Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Actresses’ Category

Tamil Actor Pandiyan passes away: Anjali, Memoirs from Kollywood peers

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

பாண்டியன் ஓர் அப்பாவி!

பாரதிராஜா:

நான் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞன் இவ்வளவு சிறிய வயதிலேயே இறந்ததில் எனக்கு மிகவும் அதிர்ச்சி. பாண்டியன், சினிமா பற்றி ஒன்றுமே அறியாத ஓர் அப்பாவி. ஒரு கலைஞன் என்பதை விட பணிவான ஒரு நல்ல மனிதன்.

பாண்டியராஜன்:

“ஆண் பாவம்’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்தேன். நிழலில் ஏற்பட்ட அந்த உறவு நிஜத்திலும் எங்களுக்குள் தொடர்ந்தது. “ஆண் பாவம்’ படத்தில் முதலில் நான் நடிப்பதாக இல்லை. அந்த கேரக்டரில் நடிக்க இருந்தவர் கால்ஷீட் தர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் நான் நடிக்க வேண்டியதாகிவிட்டது. அப்போது பாண்டியன் முன்னணி நடிகராக இருந்தார். நான் நடிக்கக் கூடாது என்று சொல்லியிருந்தால் அன்றைய சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆனால் பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டதோடு இன்னும் அதிக சீன்களில் நடிக்கலாமே என்றும் கூறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இயக்கிய “கை வந்த கலை’ படத்தில் கூட மீண்டும் பாண்டியன்-சீதா கூட்டணியை “ஆண் பாவம்’ தொடர்ச்சியாக நடிக்க வைத்தேன். அவரைப் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் சினிமாத்துறையில் மாட்டிக்கொண்ட ஒரு வெகுளி. அவருடைய குடும்பத்துக்கு என்னால் இயன்ற உதவியை எப்போதும் செய்வேன்.

ரேவதி:

“மண் வாசனை’ படம் மூலம்தான் நாங்கள் இருவரும் தமிழில் அறிமுகமானோம். அப்போது எனக்குத் தமிழ் தெரியாது; அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் பாரதிராஜா சொன்னதை வைத்து எங்களுக்குள் ஏற்பட்ட புரிதலால் படத்தில் நடித்தோம்.

அதன்பிறகு “பொண்ணு பிடிச்சிருக்கு’, “புதுமைப் பெண்’ படங்களில் இணைந்து நடித்தோம். அந்தப் படங்கள் வெளிவந்து கிட்டத்தட்ட் 20 வருடங்கள் ஆனாலும், அவருடைய மறைவுச் செய்தி கேட்டபோது எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது.

எந்தச் சூழ்நிலையிலும் சிரித்துக்கொண்டே இருப்பார். அவருடைய குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

எஸ்.வி.சேகர்:

“திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் நடிக்கும்போதுதான் எனக்குப் பாண்டியனுடன் நல்ல அறிமுகம். இவர் எப்படி சினிமாவில் நீடிக்கிறார் என்று நினைக்கும் அளவுக்கு அப்பாவி. அவருடைய பேச்சில் மதுரை மண்வாசனை மணக்கும். மனதில் பட்டதை உடனே வெளிப்படுத்தி விடுவார். இதனால் பல பிரச்னைகளையும் சந்தித்தார்.

ரேகா:

“ஆண்களை நம்பாதே’ படத்தில் நானும் அவரும் இணைந்து நடித்தோம். அதன்பிறகு பல ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பின்போது சந்தித்துக்கொள்வோம்.

மிகவும் பாசமாகப் பழகக்கூடியவர். சின்ன வயதிலேயே இறந்தது மிகவும் சங்கடமாக இருக்கிறது.

அதனால் நாம் வாழும்வரை நமது உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்பதைத்தான் பாண்டியனின் மரணம் குறித்து என்னால் சொல்லமுடியும்.

Posted in Actors, Actress, Actresses, Cinema, Films, Kollywood, Movies, Paandian, Paandiyan, Pandian, Pandiyan | 1 Comment »

Tamil Cinema 2007 – Top Films, Movies, Flashback, Stars: Dinamalar

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

01_01_2008_006_001.jpg

Posted in 2007, Actors, Actresses, Cinema, Dinamalar, Films, Flashback, Flicks, Images, Movies, News, Stars, Tamil, Trivia | 1 Comment »

Sex, Pornography & Glamor in Tamil Cinema – TP Rajalakshmi to Sneha

Posted by Snapjudge மேல் ஜூலை 7, 2007

ஆபாசம் காட்டும் புதுமுகங்களுக்கு மத்தியில் கவர்ச்சி காட்டாமல் சாதனை படைத்த நடிகை: `சினேகா’ ஒரு சிறப்பு பார்வை 

1931-ல் முதன் முதலாக தமிழ் சினிமா பேசத் தொடங்கியது. படம்: “காளிதாஸ்”.

கண்ணையா கம்பெனி மூலம் முதன் முதலாக நாடக நடிகையாக ரசிகர்கள் முன்பு தோன்றிய டி.பி. ராஜலட்சுமிதான் தமிழ் சினிமா விலும் முதல் கதாநாயகி.

இதற்கு முன்பான காலகட்டத்தில் எல்லாம் ஏ.பி.நாகராஜன், வீராச்சாமி என பல ஆண்கள்தான் நாடகங்களில் பெண் வேடமேற்று நடித்துக் கொண்டிருந்தார்கள்.

“காளிதாஸ்” படத்தில் டி.பி. ராஜலட்சுமி அறிமுகமான போதே “மன்மத பானமடா… மார்பினில் பாயுதடா” என்ற பாடலுக்கு நெஞ்சை நிமிர்த்திக்காட்டி, காமிரா வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தார்.

இவரைப் போலவே தவமணிதேவி என்ற நடிகை பிராவே அணியாமல் தொள, தொள ஜாக்கெட்டுடன் மூடி மறைக்காமல் நடித்து “கவர்ச்சி பாம்” என்று பெயர் எடுத்தவர்.

கே.எல்.வி.வசந்தா என்ற நடிகைக்கு “ஒன்சைடு நடிகை” என்ற பெயரே உண்டு. புடவைத்தலைப்பால் ஒரு பக்கத்தை மூடி, மறுபக்கத்தை திறந்தே போட்டிருப்பதுதான் இவரது “ஸ்டைல்”.

இந்தக்கால கட்டத்தில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி. சுந்தரம்பாள், பத்மினி, விஜயகுமாரி, தேவிகா, அஞ்சலி தேவி என பல நடிகைகளை விட்டுவிட்டு இன்றைய நடிகைகள் அனைவருமே தவமணி தேவிகளாகவே காட்சி அளிக்கின்றனர்.

ஒருஜாண் டவுசரும், அரைஜாண் ஜாக்கெட்டும் தான் இவர்களது பிரதான “காஸ்ட்ïம்”கள்.

“உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் மேற்படி காஸ்ட்ïம் களை அறிமுகப்படுத்தி, தொடை காட்டி, பெயர் எடுத்து, பிள்ளையார்சுழி போட்டவர் நடிகை ரம்பா.

ஜோதிலட்சுமி, ஜெய மாலினி, சில்க் சுமிதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நடிகைகளை `கடாசி’விட்டு இப்போது கதாநாயகிகளே ஆடைகுறைப்பிற்கு தயாராகி விட்டார்கள்.

ஆபாசம் என்பது புதிய சினிமாக்களின் சாபம் போலவே ஆகிவிட்டது.

இத்தனைக்கும் இடையில் தமிழ் சினிமாவில் காவியத்துவ மான ஒரு நடிகை இருக்கிறார். பெயர்: சினேகா.

பெயருக்கு ஏற்றாற் போலவே வேறெந்த நடிகைக் கும் இல்லாத அளவுக்கு ரசிகர்களுக்கு இவர் மீது தனி சினேகம் உண்டு.

பெயர் வாங்குவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் “இன்னமும் உடையை குறைத்துக்கொள்ள வேண்டுமாப” என்று கேட்கிற ஏராளமான நடிகைகளுக்கு மத்தியில், கதைக்கு தேவை என்று அடம்பிடித்தால்கூட கவர்ச்சி காட்டமாட்டேன் என்கிற தமிழ் கவுரவம் இன்றைய தேதியில் சினேகாவிடம் மட்டுமே!

இந்த ஒரே காரணத்தினால் சினேகாவின் கையை விட்டுப்போன படங்கள் ஏராளம். அதற்காக அவர் தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை.

சினேகாவை இன்ன மும் நிருபர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக் கிறார்கள்.

“நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா?”

நானும் அதை விரும்ப வில்லை என்று. என் ரசிகர்களும் அதை எதிர்பார்க்க வில்லை” என்கிற பதில்தான் சினேகாவிடம்.

சினேகா பிறந்து வளர்ந்தது துபாயில் என்றாலும், பூர்வீகம் நம்ம “பண்ருட்டி”தான். அப்பா ராஜாராம். அம்மா பத்மாவதி.

ஷார்ஜாவில் உள்ள இந்தியன் ஹைஸ்கூலில் படித்து வந்த “சுகாசினி” “எங்கன நிலா பட்சி” என்ற மலையாளப் படம் மூலம்தான் சினேகாவாக சினிமாவுக்கு வந்தார். கதாநாயகன் “குஞ்சாக்கோ கோபன்”.

சினேகாவின் முதல் தமிழ்ப்படம் சுசி.கணேசன் இயக்கிய “விரும்புகிறேன்”. இந்தப்படம் சொன்ன தேதியில் ரிலீசாகி இருக்குமானால் முதல் படத்திலேயே சினேகா பரபரப்பாக பேசப் பட்டிருப்பார். அத்தனை யதார்த்தமான நடிப்பு!

சினேகாவை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடிக்க வைத்த படம் “லிங்குசாமி”யின் “ஆனந்தம்”. இதில்வரும் “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்” என்ற பாடலில் சினேகாவைப் பார்த்து முதன் முதலாக ரசிகர்கள் பரவசமடைந்தனர்.

என்னவளே, காதல் சுகமானது, பார்த்தாலே பரவசம், புன்னகைதேசம், பம்மல் கே.சம்பந்தம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, கிங், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என எந்தப் படத்திலும் சினேகா டூ பீஸ் உடையில் வரவில்லை. மனம் கிளுகிளுக்கும்படியாக மாராப்பையோ, தொப் புளையோ, தொடையையோ காட்டவில்லை.

இத்தனைக்கும் சினேகா “பார்த்திபன் கனவு” படத்தில் “சத்யா” என்ற 2-வது வேடத்தை முற்றிலும் மேக்அப்பே இல்லாமல் நடித்திருக்கிறார்.

சினேகாவின் மிகப்பெரிய பிளஸ் அவரது வசீகர “ஹேதம்லி” புன்னகைதான்.

சினேகா படத்தை குடும்பத் தோடு கண்டுகளிக்கலாம் என்ற வகையில் தான் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

தொடக்க காலங்களில் சரோஜாதேவி, சாவித்திரி போன்றவர்களும், இடைப்பட்ட காலங்களில் ரேவதி, சுகாசினி போன்றவர் களும்தான் தமிழ் சினிமாவில் கலாச்சார கவுரவம் சேர்த்திருக்கிறார்கள்.

இன்றைய தமிழ் சினிமாவில் “அவிழ்த்து எறிவதில் யார் சிறந்தவர்ப” என்று நடிகைகள் போட்டி போட்டு “துண்டு துணி” அளவுக்குவந்துவிட்ட நிலையில் சினேகா ஒரு வீரம் விளைஞ்ச நடிகையாகவே தெரிகிறார்.

Posted in Actress, Actresses, Backgrounder, Cinema, Films, Glamor, Heroines, Movies, Pornography, Sex, Snega, SNEHA, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, TamilNadu, Taminadu | 26 Comments »

Actors Activism – Is it for selfish purposes? (Dinakaran Survey)

Posted by Snapjudge மேல் மே 10, 2007

நடிகர்களுக்கு நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை…

சினிமா மீது தமிழர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. நடிகர்களுக்காக எதையும் செய்ய பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு நடிகர்கள்…?

ஆம்… அதை பற்றித்தான் தமிழக மக்களிடம் கேட்கப்பட்டது. நடிகர்களுக்கு, நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை எப்படி என்பதுதான் கேள்வி.

மக்களிடம் நடிகர்கள் அக்கறை கொண்டிருப்பதற்கு காரணம் தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்குத்தான் என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சரியாக பாதி பேர், அதாவது 50 சதவீதம் பேர் இப்படித்தான் சொல்கிறார்கள்.

  • நடிகர்களின் அக் கறையில், தங்கள் படம் ஓட வேண்டும் என்ற சுயநலம் கலந்து இருக்கிறது என்கின்றனர் மக¢கள்.
  •  Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்Õ மக்கள் மீது நடிகர்கள் அக்கறையை கொட்டுகின்றனர் என்பது 31 சதவீதம் பேரின் கருத்து.
  • நடிகர்களின் அக்கறை `உண்மையானது‘ என்று முழுமையாக நம்புபவர்கள் 14 சதவீதம் பேர் மட்டும்தான்.
  • இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காதவர்கள¢ 5 சதவீதம் பேர்.

நடிகர்களின் அக்கறையை விளாசித் தள்ளியவர்களில் நாகர்கோவில் மக்களுக்குத்தான் முதலிடம். அங்கு 65 சதவீதம் பேர், படம் ஓடுவதற்காகத்தான் நடிகர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என அதிரடியாக கூறி உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக சென்னைவாசிகள் நடிகர்களை காய்ச¢சி எடுக்கிறார்கள். 58 சதவீத சென்னைவாசிகளுக்கு நடிகர்கள் அக்கறையின் பின்னணி புரிந்திருக்கிறதாம்.

வேலூர் (55 சதவீதம்), சேலம் (52), கோவை (48), திருச்சி (52), மதுரை (51), நெல்லை (43) பகுதிகளிலும் இந்த கருத்துதான் அதிகம் நிலவுகிறது.

புதுவை மக்களில் 30 சதவீதம் பேர் படம் ஓட வேண்டும் என்பதுதான் நடிகர்களின் அக்கறைக்கு காரணம் என கூறியுள்ளனர். 39 சதவீதம் பேர், அவர்களின் அரசியல் ஆசையை காரணம் காட்டுகின்றனர்.

நடிகர்களுக்கு மக்கள் மீது உள்ள அக்கறை Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்‘ என ஒரே போடாக போடுபவர்கள் கொங்கு மண்டலத்தினர்தான். கோவைவாசிகளில் 42 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். சென்னையில் இப்படிச் சொன்னவர்கள் 30 சதவீதம் பேர். வேலூர் (37 சதவீதம்), சேலம் (27), திருச்சி (26), மதுரை (30), நெல்லை (30), நாகர்கோவில் (21 சதவீதம்).

நடிகர்கள் அக்கறை நிஜமானதுதான் என அதிகம் நினைப்பவர்கள் நெல்லை சீமையினர்தான். அங்கு 26 சதவீதம் பேர் நடிகர்களின் அக்கறையை பார்த்து நெகிழ்கின்றனர். அதற்கு அடுத்து திருச்சி மக்களில் 18 சதவீதம் பேர் இம்மாதிரி உருகுகின்றனர். நடிகர்கள் அக்கறை உண்மையானது என¢பதில் நம¢பிக்கையில்லாதவர்களாக வேலூர், கோவைவாசிகள் உள்ளனர். இப் பகுதிகளில், 8 சதவீதம் பேர்தான் நடிகர்களின் அக்கறையை நம்புகின்றனர்.

Posted in activism, Actors, Actress, Actresses, Cinema, Dinagaran, Dinakaran, Films, Movies, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Selfish, Society, Stars, Sun, Sun TV, Survey, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, TV, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Welfare | Leave a Comment »

Cauvery: Kannada film industry stage protest march

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் நடிகர்-நடிகைகள் ஊர்வலம்: ஆளுநரிடம் மனு

பெங்களூர், பிப். 14: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் பெங்களூரில் நடந்த ஊர்வலத்தில் நடிகர்-நடிகைகள் திரளாக கலந்து கொண்டனர்.

காவிரியில் தமிழகத்தக்கு 192 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பிப்ரவரி 5-ம் தேதி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கடந்த 9 நாட்களாக கர்நாடகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும், திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு நடந்தது. இந்நிலையில் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினர். நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், நடனக்கலைஞர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற இந்தப் பேரணி குமாரபார்க்கில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிலிருந்து தொடங்கி ஆளுநர் மாளிகையை அடைந்தது.

இப்பேரணியில் பிரபல கன்னட

  • நடிகர் விஷ்ணுவர்தன்,
  • மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார்,
  • ராகவேந்திர ராஜ்குமார்,
  • புனித் ராஜ்குமார்,
  • நடிகை தாரா,
  • மாலாஸ்ரீ,
  • ஜெயந்தி,
  • ஜெயமாலா,
  • அனுபிரபாகர்,
  • சுதாராணி மற்றும் புதுமுக நடிகர்-நடிகைகளும் கலந்துகொண்டனர்.

திரைப்படக் கலைஞர்களின் பேரணியை முன்னிட்டு விரைவு அதிரடிப்படை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பேரணி காரணமாக பெங்களூரில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும் ரேஸ் கோர்ஸ் சாலை, குமார குருப்பா சாலை மற்றும் ராஜ்பவன் சாலை போன்ற சாலைகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இப்பேரணியில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்தும், “காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம்’ போன்ற கோஷங்களை திரைப்படக் கலைஞர்கள் எழுப்பினர். பேரணியில் கலந்துகொண்ட கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தல்லம் நஞ்சுண்டஷெட்டி கூறியதாவது:

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடைபெறும் இப்பேரணி இத்துடன் நிறைவடைந்து விடாது. இது போராட்டத்தின் தொடக்கமே. கர்நாடகத்துக்கு நீதி கிடைக்கும் வரை கர்நாடக திரைப்படத்துறை போராடும் என்றார்.

பேரணி ஆளுநர் மாளிகையை அடைந்தவுடன்

  • நடிகர் விஷ்ணுவர்தன்,
  • திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் தல்லம் நஞ்சுண்டா ஷெட்டி,
  • துணைத் தலைவர் சாரா கோவிந்து,
  • திரைப்படத் தயாரிப்பாளரும்,
  • மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவியுமான பர்வதம்மா ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஆளுநர் மாளிகைக்குச் சென்றது.

கர்நாடக மாநில ஆளுநர் டி.என். சதுர்வேதியைச் சந்தித்து காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு நீதி கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Posted in Actors, Actresses, Anu Prabhakar, Bandh, Cauvery, Cauvery Waters Dispute Tribunal, Cinema, delegation, Film Association, Film Chamber, Jayamala, Jayanthi, Jayanthy, Jeyamala, Jeyanthi, Jeyanthy, Judgment, Kannada, Kannada Movies, Karnataka, Karnataka Film Chambers of Commerce, Kaviri, Malashree, Malasri, Nanjunda Shetty, Parvathamma, Procession, Protest, Rajkumar, Sa Ra Govindu, Stars, Sudharani, Thara, TN Chathurvethi, Vajreshwari Combines, Vishnuvardhan | 1 Comment »

Tamil Actress Salary details – Kumudam

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

24.01.07 சினிமா

ஒருமுறை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்ளுங்கள்.

ம்ம்… இப்போது படியுங்கள்.

சிம்ரன், ஜோதிகா, லைலா, ஷாலினி, ரோஜா, ரம்பா, தேவயாணி, மும்தாஜ், கிரண், மீனா, அஸின், த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா, ரீமாசென், ஸ்நேகா, சதா, பூஜா, பூமிகா, நமீதா, பாவனா, நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன், சோனியா அகர்வால், நிலா, ஜெனிலியா, கோபிகா, சந்தியா, மாளவிகா, மம்தா மோகன்தாஸ், ஜோதிர்மயி, பத்மப்ரியா, தமனா, இலியானா, சங்கீதா, அனுஷ்கா, லக்ஷ்மிராய், தியா, அபர்ணா, ப்ரியாமணி, அமோகா, சிந்துதுலானி, ‘குத்து’ ரம்யா, ‘தம்’ ரக்ஷிதா, வசுந்தராதாஸ், கௌசல்யா, கஜாலா, ராதிகா சௌத்ரி, சொர்ணமால்யா, குட்டிராதிகா, திவ்யா உன்னி, கனிகா, விந்தியா, சாயாசிங், மதுமிதா, உமா, ப்ரியங்கா த்ரிவேதி, காயத்ரி ஜெயராம், காயத்ரி ரகுராம், அபிதா, ஸ்ரீதேவிகா, அக்ஷயா, பூனம், ரேணுகாமேனன், நந்தனா, மோனிகா, சுனிதா வர்மா, சரண்யா பாக்யராஜ், நிகிதா, நந்திதா, ஸ்ரீதேவி, ஆஷிமா, காவேரி, சாக்ஷி, ஸ்ரியாரெட்டி, ஷெரீன், அங்கீதா, சூஸன், சமீக்ஷா, மல்லிகா கபூர், ஷீலா, வேதிகா, மீரா வாசுதேவன், விமலாராமன், காம்னா, ஸ்ருதி, ஸ்ருதிகா, ஸம்விருதா, கீரத், காமினி, அதிசயா, மேக்னா நாயுடு, பூர்ணிதா, நித்யாதாஸ், கீர்த்தி சாவ்லா, கார்த்திகா, பானு, கமாலினி முகர்ஜி, தீபா, ரெஜினா, ஆன்ட்ரியா, நர்கீஸ், உதயதாரா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதாசென், பிபாஷாபாசு, மல்லிகா ஷெராவாத்.’

என இன்றைய தலைமுறை தமிழ் சினிமா இந்த நூற்றியெட்டு கிளுகிளு ஹீரோயின்களின் பெயர்களைத்தான் கலர்ஃபுல் மந்திரமாக முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. (சிம்ரன் நடிக்க வந்த பிறகு கோலிவுட்டுக்கு குறி வைத்த நடிகைகள் பட்டியல்தான் மேற்படி பட்டியல். நேரம் கிடைக்கும் போது பொறுமையாக எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்)

இந்த நடிகைகளுக்கு மெனக்கெட்டு உடலை வருத்தி நடிக்கும் வாய்ப்புகள் இல்லை. பக்கம் பக்கமாக பேசுகிற வசனங்கள் இல்லை. அதிகப்படியான காட்சிகளும் இல்லை. வெளிநாடுகளில் கடும் பனியில், ‘பட்ஜெட்’ உடையில் டூயட் பாட இரண்டு மூன்று பாடல்கள் உண்டு. இவையெல்லாவற்றையும்விட, ஹீரோக்களுக்கு இணையாக மார்க்கெட் வேல்யுவோ பிஸினஸோ எதுவும் இல்லாத போதிலும் சம்பளம் மட்டும் அதிகம் என்பதுதான் ஹைலைட்டான விஷயம். இதுமட்டும் எப்படி சாத்தியம்?

வாய்ப்புகள் பிடிப்பது எப்படி?

ஒரு நடிகை எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அழகாக இருந்தாலும் ஓடுகிற படத்தில் அவர் ஹீரோயினா இருக்கவேண்டும் அல்லது முன்னணி நடிகருக்கு ஜோடியாக இருக்க வேண்டும். இப்படி ஜோடி சேர்வதற்கு சில காரியங்கள் செய்யவேண்டும். ஹோட்டலில் தங்கியிருக்கும் நடிகை சினிமா ஜாம்பவான்களுக்கு ஃப்ரெண்ட்லியாக விருந்து கொடுப்பது, புதிய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு ஜிலுஜிலு உடைகளில் வந்து எல்லோரையும் அசர வைப்பது. இதையும் தாண்டி ஹீரோக்களின் வீட்டுக்கே சென்று அவருடைய வீட்டுச் சமையலை பாராட்டுவது, அவர்களது குடும்பத்தின் சென்டிமெண்ட்டான ஆதரவைப் பெறுவது என இப்படி நடிகருக்கும் நடிகைக்கும் இடையே நல்லுறவை வளர்த்துக் கொள்கிறார்கள். இதன் பலன், நட்பு ரீதியாக வாய்ப்புகள் நிச்சயம்.

ஹீரோ ரெக்கமண்டேஷன்

ஒரு தயாரிப்பாளர் மார்க்கெட்டில் உள்ள முன்னணி ஹீரோவை வைத்து படமெடுக்க மும்முரமாக இருப்பார். முன்னணி ஹீரோவை வைத்து படமெடுப்பதால், சுலபமாக ஃபைனான்ஸியர்களிடமிருந்து பண உதவி பெறமுடியும், லாபம் பார்க்க முடியும், பெரிய தயாரிப்பாளர் என்ற இமேஜ் கிடைக்கும். இதனால் பெரிய ஹீரோவை எப்படியாவது கமிட் செய்து விடுவார் அந்தத் தயாரிப்பாளர். உடனே அந்த ஹீரோவும், தயாரிப்பாளரும் இயக்குநரை முடிவு செய்வார்கள், அடுத்தது ஹீரோயின் உடனே ஹீரோ தனக்கு நட்பு ரீதியில் இருக்கும் ஹீரோயினை ஒப்பந்தம் செய்யலாம் என்பார். இதனால் அந்தத் தயாரிப்பாளர் அந்த ஹீரோயினையே கமிட் செய்தாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார். அந்த ஹீரோயினை கமிட் செய்ய அதிக சம்பளம் கொடுக்கவும் தயாராக இருப்பார். காரணம் ஹீரோவின் ரெக்கமண்டேஷன். இதனால் நாயகியின் சம்பளம் ஏறுவதை தடுக்க முடியாது.

யார் முன்னணி?

தற்போதைய சூழ்நிலையில் நம்பர் விளையாட்டில் முன்னணியைப் பிடிப்பதற்கு அஸின், த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயாவுக்கு இடையேதான் கடும்போட்டி நிலவுகிறது.

சம்பளத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது தற்போது த்ரிஷா ஒரு லாங் ஜம்ப்பில் முந்திப் போய் கொண்டிருக்கிறார்.

திறமையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது அஸின் முன்னணியில் வேகமெடுத்து இருக்கிறார்.

திறமை, சம்பளம் இரண்டையும் தவிர்த்து, மக்களிடையே ஏற்படும் திடீர் மவுசு ஒரு நடிகையை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி விடும். அந்த வகையில் ‘சிவாஜி’யில் ரஜினியின் ஜோடியான ஸ்ரேயா கவனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

‘‘முன்னணி நடிகர்களுடன் க்ளாமரான ஹீரோயின்கள் டூயட் ஆடுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள். இத்தோடு படத்துக்கு ஃபைனான்ஸ் உதவி பெறவும் படத்தோட வியாபாரத்திற்கும் இந்த ஹீரோயின்களும் காரணமாக இருப்பதால் அதிக சம்பளம் தவிர்க்க முடியாததாகிறது’’ என்கிறார் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி.

தமிழ் நடிகைகளில் தனக்கென ஒரு நிலையான இடம் பிடித்த நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய போது அவர் வாங்கிய சம்பளம் வெறும் மூன்றரை லட்சம் ரூபாய்தான். ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

முன்னணி நடிகைகளின்

சம்பளப் பட்டியல் (தோராயமாக)

த்ரிஷா _ 65_80 லட்சம்
அஸின் _ 40_60 லட்சம்
நயன்தாரா _ 40_60 லட்சம்
ஸ்ரேயா _ 50 லட்சம்
ஜெனிலியா _ 40 லட்சம்
நிலா _ 25 லட்சம்
சதா _ 25 லட்சம்
ரீமாசென் _ 20_30 லட்சம்
பாவனா _ 20_25 லட்சம்
ஸ்நேகா _ 20 லட்சம்
நமீதா _ 18 லட்சம்
பூஷா _ 10_15 லட்சம்
கோபிகா _ 12 லட்சம்
சந்தியா _ 7_10 லட்சம்

_ ஆதித்யா இராமநாதன்

—————————————————————————————————

நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா, ஜெனிலியா உறுப்பினரானார்கள்: சம்பளத்தில் புதிய கட்டுப்பாடு

நடிகர் சங்கத்தில் 20 சதவீதம் நடிகர்-நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். குறிப்பாக மும்பை நடிகைகள் சங்கத்தில் சேரவில்லை. நடிகர் சங்க கூட்டங்களுக்கும் வருவது இல்லை. ஆனால் அவர்களின் சம்பள பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிட்டு தீர்த்து வைத்தது.

இனிமேல் உறுப்பி னர் அல்லாத நடிகர்-நடிகை களுக்கு உதவுவதில்லை என்று நடிகர் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அவர்களை புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்றும் தயா ரிப்பாளர் சங்கத்தை கேட்டுக் கொண்டு உள்ளது.

நடிகர் சங்கத்தின் கிடுக்கிப்பிடியால் ஒருவாரமாக பலர் உறுப்பினர் படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனர். நடிகை ஸ்ரேயா உறுப்பின ராக சேர்ந்துள்ளார். ஜெனிலியா வும் உறுப்பினராகியுள்ளார். இதுவரை உறுப்பினராகாமல் இருந்த இளம் கதாநாயகர்களும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.

இதற்கிடையில் நடிகர்கள் சம்பள பிரச்சினையிலும் புதிய கட்டுப்பாடுகள் வருகிறது. சிங்கப்பூரில் நடிகர் சங்கம் ஏற்பாடு செய்த நட்சத்திர கலைவிழாவுக்கு பலர் வர மறுத்தனர். விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் – நடிகைகளுக்கு பக்க பலமாக இருந்த நடிகர் சங்க விழாவை முன்னணி நட்சத்திரங்கள் புறக்கணித்தது நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் சங்கமும் அழைப்பு விடுத்தது. அதையும் உதாசீனம் செய்தனர்.

இந்த நிலையில் 50 லட்சம் வரை வாங்கும் நடிகைகள் சம்பளத்தில் புதிய கட்டுப்பாடுகள் வருகிறது. சம்பளத்தில் 70 சதவீதத்தை முன்கூட்டி வாங்க வேண்டும் என்றும் 30 சதவீதம் படம் ரிலீசுக்கு முன்பு தரப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் யோசனை தெரிவித்தது. அது இதுவரை ஏற்கப்படாமல் இருந்தது. அந்த தீர்மானம் ஓரிரு வாரத்தில் அமுலுக்கு வர உள்ளது. நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, விமான பயண செலவு போன்றவற்றிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

Posted in Actors, Actresses, Boys, Boyz, Compensation, Genelia, Harini, Jenelia, Kumudam, Lists, Movies, Price, Salary, Shankar, Shreya, Sriya, Tamil Actress, Tamil Cinema, Tamil Films | 2 Comments »

BJP ropes in TV and Film stars for campaining in Punjab elections

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: நடிகர்-நடிகைகளுடன் களம் இறங்கும் பா.ஜனதா

சண்டிகார், ஜன.21-

பஞ்சாப் மாநில சட்ட சபைக்கு வருகிற பிப்ரவரி மாதம் 13-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. வருகிற 25-ந் தேதி மனுதாக்கல் முடிகிறது. 27-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ்பெற கடைசி நாள்.

அங்கு மனு தாக்கல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-பாரதீய ஜனதா அணிகளிடையே கடும் மோதல் நிலவுகிறது. பாரதீய ஜனதாவுடன் சிரோன் மணி அகாலிதளம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

சிரோன் மணி அகாலிதளம் கட்சி தான் போட்டியிடும் 94 தொகுதிகளுக்கு வேட் பாளர்களை அறிவித்துள்ளது. பாரதீய ஜனதாவிடம் 15 வேட் பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆளும் காங்கிரஸ் கட்சி பலத்த திட்டங்களுடன் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 3 கட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கி யுள்ளார்.

சென்ற முறை காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டி யிட்ட இந்திய கம்ïனிஸ்டு கட்சி இப்போது தனித்து போட்டியிடுகிறது.

காங்கிரஸ் ஆட்சி மீது கூறப்பட்ட ஊழல் குற்றச் சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்ய பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது.

மேலும் பிரசாரத்திற்காக நட்சத்திர பட்டாளத்தையும் களம் இறக்குகிறது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரும் இந்திப்பட உலகின் முன்னாள் சூப்பர் ஸ்டாருமான தர்மேந்திரா, அவரது மனைவி நடிகை ஹேமமாலினி, பிரபல நடிகர்கள் வினோத்கன்னா, சத்ருகன் சின்கா ஆகியோர் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதேபோல் காங்கிரஸ் கட்சி ராஜேஷ்கன்னா, கோவிந்தா, ஒம்புரி உள்ளிட்ட நடிகர்-நடிகைகளை களம் குதிக்க திட்டமிட்டு உள்ளது.

Posted in Actors, Actresses, Bollywood, Cinema, Dharmendhra, Dharmendra, Elections, Films, Govinda, Hemamalini, Hindi, Movies, Ompuri, Punjab, Rajesh Khanna, Shatrugan Sinha, Shatruhan Sinha, TV, Vinod Khanna, Vinodh Khanna | Leave a Comment »

Kerala’s ‘Crime’ magazine – Tamil actress Cauvery vs Malayalam’s Priyanka

Posted by Snapjudge மேல் ஜனவரி 8, 2007

சக நடிகையின் ஆபாச மிரட்டல்: நடிகை காவேரி கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம்

திருவனந்தபுரம், ஜன.7- காசி, சமுத்திரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை காவேரி. இவரை மலையாள நடிகை பிரியங்கா தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார். உன்னை பற்றி அவதூறான செய்தி பத்திரிகையில் வெளிவராமல் இருக்க எனக்கு ரூ.5 லட்சம் தரவேண்டும் என மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து காவேரி போலீசில் புகார் செய்யவே பிரியங்கா கையும், களவுமாக பிடிபட்டு கைதானார்.

இந்த வழக்கு கொச்சி அடிசனல் சப்-நீதிபதி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் நேற்று நடிகை காவேரி ஆஜர் ஆகி நடந்த சம்பவம் பற்றி வாக்குமூலம் கொடுத்தார்.

வாக்குமூலத்தில் காவேரி கூறியதாவது:-

என்னை பிரியங்கா போனில் தொடர்பு கொண் டார். `கிரைம்‘ மலையாள பத்திரிகையில் உனது தவறான நடவடிக்கை பற்றி செய்தி வெளியாக உள்ளது.அந்த செய்தி வெளியாகாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.5 லட்சம் தந்து விடு. நான் செய்தி வெளிவராமல் தடுத்து விடுகிறேன் என்றார்.

அதிர்ச்சி அடைந்த நான் பட அதிபர் அனில் மேனனிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தேன். அனில்மேனன் `கிரைம்’ பத்திரிகை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். பத்திரிகை அலுவலகத்தில் அப்படி ஒன்றும் நாங்கள் செய்தி வெளியிட போவது இல்லை. பிரியங்கா மிரட்டலுக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என கூறிவிட்டனர்.

இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தேன். போலீசார் கூறியபடி அறிவுரைப்படி பிரியங்காவிடம் ரூ.5 லட்சம் தர சம்மதித்தேன். பணத்துடன் ஆலப்புழையில் உள்ள ஒரு ஓட்டல் பக்கம் வருமாறு பிரியங்கா கூறினார்.

எனது தாயார் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிரியங்கா வரச் சொன்ன இடத்துக்கு சென்றார். பிரியங்கா பணம் பெற முயன்றபோது போலீசார் அவரை கைது செய்தனர்.

இவ்வாறு காவேரி வாக்குமூலத்தில் கூறிஉள்ளார்.

காவேரி மிரட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கிரைம் பத்திரிகை நடிகை பிரியங்கா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.

Posted in Aalapuzha, Actresses, Allegation, Ameer, Anil Menon, Cauvery, Crime Magazine, Extortion, False News, Gossip, Kasi, Kaveri, Kerala Pictures, Kisu Kisu, Kodambakkam, Kollywood, Malayala Cinema, Malayalam, Mollywood, Nandha, Police, Priyanka, Punnagai Poove, Rumor, Samuthiram, Sex Story, Tamil Actress, Tamil Movies, Vambu, Violence | 3 Comments »

Malaysia Magazines disgusted with Indian Cinema Stars Activities

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

இந்திய நட்சத்திரங்களின் நடவடிக்கையால் மலேசிய பத்திரிகைகள் அதிருப்தி

மலேசியா, டிச. 10: மலேசியாவில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நட்சத்திர கலைநிகழ்ச்சியில் இந்திய நடிகர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து மலேசிய பத்திரிக்கைகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

பாலிவுட் நட்சத்திரங்களின் மனநிலை மோசமான திரைக்கதையைப் போல் இருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்துள்ளது மலேசிய செய்தித்தாளான ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்.

இந்தி திரைப்பட உலகின்(பாலிவுட்)நட்சத்திரங்களான

  • சல்மான் கான்,
  • ஜான் ஆபிரகாம்,
  • பிபாஷா பாசு,
  • அர்பாஸ் கான்,
  • சோகைல் கான்,
  • ஹேமாமாலினி,
  • ஈஷா தியோல் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேலும், இந்தித் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கு கொள்ளும் நட்சத்திரத்துடன் ஒரு நாள், பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடல், சிவப்பு கம்பள வரவேற்பில் மேடை நிகழ்ச்சி ஆகியவைகள் நடத்தவும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.

2 மணி நேரம் காத்திருந்தனர் இந்த நிகழ்ச்சிக்காக நட்சத்திரங்களை பேட்டி கான மலேசியாவில் உள்ள உள்நாட்டு பத்திரிக்கைகள், தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவைகள் சுமார் இரண்டரை மணி நேரம் ஹோட்டலில் காக்க வைக்கப்பட்டனர்.

மேலும், நடிகர்கள் ஜான் ஆபிரகாம், ரவிசோப்ரா ஆகியோர் பத்திரிக்கையாளர்களிடம் ஆத்திரத்துடன் நடந்துகொண்டதும், நடிகர் சல்மான் கான் 2 நிமிஷத்தில் வந்து விடுவார் எனக் கூறி 20 நிமிஷத்தில் வந்ததும் மலேசிய பத்திரிக்கைகளை அதிருப்தியின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளன.

“” இந்திய நேரப்படி 2 நிமிஷத்தில் நடிகர் சல்மான் கான் வருவார் என்று கூறினால் 20 நிமிஷங்கள் என்று அர்த்தமா. அவருக்கு விருப்பப்பட்ட நேரத்தில் தான் வருவாரா என்று செய்தி வெளியிட்டுள்ளது ஒரு நாளிதழ்.

மேலும், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டவுடன் ரவி சோப்ராவின் மொபைல் போன் ஒலித்தது. உடனை அவர் கேள்விக்கு பதில் அளிக்காமல் மொபைல் போனை எடுத்து பேசத்தொடங்கியது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை வருத்தமடையச்செய்துள்ளது. சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்காக நட்சத்திரங்களை மேடையில் காண ரசிகர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பொறுமையுடன் காத்திருந்தனர்.

இது போல மோசமாக வேறு எங்காவது நடக்குமா? பாலிவுட்டில் மட்டுமே நடக்கும் என்று ஒரு நாளிதழ் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

Posted in Actors, Actresses, Attitude, Bollywood, Cinema, Disgust, Film Performers, Hindi Actors, Hindi Cinema, Hindi Movies, John Abraham, Misconduct, Performance, Ravi Chopra, Red Carpet, Salman Khan, South Asia, Stars, Stars Festival | Leave a Comment »

Thanksgiving to Karunanidhi – Tamil Cinema Artistes Celebrate Tax-free Status

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா: ரஜினி, கமலஹாசன் பங்கேற்பு

சென்னை, செப். 23-

கருணாநிதி முதல்- அமைச்சராக பொறுப்பேற்றதும் திரைப்படத்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

ராஜாஜி மண்டபத்துக்கான படப்பிடிப்பு கட்டணத்தை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைத்தார். ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமும் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.3 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டன. தமிழில் பெயர்சூட்டப்பட்ட படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இது போன்று மேலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து திரையுலகினர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுக்கின்றனர்.

இன்று மாலை 5.30 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த விழா நடக்கிறது. மராட்டிய மாநில கவர்னர் எஸ்.எம்.கிருஷ்ணா விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்- நடிகைகள் விழாவில் பங்கேற்கிறார்கள். டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தியேட்டர் அதிபர்கள், பெப்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கருணாநிதி உருவப்பட பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

விழாவுக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு ரத்து: நடிகர், நடிகைகள் 2 மணி நேர கலை நிகழ்ச்சி

திரையுலகம் சார்பில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா நடப்பதையொட்டி 2 நாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மும்பை, ஐதராபாத், திருவனந்தபுரம் பகுதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் நேற்று சென்னை திரும்பினார்கள். மேடையில் பலர் நடனமாட இருப்பதால் மாலை நடன ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பிரபல நடன இயக்குனர்கள் பயிற்சி அளித்தார்கள். கருணாநிதி பராசக்தி படத்தில் எழுதிய கா…கா…கா… உள்ளிட்ட பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பாடப்படுகிறது.

கருணாநிதியை பாராட்டி கவிஞர்கள் வைரமுத்து, பா.விஜய் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த பாட்டுக்கு பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்து இருக்கிறார்கள். அந்த பாட்டுக்கு நடிகர்கள் மேடையில் நடனம் ஆடுகிறார்கள்.

இசையமைப்பாளர்கள் தேவா, சபேஷ்- முரளி ஸ்ரீகாந்த் தேவா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிரபல பின்னணி பாடகர்கள் மேடையில் தோன்றி பாடுகிறார்கள்.

நடிகர்கள் சிம்பு, பிரசாந்த், அப்பாஸ், பிரகாஷ்ராஜ், கார்த்திக், ஜீவா, ஜெயம்ரவி, மாதவன், ஸ்ரீகாந்த், பரத், `ஜித்தன்’ரமேஷ், சிபிராஜ், பிரசன்னா, ஆர்யா, நடிகைகள் அசின், சதா, ஸ்ரேயா, ரீமா சென், `உயிர்’சங்கீதா, மும்தாஜ், பூஜா, அபர்னா, லட்சுமிராய், தியா, சிந்து துலானி, ரகசியா, தேஜாஸ்ரீ, பத்மபிரியா, பாவனா, சமிக்ஷா ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.

சித்திரம் பேசுதடி படத்தில் பிரபலமான வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாட்டுக்கு நடிகை ரசியா நடனம் ஆடுகிறார். சிவகாசி படத்தில் இடம்பெற்ற “வடுமாங்கா” பாட்டுக்கு லட்சுமிராய் ஆடுகிறார். 4 ஸ்டூடன்ஸ் படத்தில் இடம் பெற்ற லஜ்ஜாவதியே பாட்டுக்கு பரத் ஆடுகிறார். நடன குழுவினருடன் நடிகர் சிம்பு லூசு பெண்ணே என்ற பாட்டுக்கு ஆடுகிறார். நமீதாவும் ஆடுகிறார்.

பாக்யராஜ், வடிவேலு, விவேக், நெப்போலியன், தியாகு, அலெக்ஸ் ஆகியோரின் நகைச்சுவை நாடகமும் இடம் பெறுகிறது.

டைரக்டர் சீமானின் புதுமை நாடகமும், 100 குழந்தைகள் பங்கேற்கும் சிறப்பு வரவேற்பு நடன நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.

கலைநிகழ்ச்சிகள் மாலை 5 மணியில் இருந்து 7.30 மணி வரை 2 மணி நேரம் நடக்கிறது.

Posted in Actors, Actresses, Artistes, CM, Film, Kamal, Karunanidhi, Kollywood, Movies, nadigai, nadigar, Rajni, Tamil, Tamil Nadu, Tax | Leave a Comment »

Tamil Cine Artistes Association Felicitation for Chief Minister of Tamil nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

`திரை உலகுக்கு கருணாநிதி அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, செப்.24-

தமிழ் திரை உலகம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

இங்கே கமலஹாசன் பேசும்போது கலைஞருக்கு ஞாபக சக்தி அதிகம் என்று சொன்னார். உடனே கலைஞர் என் காதில் எனக்கு ஞாபக சக்தி குறைவுதான் என்றார். அதனால்தான் கலைஞர் இந்த பாராட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்.

சினிமா துறையில் இருப்பவர்களைப் பற்றி வெளியில் இருக்கும் நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள். திட்டுகிறார்கள். அவர்களுக்கு சினிமாவில் நன்றாக இருக்கும் பத்து பேர்களைத்தான் தெரிகிறது. சிரமப்படுகிற, கஷ்டப்படுகிற பத்தாயிரம் பேர்களை தெரியவில்லை. நன்றாக இருப்பதாக பேசப்படும் 10 பேர்களில் கூட உண்மையாகவே நன்றாக இருப்பவர்கள் 5 பேர்கள்தான். சினிமாவில் கொடிகட்டி பறந்த மிகப்பெரிய மனிதர்களெல்லாம் இப்போது எங்கே? மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, விஜயா வாஹினி, மேகலா பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் எங்கே? எத்தனை பெரிய தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் , நடிகர்கள் முகவரி தெரியாமல் போய் விட்டார்கள். நான் எல்லாம் எம்மாத்திரம்?

அமிதாப்பச்சன் வீடு ஏலத்துக்கு வந்தது. சோப்ராவிடம் அவர் வாய்ப்பு கேட்டு போனார். அவருக்கே இந்த நிலை என்றால் ரஜினி மாதிரி ஆளெல்லாம் எந்த மூலைக்கு?

தாய்க்கு கூட குழந்தை அழுதால்தான் பால் கொடுக்க தெரியும். ஆனால் குழந்தை அழாமலே இந்த தாய் (கருணாநிதி) பால் கொடுத்து இருக்கிறார். இவரை அடுத்து இனி ஆட்சிக்கு யார் வந்தாலும் 2006-ல் திரையுலகுக்கு கலைஞர் அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள். அதற்காக நானும் துணை நிற்பேன்.

அரசியல்வாதிகளுக்கே 5 வருடங்களுக்கு ஒருமுறைதான் ஜாதகம் மாறும். ஆனால் சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜாதகம் மாறும். திரையுலகுக்கு பல சலுகைகளை வாரி வழங்கிய முதல்வருக்கு லட்சம் முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

நடிகர் கமலஹாசன் பேசியதாவது:-

“இங்கே வைரமுத்து பேசும்போது கலைஞர்தான் சூரியனை தட்டி எழுப்புகிறார்” என்று கூறினார். நீண்ட நேரம் பேசி இதை நான் பொய்யாக்கி விடக்கூடாது. அவருக்குத்தான் காலையில் எழுந்ததும் அமைச்சர்களையும், கலெக்டர்களையும் தட்டி எழுப்ப வேண்டிய கடமை இருக்கிறது. அவருக்கு இன்று திருமண நாள் என்று சொன்னார்கள். திருமண நாளும் அதுவுமாக அவருடைய தூக்கத்தை நாம் கெடுக்கக் கூடாது.

கால் நூற்றாண்டு காலம் அவர் ஆட்சியில் இருந்திருக்கிறார். இன்னும் கால் நூற்றாண்டு காலம் அவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

டைரக்டர் கே.பாலசந்தர் பேசுகையில், கலைஞர் நூறு ஆண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கூறினார்.

டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:-

சில விழாக்கள் சில நேரங்களில் சம்பிரதாயத்துக்காக நடைபெறுவதுண்டு. ஆனால் இந்த விழா ஆத்மார்த்தமாக, உணர்வுப்பூர்வமாக எடுத்த விழா. 35 ஆண்டுகளாக தமிழகத்தை திரையுலகம் ஆட்சி செய்து இருக்கிறது. ஆனால் இதுவரை எந்த முதல்வரும் இத்தனை சலுகைகளை அளித்ததில்லை.

`இளம் கன்று பயம் அறியாது’ என்று சொல்வார்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நான் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசியதுண்டு. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு தாய்ப்பசுவாக இருந்து பாலூட்டியவர் கருணாநிதி. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நான் சில சமயங்களில் உங்களுடன் முரண்பட்டு இருக்கிறேன். ஆனால் ஒருபோதும் முட்டி மோதிக் கொண்டதில்லை.

நீர் உள்ள அளவும், நிலம் உள்ள அளவும், நீங்கள் நீடூழி வாழ வேண்டும். தமிழ் இனத்தையும், மொழியையும் பாதுகாப்பதற்கு உங்களை விட்டால் வேறு யாருமில்லை.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

டைரக்டர் ஷங்கர் இங்கே பேசியபோது இரண்டரை மணி நேரம் திரையை ஆளுவதற்கு நாங்கள் திணறுகிறோம். ஐந்தாண்டு கால ஆட்சியை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்டார். அறுபது ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் வரலாற்றை கட்டிக்காத்த புகழ் கலைஞர் ஒருவருக்குத் தான் உண்டு. தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் பல முதல்-அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். கலைஞருக்கு பின்னாலும் பல நூறு முதல்-அமைச்சர்கள் வர இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட ஒரேயொரு கலைஞர் இவர்தான். எங்களுடன் நீங்கள் இருந்து தமிழ்நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு நன்றி.

கலைஞருக்கு சிவாஜிக்காக நாலு பக்கங்களில் வசனமும் எழுத தெரியும். எம்.ஜி.ஆருக்காக 4 வார்த்தைகளில் வசனமும் எழுத தெரியும். 83 வயதில் இந்த உற்சாகம், இந்த ஆற்றல், இந்த சுறுசுறுப்பு அவருக்கு எப்படி வந்தது? என்று எல்லோரும் கேட்கிறார்கள். சிலருக்கு பணம் ஒரு நோக்கமாக இருக்கும். சிலருக்கு பதவி ஒரு நோக்கமாக இருக்கும். சிலருக்கு பெண் ஒரு நோக்கமாக இருக்கும். அளவுக்கு மீறி பணம் வரும்போது அந்த பணத்தின் மீது வெறுப்பு வரும். பதவியும் ஒரு கட்டத்தில் அலுத்துப் போகும். மனமும், உடலும் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் பெண்ணாசையும் வெறுத்து விடும். ஆனால் கலைஞர் அவர்களுக்கு லட்சியம், இனம், மொழி ஆகியவையே நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் அவர் இன்னும் இளமையுடன் காணப்படுகிறார்.

அதிகாலை 5 மணிக்கு எழுகிற ஒரே முதல்-அமைச்சர் கலைஞர்தான். அவர்தான் பல அமைச்சர்களையும், கலெக்டர்களையும் தட்டி எழுப்புகிறார். சூரியனையே தட்டி எழுப்புபவர் இவர்தான். சூரியனை தட்டி எழுப்பி தமிழகத்தை விழித்திருக்க வைத்த சூரியனுக்கு சூரியன் இவர்.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

நடிகர் விஜய் பேசியதாவது:-

சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை போன்ற படங்களில் கலைஞரின் வசனத்தை நான் பேசி நடித்திருக்கிறேன். சமீபத்தில் அவருடைய வசனத்தில் நான் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அதற்குள் அவர் முதல்-அமைச்சராகி விட்டார். எந்தவொரு விழாவில் அவரை சந்திக்கும்போதும், நீ நன்றாக இருக்கிறாயா? என்ன படத்தில் நடிக்கிறாய்? என்றெல்லாம் அவர் என்னை விசாரிக்கும்போது சந்தோஷப்படுவேன்.

நாங்கள் எல்லாம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் தொடர்ந்து நடனம் அல்லது சண்டை காட்சியில் நடித்தால் களைப்பு வந்து விடுகிறது. அடுத்த நாள் விடுமுறை எடுத்துக்கொள்ள தோன்றுகிறது. ஆனால் இந்த வயதில் முதல்-அமைச்சர் கருணாநிதி எத்தனை விழாக்களில் கலந்து கொள்கிறார். மதுரை, சேலம், டெல்லி என்று பறந்து கொண்டே இருக்கிறார். அவருடைய உடம்பை விட அவருடைய மனதுக்கு வலிமை அதிகம் என்று கருதுகிறேன். அவரை ஒரு அரசியல்வாதி, முதல்-அமைச்சர் என்பதையெல்லாம் விட நல்ல மனிதராக பார்க்கிறேன்.

இவ்வாறு விஜய் பேசினார்.

பட அதிபர்கள்

  • ஏவி.எம்.சரவணன்,
  • கே.ஆர்.ஜி.,

டைரக்டர்கள்

  • கே.பாக்யராஜ்,
  • விஜய டி.ராஜேந்தர்,
  • ஷங்கர்,

தியேட்டர் அதிபர்கள்

  • அபிராமி ராமநாதன்,
  • பன்னீர்செல்வம்,
  • பெப்சி விஜயன்,

நடிகர்கள்

  • சத்யராஜ்,
  • சிவகுமார்,
  • பார்த்திபன்,

நடிகைகள்

  • சரோஜாதேவி,
  • மனோரமா,
  • ஸ்ரீபிரியா,
  • பிலிம் சேம்பர் தலைவர் கே.சி.என்.சந்திரசேகர்,
  • கவிஞர் வாலி,
  • விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் கோவை சண்முகம் ஆகியோரும் பாராட்டி பேசினார்கள்.

முன்னதாக அனைவரையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் வரவேற்று பேசினார்.

தமிழ் திரையுலகம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வெள்ளி சிம்மாசனமும், வெள்ளிப் பேனாவும் வழங்கப்பட்டது.

விழா நிகழ்ச்சிகளை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர்கள்

  • காஜா மைதீன்,
  • அன்பாலயா பிரபாகரன்,
  • செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன்,
  • கே.எஸ்.சீனிவாசன்,
  • பொருளாளர் அழகன் தமிழ்மணி,
  • டைரக்டர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர்,
  • செயலாளர் அமீர்ஜான் ஆகியோர் செய்து இருந்தார்கள்.

Posted in Actors, Actresses, Association, Chief Minister, Cinema, Felicitation, Film, Functions, Kalainjar, Kalinjar, Kamalhassan, Karunanidhi, M karunanithi, Movies, Mu Ka, Mu Karunanidhy, Rajiniganth, Tamil, Tamil Nadu, Vijay, Vizha | 1 Comment »

Tamil Cinema felicitates Chief Minister Karunanidhi

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2006

நாளை நடைபெறும் கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் – நடிகைகள்: படப்பிடிப்பு 2 நாள் ரத்து

சென்னை, செப். 22- முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் நாளை பாராட்டு விழா நடக்கிறது. திரைப்படத்துறைக்கு பல்வேறு சலுகைகளை அவர் அறிவித்ததற்காக இந்த விழா நடத்தப்படுகிறது.

நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 5.30 மணிக்கு விழா தொடங்குகிறது. 2 மணி நேரம் நடிகர்-நடிகைகள் நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
நடிகைகள்

  • திரிஷா,
  • நயன் தாரா,
  • அசின்,
  • சதா,
  • ஸ்ரேயா,
  • பாவனா,
  • சினேகா,
  • ரீமாசென்,
  • மும்தாஜ்,
  • பூஜா,
  • அபர்ணா,
  • லட்சுமிராய்,
  • தியா,
  • சிந்துதுலானி,
  • ரகசியா,
  • தேஜாஸ்ரீ,
  • பத்மபிரியா ஆகியோர் மேடையில் நடனம் ஆடுகிறார்கள்.

நடிகர்கள்

  • சிம்பு,
  • பிரசாந்த்,
  • அப்பாஸ்,
  • கார்த்திக்,
  • ஜெயம்ரவி,
  • மாதவன்,
  • ஸ்ரீகாந்த்,
  • பரத்,
  • ஜித்தன் ரமேஷ்,
  • சிபிராஜ்,
  • பிரசன்னா,
  • ஆர்யா

ஆகியோரும் நடனமாடுகிறார்கள்.

  • பாக்ய ராஜ்,
  • பார்த்திபன்,
  • வடிவேலு,
  • விவேக்,
  • நெப்போலியன்,
  • பிரகாஷ்ராஜ்,
  • சந்திரசேகர்,
  • அலெக்ஸ் ஆகியோரின் நாடக மும் இடம் பெறுகிறது.

விழாவில் நடிகர்கள் ரஜினி காந்த், கமலஹாசன் ஆகியோர் பங்கேற்று கருணாநிதியை வாழ்த்தி பேசுகிறார்கள்.

விழாவையொட்டி அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டன. நாளையும் படப் பிடிப்பு நடைபெறாது.

படப்பிடிப்பு ரத்தானதை தொடர்ந்து மும்பை, திருவனந்த புரம், ஐதராபாத்தில் சூட்டிங் கில் இருந்த நடிகர்-நடிகைகள் இன்று சென்னை திரும்பினார்கள். நடன இயக்குனர் சங்கத்தில் அவர்கள் நடன பயிற்சி செய்தனர். முன்னணி நடிகைகள் இன்று மாலை விழா நடைபெறும் மேடையில் நடன பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

நடிகர்கள்

  • விஜய்,
  • விக்ரம்,
  • அர்ஜ×ன்,
  • பிரபு,
  • சத்யராஜ், உள்ளிட்ட முன்னணி நடிகர்- நடிகைகளும் விழாவில் பங்கேற்கிறார்கள்.

Posted in Actors, Actresses, CM, Karunanidhi, Kollywood, Maalai Malar, Movies, Nehru Stadium, Politics, Tamil, Tamil Cinema | 2 Comments »

South Indian Film Chamber Election – Results

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

நடிகர் சங்கத் தேர்தலில் சரத் அணி ஒட்டுமொத்த வெற்றி

சென்னை, ஆக. 1: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியினர் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றுள்ளனர்.

தி. நகர் நடிகர் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி தேர்தல் வரை நடைபெற்றது. தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 1396 வாக்குகள் பதிவாகின.

ஞாயிறு இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

செயலாளராக ராதா ரவி தேர்ந்தெடுக்கப்பட்டார். ராதா ரவிக்கு 992 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மன்சூர் அலி கானுக்கு 235 வாக்குகளும் கிடைத்தன.

துணைத் தலைவர்களாக நடிகை மனோரமா, நடிகர் விஜயகுமார் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மனோரமாவுக்கு 1084 வாக்குகளும், விஜயகுமாருக்கு 958 வாக்குகளும் கிடைத்தன.

பொருளாளராக கே.என். காளை தேர்ந்தெடுக்கப்பட்டார். காளைக்கு ஆதரவாக 720 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நல்லதம்பிக்கு 582 வாக்குகளும் கிடைத்தன.

24 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 46 பேர் போட்டியிட்டனர். இதில் சரத்குமார் அணி சார்பாக போட்டியிட்ட 24 பேரும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்கள்; அவர்கள் பெற்ற வாக்குகள் (அடைப்புக்குறிக்குள்):

1. முரளி (862)

2. சார்லி (849)

3. சத்யராஜ் (848)

4. சிலம்பரசன் (842)

5. அலெக்ஸ் (829)

6. ஸ்ரீபிரியா (810)

7. அப்பாஸ் (795)

8. செந்தில் (786)

9. பிரவீண்குமார் (773)

10. ஏ.கே.ராஜேந்திரன் (765)

11. பிரஷாந்த் (745)

12. ஸ்ரீகாந்த் (734)

13. “பசி’ சத்யா (722)

14. கே.ஆர்.செல்வராஜ் (704)

15. குண்டுகல்யாணம் (703)

16. ஆர்.வீரமணி (693)

17. மும்தாஜ் (693)

18. சி.எஸ்.பி.கண்ணன் (686)

19. ஏ.கே.வேணு (686)

20. ரங்கசாமி (681)

21. ஜெய்சீதாராமன் (664)

22. விந்தியா (654)

23. எம்.ராஜேந்திரன் (644)

24. ராஜ்குமார் (632)

புதிய நிர்வாகிகள் வரும் 4-ம் தேதி பதவியேற்கின்றனர்.

Posted in Actors, Actresses, Dinamani, Election, Kollywood, Sarathkumar, South India, Tamil | Leave a Comment »

Thalaippu Testing

Posted by Snapjudge மேல் ஜூலை 17, 2006

Aishwarya Rai

Kareena Kapoor

Katrina Kaif

Priyanka Chopra

Posted in Actresses, Bollywood, Models, Photos, Sarees | Leave a Comment »