நான் ஒரு மநு விரோதன்! – ஓர் பார்வை!
கவிஞர் ஆதவன் தீட்சண்யா வின் நேர்காணல்கள் நூலாக வெளிவந்துள்ளன. அந்நூலின் பெயர் நான் ஒரு மநு விரோதன்.
நேர்காணல்களில் அரிய சில மட்டுமே நூலாக வந்துள்ளன. அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நூலாக இதைக் கருத லாம்.தாழ்த்தப்பட்ட சகோதரனின் உண்மையான வலிகள் குறித்தும், காரணங்கள் குறித்தும் விரிந்து பேசுகிறார். மிகக் கனமான செய்திகளையும், நகைச்சுவையால் மக்களின் உள்ளத்தைத் தொடும் பிரகதீஸ் வரன் இந்நூலின் தொகுப்பாசிரி யராக உள்ளார்.
இந்நூலுக்கு அறிமுகவுரை எழுத வந்த தோழர் நீல கண்டன், மார்க்சியத் தளத்தில் இயங்கி வரும் தோழர் ஆதவன் தீட்சண் யாவிடம் இவ்வளவு கூர்மையை எதிர் பார்க்கவில்லை என்கிறார். அதையே நாமும் வழிமொழிய வேண்டியுள்ளது.
இந்தியச் சமூகம் வர்க்கமாக இருந்ததா இல்லையா? என்ப தற்கு முன்னாடியே அது ஜாதி யாக இருந்திருக்கிறது, அது ஒன்றுதான் எல்லாவற்றையும் வழி நடத்தியது என வர
லாற்றை எடுத்துக் கூறி, வருத் தப்படுகிறார்.
அடுத்தவன் மலத்தை வாரிச் சுமக்கிற அவலத்திலிருந்து, மீளத்துடிக்கும் ஒரு அருந்ததி யனாக ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்கிறார். தான் இந்த ஜாதி எனத் தெரிந்து, தன்னோடு பழகாமல் போய் விடுவார்களோ என்கிற பயமிருக்கே அது மிகவும் கொடுமையானது எனத் தாழ்த்தப் பட்ட சகோதரனின் உணர்வை நம்முன் வைக்கிறார். ஒரு சராசரி மனிதராக இயல்பாக வாழ முயற்சி செய்தாலும், தாம் பிடிபட்டு விடு வோமோ என்கிற அச்சம் அவனுக் குள் இருப்பதைச் சக மனிதனுக்கு எடுத்துக் கூறுகிறார்.
இந்தக் கொடுமைகளுக்குக் காரணம் பார்ப்பனர்களே எனச் சரியான புரிதலோடு முரசொலிக் கிறார். உடல் உழைப்பைக் கேவலப் படுத்தும் பார்ப்பனர்கள் தகுதி, திறமை, அறிவு குறித்துப் பேசு கிறார்கள். அதனால் இச்சமூகத் திற்கு ஏற்பட்ட பயன்தான் என்ன? எனப் பகுத்தறிந்து வினா வீசு கிறார். என்னை ஒடுக்க நினைக் கும் ஒவ்வொருவரையும் நான் மனிதன், நீ யார்? எனக் கேட் பேன் என்கிறார். இப்போது எல்லாம் மாறிவிட்டது என்கிறார்கள் சில போலிகள். இங்கே ஒவ் வொரு தாழ்த்தப்பட்டவனும் கேவலத்தோடு அல்லவா சுமக்க வேண்டியுள்ளது என உள்ளத்திற்குள் ஊடுருவி உண்மையை உணர வைக்கிறார்.
என் பையன் அமெரிக்கா போனாலும் நான் பார்க்கிற பெண்ணையே திருமணம் செய் வான் என்பதும், நான் கழிப்பதை அவன் அள்ளுவான் என்பதும் ஜாதித் திமிர்தானே? ஒரே அலு வலகத்தில் வேலை பார்த்து, ஒரே மேசையில் சாப்பிடுவதாலேயே ஜாதி போய்விடாது. நானெல்லாம் ரொம்ப சோஷியல் சார், ஜாதி யெல்லாம் பார்ப்பதில்லை என் கிறார்கள். ஜாதியைக் கைவிடாம லேயே சமதர்மவாதி யாக உலாவர இங்கே எல்லா வாய்ப்புகளும் இருப்பதாக ஆதவன் வருத்தப் படுகிறார்.
இவற்றுக்கெல்லாம் காரண மாக நான் நினைக்கிறது மனு, மனு என் எதிரி, நான் ஒரு மனு விரோதன், என் விமர்சனத்திற் கும், கண்டனத்திற்கும் உரியவர் கள் அவர்கள்தான் என அறுதி யிட்டுச் சொல்கிறார். விண்ணை யும், மண்ணையும் இணைக்கிற அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டதாக பீற்றிக்கொண்டாலும் ஊரும், சேரியும் பிரிந்தே கிடப் பதற்கு மனுதானே காரணம் எனத் தெளிந்து பேசுகிறார்.
3 விழுக்காடு கூட இல்லாத பார்ப்பனர்கள் எப்படி இந்தி யாவை தவறாக வழி நடத்த முடியும் என்கிறார்கள் சிலர்? 30 கோடி இந்தியர்களை அடக்க 30 கோடி வெள்ளையனா வந்தான்? என வினா கேட்டவர்களின் விலா எலும்பை உடைக்கிறார்.
எப்படி ஒரு பெண்ணின் துயரத்தை ஆணால் உணர முடியாதோ, அதேபோல தீண்டா மைக் கொடுமையை அனுபவிக் காதவர்களால் எழுத முடியாது. கோபி செட்டிப்பாளையத்தில் நகராட்சித் தலைவராக இருந் தவர் இலட்சுமண அய்யர். இவர் தான் இந்தியாவில், கையால் மலம் அள்ளும் முறையை, முதன் முதலில் கோபி நகராட்சியில் ஒழித்தவர். இதற்குக் காரணம் கேட்ட போது, சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற போது, அங்கே மலம் அள்ள நேர்ந்தது. அதனால்தான் அம்முறையை ஒழித்தேன் என்றாராம்.
ஆக அவமானத்தைச் சந்திக்க முடியாதவரால் எதையும் உணர முடியாது. அனுமானம் வேறு; அனுபவம் வேறு! இரண்டும் ஒன்றல்ல எனத் தெளிவாய் பாடம் எடுக்கிறார் கவிஞர் ஆதவன். பேச்சுத் தமிழே, இந்நூலின் வாசிப்புத் தமிழாக உள்ளது. அதனால்தான் என்னமோ மொழி யின் ஊடாக ஏராளமான கற்கள். அதனைத் தவிர்த்திருக்கலாம். அவசியம் வாங்கிப் படியுங்கள்.
(பூபாளம் புத்தகப் பண்ணை, 2027/ 6 வடக்கு ராஜவீதி, புதுக் கோட்டை – 622 001)
– கியூபா