Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Human Rights’ Category

Human rights watchdog demands UN mission in Sri Lanka & Batticaloa elections

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008

ஐ நா வின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

ஐநாமன்றத்தின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டியதன் தேவை தற்போது மேலும் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகுவதாக அறிவித்திருப்பதை தொடர்ந்து, நார்வே தலைமையிலான போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினரின் பணி, ஜனவரி 16ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று கணக்கிடப்படுகிறது.

ஏற்கெனவே, இந்த கண்காணிப்பாளர்கள் தங்களின் பணியிடங்களிலிருந்தும், பணிகளிலிருந்தும், படிப்படியாக பின்வாங்கத் துவங்கியிருப்பதாகவும், இன்னமும் சில நாட்களில் இது முழுமையடையும் என்றும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த எலைன் பியர்சன் அவர்கள், ஐநா மன்றத்தின் மனித உரிமை கண்காணிப்பாளர்களின் பணி இலங்கையில் உடனடியாக தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு என்பது பெருமளவு குறைபாடுகளுடைய அமைப்பாக இருந்தாலும், பொதுமக்களின் மனித உரிமை மீறல்களை குறைப்பதில் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் கண்காணிப்பாளர்கள் பெருமளவு உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர்களின் பணிகள் முடிவுக்கு வரும் சூழலில், ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களின் பணி என்பது இலங்கையில் முன் எப்போதையும் விட மேலதிகமாக தேவைப்படுவதாக எலைன் பியர்சன் அவர்கள் கூறியிருக்கிறார்.

 


நார்வேயின் பணிகள் மீள்வரையறை செய்யப்படும் என்கிறது இலங்கை அரசு

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் போகல்லாகம
அமைச்சர் ரோஹித போகல்லாகம

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒருதலைபட்சமாக விலகிக் கொண்ட இலங்கை அரசு, இலங்கை சமாதான முயற்சிகளில் இதுவரை அனுசரணையாளர்களாக பணியாற்றி வந்த நார்வே அரசின் பணியை மீள்வரையறை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

யுத்த நிறுத்த உடன்படிக்கைகியிலிருந்து அரசு விலகுவது தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு இன்று இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம விளக்கினார்.

நார்வே அரசைப் பொறுத்த வரையில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் இதுவரை ஒரு கட்டமைப்புக்கு உட்பட்ட பணிகளையே செய்து வந்தனர் எனவும், தற்போது யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது இல்லை என்கிற நிலையில், அவர்களுக்கான புதிய வரையறைகளை தெரிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய வரைமுறைகள் என்ன என்பது இன்னமும் முடிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளிடம் அரசின் நிலைப்பாடு குறித்து தாம் விளக்கியபோது, அரசின் இவ்வாறான நிலைப்பாடு குறித்து யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை எனவும் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

இவ்வாறான ஒரு நிலையில் அரசின் நிலைப்பாட்டை, சர்வதேச சமூகம் நன்கு உணரக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அவரது கருத்துக்களை உள்ளடக்கிய செய்திக் குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 


இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது: இந்தியா கருத்து

இந்திய அரசின் வெளியுறவு பேச்சாளர் சர்னா
இந்திய அரசின் பேச்சாளர் நவ்தேஜ் சர்னா

இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்று உறுதியாக நம்புவதாக இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா முதல் முறையாக வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்திருக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையில் நடைபெறும் வன்முறைகளையும், மனித சமுதாயம் படும் வேதனைகளையும் குறைப்பதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் இந்தியா வரவேற்கிறது. துரதிர்ஷ்டவசமாக, சமீபகாலமாக இலங்கையில் வன்முறையும், பதற்றமும் மோதல்களும் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், ஒன்றுபட்ட இலங்கைக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அரசியல், சட்டம் மற்றும் பிற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

அப்படிப்பட்ட தீர்வின் மூலம்தான், வன்முறையால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும். இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா தெரிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில், இந்தியாவில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் ஆரம்பம்

வேட்பு மனு தாக்கல் செல்லபவர்கள்
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறாத 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த அரசு தீர்மானித்துள்ள நிலையில், அதற்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கும், 8 பிரதேச சபைகளுக்கும் நடைபெறவிருக்கும் இத்தேர்தலில் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையர் கிருஷ்ணானந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறிப்பிட்ட சபைகளுக்கான தேர்தல்கள் இப்போதுதான் நடைபெறவுள்ளன.

 


 


இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பாதுகாப்பு ஆய்வாளரின் கருத்து

இலங்கை படையினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகிவிட்ட நிலையில், உடனடியாகப் போர் வருமா என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், அதே நேரம் விடுதலைப் புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என்று செய்யப்படும் பிரசாரத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறினார்.

இலங்கையில் போர்களத்தில் நடக்கும் சம்பவங்களை அப்படியே எழுத முடியாத சூழல் ஊடகங்கள் மத்தியில் இருப்பதன் காரணமாக போரில் இலங்கை அரசு படைகளின் கை ஒங்குவது போன்ற எண்ணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தினந்தோறும் பெரிய அளவில் இழப்புக்களை சந்திப்பதாக அரசு வெளியிடும் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை குறித்த கருத்து வெளியிட்ட இக்பால் அத்தாஸ், இலங்கையின் தற்போதைய அரசு மட்டுமல்லாமல், முந்தைய அரசுகள் வெளியிட்ட இத்தகைய புள்ளி விபரங்களை கணக்கிட்டால் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூட தற்போது இருக்க மாட்டார்கள் என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்தார்.

 


திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

கிரீன் ஒசியானிக் கப்பல்
கிரீன் ஒசியானிக் கப்பல்

திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டுக்குமான பயணிகள் கப்பல் சேவையினை தற்காலிகமாக இடைநிறுத்தும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை பட்டணமும் சூழலுக்குமான பிரதேச செயலாளர் சசிகலா ஜலதீபன் தெரிவித்திருக்கின்றார்.

கப்பல் பயணசேவை முகவர் நிலையம் இதனை அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இத்தகைய நடவடிக்கையின் விளைவாக திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டுக்கும் இடையே கடந்த பதினோரு மாத காலமாக இடம்பெற்று வந்த கடற்பயண சேவைகள் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் திருத்த வேலைகளுக்கென கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் பத்து தினங்களில் மீண்டும் சேவைக்கு விடப்படும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரம் அடந்த நிலையில், ஏ ஒன்பது வீதி மூடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஏழாம் திகதி திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டின் காங்கேசன்துறைக்கும் இடையே கிரீன் ஓசியானிக் என்ற பயணிகள் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.

இந்தக் கப்பல் திருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் தனது சேவையினை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த சேவை திருத்த வேலைகளுக்கென இடைநிறுத்தப்படவுள்ளது.

Posted in Batticaloa, Eelam, Eezham, Elections, Human Rights, LTTE, mission, Polls, Sri lanka, Srilanka, UN | Leave a Comment »

Colombo withdraws security – Tamil MP Mano Ganesan alleges ‘threat to life’, may flee Sri Lanka

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

விடுதலைப் புலிகளும், கருணா குழுவினரும் தொடர்ந்து சிறார்களை சேர்ப்பதாக ஐ.நா கூறுகிறது

இலங்கையில் விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினரும், தொடர்ந்து சிறார்களை கடத்தி அவர்களை சண்டையிட பயன்படுத்துவதாக ஐ.நா கூறியுள்ளது.

சிறார்களை சண்டையிட பயன்படுத்துவது குறைந்து இருந்தாலும், கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த இரு குழுவினரும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை சேர்த்துள்ளதாக ஐ.நா கூறுகின்றது.

ஐ.நா அதிகாரிகள் முன்னிலையில் சிறார்களை விடுவித்த ஒரு சில நாட்களிலேயே அவர்களை மீண்டும் சேர்த்து கருணா குழுவினர் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

 


பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடு செல்வதாக கூறுகிறார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினறும், மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், தற்காலிகமாக வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

இலங்கையில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்று காவல் துறையின் புலனாய்வுத் தறை கூறிய பிறகும் தன்னுடைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கும் மனோ கணேசன், இதையடுத்து தற்காலிகமாக இலங்கையை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறிய இலங்கை அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வல்ல அவர்கள், கூடுதல் பாதுகாப்பு கோரி மனோ கணேசன் அளித்த மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

 


Posted in Abductions, Colombo, dead, disappearances, Eelam, Eezham, extra-judicial, extra-judicial killings, Freedom, Ganesan, HR, Human Rights, Killed, killings, Life, LTTE, Mahinda, Mahinda Rajapaksa, Mano, Mano Ganesan, MP, Murder, Prabhakaran, Rajapaksa, Security, Sri lanka, Srilanka, Tamils, Threat, Velupillai, Velupillai Prabhakaran | Leave a Comment »

Asian Human Rights Commission (AHRC) urges foreign intervention in Sri Lanka

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

சர்வதேச மனித உரிமைகள் தினம்: இலங்கையில் நாடுதழுவிய நிகழ்ச்சிகள்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை இலங்கையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு கூட்டங்களும், கருத்தரங்குகளும், கண்டன-கவனயீர்ப்பு ஊர்வலங்களும் நடந்தன.

மேலக மக்கள் முண்ணணி தலைமையிலான மக்கள் கண்காணிப்புக் குழு ஒழுங்கு செய்திருந்த ஊர்வலம் ஒன்றும் இன்று கொழும்பில் இடம்பெற்றிருக்கிறது.

கடத்தப்பட்டு காணாமல்போனோரின் உறவினர்கள், தடுப்புச் சிறைகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இன்று சிறிலங்கா பவுண்டேஷன் இன்ஸ்டிடியூட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் விசேட அதிதிகள் கலந்துகொண்டனர்.

 

இதில் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருக்கிறார்.

இங்கு உரையாற்றியுள்ள அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பில் மூன்றாம், நான்காம் சரத்துக்களில் மனித உரிமைகளின் சுதந்திரம் குறித்து குறிப்பாக தெரிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சுதந்திரம், பக்கச்சார்பின்மை, நீதித்துறையின் ஆளுமை என்பன மனித உரிமைகள் பேணப்படுவதற்கு மிகவும் அவசியமான அம்சங்கள் என்று தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, போரினால் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும், போரினால் மனித உரிமைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும் நிராகரித்துப் பேசினார்.

இதற்கிடையில் இங்கே லண்டனிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக இலங்கைத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்பு மையம் என்னும் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.


மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில், யுத்த சூழ்நிழல் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளியிடுத்தும் வகையில் திங்கட்கிழமை பேரணி ஒன்று நடந்துள்ளது.

இந்தப் பேரணிகளிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்திலும், பெரும் எண்ணிக்கையினர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்திருந்த மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கும் வகையிலும் பேரணிகளில் கலந்து கொண்டவர்கள் வாசக அட்டைகளை ஏந்திச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பேரணி சென்ற வீதிகளில், வழமைக்கு மாறாக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி., பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பத்மநாபா அணி பிரதிநிதிகளும் பங்குபெற்றனர்.

அவர்கள் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டினையும் விமர்சித்து உரையாற்றினர்.

கூட்ட முடிவில், மக்களின் தேவைகளை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கையளிக்கும் முகமாக ஒரு மனு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மகேசன் அவர்களிம் கையளிக்கப்பட்டது.


வடக்கு இலங்கையில் வன்முறை வலுக்கிறது

இலங்கையின் வடக்கே ஞாயிறன்றும் திங்களன்றும் நடைபெற்ற மோதல்களில், 26 விடுதலைப் புலிகளும் ஒரு இராணுவச் சிப்பாயும் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10 இராணுவ வீரர்கள் காயமடைந்ததுள்ளதாகவும் இலங்கை அரசின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மணலாறு பகுதியில் தமது பிரதேசத்துக்குள் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பெரியதம்பனனைப் பகுதியில், நேற்று முந்தினம் கொல்லப்பபட்ட விடுதலைப் புலிகளில், நல்ல நிலையில் உள்ள ஆறு சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களில், மட்டக்களப்பு மாவட்டம் பிள்ளையாரடியில், ஞாயிறு இரவு இரண்டு யுத்த அகதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுளனர் எனவும், துப்பாக்கிச் சூட்டுடன் ஒரு சடலம் கண்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Posted in AHRC, Batticaloa, Displaced, Eelam, Eezham, EPDP, EPRLF, HR, Human Rights, IDP, LTTE, Manalaar, Manalaaru, Manalar, Manalaru, Padhmanaba, Padhmanabha, Padmanaba, Padmanabha, Pathmanaba, Pathmanabha, plot, Refugees, Sri lanka, Srilanka, Vanni, Violence, Wanni, War | Leave a Comment »

Sri Lanka government vs LTTE – Eezham Conflict: Updates, current developments

Posted by Snapjudge மேல் மே 21, 2007

இலங்கை மோதல்கள் – ஒரு அலசல்

யாழ்ப்பாணத்தில் மோதலின் போது டாங்கிகள்
யாழ்ப்பாணத்தில் மோதலின் போது

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சுற்றவரவுள்ள இடங்களில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் ஐந்நூறுக்கும் அதிகமான விடுதலைப்புலிகளைத் தாம் கொன்றதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

இந்த எண்ணிக்கையுடன் முரண்படும் விடுதலைப்புலிகள், சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில், இந்தப் போரில் தாம் வெல்வதாகக் காட்டிக்கொள்ள அரசாங்கம் முனைகிறது என்று கூறுகிறார்கள்.

இன்று திங்கட்கிழமை இரு வேறு சம்பவங்களில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகக் கூறும் இலங்கை இராணுவம், அந்தப் பகுதியில் தமது தரப்பில் இது வரையில் 48 பேர் கொல்லப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள்.

கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரட்டப்பட்டதை அடுத்து, பெரும்பாலான மோதல்கள் தற்போது வடக்குக்கு நகர்ந்துள்ளன.

அரசாங்க மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு முன்னரங்கப் பகுதிகளுக்கு இடையேயான பகுதி எங்கிலும், சிறு மோதல்களும், பெரும் சண்டைகளும் தொடர்ந்து வருகின்றன.

2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், புறக்கணிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்
தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்

அவர்களது நிலைகளை நோக்கி தாக்குதல் நடவடிக்கைகள் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பித்தது முதல், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 541 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இது மிகவும் தீவிரமான மிகைப்படுத்தல் என்று கூறும் விடுதலைப்புலிகள் தரப்பு பேச்சாளரான இராசையா இளந்திரையன், உண்மையான எண்ணிக்கை 60 க்கு சமீபமாக இருக்கும் என்று கூறுகிறார்.

விடுதலைப்புலிகள் வான் வழித்தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், பெரும்பான்மை சிங்கள மக்களைச் சமாளிக்க அரசாங்கம் முயல்கிறது என்று அவர் கூறுகிறார்.

சிறிய விமானங்களைப் பயன்படுத்தி தலைநகருக்கு அருகாக உள்ள இலக்குகள் மீது இரு தடவை குண்டுகளை வீசிய விடுதலைப்புலிகள், ஒரு இராணுவ தளத்தையும் தாக்கிவிட்டு பாதுகாப்புடன் தமது தளத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

இழப்புகள் பற்றிய எண்ணிக்கையைப் பொறுத்தவரை இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற தரப்பினரும் மிகவும் மும்முரமாக அதில் முரண்படுகின்றனர்.

தாமே வெற்றிபெறுவதாக இரு தரப்பும் காண்பிக்க முனைகின்றன. ஆனால் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

தமிழர்களுக்கு ஒரு தாயகம் கோரி விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள்.

அவர்களை இரண்டு மூன்று வருடங்களில் தோற்கடித்துவிடுவோம் என்று உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இன்று திங்களன்று துப்பாக்கி மோதல் ஒன்றில் இரண்டு இலங்கைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். வடபகுதியில் இடம்பெற்ற வீதியோரக் குண்டு வெடிப்பொன்றில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

கடந்த 4 மாதங்களில் தாம் 48 சிப்பாய்களை இழந்ததாக இப்போது இலங்கை இராணுவம் கூறுகிறது.


அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது
அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது

இலங்கையில் மனித உரிமை நிலமைகள் மோசமடைந்துள்ளது எனக் கூறுகிறது சர்வதேச அபய நிறுவனம்

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான் கொலைகள், சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பது, ஆட்கடத்தல்கள் உட்பட பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் இந்த இருதரப்பாலும் தாக்கப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அம்னெஸ்டி அமைப்பின் கருத்துப் படம்
அம்னெஸ்டியின் கருத்துப் படம் ஒன்று

2006 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையை இருதரப்பினரும் கடைபிடிப்பதாகக் கூறினாலும், 2006 ஆம் ஆண்டின் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் செயற்பாட்டளவில் கைவிடப்பட்ட நிலை அடைந்துள்ளது எனவும், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமல்படுத்தப்பட்ட, அவசரகால நிலையை இன்னமும் தொடர்ந்து அங்கு நடைமுறையில் உள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அங்கு அதிகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்களை தடுக்க போதுமான நடவடிக்கையோ அல்லது வழிமுறைகளோ இல்லை என்றும் அந்த அமைப்பின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தின் பிரசன்னம் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கருத்து வெளியிட்டுள்ளது.


Posted in AI, Air Force, Airforce, Amnesty, Arms, Army, battle, BBC, dead, defence, Defense, Developments, Eelam, Eezam, Eezham, Fatality, Fisherman, fishermen, Freedom, guns, HR, Human Rights, Independence, India, Infantry, LTTE, Media, Murder, Navy, Refugees, rights, Sri lanka, Srilanka, Status, Tamils, Updates, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Weapons | 1 Comment »

Tamil Actor Srikanth’s Wedding imbroglio – Engagement canceled?

Posted by Snapjudge மேல் மே 20, 2007

நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ல் திருமணம்

சென்னை, மே 13: நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

srikanth Wedding pictures vandhana issueரோஜாக் கூட்டம் என்ற தமிழ்ப் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த், அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில், கனா கண்டேன், பார்த்தீபன் கனவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இயக்குநர் சசி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும் புதுச்சேரியில் பிறந்து சென்னையில் குடியேறிய, சாரங்கபாணி மற்றும் ஷாலினி ஆகியோரது மகள் வந்தனா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 18-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற உள்ளது.

வந்தனா

  • ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. படிப்பையும்,
  • ஸ்விட்சர்லாந்தில் ஹோட்டல் மேலாண்மைப் படிப்பையும் முடித்துள்ளார்.

———————————————————————————————

நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் ரத்து

சென்னை, மே 20: நடிகர் ஸ்ரீகாந்த் மணமுடிக்கவிருந்த வந்தனாவின் குடும்பத்தினர் மோசடிப் புகாரில் சிக்கியதையடுத்து இந்தத் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்:

“ரோஜாக்கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி “ஏப்ரல் மாதத்தில்’, “பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங்கபாணி என்பவரின் மகள் வந்தனாவுக்கும் வரும் ஜூன் 18-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

கடந்த வாரம் முதல் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் வந்தனாவின் சகோதரர் ஹர்ஷவர்தன், தந்தை சாரங்கபாணி ஆகியோர் மீது பல மோசடிப் புகார்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் உள்ள காலி மனைகள் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கவும், அந்த சொத்துக்களின் மீது கடன் பெற்று ஏமாற்றியதாகவும் ஹர்ஷவர்தன் மீது வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேளச்சேரி, வள்ளுவர் கோட்டம், தி.நகர், கோட்டூர்புரம் போன்ற இடங்களில் நில மோசடி செய்ததற்காக ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் ஹர்ஷவர்தன்.

மேலும் உதகையில் “மெரிட் இண்டர்நேஷனல் எஜுகேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் வந்தனா குடும்பத்துக்கு ஒரு கல்லூரி இருக்கிறது. வந்தனாதான் இக்கல்லூரியின் செயல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்தக் கல்லூரியை விரிவுபடுத்த சென்னையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சுமார் 12 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். அதற்கான தவணையும் சில மாதங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவற்றையெல்லாம் மறைத்த வந்தனாவின் குடும்பத்தினர் தங்களுடைய மகளை ஸ்ரீகாந்துக்கு திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். இதுபற்றி தெரிந்தவுடன் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் மணமகள் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மணமகள் குடும்பத்தாரின் சமரச பேச்சுவார்த்தை எதுவும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து ஸ்ரீகாந்தின் தந்தையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

திருமண வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தச் சமயத்தில் அவர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்தன. அதையும் நிறுத்த சொல்லிவிட்டோம். என் மகனின் எதிர்காலம்தான் முக்கியம் என தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் நடைபெறுவது சாத்தியமில்லை என்றே ஸ்ரீகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

—————————————————————————————-

ஸ்ரீகாந்தையே மணப்பேன்:வந்தனா சபதம்

சென்னை, மே 21: என் மீதான களங்கத்தைப் போக்கி குற்றமற்றவள் என நிரூபித்து, ஸ்ரீகாந்தை மணம் முடிப்பேன் என்று வந்தனா நம்பிக்கையுடன் கூறினார்.

இந்நிலையில் நிருபர்களிடம் வந்தனா ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கடந்த சில நாள்களாக, என் குடும்பத்தினர் பற்றி வெளிவரும் செய்திகளால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மணப்பெண் என்ற முறையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மீது எந்த வழக்கும் இல்லை. என்னிடம் போலீஸôர் விசாரணை நடத்தவில்லை.

நான் எந்தவொரு வங்கியிலும் கடன் பெறவில்லை. யார் வாங்கிய கடனுக்கு ஒப்புதலோ, உத்தரவாதமோ கொடுக்கவில்லை. கடன் பத்திரத்தில் கையெழுத்து கூட போடவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி என் மீது வழக்குத் தொடர முடியும்.

எனக்கும், ஸ்ரீகாந்துக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்த யாரோ திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள் என நினைக்கின்றேன்.

சகோதரருடன் தொடர்பில்லை: எனது சகோதரர் ஹர்ஷவர்தன், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எங்களைப் பிரிந்து தனியாக வாழ்கிறார். எனது நிச்சயதார்த்தத்துக்குகூட அவர் வரவில்லை. அவரோடு எனக்கோ, எங்கள் குடும்பத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அவரது செயல்பாடுகளை எங்களோடு இணைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

எனது குடும்பமும், ஸ்ரீகாந்த் குடும்பமும் ஒன்றாக உட்கார்ந்து பேசித்தான் திருமணத்தை முடிவு செய்தோம். அதேபோன்று இப்போது புதிதாக தோன்றியுள்ள பிரச்சினைகளையும் இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி முடிவு செய்வோம்.

என் மீது இப்போது ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கி, குற்றமற்றவள் என்பதை நிரூபித்து, ஸ்ரீகாந்த்தை மணப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஸ்ரீகாந்த் புத்தி கூர்மை உள்ளவர். இப்போதுள்ள சூழ்நிலையை அவர் நன்கு புரிந்து கொண்டு, என்னையும் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் வந்தனா.

———————————————————————————————

நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும்: போலீஸ் அதிகாரி தகவல்

சென்னை, ஜுன். 15-

நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று ஒரு போலீஸ் உயர் அதிகாரி கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

நடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.

அப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத்துள்ளார்.

இடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.

ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.

இதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.

காதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந் தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார்.

“இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.

அப்போது அவர், “ஸ்ரீகாந் துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.

இதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

வந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதாக என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
———————————————————————————————
பேசி தீர்க்க வேண்டியதை தெருவுக்கு இழுத்து விட்டனர்: ஸ்ரீகாந்த் சித்தப்பா பேட்டி

சென்னை, ஜுன். 15-

வந்தனாவின் அதிரடி வருகையால் ஸ்ரீகாந்தும் அவர் பெற்றொரும் வீட்டை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். தற்போது அங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் சித்தப்பா நரசிம்மன் மட்டுமே உள்ளார்.

அவர் கூறியதாவது:-

எங்களது சொந்த ஊர் திருப்பதி. நாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால் கூட திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான மரியாதையுடன் தான் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அந்த அளவுக்கு எங்கள் குடும்பம் ஆச்சாரமானது.

ஸ்ரீகாந்த் வந்தனாவை மிகவும் விரும்பினான். எனவேதான் நாங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். பிறகுதான் வந்தனா குடும்பத்தினர் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வந்தனாவிடம் கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது” என்று மறைத்து விட்டார். திருமணத்துக்கு முன்பே இப்படி உண்மைகளை மறைப்பவர் திருமணத்துக்குப் பிறகு எப்படி இருப்பாரோ என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவேதான் திருமணத்தை தடை செய்தோம்.

நேற்று முன்தினம் வந்தனா திடீரென்று எங்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார். பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையை தெருவுக்கு கொண்டு வந்து விட்டார். நாங்கள் அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறோம்.

இவ்வாறு நரசிம்மன் வேதனையுடன் கூறினார்.

மனித உரிமைகள் கழக மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா கூறியதாவது:-

வந்தனா எங்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே புகார் கூறி இருந்தார். திடீரென அவர் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்றதை இன்று காலை பத்திரிகைகளில் பார்த்து அறிந்தோம். இன்று காலை அவரை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறினார். ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணத்துக்கு ஆதாரம் உள்ளது.

எனவே நாங்கள் ஸ்ரீகாந்துடன் வந்தனாவை சேர்த்து வைப்போம். போலீஸ் இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை அறிய காத்து இருக்கிறோம்.

இவ்வாறு கல்பனா கூறினார்.
——————————————————————————————-
கோவிலில் தாலி கட்டினார்: நடிகர் ஸ்ரீகாந்த் திருமண படங்கள் வந்தனா வெளியிட்டார்- பரபரப்பு பேட்டி

சென்னை, ஜுன். 15-

ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த்.

இவர் வடபழனி குமரன் காலனியில் தந்தை கிருஷ்ணமாச்சாரி, தாயார் ஜெயந்தி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை அண்ணாநகர் `கே’ பிளாக்கில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனா (வயது24)-வை காதலித்து வந்தார். முதலில் இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு சமரசம் ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி- ஷாலினி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் மீது சி.பி.ஐ. போலீசில் மோசடி வழக்குகள் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதனால் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடக்காது என்று ஸ்ரீகாந்த் பெற்றோர் அறிவித்தனர்.

திருமண முறிவு ஏற்பட்டதால் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அடைந்தார். காதலி வந்தனாவுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். வந்தனா எவ்வளவோ முயன்றும் ஸ்ரீகாந்த் பேசவில்லை. என்றாலும் மனம் தளராத வந்தனா “ஸ்ரீகாந்தை திருமணம் செய்தே தீருவேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று சபதம் செய்தார்.

கடந்த சில தினங்களாக அவர் நிறுபூத்த நெருப்பு போல மனம் குமுறியபடி இருந்தார். நேற்று முன்தினம் பெட்டி படுக்கைகளுடன் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்து விட்டார்.

ஸ்ரீகாந்துக்கும் தனக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறிய அவர் இனி இந்த வீட்டில்தான் இருப்பேன் என்றார். ஸ்ரீகாந்த் மனைவி போல அந்த வீட்டில் சுற்றி வந்தார். அதோடு ஸ்ரீகாந்த் பெற்றோரையும் மிரட்டும் வகையில் பேசினார்.

வந்தனா இந்த ரகளையில் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி அவர் பெற்றோரும் ஆடி போய் விட்டனர். இது தொடர்பாக அவர்கள் வடபழனி போலீசில் நேற்று புகார் செய்தனர்.

பெண் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்தார். நேற்றிரவு நேரமாகி விட்டதால் இன்று காலை அவர்கள் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

வந்தனாவிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து வெளியேற வந்தனா மறுத்து விட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக ஒரு போலீஸ் உயர்அதிகாரி கூறியதாவது:-

நடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.

அப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத் துள்ளார்.

இடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.

ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.

இதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.

காதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார். “இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.

அப்போது அவர், “ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.

இதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

வந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

இந்நிலையில் வந்தனாவின் தாய் ஷாலினி வடபழனி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது மகளை ஸ்ரீகாந்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், வந்தனாவின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த புகார் மனு மீது இன்று மதியம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் விசாரணை நடத்தினார். ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தங்கிருந்த வந்தனாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

ஸ்ரீகாந்தின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்டனர் என்று கூறியிருப்பதால் அவர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.srikanth marriage pictures vandhana issue

கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் வந்தனா தாயார் பேட்டி

ஸ்ரீகாந்தும் வந்தனாவும் கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் என்று வந்தனாவின் தாய் கூறினார்.

ஸ்ரீகாந்தின் வீட்டில் வைத்து வந்தனாவின் தாய் ஷாலினி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமணம் முடிந்த பிறகு ஸ்ரீகாந்த் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து தங்கினார். அப்படி தங்கும் நாட்களில் ஸ்ரீகாந்தும், வந்தனாவும் கணவன்- மனைவி போலவே வாழ்ந்து வந்தனர்.

எங்களை பொறுத்தவரை ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் முடிந்து விட்டது. எனவே இதில் நாங்கள் மறுப்பு எதுவும் சொல்ல முடியாது. எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி உள்ளனர். ஆனால் ஸ்ரீகாந்த், அக்கா என்று அழைக்கும் கீதாவின் மீதும் வழக்கு உள்ளது.

எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் எனது மகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது எனது மகளிடம் இருந்து ஸ்ரீகாந்தை பிரித்து விவாகரத்து வாங்கும் முயற்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
———————————————————————————————-

Posted in abuse, Affair, Alimony, Annul, Annulment, Apartments, April Mathathil, Assets, bank, Bride, Bridegroom, Charangabani, Charankabani, Cheat, Cinema, Divorce, Dowry, Engagement, family, Female, Finance, Flat, Harshavardhan, Housing, HR, Human Rights, Images, Justice, Kid, Kisukisu, Kotturpuram, Law, Loan, Love, Marriage, Merit International, Movies, Order, Photos, Pictures, Police, Prathiban Kanavu, Proof, Puthucherry, Real Estate, Relation, Roja koottam, Rojakoottam, Rumour, Sarangabani, Scandal, Shaalini, Shalini, Shrikant, Shrikanth, Snaps, Srikant, Srikanth, Status, T nagar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thirumala, Thirupathi, Thirupathy, TTD, Valluvar Kottam, Vandana, Vandhana, Velachery, Vows, Wedding | 6 Comments »

Police Force & Human Rights: Gujarat & Tamil Nadu’s Law Enforcement – Kalki Editorial

Posted by Snapjudge மேல் மே 9, 2007

குஜராத்: சாம்பலான மனித நேயம்

தமிழகக் காவல்துறை மண்டல ஐ.எ. ஒருவர், ஒரு யுக்தியைக் கையாண்டிருக்கிறார். பல்வேறு காவல் நிலையங்களுக்கு, அப்பகுதியைச் சாராத காவல் துறை ஊழியர்களை மாறுவேடத்தில் அனுப்பியிருக்கிறார். அந்த ஊழியர்கள் சில புகார்களை (புனைந்துதான்) அந் நிலையங்களில் பதிவு செய்ய முற்பட்டிருக்கிறார்கள். மூன்று நாட்களில் திரும்பி வந்த அவர்கள், தங்கள் கண்ணீர்க் கதையைத்தான் விவரிக்க வேண்டியிருந்தது! புகார் தர முயன்ற சிலருக்கு வசவு, வேறு பலருக்கு அடி உதை! கடைசியில், பரிசோதனைக்கு உட்பட்ட அத்தனை போலீஸ்காரர்களும் ஆடிப் போய், தாங்கள் இனி ஒருபோதும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

– இந்த விவரத்தை தமிழக டி.ஜி.பி. முகர்ஜி, தேசிய மனித உரிமைக் கழகம் நடத்திய ஒரு முக்கிய பயிற்சித் திட்டத்தின்போது பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

காக்கி உடுப்பணிந்து, கையில் லத்திக்கட்டையைத் தூக்கிவிட்டாலே ஆணவமும் முரட்டுத்தனமும் வந்துவிடுகின்றன என்பதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம். இந் நிலையில், காவல் துறையினருடைய தோரணையில் மாற்றங்களைப் புகுத்தத் தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிகளையும் பரிசோதனைகளையும் நாம் மனமார வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதற்கு நேர்மாறான போக்கு குஜராத்தில் காணப்படுகிறது!

ஷொராபுத்தீன் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கௌசர் கொல்லப்பட்டதுடன், அவர் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் வயல்வெளிகளில் தூவப்பட்டிருக்கிறது! இத்தகைய அசுரத்தனமான செயல்களைச் செய்ததோடல்லாமல், கொலை செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்றும் அவர்கள் என்கவுன்டரில் இறந்து போயினர் என்றும் கதை கட்டியிருக்கிறது போலீஸ்! அதனால் கிடைத்த மீடியா கவனத்தாலும் விளம்பரத்தாலும் மக்கள் மத்தியில் “ஹீரோ’க்களாக இந்தப் போலீஸார் சித்தரிக்கப்பட்டும் இருக்கின்றனர்.

இந் நிலையில்தான், மாண்டுபோன ஷொராபுத்தீன் ஷேக்குடைய சகோதரர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு, நம்ப முடியாத உண்மைகள் வெளிவந்திருக்கின்றன!

குஜராத் சம்பவம் வெறும் அதிகார துஷ்பிரயோகம் அல்ல; அது திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது. சிறுபான்மை இனத்தவர் பேரில் அம் மாநிலக் காவல்துறை காட்டிவரும் ஆழ்ந்த துவேஷத்தின் வெளிப்பாடாக நடந்த இச் சம்பவம் குறித்து இப்போது சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டு வருகிறது.

இத்தகைய துவேஷமும், சக உயிர்களைத் துச்சமாக எண்ணும் குரூரமும், ஆட்சியாளர்களின் மௌன அங்கீகாரமின்றி வளர்வதும் வெளிப்படுவதும் சாத்தியமில்லை.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மத துவேஷம் காரணமாக நிகழ்ந்த பல கொடூரக் குற்றங்களைக் கண்டு நாடே நடுங்கியது.

இன்று அதே வகையான குற்றங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் காவல்துறையினரின் பங்கேற்பு அல்லது ஆதரவுடன் விமரிசையாக நடக்கின்றன.

நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் பொருளாதார ரீதியில் பாய்ந்து முன்னேறியிருக்கலாம்; ஆனால், மனித நேய அடிப்படையில் பார்த்தால் சுடுகாடாகத்தான் இருக்கிறது. மோடி அரசு, சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என்று வாதாடுவது, “அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வதுபோல் இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டுமானால், பாரதிய ஜனதா கட்சி தனது தீவிர ஹிந்து அடிப்படைவாதத்தைக் கைவிட வேண்டும். பிற மத துவேஷத்தை வளர்க்கிற பஜ்ரங் தள், வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளிடமிருந்து விடுபட்டு, சுதந்திர அரசியல் இயக்கமாகி, சமதர்ம சமுதாயம் என்ற உயர் இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

இல்லாவிடில், அக் கட்சி மெள்ள அழிவதுடன் “”வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் இந்தியாவின் ஜீவ கொள்கையின் மீது ரணகாயங்களையும் ஆறாத வடுக்களையும் விட்டுச் செல்லும்.

———————————————————————————————

மனித உரிமைக் கல்வியின் அவசியம்…?

என். சுரேஷ்குமார்

இந்தியாவில் மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை கடந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்தது.

அக்குழுவினர் தற்போது மனித உரிமை கல்விக்கான கல்லூரி, பள்ளிகளுக்கான மாதிரி பாடத் திட்டம், அந்த பாடத்தை ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை ஆகியவற்றை வெளியிட்டு, மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை தீர்மானித்திருக்கிறது.

வளர்ந்து வரும் எந்தச் சமுதாயத்திலும் மனித உரிமை மீறல் என்பது எதிர்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பிரச்னை. மனித உரிமை மதிக்கப்படும்போதுதான் எந்தவொரு சமுதாயமும் முழுமையான நாகரிகத்தை எட்டியிருக்கிறது என்று சொல்ல முடியும். இந்த வகையில் மனித இனம் இன்னும் கடக்க வேண்டிய தடைகள், செய்ய வேண்டிய மாற்றங்கள், ஏராளம், ஏராளம். மனித உரிமை மீறலைத் தடுப்பது அதன் முக்கியமான முதல் கட்டம்!

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம் கயர்லாஞ்சி. இந்த கிராமத்தில் பய்யாலால் போட்மாங்கே என்ற விவசாயியின் குடும்பத்தின் மீது அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியினருக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் பய்யாலாலின் மனைவி சுரேகா, மகள் பிரியங்காவை ஊருக்கு நடுவில் பய்யாலாலின் மகன்கள் ரோஷன் மற்றும் சுதிரைக் கொண்டு மானபங்கம் செய்ய வலியுறுத்தியதும் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாததால் இருவரையும் படுகொலை செய்ததோடு சுரேகாவையும், பிரியங்காவையும் கிராமத்து ஆண்களால் மானபங்கம் செய்ததோடு கொன்றும் வீசினர்.

2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தப் படுகொலை மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிகழ்ச்சி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது என்று கேட்டால் – ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

இந்த அறியாமைக்குக் காரணம் என்ன என்று பார்க்கும்போது ஒன்று – மனித உரிமை மீறல் குறித்த கல்வியறிவு இல்லாதது. இரண்டாவது – இம்மாதிரியான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காததும், சுட்டிக்காட்டத் தவறியதுமே.

மனித உரிமை குறித்த கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக இன்றியமையாதது. இதன்மூலம் மட்டுமே சுதந்திரம், ஜனநாயகம் காக்கப்படும்.

மனித உரிமைக் கல்வியை ஊக்குவிக்க யுனெஸ்கோ 1974-ம் ஆண்டு உலகநாடுகள் அனைத்துக்கும் பரிந்துரை செய்தது. இது தொடர்பாக, மனித உரிமைகளைப் பயிற்றுவிப்பதற்கான முதலாவது சர்வதேச மாநாடு வியன்னாவில் 1979-ம் ஆண்டு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி குறித்தும் அதைப் பயிற்றுவிப்பது குறித்தும், மனித உரிமைக் கல்வி குறித்து தனி நபர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது மாநாடு 1987-ம் ஆண்டு மால்டாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி மற்றும் கற்பித்தலை பொது நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் விரிவான பங்கேற்புடன் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தப்பட்டது.

மூன்றாவது மாநாடு 1993 மார்ச் மாதம் கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரில் நடைபெற்றது. இந்த மாநாடு ஜனநாயகத்திற்கான கல்வி என்பது, மனித உரிமைகள் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதி என்று அறிவித்தது. மேலும், மனித உரிமைக் கல்வி, ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை மெய்யாக்க ஓர் அடிப்படை தேவை என்பதையும் இம்மாநாடு வலியுறுத்தியது.

மனித உரிமைகள் கல்வியின் அவசியம் 1993-ம் ஆண்டு 171 நாடுகள் பங்கேற்ற மனித உரிமைகளுக்கான உலக மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாநாடு மனித உரிமைகள் மீதான மரியாதையையும் அது ஒரு மெய்யான ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்பதையும் ஆதரித்தது. இதைத்தொடர்ந்து ஐநா சபை மனித உரிமைகள் கல்விக்கான தீர்மானத்தை 1994-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்தத் திட்ட அமல் மற்றும் ஒருங்கிணைப்பு பொறுப்பை ஐநா மனித உரிமைகளுக்கான ஹைகமிஷனிடம் ஒப்படைத்தது.

மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான முழுமையான கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கச் செய்வது யுனெஸ்கோவின் நீண்டநாள் நோக்கமாகும். முறையான கல்வித் திட்டத்துடன், பள்ளிசாரா வயது வந்தோர் கல்வித் திட்டத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் யுனெஸ்கோ வலியுறுத்தியது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பண்பாட்டை கட்டமைக்க கல்வியாளர்கள், ஊடகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையாலேயே முடியும்.

மனித உரிமைகள் கல்விக்கான திட்டத்தை 1995-ம் ஆண்டுவரை 125 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, BJP, deaths, Editorial, Enforcement, Govt, Gujarat, Hindu, Hinduism, HR, Human Rights, Influence, Kalki, Law, Lockup, Modi, Murder, Order, Police, Police Station, Power, RSS, Tamil Nadu, TN | Leave a Comment »

Right to Information Act – State of Police Force

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007

தமிழக போலீஸ் சட்டம் -“பரம ரகசியம்’

ஏ. தங்கவேல்

புதுதில்லி, மே 1: இந்தியாவில், தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டம் பிரபலமடைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், தமிழக அரசு உருவாக்கி வருவதாகக் கூறப்படும் போலீஸ் சட்டம், மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது!

தமிழக அரசு அதிகாரிகளைக் கேட்டால் இப்படித்தான் சொல்கிறார்கள்.

தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டபோது, மாநாட்டின் பிரதிநிதிகள் ஆச்சரியமடைந்தனர்.

ஓய்வு பெற்ற இரு காவல் துறை தலைவர்கள் பிரகாஷ் சிங் மற்றும் என்.கே. சிங் கடந்த 1996-ல் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, போலீஸ் அதிகாரிகளின் திறமையான செயல்பாட்டுக்காக மாநில பாதுகாப்பு கமிஷனை உருவாக்குதல், தகுதி அடிப்படையில் மாநில காவல் துறை தலைவர் உள்பட முக்கிய காவல் துறை அதிகாரிகளை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பதவியில் நியமித்தல் உள்ளிட்ட ஏழு உத்தரவுகளை நீதிமன்றம் வெளியிட்டது.

அந்த உத்தரவுகளை நிறைவேற்ற இந்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரம் உள்பட பத்து மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பட்டியலில் உள்ளன.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், போலீஸ் சீர்திருத்தம் தொடர்பான உத்தரவுகள், மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும், புதிய போலீஸ் சட்டத்தை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந் நிலையில், தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் மனித உரிமை மாநாட்டில் போலீஸ் சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக காவல் துறையிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

தமிழகத்திலிருந்து, கோவை மனித உரிமை அமைப்பின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான வி.பி. சாரதி கலந்துகொண்டார். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ள புதிய போலீஸ் சட்டம் தொடர்பான தகவல்களைப் பெற, சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்றபோது தனக்கு நேர்ந்த அனுபவங்களை அவர் விவரித்தார்.

“”தமிழக அரசின் புதிய போலீஸ் சட்ட வரைவு நகலைப் பெறுவதற்காக மார்ச் 16-ம் தேதி சட்ட அமைச்சரை (துரைமுருகன்) அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது என்று கூறிய அவர், மூத்த உதவியாளரை அழைத்து, எனது கோரிக்கை பற்றி கவனிக்குமாறு கூறினார்.

அந்த உதவியாளரோ, இது உள்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றார். “சட்ட வரைவு உங்கள் துறை தொடர்பானதுதானே’ என்று சுட்டிக்காட்டிய போது, “இந்த விஷயம் முதல்வரின் நேரடிப் பார்வையில் உள்ளது’ என்று சொல்லி கையை விரித்துவிட்டார்.

அடுத்து, சட்ட அமைச்சகத்தின் உதவிச் செயலரைச் சந்தித்தேன். போலீஸ் வரைவுச் சட்டம் “மிகவும் ரகசியமானது’ என்று கூறி, தகவல் தர மறுத்துவிட்டார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்பதாகச் சொன்னபோது “முயற்சி செய்து பாருங்கள்’ என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

அவர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சொன்னபடி அவர்கள் புதிய போலீஸ் சட்டத்தைத் தயார் செய்திருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது” என்றார் சாரதி.

இந்தப் பிரச்சினையில், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு இயக்கம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சாரதி தெரிவித்தார்.

Posted in Analysis, Andhra, Andhra Pradesh, AP, Correctional, HR, Human Rights, Information, Law, Op-Ed, Order, Parthasarathi, Parthasarathy, Police, RTI, solutions, TN, VP Sarathi, VP Sarathy | Leave a Comment »

Pakistan Govt agrees to hardline demands of madrasa

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

சர்ச்சைக்குரிய மதக் கல்வி நிறுவனங்களை மூட பாக். அரசுக்கு கோரிக்கை

இஸ்லாமாபாத், ஏப். 25: இஸ்லாமிய சட்டத்தை வலியுறுத்தும் மதக் கல்வி நிறுவனங்களை மூடவேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு பாகிஸ்தானில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இத்தகைய கல்வி நிறுவனங்கள் ஷிரியா சட்டம் (முஸ்லிம்கள் பின்பற்றவேண்டிய மதச்சட்டங்கள்) என்ற போர்வையில் பயங்கரவாதத்தை பரப்பி வருவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.

இது தொடர்பாக மகளிர் உரிமை அமைப்புகள், சிவில் சமூக அமைப்பு ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் இஸ்லாமாபாதில் திங்கள்கிழமை நடந்த பேரணியில் பங்கேற்றனர். மகளிருக்கான ஜமியா ஹப்சா மதறஸô தீவிரவாதம், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும அதை மூடவேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தியதாக டான் பத்திரிகை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

ஜமியா ஹப்சா மதறஸô மாணவர்கள் சில வாரங்களுக்கு முன் 3 பெண்களை கடத்தியதுடன் விடியோ கடை ஒன்றுக்கும் தீவைத்துள்ளனர். இந்த மாணவர்கள் பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்துகின்றனர்.

பொது நூலகம் ஒன்றையும் இந்த மதறஸôவைச் சேர்ந்த மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்றும் பேரணியில் பங்கேற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Posted in clerics, Courts, Education, Government, HR, Human Rights, Hussain, Islam, Jamia Hasfa, Judge, Justice, Lal Masjid, Law, madrasa, Maulana Abdul Aziz, Maulana Abdul Rashid Ghazi, Muslim, Muslim League, Muslim League-Q, Order, Pakistan, PML-Q, radical, School, Sharia, Shariat, Shariath, Shia, Sunni, Surveillance | 2 Comments »

63 SEZ – 900 Crore unit in Ennore; Chennai: 2

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

எண்ணூரில் 900 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டலம்: சென்னையில் 2 } திருவள்ளூரில் 3

எம். ரமேஷ்

சென்னை, மார்ச் 16: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் ரூ.900 கோடியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 14 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் திட்டமிடப்பட்டன. அவற்றுள் நான்கு செயல்பட்டு வருகின்றன. புதிதாக 10 இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திருவள்ளூரில்…: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் ரூ. 900 கோடி முதலீட்டில் பல தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2,650 ஏக்கர் நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் “ஆட்டோ சிட்டி’ என்ற பெயரில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமையும். என்எம்சி ஆட்டோமோடிவ் இன்ஃபிராஸ்டிரக்சர் (பி) நிறுவனம்-டிட்கோ இணைந்து இந்த “ஆட்டோ சிட்டி’-யை அமைக்கின்றன.

மூன்றாவதாக சிங்கப்பூர் நிறுவனம் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் எலெக்ட்ரானிக், ஹார்ட்வேர் சார்ந்த ஐடி மற்றும் ஐடிஇஎஸ், லாஜிஸ்டிக்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை திருவள்ளூரில் அமைக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த அசென்டாஸ் நிறுவனம் இதை உருவாக்குகிறது.

சென்னையில்…: சென்னையில் இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகின்றன. இவை இரண்டும் டைடல்-2, டைடல்-3 என்ற பெயரில் தரமணியில் அமைகின்றன. டைடல்-2 சிறப்புப் பொருளாதார மண்டலம் 26.39 ஏக்கர் நிலப்பரப்பிலும், டைடல்-3 பொருளாதார மண்டலம் 25 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைகிறது.

கோவையில்…: டைடல்-4 என்ற பெயரிலான மற்றொரு சிறப்புப் பொருளாதார மண்டலம் கோவையில் உருவாக்கப்பட்டு வருகிறது. “எல்காட்’ நிறுவனத்தின் கூட்டுடன் இது உருவாக்கப்படுகிறது.

ஒசூரில் ரூ. 500 கோடி முதலீட்டில் 2,600 ஏக்கரில் பல தொழில்களை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பல தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் ரூ. 500 கோடி முதலீட்டில் உருவாக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் ரூ. 14.52 கோடி செலவில் ரப்பர் பொருள்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலம் தேர்வு செய்யப்படுகிறது.

==========================================
63 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அறிவிப்பு

புதுதில்லி, மார்ச் 16: நாடு முழுவதும் 237 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 63 மண்டலங்கள் குறித்து இதுவரை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அசாமில் 2006-07ம் ஆண்டில் தேயிலை தொழிலுக்கான மானியமாக ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டது. தேயிலை சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைய தேயிலை நிதியை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விவசாயிகளை அவர்களின் விளை நிலங்களிலிருந்து வெளியேற்றியது. மக்கள் இடம் பெயர்ந்தது ஆகியவை குறித்து தெரிவிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. எனவே இவை குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று ஊரக மேம்பாட்டு அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் கூறினார்.

ஆயுதமற்ற விண்வெளிக்கு ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி

விண்வெளியை அமைதியான முறையில் அனைவரும் பயன்படுத்தவும், ஆயுதங்களை அங்கே வைக்காமல் இருக்கவும், விண்வெளியில் உள்ள பொருள்களின் மீது ஆயுதங்களைப் பயன்படுத்தி சோதனை செய்வதற்கு எதிராகவும் உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த அரசு அக்கறை காட்டி வருகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

10 சதவீத வளர்ச்சிக்கு வரைவு அறிக்கை

2011-12-ம் ஆண்டில் 10 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டும் இலக்குடன் 11-வது ஐந்தாண்டு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேசிய வளர்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் எம்.வி.ராஜசேகரன் கூறினார்.

விக்ராந்த் போர்க்கப்பலின் ஆயுளை நீட்டிக்க ஆய்வு

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க் கப்பலின் ஆயுள் காலத்தை 2012-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய கப்பல் படை ஆய்வு மேற்கொண்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

சில கோளாறுகளை சரி செய்வதன் மூலமும், குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு செய்வதன் மூலம் இக்கப்பலின் ஆயுளை நீட்டிக்கலாம் என கப்பல் படை நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 44 ஆயிரம் டன் எடை கொண்ட அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க் கப்பலை இந்தியா வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

ரூ.267 கோடியில் தில்லி-ஆக்ரா புதிய சாலை

தில்லி-ஆக்ரா இடையே ரூ.267 கோடியில் போக்குவரத்து சிக்னல் இல்லாத நெடுஞ்சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

Posted in 237, 63, Agriculture, Assam, Chennai, Coimbatore, Commerce, Economy, Employment, Ennoor, Ennore, Exports, Factory, Farmer, Farmlands, Hosur, Human Rights, Industry, Jobs, Kamalnath, Kovai, Land, Madras, Manufacturing, Nagercoil, Nagerkovil, Perambaloor, Perambalur, SEZ, Special Economic Zone, Thiruvalloor, Thiruvallur, TIDEL | 1 Comment »

Mahinda Rajapakse & LTTE made a deal? US, German and Italian ambassadors injured in a LTTE attack

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இத்தாலிய தூதுவர் உட்பட 11 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இன்று மட்டக்களப்பு சென்றிருந்தார்.

இவர்கள் சென்ற ஹெலிக்கொப்டர் மட்டக்களப்பு நகரில் உள்ள வெபர் மைதானத்தில் தரை இறங்கியதும், அங்கு படை மற்றும் சிவில் அதிகாரிகளால் இவர்கள் வரவேற்கப்பட்டனர்.

அப்போது அங்கு இரண்டு எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவத்தின் போது ஒரு எறிகணையின் சிதறல் அருகில் இருந்த வின்சன்ட் மகளிர் கல்லூரியில் விழுந்ததில் ஒரு மாணவியும் காயமடைந்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இராஜதந்திரிகள் அந்தப் பகுதிக்கு வருவது குறித்து தமக்கு முன்னரே அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

இது குறித்துக் கருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.


‘ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக புலிகளுடன் மஹிந்த ரகசிய ஒப்பந்தம்’- சந்தேகம் எழுப்புகிறார் ரணில்

மஹிந்த ராஜபக்ஷவும் ரணிலும்
மஹிந்த ராஜபக்ஷவும் ரணிலும்

இலங்கையில் கடந்த 2005இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது என்பதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்திருந்தார்.

அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிறிபதி சூரியாராட்சி அவர்கள் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களிற்கும் எதிராக பலவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

ஜனாதிபதித் தேர்தலிற்கு முன்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பினரிற்கும், புலிகளிற்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பில் இரகசிய ஒப்பந்தம் இருந்தது என்று மிகவும் பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை ஊடகங்கள் வாயிலாக ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கிறார்.

இந்த விடயம் குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ள ரணில் விக்கிரமசிங்க, இப்படியாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார்.

Posted in Ambassadors, Army, Attack, Batticaloa, Colombo, deal, German, Germany, Human Rights, Italy, LTTE, Mahinda Rajapakse, Mahinda Samarasinghe, Military, Rajapakse, Ranil, Ranil Wickremesinghe, Rebels, Siripathi, Siripathi Sooriyaarachchi, Siripathy, Sooriyaarachchi, Sooriyaarachi, Sri lanka, Srilanka, Tamil Tiger, US, USA, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »

Rehabilitation scheme for human waste cleaners – Dalit development schemes

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

மனிதக் கழிவுகளை சுத்திகரிப்போருக்கு 2009 ல் மறுவாழ்வு திட்டம் அறிமுகம்: மத்திய அரசு முடிவு

புது தில்லி, ஜன. 31:மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. 2009 ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் நிலையை மாற்றவேண்டும் என இடதுசாரிக்கட்சிகள் கோரிவந்தன. இதையடுத்து அவர்களுடைய நலனுக்காக மத்திய அரசு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு ஒரு ஆண்டு சுயதொழில் பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தொழில் துவங்க ரூ. 5 லட்சம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு, உரிய வங்கிகள் மூலம் மத்திய அரசு மானியம் அளிக்கும்.

மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி, நாடு முழுவதும் தற்போது 7 லட்சத்து 70 ஆயிரத்து 338 சுத்திகரிப்பு தொழிலாளிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களது குடும்பத்தினர் மற்றும் இவர்களைச் சார்ந்தோருடன் மொத்தம் 40 லட்சம் பேர் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய சஃபாய் கர்மாச்சாரி நிதி மற்றும் வளர்ச்சி வங்கி அல்லது குறிப்பிட்ட உயர்நிலை நிறுவனங்கள் மூலம் மானியங்கள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் அதேவேளையில் நாடுமுழுவதும் உலர் கழிவறைகள் ஏற்படுத்தப்படும். மத்திய வீட்டுவசதித்துறை மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம், மாநில நகராட்சி அமைப்புகள் ஊராட்சி அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இவை ஏற்படுத்தப்படும்.

இவர்களும் மனிதர்கள்தான்

நாட்டில் மனிதக் கழிவை மனிதனே எடுத்துச் செல்லும் கொடுமையை முற்றிலுமாக அகற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பெரும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுமார் 8 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இத்துடன் இவர்களை நம்பியுள்ள சுமார் 40 லட்சம் பேருக்குப் பலன் அளிக்கும் வகையில் இத் திட்டம் தீட்டப்படுகிறது.

இதன்படி இத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் தொடங்க மானியத்துடன் சலுகை வட்டியில் கடனுதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் தேர்வு செய்யும் தொழிலைப் பொருத்து குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். சுயஉதவிக் குழுக்கள் அல்லது என்ஜிஓவினர் மூலம் இதை வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய முறையை அகற்ற 1992ல் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆந்திரம், கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரம், திரிபுரா, மேற்குவங்க மாநிலங்களில் இத்தகைய தொழிலாளர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ. 600 கோடி செலவிட்டும் சில ஆயிரம் பேரே இதில் பலன் அடைந்தனர்.

இத்திட்டம் சரிவர அமல்படுத்தப்படாததால் 2003ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. பல மாநிலங்களில் குறிப்பாக ரயில்வேயில் இது அதிகம் காணப்படுகிறது. இதை அகற்ற மத்திய, மாநில அரசுகள் கால வரம்புடன் கூடிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரில் 92 சதவீதம் பேர் தலித்துகளில் ஒரு பிரிவினர் என்றும் குறிப்பிடப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சரியான முறையில் கணக்கெடுத்து, அவர்களின் மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

முன்னதாக, 1993ல் இந்த முறைக்குத் தடைவிதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி இத்தகைய தொழிலில் யாரையாவது ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்டவருக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரை மாற்றுத் தொழிலில் ஈடுபடுத்த ரூ.58 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத்தொழிலில் அவர்கள் தொடருவதற்கு வறுமையும் சமூக நடைமுறைகளும்தான் காரணம். பண்டைக்காலத்தில் நவீன கழிப்பறை வசதிகள் இல்லாததால் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய நவீன சூழ்நிலையிலும் இம்முறை தொடர்வது கவலை அளிக்கிறது.

நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது. அங்கு குறைந்த செலவில் மானியத்துடன் கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தனி கழிப்பறை ஏற்படுத்திக் கொள்ள வசதி இல்லாதோர்க்கு பொதுக் கழிப்பறைகள் கட்டித் தரப்படுகிறது. ஆனால் அவை சரிவர பராமரிக்கப்படுவதில்லை. அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

இதன் மூலம் கிராமங்களிலும் தூய்மையை ஏற்படுத்த முடியும். மேலும் இத்தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. இதைத் தடுக்க முறையான மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இத்திட்டம் வெற்றி பெற அரசுகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Posted in 2009, Apartheid, Clean, Cleaners, Cleanup, Dalit, Dalit Human Rights, Development, dry latrines, Government, human excrement, Human Rights, Human Rights Watch, human waste, Loans, Manual Scavengers, Opportunities, Rehabilitation, Restroom, safai karamcharis, Safai Karmachari Andolan, scavengers, Schemes, Self employment | 1 Comment »

Collector starts probe into attack on DPI MLA D Ravikumar

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை போலீஸ் தாக்கியதாக புகார்: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

கடலூர், ஜன. 11: காட்டுமன்னார்கோயில் சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமாரை, போலீஸ் தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2-ம் தேதி கடலூர் வட்டம் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவாவின் சவ ஊர்வலம் சேடப்பாளையத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை, காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த உண்மை நிலையை அறிய, மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சியத் தலைவரை விசாரணை அலுவலராக நியமித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் 25-1-2007 அன்று, காலை 11 மணிக்கு, ஆட்சியர் அலுவலக நீதிமன்றக் கூடத்தில் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளார்.

சேடப்பாளையம் கிராமத்தில் 2-1-2007 அன்று, நடைபெற்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற ரவிக்குமாரை, காவல் துறையினர் தாக்கியதாக கூறப்படுவது குறித்த விவரங்களை நேரடியாகவோ, வேறு எந்த விதத்திலோ தெரிந்தவர்கள், இந்த விசாரணையில் ஆஜராகி அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ இதைத் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Posted in abuse, Attack, civil rights, Collectorate, Cuddalore, D Ravikumar, Dalit Panthers, District Collector, District Magistrate, DPI, Gaikward Babu, Human Rights, Kattumanaar Koil, Kattumanaar Kovil, Kattumanar Koil, Kattumanar Kovil, Law, Makkal Civil Rights Kazhagam, Manitha Urimai Iyakkam, MLA, municipal chairman, Municipality, Nellikuppam, Order, Peoples Watch, Police, Puratchi Thamizhagam, Rajendra Ratnoo, Ravi kumar, Ravikkumar, S N Nagar, Thamarai Selvan, vice-chairman, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Police Force – History, Perspectives, Evolution & Backgrounders : Human Rights

Posted by Snapjudge மேல் ஜனவரி 5, 2007

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?

ஆர். நடராஜ்

ஆண்டு 1860. ஆகஸ்ட் 17-ம் நாள்.

இது இந்திய காவல் துறை சரித்திரத்தில் மிக முக்கியமான நாள். அன்றுதான் முதல் போலீஸ் கமிஷன் எம்.எச். கோர்ட் தலைமையில் அப்போதைய மதராஸ் காவல் துறைத் தலைவர் டபிள்யூ. ராபின்ஸன் உள்ளிட்ட ஆறு நபர் குழாம் அமைக்கப்பட்டது.

இந்தக் கமிஷனின் பரிந்துரையின் பேரில் இந்திய காவல் சட்டம் 1861 இயற்றப்பட்டது. இது இந்தியாவில் உள்ள காவல் துறை அமைப்பை இன்றுவரை நிர்ணயிக்கும் சட்டம்.

இந்தச் சட்டத்துக்கு அடித்தளம் 1859-ல் இயற்றப்பட்ட மதறாஸ் சட்டம் 27 – இது அப்போதிருந்த மதறாஸ் மாகாணத்தின் காவல் துறை அமைப்பை நிர்ணயித்தது. இந்தச் சட்டத்துக்கு முன்னோடியாக இருந்தது 1856ல் இயற்றப்பட்ட சென்னை மாநகர காவல் அமைப்புச் சட்டம்.

ஆம், சென்னை நகர காவல் சட்டம் பிரிவு XIII 1856 பின்பு வளர்ந்த காவல் அமைப்புகளுக்கு வழிகாட்டி என்பதுதான் உண்மை.

1856 சென்னை நகர காவல் சட்டப்படி போல்டர்சன் முதல் ஆணையாளராகப் பொறுப்பேற்றார். குற்றவியல் நீதித்துறை தலைவர் அந்தஸ்து அவருக்குத் தரப்பட்டது.

1856 முதல் சுதந்திரமாகச் செயல்பட்ட நகர காவல் துறை, 1867ல் மாகாண காவல் துறைத் தலைவர் ஆளுமையில் கொண்டு வரப்பட்டு, பின்பு 1887 முதல் கைல்ஸ் குழுவின் பரிந்துரையின் பேரில் தனிப்பிரிவாக அரசின் பிரத்தியேக அதிகாரத்தின் கீழ் செயல்பட்டது.

1902 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட போலீஸ் கமிஷன், சென்னை, மும்பை, கோல்கத்தா நகரங்கள் மற்றும் மாகாணங்களில் செயல்பட்ட காவல் துறையின் செயல்பாடுகளை ஆராய்ந்து காவல் துறை சீரமைப்புத் திட்டத்தை வகுத்தது. அதன்படி மீண்டும் மாநகர காவல் துறை மாகாணத்தின் காவல் துறையின் ஆளுமையின்கீழ் கொண்டு வரப்பட்டது.

1886ஆம் ஆண்டு சென்னை “மக்கள் பூங்கா’வில் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. ஒரு மிகப்பெரிய பொருள்காட்சி இந்த மைதானத்தில் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் 372 பேர் உயிரிழந்தனர்.

இம்மாதிரி மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக அதிக காவலர்கள் தேவைப்பட்டதால், அண்டை மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். “மொஹரம்’ சமயச் சடங்குகள் சமயத்தில் சென்னையில் அடிக்கடி சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டது. உயிரிழப்பும் ஏற்பட்டது. இதைக் கருதி “சேமைப்படை’ உருவாக்கப்பட்டது. “மாகாண சேமைப்படை’யும் நிறுவப்பட்டது.

மேற்கூறிய தீவிபத்து மற்றும் அசாதாரணமாக நிகழும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு சென்னை நகர காவல் சட்டம் பிரிவு XIII 1888 அமலாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் சென்னை நகர காவல் துறை இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்பு கொடுப்பது காவல் துறையின் பணி என்பதை கருத்தில்கொண்டு இம்மாதிரி கேளிக்கை இடங்களுக்கு ஆணையாளரிடமிருந்து உரிமம் பெற வேண்டும் என்று இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

விபசாரம் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது இன்றைய நிலை. ஆனால் அன்று இது ஒரு சமூகத்தில் உறைந்துள்ள தீயொழுக்கம் என்று கருதப்பட்டது. 1887 ஆம் ஆண்டில் சென்னையில் 620 அங்கீகரிக்கப்பட்ட விலை மாதர்கள் இருந்தனர். உரிமம் பெற்ற 237 சாராயக் கடைகளும், 343 கள்ளுக்கடைகளும், 139 போதைப் பொருள்கள் விற்பனை இடங்களும் இருந்தன என்பது அப்போது இருந்த சமுதாய நிலையைப் பிரதிபலிக்கிறது.

1946ல் இருந்து சென்னை மாநகர விரிவாக்கம் தொடங்கப்பட்டு, புறநகர்ப் பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து படிப்படியாக இணைக்கப்பட்டன.

2005ல் சென்னை நகரத்தின் பரிணாம வளர்ச்சியைச் சமாளிக்க சென்னைப் பெருநகர காவல் துறை உருவாக்கப்பட்டு, மேலும் பல புறநகர்ப் பகுதிகள் சென்னையோடு இணைக்கப்பட்டன. இன்று 121 காவல் நிலையங்கள் மற்றும் 34 மகளிர் காவல் நிலையங்களும் இயங்குகின்றன. சென்னை துறைமுகப் பாதுகாப்புக்காக பிரத்தியேக மிதக்கும் கடலோர காவல் நிலையம் இயங்குவது இந்தியாவிலேயே சென்னையில் மட்டும்தான் என்பது சென்னை மாநகர காவல் துறையின் மற்றொரு சிறப்பு.

சென்னை ஆணையாளராக முதலில் பதவி பெற்றவர் போல்டர்சன். பராங்குசம் நாயுடு முதல் இந்தியராக இந்தப் பதவியை அலங்கரித்தவர்.

சமீபகாலத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, ரோந்து வண்டிகளுக்கு பூகோள நிர்மாணிப்புக் கருவி பொருத்தப்பட்டு செயல்முறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.

சமுதாய காவல்பணி மேலும் மேம்படுத்தப்பட்டு ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் சமுதாய காவல்பணி மையங்கள் அமைக்கப்பட்டன.

குற்றத்தடுப்பு நடவடிக்கை, நடந்த குற்றங்களைக் கண்டுபிடிக்க பிரத்தியேக முயற்சி, மீட்கப்பட்ட பொருள்களை உரியவரிடம் ஒப்படைத்தல், நடந்த குற்றங்களைத் துரிதமாகப் புலனாய்வு செய்து முடித்தல், போக்குவரத்தை சீரமைத்தல், தானியங்கி சமிஞ்கை நிறுவுதல், சைபர் குற்றங்களை எதிர்கொள்ளல், பொதுமக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து மனித நேயத்தோடு தீர்வு காணுதல், குழந்தைகள் குற்றங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க சிறார் மன்றங்களை நிறுவுதல் போன்ற பல ஒருங்கிணைந்த பணிகள் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல சென்னை மாநகர பதினைந்து காவல் நிலையங்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் பெறப்பட்டது.

இன்று நவீன மயமாக்குவதில் மேலும் ஒரு மைல்கல், பல தொழில் நுட்ப உபகரணங்கள் கொண்ட ரோந்து வாகனங்கள். இம்மாதிரி 100 ஹூண்டாய் வாகனங்கள் தமிழக முதல்வரால் சென்னை மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டன. இந்தியாவில் வேறு எந்த ஒரு நகரத்திலும் இம்மாதிரியான நவீன வாகனங்கள் இல்லை.

காவல் துறையினரிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது நேர்மை, கண்ணியம், கடமை உணர்வு, காவல் நிலையங்களில் அனுசரணையான அணுகுமுறை. பாரம்பரிய வளம் பெற்றது தமிழக காவல் துறை. தமிழக காவலர்கள் நல்லொழுக்கத்துக்கு எடுத்துக்காட்டு. எவ்வளவோ சவால்களையும், சுமைகளையும் கடந்து புடம் போட்ட தங்கமாக மிளிர்வது நமது காவல் துறை. தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? ஆயிரக்கணக்கான காவலர்களின் வியர்வையில் வளர்ந்தது இந்தத் தல விருட்சம். அதனை மேலும் மேம்படுத்துவது ஒவ்வொரு காவல் துறை ஆளுநரின் கடமை.

சென்னை காவல் துறை, 150-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், காவல் துறைக்கு நற்பணியாற்றிய பல சிகரங்களை எட்டிய பெரியவர்களின் பணிகளை நினைவு கூர்வோம். சமுதாயப் பணிக்காக உயிரைக் கொடுத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செய்வோம்.

“”நேசமான அணுகுமுறை, பொறுப்புணர்ச்சி, வெளித் தலையீடுக்கு அடிபணியாதிருத்தல், பரிவோடு நம்பிக்கை வரும் வகையில் நடத்தல், திறமையான உயர்தர ஆளுமை காவல் துறையின் எல்லா மட்டத்திலும் பரிமளித்தல் ஆகிய நல்லியல்புகள் காவல் துறை மேன்மை அடைய இன்றியமையாதவை’ என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ள அறிவுரைக்குச் செயல்வடிவம் கொடுப்போம். இதுவே ஒவ்வொரு காவல் துறையினரின் குறிக்கோளாகவும் அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: காவல் துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).

Posted in Arrack, Correctional Force, Cyber Crime, DGP, Drugs, History, Human Rights, IG, Law, Legal Sex, Madras Police, MH Court, Order, Parangusam Naidu, Polderson, Police Commissioner, Prostituition, R Nataraj, Sex, Society, Toddy Shops, W Robinson | Leave a Comment »

Rajni acts in Kaavalar – Ungal Sevakar by the Tamil Nadu Police department

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

ரஜினி-இன்காவலர் உங்கள் சேவகர்

சென்னை மாநகரக் காவல் துறையின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரஜினி, கமல், நயனதாரா, அசின் உள்ளிட்ட பிரபலங்களுடன் மற்றும் முதல்வர் கருணாநிதி, மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண், இணை ஆணையர் ரவி உள்ளிட்டோர் இணைந்து நடிப்பில் காவலர் உங்கள் சேவகர் என்ற படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் வயது 150. ஜனவரி 4ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இதையொட்டி சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா கொண்டாட்டப் பணிகளைக் கவனிப்பதற்காக 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், சென்னை மாநகர காவல்துறையின் சிறப்புகளை விளக்கும் வகையிலும் காவலர் உங்கள் சேவகர் என்ற டாகுமென்டரி தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில்

  • ரஜினிகாந்த்,
  • கமல்ஹாசன்,
  • விக்ரம்,
  • சூர்யா,
  • நயனதாரா,
  • அசின் உள்ளிட்டோர் நடிக்கினறனர். முக்கிய வேடத்தில் வழக்கமான காமெடி வெடிகளுடன்
  • வடிவேலுவும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் ஷýட்டிங் அபிராமி தியேட்டரில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் ஷýட்டிங்கில் வட சென்னை இணை ஆணையர் ரவி, துப்பாக்கி முனையில் ரவுடிகளை சுட்டுப் பிடிப்பது போன்ற காட்சியை படமாக்கினர். இதில் இணை ஆணையர் ரவி படு தத்ரூபமாக நடித்தார்.

அதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில், கொள்ளைக் கும்பலை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடிப்பது போன்ற காட்சியில் மத்திய சென்னை இணை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடித்தார்.

இந்தக் காட்சிகளை பொதுமக்களும் திரளாக கூடி வேடிக்கை பார்த்தனர். போலீஸ் என்கவுண்டர்கள் குறித்து செய்தித்தாளில் படித்த அனுபவத்தை மனதில் ஓட்டியவாறு இந்த சினிமா என்கவுண்டரைப் பார்த்து மெய் சிலிர்த்தனர்.

அதேபோல ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் நடத்தப்படும் விசாரணை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

தரமணி டைடல் பூங்கா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், ஷேர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்படும் பெண்ணை மீட்பது போன்ற காட்சி ஷýட் செய்யப்பட்டது. இந்தக் காட்சியில் ஆணையர் லத்திகா சரண், போலீஸாருக்கு வயர்லஸ் மூலம் உத்தரவிடுவது போல நடித்தார்.

மற்றொரு காட்சியில், குடிபோதையில் வானம் ஓட்டும் நபரை போலீஸார் பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் போக்குவரத்து இணை ஆணையர் சுனில் குமார் கலந்து கொண்டு நடித்தார்.

வடிவேலுவின் பகுதிதான் படு சுவாரஸ்யமானது. செல்போன்களில் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பது, ஆபாசப் படங்களை எஸ்.எம்.எஸ். மூலம் ரவுண்டு விடுவது ஆகியவை தவறு என்று விளக்கும் காட்சியில் வடிவேலு நடிக்கிறாராம். அதை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை ததும்ப நடித்துக் கொடுக்கவுள்ளாராம் வடிவேலு.

உச்சகட்டமாக முதல்வர் கருணாநிதியும் ஒரு காட்சியில் நடிக்கவுள்ளாராம். இப்படி திரையுலகின் ஒத்துழைப்போடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரது நடிப்பில் உருவாகும் இந்த டாகுமென்டரி படத்தை ஜனவரி 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவுள்ளனராம்.

சென்னை மாநகர காவல்துறையின் பெருமைகள், சிறப்புகளை விளக்கும் வகையில் இருக்கும் படம் என்பதால் இப்படத்தைப் பார்க்க சென்னை போலீஸாரே படு ஆவலாக இருக்கிறார்கள்.

சினிமாக்காரர்களின் ஷýட்டிங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸாரே ஷýட்டிங்கில் கலந்து கொண்டு நடித்ததைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டுப் போயினர்.

இந்தப் படத்தில்

  • கவர்ச்சி நடிகை ரிஷா, ஷேர் ஆட்டோவில் கடத்தப்படும் சாப்ட்வேர் என்ஜீனியராக நடித்தார். இவர்கள் தவிர
  • கே.ஆர்.விஜயாவின் தங்கச்சியான கே.ஆர்.வத்சலா,
  • அப்சரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
  • வைரமுத்து டைட்டில் பாடலை எழுதியுள்ளார்.
  • மணிசர்மா இசையமைத்துள்ளார்.

Posted in Amnsetry International, Asin, Correctional, Docu Drama, Documentary, Drunken driving, DUI, ECR, Encounter, Human Rights, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kizhakku Kadarkarai Saalai, Lathika Charan, Latika Saran, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mani Sharma, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Nayan Dhara, Nayanthara, Order, Police, Rajini, Rajiniganth, Rajinikanth, Sandeep Roy Rathore, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil Nadu, Tharamani, TIDEL Park, Variramuthu, Vikram | Leave a Comment »

Infant Dead in Police Station – West Bengal Government questioned by Human Rights organization

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

பச்சிளம் குழந்தை சாவு: மேற்கு வங்க அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

புதுதில்லி, டிச. 10: மேற்கு வங்க மாநிலம், ஹெளரா போலீஸ் நிலையத்தில் தாயிடம் விசாரணை நடத்தியபோது குழந்தை இறந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி ஹெளரா போலீஸ் நிலைய போலீஸôர் அந்த தாயிடம் விசாரணை நடத்தியபோது குழந்தை அழுதது. ஆனால் போலீஸôர் அந்தக் குழந்தைக்கு பால் கொடுக்க விடாமல் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினராம். இதனால் குழந்தை இறந்தது.

இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து இதுபற்றி இரண்டு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு மாநில தலைமைச் செயலர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Posted in Calcutta, Child, Government, Howrah, Human Rights, Infant, Law, Magazines, Media, MSM, Order, Police Station, WB, West Bengal | Leave a Comment »