Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Food’

Human trafficking case: Food chain Saravana Bhawan owner held over US visa fraud: City hotelier faked papers for visas

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2008

உள்ளூர் பரபரப்புச் செய்திகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்த ஹோட்டல் சரவண பவன், இப்போது உலகப் பரபரப்புக்கு அச்சாரம் போட்டிருக்கிறது!

சரவணபவன் அதிபர் அண்ணாச்சிராஜகோபாலின் மூத்த மகன் சிவகுமாரை ‘போலி தஸ்தாவேஜுகளைத் தயார் செய்து அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்ப முயன்றார்!’ என்ற குற்றத்துக்காக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத் திருக்கிறார்கள். இவருடன் ஹோட்டல் ஊழியர் ராமு என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிவகுமார் பற்றி புகார் கொடுத்தது, சென்னையி லுள்ள அமெரிக்க துணை தூதரகம். சிவகுமாரைப் பற்றி விசாரிக்கப் போனால்… அவர் ஏகப்பட்ட சாகசங்களுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பேசப் போன சமையல்காரர்!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற விருக்கும் உணவுப்பொருள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சரவணபவன் ஹோட்டல்களில் இருக்கும் சில

சமையல்காரர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார் சிவகுமார். அதன்படி மயிலாப்பூர் கிளையில் வேலைபார்க்கும் ராமு என்பவருக்கு விசா அப்ளை செய்யப்பட்டது. விசா தொடர்பான நேர்காணலுக்கு ராமு சென்றபோது தான் குளறுபடிகள் ஆரம்பமாயின. சரவணபவன் நிறுவனத்தில் உயர்பொறுப்பில் ராமு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நேர்காணலுக்குப் பின்னர், ராமு சாதாரண சமையல்காரர் என்பதும், அவர் தெரிவித்த மற்ற தகவல்கள் பொய் என்பதும் உறுதியானது. இதே போல் சுப்பிரமணியன், சேகர், ஆசைத்தம்பி ஆகியோரின் விசாக்களும் இதே காரணங் களுக்காக நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த முறை சிவகுமார் நேரடியாகவே தூதரகத்துக்குச் சென்று, ஏன் விசா மறுக்கப்பட்டது என்று கேட்டார். தூதரக அதிகாரிகளுக்கும் அவருக்குமான உரையாடலின் ஒரு கட்டத்தில், ‘சமையல்காரன் அமெரிக்க நாடாளு மன்றத்திலா பேசப் போகிறான்?’ என்று கேட்க, அதை அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். சிவகுமார் பேசியது முழுவதும் டேப்பிலும் பதிவு செய்யப்பட்டது. இதையெல்லாம் வைத்து ஒரு ரிப்போர்ட் தயார் செய்து, அமெரிக்க தூதரகத்தின் உதவி பாதுகாப்பு அதிகாரி அந்தோணி ராமிரேஷ் போலீஸில் புகார் கொடுத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீஸார், சிவகுமாரை முதலில் தங்கள் வலைக்குள் கொண்டு வந்தார்கள்.

‘ராமு கொடுத்த விசா விவரங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர், அமெரிக்கா செல்வதற்குத் தகுதி யானவர் என்று மட்டும்தான் நான் என் நிர்வாகத் தரப்பில் சொன்னேன்’ என்று விசாரணையில் சொன்னார். உடனடியாக, சரவணபவன் தரப்பே ராமுவை போலீஸார் வசம் ஒப்படைத்தது. ‘எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான்!’ என்று ராமு சொல்லியிருந்தால், சிவகுமாரை போலீஸார் விசாரணையோடு விட்டிருப் பார்கள். ஆனால், ராமுவின் வாக்குமூலம் வேறு மாதிரியாக இருந்ததால்தான் சிவகுமார் மீது மோசடி, போலி தஸ்தாவே ஜுகளைத் தயாரித்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியது போலீஸ் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

பேரம் வேண்டாம், ஓரங்கட்டு!

சனிக்கிழமை (8.11.08) மாலையில் சிவகுமாரை போலீஸார் அழைத்துச் சென்றவுடன், அவரை மீட்க அதிகார உச்சத்தில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் போனார் கள் சரவணபவன் தரப்பினர். ஒரு பெரும் தொகையைக் கேட்ட அந்தப் பெண்மணி, ‘வழக்கெல்லாம் போட்டிருக்க மாட்டார்கள். விசாரணைதான் நடந்து கொண்டிருக்கும், கவலை வேண்டாம்!’ என்று சொல்லியிருக் கிறார். ‘பெரிசில் அரை’ கேட்ட தாகவும் கூறப்படுகிறது. ‘பேரம் வேண்டாம். கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வர… அவர்கள் திரும்பி விட்டார்கள். ‘சிவகுமாரை சிக்கவைக்க ஹோட்டல் நிர்வாகத்தில் இருக்கும் சிலரே அண்ணாச்சிக்குத் தவறான ஐடியாக்களைத் தருகிறார்கள்’ என்று இதையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிளாக்மெயில் பதவி!

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சிறையிலிருந்த அண்ணாச்சி, சிகிச்சைக்காக சென்னையின் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க சிவகுமார் சென்றார். அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் அந்த வழக்கு குறித்தும், ஹோட்டல் நிர்வாகம் குறித்தும் காரசார விவாதம் வெடித்தது. மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த சிவகுமார், ‘என் அப்பா என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்’ என்று போலீஸி டம் புகார் கொடுத்து, அப்பாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சொந்தங்களும், ஹோட்டல் நிர்வாகிகளும் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த, ‘ஹோட்டல் நிர்வாகத்தில் பெரிய பொறுப்பு கொடுத் தால் சமரசத்துக்குத் தயார்’ என்று சிவகுமார் தரப்பு சொன்னது. அப்போதுதான் வெளிநாடுகளில் இருக்கும் சரவண பவன் கிளைகளின் நிர்வாகப் பொறுப்பு சிவகுமாரின் கைக்கு வந்தது.

பாம்புப் பழிவாங்கல்!

சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்த சிவகுமார், அப்பா ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சிக்கியவுடன் முழு மூச்சாக நிர்வாகத்தைப் பார்க்க ஆரம்பித்தார். முதல்கட்டமாக ஹோட்டலின் ஸ்வீட், கார வகைகளின் டேஸ்ட்டை மாற்ற நினைத்தவர், ஏற்கெனவே ஸ்வீட் போட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக் குடைச் சல் கொடுக்க ஆரம்பித்தார். ‘எந்த டேஸ்ட்ல வேணும்னு நீங்க நினைக்கிறீங்களோ, அந்த டேஸ்ட்ல ஸ்வீட்டைப் போட்டுக் காட்டுங்க. அதைப் பார்த்து நாங்க போடுறோம்’ என்று ஒட்டுமொத்த ஊழியர் களும் சொல்லத் தொடங்கினர். இவர்களை இயக்குவது குறிப்பிட்ட ஒரு ஊழியர்தான் என்று நினைத்த சிவகுமார், அந்த ஊழியர் வீட்டுக்குள் இரண்டு விஷப் பாம்புகளை விட்டார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பிரச்னையாக… விஷயம் போலீஸ் வரை போனது. ஒரு வழியாக பாம்பாட்டியை கூட்டிவந்து போலீஸ் விசாரிக்க, அவர் சிவகுமாரை கைகாட்டிவிட்டார். பிறகு தன்னுடைய ஊழியரை சமாதானப்படுத்தி, அந்த வழக்கிலிருந்து வெளியில் வந்தார் சிவகுமார்.

சமரச பாலிசி!

எந்த விஷயத்திலும் சிவகுமார், தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டார். அந்த முடிவு களில் பெரும் சிக்கல்கள் வரும்போது, ரொம்பவும் சாமர்த்தியமாக எதிர்த்தரப்பை சமரசம் செய்வதில் அவர் கில்லாடி. வெளிநாட்டு உணவகங்களில் டிப்ஸ் முறை சற்று வித்தியாசமாக இருக்கும். நம்மூரில் உணவு பரிமாறும் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுப் போம். ஆனால், வெளிநாட்டு உணவகங்களில் அந்த டிப்ஸ், சர்வர் முதல் அடுப்படியில் இருக்கும் ஊழியர்வரை போய்ச் சேர்கிற மாதிரியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு உணவகத்திலும் ஒரு பெட்டி இருக்கும். அதில் விருப்பப்பட்டவர்கள் தங்கள் டிப்ஸைப் போடலாம். இரவானதும் அதை உணவக ஊழியர்கள் பிரித்து எடுத்துக் கொள்வார்கள். இப்படித்தான் சிங்கப்பூர் சரவணபவன் கிளையிலும் நடந்து வந்தது. ஆனால், சிவகுமார் பொறுப்பேற்ற பிறகு, டிப்ஸ் பெட்டியைத் தன் வசப்படுத்திக் கொண்டார். அது நிர்வாகத்துக்கே சொந்தம்என்று சொல்லத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் சிவகுமாரை ஏக வசனத்தில் பேச, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அது அந்த ஊர் போலீஸ் வரை போக, விவகாரம் சீரியஸானது. பிறகு அந்த ஊழியரின் குடும்பத்தினரிடம் பேசி, கணிசமான தொகை கொடுத்து ஏகப்பட்ட சலுகைகளையும் கொடுத்து சமாதானப்படுத்தினார்சிவகுமார்.

துபாய் துரத்தல்!

அசோக் நகர் சரவணபவன் கிளையை கவனித்து வரும் அதிகாரி ஒருவரின் உறவினர் துபாய் கிளைக்கு சமையல்காரராகப் பணியாற்றப் போனார். சொன்ன சம்பளத்தைக் கொடுக்கவில்லை என்று முதலில் புகார் கிளப்பிய சமையல்காரர், அடுத்து பதினாறு மணி நேர வேலைப் பளுவையும் சுட்டிக்காட்ட… சிவகுமார் களத்தில் இறங்கினார். உரிமை கேட்ட ஊழியர் நன்றாக ‘கவனிக்க’ப்பட, அது அடுத்த சில மணி நேரங் களில் போலீஸ§க்குப் புகாராகப் போனது. சிவகுமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட, கணிசமான தொகையை அந்த ஊழிய ருக்கு சன்மானமாகக் கொடுத்து வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. அந்த ஊழியரும் தொகையோடு சென்னை கிளம்பினார். அவர் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கிய வுடன், ஒரு கும்பல் அவரிடமிருந்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு போனது. அந்த கும்பலை யார் அனுப்பி வைத்தது என்பதற்கு இதுவரை பதில் இல்லை!

திருஷ்டி பூஜை!

தன் இரண்டாவது மனைவி கிருத்திகாவுக்காக 1997-ல் அசோக் நகரில் ஒரு பங்களா கட்டினார் அண்ணாச்சி. அண்மையில் அண்ணாச்சியை விட்டு கிருத்திகா பிரிந்து போனவுடன், அசோக் நகர் வீடு மாற்றியமைக்கப்பட்டு, துளசி மாடம் இருந்த இடத்தில் ஒரு நீச்சல் குளம் கட்டப்பட்டது. மனது சரியில்லாத நேரங் களில் அண்ணாச்சி அந்த நீச்சல் குளத்தோரம் அமர்ந் திருப்பது சகஜம். சமீபத்தில் ஒரு நாள் நீச்சல் குளம் அருகில் அண்ணாச்சி நடந்து வந்தபோது, கால் வழுக்கி விழுந்து எலும்பு முறிந்து விட்டது. ‘ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது, இனியும் ஏதாவது நடக்காமல் இருக்க திருஷ்டி பூஜை செய்ய’ முடிவு செய்தார் அண்ணாச்சி. அதன்படி, அசோக் நகர் வீட்டில் திருஷ்டி பூஜை அமர்க்களப்பட்டது. அன்று மாலைதான் சிவகுமார் கைது செய்யப்பட்டார்.

என்ன பதில் சொல்ல?

சிவகுமார் தவறு செய்திருக்கிறாரா அல்லது அவரை சதிவலையில் சிக்க வைத்து விட்டார்களா? இந்தக் கேள்வியோடு அண்ணாச்சியிடம் பேசமுயன்றோம்.

”அவரு யாரு கூடவும் பேசுற மூடுல இல்ல. நீங்க மனு போட்டு புழல் சிறைக்குப் போய் சிவகுமார்கிட்டத்தான் கேட்கணும். அண்ணாச்சியைப் பொறுத்த வரைக்கும் தொழில் தர்மம் மீறாம, சட்டத்துக்கு உட்பட்டு நிர்வாகத்தை நடத்திக்கிட்டிருக்கார். இந்த விஷயத்தை சட்டரீதியா எதிர்கொள்வார்!” என்றார்கள்.

சீனியர் அமைச்சர்கள் இருவர் ஓட்டல் விவகாரங்களில் மறைமுக பங்கு கொண்டிருந்ததாகவும், அவர்களுடன் ஏற்பட்ட சமீபத்து மனக்கசப்புதான் புதிய – பழைய விவகாரங்களைக் கிளறி யெடுத்து அண்ணாச்சி தரப்புக்கு குடைச்சலாக மாறிவருவதாகவும்கூட ஓட்டல் வட்டாரங்கள் சொல்லத் துவங்கியுள்ளன.

சரக்கு மாஸ்டர்களுக்கு மவுசு ஜாஸ்தி!

அமெரிக்காவில் மட்டும் சுமார் பத்தாயிரம்இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல் முதல் திருப்பதி பீமாஸ், வசந்தபவன், உட்லாண்ட்ஸ், ஹாட்பிரெட்ஸ் என இந்தப் பட்டியல் நீளமானது. இவற்றின் பிரதான கஸ்டமர்கள் அமெரிக்கர்களே. இந்திய உணவு என்றால், அவர்களுக்கும் கொள்ளைப் பிரியம்! ஆனால், இத்தனை உணவு விடுதிகளிலும் சமையல் செய்ய ஆட்கள் தமிழகத்திலிருந்துதான் வர வேண்டும். அமெரிக்க அரசு பல வருடங்களுக்கு முன்பு H1B(Employment visa) என்னும் விசாவை தாராளமாகக் கொடுத்து வந்தது. இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டதால், இந்திய உணவு விடுதிகளுக்கு சமையல்காரர்கள் பற்றாக்குறை. சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தில் அமெரிக்காவின் அனைத்து இந்திய உணவு விடுதிகளின் பட்டியல், யார் அதன் அமெரிக்க பார்ட்னர் போன்ற விவரங் கள் கம்ப்யூட்டரில் பதிவாகியிருக்கிறது. ஹோட்டல் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு, பல கடுமையான சட்டதிட்டங்களையும் இது வைத்திருக்கிறது.

அமெரிக்க சட்டப்படி, டூரிஸ்ட் ஆக வருகிறவர்கள் வேலை செய்யக்கூடாது. ஆனால், சில உணவு விடுதிகள், விசா காலா வதியானவர்களை வேலைக்கு வைத்திருப்பது தொடர்ந்து நடக்கிறது. இதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு, வேலை விசா இன்றி பணியில் அமர்த்தும் முதலாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவந்தது.

இவற்றையெல்லாம் மீறி கனடா விசா எடுத்து, இந்தியாவிலி ருந்து கனடாவுக்குச் சென்று அங்கிருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைகிறவர்களும் உண்டு. திறமையான சரக்கு மாஸ்டர் இல்லாமல் மெக்ஸிகன் மற்றும் அரபு நாட்டி னரை தோசை, இட்லி போடக் கற்றுக்கொடுத்து வியாபார சமாளிப்பு நடத்துபவர்களும் உண்டு.

மொத்தத்தில், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள் ரேஞ்சுக்கு சரக்கு மாஸ்டர்களுக்கும் மவுசு அதிகம். சரக்கு மாஸ்டர் பிரச்னையால் அவதிப்பட்ட ஹோட்டல்களில் அண்ணாச்சியின் சரவணபவனும் அடக்கம். இதனால், அட்லாண்டா நகரில் உள்ள ஒரு இந்திய வக்கீல் பேச்சைக் கேட்டு சரவணபவன் ராஜகோபாலின் மகன் சிவகுமார், சரக்கு மாஸ்டர்களை வேலைக்கான விசா இல்லாமல் கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குக் கடத்திவரும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு முறை சென்னையின் அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் எச்சரித்தும், ‘சிகாகோவில் உணவுத் திருவிழா வுக்குப் போகிறேன்… தமிழ்ச்சங்க விழாவில் தமிழக உணவு சப்ளை செய்யப்போகிறேன்’ என்றெல்லாம் அவர் மனு போடுவாராம். இதன் உள்திட்டம் பற்றி அமெரிக்க அதிகாரி களுக்கும் ஐயப்பாடு இருக்கவே செய்ததாம்.

இதற்கிடையே, துபாயில் உள்ள மிகப் பிரபலமான ஒரு நிறுவனம், சரவணபவனுடன் சர்வதேச அளவில் கூட்டணி போட்டது. சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு ‘விசா’ எடுத்து அனுப்ப முடியாதவர்களை துபாய், சிங்கப்பூர் வழியாகக் கள்ளத்தனமாக அனுப்பினார்கள். இதையும் அமெரிக்க அரசு கவனிக்கத் தவறவில்லை.

ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு விமான நிறுவனத்தின் பணிப்பெண் ஊழியர்களாக சுமார் 50 பேர் அமெரிக்க விசா வில் வந்து, உடனடியாக அந்த வேலையை விட்டுவிட்டு சரவணபவனில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அதில் பலருக்கு வேலைக்கான விசாவில் சிக்கல் உண்டாகவே, திரும்பிச் சென்றுவிட்டனர். பலர் அகதிகளாக இன்னமும் அமெரிக்காவில் பல பிரச்னைகளுக்கு நடுவே பிழைப்பு நடத்துகின்றனர்.

– நியூயார்க்கிலிருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி
– எஸ்.சரவணகுமார்
படங்கள்: கே.கார்த்திகேயன்

Posted in India, Law, Order, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

Gaza shut to fuel and journalists: Middle East: Gaza food aid to be cut unless key supplies allowed in says UN

Posted by Snapjudge மேல் நவம்பர் 12, 2008


காஸாப் பகுதியில் மீண்டும் சண்டை

காஸாப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர்.
காஸாப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர்.

மத்திய கிழக்கின் காசாப் பகுதியில், பாலத்தீன இஸ்லாமியவாத ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலியத் துருப்புக்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் ஹமாஸ் குழுவைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலுடனான எல்லையில் வெடி மருந்துகளை வைக்க இவர்கள் முயன்றார்கள் என்று இஸ்ரேல் கூறுகிறது. காசாப் பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன்னரே இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

ஆனாலும் இங்கு பதற்ற நிலை இன்னமும் நிலவுகிறது என்று எமது செய்தியளார் கூறுகிறார்.



‘காசா மீதான தடை வெட்கத்துக்குரிய செயல்’- ஐ.நா அலுவலர்கள்

இஸ்ரேலினால் காசா நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடை நடவடிக்கைகளை, வெட்கத்துக்குரிய செயல் என்று அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிதாக உணவுப் பொருட்கள் வருவதை இஸ்ரேல் அனுமதிக்காவிட்டால், ஐ.நாவின் உணவு விநியோக இடங்களில் இன்னும் இரு தினங்களில் உணவுப் பொருட்கள் தீர்ந்து போகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு வரா காலமாக காசா நிலப்பரப்புக்குள் உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து வகைப் பொருட்களின் போக்குவரத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால் காசா பகுதியில் உள்ள ஒரே மின் உற்பத்தி நிலையமும் திங்கட்கிழமை இரவில் இருந்து இயங்கவில்லை.

தற்போது குறைந்த அளவிலான எரிபொருட்கள் காசா பகுதிக்குள் கொண்டு செல்லப்படுவதை இஸ்ரேல் அனுமதித்துள்ளது. ஆனால் உணவுப் பொருட்களை அங்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

Self-Sustaining Life Form Found in Deep Recesses of the Earth: Goldmine Bug DNA May Be Key to Alien Life: One-Organism Ecosystem Discovered in South Africa: Planet’s loneliest bug revealed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 12, 2008


தென்னாப்ப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் புதிய நுண்ணுயிர் கண்டுபிடிப்பு

தென்னாபிரிக்காவில் தங்கச் சுரங்கங்களில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரியா ஒன்று, ஏனைய கோள்களில் காணப்படும் உயிரினங்கள் எவ்வாறு அங்குள்ள கடுமையான சுற்றாடலைத் தாக்குப்பிடித்து வாழுகின்றன என்பதற்கான துப்பை கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

‘டெசுல்போருட்யிட்ஸ் ஔடக்வியேட்டர்’ என்னும் இந்த உயிரினம் பிராணவாயு இல்லாமலேயே உயிர் வாழும் என்பதுடன், அது வாழும் இடத்தில் காணப்படுகின்ற ஒரே உயிரினம் இது மாத்திரமே – அதாவது – உயிர் வாழ்வதற்கு வேறு எந்த உயிரினத்தையும் இது சார்ந்திருக்கவில்லை.

ஒளியே இல்லாத இடத்தில் உயிர் வாழ்வதுடன், ஒரு உயிரி தானாகவே இனப்பெருக்கமும் செய்துகொள்கிறது.

கார்பன், நைட்ரஜன் போன்றவை மாத்திரமே இது உயிர் வாழ்வதற்கு தேவையானவையாகும்.

சக்திக்காக இது சூரியனில் சார்ந்திராமல் நீர், ஹைட்ரஜன் மற்றும் சல்பேட் ஆகியவற்றையே நம்பியிருக்கிறது.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Baby Formula – 4 dead, 6200 sick: China Milk Scandal Shows Ties Between Companies, City Officials: Singapore suspends China milk imports; deadly chemical found in yoghurt

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2008


பாலில் நஞ்சு கலக்க காரணமான வலையமைப்பு கலைக்கப்பட்டதாக சீனா கூறுகிறது

சீனப்பாலை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை தடை செய்யவோ அல்லது திருப்பியழைக்கவோ மேலும் மேலும் நாடுகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த இரசாயனத் தொற்று ஏற்பட காரணமாக இருந்த வலையமைப்பை கலைத்து விட்டதாக சீனா கூறுகிறது.

திருட்டுத்தனமாக நடத்தப்பட்ட ஆலைகள் மற்றும் பால் பண்ணைகளில் நடத்தப்பட்ட சோதனைகளையடுத்து இருபத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பாலில் மெலமைன் என்னும் இரசாயனத்தை சேர்த்தார்கள் அல்லது அதை பாலில் சேர்க்க உதவினார்கள் என்ற காரணத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் இரசாயனக் கலப்பு காரணமாக அங்கு பல ஆயிரம் குழந்தைகள் நச்சுத்தன்மைக்கு உள்ளாகி நோயுற்றன. நான்கு குழந்தைகள் இறக்கவும் நேரிட்டது.

இதனிடையே தங்களது குழந்தைகள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வழக்குகளை தொடுத்திருக்கும் குடும்பங்கள் வழக்கை கைவிடுமாறு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


சீனப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்படும் – சீன பிரதமர்

சீன குழந்தை
பால்மா கலப்படத்தால் குழந்தைகள் பாதிப்பு

சீனாவில் பால்மாவில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, சீனப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதி செய்ய சீன பிரதமர் வென் ஜியாபோ உறுதியளித்துள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு தங்கள் அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் பால்மா கலப்பட விஷயத்தில் தலைநகர் பீஜிங்கில் புதியதாக 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக சீன செய்திகள் கூறுகின்றன.

மேலும் ஷாங்காய் நகரத்தில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்து சதவிதத்தினர் சிறுநீரகங்களில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளை காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இது வரையில் நான்கு குழந்தைகள் பலியாகியுள்ளனர், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் பால்மாவில் ஏற்பட்ட ரசாயனக் கலப்பால் பல ஆயிரம் குழந்தைகளுக்கு பாதிப்பு

பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை
பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை

சீனாவில் இரசாயனக் கலப்பு கொண்ட பால்மாவை உட்கொண்ட காரணத்தினால் ஆறாயிரம் குழந்தைகள் நோய்வாய்பட்டுள்ளனர் என அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக இதுவரை மூன்று குழந்தைகள் மரணமடைந்துள்ளன என்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் சீனாவின் சுகாதார அமைச்சர் சென் ஷூ தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் நூற்றிஐம்பதுக்கும் அதிகமானவர்களின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஊழல் தொடர்பான விவகாரம் பரவிவரும் நிலையில், சீனாவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பானது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இராசயனமான மெலமைன், மேலும் இருபத்து இரண்டு வெவ்வேறு வர்த்தகப் பெயர்களையுடைய பால்மாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரசாயனப் பொருள் பால்மாவில் கலந்திருப்பதாக அறியப்படவில்லை. பாலில் புரதச்சத்து கூடுதலாக இருப்பதற்காக மெலமைன் கலக்கப்பட்டதாக எண்ணப்படுகிறது.

இதையடுத்து தேசிய அளவில் அனைத்து பால் உணவுப் பொருட்களும் பரிசோதிக்கப்பட வேண்டும் என சீனா உத்தரவிட்டுள்ளது.



சீன பால் உற்பொருட்களுக்கு சிங்கப்பூர் இறக்குமதி தடை

இரசாயனக் கலப்படம் நிறைந்த பால் மாவு

சீனாவிலிருந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் சிங்கப்பூர் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சில சீன பால் உற்பத்திப் பொருட்களில் தொழிற்சாலை இரசாயனமான மலெமைன் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவில் பாலிலும் பால் மாவிலும் இந்த இரசாயனக் கலப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடைகளிலிருந்து பால் உற்பத்திப் பொருட்கள் பலவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டு அவை அகற்றப்பட்டுவருகின்றன.

சீனாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை கடந்த சில நாட்களில் எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் கிட்டத்தட்ட பத்து சதவீத மாதிரிகளில் மெலமைன் கலந்திருக்கிறது என சீன அரசாங்கத்தின் தரக் கண்காணிப்பு நிறுவனம் கூறுகிறது.

இதனிடையே, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவு வகைகளை பரிசோதனை செய்ய இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய வர்த்த நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன, நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அரசு இந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கையினை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Rising malnutrition at the cost of inflation: India suffers epidemic of stunted kids – researchers: Food prices hike increase risk warning in South Asia: UNICEF

Posted by Snapjudge மேல் மே 15, 2008

இந்திய குழந்தைகளின் போஷாக்கின்மை குறித்து ஐநா கவலை

போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று
போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று

இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப்பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறுகிறது.

இந்த நிலையில், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக, மேலும் பட்டினியைச் சந்திக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக, ஐ.நா.வுக்கான குழந்தைகள் நிதியமான யுனிசெஃப்பின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் டேனியல் டூலே தெரிவித்திருக்கிறார்.

அரிசி விலையுயர்வினாலும் பெரும் பாதிப்பு
அரிசி விலையுயர்வினாலும் பெரும் பாதிப்பு

இந்தப் பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டேனியல் டூலே, விலைவாசி உயர்வு பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்தியா உள்பட இந்தப் பிராந்தியத்தில் உள்ள குழந்தைகள் பெரும் அபாயத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக எச்சரித்தார்.

விலைவாசி உயர்வு காரணமாக, இந்தியாவில் மட்டும் சுமார் 18 லட்சம் குழந்தைகள், போஷாக்கின்மையால் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக யுனிசெப் கூறுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், இலவச உணவுத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்து, ஏழைகள் பயன்பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுனிசெப் கூறுகிறது. நீண்டகால கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமானால், வேளாண் துறையில் தற்போது பற்றாக்குறையாக உள்ள முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் யுனிசெப் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

Posted in Economy, Finance, Govt, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Food crisis and blame-game: DMK vs Communist Parties – Protests against price rise

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 23, 2008

வாங்கும் சக்தி உயர்ந்தால் விலைவாசி உயர்வு தெரியாது

சென்னை, ஏப். 17: சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் விலை வாசி உயர்வு சுமையாக இருக்காது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித் தார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் தமிழக சட்டப் பேரவையிலிருந்து வியாழக்கிழமை, வெளிநடப்பு செய்தன.
அதற்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

விலைவாசி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகமானால் அதன் சுமை தெரியாது. ஒரு காலத்தில் பவுன் விலை ரூ. ஆயிரமாக இருந்தது. இன்று ரூ. 10,000 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
சாதாரண மக்களை வாங்கும் சக்தி கொண்டவர்களாக மாற்றிவிட்டால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். தேர்தலில் பயன்படுத்த மட்டும்தான் விலை உயர்வு என்ற பிரச்னை பயன்படும்.
எனவே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் பொருளாதாரக் கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் விலைவாசி உயர்வினால் பெரும் பாதகம் ஏற்படாது எது முக்கியம்?: மதவாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றக் கூடாது. அது தற்போது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். மதவாத சக்தி வளர்ந்தால் பரவாயில்லை. விலைவாசி உயர்வைத் தடுக்காமல் இருந்த காங்கிரûஸ ஆள விடமாட்டோம் என்று கம்யூனிஸ்ட்டுகள் சொல்ல மாட்டார்கள். மதவாத மற்ற, மனித நேயமிக்க ஓர் ஆட்சி வரவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.
மீண்டும் ஒரு அயோத்தி வர வேண்டாம்: மதவாதத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டும். மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராம ரதம், மீண்டும் அத்வானியின் புயல் வேகச் சுற்றுப் பயணம் என்று நாட்டில் ஏற்பட்டால் நாடு காடாகி விடும். அப்படி ஏற்படாமல் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமை நமக்கும் இருக்கிறது.
அந்தக் கருத்துகளின் ஒற்றுமையில் தான் இந்தியா வாழ முடியும். வெல்ல முடியும். அப்படிப்பட்ட ஒற்றுமையை நாம் உருவாக்க வேண்டும்.
வெளிநடப்பு முறையல்ல: மத்திய அரசு தவறு செய்கிறது என்பதற்காக, மாநில அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தது முறையல்ல. வெளிநடப்பு ஜனநாயக முறை என்பதால் அதற்காக நான் வருத்தப்படவில்லை.
ஆளுங்கட்சியான திமுக வெளிநடப்பில் கலந்து கொள்ளக் கூடாது. நாம் அனைவரும் சேர்ந்துதான் ஓர் அணியை உருவாக்கி இருக்கிறோம். மதவாத சக்திகளுக்கு எதிரான இந்த அணியில் பிணி வந்துவிடக் கூடாது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள் ளும் பெரும் பணியை நான் மேற்கொண்டேன். அந்த உண்மையை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அந்த செய்திகள் பத்தி ரிகைகளில் வந்துள்ளன என்றார் முதல்வர் கருணாநிதி

Posted in Economy, Finance, Govt, India, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | 1 Comment »