Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 19th, 2006

70 Hindu Temples to be destroyed in Malaysia – National Heritage Act

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

மலேசியாவில் 70 இந்து கோவில்களை இடித்து அகற்ற உத்தரவு

கோலாலம்பூர், டிச. 19-

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலே சியா 1957-ம் ஆண்டு ஆங்கி லேயரிடம் இருந்து விடு தலை பெற்றது. 1965-ம் ஆண்டு சில பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக மலேசியா உருவானது. 3 லட்சத்து 30 ஆயிரத்து 434 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 2 கோடியே 75 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

இதில் 8 சதவீதம் பேர் இந்தியர் களாகும். குறிப்பாக தென் இந்தியாவை சேர்ந்த வர்கள் அதிகமாக வசிக்கி றார்கள். இவர்கள் அங்குள்ள தங்கள் வசிக்கும் பகுதிகளில் இந்து கோவில்களை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான கோவில் கள் சாலை ஓரங்களில் உள்ளன. பூங்காக்களில் உள்ள மரங்களை இணைத்தும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் அனுமதி பெறா மல் கட்டப்பட்டவை ஆகும்.

தற்போது சாலை மேம்பாடு பணி நடந்து வருவதால், விதி முறையை மீறி கட்டப்பட்ட இந்து கோவில்களை இடித்து அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக 70 இந்து கோவில் கள் இடிக்கப்படும் என்று தெரிகிறது.

கோவில்களை இடிக்க கூடாது என்று மலேசியா வாழ்இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களாக போராட்டம் நடந்தது. இதற்கிடையே உதய குமார் என்பவர் இந்து கோவில்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோலாலம்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் வரும் தீர்ப்பை பொறுத்தே இந்து கோவில்கள் இடிக்கப்படுமா இல்லையா என்பது தெரிய வரும்.

Posted in Asean, Construction, Hindu, Hinduism, Illegal, Immigrants, India, Malaysia, South east Asia, Tamil, Temples, Worship | 4 Comments »

Vijayganth’s Marriage Hall demolition to make way for Traffic Congestion – Rs 8.55 Crores compensation to be paid

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

திருமண மண்டபம் இடிப்பு: விஜயகாந்த்துக்கு ரூ.8.55 கோடி நஷ்டஈடு திங்கட்கிழமை வழங்கப்படுகிறது

சென்னை, டிச. 16-

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்காக சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கத்திப்பாரா சந்திப்பு, பாடி, விமான நிலையம் எதிரில் தற்போது பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த வரிசையில் கோயம்பேடு சந்திப்பிலும் மிக பிரமாண்டமான, நவீன அடுக்கு மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக கோயம்பேடு சந்திப்பு பகுதியில் உள்ள 165 பேரின் நிலம் மற்றும் கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தி உள்ளது.

165 பேரின் கட்டிடங்களில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபமும் ஒன்றாகும். இந்த திருமண மண்டபத்தின் ஒரு பகுதி, சாலை விரிவாக்கத்துக்கு தேவைப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறியது. இதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்தார்.

மண்டபத்தை இடிக்காமல் மேம்பாலம் கட்டலாம் என்று கூறிய அவர், அதற்காக மாற்றுத்திட்டம் ஒன்றை வரையறுத்து, அதை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி டி.ஆர்.பாலுவுக்கு அனுப்பினார். அந்த மாற்றுத் திட்டத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அது சாத்தியப்படாது என்று கூறி நிராகரித்து விட்டனர்.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் வருவாய் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து கோயம்பேடு பகுதியில் நிலத்தை கையகப்படுத்தவும், அதற்குரிய நஷ்ட ஈட்டை அளிக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். பாலத்துக்காக நிலத்தை இழக்கும் 165 பேருக்கும் வருவாய் துறை நோட்டீசு அனுப்பி உள்ளது.

அதில், நிலத்தை கையகப்படுத்துவதற்காக தரப்படும் நஷ்டஈடு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அவர் மனைவி பிரேமலதா பெயரில் இருப்பதால் அவருக்கு கடந்த 8-ந்தேதி வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்துவதற்கு நஷ்டஈடாக ரூ. 8.55 கோடி வழங்கப்படும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து ரூ. 8.55 கோடி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பிரேமலதாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ. 8.55 கோடி தொகை டி.டி. மூலம் வழங்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பிரேமலதா தரப்பில் இருந்து ஏதேனும் பதில் வந்ததா? என்று கேட்டதற்கு, “இதுவரை எந்த தகவலும் வரவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலம் கையகப்படுத்துவதற்காக மொத்தம் ரூ. 23 கோடி இழப்பீடு வழங்க தேசிய நெடுஞ்சாலை துறை முன் வந்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் உள்ள 20 பேரும் தங்கள் இடத்தை கொடுக்க உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் வரும் திங்கட்கிழமை இழப்பீடு தொகை வழங்கப்படும். ஒரிஜினல் நிலப்பத்திரத்தை காட்டி இவர்கள் இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்கப்பட்டதும் கோயம்பேடு சந்திப்பை சுற்றி உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி விரைவில் தொடங்கும். அவை முழுமையாக அகற்றப்பட்டதும் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்படும்.

Posted in acquisition, Andaala Azhagar, Congestion, Demolition, DMDK, flyover, Highways, Kathipaara, Koyambedu, Land, Maduravayal, Marriage Hall, NHD, Premalatha, RTO, Tamil, Traffic, Transportation, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »

Doha Asiad ’06 – India’s Medal Tally improves by 19

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

இந்தியாவுக்கு கடந்த போட்டியை விட 19 பதக்கங்கள் அதிகம்

டோகா, டிச. 16-

டோகா நகரில் நடந்து வந்த ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 165 தங்கம் உள்பட 316 பதக்கங்களை பெற்று சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. 58 தங்கம் உள்பட 193 பதக்கங்களுடன் தென் கொரியா 2-வது இடத்தையும், 50 தங்கம் உள்பட 198 பதக்கங்களுடன் ஜப்பான் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவுக்கு 8-வது இடம் கிடைத்து உள்ளது. 10 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்கள் கிடைத்து உள்ளன.

2002-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 10 தங்கம் உள்பட 35 பதக்கம் கிடைத்து இருந்தன. இந்த போட்டியல் கூடுதலாக 19 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்து உள்ளன.

இருந்தாலும் தர வரிசை அடிப்படையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த போட்டியிலும் 8-வது இடத்தைதான் பிடித்தது. இந்த தடவையும் அதே இடம்தான் கிடைத்து உள்ளது.

1998-ம் ஆண்டு போட்டியில் இந்தியா 7 தங்கம் உள்பட 35 பதக்கம் பெற்றிருந்தது. அப்போது 9-வது இடத்தில் இருந்தது.

Posted in 2006, Asiad, Asian Games, athletics, China, Doha, India, Japan, Medal, Rank, South Korea, Sports, Tally, Tamil | Leave a Comment »

Prashanth – Grahalakshmi : Counseling to avoid Divorce – A quick end to the Cine Star’s marriage life

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

மனைவியுடன் சமரச பேச்சுவார்த்தை: நடிகர் பிரசாந்த் பேட்டி

சென்னை, டிச.19-

பிரசாந்த்-கிரகலட்சுமி இடையே சமீபத்தில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கிரகலட்சுமி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று பிரசாந்த் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் கடந்த மாதம் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் நடந்தது. அப்போது பிரசாந்த்-கிரகலட்சுமி இருவரும் நேரில் ஆஜ ரானார்கள். அவர்களை நீதிபதி தனி அறையில் சந்தித்து விசாரித்தார்.

அவர்கள் இருவரின் பிரச் சினைகளை கேட்டு அறிந்தார். பிறகு பிரசாந்த்-கிரகலட்சுமி இரு வரையும் தனியாக சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து பிரசாந்தும் சிரகலட்சுமியும் சந்தித்துப் பேசினார்கள். பிரசாந்த் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கிரகலட்சுமி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஜனவரி 3ந் தேதி பதில் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பிரசாந்த் இன்று பகல் 12.10மணிக்கு குடும்பநல கோர்ட்டுக்கு வந்தார். அவரிடம் வக்கீல் ஆனந்தனும் வந்தார்.

கோர்ட்டில் உள்ள மனுத்தாக்கல் பிரிவுக்கு சென்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய தயாரானார். அப்போது செல்போனில் அவருக்கு ஒரு தகவல் வந்தது.

இதையடுத்து மனு தாக்கல் செய்யாமல் பிரசாந்த் வெளியில் வந்தார். அவரை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது பிரசாந்த் கூறியதாவது:-மனைவியுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்தேன். அதற்காகத்தான் கோர்ட்டுக்கே வந்தேன்.

எனது குழந்தையை பார்க்க முடியவில்லை. ஒரு தந்தை என்ற முறையில் குழந்தையை பார்க்காமல் இருப்பது மன வருத்தம் அளிக்கிறது. பல தடவை முயன்றேன். ஆனால் அவர்கள் குழந்தையை காட்டவில்லை. எனவே தான் குழந்தையை பார்க்க அனுமதி கேட்டு இன்று மனு தாக்கல் செய்ய வந்தேன்.

திடீரென்று அவர்கள் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக எனக்கு தகவல் வந்தது. நல்ல முடிவு வரட்டும் என்று நான் மனு தாக்கல் செய்யவில்லை. இன்று மாலை நாங்கள் சந்திக்கிறோம். அதன்பிறகு என்ன தகவல் என்பதை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு நடிகர் பிரசாந்த் கூறினார்.

நடிகர் பிரசாந்த் மனைவி கிரகலட்சுமிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி இருந்தார். அதற்கு பதில் அளிக்க கிரகலட்சுமி தரப்பில் அவகாசம் கேட்கப் பட்டது. ஜனவரி 3-ந்தேதி வரை நீதிபதி அவகாசம் அளித்தார். பிரசாந்த் குற்றச் சாட்டுக்கு கிரகலட்சுமி அளிக்கும் பதில் 3-ந்தேதி தெரியும்.

அதற்கு முன்பு பிரசாந்த் வழக்கு பற்றி பத்திரிகைளுக்கு கருத்து சொன்னால் கோர்ட்டு அவமதிப்பாகி விடும் என்று வக்கீல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே தான் கிரகலட்சுமி அமைதியாக இருக்கிறார். 3-ந்தேதி தனது தரப்பு விளக் கத்தை கோர்ட்டில் வெளி யிடுகிறார்.

கிரக லெட்சுமியும் வந்தார்: நடிகர் பிரசாந்த் கோர்ட்டில் ஆஜர்

சென்னை, பிப். 12-

நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலெட்சுமி பிரச வத்துக்காக பெற்றோர் வீட் டுக்கு சென்றார். குழந்தை பிறந்த பிறகு பிரசாந்த் பார்க்க செல்லவில்லை. கிரகலெட்சுமியும் கணவர் பிரசாந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. கோர்ட்டு அனு மதியுடன் பிரசாந்த் குழந் தையை பார்த்தார்.

கோர்ட்டில் மனு

அதன் பிறகு சென்னை முதலாவது குடும்ப நல கோர்ட்டில் நடிகர் பிரசாந்த் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பிரிந்து இருக் கும் தனது மனைவி கிரக லெட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். தாம்பத்திய உரிமையை மீட்டு தரவேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இருவரிடமும் நீதிபதி தனித் தனியாக விசாரணை நடத் தினார். அவர்களை சேர்ந்து வாழும்படி அறிவுரை வழங்கி னார். இந்த நிலையில் கடந்த தைப் பொங்கல் தினத்துக்குள் கண வருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கிரகலெட்சுமி மனு தாக்கல் செய்து இருந் தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும் அவர் தன்னை கணவருடன் சேர்த்து வைக் கும்படி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந் தது.

ஆஜர்

கிரகலெட்சுமி கோர்ட்டில் ஆஜர் ஆனார். பிரசாந்த் வர வில்லை. அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தன், பிரசாந்த் ஷூட்டிங்கில் இருப்பதாகவும், சிறிது நேரம் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தேவதாஸ் வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்துக்கு தள்ளி வைத் தார்.

நடிகர் பிரசாந்த் படப் பிடிப்பை ரத்து செய்து விட்டு கோர்ட்டுக்கு வந்தார். நீதிபதியின் அறையில் இரு வரும் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் நீதிபதி தேவதாஸ் விசாரணை நடத்தினார்.

Posted in Counseling, Court, Divorce, Gossip, Grahalakshmi, Interview, Issues, Kisukisu, Marriage, Personal Life, Prashanth, Problems, Tamil, Tamil Actors, Tamil Actress, Tamil Cinema, Tamil Movies, Vambu | 11 Comments »

Aiswarya Rai & Abhishek Bhachan marriage will be on February 19th 2007

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

ஐஸ்வர்யாராய்க்கு பிப்ரவரி 19-ந்தேதி திருமணம்

பெங்களூர், டிச.19-

பெங்களூரில் வசித்து வரும் ஐஸ்வர்யாராயின் குடும்ப ஜோதிடரான சந்திரசேகர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 5-ந் தேதி 32-வது வயது பிறக்கிறது. அன்று முதல் அவருக்கு யோகம் நிறைந்த நாள். ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சனுக்கு இடையேயான திருமண தடை அனைத்தும் நீங்கி விட்டன.

இந்தநிலையில் ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சன் ஜோடிக்கு வருகிற பிப்ரவரி 19-ந் தேதி திருமணம் நடக்கிறது. இந்த திருமணம் மும்பையில் உள்ள ஹயத் இண்டர்நேஷனல் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடக்க உள்ளது. பிப்ரவரி மாதம் 20-ந் தேதி மும்பையிலும், 21-ந் தேதி டெல்லியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இவ்வாறு ஜோதிடர் சந்திரசேகர சுவாமிகள் கூறினார்.

ஆனால், இந்த திருமணதேதி பற்றி அபிஷேக்பச்சன் குடும்பமோ, ஐஸ்வர்யாராய் குடும்பமோ எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Aiswarya Rai, Amitabh Bachaan, Bollywood, Gossip, Guru, Hindi Actors, Hindi Actress, Hollywood, Hyatt International, Jaya Bhaduri, Kisukisu, Kollywood, Mani Ratnam, Manirathnam, Marriage, Movies, Mumbai, Personal Life, Reception, Stars, Tamil | 35 Comments »

Libyan Court Sentences Health Workers to Death in AIDS Case

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

எயிட்ஸ் நோயைத் தொற்றச் செய்த குற்றச்சாட்டில் மருத்துவ பணியாளர்களுக்கு லிபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

குற்றஞ்சாட்டப்பட்ட சிலர்
 

நூற்றுக் கணக்கான சிறார்களுக்கு வேண்டுமென்றே எச்.ஐ.வி வைரஸை தொற்றச் செய்தார்கள் என்று குற்றங்காணப்பட்டதை அடுத்து, 5 பல்கேரிய நாட்டுத் தாதிமாருக்கும் மற்றும் ஒரு பாலஸ்தீன மருத்துவருக்கும் லிபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடந்த இந்த வழக்கு, சர்வதேச கண்டனத்தைத் தூண்டியுள்ளது.

ஒப்புதல் வாக்கு மூலம் வழங்குமாறு தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

இது இந்த வழக்கின் அரச சட்டவாதிகள் தரப்பை வலுவாக்கியிருந்தது.

இவர்கள் குற்றமற்றவர்கள் என்று லிபிய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்த பின்னர், இந்த வழக்கு இரண்டாவது தடவையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த வழக்கில் லிபியத் தலைமை தலையிடுவதற்கு உகந்த நேரம் இது என்று பல்கேரிய துணைப் பிரதமர், ஈவயில் ஹால்பின் அவர்கள் கூறியிருக்கிறார்.

ஆனால் சர்வதேச அழுத்தங்களுக்கு தமது அரசாங்கம் பணியாது என்றும், உச்ச நீதிமன்றமே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் லிபிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

Posted in AIDS, Benghazi, Bulgaria, Capital punishment, Children, conviction, Death Sentence, HIV, Judgement, Jury, Law, Libya, Murder, Nurses, Order, Palestine, Poor, Tamil, Virus | Leave a Comment »

Can Sharad Pawar become Prime Minister of India?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

சரத் பவார் பிரதமர் ஆக முடியுமா?

நீரஜா செüத்ரி – தமிழில்: லியோ ரொட்ரிகோ

கடந்த வாரம் பிரிட்டனின் பிபிசி வானொலிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார். அதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை வெகுவாகப் புகழ்ந்திருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா ஆற்றியுள்ள சேவையையும், அவரது துணிச்சலையும் இந்திய நாட்டின் பிரச்சினைகளை அவர் புரிந்துகொண்டிருப்பதையும் பவார் பெரிதும் பாராட்டியிருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியதால் தான் “ஒரு விலையைக் கொடுக்க’ நேர்ந்தது என்று அவர் ஒப்புக்கொண்டுமிருந்தார்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பவாரின் கட்சியும் அங்கம் வகிக்கிறது; மத்திய வேளாண் துறை அமைச்சராகவே இடம்பெற்றுள்ளார் பவார். எனவே, சோனியாவை அவர் புகழ்ந்து பேசியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய காரணம் ஏதும் இல்லை. ஆனால், அதற்கு மாறாக, அவரது பேட்டிக்குப் பலப்பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன.

நேரு ~ காந்தி குடும்பத்தினருடன் பவாருக்கு அவ்வளவு சுமுக உறவு இருந்ததில்லை. வெளிநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சோனியா எப்படி நமது நாட்டின் பிரதமர் ஆகலாம் என்று கேள்வி எழுப்பியதன் காரணமாக காங்கிரûஸ விட்டு வெளியேறியவர் பவார். இருந்தபோதிலும் மகாராஷ்டிரத்திலும் தேசிய அளவிலும் மக்கள் அளித்த தீர்ப்பைப் புரிந்துகொண்டு பக்குவத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். இந் நிலையில், சோனியாவைப் புகழ்ந்து பவார் பேசியிருப்பது பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஒன்று: காங்கிரஸ் கட்சியில் அவர் மீண்டும் இணைவதற்கான அடித்தளத்தை அமைக்கவே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது முற்றிலும் ஏற்புடையதாக இல்லை. மகாராஷ்டிரத்தில் சிவ சேனைக் கட்சி பிளவுபட்டு, பால் தாக்கரேயின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருக்கும் நிலையில், மாநிலத்தின் தனிப் பெரும் தலைவராக உயர்ந்து நிற்பவர் சரத் பவார் மட்டுமே ஆவார். தேசியவாத காங்கிரஸ் என்றாலே சரத் பவார்தான். மிகப் பெரும் செல்வாக்குடனும் தனித்துச் செயல்படும் சுதந்திரத்துடனும் இருக்கும் அவர், மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

இரண்டு: மும்பை மாநகராட்சித் தேர்தல் வரவிருப்பதால், அதை மனத்தில் கொண்டு சோனியாவை அவர் புகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கேரளத்தின் பட்ஜெட்டுக்குச் சமமான வரவு ~ செலவுகளைக் கொண்டதாக மும்பை மாநகராட்சி இருக்கலாம்; ஆனால், மாநகராட்சி அரசியலைக் கடந்த பெரிய தலைவராகிவிட்டார் பவார்; எனவே, சிவசேனை ~ பாஜக கூட்டணியிடமிருந்து மும்பை மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸிடமிருந்து ஒருசில சீட்டுகளை அதிகம் பெறுவதற்காக பவார் அவ்வாறு பேசியிருப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.

மூன்று: அண்மையில் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது மகள் சுப்ரியா சுலேவின் அரசியல் எதிர்காலத்தை மனத்தில் வைத்து சோனியாவை பவார் புகழ்ந்து பேசியிருக்கலாம் என்னும் கருத்து. தேசியவாத காங்கிரஸ் போன்ற பிராந்தியக் கட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்வது சுப்ரியாவுக்குப் பெரும் சவாலான பிரச்சினை. அதோடு, இத்தனை ஆண்டுகளாக சரத் பவாரால் வளர்த்து உருவாக்கப்பட்டுள்ள அவரது சகோதரர் மகன் அஜீத் பவாருக்கும் கட்சியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதிகாரத்துக்காக அவருடன் போட்டியிட வேண்டிய நிலைகூட சுப்ரியாவுக்கு ஏற்பட்டுவிடலாம். மேலும், பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்ததால் உலக நடப்புகளை நன்கு அறிந்துவைத்திருப்பவர் சுப்ரியா சுலே; ஆங்கிலத்தில் நல்ல திறமை உடையவர்; ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் உடையவர்; தொண்டர்கள் எளிதில் அணுகக்கூடியவராக இருப்பவர்; இந்த அனுபவங்களால், இப்பொழுதே அவரிடம் நல்ல அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. எனவே, தேசிய அரசியலுக்கே அவர் மிகவும் ஏற்றவராக இருப்பார் என சரத் பவார் கருதியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஆனால், மகாராஷ்டிர அரசியலில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் தில்லியிலும் செல்வாக்கு இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதோடு, மகாராஷ்டிரத்தில் ஒருவர் ~ தில்லியில் ஒருவர் என கட்சியின் அதிகாரத்தை மகளுக்கும் சகோதரர் மகனுக்கும் இடையே பங்கு போடுவதும் நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை அறியாதவரல்லர் சரத் பவார்.

நான்கு: பவார் ஒன்றைச் சொல்கிறார் என்றால், அதற்கு நேர் எதிரானதையே அவர் மனத்தில் நினைத்திருக்கிறார் என்று பொருள் என்று இன்னொரு விளக்கத்தை அளிக்கின்றனர் அவரது அதிருப்தியாளர்கள். சோனியா காந்தியை அவர் புகழ்ந்து பேசுகிறார் என்றால், அவருக்கு எதிரான தாக்குதலை அவர் தீவிரப்படுத்தத் திட்டமிடுகிறார் என்று அர்த்தம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு எத்தனையோ விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அதிகம் பேசாதவரான பவார், தனது உள்ளத்தில் இருப்பதை அவ்வளவு சுலபமாக வெளிப்படுத்திவிடக் கூடியவரல்லர். பலவிதத் திட்டங்கள் அவர் சிந்தனையில் இருக்கக்கூடும். 2009ம் ஆண்டிலோ அல்லது தேர்தல் நடக்கும் பொழுதோ என்னென்ன நிகழக்கூடும் என்பதை அவர் இப்பொழுதே கூறுவார் என எதிர்பார்க்க முடியாது. எத்தகைய சாத்தியக்கூறானாலும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அது அமையும்; என்றபோதிலும் சிறிது வாய்ப்புக் கிடைத்தால்கூட அதைப் பயன்படுத்தி நாட்டின் பிரதமர் பதவியை அடைய முடியுமா என்ற முயற்சியில் இறங்காமல் விடமாட்டார் பவார்.

அவ்வாறு அவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா? பிராந்தியக் கட்சிகளின் ஒட்டுமொத்த பலம் கணிசமாக அதிகரித்து, பாஜகவும் பலவீனமான நிலையில் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை தேர்தலுக்குப் பின்பு ஏற்பட்டால், நிச்சயமாக பிரதமர் ஆவதற்கான ஒரு வாய்ப்பு பவாருக்குக் கிடைக்கக்கூடும்; ஒருவேளை, காங்கிரஸýக்கும் பாஜகவுக்குக்கும் தலா 100 இடங்களுக்குக் குறைவாகக் கிடைத்து, பிராந்தியக் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து ஓர் அரசை அமைக்கக்கூடிய சூழ்நிலை உருவானாலோ; அல்லது, மிகவும் பலவீனமான நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டு, பாஜகவை அதிகார பீடத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பிராந்தியக் கட்சிகள் அரசு அமைக்க ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலோகூட சரத் பவாருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இன்றைய நிலையில், பிராந்தியக் கட்சித் தலைவர்களிலேயே பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தலைவராக இருப்பவர் அனேகமாக பவாராகத்தான் இருக்கக்கூடும். முலாயம் சிங் யாதவ், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு ஆகியோரிடையே ஒரு புதிய கூட்டணி ஏற்பட்டு இருப்பது தொடர்பான செய்திகள் அண்மை நாள்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு “மூன்றாவது அணி’க்கு வாய்ப்பு இல்லை என்று பவார் கூறினாலும்கூட, அந்தப் புதிய கூட்டணியுடன் பவாரின் பெயரும் சேர்த்தே பேசப்படுகிறது. நிர்வாகத் திறன் மிக்கவரான பவாருக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் நல்லுறவு உண்டு. எனவே, மேற்கூறிய சூழ்நிலைகள் உருவானால், பாஜகவுக்கும்கூட அவர் ஏற்புடையவராகவே இருப்பார். எனவே, சோனியா காந்தியுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள அவர் விரும்புவார் என்று கூறுவது வியப்பளிப்பதாக இருக்கிறது.

நரசிம்மராவ் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்திலிருந்தே அவர் ஒரு தேசியத் தலைவராக உருவெடுத்துவிட்டார். மகாராஷ்டிரத்தை அங்குலம் அங்குலமாக அறிந்த, மாநிலத்தின் மக்கள் தலைவராக இருக்கும் அதே நேரத்தில், அவரது அரசியல் பாணியானது மேல்நிலைக்குச் சென்றுவிட்டது.

பிரதமர் பதவி தனக்குக் கிட்டாமல் போய்விட்டால்கூட பரவாயில்லை; தனது மகளின் அரசியல் பாதை வலுவானதாக அமைக்கப்பட்டுவிட வேண்டும் என்று சரத் பவார் விரும்பக்கூடும். கட்சியில் அடுத்த தலைமுறைத் தலைவர்களை வளர்த்து உருவாக்குவதுதான் தனது முக்கிய கடமை என்று பிபிசி வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை பவார் பாராட்டியிருப்பதை எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அதை நல்லுறவு நடவடிக்கையாகவும் பவாரின் பண்பட்ட அரசியலின் அடையாளமாகவுமே கருத முடியும்.

Posted in Agriculture, Bal Thackeray, BJP, Cabinet, Chandrababu Naidu, Civic Polls, Cong (I), Congress, Dinamani, Foreigner, Indira Congress, Jayalalitha, Lalloo, Lalu prasad Yadav, local body elections, maharashtra, Minister, Mulayam Singh Yadav, Mumbai, Narasimha Rao, NCP, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Nehru, New Delhi, Op-Ed, PM, Politics, Prime Minister, Sharad Pavaar, Sharad Pawar, Shiv Sena, Sonia Gandhi, Supriya Sule, Tamil | 1 Comment »

Kalam opens Kaalachuvadu Literary meet

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

மனித சமூகத்தை மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம் “தமிழ்’- இலக்கிய கருத்தரங்கில் கலாம்

கோவை, டிச. 19: மனித சமுதாயத்தைச் சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம் என்று தமிழுக்குப் புகழாரம் சூட்டினார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

கோவையில் காலச்சுவடு அறக்கட்டளை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் திங்கள்கிழமை தொடக்கி வைத்து அவர் பேசியது:

பாரதியார் 125 ஆண்டுகளாக நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எழுத்தாளர் புதுமைப்பித்தன் 100 ஆண்டுகளாகவும், சுந்தரராமசாமி 75 ஆண்டுகளாவும் நமது நினைவில் இருக்கின்றனர்.

1910-ல் பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் “இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென…’ என்ற கவிதையை சரஸ்வதி வந்தனமாகப் பாடுகிறார். இதன் அறிவியல் கருத்து என்னவெனில், “பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல சூரியன், பூமி அனைத்தும் சுழற்சியின் இயக்கத்தில் அண்டசராசரத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றன. ஓயாது, ஒழியாது இச் சுற்றல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதைப்போல நாமும் ஓயாது, துவளாது முயற்சி செய்தால் இறையருளால் நம்நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை’ என்பதாகும். ஒரு விஞ்ஞானியைப் போல கவிதை பாடியுள்ளார் பாரதியார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து பரவிய தமிழ்மொழி இன்னும் புதுமையாக, இளமையாக இருக்கிறது. பல நாடுகளில் தமிழ் மொழி கொழிக்கிறது; பல்வேறு துறைகளில் தமிழர்கள் சிறப்பு பெறுகிறார்கள்; அவர்களின் மொழியன்பு தமிழை மேலும் மேலும் ஜொலிக்க வைக்கிறது.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் என்று இணையதளங்களில் தமிழ் பரிமாணிப்பது புது மகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழ் ஒரு பிரதேச மக்களின் மொழி மட்டுமில்லை. மனித வாழ்வை மேம்படுத்தி மனித சமுதாயத்தை சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம். இதை நினைவுகூர்ந்து படைப்பாளிகள் தங்களது படைப்புகளைச் செய்தால் உலகுக்கு மிகவும் நன்மை கிடைக்கும் என்றார் கலாம்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்புரையாற்றினார். ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Posted in A P J Abdul Kalam, APJ Abdul Kalaam, Coimbatore, Jeyaganthan, Jeyakanthan, Kaalachuvadu, Kalachuvadu, Kovai, Krishna Sweets, Literary, Puthumaipithan, S Kannan, Subhramanya Bharati, Sundara Ramasamy, Tamil, Tamil Literature, Thamizh, YS Rajan | Leave a Comment »