ஜம்பியாவின் அதிபராக ருப்பய்யா பண்டா
![]() |
![]() |
ருப்பய்யா பண்டா |
ஜம்பியா நாட்டின் இடைக்கால அதிபராக இருந்த ருப்பய்யா பண்டா அவர்கள் அதிபராகப் பதவியேற்றுள்ளார்.
கடந்த வியாழன் நடந்த தேர்தலில் அவர் சிறு வித்தியாசத்தில் வென்றதாகத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்துள் இரவரது பதவியேற்பு நடந்துள்ளது.
வறுமையையும் ஊழலையம் எதிர்த்துப் போராடுவேன் என்றும் வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தலில் இவருக்கு எதிராகப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் மைக்கல் சத்தா அவர்கள் வாக்குகள் திரும்ப எண்ணப்பட வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்திடம் போகவிருப்பதாகக் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியான எம்.எம்.டி கட்சி இது உணர்ச்சிகள் கொந்தளிக்கக் கூடிய ஒரு காலகட்டம் என்று கூறி, ஜம்பிய மக்கள் அனைவரையும் குழம்பாமல் இருந்து தேசிய ஐக்கியத்துக்கும் அமைதிக்கும் உதவும்படி கேட்டுள்ளது.
கலவரங்கள் மூளலாம் என்ற அச்சத்தில் தலைநகர் லுசாக்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் லெவி முவனவாஸ அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து பண்டா அவர்கள் இடைக்கால அதிபராகப் பதவியேற்றிருந்தார்.