Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 9th, 2006

Infant Dead in Police Station – West Bengal Government questioned by Human Rights organization

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

பச்சிளம் குழந்தை சாவு: மேற்கு வங்க அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

புதுதில்லி, டிச. 10: மேற்கு வங்க மாநிலம், ஹெளரா போலீஸ் நிலையத்தில் தாயிடம் விசாரணை நடத்தியபோது குழந்தை இறந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி ஹெளரா போலீஸ் நிலைய போலீஸôர் அந்த தாயிடம் விசாரணை நடத்தியபோது குழந்தை அழுதது. ஆனால் போலீஸôர் அந்தக் குழந்தைக்கு பால் கொடுக்க விடாமல் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினராம். இதனால் குழந்தை இறந்தது.

இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து இதுபற்றி இரண்டு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு மாநில தலைமைச் செயலர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Posted in Calcutta, Child, Government, Howrah, Human Rights, Infant, Law, Magazines, Media, MSM, Order, Police Station, WB, West Bengal | Leave a Comment »

Srilankan Eezham Refugees write Exam in Tamil Nadu

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

கல்வி ஆயுதத்துடன் வாழ்க்கையை வெல்லும் அகதிகள்

சென்னையில் திங்கள்கிழமை தேர்வு எழுதும் இலங்கை அகதி மாணவிக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்குகிறார் பள்ளிக் கல்விச் செயலர் குற்றாலிங்கம். உடன் (இடமிருந்து) இலங்கைத் துணைத் தூதர் பி.எம். அம்ஸô, இலங்கைத் தேர்வு ஆணையர் சனத் பூஜித, ஈழ ஏதிலியர் கழகப் பொருளாளர் சந்திரஹாசன். (வலது படம்) தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள்.

சென்னை, டிச. 10: குண்டு சத்தம். இலங்கை ராணுவத் தாக்குதல், போராளிகளுடன் இலங்கைப் படைகள் மோதல், ரணகளம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கைகளில் பிடித்துக் கொண்டு நகர்ந்த பள்ளி மாணவர்கள் புதிய போர்க்களத்தில் இறங்குகிறார்கள். அங்கே ஆயுதமாக இருப்பது பேனா.

களமாக இருப்பது தேர்வுக் களம்.

உள்நாட்டுப் போரினால், படிப்பும் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி தமிழகம் வந்துள்ள அந்த மாணவர்கள் சென்னையில் இருந்தபடியே “ஓ’ லெவல் எனப்படும் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதப் போகிறார்கள்.

சாந்தோம் ரோசரி சர்ச் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் குற்றாலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் சனிக்கிழமை வழங்கினார்.

இலங்கை மாணவர்கள் தங்களது நாட்டுப் பொதுத் தேர்வை வெளிநாட்டில் எழுதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள 98 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இலங்கையில் நடைபெறும் மோதல் காரணமாக அங்குள்ள மாணவர்களால் பள்ளிப் படிப்பை முடிக்க இயலவில்லை. பொதுத் தேர்வும் எழுத இயலாது.

இந்நிலையில், அவர்களுக்குக் கை கொடுக்க முன்வந்தது எஸ்.சி. சந்திரஹாசன் தலைமையிலான ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்.

தமிழகத்தில் உள்ள அகதிகள் தேர்வு எழுத அனுமதிக்கும்படி சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் பி.எம். அம்ஸô அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சயவிடம் அனுமதி கேட்டுப் பெற்றார்.

அதையடுத்து, அந்நாட்டிலிருந்து 6 ஆசிரியர்கள் தமிழகம் வந்தனர். அவர்களுடன் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத் தொண்டர்களும் இணைந்து பயிற்சி அளித்தனர். 24 ஆசிரியர்கள் இங்கு அவர்கள் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளை 45 நாளில் நடத்தி முடித்தனர். இத் தேர்வுக்கான புத்தகங்களை இலங்கை அரசு அனுப்பியுள்ளது.

இவர்களுக்கான தேர்வு டிசம்பர் 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், சமூகவியலும் வரலாறும் ஆகிய முக்கிய பாடங்களும் சுகாதாரம், சமயங்கள், கலைப் பாடங்கள், சுருக்கெழுத்து ஆகிய விருப்பப் பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

“”தேர்வுக்கு நன்றாகத் தயாராகியுள்ளதால், தேர்ச்சி பெறுவேன்” என்றார் ஒரு மாணவி. அடுத்த கட்டமாக “ஏ லெவல்’ (12-ம்) வகுப்புத் தேர்வையும் முடித்துவிட்டு, உயர்கல்வியைத் தொடர விருப்பம் என்று தெரிவித்தார் சுரேஷினி என்ற மாணவி.

இலங்கைத் தேர்வு ஆணையர்

“”இலங்கையில் பள்ளி இறுதிப் பொதுத் தேர்வுகள் டிசம்பர் மாதம்தான் நடைபெறும். இத்தேர்வு ஒரே சமயத்தில் நடைபெறும். இந்த ஆண்டு 5,25,000 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

இவர்களில் சென்னையில் 98 பேர் எழுதுகிறார்கள்.

அவர்களில் 63 பேர் மாணவிகள்.

இத் தேர்வுக்கான முடிவு 3 மாதத்தில் வெளியாகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 சதவீதம் ஆகும். தேர்வு விடைத்தாளை மறுமதிப்பீடு, மறு ஆய்வு செய்வதற்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்றார் இலங்கை தேர்வு ஆணையர் பி.சனத் பூஜித.

இத் தேர்வை முடிப்பவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வை இலங்கையில் தொடரலாம்.

இலங்கை திரிகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பல்வேறு இடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இத் தேர்வை எழுதுகிறார்கள்.

“”இலங்கை அகதிகள் தமிழகத்தில் மாநில அரசுக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து படிக்க அனைத்து ஏற்பாடுகளும் எளிமையாக உள்ளன. தாங்கள் அகதிகள் என்று சொன்னால் உடனடியாக அவர்களைப் பள்ளியில் சேர்த்து, படிப்புச் சொல்லித் தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் குற்றாலிங்கம் தெரிவித்தார்.

Posted in +2, Chennai, Eelam, Eezham, Exams, Higher Secondary, HSS, Madras, Refugees, Rehabilitation, School, Sri lanka, Srilanka, Tamil Nadu, Tamils, Thamizh | Leave a Comment »

65 Year old Youth imbibes invigorating new spirit among Village Youth

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஒரு வழிகாட்டி: கிராமங்களில் “அறிவு விதை’ விதைக்கும் 65 வயது “இளைஞர்’

ப. இசக்கி

திருநெல்வேலி, டிச. 10: கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் புத்தகக் கட்டுகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று விற்பனை செய்து பொருள் ஈட்டி வருகிறார் 65 வயது “இளைஞர்’ ரா.சண்முகவேல் (65).

இதில் என்ன இருக்கிறது? என நினைப்பவர்களுக்கு புதைந்திருக்கும் செய்தி ஒன்றல்ல, இரண்டு உண்டு. “வேலை இல்லை’ என முடங்கி கிடக்கும் சில இளைஞர்களுக்கு, இப்படியும் ஒரு வேலை இருக்கிறது என்பது முதல் பாடம்; தற்போதைய தொலைக்காட்சி யுகத்தில் கிராமத்து மக்களையும் படிக்கத் தூண்டும் வகையில் புத்தம் புது புத்தகங்களை அவர்களது இல்லங்களுக்கே கொண்டு சேர்த்து அறிவுப் பசியாற்றும் ஒரு வகை சேவை என்பது இரண்டாவது பாடம்.

ஒரு பாடத்தையும் போதித்து, “சேவை’யையும் செய்து வருபவர், ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த இடதுசாரி இயக்கத் தொண்டரான ரா.சண்முகவேல்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பள்ளி படிப்பு மட்டுமே படித்துள்ள இவர், இளம் வயதில் இயக்கப் பணிகளையும், குடும்பத் தொழிலான விவசாயத்தையும் பார்த்து வந்தார். இடதுசாரி இயக்கத்தில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக, “சோவியத் ரஷ்யா’ வெளியீடுகளுக்கு சந்தாதாரராகி புத்தகங்களைப் பெற்றார். அதைக் கொண்டு உள்ளூரில் ஜீவா படிப்பகத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து புத்தகங்கள் மீது ஏற்பட்ட நாட்டத்தால், அருகில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று இடதுசாரி சிந்தனை புத்தகங்களை விற்றார். நாள்கள் செல்லச்செல்ல வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்கும் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒரு பிடிப்பு ஏற்படவே அதுவே அவரது நிரந்தர தொழிலாகிவிட்டது.

சண்முகவேல், கிராமம் கிராமமாக சைக்கிளில் சென்று புத்தகம் விற்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் 25 வயது இளைஞர் போல நாளொன்றுக்கு 100 முதல் 120 கி.மீ. தூரம் சைக்கிளில் சுற்றி வந்து புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார் இந்த “செஞ்சட்டை’ சண்முகவேல். இதில் இவருக்கு மாத வருமானம் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கிடைக்கிறதாம்.

“”பாலியல் புத்தகங்கள் தவிர அனைத்து வகை புத்தகங்களையும் வாங்கி விற்கிறேன். ஆசிரியர்கள், பெரிய மனிதர்கள், வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் என்னிடம் புத்தகங்களை வாங்குவார்கள். நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. பெண்கள் அதிக புத்தகங்களை வாங்குவார்கள். கடனும் உண்டு, சில வேளைகளில் தள்ளுபடியும் உண்டு. காந்திஜியின் “சத்திய சோதனை’க்கு இன்னும் கிராக்கி உள்ளது.

வாடிக்கையாளர்கள் கேட்கும் புத்தகங்கள் திருநெல்வேலி, மதுரை என எங்கிருந்தாலும் அதையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். பள்ளி, கல்லூரிகளிலும் விற்பனை செய்வேன்.

புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, நகரங்களுக்குச் சென்றால்தான் புத்தகங்கள் கிடைக்கும் என்றல்ல. அவர்களது வீட்டுக்கே புதிய புதிய புத்தகங்களை கொண்டு சேர்க்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் புத்தகங்களைப் படித்துவிடுவேன். அப்போதுதான் வாடிக்கையாளர்களிடம் பேச முடியும்.

இத் தொழிலை நான் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். ஒரு குறையும் இல்லை. எனது 2 மகள்களை படிக்கவைத்து திருமணமும் முடித்துவிட்டேன் என் மனைவி லட்சுமி, உள்ளூர் அஞ்சல் நிலையத்தில் கிளை அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.

இத் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கிறது. வேலை இல்லை, வேலை இல்லை என சொல்பவர்கள் இப்படி புத்தகங்களை வாங்கி ஊர் ஊராகச் சென்று விற்றாலே நிறைய சம்பாதிக்கலாம். இந்தக் காலத்து இளைஞர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்” என மடை திறந்த வெள்ளமாய் பேசிவிட்டு புத்தக விற்பனைக்குப் புறப்பட்டார் சண்முகவேல்.

Posted in Action, Bicycle, Bike, Books, Bookseller, City, Doer, Gandhi, Good, Great, Icon, Inspiration, Jobs, Leader, Mahathama Gandi, Mahatma, MK Gandhi, Motivation, Old, Shanmugavel, Suburban, True, unemployment, Village, Words, Young | Leave a Comment »

Kasthuriraja’s ‘Ithu Kaathal Varum Paruvam’ should be banned from public screening due to Sexy Scenes

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

“இது காதல் வரும் பருவம்’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

சேலம், டிச. 10: “இது காதல் வரும் பருவம்’ என்ற திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். படத்தின் சுவரொட்டிகள் எரிக்கப்பட்டன.

கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவான “இது காதல் வரும் பருவம்’ படத்தில் நடிகை கிரண் மற்றும் புதுமுக நடிகர், நடிகையர் நடித்துள்ளனர். இப் படத்தில் வரும் காட்சிகள் ஆபாசமாக இருப்பதாகவும், மாணவ, மாணவியரிடையே தவறான போக்கை உருவாக்கும் எனக்கூறியும் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில், அப் படத்துக்கு தடை விதிக்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்தய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்க மாநகரத் தலைவர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். ஜனநாயக மாதர் சங்கச் செயலர் ஞானசெüந்தரி, சிஐடியூ மாவட்ட துணைச் செயலர் ராஜ், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலர் அசோகன், இளைஞர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பாரதிகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Posted in Ban, Extramarital, Flesh, Glamor, Intercourse, Ithu Kathal varum Paruvam, Kasthoori raja, Kasthuri Raja, Pictures, Relationships, Salem, Sex, Tamil Cinema, Tamil Movie, Young, Youth | Leave a Comment »

Malaysia Magazines disgusted with Indian Cinema Stars Activities

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

இந்திய நட்சத்திரங்களின் நடவடிக்கையால் மலேசிய பத்திரிகைகள் அதிருப்தி

மலேசியா, டிச. 10: மலேசியாவில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நட்சத்திர கலைநிகழ்ச்சியில் இந்திய நடிகர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து மலேசிய பத்திரிக்கைகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

பாலிவுட் நட்சத்திரங்களின் மனநிலை மோசமான திரைக்கதையைப் போல் இருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்துள்ளது மலேசிய செய்தித்தாளான ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்.

இந்தி திரைப்பட உலகின்(பாலிவுட்)நட்சத்திரங்களான

  • சல்மான் கான்,
  • ஜான் ஆபிரகாம்,
  • பிபாஷா பாசு,
  • அர்பாஸ் கான்,
  • சோகைல் கான்,
  • ஹேமாமாலினி,
  • ஈஷா தியோல் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேலும், இந்தித் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கு கொள்ளும் நட்சத்திரத்துடன் ஒரு நாள், பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடல், சிவப்பு கம்பள வரவேற்பில் மேடை நிகழ்ச்சி ஆகியவைகள் நடத்தவும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.

2 மணி நேரம் காத்திருந்தனர் இந்த நிகழ்ச்சிக்காக நட்சத்திரங்களை பேட்டி கான மலேசியாவில் உள்ள உள்நாட்டு பத்திரிக்கைகள், தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவைகள் சுமார் இரண்டரை மணி நேரம் ஹோட்டலில் காக்க வைக்கப்பட்டனர்.

மேலும், நடிகர்கள் ஜான் ஆபிரகாம், ரவிசோப்ரா ஆகியோர் பத்திரிக்கையாளர்களிடம் ஆத்திரத்துடன் நடந்துகொண்டதும், நடிகர் சல்மான் கான் 2 நிமிஷத்தில் வந்து விடுவார் எனக் கூறி 20 நிமிஷத்தில் வந்ததும் மலேசிய பத்திரிக்கைகளை அதிருப்தியின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளன.

“” இந்திய நேரப்படி 2 நிமிஷத்தில் நடிகர் சல்மான் கான் வருவார் என்று கூறினால் 20 நிமிஷங்கள் என்று அர்த்தமா. அவருக்கு விருப்பப்பட்ட நேரத்தில் தான் வருவாரா என்று செய்தி வெளியிட்டுள்ளது ஒரு நாளிதழ்.

மேலும், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டவுடன் ரவி சோப்ராவின் மொபைல் போன் ஒலித்தது. உடனை அவர் கேள்விக்கு பதில் அளிக்காமல் மொபைல் போனை எடுத்து பேசத்தொடங்கியது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை வருத்தமடையச்செய்துள்ளது. சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்காக நட்சத்திரங்களை மேடையில் காண ரசிகர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பொறுமையுடன் காத்திருந்தனர்.

இது போல மோசமாக வேறு எங்காவது நடக்குமா? பாலிவுட்டில் மட்டுமே நடக்கும் என்று ஒரு நாளிதழ் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

Posted in Actors, Actresses, Attitude, Bollywood, Cinema, Disgust, Film Performers, Hindi Actors, Hindi Cinema, Hindi Movies, John Abraham, Misconduct, Performance, Ravi Chopra, Red Carpet, Salman Khan, South Asia, Stars, Stars Festival | Leave a Comment »