Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Dalits’

Mayavati factor in Karnataka Assembly elections 2008 – Dalit-Brahmin coalition

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

கன்சிராமைக் கைகழுவுகிறார் மீண்டும்!

மாயாவதி கட்சியின் 20 வேட்பாளர்கள் பார்ப்பனர்கள்

பெங்களூரு, ஏப். 9- வெகுமக்க ளாக இருக்கிற தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டு அவர்களை ஆட்சி அதிகா ரத்தில் பங்கு பெறச் செய்திட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு கன்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான் பகுஜன் சமாஜ் கட்சி என்பது. இந்தக் கட்சியை வட நாட்டில் தொடங்கும்போது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா புலே ஆகிய தலைவர்களின் படங் களை கட்சித் தலைமையகத் தில் சிறப்பாக வைத்துத் தொடங்கியவர் கன்ஷிராம். அவரது கட்சியைச் சேர்ந்த மாயாவதி தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வ ராக இருக்கிறார்.

மறைந்த கன்ஷிராமின் கொள் கைகளுக்கு விரோதமாகப் பார்ப்பனர்களுடன் கூட்டு வைத்துத் தேர்தலில் வெற்றி பெற்று அவர்களை அமைச்சர வையிலும் இடம்பெறச் செய்து கன்ஷிராமின் கொள்கை களைக் கைகழுவிவிட்டார். இந்நிலையில், கருநாடகா மாநிலச் சட்டமன்றத் தேர்தலி லும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. அந்தக் கட்சி வேட்பாளர்களாகப் பார்ப்பனர்களும் நிறுத்தப் படப் போகிறார்களாம்.

எந்தக் கட்சியுடனும் கூட்டு வைக்காமல் தனித்துப் போட் டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி 224 தொகுதிகளிலும் போட்டி போடப் போகிறது. இவற்றில் 20 தொகுதிகளில் பார்ப்ப னர்கள் அக்கட்சியின் வேட் பாளர்களாக நிறுத்தப்படுகி றார்கள். இந்த அளவுக்கு அதிக வேட்பாளர்களை வேறு எந்தக் கட்சியும் நிறுத்தவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள் கிறார் அக்கட்சியின் மாநிலத் தலை வர் முனியப்பா.

கார்வார் பகுதியில் 3 ஆயி ரம் பார்ப்பனர்கள் அக்கட்சி யில் புதிதாகச் சேர்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் தாழ்நிலைக் குப் பார்ப்பன வல்லாண்மை தான் காரணம் என்று உணர்ந்து கட்சி தொடங்கிப் பார்ப்பனர்களை எதிர்த்து வந்தார் கன்ஷிராம். அவரது சீடர் மாயாவதி தம் கட்சியின் கொள்கையைக் குழிதோண் டிப் புதைத்துவிட்டார் என்ப தற்கு இச்செய்தி மேலும் ஒரு எடுத்துக்காட்டாகும்.


மாயாவதி சிலை: திறந்தார் மாயாவதி

மாயாவதி சிலை

இந்தியாவின் வடக்கிலுள்ள உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வரான மாயாவதி குமாரி, தலைநகர் லக்னோவில் இன்று தனது சிலையை தானே திறந்துவைத்துள்ளார்.

இந்து சாதிய அமைப்பில், தலித் மக்களின் மேம்பாட்டுக்காக செயல்படும் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதி, அந்தக் கட்சியை நிறுவிய காலஞ்சென்ற கன்ஷி ராம் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே தமது சிலை நிறுவப்பட்டதாகக் கூறுகிறார்.

தனது சிலை நாட்டின் தலைநகரான புதுடில்லியிலும் நிறுவப்படும் எனவும் மாயாவதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தமக்கு தாமே சிலை வைத்துக் கொள்வது அசாதாரணமான ஒன்று என செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »