Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Reviews’

Fiction by Annadurai: Lit Review by Imaiyam

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2009

அண்ணாதுரை சிறுகதைகள்
இமையம்

இலக்கியம் என்னுடைய பிரச்னையல்ல; வாழ்இக்கைதான் என்னு டைய பிரச்னை. வாழ்க் கையில் இன்பத்தைப் பெருக்க வேண்டும்; வேதனையைக் குறைக்க வேண்டும். இதுதான் என் இறுதி லட்சியம். ஒரு தெளிவான சமூகக் குறிக்கோள் உள்ள எழுத்தாளன் நான். இந்தச் சமூக உறவுதான் என்னை எழுதவைக்கிறது”

– அண்ணாதுரை நாவல் வடிவத்தைப் போலவே சிறு கதை வடிவமும் ஆங்கில இலக்கிய வாசிப்பின் வழியே தமிழுக்கு பெறப்பட்டதுதான். தமிழில் இவ் வடிவத்தின் முன்னோடியாக வ. வெ.சு.ஐயரைக் குறிப்பிடலாம்.

ஐயரை அடுத்து பி.எஸ்.இராமையா, கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன். சி.சு.செல்லப்பா, கா. சிவத்தம்பி, இளங்கோவன், சிதம்பர சுப்ரமணியன், பி.எம்.கண்ணன், மௌனி போன்றவர்கள் சிறுகதைகளை மட்டுமல்லாமல் பரி சோதனை ரீதியிலான கதைகளையும் எழுதினார்கள்.

அடுத்து இவர்களுடைய வரிசையில் கு.அழகிரிசாமி, லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமன் போன்றவர்களும் சிறுகதை வடிவத்தை தமிழில் வளப்படுத்தினார்கள். இந்த எழுத்தாளர்கள், சிறுகதையின் வடிவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் மொழிக்கும் நடைக்கும் பரிசோதனைக்கும் முன்னுரிமை தந்து எழுதியவர்கள். பெரும்பாலும் இவர்கள் தனிமனித சிக்கல், புலம்பல், குழப்பம், குடும்ப உறவுகளுக்கிடையிலான மோதல்களையே பிரதானப்படுத்தி எழுதினார்கள்.

ஒருவகையில் இவர் கள் அனைவரையும் ஆச்சாரத்தை கடைப்பிடித்து மிகவும் ஆச்சாரமான முறையில் எழுதிய எழுத்தாளர்கள் எனலாம்.

இவர்கள் எழுதிய அதே காலக் கட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பல எழுத்தாளர் களையும் சிந்தனையாளர்களையும் போராட்டக்காரர்களையும் உருவாக் கியது. இவர்களை காலமும் சமூகமும் உருவாக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லலாம். சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இயக்கங்களின் கொள்கை அடிப்படையிலும் இவர்கள் எழுதினார்கள்.

சமூகத்தில் நிலவிய மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் பரம்பரை தொழில்களுக்கு எதிராக கருத்துப் பிரசாரம் செய்யவேண்டிய – கிட்டத்தட்ட கலகம் செய்யவேண்டிய -சூழலில் இவர்கள் இருந்தார்கள். இப்படி இனம், மொழி, திராவிட இயக்கச் சிந்தனைகள், பழமைக்கு எதிரான குணம், அறியாமை, மடமை, மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதி ரான நிலைப்பாட்டுடன் எழுத வந்த வர்களில், முக்கியமானவராகவும் முதன்மையானவராகவும் பேரெழுச்சியை உருவாக்கியவராகவும் இருந்தவர் அண்ணாதுரை.

இவரது எழுத்து தமிழகத்தில் ஒரு இயக்கமாக வளர் ந்தது. ஒரு புதியவகை எழுத்து இயக்கத் தை மட்டுமல்ல, ஒரு அரசியல் இயக்கத்தையும் உருவாக்கியது. அண்ணாவினுடைய எழுத்து தமிழ் மொழியில், தமிழ்ச் சமூக வாழ்வில் பாய்ச்சலான பெரிய மாற்றத்தை உருவாக்கியது என்பது வரலாறு.

அந்த வரலாறு எளிதில் அழிக்கக்கூடிய வரலாறாக இல்லை. அவருடைய எழுத்தின் தாக்கம் இன்றும் இருக்கிறது.

அண்ணாவுக்கு மேடைப் பேச்சாளர், அரசியல் தலைவர், நாடக ஆசிரியர் என்று பல முகங்கள் உண்டு. மற்ற முகங்களைவிட சிறுகதை ஆசிரியர் என்ற முகம் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

1934 முதல் 1966 வரையிலான காலத்தில் அவர் மொத்தம் நூற்று பதிமூன்று சிறுகதைகளை எழுதியுள்ளார்.

11-12-1934இல் வெளிவந்த ‘கொக்கரக்கோ’ அண்ணாவின் முதல் சிறுகதை.

14-01-1966இல் வெளிவந்த ‘பொங்கல் பரிசு’ அவருடைய கடைசி சிறுகதை.

கொக்கரக்கோ என்பது தமிழ்ப் பண்பாட்டில், கலாச் சாரத்தில், நம்பிக்கையை மையப் படுத்துவது; பொங்கல் என்பது மகிழ்ச்சியை, ஆனந்தத்தை, கொண் டாட்டத்தை, நிறைவை மையப்படுத் துவது. அண்ணா, சிறுகதைகளை கொக் கரக்கோவில் ஆரம்பித்து பொங்கல் பரிசில் முடித்துள்ள ஒற்றுமை இயற்கையாக அமைந்த ஆச்சரியம்.

அண்ணாவுக்கு ஒரு நோக்கம் இருந்தது; அந்த நோக்கத்திற்காகத்தான் அவர் எழுதினார். கறுப்பினப் போராளி மார்ட்டின் லூதர் கிங், “எனக்கொரு கனவு இருக்கிறது” என்று சொன் னதுபோல, “எனக்கொரு நோக்கம் இருக்கிறது, லட்சியம் இருக்கிறது” என்று அண்ணா சொன்னார். தமிழ்ச் சமூகத்தை இருட்டிலிருந்து வெளிச்சத் திற்குக் கொண்டு வரவேண்டும் என்பது அண்ணாவின் லட்சியம்; சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வான முரண்பாட்டை ஒழிக்க வேண்டும் என்பது அவருடைய கனவு.

இதனடிப் படையில் வாழ்விற்கான உரிமையையும் அதற்கான வேட்கையையும் முன் னிறுத்தியே அவர் எழுதினார். தமிழ்ச்இசமூகம் மகிழ்ச்சியை, கொஇண்இடாட்இடத்தை இழந்ததற்கான கார ணங்கள் என்ன, அவற்றை அடை வதற்கான வழிவகைகள் என்ன என்று தன் சிறுகதைகளில் அவர் ஆராய்ந்தார். ஒரு எழுத்தாளனுடைய நோக்கம்தான் அவன் எழுத்துக்கு வலிமையான பலமாக அமைகிறது.

இந்த வலிஇமைஇதான் எழுத்தினுடையவும் எழுத்இதாளஇனுடையவும் மேன்மையாக அமைஇ கிறது.அரை நூற்றாண்டு காலம் முடி ந்துஇவிட்ட பிறகும், இன்றும் நாம் அண்ணாவினுடைய சிறுகதைகளைப் பற்றி பேசுவதற்குக் காரணம் அக் கதைகளினுடைய வலிமையும் மேன்மையும்தான்.

கருத்தைப் பரப்புவதற்காக, பிரசாரம் செய்வதற்காக எழுதப்பட்டதுதான் அண்ணாவினுடைய சிறுகதைகள் அனைத்தும். அவருடைய இயக்க செயற்பாடுகளில் ஒன்றாகத்தான் அவருக்கு எழுத்தும் இருந்தது. ஆனால், பிரசாரத்திற்காக எழுதப்பட்டி ருந்தாலும் அவருடைய கதைகள், சிறுகதைகளுக்குரிய எல்லாக் குணங்களையும் கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

குழப்பமில்லாத தெளிவான நடை, குறிப்பாக உணர்த்துதல், நுட்பமான சித்தரித்தல், எள்ளல், அங்கதம், ஒப்பீடு, நகைச்சுவை, உருவக, கவிதை குணம் கொண்ட வாக்கியமைப்புகள் என்று அனைத்துக் கூறுகளும் நிறைந் திருப்பதை இன்றும் காணமுடியும். அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாகியும் அவருடைய கதைகளை எளிதாக படிக்க முடிகிறது; ரசிக்க முடிகிறது என்பதோடு அக்கதைகள் இக்காலத்திற்கும் பொருத்தமானதாக, தேவையானதாக இருக்கிறது என்பது ஆச்சரியமான விசயம்.

அண்ணா, கதை எழுத ஆரம்பித்த காலத்திலும் எழுதிக் கொண்டிருந்த காலத்திலும் நான்கு விதமான கதை எழுதும் போக்குகள் இருந்தன. தனி மனித பிரச்னைகள், சிக்கல்கள், பிடுங்கல்கள், மனப்போரட்டங்கள், உளவியல் பிரச்னைகள்; குடும்ப உறவுகளுக்கிடையிலான மோதல்கள், சிடுக்குகள், விரக்தி, நம்பிக்கையின்மை, மனக்குழப்பங்களை, சீர்குலைவு களை பதிவு செய்வது என்று ஒரு பிரிவினர் இருந்தனர், இவ் வகையான எழுத்துகளையே இலக்கியமாக இலக்கியவாதிகள் அங்கீகாரம் செய்தனர்.

தனிமனித பிரச்னைகளையும் சமூகப் பிரச்னை களையும் அப்பட்டமாக பதிவு செய் வதுதான் எழுத்தாளனின் வேலை; அதில் குறுக்கீடு செய்வதோ, விமர்சனம் செய்வதோ அல்ல என்பது மற் றொரு பிரிவினர்களுடைய போக்கு. மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம், நாட்டுப்பற்று, விடுதலைப் போராட்டம், தேசிய இயக்கம், காந்திய சிந்தனைகளின் அடிப்படையில் எழுதுவது மூன்றாவது பிரிவினருடைய எழுத்து வகை.

நடைமுறை சமூக வாழ்வில் இருக்கக்கூடிய அசலான பிரச்னைகளையும் பிரச்னைகளுக் கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் முன் வைத்து எழுதி யவர்கள் நான்காவது வகையினர். அண்ணா, நான்காவது வகையைச் சார்ந்த எழுத்தாளர்.

சமூகத்தை முன்னேற்றுவதற்கு, விமர்சனம் செய்வதற்கு – முக்கியமாக பிரசாரம் – செய்வதற்கான கருவியாகவும் தன்னுடைய கருத்தை, சிந்தனையை, எண்ணத்தை பரப்புவதற்கு தகுந்த ஆயுதமாகவும்தான் கலைப் படைப் புகளை அண்ணா கருதினார்; இதே நோக்கத்திலேயே சிறுகதை என்ற வடிவத்தை பயன்படுத்தினார்.

அதோடு, இலக்கியம் மக்களுக்கானது, அது மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சமூகத்தின் மீதான தன்னுடைய விமர்சனத்தை சிறுகதைகளின் வழியே செய்தார். தேவையான இடங்களில் விமர்சனத்தைக் கடுமையாகவும் வைத்தார். அவர் வாழ்வை நான்கு சுவர்களுக்குள் காணவில்லை; மாறாக தெருவில் கண்டார்.

இதனால், அண்ணா கதைகள் சராசரியான கதைகளாக இல்லாமல் கலகக் குரலாக இருந்தது. முதல் கதையிலிருந்து கடைசி கதை வரை இந்தக் கலகக் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஏனென்றால் வாழ்வினுடையதும் சமூகத்தினுடையதுமான நெருக் கடிகளில் இருந்து உருவானது அவருடைய சிறுகதைகள்.

அண்ணாவினுடைய சிறுகதைகளின் மையமான கரு – மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பிரசாரம்; சாதியப் பிரச்னைகளுக்கு, மத மோதல்களுக்கு, சமயப் பூசல்களுக்கு, புராண இதிகாசக் கட்டுக் கதைகளுக்கு, பெண்ணுரிமை, வரதட்சணை கொடுமைக்கு எதிரானது; குருட்டுத்தனத்திற்கு, பழமைக்கு எதிரானது; சமூகத்தின் மேல் அடுக்கில் இருப்பவர்கள் சமூகத்தின் கீழ் அடுக்கில் இருப்பவர்கள் மீது செலுத்திய குரூரமான ஒடுக்குமுறைக்கு, சித்ர வதைக்கு எதிரானது. சமூக மேம்பாடும் சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும்தான் அவருடைய மொத்தக் கதைகளின் சாரமும் நோக்கமுமாக இருக்கிறது.

அண்ணா, தமிழ் மரபின் பிரதிநிதி என்பதால் தமிழ் வாழ்வுக் குறித்த மதிப்பீடுகளே அவருடைய கதைகள் என்றும் சொல்லலாம்.

அண்ணாவினுடைய 113 சிறு கதைகளையும் மொத்தமாக படித்து முடிக்கும் போது, அவருடைய பரந்துட்ட அறிவு வீச்சு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதோடு அவர் தொடாத விசயங்கள் எதுவுமில்லை என்பதும், ஒரு கதையினுடைய சா யலை மற்றொரு கதையில் காண முடியாது என்பதும், அவருடைய எழுத்தின் மேன்மைக்கு சான்றாக இருக்கிறது.

  • மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ‘பரிசு’ என்ற கதையையும்;
  • சாதிகள் இந்த மண்ணில் எவ்வளவு ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது என்பதற்கு ‘சிங்கள சீமாட்டி‘ (1939) என்ற கதையையும்;
  • மதப்பூசல்களுக்கு எதிராக ‘மதுரைக்கு டிக்கட் இல்லை’ (1945) என்ற கதையையும்;
  • பேய் பிசாசு போன்ற கட்டுக்கதைகளுக்கு எதிராக ‘யார் மீது கோபித்துக் கொள்வது’ (1955) என்ற கதையையும்;
  • மாந்திரிகத்தினால் ஏற்படும் கேடுகளுக்கு எதிராக ‘விழுப்புரம் சந்திப்பு’ (1965) என்ற கதையையும் எழுதியுள்ளார்.
  • முதலாளித்துவத்தின் சுரண்டல் போக்குகளை, கோரச் செயல்பாடுகளை பல்வேறு நிலைகளிலிருந்தும் ஆராய்ந்து ‘செவ் வாழை’ (1949),
  • ‘ரொட்டித்துண்டு’,
  • ‘பக்த பக்காத் திருடன்’ (1950)
  • ‘பூபதியின் ஒரு நாள் அலுவல்’ (1946)
  • ‘பொய் – லாப நஷ்டம்’ (1945)
  • ‘நாடோடி’ (1945)
  • ‘உடையார் உள்ளம்’ (1966) போன்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
  • இந்த நாட்டில் வரத ட்சணை கொடுமையினால் எத்தனை பெண்களுடைய வாழ்க்கை சீர்கெட்டுப் போகிறது என்பதற்கு ‘சோணாச்சலம்’ (1947) என்ற கதையை எழுதியுள்ளார்.
  • பெண்களும் மனித உயிர்களே; அவர் களுக்கும் சகல உரிமைகளோடு வாழ்வ தற்கு உரிமை உண்டு என்பதோடு பெண்கள் படும் அல்லல்களை துன்பங் களை விவரிக்கும் விதமாக
  • ‘வாலிப விருந்து’,
  • ‘சுடு மூஞ்சி’ (1946),
  • ‘கன்னி விதவையானாள்’ (1961) ஆகிய கதைகளை எழுதியுள்ளார்.
  • இந்த மண்ணில் ஏற்பட்டுள்ள, ஏற்படுகிற சகல விதமான மூடத் தன ங்களுக்கும், சமயப்பூசல்களுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும், கட்டுக்கதைகளுக்கும், கீழ்மைத் தனங்களுக்கும், மோசடி கபட நாடகங்களுக்கும் பிராமணியமே அடிப்படையான காரணம் என்பதைத் தோலுரித்து காட்டும் விதமாக
  • ‘அறுவடை’ (1955),
  • ‘பேரன் பெங்களூரில்’,
  • ‘மேலதிகாரி’ (1956),
  • ‘சொல்வதை எழுதேண்டா’ (1946) ஆகிய சிறுகதைகளை எழுதியுள்ளார்.
  • காதல் என்ற பெயரால் நடக்கும் மோசடிக்கும், கபட நாடகத்திற்கும் ஆளாகி அவதிப்படும் பெண்களுடைய வாழ்வை சித்தரிக்கும் விதமாக
  • ‘தங்கத்தின் காதலன்’ (1939),
  • ‘புரோகிதனின் புலம்பல்’,
  • ‘அவள் மிகப் பொல்லாதவள்’ (1939) போன்ற கதைகளை எழுதியுள்ளார்.
  • பணக்காரர்களுடைய ஏழைகளின் மீதான அன்பு, இரக்கம் பச்சாதாபம் என்பதெல்லாம் நாடகமே என்பதை ‘இரு பரம்பரைகள்’ (1946) என்ற கதையில் காட்டுகிறார்.
  • பெண்களுடைய உரிமைக்காகவும் வாழ்விற்காகவும் குரல் கொடுப்பதோடு பெண்ணிய நோக்கில்
  • ‘அவள் விபச்சாரியானாள்’ (1946)
  • ‘வழுக்கி விழுந்தவள்’ (1965) ஆகிய கதைகளை எழுதியுள்ளார்.
  • வரலாறுகளையும் வரலாற்றில் நடந்து ள்ள மோசடிகளையும், ஏமாற்று சித்து வேலைகளையும் தர்க்கப்பூர்வமாக ஆராய்ந்து
  • ‘புலிநகம்’ (1946),
  • ‘பிடி சா ம்பல்’ (1947),
  • ‘திருமலை கண்ட திவ்விய ஜோதி’ (1952),
  • ‘தஞ்சையின் வீழ்ச்சி’,
  • ‘வெளியூரில் கொலம்பசு’ போன்ற கதைகளை எழுதிஇயுள்ளார்.
  • உளவியல் சா ர்ந்த கதைகளான
  • ‘ராஜபார்ட் ரங்கத்துரை பாகவதத்’ (1948),
  • ‘மரத்துண்டு’ போன்றவற்றையும் எழுதினார்

கரு, அமைப்பு, நோக்கம், உள்ளடக்கம், வெளிப்பாட்டுத்திறன், ஆளுமை, மொழி போன்றவற்றை வைத்து அண்ணா சிறுகதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும். தொடக்ககாலக் கதைகள் பசி, வறுமை, நோய், அறியாமை, சாதி மற்றும் பொருளாதார ரீதியிலான ஏற்றத் தாழ்வுகள், உழைப்பு மற்றும் பொருளாதாரச் சுரண்டல்கள் போன்ற பிரச்னைகளை நேரிடையாகவும் அப்பட்டமாகவும் பேசியதோடு அதற் கானத் தீர்வுகளையும் முன்வைக் கின்றன.

பொதுவாக தமிழ் இலக்கிய உலகம் பிரச்னைகளையும் பிரச்னைகள் உருவாவதற்கான காரணிகளையும் ஆராயும். ஆனாலும், முடிவை வாசகனுடைய தீர்மானத்திற்கு விட்டு விடும். இதற்கு நேர்மாறான குணத் தை அண்ணாவினுடைய தொடக்கக்கால கதைகள் கொண்டிருப்பது கவனத்திற்குரியது.

இடைக்காலக் கதைகள் பிரச்னைகளை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து, தீர்வை முன் வைப்பதற்குப் பதிலாக விவாதத் தையும் தர்க்கத்தையும் முன்வைத்தன. கடைசிக்காலக் கதைகளில் கருவுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் வடிவம், செய்நேர்த்தி, சொல்முறை, நுட்பம், செறிவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இக்கால கதைகளில் முதிர்ச்சியையும் தேர்ச்சியையும் காண முடிகிறது. இதே காலத்தில்தான் ஓப்பீட்டு முறையிலான கதைகளையும் எழுதியுள்ளார். ஒரு எழுத்தாளனுடைய வாழ்க்கையில் வளர்ச்சிப் படிநிலைகள் தவிர்க்க முடியாதவை; இந்த வளர்ச்சிப் படி நிலைகள்தான் அந்த எழுத்தாளனுடைய எழுத்தின் வலிமையைக் காட்டுகிறது என்ற கோட்பாடு அண்ணாவின் கதைகளுக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.

மரபுகளை உதறித்தள்ளி புதிய மரபுகளை உருவாக்கிய சிறுகதைகள் அண்ணாவினுடையது. திரித்துக் கூறுதல், சுற்றி வளைத்துப் பேசுதல் என்பது அண்ணாவின் சிறுகதைகளில் காண முடியாத ஒன்று.

சிறுகதைக்குரிய எல்லா குணங்களும் சிறப்பாக இருந் தும், ஆச்சாரமான இலக்கிய விமர்சகர்கள் அவரது சிறுகதைகளை கொள் கை முழக்கங்களாக பார்த்ததின் விளைவு அவருடைய கதைகள் பர வலாகாமலேயே போய்விட்டது.

நம் முடைய விமர்சகர்கள் ஒரு படைப்பை அதனுடைய தரத்தை வைத்து மதிப்பிடாமல், அந்த படைப்பை எழுதிய எழுத்தாளனுடைய சாதி, சார்ந்துள்ள கட்சி, அவனுடைய பின்னணி போன்றவற்றை வைத்தே மதிப்பிடுகிறார்கள் என்பதால் நிகழ்ந்த துயரம் இது. ஆனால், விமர்சகர்களால் உதவாக்கரை என்று ஒதுக்கப்பட்ட அண்ணாவின் சிறுகதைககள்தான் இன்று அதிகமாகப் பேசப்படுகின்றன.

அண்ணாவுக்கு தெளிவான நோக்கம் இருந்தது; அந்த நோக்கத்திலும் லட்சி யத்திலும் இருந்துதான் அவருடைய சிறுகதைகள் உருப்பெற்று வந்தன. இந்நிலையில் ஆய்ந்து அண்ணா வினுடைய சிறுகதைகளை மதிப்பிட வேண்டும்.

அண்ணா எந்தெந்த பிரச் னைகள் தீரவேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்று எழுதினாரோ அந்தப் பிரச்னைகள் இன்றுவரை ஒழி ந்தப்பாடில்லை. சாதிக்கொடுமை, தீண்டாமை, பசி, பிணி, வறுமை, அறியாமை, பொய்மை, போலித்தனம், சமயப்பூசல், இளமை மணம், காதலுக்குத்தடை, தெய்வத்தின் பெயரால் ஏற்பட்ட கட்டுக்கதைகள், புராண – இதிகாசப் புரட்டுகள் இந்த மண்ணில் இருக்கும்வரை; சூழ்ச்சியின் பிடியில் தமிழ்ச் சமூகம் சிக்கி தவிக்கும் வரை; பிரச்னைகள் மடிவதற்குப் பதிலாக வேகம் பெற்று வளர்ந்து கொண்டிருக்கின்ற வரை; அண்ணாவினுடைய சிறுகதைகளும் இருக்கும்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 2 Comments »

சாருகேசி :: நதிகளை இணைக்கும் நாரத கான சபா!

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008

வருடா வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நாட்டிய விழா நடத்துவது நாரத கான சபாவின் குறிப்பிடத் தகுந்த பணிகளில் ஒன்று.

சென்ற ஆண்டு “úக்ஷத்திர பரதம்’ என்ற தலைப்பில் சுமார் ஒரு டஜன் புண்ணிய úக்ஷத்திரங்களை பரதநாட்டிய வடிவத்தில் பாடல்களுடனும், பஜன்களுடனும் நாட்டிய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சி போல, “தீர்த்த பரதம்’ என்ற தலைப்பில், ஏழு புண்ணிய நதிகளைப் பற்றி பரதநாட்டிய வடிவில் ஒரு வாரவிழா நடத்துகிறது நாரதகான சபா.

நடனக் கலைஞர்கள் நடனம்தான் ஆடமுடியும். நதி எங்கே தோன்றுகிறது. எங்கே முடிகிறது. வழியில் என்னென்ன úக்ஷத்திரங்கள் இருக்கின்றன. எந்தெந்தப் பாடல்கள் எந்தெந்தப் பின்னணிகளில் பாடப்பட்டன, புராண-சரித்திர விவரங்கள், தகவல்கள் என்னென்ன என்று அவர்கள் எப்படி அறிவார்கள் என்று கேள்வி எழும்.

இந்தச் சிக்கலைச் சமாளிக்க நாரதகான சபா ஏற்கெனவே ஒரு வழியைக் கண்டுபிடித்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வந்திருக்கிறது.

ஆராய்ச்சிக் கட்டுரைகளில் திறமையும், ஆர்வமும் உள்ள நிபுணர்களை அணுகி அவர்களிடம் நாட்டியக் கலைஞர்களுக்குத் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் கொடுத்து, நிகழ்ச்சிக்குத் தேவையான பாடல்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

இந்த வருடம் நாட்டியரங்கம் வழங்கிய “தீர்த்தபரதம்’ நிகழ்ச்சிக்கு இப்படிக் கைகொடுத்து உதவ முன்வந்தவர்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல; சொற்பொழிவாளர்களும்கூட.

லலிதா ராமகிருஷ்ணா கர்நாடக இசை பற்றிய நுணுக்கமான தகவல்களைச் சேகரித்து புத்தகங்கள் எழுதியவர். இவர் பிரம்மபுத்திரா நதி பற்றியும், அதன் கிளை நதிகள், வழித்தடங்களில் உள்ள கோயில்கள், அந்தப் பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் பரம்பரை பாடல்கள் என்று ஓர் ஆராய்ச்சியே செய்திருக்கிறார் இந்த நதி பற்றி. பிரம்மபுத்திரா மட்டுமே ஆண் நதி என்று உங்களுக்குத் தெரியுமோ?

யமுனை பற்றி, கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார் அவர்கள் முக்கியமான குறிப்புகளையும் தகவல்களையும் பொறுக்கி எடுத்துக் கொடுத்திருக்கிறார். (கங்கை நதிதான் ரொம்பவும் உயர்ந்தது என்று சொல்லுபவர்கள், கிருஷ்ணர் ஆடிக்களித்த யமுனைதான் மிக உயர்ந்தது என்று இவர் சொல்லுவதைக் கேட்டு புருவம் உயர்த்தக் கூடும்!)

டாக்டர் சுதா சேஷய்யன், தமது சொற்பொழிவுக்கே சாதாரணமாக எக்கச்சக்க ஆதாரங்களையும் பாடல்களையும் மடை திறந்த மாதிரி சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்.

(நர்மதா நதி பற்றி அவர் செய்த ஆராய்ச்சியை வைத்துக்கொண்டு, வடக்கத்திய நடனக் கலைஞர் வைபவ் அரேக்கர் நடனம் ஆடப் போகிறார்!)

டாக்டர் பிரேமா நந்தகுமார் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் புலமை பெற்ற எழுத்தாளர், பேச்சாளர். கோதாவரி நதி பற்றி இவர் தொகுத்துக் கொடுத்திருக்கும் செய்திகளும், பாடல்களும் நடனக் கலைஞர் நளினி பிரகாஷுக்கு உதவியிருக்கின்றனவாம்.

டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழ் வாசகர்களுக்கும், சரித்திர ஆராய்ச்சி ஆர்வலர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். காவிரி நதி பற்றி அவர் தொகுத்து அளித்திருக்கும் தகவல்களும், பாடல்களும்தாம் இந்த நாட்டிய விழாவில் நடனக் கலைஞருக்கு உதவப் போகின்றன.

டாக்டர் சித்ரா மாதவன் சரித்திர ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல; தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளரும்கூட. இவருடைய ஆங்கிலச் சொற்பொழிவுகள் எங்கெல்லாம் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் இவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டு வருவது ஒன்றே இவருடைய திறமையை உணர வைக்கும். (இவர் இந்த நடன நிகழ்ச்சிக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, கண்ணால் காண்பதே மெய் என்று, நேரடியாக தாமிரபரணி நதி பாயும் இடங்களுக்குச் சென்று, அங்குள்ள திருக்கோயில்கள் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய பாடல்களையும் அறிந்து வந்திருக்கிறார்!)

இத்தனை ஆதாரங்கள், தகவல்கள் எல்லாம் ஒரு நடன நிகழ்ச்சியோடு போய் விடக்கூடாதே என்று நாரதகான சபா இந்த ஏழு நதிகள் பற்றிய ஏழு கட்டுரைகளையும் ஓர் அழகான தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.

கங்கை பற்றி சுஜாதா விஜயராகவன் எழுதியிருக்கும் முதல் கட்டுரை தொடங்கி, டாக்டர் சித்ரா மாதவன் தாமிரபரணி பற்றி எழுதியிருக்கும் அத்தனை கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.

நடனத்தை மட்டும் கண்டு ரசித்துச் செல்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, இவை போன்ற நுணுக்கமான ஆய்வுக் கட்டுரைகளில் ஆர்வம் காண்பிக்கும் ரசிகர்களுக்காகவே இந்த நூல் வெளியிடப்படுகிறது. பிரதி வேண்டுவோர் சபாவைத் தொடர்பு கொள்ளலாம்.

நடன நிகழ்ச்சி பற்றி விரிவாக அடுத்த வாரம் பார்ப்போம்!

எந்தப் பெற்றோராவது, பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு, “இவங்க எதிர்காலத்தை நினைச்சாலே பயங்கரமா இருக்கு!’ என்று சொன்னால், அவர்களை உடனே எஸ்.பி.காந்தன் இயக்கி, நடிகர் மாது பாலாஜி தயாரித்திருக்கும் “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்’ என்ற குறும்படத்தை வாங்கச் சொல்லி சிபாரிசு செய்கிறேன்.

திருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன் பத்திரிகையாளர், பல பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகர் மட்டுமல்ல. சிறந்த கல்விச் சிந்தனையாளர். அவரும் அவர் துணைவி ராதா ஸ்ரீதரனும் அமர்ந்து குழந்தைகளின் கல்வி, அவர்கள் வளர்ச்சி, எதிர்காலம் பற்றி உரையாடும் டிவிடி-தான் இது. ஆனால் ஒரேயடியாக டிவி உரையாடல் மாதிரி இல்லாமல், அங்கங்கே படங்களையும், சித்திரங்களையும் பொருத்தமாகச் சேர்த்திருக்கிறார் காந்தன்.

உரையாடல் மிக இயல்பாக அமைந்திருக்கிறது என்பதோடு, தெளிவாக இருக்கிறது. வளரும் குழந்தைகளின் கல்வி சார்ந்த அத்தனை விவரங்களையும் ஒவ்வோர் அம்சமாக எடுத்துக்கொண்டு 3 நிமிடம், 5 நிமிடம், 8 நிமிடம் என்று பிரித்துக்கொண்டு சுவாரசியமாகத் தயாரித்திருக்கிறார்.

“தாரே ஜமீன்பர்’ திரைப்படத்திற்குப் பிறகு பரவலாகப் பேச்சில் அடிபடும் டிஸ்லெக்சியா பற்றியும் ஒரு பகுதி இருக்கிறது. (அது நோயல்ல; கவனக் குறைவுதான்!) கூடவே டிஸ்க்ராஃபிலியா, டிஸ்காங்குலியா போன்ற சிறு குறைபாடுகள் பற்றியும் உரையாடலில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதரன்.

வலது மூளை -இடது மூளை, யோகாவின் அவசியம், படிக்கும் பழக்கம் எவ்வாறு உதவுகிறது, குழந்தைகள் எப்படி சரளமாக ஆங்கிலம் பேசலாம், எட்டு வகை புத்திசாலித்தனங்கள் என்று வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது டிவிடி. பெற்றோர் மட்டுமல்ல, ஒவ்வொரு பள்ளிக்கூட ஆசிரியரும் அவசியம் கவனமாகப் பார்க்க வேண்டிய பல அம்சங்கள் கொண்ட இந்தக் குறும்படம், பலருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Kamal & KS Ravikumar: Is Dasavatharam offending Vaishnavite & Hindu beliefs

Posted by Snapjudge மேல் மே 15, 2008

தசாவதாரம் :‌ கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட புது தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள படம் தசாவதாரம். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மாதம் நடந்தது. இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹசன், இதுவரை தசாவதாரம் படத்தைப் பற்றிய செய்திகள், கதையை ரகசியமாக வைத்திருந்தோம். இனி மெல்ல மெல்ல தசாவதாரம் படம் பற்றிய செய்திகள் கசியும், என்றார்.

அவர் எதை வைத்து சொன்னாரோ தெரியவில்லை. அவர் சொன்னதுபோலவே தசாவதாரம் பற்றிய தகவல்கள் (கோர்ட்டில்) தினம் தினம் வெளியாகி வருகின்றன.

தசாவதாரம் படத்தில் உள்ள பல காட்சிகள் வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளன என்று இன்டர்நேஷனல் வைஷ்ணவ தர்மா சம்ரக்ஷணா சங்க தலைவர் கோவிந்த ராமானுஜதாசர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள காட்சிகளை, இப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

நீதிபதிகள் ராஜசூர்யா, சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்விசாரணையின்போது தசாவதாரம் படம் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வழக்கு தொடர்பாக தசாவதாரம் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கோர்ட்டில் அளித்துள்ள மனுவில் தசாவதாரம் குறித்து பல புது தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

  • பனிரெண்டாம் நூற்றாண்டு வரலாற்றில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள்தான் தசாவதாரம் படத்தில் இடம் பெற்றுள்ளன.
  • தமிழக அரசு வெளியிட்ட வரலாற்று புத்தகங்கள் அடிப்படையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது,
  • பிற்கால சோழர் சரித்திரம் பகுதி-2,
  • தமிழ்நாட்டு வரலாறு,
  • சோழ பெருவேந்தர் காலம் ஆகிய புத்தகங்களில் உள்ள கருத்துக்கள் அடிப்படையில்தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ராமானுஜரை, ஸ்ரீரங்கநாதர் சிலையோடு சேர்த்து கட்டி கடலில் தள்ளிவிடுவது போன்ற காட்சி இருப்பதாக கூறுவது தவறு.
  • தசாவதாரம் என்ற பெயர் காப்புரிமை கொண்ட பெயரல்ல. இந்த பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை.
  • கமலஹாசன், வைஷ்ணவர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • விஷ்ணுவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வது போன்ற காட்சி அமைந்துள்ளன.
  • ஓம் என்ற மந்திரத்தின் மீது நடிகர் கமலஹாசன் கால் வைத்து ஏறுவது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும்,
  • பகவத் கீதை புத்தகத்தின் மேல் கால் வைத்து ஏறுவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற காட்சிகள் அமையவில்லை.
  • சைவர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல் இருப்பது போலவும் காட்சிகள் இடம்பெறவில்லை.
  • ராமானுஜசாரியார் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவில்லை. எனவே இந்த படத்தில் உள்ள எந்த காட்சியையும் நீக்கத் தேவையில்லை.பல வைஷ்ணவ நண்பர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.
  • கடவுள் விஷ்ணுவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த படத்தை முழுமையாக திரையிட அனுமதிக்க வேண்டும்.மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

மத்திய தணிக்கை குழு அதிகாரி பாபு ராமசாமி தாக்கல் செய்த மனுவிலும் தசாவதாரம் பற்றிய புது தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், தசாவதாரத்தில் கமல்ஹாசன் ராமானுஜர் வேடத்தில் நடிக்கவில்லை. ராமானுஜரின் உண்மையான சிஷ்யரான ரங்கராஜன் நம்பி வேடத்தில் அவர் நடித்து, குரு பக்திக்காக தியாகம் செய்வதாக கதை அமைந்துள்ளது. சிதம்பரம் கோவிலில் உள்ள கோவிந்தராஜர் சிலையை அகற்ற முயன்றபோது அரசரின் வீரர்களோடு சண்டைபோடுவது போன்ற காட்சி அமைந்துள்ளது. இந்த படம் எந்த வகையிலும் மத உணர்வை பாதிக்கும் வகையிலோ, மோதலை ஏற்படுத்தும் வகையிலோ அமையவில்லை. இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அப்படியிருக்க, அதற்கு முன்பாகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை வரும் 20ம் தேதி நடைபெறவிருக்கிறது.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Tamil Book Review: Naan Oru Manu Virodhan – Aadhavan Dheetchanya: Viduthalai

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

நான் ஒரு மநு விரோதன்! – ஓர் பார்வை!

Snap Judgement: Aadhavan Dheetchanya Book Release: Naan oru Manu Virodhan – Interviews, Sujatha, Sundara Ramasamy, SuRa, Kings, Chola, Pandiyan, Cheran, Chozhan

கவிஞர் ஆதவன் தீட்சண்யா வின் நேர்காணல்கள் நூலாக வெளிவந்துள்ளன. அந்நூலின் பெயர் நான் ஒரு மநு விரோதன்.

நேர்காணல்களில் அரிய சில மட்டுமே நூலாக வந்துள்ளன. அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நூலாக இதைக் கருத லாம்.தாழ்த்தப்பட்ட சகோதரனின் உண்மையான வலிகள் குறித்தும், காரணங்கள் குறித்தும் விரிந்து பேசுகிறார். மிகக் கனமான செய்திகளையும், நகைச்சுவையால் மக்களின் உள்ளத்தைத் தொடும் பிரகதீஸ் வரன் இந்நூலின் தொகுப்பாசிரி யராக உள்ளார்.

இந்நூலுக்கு அறிமுகவுரை எழுத வந்த தோழர் நீல கண்டன், மார்க்சியத் தளத்தில் இயங்கி வரும் தோழர் ஆதவன் தீட்சண் யாவிடம் இவ்வளவு கூர்மையை எதிர் பார்க்கவில்லை என்கிறார். அதையே நாமும் வழிமொழிய வேண்டியுள்ளது.

இந்தியச் சமூகம் வர்க்கமாக இருந்ததா இல்லையா? என்ப தற்கு முன்னாடியே அது ஜாதி யாக இருந்திருக்கிறது, அது ஒன்றுதான் எல்லாவற்றையும் வழி நடத்தியது என வர
லாற்றை எடுத்துக் கூறி, வருத் தப்படுகிறார்.

அடுத்தவன் மலத்தை வாரிச் சுமக்கிற அவலத்திலிருந்து, மீளத்துடிக்கும் ஒரு அருந்ததி யனாக ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்கிறார். தான் இந்த ஜாதி எனத் தெரிந்து, தன்னோடு பழகாமல் போய் விடுவார்களோ என்கிற பயமிருக்கே அது மிகவும் கொடுமையானது எனத் தாழ்த்தப் பட்ட சகோதரனின் உணர்வை நம்முன் வைக்கிறார். ஒரு சராசரி மனிதராக இயல்பாக வாழ முயற்சி செய்தாலும், தாம் பிடிபட்டு விடு வோமோ என்கிற அச்சம் அவனுக் குள் இருப்பதைச் சக மனிதனுக்கு எடுத்துக் கூறுகிறார்.

இந்தக் கொடுமைகளுக்குக் காரணம் பார்ப்பனர்களே எனச் சரியான புரிதலோடு முரசொலிக் கிறார். உடல் உழைப்பைக் கேவலப் படுத்தும் பார்ப்பனர்கள் தகுதி, திறமை, அறிவு குறித்துப் பேசு கிறார்கள். அதனால் இச்சமூகத் திற்கு ஏற்பட்ட பயன்தான் என்ன? எனப் பகுத்தறிந்து வினா வீசு கிறார். என்னை ஒடுக்க நினைக் கும் ஒவ்வொருவரையும் நான் மனிதன், நீ யார்? எனக் கேட் பேன் என்கிறார். இப்போது எல்லாம் மாறிவிட்டது என்கிறார்கள் சில போலிகள். இங்கே ஒவ் வொரு தாழ்த்தப்பட்டவனும் கேவலத்தோடு அல்லவா சுமக்க வேண்டியுள்ளது என உள்ளத்திற்குள் ஊடுருவி உண்மையை உணர வைக்கிறார்.

என் பையன் அமெரிக்கா போனாலும் நான் பார்க்கிற பெண்ணையே திருமணம் செய் வான் என்பதும், நான் கழிப்பதை அவன் அள்ளுவான் என்பதும் ஜாதித் திமிர்தானே? ஒரே அலு வலகத்தில் வேலை பார்த்து, ஒரே மேசையில் சாப்பிடுவதாலேயே ஜாதி போய்விடாது. நானெல்லாம் ரொம்ப சோஷியல் சார், ஜாதி யெல்லாம் பார்ப்பதில்லை என் கிறார்கள். ஜாதியைக் கைவிடாம லேயே சமதர்மவாதி யாக உலாவர இங்கே எல்லா வாய்ப்புகளும் இருப்பதாக ஆதவன் வருத்தப் படுகிறார்.

இவற்றுக்கெல்லாம் காரண மாக நான் நினைக்கிறது மனு, மனு என் எதிரி, நான் ஒரு மனு விரோதன், என் விமர்சனத்திற் கும், கண்டனத்திற்கும் உரியவர் கள் அவர்கள்தான் என அறுதி யிட்டுச் சொல்கிறார். விண்ணை யும், மண்ணையும் இணைக்கிற அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டதாக பீற்றிக்கொண்டாலும் ஊரும், சேரியும் பிரிந்தே கிடப் பதற்கு மனுதானே காரணம் எனத் தெளிந்து பேசுகிறார்.

3 விழுக்காடு கூட இல்லாத பார்ப்பனர்கள் எப்படி இந்தி யாவை தவறாக வழி நடத்த முடியும் என்கிறார்கள் சிலர்? 30 கோடி இந்தியர்களை அடக்க 30 கோடி வெள்ளையனா வந்தான்? என வினா கேட்டவர்களின் விலா எலும்பை உடைக்கிறார்.

எப்படி ஒரு பெண்ணின் துயரத்தை ஆணால் உணர முடியாதோ, அதேபோல தீண்டா மைக் கொடுமையை அனுபவிக் காதவர்களால் எழுத முடியாது. கோபி செட்டிப்பாளையத்தில் நகராட்சித் தலைவராக இருந் தவர் இலட்சுமண அய்யர். இவர் தான் இந்தியாவில், கையால் மலம் அள்ளும் முறையை, முதன் முதலில் கோபி நகராட்சியில் ஒழித்தவர். இதற்குக் காரணம் கேட்ட போது, சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற போது, அங்கே மலம் அள்ள நேர்ந்தது. அதனால்தான் அம்முறையை ஒழித்தேன் என்றாராம்.

ஆக அவமானத்தைச் சந்திக்க முடியாதவரால் எதையும் உணர முடியாது. அனுமானம் வேறு; அனுபவம் வேறு! இரண்டும் ஒன்றல்ல எனத் தெளிவாய் பாடம் எடுக்கிறார் கவிஞர் ஆதவன். பேச்சுத் தமிழே, இந்நூலின் வாசிப்புத் தமிழாக உள்ளது. அதனால்தான் என்னமோ மொழி யின் ஊடாக ஏராளமான கற்கள். அதனைத் தவிர்த்திருக்கலாம். அவசியம் வாங்கிப் படியுங்கள்.

(பூபாளம் புத்தகப் பண்ணை, 2027/ 6 வடக்கு ராஜவீதி, புதுக் கோட்டை – 622 001)

– கியூபா

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »