‘Dasavatharam movie story is stolen from me’ – Su Senthilkumar gets stay order
Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007
கமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, ஜன.21-
சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த திரைப்பட உதவி
இயக்குனர் சு.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு
தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நான் `தனுஷ்‘ என்ற திரைப்படத்தில் குருமணி என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தற்போது `அப்படியா’ என்ற திரைப்படதëதில் இயக்குனர் தீர்த்தமலை என்பவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறேன்.
தனுஷ் திரைப்படம் பாதியில் நின்று போய்விட்ட நிலையில், அர்த்தனாரி அல்லது குளோன்ஸ் என்ற தலைப்பில் இதுவரை வரலாற்றிலேயே எவரும் கண்டிராத அளவில் ஒரு கதையினை உருவாக்கினேன். அந்த கதையில், கதாநாயகன் 10 முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார். அதைச் சுற்றி ஆயிரம் கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஒருவர் மட்டுமே தோன்றுகின்ற மாபெரும் ஒரு திரைக்கதையை அமைத்திருந்தேன்.
இதில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் மட்டுமே ஏற்றவர் என்று கருதி அவரிடம் கதையை சொல்ல அனுமதி கேட்டு என் கதையின் தலைப்பின் போட்டோ கார்டை டி.டி.கே. சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தìற்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு முரளி என்பவர், கதை சொல்ல வரும்படி கமல்ஹாசன் வரச் சொன்னதாக தொலைபேசியில் கூறினார்.
அதன்படி, நானும், நண்பர் பாலா என்கிற பாலசுப்பிரமணியனும் 8-8-2005 அன்று அந்த அலுவலகம் சென்றோம். என்னை மட்டும் உள்ளே அழைத்து முரளி பேசினார். கதையின் நகலை என்னிடம் கொடுங்கள். அதை நன்கு படித்துவிட்டு, அதை வைத்து நாங்கள் படம் எடுப்பதாக இருந்தால் உங்களுக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அந்த படத்தில் உங்களை உதவி இயக்குனராக அமர்த்துவதுடன், ஒரு குறிப்பிட்ட தொகையை கதைக்காக கொடுப்போம் என்றும் உறுதி அளித்தார்.
ஆனால், ஒரு வாரம் கழித்து நாளிதழ் ஒனëறில் தசாவதாரம் என்ற பெயரில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போவதாகவும் செய்தி வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
இதுபற்றி முரளியிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் கூறும்போது, “கமல்ஹாசன் உங்களை இந்த தìரைப்படத்தில் உதவி இயக்குனராக நியமித்துள்ளார். படம் தொடங்கும்போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம். கவலைப்படாதீர்கள்-உஙëகளுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்போம்” என்றார். நானும் அதை நம்பி காத்திருந்தேன்.
18-8-06 அன்று தசாவதாரம் படிப்பிடிப்பு நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதையடுத்து முரளியிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த கதை எல்லாம் உன் கதை இல்லை. உன்னிடம் யாரும் போனில் பேசவில்லை. இந்த கதையை நானும், கமல்ஹாசனும் சேர்ந்து உருவாக்கினோம். இனிமேல் இங்கே நீ வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏமாற்றப்பட்டதை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டேன்.
தசாவதாரம் கதை என்னுடையது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் வைத்துள்ளேன். அந்த கதையை நான் முறைப்படி பதìவும் செய்துள்ளேன்.
என் கதையை என் அனுமதி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் என்று பெயர் மாற்றம் செய்து எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றியது பற்றி விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருக்கும் மனு கொடுத்துள்ளேன். எனவே, தசாவதாரம் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இநëத வழக்கில் நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் முன்னிலையில் நேற்று நடந்தது. “தசாவதாரம் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால், இந்த படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
bsubra said
சற்றுமுன்…: சற்றுமுன்: தசாவதாரம் எனது கற்பனையில் உருவானது – நடிகர் கமலஹாசன்
Kamal’s Dasavatharam - Tamil Movies « Snap Judgment said
[…] ‘Dasavatharam movie story is stolen from me’ – Su Senthilkumar gets stay order: “கமல்ஹாசன் நடிக்கும் […]
vasuvalingam said
songs are very wonderful
vasuvalingam said
kalai mattum kandal song very super
vasuvalingam said
my friend KKDON-KOWSIK loves one of the famous Tamil actress