமொன்று அங்கு அமைக்கும் முயற்சியை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 ஏப்ரல், 2008


இலங்கையின் வடக்கே நடைபெற்ற மோதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தகவல்கள்

செஞ்சிலுவை சங்கத்திடம் உடல்கள் ஒப்படைப்பு
செஞ்சிலுவைச் சங்கத்திடம் உடல்கள் ஒப்படைப்பு

இலங்கையின் வடக்கே நேற்று(புதன்கிழமை) முகமாலை-கிளாலி முன்னரங்க பகுதிகளில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம் பெற்ற கடுமையான மோதல்களில் இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த மோதல்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் 28 உடல்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதை இராணுவத்தினரும் செஞ்சிலுவைச் சங்கமும் உறுதிப்படுத்தியுள்ளன.

கடைசியாக கிடைத்த தகவல்களின்படி இந்த மோதல்களில் இராணுவத் தரப்பிலிருந்து 43 கொல்லப்பட்டுள்ளதாகவும், 33 பேரை காணவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார். விடுதலைப் புலிகள் தரப்பில் 149 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 196 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவிக்கிறார்.

வடக்கே கடும் மோதல்கள்
வடக்கே கடும் மோதல்கள்

தாம் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் ஆறு உடல்கள் இன்னமும் யாழ்ப்பாணத்திலேயே இருக்கின்றன எனவும் அவை இன்னமும் கையளிக்கப்படவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் மேலும் கூறுகிறார்.

இதனிடையே நேற்று தமிழக சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே அவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேறியுள்ளதாக தமிழோசையிடம் தெரிவித்தார்.


இலங்கையின் வடக்கே தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது

இலங்கை மருத்துவமனை ஒன்றில் தாதிகள்
இலங்கையின் வடக்கே தாதிகளுக்கு பற்றாக்குறை

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச பொது மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரச வைத்தியசாலைகளில் தாதியர்களுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுவதாக அரச தாதியர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இந்தக் குறைபாடு காரணமாக இந்த வைத்தியசாலைகளில் நோயாளர்களைச் சரியான முறையில் பராமரிக்கவும் அவர்களுக்குச் சரியான சிகிச்சையளிக்க முடியாமலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலையில் மாத்திரம் 170 தாதியர்கள் தேவையாக இருக்கின்ற போதிலும் 64 பேரே தற்போது கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பற்றாக்குறை காரணமாக மேலதிகக் கடமையில் ஈடுபடும் தாதியர்கள் 16 மணித்தியாலங்கள் வரையில் கடமையாற்ற நேர்ந்திருப்பதாகவும் இதனால் அவர்கள் உள-உடல் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிட்டிருப்பதாகவும் தாதியர் சங்கத்தின் வன்னிப்பிராந்திய இணைப்பாளர் எஸ் பாலநாதன் கூறுகின்றார்.

இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 23 ஏப்ரல், 2008

முகமாலை மோதலில் இரு தரப்பிலும் பலத்த இழப்பு

இலங்கையின் வட போர்முனையில், முகமாலைப் பகுதியில் நடந்த மோதல்களில் இரு தரப்பிலும் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

முகமாலை முன்னரங்கப் பகுதியை ஒட்டி நடந்த இந்த மோதல்களில் இரு தரப்பிலுமாக 90 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறுகின்ற இலங்கை இராணுவத்தினர், அதில் 52 பேர் விடுதலைப்புலிகள் என்றும், 38 பேர் இராணுவத்தினர் என்றும் தெரிவித்துள்ளனர். 84 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இந்த மோதல்களின் போது விடுதலைப்புலிகளின் பீரங்கி நிலைகளை இலங்கை விமானப்படையினர் அழித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்களை உறுதி செய்துள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், ஆனால், அதில், நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், விடுதலைப்புலிகள் தரப்பில் 16 பேர் பலியானதாகவும் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக சட்டசபை தீர்மானம்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி
தமிழக முதல்வர் மு. கருணாநிதி

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் சுமூகத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோருகின்ற தீர்மானம் ஒன்று இன்று தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக முதல்வர் மு. கருணாநிதியே அந்த தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார். இலங்கையில் மோதலில் ஈடுபடுகின்ற இரு தரப்புக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தையை இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோருகிறது.

ராஜிவ் கொலையாளிகளுக்கு சோனியா காந்தியும், அவரது குடும்பத்தினரும் காட்டிய மனித நேயத்தை, மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காண்பிக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய கருணாநிதி கூறியிருக்கிறார். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்தை குறைகூறிப் பயனில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இலங்கை தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புக்களிடையில் ஒற்றுமை இல்லாத காரணத்தினாலேயே, அந்தப் போராட்டம் வெற்றிபெறாமல் போய்விட்டது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 22 ஏப்ரல், 2008


கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமான தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை: தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், அங்குள்ள நிலைமையை அவதானிக்கும்போது, சுதந்திரமான நியாயமான தேர்தலொன்ரை நடத்தக் கூடிய சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை என “கஃபே” எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நிமல்க்கா பெர்னான்டோ கூறுகின்றார்.

தேர்தல் கண்காணிப்பிற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கஃபே இயக்கத்தின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட நிமல்க்கா பெர்னான்டோ, “மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், அங்கு ஓரு வித மோசடி நிலை உள்ளது. ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் உள்ளது. இரு தரப்பு மோதல் நிலமையும் காணப்படுகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.

“பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் மாகாண சபைத் தேர்தலில் குதித்துள்ளதால், பிரச்சார நடவடிக்கைகளின் போது சகலருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. ” என்றும் நிமல்க்கா பெர்னான்டோ கூறினார்.

பெர்னான்டோ அம்மையார் தெரிவித்த கருத்துகள் அடங்கிய செய்திக் குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 ஏப்ரல், 2008

இலங்கையில் அரசின் அரிசி விலைநிர்ணயத்திற்கு இணங்குவதென வியாபாரிகள் முடிவு

இலங்கையில் கடந்த புதன்கிழமை திடீரென அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதிஉச்ச விலை நிர்ணயத்தினை அரசாங்கம் அறிவித்ததனை அடுத்து கொழும்பிலுள்ள அரிசி மொத்த வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்ததோடு, கதவடைப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் இன்று அவர்கள் அரசின் நிர்ணயவிலையின் அடிப்படையில் அரிசி விற்பனையில் எதிர்காலத்தில் ஈடுபடத் தயாராகவிருப்பதாக இணக்கம் தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து சற்றுமுன்னர் பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட கொழும்பு அத்தியாவசியப் பொருட்க்கள் இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. சாமி, திங்கள் மாலை வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில், நிதியமைச்சில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்திலேயே, அரிசி ஆலை உரிமையாளர்களும், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளும் பரஸ்பரம் அரசின் விலைநிர்ணயத்திற்கு இணங்கியதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் இன்று தமது கையிருப்பிலிருந்த அரிசியை வழமைபோல, ஆனால் நிர்ணயவிலையின் அடிப்படையில் விற்பனை செய்தனர். ஆனாலும் அவர்கள் இருப்பு பற்றாக்குறை காரணமாக மிகவும் குறைந்த அளவு தொகை அரிசியையே தமக்கு விற்பனை செய்ததாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கொழும்பு செய்தியாளர் பி.கருணாகரன் தயாரித்து வழங்கும் செய்திப் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 ஏப்ரல், 2008

இலங்கையின் வடக்கே இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் அருட்தந்தை பலி

இலங்கையின் வடக்கே மாங்குளம் மல்லாவி வீதியில் இன்று இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கிளிநொச்சியில் செயற்பட்டு வரும் வடக்குகிழக்கு மனித உரிமைகள் பிரதேச செயலகத்தின் தலைவராகிய அருட்தந்தை கருணரத்னம் அடிகளார் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தகவல் யாழ் ஆயர் இல்லத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். ஆனால் தங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அவர்களே இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


அரசாங்கத்தின் உத்தரவை பின்பற்ற தயார் – அரிசி வியாபாரிகள்

இலங்கையில் அரிசியின் உச்ச விலையை இலங்கை அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளதை அடுத்து கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து கதவடைப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போது அரசின் நிர்ணயவிலையின் அடிப்படையில் அரிசி விற்பனையில் ஈடுபடத் தயார் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட கொழும்பு அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. சாமி, அரசாங்கம் நாட்டின் நன்மை கருதி எடுக்கும் முடிவிற்கு ஆதரவு கொடுக்கவேண்டியது பொறுப்புள்ள வியாபாரிகளின் கடமையென்றும், அரசினால் விதிக்கப்படும் சட்டவரம்புகளை மீறுவதென்பது அசாத்தியமான விடயம் என்றும் தெரிவித்தார்.

பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் கே.பழனியாண்டி, இவ்வாறு பிறிதொரு வியாபாரிகள் சங்கம் எடுத்த முடிவினை தாமும் பிற்பற்றவேண்டிய நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இது குறித்த விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 ஏப்ரல், 2008

வியாபாரம் செய்ய மறுத்த அரிசி வியாபாரிகள் மீது இலங்கை நடவடிக்கை

இலங்கையில் அரிசியை வியாபாரம் செய்ய மறுத்த சில வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு, வணிக மற்றும் நுகர்வோர் நலன் அமைச்சின் செயலாளரான ஆர். எம். கே. ரட்ணாயக்கா தெரிவித்துள்ளார்.

அரிசி விற்பனைக்கு உச்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், எந்த வியாபாரியும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்த ரட்ணாயக்கா அவர்கள், எந்த வியாபாரிக்கும் நட்டஈடு வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் விவசாயிகளுக்கு உர மானியம் போன்றவை வழங்கப்படுவதாகவும், ஆகவே இதனால், விவசாயிகளுக்கும் இதனால், எந்த விதமான பாதிப்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

அரிசியை குறித்த விலைக்கு விற்க வேண்டும் என்று அரசாங்கம் நிர்ணயித்திருக்கின்ற வேளையில், ஆலை உரிமையாளர்கள் அவற்றை தாம் விரும்புகின்ற வெவ்வேறு விலைகளுக்கு விற்க விரும்புவதாகக் குற்றஞ்சாட்டுகின்ற ரட்ணாயக்கா அவர்கள், புறக்கோட்டையில் இருக்கின்ற கடைக்காரர்கள் அவர்களது தரகு முகவர்களாகவே செயற்படுவதாகவும், புறக்கோட்டையில் இருக்கின்ற சில கடைகளில், வெள்ளியன்று விற்பனை செய்ய மறுக்கப்பட்ட அரிசி இன்று பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.


விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மருந்துகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஒரு தொகுதி மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்பகுதியில் மருந்துப் பொருட்களுக்கு பெரிய அளிவில் தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக தமிழோசையில் கருத்து வெளியிட்ட கிளிநோச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் டி.சத்யமூர்த்தி, பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால், மூன்று மாதங்களாக மருந்துகளைக் கொண்டுவர முடியாத நிலை உருவானது என்றார். இதன் விளைவாக மருந்து தட்டுப்பாடு நிலவியது என்றும் அச்சமயம் தனியார் மருந்துக் கடைகளிலிருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்க முடியாத சூழ்நிலைகூட நிலவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது ஒப்புதல் கிடைத்து ஒரு தொகுதி மருந்துகள் எடுத்துவரப்பட்டுள்ள நிலையில், அவை உடனடியாக விநியோகிக்கப்படும். இதனால் மருந்து தட்டுப்பாடு நீங்கும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

டாக்டர்.சத்யமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

கே. இராமகிருஷ்ணன்

உலக சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையிலும் பெற்றோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும்படி இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை விற்பனைசெய்துவரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

உலக சந்தையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பிற்கேற்ப இலங்கையில் தற்போது நிலவும் டீசலின் விலையை சுமார் 31 இலங்கை ரூபாய்களினால் உடனடியாக உயர்த்தும்படி தாம் கோரியிருப்பதாகவும், இல்லாவிடில் அடுத்த மாத முடிவில் தமது நிறுவனம் சுமார் 750 மில்லியன் ரூபாய்கள் நட்டத்தினைச் சந்திக்கவெண்டியிருக்கும் என்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே. இராமகிருஷ்ணன் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இவருடனான செவ்வியினை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அம்பாறையில் ஜே.வி.பி. வேட்பாளர் தாக்குதல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர் ஒருவரும் இரண்டு ஆதரவாளர்களும் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் வியாழன் இரவு தாக்குதலுக்கு இலக்கானதாக ஜே.வி.பி. கூறுகின்றது

தமது கட்சியின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வேட்பாளரான எம்.ஐ.அபு சகீத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தனக்கு தெரியாது என்று கூறும் அவர், தாக்குதலுக்கு இலக்காகிய தானும் 2 ஆதரவாளர்களும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

சம்பவம் தொடர்பாக விசாரனைகள் நடைபெற்றுவருவதாகக் கூறும் அக்கரைப்பற்று பொலிசார் தேர்தல் வன்முறைகளை தடுப்பதற்குரிய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 ஏப்ரல், 2008

புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

இலங்கையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக, வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அடிப்படை மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செஞ்சிலுவவைச் சங்கம் கூறியுள்ளது.

வடபகுதிகளுக்கு தொடர்ந்து பொருட்களை எடுத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலே இதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம், அரசுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்படி தேவையானவற்றை கொண்டுவரும் நடவடிக்கையை ஓரளவு செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆட்பற்றாக் குறையும் ஒரு முக்கியமான விடயம் எனவும், இதன் காரணமாக வழக்கமாக வரும் நோயாளர்களுடன் நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக காயமடைந்தவர்களையும் கூடுதலாக கவனிக்க வேண்டியிருப்பதால் மருத்துவமனைகள் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது எனவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை கூறுகிறது.


இலங்கை அரசு நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

சோனகத்தெருவில் மூடப்பட்டுள்ள கடைகள்
சோனகத்தெருவில் மூடப்பட்டுள்ள கடைகள்

இலங்கையில் அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதிஉச்ச விலை நிர்ணயத்தினை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதனை கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு மொத்த அரிசி வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருப்பதோடு, கதவடைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

அரசின் இந்த நள்ளிரவு அதிரடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமக்கு நீதி வழங்கவேண்டுமென்றும் அவர்கள் அரசிடம் கோரியிருக்கிறார்கள். கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரக் கடைகள் பல இன்று மூடப்பட்டிருந்தன.

இதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் கே.பழனியாண்டி, அரசாங்கம் இவ்வாறு முன்னறிவித்தல், கலந்துரையாடல் ஏதுமின்றி அரிசி விலைநிர்ணயம் செய்திருப்பது தவறான நடவடிக்கை என்றும், இதற்கு ஒரு சுமுகமான தீர்வினைக்காணும் வரைக்கும் மொத்தவியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அரிசி விற்பனையில் ஈடுபடுவதில்லை என்றும் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனால் இந்தத் தொழிலின் இணைத்தொழிலில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களும் தொழிலில்லாது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு இவ்வாறு விலைநிர்ணயத்தினை புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலிற்கு கொண்டுவருவதாக அறிவித்திருந்த போதிலும், இதனை மீறுவோர் மீது நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று எச்சரித்திருந்தபோதிலும் இன்று கொழும்பிலுள்ள சில்லறைக் கடைகளில் அரிசி மிகவும் அதிகமாக பழையவிலைப்பட்டியல்களின் அடிப்படையிலேயே விற்கப்பட்டது.

இது குறித்து கொழும்பிலிருந்து செய்தியாளர் பி.கருணாகரன் வழங்கும் செய்திப் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


BBCTamil.com: “போர்நிறுத்தம்: சாதனைகள், பின்விளைவுகள்”

BBCTamil.com: “கிழக்கு மாகாண சபை தேர்தல்”

BBCTamil.com: “ஜே.வி.பி.யில் உட்கட்சிப் பூசல்”

BBCTamil.com: “இலங்கை- 60 ஆவது சுதந்திர தினம்”

BBCTamil.com: “முஸ்லிம்கள் வெளியேறி ஒர் ஆண்டு நிறைவு”

BBCTamil.com: “தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி”

BBCTamil.com: “கர்ணல் கருணாவுக்கு சிறைத் தண்டனை”

BBCTamil.com: “இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் 20 வருடங்கள்”

புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஏப்ரல், 2008


அரிசி விற்பனைக்கு அதிகபட்ச விலையை இலங்கை அரசு நிர்ணயித்துள்ளது

இலங்கைத் துறைமுகத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது
இலங்கைத் துறைமுகத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது

இலங்கையில் அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதி உச்சபட்ச விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி சம்பா அரிசி ஆகக்கூடுதலாக கிலோ ஒன்றுக்கு 70 ரூபாவாகவும், நாட்டரிசி 65 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 65 ரூபாவாகவும், வெள்ளைப் பச்சை 55 ரூபாகவும் மாத்திரமே ஆகக்கூடுதலாக விற்பனை செய்ய முடியும் என்று இலங்கையின் வணிக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதனை எவரும் மீறும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று பிபிசியின் சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மடு பகுதியை மோதலுக்குள் இழுத்து விட்டது மஹிந்த அரசுதான் என்று ஜயலத் ஜயவர்த்தன குற்றம் சாட்டுகிறார்

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

இலங்கையில் மடு தேவாலயப் பகுதியை மோதலில் இழுத்துவிட்டது மஹிந்த ராஜபக்ஷவின் அரசுதான் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன குற்றங்சாட்டியுள்ளார்.

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயப் பகுதியை அமைதிப் பிராந்தியமாக பேண வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், புனித பாப்பரசரும், மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்களும் கேட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

தமது கட்டுப்பாட்டில் மடு தேவாலயம் இருக்கின்ற போதிலும், விடுதலைப்புலிகள் அந்த ஆலய வளாகத்தில் இருக்கவில்லை என்பதை தன்னால் கூறமுடியும் என்று தெரிவித்த ஜயலத் அவர்கள், ஆனால், அரச படைகளின் தாக்குதலுக்கான எதிர்வினை நடவடிக்கையாகவே அவர்கள் அங்கு சென்று சண்டையிடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மடு தேவாலயம் அனைத்து இன மக்களின் மதிப்பைப் பெற்ற ஒரு வழிபாட்டிடமே ஒழிய, அதற்கு இராணுவ ரீதியாக எந்தவிதமான முக்கியத்துவமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



அனைத்துக் கட்சிக் குழுவின் 90 சதவீதப் பணிகள் பூர்த்தியாகிவிட்டன: இலங்கை அமைச்சர் திஸ்ஸ விதாரண

அமைச்சர் திஸ்ஸ விதாரண

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்ற சர்வகட்சிக் குழு தனது 90 வீதமான பணிகளை பூர்த்தி செய்துவிட்டதாகவும், நிலைமை சுமூகமாகச் செல்லுமானால், இன்னும் சில மாதங்களில் தமது பணி முழுமையாக பூர்த்தியடைந்துவிடும் என்றும், அந்த குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

லண்டனுக்கு விஜயம் செய்திருந்த அவர், இன்று தமிழோசைக்கு நேரடியாக வந்து வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அனைத்துக்கட்சி குழுவின் நடைமுறைகளில் இருந்து விலகிச் சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகியவை குறித்து கருத்துக் கூறிய அவர், ஏற்கனவே அதிகாரபூர்வமற்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இந்த விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் இந்த நடைமுறைகளில் இணைய வரும்போது, ஜே.வி.பி.யையும், அதில் இணைந்துகொள்ள வருமாறு தான் அழைப்புவிடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடரும் நிகழ்வுகளால் விடுதலைப் புலிகள் அமைதி நடைமுறைகளுக்குள் வர முன்வராத நிலை ஏற்படுமானால், அப்போது ஒருவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த அனைத்துக் கட்சி குழுவில் இணைந்து செயற்படுவதற்கான அவசியம் குறித்து ஆலோசிக்கலாம் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் திஸ்ஸ விதாரண அவர்கள் கூறினார்.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

Row erupts over Tamil rebel film: Tushara Peiris, LTTE Supremo Velupillai Prabhakaran, Foreign Minister Rohitha Bogollagama

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

ஒரு சிங்களப் படம் சர்ச்சையாகிறது!

துஷாரா பெய்ரிஸ் என்ற இலங்கை நாட்டுச் சிங்கள இயக்குநர் பிரபாகரன் என்ற பெயரில் எடுத்த திரைப்படம் பெரும் சர்ச்சைச் சகதிக்குள் சிக்கிக்கொண்டு மூச்சுத் திணறு கிறது. இப்படம் இலங்கை எல்லையைத் தாண்டி வராமல் இருந்திருந்தால், இந்த அளவுக்குப் பிரச்சினையின் தாக்குத லுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் என்று சொல்ல முடியாது.

இலங்கையில் இந்தச் சிங்களப் படம் திரையிடப்படும் பட்சத்தில், சிங்கள மக்களின் வெறியை மேலும் கொம்பு சீவிவிட்டிருக்கும்.
இந்த இயக்குநரின் குருநாதர் ஜீவன் குமாரதுங்கா என்ற சிங்களவர் – படம் எப்படியிருக்கும் என்பதற்குச் சாட்சியங்கள் தேவைப்படவில்லை.

சிறுவர்களை இராணுவத்தில் ஈடுபடுத்தக்கூடாது; பெண்களை தற்கொலைப் படைக்குத் தயாரிக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்வது நல்ல விஷயம்தானே என்று பெரும் போக்காக விமர்சிக்கக் கூடும்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஈழப் போராளிகள்மீது வைக்கப்பட்டதுண்டு – ஒரு திரைப்படத்தின்மூலம் வெளிப் படுத்துவதில் ஒரு பெரிய உள்நோக்கம் இருக்கிறது.

உலகம் முழுவதும் சிங்கள அரசின் இனவாத வெறியைத் திட்டமிட்டு மறைத்து, அவர்களின் மனிதநேயம், போர் தர்மம் ஆகியவற்றை காலில் போட்டு மிதிக்கும் கேவலத்தைப் பின்னுக்குத் தள்ளி உள்நாட்டுத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காகப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்திக் காட்டும் தீய நோக்கம் இந்த திரைப்படத்தின் உருவாக்கத்தில் உண்டு என்பது இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டு விட்டது.

படம் எடுத்த இயக்குநரின் நோக்கம் என்ன என்பது திரைப்படத்தின் ஒரு காட்சி அம்பலப்படுத்தி விட்டது. 2006 ஆம் ஆண்டில் செஞ்சோலையில் சிங்கள இராணுவம் தொடுத்த தாக்குதலில் குழந்தைகளும், பெண்களும் கொல் லப்பட்டதாக யுனிசெஃப் அமைப்பே வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சிங்களப் படம் அதுபற்றி என்ன கூறுகிறது? அது ஒன்றும் அனாதைகளின் விடுதியல்ல; போராளிகளின் முகாம் என்று சிங்கள அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் குரலை எதிரொலிக்கிறது இந்தத் திரைப்படம்.

இலங்கையில் நடைபெறும் பிரச்சினைகளை மையப் படுத்தி எடுக்கப்பட்டது இந்தத் திரைப்படம் என்று ஒரு சினிமா பார்வையில் முலாம் பூச ஆசைப்படுபவர்கள் கேள்வி ஒன்றுக்கு நாணயமாகப் பதில் சொல்லக் கடமைப்பட் டுள்ளனர்.

இலங்கை இராணுவம் நடந்துகொண்ட அத்துமீறல், போர் தர்மத்துக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையாவது காட்சியில் வைத்திருக்கவேண்டாமா? இலங்கை இராணு வம் செய்தது எல்லாம் சரியானது; தங்கள் மக்களைப் பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்தான் அநியாயக்காரர்கள் என்று காட்டுவதற்காக ஒரு திரைப்படமா?

பூனைக்குட்டி வெளியில் வந்தது என்கிற பழமொழிக்கு ஏற்ப – இந்தச் சிங்களத் திரைப்படம் இலங்கை இராணுவத் தளபதிக்குப் போட்டுக் காட்டப்பட்டுப் பாராட்டுதலையும் பெற்று இருக்கிறது.

வெலிக்கண்டா, தொட்டிசலா, மியான்குலமா முதலிய இடங்களில் நடந்த போர்களை இலங்கை இராணுவ உதவி யுடன் படமாக்கப்பட்டுள்ளதும், அதற்காக இராணுவத் தளபதி ஃபொன்சேகா முதலியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு இருப்பதும், இந்தத் திரைப்படம் எந்தப் பின்னணியில் யாருக்காக, எந்தப் பிரச்சாரத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது அப்பட்டமாகவே தெரிந்துவிட்டது.

இந்தச் சிங்கள படத்தினை தமிழிலும் டப்பிங் செய்து, தமிழர்கள் மத்தியிலும் தமிழர்களுக்காகப் போராடுபவர் களைப்பற்றிக் கொச்சைப்படுத்தி, சிங்கள இராணுவத்தின் கொடுமைகளுக்கு நியாயம் கற்பிக்கும் கெட்ட எண்ணம் இந்தத் திரைப்படத்தின் பின்புலத்தில் முதன்மையான தாகவே இருக்கிறது.

இலங்கை சிங்கள அரசின் பாசிசத்துக்கு இந்த ஏற்பாடும் கூட ஒரு முக்கிய ஆதாரமாகும் என்பதில் அய்யமென்ன? இலங்கை அரசின் முயற்சி எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது!

Posted in Law, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | 1 Comment »

Mayavati factor in Karnataka Assembly elections 2008 – Dalit-Brahmin coalition

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

கன்சிராமைக் கைகழுவுகிறார் மீண்டும்!

மாயாவதி கட்சியின் 20 வேட்பாளர்கள் பார்ப்பனர்கள்

பெங்களூரு, ஏப். 9- வெகுமக்க ளாக இருக்கிற தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டு அவர்களை ஆட்சி அதிகா ரத்தில் பங்கு பெறச் செய்திட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு கன்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான் பகுஜன் சமாஜ் கட்சி என்பது. இந்தக் கட்சியை வட நாட்டில் தொடங்கும்போது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா புலே ஆகிய தலைவர்களின் படங் களை கட்சித் தலைமையகத் தில் சிறப்பாக வைத்துத் தொடங்கியவர் கன்ஷிராம். அவரது கட்சியைச் சேர்ந்த மாயாவதி தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வ ராக இருக்கிறார்.

மறைந்த கன்ஷிராமின் கொள் கைகளுக்கு விரோதமாகப் பார்ப்பனர்களுடன் கூட்டு வைத்துத் தேர்தலில் வெற்றி பெற்று அவர்களை அமைச்சர வையிலும் இடம்பெறச் செய்து கன்ஷிராமின் கொள்கை களைக் கைகழுவிவிட்டார். இந்நிலையில், கருநாடகா மாநிலச் சட்டமன்றத் தேர்தலி லும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. அந்தக் கட்சி வேட்பாளர்களாகப் பார்ப்பனர்களும் நிறுத்தப் படப் போகிறார்களாம்.

எந்தக் கட்சியுடனும் கூட்டு வைக்காமல் தனித்துப் போட் டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி 224 தொகுதிகளிலும் போட்டி போடப் போகிறது. இவற்றில் 20 தொகுதிகளில் பார்ப்ப னர்கள் அக்கட்சியின் வேட் பாளர்களாக நிறுத்தப்படுகி றார்கள். இந்த அளவுக்கு அதிக வேட்பாளர்களை வேறு எந்தக் கட்சியும் நிறுத்தவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள் கிறார் அக்கட்சியின் மாநிலத் தலை வர் முனியப்பா.

கார்வார் பகுதியில் 3 ஆயி ரம் பார்ப்பனர்கள் அக்கட்சி யில் புதிதாகச் சேர்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் தாழ்நிலைக் குப் பார்ப்பன வல்லாண்மை தான் காரணம் என்று உணர்ந்து கட்சி தொடங்கிப் பார்ப்பனர்களை எதிர்த்து வந்தார் கன்ஷிராம். அவரது சீடர் மாயாவதி தம் கட்சியின் கொள்கையைக் குழிதோண் டிப் புதைத்துவிட்டார் என்ப தற்கு இச்செய்தி மேலும் ஒரு எடுத்துக்காட்டாகும்.


மாயாவதி சிலை: திறந்தார் மாயாவதி

மாயாவதி சிலை

இந்தியாவின் வடக்கிலுள்ள உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வரான மாயாவதி குமாரி, தலைநகர் லக்னோவில் இன்று தனது சிலையை தானே திறந்துவைத்துள்ளார்.

இந்து சாதிய அமைப்பில், தலித் மக்களின் மேம்பாட்டுக்காக செயல்படும் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதி, அந்தக் கட்சியை நிறுவிய காலஞ்சென்ற கன்ஷி ராம் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே தமது சிலை நிறுவப்பட்டதாகக் கூறுகிறார்.

தனது சிலை நாட்டின் தலைநகரான புதுடில்லியிலும் நிறுவப்படும் எனவும் மாயாவதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தமக்கு தாமே சிலை வைத்துக் கொள்வது அசாதாரணமான ஒன்று என செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Viduthalai Editorials: The skimming of the creamy layer – Complains against stringent parameters

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

கிரீமிலேயரா?

உச்சநீதிமன்றம் நேற்று (10.4.2008) அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படாத பொருளாதார அளவு கோலைத் திணித்ததுமூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒரு இடியைப் போட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதா இல்லையா? என்று தீர்மானிப்பதுதான் நீதிபதிகளின் பணியே தவிர, அரசமைப்புச் சட்டத்தின் எல் லைக்கு வெளியே குதித்து, தம் மனப்போக்கில் ஆணைகளைப் பிறப்பிப்பது மிகவும் ஆபத்தானதாகும். இது வேலியே பயிரை மேயும் செயலாகும்.

இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் தனித்தனியே அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அளவுகோல் என்று வரும்பொழுது இரு தரப்பினருக்கும் ஒன்றுபோலவே அமையக்கூடியது.
ஆனால், இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு அளவு கோலும், பிற்படுத்தப்பட்டோருக்கு இன்னொரு அளவுகோலும் வைத்திருப்பது அசல் பிரித்தாளும் தன்மையுடையதாகும்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள கிரீமிலேயர் என்ற வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது – மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு நியாயம்போல இடமாறு தோற்றப் பிழையாகத் தோன்றலாம்.

ஆண்டாண்டுகாலமாகக் கல்வியையும், உத்தியோக வாய்ப்புகளையும் தங்கள் வசமே வைத்துக்கொண்டுள்ள ஆதிக்க ஜாதியினருடன் எதிர்த்துப் போட்டியிடக் கூடிய பகுதியினரை கிரீமிலேயர் என்று கூறி வெளியே தள்ளி விடுவதன்மூலம் ஏற்கெனவே அத்துறைகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர்களுக்குப் பேருதவி செய்ததாக ஆகாதா என்பதை மெத்த படித்த நீதிபதிகள் சிந்திக்காமல் போனது வருந்தத்தக்கதே!

அவர்கள் சொல்லும் அந்த விவாதத்தையே எடுத்துக்கொள் வோம். மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் முதலிய ஆகிய நிறுவனங் களில் சேர்ந்து படிக்க ஆகும் செலவு என்ன?

எடுத்துக்காட்டாக அகமதாபாத் அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்கும் ஒரு மாணவனுக்கு ஆகக்கூடிய செலவு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழை, எளிய மக்களுக்காகத்தான் இந்தக் கிரீமிலேயர் நீக்கம் என்பது உண்மையானால், பிற் படுத்தப்பட்ட மக்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்க முடியுமா? என்ற பொது அறிவு கேள்விக்கு நீதிபதி கள் தரப்பில் என்ன நியாயமான பதிலை வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பொருளாதார அளவுகோலைக் கொண்டே பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்களையும் முட்டித்தள்ளி, பொருளாதாரத்தில் ஏழை, எளிய பகுதியைச் சேர்ந்தவர்களையும் உள்ளே புக முடியாமல் செய்த – ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்திய ராஜதந்திரத்தை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.

மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியாகிய பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான ஆணை யினை சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிறப்பித்தார். அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் (ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட ஆயம்) கிரீமி லேயர் என்ற பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து திணித்தது. அதன் விளைவு என்ன தெரியுமா?

மத்திய அரசுத் துறையில் 12.5 விழுக்காடு அளவுக்கு இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை பத்து ஆண்டுகளில் 5.3 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.

இந்த அனுபவத்துக்குப் பிறகும்கூட, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயர்களை வெளியேற்றுவது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமுண்டோ?

பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அரசமைப்புச் சட்டப்படி இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு என்ற வகையில், உச்சநீதிமன் றம் நடந்துகொண்டது என்பதிலே ஒரு வகையில் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு வகையிலே அதனைத் தட்டிப் பறிப்பது என்பது மகிழ்ச்சிக்குரியதல்ல என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்தின் அடிப்படையில், இந்தியா முழுமையும் உள்ள சமூகநீதிச் சக்திகள் அணிதிரண்டு போராடுவது அவசியமாகும்.

சமூகநீதிக்காக இன்னும் எத்தனை எத்தனைக் களங் களைச் சந்திக்க வேண்டுமோ தெரியவில்லை. என்றாலும், போராடுவோம் – வெற்றி பெறுவோம் – வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!

இடைநிலையில் மட்டும் ஏன் கிரீமிலேயர்?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் கிரீமிலேயர் என்பதை வலியுறுத்தும் உச்ச நீதிமன்றம் இதை ஏன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் வலியுறுத்த வேண்டும்?

மேலே உள்ள, திறந்த போட்டியில் பங்கேற்கும் முன்னேறிய ஜாதியினருக்கும் (Forward Communities)பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அடுத்துள்ள S.C., S.T சமுதாயப் பிரிவினருக்கும் வைக்கப்படாத கிரீமிலேயர் – இடையில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மட்டும் வைக்கப்படுவது எவ்வகையில் நீதி, நியாயம், நேர்மை?

இக்கேள்வியின் அடிப்படை, அவர்களுக்கும் கொண்டு வரப்படவேண்டும் என்பது அல்ல; மாறாக, அவர்களுக்கு வைக்கப்படாதது போல் இடைத் தட்டாக உள்ள பிற்படுத்தப் பட்டவர் களுக்கும் அதை ரத்து செய்ய வேண்டும் என்பதற் காகவே!

வருமானம் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களால் தங்கள் பிள்ளைகளை அய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் படிக்க வைக்க இயலுமா?


அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்திலேயே நிராகரிக்கப்பட்டது பொருளாதார அளவுகோல்

1. இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது அரசியல் சட்டத் திருத்தமே, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் ஏற்பட்ட கிளர்ச்சியின் விளைவாக வந்தது என்பது அன்றைய பிரத மர் நேரு அவர்களால் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்யப்பட் டுள்ளது!

1951 இல் நிறைவேறிய அந்த முதலாவது அரசியல் சட்டத் திருத் தத்தின்மூலம் 15(4) என்ற புதுப்பிரிவு இணைக்கப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காட்டும் வகையில், “சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்” (Socially and Educationally) என்ற சொற்றொடர்களைப் போட்டு திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது சட்ட அமைச்சர், டாக்டர் அம்பேத்கர், பிரதமர் நேரு முதலியோர் அங்கம் வகித்தனர்.

(பழைய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைந்த அவை அது. முதலாவது பொதுத் தேர்தல் 1952 இல் தான் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்).

Founding Fathers of Constitution அரசியல் சட்டத்தை உருவாக் கிய கர்த்தாக்களையே கொண்டது அந்த அவை என்பது உச்சநீதி மன்றம் போன்றவைகளால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

நேருவும் – அம்பேத்கரும் ஏற்கவில்லை

அன்று சிலர், பொருளாதார ரீதியாக “Economically” என்ற சொற்றொடரும் இடம்பெறுவது அவசியம் என்று சில திருத்தங் களைத் தந்தனர். அதை சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரோ, பிரதமர் நேருவோ ஏற்கவில்லை.


இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல!

2. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; சமூக நீதிக்கான வாய்ப்பினை காலங்காலமாக மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஓர் ஏற்பாடு என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

நரசிம்மராவ் அரசு உயர்ஜாதியினரில் 10 சதவிகிதம் ஏழை களுக்கு அளித்த இட ஒதுக்கீட்டினை உச்சநீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்தது இந்த அடிப்படையில்தான்!

3. இதைவிட முக்கியமான ஒரு கருத்து, பிற்படுத்தப்பட்டவர் களுக்கு மத்தியக் கல்வி நிலையங்களில் கதவே இதுவரை திறக்கப்படவில்லை; இப்போதுதான் திறக்கப்படவிருக்கிறது. அதற் குள்ளே, ஏதோ 27 சதவிகிதத்தினை உயர் வருமான வசதி படைத் தோர் அபகரித்துவிட்டனர் என்ற கூச்சலுக்கு அடிப்படை உண்டா?

பந்திக்கு உட்கார வைப்பதற்கு முன்பே, இதை மற்றவர்கள் சாப்பிட்டு விட்டனர்; எனவே, இதைத் தரம் பிரிக்க வேண்டும் என்று கூறுவது நியாயமா? தேவையா? மோசடி அல்லவா?


‘கிரீமிலேயர்’ அளவுகோலுக்கு உச்சநீதிமன்றம் வைத்திருக்கும் ஆதாரம் என்ன?

உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு வரவேற்கத் தக்கதே! இடஒதுக்கீடு என்பதே அரசியலமைப்புக் சட்டத்துக்கு விரோதம் என்பதுபோல உருவாக்கப்பட்ட கருத்து இந்தத் தீர்ப்பு மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இது வரவேற்கத்தக்க தீர்ப்பேதான்.

கிரீமிலேயர் என்ற ஒன்றைப் புதிதாகக் கொண்டு வந்து திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கமே தகர்க்கப்பட்டுள்ளது. மண்டல் குழு பற்றி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட தீர்ப்பில் திணிக்கப் பட்ட ஒன்றாகும் இந்தக் கிரீமிலேயர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதியிலும் காணப்படாதது இது. பொருளாதார அளவுகோல் என்பது 1951-இல் நடைபெற்ற விவாதத்திலேயே நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, பொருளாதார அளவுகோல் பற்றி விவாதிக்கப் பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு, ஏற்காமல் தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்றைக் கொண்டு வந்து உச்சநீதிமன்றம் திணிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகும்.

பொருளாதார அளவுகோல் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறக் கூடியது. இந்த ஆண்டு வருமானம் அடுத்த ஆண்டு இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஒரு குடும்பத்துக்குள்ளேயே ஒரு வீட்டுக்குள்ளேயேகூட ஒருவர் பிற்படுத்தப்பட்டவராகவும் இன்னொருவர் அது அல்லாதவராகவும் ஆக்கப்படக் கூடிய ஒரு நிலைமையை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் என்பதில் நிரந்தர வருமானக்காரர்கள் உண்டு – அவர்கள் அலுவலர்கள்; விவசாயத் தொழிலில் ஈடுபடக் கூடியவர்களை நிரந்தர வருமானக்காரர்களின் பட்டியலில் சேர்க்க முடியாது. இயற்கைத் தொல்லைகளால் பாதிக்கப்படக் கூடியது விவசாயத் தொழில்; இன்னும் சொல்லப் போனால் இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமும் அல்ல. இந்தக் கருத்து மண்டல் குழுவின் அறிக்கையிலே தெளிவுபடுத் தபட்டுள்ளது.

ஏழையாக இருப்பவர்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்யலாமே தவிர கல்வியில் கொண்டு வந்து அதனைத் திணிக்கக் கூடாது.
பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் வசதி வாய்ப்புள்ளவர்கள் எல்லாம் கல்வியில் முன்னேறியுள்ளனர் என்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் ஆதாரமோ புள்ளி விவரமோ இருக்கிறதா? எந்த அடிப்படையில் கிரிமீலேயரை வெளியேற்ற வேணடும் என்று கூறுகிறார்கள்?

முதன் முதலாக மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இப்பொழுதுதான் பிற்படுத்தப்பட்டோர் நுழைகிறார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் கல்வியில் வளர்ந்து விட்டார்கள் என்று அவர்களில் ஒரு பிரிவினரை வெளியேற்றுவது நியாயமாக இருக்க முடியுமா?
வாய்ப்பைக் கொடுத்து விட்டு அதற்குப் பிறகு 5 ஆண்டு கழித்தோ, பத்தாண்டு கழித்தோ ஆய்வு செய்யலாமே – 20 ஆண்டுகள் கழித்து பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றுதான் மண்டல் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பந்தியிலேயே உட்காரவில்லை; அதற்குள்ளாகவே அவர்கள் தின்று தீர்த்து விட்டனர் என்று நீதிமன்றம் கூறுலாமா? இதில் இன்னொரு கருத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது – என்று புகார் செய்ய வேண்டியவர்கள் யார்? பிற்படுத்தப்பட்டோரில் ஏழைகளாக இருக்கக் கூடியவர்கள்தானே! அவ்வாறு யாரும் வழக்குத் தொடுக்கவில்லையே! உயர்ஜாதிகாரர்கள்தானே வழக்குத் தொடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் இன்னொரு ஆபத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர தகுதியானவர்கள் பிற்படுத்தப்பட்டோரிலிருந்து கிடைக்கவில்லையானால் அந்த இடங்களை திறந்த போட்டிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுவது – யாருக்கு லாபம்? உயர் ஜாதிக்காரர்களுக்குத் தானே இப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்குகிறது?

பிற்படுத்தப்பட்டோர் பட்ட மேற்படிப்புக்குச் செல்லக் கூடாதா
பட்ட மேல் படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என்று ஒரு சில நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது தீர்ப்பா? கருத்தா? கட்டாயமா? என்பவை தெளிவாக் கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் பட்ட மேற் படிப்புக்கு செல்லக் கூடாதா? இது சமூகநீதியின் அடிப் படையைத் தகர்க்கக் கூடியதாகும்.

– செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி (சென்னை 12.4.2008)


இடஒதுக்கீடு வசதி படைத்தவர்கள் யார்?

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிற்படுத்தப் பட்டவர்களில் வசதி படைத்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.
மண்டல் ஆணைய வழக்கில் கடந்த 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்கள் பிரிவு முதன் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டது.

அரசியல் சட்ட அதிகார பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய பொதுத் தோர்வாணைய உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் ஏ, பி அல்லது குரூப் 1, குரூப் 2 அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவன அதிகாரி களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டு இருந்தது.

ராணுவம் மற்றும் துணை ராணுவப் பணியில் சுலோனியல் அல்லது அதற்கு மேல் பதவி வகிக்கும் அதிகாரிகளின் குழந்தைகளும் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அத்துடன் வழக்கறிஞர்கள், சார்ட்டர்டு அக்கவுண்டண்ட், மருத்துவர்க,ள நிதி மற்றும் நிர்வாக ஆலோசகர்கள், பல்மருத்துவர்கள், கட்டடக் கலைஞர்கள், கணினி பொறியாளர்கள், வசனகர்த்தா, விளையாட்டு வீரர்கள், விளையாட்டுத் துறை பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் ஊடக அதிகாரிகள், வசதி படைத்த பிரிவினர் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது.

பொதுவாக ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது. விவசாயத்தில் ஈடுபட்டவர்களில், நில உச்சவரம்பு சட்டப்படி ஒருவர் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ள பாசன வசதியுள்ள நிலத்தில் 85 விழுக்காடும் அதற்கு மேலும் உள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வசதி படைத்தவர்கள் பட்டியல் பற்றி மத்திய அமைச்சரவை இறுதி முடிவெடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | 2 Comments »

Tamil Book Review: Naan Oru Manu Virodhan – Aadhavan Dheetchanya: Viduthalai

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

நான் ஒரு மநு விரோதன்! – ஓர் பார்வை!

Snap Judgement: Aadhavan Dheetchanya Book Release: Naan oru Manu Virodhan – Interviews, Sujatha, Sundara Ramasamy, SuRa, Kings, Chola, Pandiyan, Cheran, Chozhan

கவிஞர் ஆதவன் தீட்சண்யா வின் நேர்காணல்கள் நூலாக வெளிவந்துள்ளன. அந்நூலின் பெயர் நான் ஒரு மநு விரோதன்.

நேர்காணல்களில் அரிய சில மட்டுமே நூலாக வந்துள்ளன. அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நூலாக இதைக் கருத லாம்.தாழ்த்தப்பட்ட சகோதரனின் உண்மையான வலிகள் குறித்தும், காரணங்கள் குறித்தும் விரிந்து பேசுகிறார். மிகக் கனமான செய்திகளையும், நகைச்சுவையால் மக்களின் உள்ளத்தைத் தொடும் பிரகதீஸ் வரன் இந்நூலின் தொகுப்பாசிரி யராக உள்ளார்.

இந்நூலுக்கு அறிமுகவுரை எழுத வந்த தோழர் நீல கண்டன், மார்க்சியத் தளத்தில் இயங்கி வரும் தோழர் ஆதவன் தீட்சண் யாவிடம் இவ்வளவு கூர்மையை எதிர் பார்க்கவில்லை என்கிறார். அதையே நாமும் வழிமொழிய வேண்டியுள்ளது.

இந்தியச் சமூகம் வர்க்கமாக இருந்ததா இல்லையா? என்ப தற்கு முன்னாடியே அது ஜாதி யாக இருந்திருக்கிறது, அது ஒன்றுதான் எல்லாவற்றையும் வழி நடத்தியது என வர
லாற்றை எடுத்துக் கூறி, வருத் தப்படுகிறார்.

அடுத்தவன் மலத்தை வாரிச் சுமக்கிற அவலத்திலிருந்து, மீளத்துடிக்கும் ஒரு அருந்ததி யனாக ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்கிறார். தான் இந்த ஜாதி எனத் தெரிந்து, தன்னோடு பழகாமல் போய் விடுவார்களோ என்கிற பயமிருக்கே அது மிகவும் கொடுமையானது எனத் தாழ்த்தப் பட்ட சகோதரனின் உணர்வை நம்முன் வைக்கிறார். ஒரு சராசரி மனிதராக இயல்பாக வாழ முயற்சி செய்தாலும், தாம் பிடிபட்டு விடு வோமோ என்கிற அச்சம் அவனுக் குள் இருப்பதைச் சக மனிதனுக்கு எடுத்துக் கூறுகிறார்.

இந்தக் கொடுமைகளுக்குக் காரணம் பார்ப்பனர்களே எனச் சரியான புரிதலோடு முரசொலிக் கிறார். உடல் உழைப்பைக் கேவலப் படுத்தும் பார்ப்பனர்கள் தகுதி, திறமை, அறிவு குறித்துப் பேசு கிறார்கள். அதனால் இச்சமூகத் திற்கு ஏற்பட்ட பயன்தான் என்ன? எனப் பகுத்தறிந்து வினா வீசு கிறார். என்னை ஒடுக்க நினைக் கும் ஒவ்வொருவரையும் நான் மனிதன், நீ யார்? எனக் கேட் பேன் என்கிறார். இப்போது எல்லாம் மாறிவிட்டது என்கிறார்கள் சில போலிகள். இங்கே ஒவ் வொரு தாழ்த்தப்பட்டவனும் கேவலத்தோடு அல்லவா சுமக்க வேண்டியுள்ளது என உள்ளத்திற்குள் ஊடுருவி உண்மையை உணர வைக்கிறார்.

என் பையன் அமெரிக்கா போனாலும் நான் பார்க்கிற பெண்ணையே திருமணம் செய் வான் என்பதும், நான் கழிப்பதை அவன் அள்ளுவான் என்பதும் ஜாதித் திமிர்தானே? ஒரே அலு வலகத்தில் வேலை பார்த்து, ஒரே மேசையில் சாப்பிடுவதாலேயே ஜாதி போய்விடாது. நானெல்லாம் ரொம்ப சோஷியல் சார், ஜாதி யெல்லாம் பார்ப்பதில்லை என் கிறார்கள். ஜாதியைக் கைவிடாம லேயே சமதர்மவாதி யாக உலாவர இங்கே எல்லா வாய்ப்புகளும் இருப்பதாக ஆதவன் வருத்தப் படுகிறார்.

இவற்றுக்கெல்லாம் காரண மாக நான் நினைக்கிறது மனு, மனு என் எதிரி, நான் ஒரு மனு விரோதன், என் விமர்சனத்திற் கும், கண்டனத்திற்கும் உரியவர் கள் அவர்கள்தான் என அறுதி யிட்டுச் சொல்கிறார். விண்ணை யும், மண்ணையும் இணைக்கிற அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டதாக பீற்றிக்கொண்டாலும் ஊரும், சேரியும் பிரிந்தே கிடப் பதற்கு மனுதானே காரணம் எனத் தெளிந்து பேசுகிறார்.

3 விழுக்காடு கூட இல்லாத பார்ப்பனர்கள் எப்படி இந்தி யாவை தவறாக வழி நடத்த முடியும் என்கிறார்கள் சிலர்? 30 கோடி இந்தியர்களை அடக்க 30 கோடி வெள்ளையனா வந்தான்? என வினா கேட்டவர்களின் விலா எலும்பை உடைக்கிறார்.

எப்படி ஒரு பெண்ணின் துயரத்தை ஆணால் உணர முடியாதோ, அதேபோல தீண்டா மைக் கொடுமையை அனுபவிக் காதவர்களால் எழுத முடியாது. கோபி செட்டிப்பாளையத்தில் நகராட்சித் தலைவராக இருந் தவர் இலட்சுமண அய்யர். இவர் தான் இந்தியாவில், கையால் மலம் அள்ளும் முறையை, முதன் முதலில் கோபி நகராட்சியில் ஒழித்தவர். இதற்குக் காரணம் கேட்ட போது, சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற போது, அங்கே மலம் அள்ள நேர்ந்தது. அதனால்தான் அம்முறையை ஒழித்தேன் என்றாராம்.

ஆக அவமானத்தைச் சந்திக்க முடியாதவரால் எதையும் உணர முடியாது. அனுமானம் வேறு; அனுபவம் வேறு! இரண்டும் ஒன்றல்ல எனத் தெளிவாய் பாடம் எடுக்கிறார் கவிஞர் ஆதவன். பேச்சுத் தமிழே, இந்நூலின் வாசிப்புத் தமிழாக உள்ளது. அதனால்தான் என்னமோ மொழி யின் ஊடாக ஏராளமான கற்கள். அதனைத் தவிர்த்திருக்கலாம். அவசியம் வாங்கிப் படியுங்கள்.

(பூபாளம் புத்தகப் பண்ணை, 2027/ 6 வடக்கு ராஜவீதி, புதுக் கோட்டை – 622 001)

– கியூபா

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Reservations: Supreme Court upholds 27 per cent quota for OBCs – In pursuit of inclusive education

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பின்படி 64 மத்திய அரசின் உயர்கல்வி நிலையங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படவிருக்கிறது.

  1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
  2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்
  3. தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் (20)
  4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு,
  5. இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (சுரங்கங்கள்)
  6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி மற்றும் ஆராய்ச்சி
  7. ஸ்கூல் ஆஃப் பிளானிங் மற்றும் ஆர்கிடெக்சர்
  8. அய்.அய்.அய்.டி.,கள்

முதலிய பல்வேறு நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.
சென்ற ஆண்டு இந்த நிலையங்களில் 1,24,377 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இடைக்காலத் தடை இல்லாமல் இருந்திருந்தால், பிற்படுத்தப்பட்டவர்கள் 33,581 பேர்கள் சேர்ந்து படித்துக் கொண்டிருக்க முடியும். இதே எண்ணிக்கை மாணவர்கள் இந்த ஆண்டு படிக்கக் கூடிய வாய்ப்பு இந்தத் தீர்ப்பினால் கிடைத்துள்ளது.


இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி
அய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும்

27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அய்.அய்..டி., அய்.அய்.எம். உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை அய்அய்..டி.யில் மட்டும் 150 பேர் சேரலாம். மண்டல் கமிஷன் பரிந் துரைப்படி மத்திய அரசு பணியிலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு பணியில் இந்த 27 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், அய்.அய்.டி., அய்.அய்..எம். உள் ளிட்ட உயர்கல்வி நிறுவனங் களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இதை அமல்படுத்து வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றம் ஏராளமான வழக் குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு 27 சதவீத இடஒதுக் கீட்டை அமல்படுத்த உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகை யில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் இந்த கல்வி ஆண்டில் 27 சதவீத ஒதுக் கீட்டை நடைமுறைப்படுத்தும் சூழநிலை உருவாகி இருக் கிறது.

இந்தியாவில் சென்னை, மும்பை, டில்லி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, கவுஹாத்தி ஆகிய 7 இடங்களில் அய்அய்.டி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.டெக். படிப் பில் சுமார் 4,000 இடங்கள் உள்ளன. ஜெ.இ.இ. என்று அழைக்கப்படும் சிறப்பு நுழை வுத்தேர்வு மூலம் ஐ.ஐ.டி.க்கு மாணவர்கள் சேர்க்கப்படு கிறார்கள்.

அய்.அய்..யைப் போல இந்தியாவில் அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, கோழிக்கோடு, இந்தூர், லக்னோ ஆகிய 6 இடங்களில் ஐ.ஐ.எம். மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி களில் 1,500 எம்.பி.ஏ. இடங்கள் இருக்கின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை கேட் என்ற பொது நுழைவுத்தேர்வு அடிப் படையில் நடைபெறுகிறது.

27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன் றத்தை அடுத்து அய்அய்.டி., அய்.அய்..களில் பிற்படுத்தப் பட வகுப்பினருக்கு சுமார் 1500 சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அய்.அய்..டி கல்வி நிறுவனங்களில் 1080 இடங் களும், அய்.அய்.எம்.களில் 405 இடங்களும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு கிடைக்கும். சென்னை அய்.அய்.டி.யில் மொத்தம் 550 சீட்டுகள் உள் ளன. எனவே, இங்கு மட்டும் 150 ஓ.பி.சி. மாணவர்கள் சேர முடியும்.

அய்.அய்.டி. கல்வி நிறுவனங்களிலும், பெங்க ளூரில் உள்ள அய்.அய்.எஸ்சி. (இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்) எம்.எஸ்சி., எம்.டெக். உள்ளிட்ட முதுநிலை படிப்பு களும் வழங்கப்படுகின்றன. இவற்றிலும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்.

அய்.அய்.டி.,யில் ஆதி திராவிடர்களுக்கு 15 சதவீத மும், பழங்குடியினருக்கு 7 சதவீதமும், உடல் ஊனமுற் றோருக்கு 3 சதவீத இடஒதுக் கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலிருந்து பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக் கும் இடஒதுக்கீடு வழங்குவ தால் இந்த வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அய்.அய்.டி. கல்வி நிறுவனங்களில் சேருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

What is in a Name? – Everything is symbolic: EVR Periyar, Icons, Chennai Landmarks

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

கலைஞரின் ஈரோட்டுக் கண்ணாடி!

தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசும்போது, பண்பாட்டு ரீதியான ஒரு பிரச் சினையை எடுத்து அலசியுள்ளார்.

சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலத்தின் பெயரை ஜெமினி மேம்பாலம் என்று எழுதுவதும், தியாகராயர் நகரை தி.நகர் என்று எழுதுவது குறித்தும் முக்கியமானதொரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

பெயர்தானே – அதில் என்ன இருக்கிறது – முதலமைச்ச ருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று சில மே(ல்) தாவிகள் சொல்லக்கூடும். இது ஒன்றும் சின்ன பிரச்சினை யல்ல – இதில் ஒரு திராவிட – ஆரியப் போராட்டமே அழுத்த மாக இருக்கிறது.
அண்ணாசாலை என்றும், அண்ணா மேம்பாலம் என்றும் அரசு அறிவித்து எத்தனை ஆண்டுகள் ஆயின?

இதற்குப் பிறகும் மறைந்துபோன ஜெமினி மேம்பாலத்தை மறக்காமல் மனதில் வைத்துக் கொண்டு அதனைக் குறிப்பிடுகிறார்கள் என்றால், இது ஏதோ எதேச்சையாக நடப்பதல்ல – திராவிட இயக்கச் சிந்தனையாளரான – தந்தை பெரியார்தம் மாணாக்கரான – ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக

சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது;
சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் வழங்கியது

போன்ற ஆரிய மறுப்புகளைச் சட்ட ரீதியாகச் செய்தவரான அண்ணாமீது கொண்ட காழ்ப்பு உணர்வு இதற்குள் பதுங்கியிருப்பது என்பதாலேயே மான மிகு கலைஞர் அவர்கள் இதனைச் சுட்டிக்காட்ட நேர்ந்தது.

திராவிட இயக்கத் தோற்றுநர்களுள் மிகவும் முன்னோடி யான பிட்டி தியாகராயர் பெயரால் அமைந்த பகுதியை தி.நகர் என்று குறிப்பிடுவது குறித்தும் மானமிகு கலைஞர் கூறத் தவறவில்லை – பெயர் நீளமாக இருக்கிறது என் பதற்காக பேருந்துகளில் அவ்வாறு எழுத நேர்ந்தது என்பது சம்பந்தப்பட்டவர்களின் சமாதானமானால், திருவல்லிக் கேணியை தி.கேணி என்று எழுதுவதில்லையே – ஏன்? என்ற கலைஞர் அவர்களின் அறிவார்ந்த கேள்விக்குப் பதில் என்ன?

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், மவுண்ட் ரோடு – அண்ணா சாலையானதும், பூந்தமல்லி நெடுஞ் சாலை – பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை ஆனதும் 35 ஆண்டுகளுக்கு மேலாகும். இன்னும்கூட விளம்பரப் பலகைகளில் மவுண்ட் ரோடு என்றும், பூந்தமல்லி நெடுஞ்சாலை என்றும் குறிப்பிடுகின்றனர் என்றால், இதன் பின்னணியில் இருக்கும் உணர்வுக்குப் பெயர் என்ன?

இதனை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் அறிவிப்பைக் கொடுத்த நேரத்தில், (14.8.1996) சென்னைப் பெருநகரக் காவல்துறையால் விரைவில் சரி செய்யப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்னும் மவுண்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலைகள் இருக்கத்தான் செய்கின்றன. மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் இந்த நிலை தொடரலாமா? தொழிலாளர் துறை அல்லது விற்பனை வரித்துறையிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தால் 24 மணிநேரத்தில் மாற்றப்பட்டு விடுமே!

அதேபோல, சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக விளங்கிய ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார் பெயரில் விளங்கும் பகுதி பாண்டிபஜார் என்று அழைக்கப்பட்டு, மக்கள் மத்தியிலும் நிலை நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கும் முடிவு கட்டப்பட்டு சவுந்தரபாண்டியனார் அங்காடி அல்லது கடைவீதி என்று எல்லோர் கண்களிலும் படும் வண்ணம் பெரிய பெரிய விளம்பரப் பலகைகளைப் பொருத்தவேண்டு மாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

கலைஞர் கருணாநிதி நகரை கே.கே. நகர் என்று குறிப்பிடுவதும், இந்தப் பட்டியலில் சேரும்.

அண்ணா சாலையில் உள்ள பார்ப்பன ஏடுகள் அந்தப் பெயரைப் போட மனமில்லாமல், சென்னை-2 என்று போட்ட நிலையும் உண்டு.
தமிழ், தமிழர்கள், திராவிட இயக்கம், அதன் தலைவர் கள் மீது ஆரியத்திற்கு இருக்கும் ஆத்திரமும், வெறுப்பும், வஞ்சக வண்ணமும் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்ப்பவர்களுக்கே துல்லியமாக விளங்கும்.

இந்த நிலையில், மானமிகு கலைஞர் அவர்களுக்குப் புரியாமல் போகுமா?

Posted in DMK, Govt, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »