Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 8th, 2006

Dance Master Raguram’s daughter – Gayatri Raghuram Marriage

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

நடிகை காயத்ரிரகுராம் திருமணம்: நடிகர், நடிகைகள் வாழ்த்து 

சென்னை, டிச.8- பிரபல தமிழ் நடிகை காயத்ரி ரகுராம். விசில், ஸ்டைல், சார்லிசாப்ளின்,பரசுராம் உள்ளிட்ட படங்களில்நடித் துள்ளார். இவர் டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் ஆவார்.

சில வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு முழுக்கு போட்டார். அமெரிக்காவில் தொழில் கல்வி படிக்கச் சென்றார். காயத்ரிரகுராமுக்கும் அமெரிக்காவில் கம்ப்ïட்டர் என்ஜினீயராக பணியாற்றும் தீபக்குக்கும் திருமணம் நிச் சயிக்கப்பட்டது.

காயத்ரி ரகுராம்-தீபக் திருமணம் சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இன்று காலை நடந்தது.

  • நடிகர் எஸ்.வி.சேகர்,
  • நடிகைகள் குஷ்பு,
  • ஸ்ரீபிரியா,
  • சுகாசினி,
  • டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை அதே மண்டபத்தில் நடக்கிறது.

Posted in America, Charlie Chaplin, Cine actress, daughter, Deepak, Gayathri, Gayatri Raghuram, Mariiage, Photos, Pictures, Prabhudeva, Raguram, Reception, Santhome, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, USA, Visil, Whistle | Leave a Comment »

Tamil Nadu supplementary Budget for Rs. 1,158 Crores – Details

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

சட்டசபையில் தாக்கல்: ரூ. 1,158 கோடிக்கு துணை பட்ஜெட்

சென்னை, டிச. 6- தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ. 1157.95 கோடி அளவுக்கு நிதி ஒதுக்க இதில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், மற்றும் அடுப்பு கள் வழங்குவதற்காக ரூ. 60 கோடி அனுமதித்துள்ளது.

* மீன்பிடி தொழில் அதிகம் இல்லாத மாதங்களில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 993 மீனவ மகளிருக்கு உதவித் தொகை வழங்குவதற்காக ரூ. 12 கோடியே 36 லட்சம் அனுமதித்து உள்ளது.

* தமிழில் பெயர் சூட்டப் படும் தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 30 கோடி ஒதுக் கீடு செய்யப்படுகிறது.

* விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற் காக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு கடனாக ரூ. 200 கோடி வழங்க அரசு அனுமதித்துள்ளது.

* தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பங்கு மூலதன உதவி வழங்குவதற்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* கரும்புக்கான உயர்த்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரை விலையை விவசாயிகளுக்கு வழங்க கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 89 கோடியே 2 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

* மாணவர்களுக்கான பயண அனுமதிக்குரிய பஸ் கட்டணத்தை மாநில போக்குவரத்து நிறுவனங் களுக்கு அளிக்க ரூ. 100 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் திருமண உதவி நிதிக்காக ரூ. 10 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

* அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக கலெக்டர் களுக்கு தன் விருப்ப மானிய மாக அரசு ரூ. 56 கோடியே 51 லட்சம் அனுமதி அளித் துள்ளது.

* சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கான ஒதுக்கீடு ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 1 கோடியே 20 லட்சம் என அரசு உயர்த்தி உள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ. 103 கோடியே 51 லட்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Posted in Agriculture, Anbazhagan, Assistance, Budget, Busniess, Campaign, Collectors, Crore, Details, DMK, Economy, Electricity, Entertainment Tax, Finance, Fishery, Fishing, Free, Gas, Government, Grain, Karunanidhi, Loan, MPLAD, Paddy, promises, Propaganda, Schemes, Stove, Students, Subsidy, Sugarcane, supplementary, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, TNEB, Women | 1 Comment »

Ndigar Sangam Collection Fund – Stars to perform

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

நடிகர் சங்க கட்டிட நிதிதிரட்ட நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலைவிழா

சென்னை,டிச.8- நடிகர் சங்கம் தொடங்கி 54 ஆண்டுகள் ஆகிறது. தியாகராய நகர் அபிபுல்லாசாலையில் இச் சங்கத்துக்கு சொந்தமான கட்டிடம் பழுதாகியுள்ளது அதை இடித்து தள்ளி 5மாடி யில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற் றுள்ள

  • சரத்குமார்,
  • பொதுச் செயலாளர் ராதாரவி,
  • துணைத்தலைவர்கள் மனோரமா,
  • விஜயகுமார்,
  • பொருளாளர் காளை ஆகியோர் புதிய கட்டிடம் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சங்க கட்டிடத்தில் செயல் படும் கேண்டீன், டப்பிங் ஸ்டூடியோ, போன்றவற்றை காலி செய்யுமாறு சரத்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஓரிரு மாதங்களில் புது கட்டிடம் கட்டும்பணி தொடங்க உள்ளது. கலையரங்கம், மினி தியேட்டர், நூலகம், தங்கும் விடுதிகள் போன்றவை 5மாடி கட்டிடத்தில் அமைய் உள்ளன.

புதிய கட்டிடம் கட்ட பல கோடிகள் செலவாகும். நடி கர் சங்கத்தில் தற்போது 3062 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் சந்தாதொகை வசூலிக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தின் கடந்த வருட கணக் குப்படி 1கோடியே 64லட் சத்து 69 ஆயிரத்து 871 ரூபாய் இருப்பு இருந்தது. இவற்றில் சங்க உறுப்பினர்கள் குழந் தைகளுக்கு கல்வி உதவி தொகை, மருத்துவஉதவி தொகை போன்றவை வழங் கப்படுகின்றன.

எனவே புது கட்டிடத்திற்கு நிதிதேவை அதிகம் உள்ளது. ஏற்கனவே பாங்கியில் வாங்கி அதற்காக பெருந் தொகை வட்டியாக கொடுக் கப்பட்டதால் மீண்டும் கணிச மான தொகை கடனாக வாங்குவதில் மெஜாரிட்டி உறுப்பினர்களுக்கு உடன்பாடு இல்லை.

நடிகர், நடிகைகள் பங்கு பெறும் நட்சத்திர கலைவிழா நடத்தி கட்டிடம் கட்ட நிதி திரட்டலாம் என்று அவர்கள் யோசனை தெரிவித்துள்ள னர். இது குறித்து சமீபத்தில் நடந்த நடிகர்,சங்க செயற்குழு வில் விவாதிக்கப்பட்டது. இந்த மாதம் இறுதியில் கூடும் செயற்குழுவில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

சென்னை, மதுரை, கோவை ஆகிய ஏதேனும் ஒரு நகரில் நட்சத்திரகலை, விழாவை நடத்தலாம் என்றும் சில உறுப்பினர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் கலை விழாவை நடத்தலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளன.

நடிகர்சங்கத்தில் மாளவிகா, டைரக்டர் டி.பி.கஜேந்திரன் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

Posted in Collection, Construction, FEFSI, Festival, Fund, Improvements, Income, Malavika, manorama, Nadigar Sangam, Radha Ravi, Sarathkumar, Shows, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Tamil Pictures, Thamizh Movies, TP Gajendran, Vijayakumar | Leave a Comment »

Law & Order vs Political Influence vs Business Economic Might vs People Power

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

குடியின் அலட்சியம், கோலின் ஆணவம்

அ.கி. வேங்கட சுப்ரமணியன்

“”மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்; தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை” என்ற தலைப்பில் 25-11-2006 தினமணியில் முதல் பக்கத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்ட கட்டடங்களை அங்கீகரிக்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த போது உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுரைதான் இது. உச்ச நீதிமன்றம் மேலும் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.

“”சட்டத்தை மீறிச் செயல்படுவதற்கு அனுமதியளித்து, சென்னை நகரின் அழகையே கெடுத்து விட்டீர்கள். மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். நாடு வாழட்டும். கொஞ்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முன்பு இருந்த நிலையையும், இப்பொழுது இருப்பதையும் பாருங்கள். நகரமே இப்பொழுது வாழ முடியாதபடி ஆகிவிட்டது. சட்டத்தை அமல்படுத்தாத நிலையில், கட்டட விதிகளுக்கும், நகரத் திட்டமிடலுக்கும் என்ன அவசியம் வேண்டியிருக்கிறது?”

உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள நிலை ஒரு நாளில் ஏற்பட்டதல்ல. ஒரு தலைமுறை காலத்தில் ஏற்பட்ட நிலை இது.

1971ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புறத் திட்டமிடல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தின் 113-வது பிரிவின் கீழ் அரசுக்கு எந்த நிலத்திற்கோ, கட்டடங்களுக்கோ சட்டத்தின் எல்லா பிரிவுகளில் இருந்தும் விதிவிலக்கு அளிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொடுக்கப்பட்ட அதிகாரம் “”எந்த நெறிமுறையும் இல்லாமல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரிவைச் செல்லாததாக்க வேண்டும்” என்று கோரி சென்னையில் உள்ள நுகர்வோர் நடவடிக்கைக் குழு (Consumer Action Group) உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. தனது வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் 1-7-87க்கும் 29-1-1988க்கும் இடையில், 62 அரசாணைகள் மூலம், பல கட்டடங்களுக்குச் சட்டத்தின் நோக்கத்திற்குப் புறம்பாக விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்ததையும் குழு சுட்டிக்காட்டியது. குறிப்பாக 31-12-1987 அன்று மட்டும் 73 ஆணைகள் இவ்வாறு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி அதில் 36 ஆணைகளை உச்ச நீதிமன்றத்தில் குழு தாக்கல் செய்தது. குழு தாக்கல் செய்த அரசாணைகளைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம் “”ஒவ்வோர் ஆணையும் சட்டமும் குறிப்பிட்ட வரையறைகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு உரிய கவனம் செலுத்தப்படாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளன” (Each of these orders reveals non application of mind by giving total go-by to the rules…) என்று கண்டனம் தெரிவித்து, அந்த 62 ஆணைகளையும் தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுதே தமிழக அரசு 1998ல் 113அ என்ற ஒரு புதுப்பிரிவைக் கொண்டு வந்தது. இந்தப் பிரிவின்படி சதுரமீட்டருக்கு ரூ. 20,000 வரை செலுத்தி சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குமுறை செய்ய முடியும். இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் அரசால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. “”சுமார் 3 லட்சம் கட்டடங்கள் (கட்டப்பட்ட கட்டடங்களில் ஏறக்குறைய 50 சதவிகிதம்) விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருக்கின்றன. இவை இடிக்கப்பட வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகளுக்குள் நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். நிர்வாகக் காரணங்களினால் இவற்றை இடிக்க முடியாது. எனவே, இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பாக, அதாவது 28-2-1999க்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களை உரிய கட்டணம் வசூலித்து ஒழுங்குபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.”

இந்தக் காரணங்கள் நிர்வாகத் தோல்வி (Administrative Failure), கட்டுப்படுத்துவதில் திறமையின்மை (Regulatory inefficiency), கண்டிப்பில்லாத போக்கு (Laxity) ஆகியவற்றையே சுட்டிக்காட்டுகின்றன என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இவ்வாறு விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை ஒரே ஒரு முறை ஒழுங்கு செய்யலாம் (One time Measure) என்றும் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் 18-8-2000 அன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் எந்தச் சலசலப்பையோ, விவாதத்தையோ உருவாக்கவில்லை. அரசும் சட்டத்தை முறையாக அமல்படுத்த எந்த ஒரு திட்டத்தையும் தீட்டவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, அரசு 2000 ஆண்டில், 31-8-2000 வரை, விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களையும் ஒழுங்குபடுத்தலாம் என ஓர் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டம் கொண்டு வந்ததற்கான காரணம்: ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலக்கெடுவான 28-2-1999க்குள் கட்டப்பட்ட கட்டடங்களில் உரிய காலத்திற்குள் 5474 விண்ணப்பங்களே பெறப்பட்டன என்பதும், ஒழுங்குபடுத்துவதற்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது என்பதுமாகும். இந்தக் கட்டணமும் வெகுவாகக் குறைக்கப்பட்டது.

அதன்பின் மீண்டும் ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் இந்தக் காலக்கெடு 31-7-2001 வரை நீட்டப்பட்டது. மீண்டும் இன்னொரு சட்டத்திருத்தத்தின் மூலம் இந்தக் காலக்கெடு 31-3-2002 வரை நீட்டப்பட்டது.

இவ்வாறு தொடர்ந்து காலக்கெடுவை நீட்டிப்பதை எதிர்த்து நுகர்வோர் நடவடிக்கைக் குழு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதைப் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு 2000, 2001, 2002 ஆண்டுகளில் பிறப்பித்த சட்டத்திருத்தங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்றும், அவை விலை கொடுத்தால் விதிகளை மீறலாம் (Priced amnesty) என்ற நிலையை உருவாக்கியுள்ளன என்றும் போதுமான விண்ணப்பங்கள் வராவிட்டால் விண்ணப்பங்களை அளிக்கக் காலக்கெடுவை நீட்டலாமே ஒழிய விதிகளை மீறிக் கட்டிய கட்டடங்களின் காலக்கெடுவை நீட்டிப்பது முறையல்ல என்றும் கூறி 28-2-1999க்குப் பிறகு கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குபடுத்தி பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துத்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

நுகர்வோர் நடவடிக்கைக் குழு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் “”இந்த மனு மூலம், விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களுக்குத் தனது நிர்வாக அதிகாரத்தைத் தாறுமாறாகப் பயன்படுத்தி (indiscriminately) விதிவிலக்கு அளித்தாலும் தனக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்ற ஆணவப் போக்குடன் (impunity) அரசு செயல்படுவதை மனுதாரர் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

தான் என்ன செய்தாலும் தனக்கு அதனால் எந்தப் பாதிப்பும் வராது, யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஓர் ஆணவப் போக்கு ஓர் அரசுக்கு எவ்வாறு வருகிறது? அரசு தவறு செய்தால் அதைத் தட்டிக் கேட்பது, சட்டமன்றமும் நீதிமன்றமும். இந்த நிகழ்வில் சட்டமன்றம்தான் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்திருத்தங்கள் தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சிகளின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளன.

நீதிமன்றமும் தட்டிக் கேட்க முடியும். ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு வர நெடுங்காலமும் ஆகும். 1987 இறுதியில் நடந்த முறைகேடான விதிவிலக்கு ஆணைகள் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2000 ஆண்டு ஆகஸ்டில்தான் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் தீர்ப்பை முடக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வரும் அரசியல் கலாசாரமும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

அரசைத் தட்டிக் கேட்கும் பொறுப்பும், உரிமையும் குடிமக்களாகிய நமக்குத்தான் அதிகம். 2000 ஆண்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகும், குடிமக்கள் குரல் எழுப்பவில்லை. முறைகேடாக, பொதுநலத்திற்கு மாறாக, விதிகளை மீறிக் கட்டிய கட்டடங்களுக்கு விதிவிலக்கு அளித்தது பற்றி தட்டிக் கேட்கவில்லை. எனவே, அதே ஆண்டிலும், அடுத்த இரண்டு ஆண்டிலும், இந்த விதிமீறலுக்கு விலை வைத்து விதிவிலக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டது. அப்பொழுதும் குடிமக்கள் அலட்சியமாக இருந்தார்கள். இதனால் தனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற அரசின் ஆணவப் போக்கு அதிகரித்தது. குடியின் அலட்சியமே கோலின் ஆணவமாக உருமாறும்.

Posted in Administrative Failure, Ak Venaktasubramanian, AK Venkatasubramanian, Business, Consumer Action Group, Corruption, Courts, Dinamani, Economy, impunity, Law, Laxity, misuse, One time Measure, Op-Ed, Order, people, Politics, Power, Priced amnesty, Regulatory inefficiency, Rule | Leave a Comment »

10 Cabinet Ministers & 93 MPs have Criminal Cases in various Courts

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

பல்வேறு குற்ற வழக்கில் 10 மத்திய அமைச்சர்கள், 93 எம்.பி.க்கள்

புதிதில்லி, டிச. 8: பல்வேறு குற்ற வழக்குகளில் 10 மத்திய அமைச்சர்களும், 93 எம்.பி.க்களுக்கும் விசாரணையை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சராக இருந்த சிபு சோரன் மற்றும் சித்து எம்.பி. ஆகியோருக்கு கொலை வழக்கில் அண்மையில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்களான

  • முகம்மது அலி அஷரப் (கடத்தல்-பணம் பறிப்பு),
  • சங்கர் சிங் வகேலா (லஞ்ச வழக்கு),
  • லாலு பிரசாத் (ஊழல் வழக்கு),
  • ரேணுகா செüத்ரி (அரசு ஊழியரை மீது தாக்குதல்),
  • சரத் பவார் (மத ரீதியான வழக்கு) உள்ளிட்ட 10 அமைச்சர்கள் குற்ற வழக்கில் சிக்கி உள்ளனர்.

அதேபோல எம்.பி.க்களில் சாது யாதவ், பப்பு யாதவ் உள்ளிட்ட 93 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Posted in abuse, Cabinet, Congress (I), Corruption, Court, High Court, India, Justice, Lalu prasad Yadav, Law, Manmohan Singh, Ministry, Navjot Singh Siddhu, NCP, Order, Politics, Power, Renuka Chowdhry, Sharad Pawar, Shibu Soren, Supreme Court, UPA, Waghela | Leave a Comment »

CPI hails CPI(M) stand not to associate with Mulayam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

முலாயம் அரசுக்கு எதிராக வி.பி.சிங் 5 நாள் பிரசாரம்

மசூரி, டிச. 8: உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆட்சிக்கு எதிராக 5 நாள் பிரசாரத்தை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் வியாழக்கிழமை துவக்கினார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அவர் இந்தப் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளார். ஜன் மோர்ச்சா கட்சி தலைவரும், நடிகருமான ராஜ் பாப்பரும் இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஜன் மோர்ச்சாவை ஆரம்பித்து அதற்கு தலைவராகி உள்ளார் ராஜ்பாப்பர்.

5 நாள் பிரசார யாத்திரையில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

உ.பி.சட்டசபை தேர்தல்: முலாயம்சிங்கை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம்

புதுடெல்லி, டிச.6- பாராளுமன்ற வளாகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார்.

அங்கு அவர் உத்தரபிரதேச முதல்-மந்திரி முலாயம்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தேசிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே இன்று நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமர்சிங்கை நிருபர்கள் சந்தித்து ஜெயலலிதா-முலாயம்சிங் சந்திப்பு குறித்து கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அமர்சிங் “உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பிரசாரம் செய்யவரும்படி ஜெயலலிதாவை அழைத்தோம். அவர் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டார். எனவே எங்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்” என்றார்.

Posted in AB Bardhan, ADMK, AIADMK, Assembly elections, BSP, Communism, Communist, Communist parties, Communists, CPI, CPI (M), CPI(M), Dalit, Indian Justice Party, Indian Muslims, Jan Morcha, Jayalalitha, Mayavathi, Mayavathy, MGR, Mulayam Singh Yadav, NCP, Rahul Gandhi, Raj Babbar, Raj Bappar, Rajinder Sachar committee report, Samajwadi Party, UP, Uttar Pradesh, Uttaranchal, VP Singh, Women's Reservation Bill | Leave a Comment »