Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 5th, 2006

Fiji military coup is denounced

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006

பிஜியின் ராணுவத்துக்கு காமன்வெல்த் கண்டனம்

Bainimarama topples government as it pardons jailed coup plotters

பிஜியில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதை சர்வதேச சமூகம் கண்டித்துள்ளது
ரோந்துப் பணியில் இராணுவத்தினர்

பிஜி தீவில், அரசை ராணுவம் கவிழ்த்ததை காமன்வெல்த் கொள்கைகள் அனைத்தையும் மீறிய செயல், என்று காமன்வெல்த் தலைமைச்செயலர் டோன் மெக்கின்னன், கூறியுள்ளார்.

பிஜி ஒருவேளை காமன்வெல்த்திலிருந்து இடை நீக்கம் செய்யப்படக்கூடும் என்று அவர் கூறினார்.

பிஜி நாட்டு ராணுவத்தின் மீது தடைகளை விதிக்கப்போவதாக, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு பசிபிக் பிராந்திய அரசுகளும் கூறியுள்ளன.

இந்த ராணுவ அதிரடி ஆட்சி மாற்றம், பிஜியில் ஜனநாயக வழிமுறைக்கு ஒரு பெருத்த பின்னடைவு என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் மார்கரட் பெக்கட் கூறினார்.

காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழு ஒன்று லண்டனில் வெள்ளிக்கிழமை கூடி இந்த விடயத்தில் மேல் நடவடிக்கை குறித்து ஆராயும்.

பிஜி பிரதமர் லைசெனியா காரசெ நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச்செல்வதால் அவரைப் பதவியிலிருந்து அகற்றித் தான் அதிபர் பதவியை தற்காலிகமாக எடுத்துக்கொள்வதாக கமோடார் பைனிமரமா கூறினார்.

Posted in Aid, Army, Australia, Commonwealth, Don McKinnon, economic sanctions, Fiji, Frank Bainimarama, Great Council of Chiefs, Immigrants, India, Jona Senilagakali, Laisenia Qarase, Military, New Zealand, pardons, Prisoners, Ratu Josefa Iloilo, Visitors | Leave a Comment »

India’s Rice production hampered by Global Warming

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006

சீதோஷணநிலை காரணமாக இந்தியாவில் நெல் உற்பத்தி பாதிப்பு

சீதோஷணநிலை மாற்றத்தால் நெல் உற்பத்தி பாதிப்பதாக ஆய்வு
தஞ்சையில் உள்ள ஒரு நெல் வயல்

கரும்புகை போன்ற மாசு ஏற்படுத்தும் வாயுக்கள் மற்றும் புவி வெப்பமடைவதற்கு காரணமாக இருக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் ஆகியவைகள் சீதோஷ்ணநிலை மீது ஏற்படுத்திய தாக்கம் மட்டும் இல்லாதிருந்தால், 1990களில் இந்தியாவின் நெல் உற்பத்தி, இன்னும் 25 சதவீதம் வரை அதிகமாக இருந்திருக்கும் என்று அமெரிக்க அறிவியல் சஞ்சிகை ஒன்றில் பிரசுரமான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

தெற்காசியாவெங்கும் காணப்படும், பழுப்பு நிற மேகங்கள் சூரிய வெளிச்சத்தையும் மழைபொழிவையும் குறைத்ததன் மூலம், அரிசி உற்பத்திமீது எதிர்மறையான தாக்கத்தை விளைவித்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற சுற்றுப்புற சூழல் மாசுபட்டுள்ள பிற நாடுகளிலும், இதே போன்ற ஆய்வை மேற்கொள்ள இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Posted in Agriculture, China, emissions, Environment, Farming, Global Warming, Greenhouse, India, Indonesia, Irrigation, Pollution, Production, Rain, rice, South Asia, Sun, Water | Leave a Comment »

Reliance to bring piped cooking gas to Tamil Nadu by 2008

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006

தமிழகத்துக்கு எரிவாயு

தமிழகத்துக்கு எரிவாயு கிடைக்கச் செய்ய தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய திட்டம் வகுத்துள்ளது. தமிழக முதல்வரை சந்தித்துப் பேசிய பிறகு அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இதை தெரிவித்துள்ளார். இத் திட்டம் ஈடேறுமானால் தமிழகத் தொழில் வளர்ச்சி உத்வேகம் பெறும். வீடுகளில் சமையலுக்கும் எரிவாயு கிடைக்க ஆரம்பிக்கும்.

இந்தியாவில் நிலப்பகுதியிலும் கரையோரக் கடல்பகுதிகளிலும் எரிவாயு மற்றும் பெட்ரோலிய எண்ணெய் ஊற்றுகளைத் தேடும் பணியில் ஆரம்பத்தில் அரசு நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தாராளமயக் கொள்கை அமலாக்கப்பட்ட பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாயின. ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திரத்தையொட்டிய கடல் பகுதியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. 2002-ல் அந்த நிறுவனம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கடலுக்கு அடியில் பெரிய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்தது. பின்னர் அது வேறு ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டபோது மேலும் பல எரிவாயு ஊற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்விதம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டால் பொதுவில் அங்கு குழாய்களை இறக்கி உற்பத்தியில் ஈடுபட மூன்று முதல் ஐந்தாண்டுகள் ஆகும். இதன்படி 2005-ம் ஆண்டிலேயே அங்கு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். சில காரணங்களால் இது தாமதம் அடைந்தது. இப்போது அங்கு 2008 ஜூன் வாக்கில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தினமும் 4 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. கடலில் இருந்து எரிவாயுவைக் கரைப்பகுதிக்குக் கொண்டுவந்து பலநூறு கிலோ மீட்டர் நீளக் குழாய்களை அமைத்து, தேவையான பகுதிகளுக்கு குழாய் மூலம் எரிவாயுவை அளிப்பது என்பது வழக்கமான ஏற்பாடாகும். ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்து, அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கும் குழாய்கள் மூலம் எரிவாயுவைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

குடிநீர் விநியோகம் போல தெருத்தெருவாகக் குழாய்களை அமைத்து வீடுகளுக்கும் எரிவாயுவை அளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் உத்தேசித்துள்ளது. முதலில் சென்னை நகரில் இது மேற்கொள்ளப்படும். பிறகு மாநிலத்தின் இதர இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படுகிற சமையல் வாயுக்குப் பதில் இவ்விதம் குழாய் மூலம் எரிவாயு அளிக்கப்படும். இந்த எரிவாயு இப்போதைய எல்பிஜி சமையல் வாயுவை விட விலைகுறைவாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் எரிவாயுவை சமையலுக்கு மட்டுமன்றி கார்களில் பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுத்த இயலும். எரிவாயுவைக்கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். உரங்கள் தயாரிக்கலாம். ஆலைகளை இயக்கலாம்.

ஆந்திரத்தின் கரையோரக் கடல்பகுதியில் குஜராத் மாநில அரசின் பெட்ரோலிய நிறுவனமும் நிறைய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் இங்கு எரிவாயு ஆய்வில் வெற்றி கண்டுள்ளது. குஜராத் அரசு நிறுவனம் அடுத்த ஆண்டு டிசம்பரில் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ள எரிவாயு ஊற்றுகள் கரைக்கு அருகில், அதுவும் குறைந்த ஆழத்தில் இருப்பதே இதற்கு காரணம்.

பெட்ரோலிய மற்றும் எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் கரையோரமாக உள்ள கடல்பகுதிகளிலும் நிலப்பகுதியிலும் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளில் இதுவரை சிறு அளவில்தான் வெற்றி கிடைத்துள்ளது. உள்ளபடி இந்தியாவில் எரிவாயு உற்பத்தியானது தேவையைப் பூர்த்தி செய்கின்ற அளவில் இல்லை என்பதால் ஈரான், மத்திய ஆசியா ஆகிய இடங்களிலிருந்து குழாய்மூலம் எரிவாயுவைப் பெறுவதற்கு முயற்சிகள் நடந்துவருகின்றன.

Posted in Ambani, Andhra, Andhra Pradesh, AP, Bio-gas, CNG, Compressed Natural Gas, Cooking Gas, Dayanidhi maran, Diesel, Environment, Exports, Fuel, gasoline, Godavari, Indane, Iran, Jet Fuel, Kakinada, Karunanidhi, Krishna, Liquefied Petroleum Gas, LPG, Mukesh D. Ambani, Natural, ONGC, Petrol, Reliance, Rivers, Sea, South Africa, Sri lanka, TamilNadu, TN | Leave a Comment »

Kherlanji, Kanpur, Ambedkar – Dalit Human Rights: History & Backgrounders

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006

தலித்துகள் கொதித்தது ஏன்?

நீரஜா சௌத்ரி
தமிழில்: சாரி.


கைர்லாஞ்சியில் 2006-ல் நடந்ததுதான் பெல்ச்சியில் 1978-ல் நடந்தது. இது மகாராஷ்டிரம், அது பிகார். இரண்டுமே தலித்துகளுக்கு எதிராக நடந்த கொடூரமான தாக்குதல்கள். ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இந்திரா காந்தியை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது பெல்ச்சி.

அப்போது பெல்ச்சி கிராமத்துக்கு நல்ல சாலை வசதிகள் இல்லை. பெல்ச்சியில் நடந்த சம்பவத்தின் தீவிரம் இந்திரா காந்தியால் நன்கு உணரப்பட்டிருந்தது. வெவ்வேறு வாகனங்கள் மூலம் அந்தக் கிராமத்துக்கு விரைந்த இந்திரா, கடைசியாக யானை மீது ஏறி அங்கு போய்ச் சேர்ந்தார். தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஓர் உதாரணமாகவே அரசியல் அகராதியில் இடம் பிடித்தது பெல்ச்சி. 1980 ஜனவரியில் நடந்த தேர்தலில் ஜனதா அரசு ஆட்சியை இழந்தது, இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார்.

கைர்லாஞ்சியில் செப்டம்பர் 29-ம் தேதி என்ன நடந்தது என்பதை உணரவே மத்திய அரசுக்கு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த வியாழக்கிழமை தலித்துகள் 2 ரயிலைக் கொளுத்திய பிறகுதான் ஓரளவுக்குத் தெரிந்தது. முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அந்த கிராமத்துக்குச் செல்லவே 41 நாள் ஆகிவிட்டது. மாநிலம் முழுவதும் தலித்துகளின் கோபம் வன்செயல்களாக வெடித்ததை அடுத்து, சிங்கப்பூர் சென்றிருந்த தேஷ்முக்கை உடனே நாடு திரும்புமாறு பணித்தார் சோனியா காந்தி.

கைர்லாஞ்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தலைவர் பையா லால் போட்மாங்கேவும் அவரைச் சேர்ந்தவர்களும் கடந்த சனிக்கிழமை தில்லி வந்து பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து, என்ன நடந்தது என்று நேரில் விவரித்தனர். அதன் பிறகே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

தலித் சமூகத்தில் மஹர் பிரிவைச் சேர்ந்த போட்மாங்கே குடும்பத்தினர் ஓரளவுக்கு வசதியானவர்கள், படிப்பறிவு பெற்றவர்கள். அக் கிராமத்தில் “குன்பி-மராத்தா‘ என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வசிக்கின்றனர். அவர்களில் சிலர் மீது போட்மாங்கேவின் மனைவி சுரேகா (45) அதிகாரிகளிடம் புகார் கூறியிருந்தார். அதனால் அவர் மீது குன்பி-மராத்தா சமூகத்தைச் சேர்ந்த கிராமப் பெரியவர்கள் கோபமாக இருந்தனர்.

செப்டம்பர் 29-ம் தேதி இரவு போட்மாங்கே வீட்டில் இல்லாதபோது, குடிபோதையில் சிலர் அவர்கள் வீட்டுக்கு வந்தனர். சுரேகாவையும் அவருடைய மகள் பிரியங்கா (17), மகன்கள் ரோஷன் (23), சுதீர் (21) ஆகியோரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தனர். இரும்புக் கம்பிகளாலும் சைக்கிள் செயின்களாலும் அவர்களைப் அடித்தனர். இரு பெண்களையும் நிர்வாணப்படுத்தி தெருக்களில் இழுத்து வந்தனர். பிறகு அடித்துக் கொன்றுவிட்டு கிராமத்துக்கு வெளியே சடலங்களைப் போட்டுவிட்டனர். இரு பெண்களும் கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வீடு திரும்பிக்கொண்டிருந்த போட்மாங்கே வேதனையுடனும் அச்சத்துடனும் அந்த அக்கிரமங்களை ஒரு புதரின் பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

கிராம நிர்வாகமும், காவல்துறையும் இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாநில அரசும் மெத்தனமாகவே இருந்தது. “”போட்மாங்கேவுக்குப் பணம் கொடுத்துச் சமாதானப்படுத்தியாகிவிட்டது, பிரச்சினை இல்லை” என்றே அரசால் கருதப்பட்டது. மாநில போலீஸ்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் ஒரு பங்கு மேலே போய், “”நடந்த சம்பவத்துக்கு மாவோயிஸ்டுகள்தான் காரணம்” என்பதைப் போல, பழியை நக்சல்கள் மீது போட்டார்.

இந்த நிலையில்தான் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதாக செய்தி வந்தது. உடனே மகாராஷ்டிரம் பற்றி எரியத் தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவத்துக்கு மகாராஷ்டிரத்தில் ஏன் இவ்வளவு பெரிய எதிரொலி? கைர்லாஞ்சி சம்பவம் மகாராஷ்டிர தலித்துகளின் மனத்தில் கோபக்கனலை மூட்டிவிட்டது. அது கனிந்து கொண்டிருந்தது. கான்பூர் சம்பவம் ஒரு திரியாக இருந்ததால், கோபம் வெடித்துவிட்டது. பத்திரிகைகளில்கூட ஒரு சிலதான், கைர்லாஞ்சி சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டன. மற்றவை என்ன காரணத்தாலோ அடக்கியே வாசித்தன.

தலித்துகளின் கோபம் தங்கள் மீது பாயும் என்ற கவலை காங்கிரûஸப் பற்றியிருக்கிறது; தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இப்போது அதே கவலைதான். குன்பி-மராத்தா பிரிவினர் தலித்துகளின் கோபத்தைக் கண்டு எதிர்த் தாக்குதலாக, பாஜகவின் முன்னாள் எம்.பி. தலைமையில் கண்டன ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

தில்லி வந்து சோனியாவையும் மன்மோகனையும் சந்தித்த கைர்லாஞ்சி குழுவில் படித்த, விவரம் தெரிந்த தலித் இளைஞர்கள் அதிகம் இருந்தனர். இந்த வழக்கு முறையாக நடக்கிறதா என்று அவர்கள் கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். கைர்லாஞ்சியில் நடந்த சம்பவம் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டப்படியான ஆட்சி நடைபெறும் ஜனநாயக நாடு என்று நம்மை நாமே பாராட்டிக்கொள்ள முடியாது. தலித்துகள் இந்நாட்டில் உரிய மரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதி செய்யாமல் சமூக நீதியை வழங்கிவிட முடியாது. தவறுகளைச் செய்தவர்கள் மட்டும் அல்ல, அதன் மீது நடவடிக்கை எடுக்காதவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் உடனடியாக விலக வேண்டும்.

தமிழில்: சாரி.

Posted in Ambedkar, Belchi, Caste, Congress(I), Dalit, Dinamani, Fascism, Indira Gandhi, Indra Gandi, Janata Dal, Janatha Party, Kanpur, Khairlanji, Kherlanji, Law, maharashtra, massacre, Neeraja Chowdhry, Order, Power, Raghopur, RR patil, SITAMARHI, Sonia, Uthar Pradesh, Uttar Pradesh | Leave a Comment »

Sonia Gandhi’s birthday to be celebrated as Girl Kids Day

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006

சோனியா பிறந்தநாள்; பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட்டம்

புதுடெல்லி, டிச. 5-

மறைந்த முன்னாள் பிரத மர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி குழந்தை கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் கல்வியில் புறக்கணிப்பு போன்ற சமூக புறக்கணிப்புகள் பெண் குழந் தைகள் மீது நடந்துவருவதால் பெண்குழந்தைகள் மீது மக் கள் கவனம் அதிகம்விழ வேண் டும் என்பதற்காக பெண்குழந் தைகளுக்கான தனிநாள் ஒன்றை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி காங்கிரஸ் என்ற மிகப்பெரிய கட்சியை வழிநடத்தி சென்று பல்வேறு வெற்றிகளைபெற்றுள்ளார். இந்திய பெண்களுக்கு அவர் ஒரு ரோல் மாடலாக விளங் குகிறார்.

எனவே அவரின் பிறந்த தினமான டிசம்பர் 9-ந்தேதியை `பெண் குழந்தைகள் தினமாக’ கொண்டாட மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு முடிவு செய்துள்ளது.

வருகிற 9ந்தேதி “பெண்குழந் தைகள்” தினத்தின் முதல் கொண்டாட்டம் என்பதால் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு ராணி ருத்ரமாதேவி பெயரில் விருது வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த பத்தாண்டு களை பெண்குழந்தைகளின் பத்தாண்டாக அறிவித்துள்ளது.

மேற்கண்ட தகவல்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிதுறை அமைச்சர் ரேணுகாசவுத்ரி தெரிவித்துள்ளார்.

Posted in Childrens Day, Girl Kids Day, Rajeev Gandhi, Rajiv Gandhi, Sonia, Sonia Gandhi, Sonia Gandi | 4 Comments »