Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Good’ Category

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Steroids

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உயிர் காக்கும் உயர்ந்த மருந்துகள்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

அலோபதி மருத்துவத்தில் உயிர்காக்கும் மருந்தான STEROID இருப்பது போல், ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா?

ருக்வேதம் நோய் பற்றிய வர்ணனையில் இருவகையான நோய்களைப் பற்றி குறிப்பிடுகிறது. தோன்றும் வகையறிய முடியாதபடி ஊடுருவிப் பாய்ந்து முழு உருவம் பெற்ற பின்னரே உணரப்படுபவை, ரக்ஷஸ் எனும் பெயர் கொண்டவை. மீண்டும் மீண்டும் தலை தூக்குபவை, அமீவா எனப் பெயர் உடையவை.

இந்த இருவகையான நோய்களும் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் தோன்றும் அறிகுறிகளால் மனிதன் வேதனையுறும் போது STEROID மருந்துகள் அந்த அறிகுறிகளை அமுக்கி மனிதனை முடக்கிவிடாமல் அவனை நடக்கும்படி செய்கின்றன. அறிகுறிகளை மட்டுமே அமுக்கி விடுவதால் நோய் நீங்கி விட்டது என்று உறுதியாகக் கூற இயலாது. தடாலடி வைத்திய முறைகளால் நோய் நீங்கி நிரந்தர இன்பத்தை ஒருவரால் பெற இயலாது. ஒரு நோயை ஏற்படுத்தும் காரணம், உடலில் தனக்கு ஏதுவான காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், அந்தக் காலநிலை தனக்கு அனுகூல நிலையை அடைந்ததும், அந்தக் காரணத்திற்கு தக்கபடி நோயின் சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் ஆயுர்வேதம் கூறுகிறது. உடலில் தென்படும் அறிகுறிகளை வைத்து அந்தச் சீற்றத்தை ஏற்படுத்தும் தோஷ நிலைகளை நன்கு கணித்து, அந்த தோஷம் எதனால் கெட்டது என்ற காரணத்தையும் ஒரு மருத்துவனால் கூற இயலுமானால் அந்த மருத்துவர் ஒரு சிறந்த மருத்துவ நிபுணராகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் நோய்க்கான காரணத்தை நிறுத்தச் சொல்லி, கெட்டுள்ள தோஷத்தை அறிகுறிகளின் வாயிலாக அறிந்து அதைச் சீர்படுத்தும் நோக்கில் உணவும், நடவடிக்கையும், மருந்தையும் உபதேசிக்கிறார். இந்த நல்உபதேசம் நபஉதஞஐஈ மருந்துகளைவிட சிறந்தவை.

மனிதனின் உயிரைக் காப்பவை மட்டுமே மருந்தல்ல. உடலுக்கும் மனதிற்கும் நலம் தரும் உணவையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், செயலைச் செய்வதற்கு முன் நிதானித்துச் செயலாற்றுபவன், புலன்களால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன், பொறுமை உள்ளவன், உண்மையான நற்செயல்களைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயற்றிருப்பான் என்று ஆயுர்வேத நூலாகிய சரகஸம்ஹிதையில் காணப்படுகிறது.

“”இதையெல்லாம் நான் கடைபிடிக்காது போனதினால்தான் ரக்ஷஸ் வகை வியாதியும், அமீவா வகையும் என்னைப் பீடித்துள்ளன; STEROID மருந்துகளால்தான் காலம் தள்ளுகிறேன். இதிலிருந்து விடுபடுவதற்கான உயிர் காக்கும் மருந்து உள்ளதா” என ஒரு நோயாளி ஆயுர்வேத மருத்துவரை அணுகி கேட்பாரேயானால், அதற்கான தீர்வை அவரால் இருவகையில் மட்டுமே தர இயலும்.

அவை சோதனம் மற்றும் சமனம் எனும் இரு வைத்திய முறைகளேயாகும். உடலின் உட்புறக் கழிவுகளை அகற்றும் பஞ்சகர்மா எனும் ஐவகைச் சிகிச்சைகளான வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா, நஸ்யம் எனும் மூக்கில் மருந்து விட்டுக் கொள்ளும் முறை மற்றும் ரத்தக் குழாய்களைக் கீறி, கெட்ட ரத்தத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை சோதனம் எனும் வைத்திய முறைகளாகும். நோயும் பலமாக இருந்து நோயாளியும் பலசாலியாக இருக்கும் நிலையில் மட்டும் இந்தச் சிகிச்சை முறையைச் செய்ய இயலும்.

நோயின் தாக்கம் குறைவாகவும், நோயாளியும் பலமின்மையினால் வருந்துபவராக இருந்தால் சமனம் எனும் 7 வகை சிகிச்சை முறைகளே போதுமானது.

1. உணவைப் பக்குவம் செய்யக்கூடியது.

2. பசித்தீயை வளர்ப்பது.

3. பட்டினியால் உடல் கெடுதியை அகற்றுவது.

4. தண்ணீர் தாகத்துடன் இருக்கச் செய்வது.

5. உடற்பயிற்சி.

6. வெயிலில் அமர்ந்திருப்பது.

7. எதிர்காற்றை உடலில் படும்படி செய்வது.

மேற்கூறிய சிகிச்சை முறைகளை STEROID மருந்தை உட்கொள்ளும் நோயாளிக்குத் தகுந்தவாறு உபயோகித்து அவரை அதிலிருந்து விடுபடச் செய்து, நோயின் தாக்கத்தையும் குறைத்து அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆயுர்வேதத்தால் தர இயலும் என்பதே தங்கள் கேள்விக்கான விடை.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Body, Diet, Good, Habits, Health, Medicines, Natural, Nutrition, Physical, steroids, Swaminathan, Yoga | Leave a Comment »

Police officer’s integrity – Refuses to corrupt practice by not accepting five lakhs

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்க மறுத்த போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு

மும்பை, ஜன. 24: ஆவணங்களை அழித்தால் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்ற நிலையிலும் நேர்மையாக நடந்துகொண்ட மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டரை மகாராஷ்டிர துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டீல் பாராட்டி அவருக்கு ரூ.10,000 பணமுடிப்பும் வழங்கினார்.

ஆஸôத் மைதான் போலீஸ் நிலையத்தில் துணை இன்ஸ்பெக்டராக இருப்பவர் மகேந்திர ஜன்ராவ். இவர் குட்கா நிறுவனம் ஒன்றின் மீதான வழக்கை விசாரித்து வந்தார்.

இந்த நிலையில் ரயில்வேயில் போலீஸôக பணிபுரியும் சைரஸ் தாவியர்வாலா என்பவர் குட்கா தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து கிஷோர் வத்வானி, அனில் சர்மா ஆகிய இருவரை ஜன்ராவிடம் அழைத்து வந்தார்.

அவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை அழித்தால் ரூ.5 லட்சம் லஞ்சமாகத் தருவதாக ஆசை காட்டினர்.

ஆனால், ஜன்ராவ் அதை ஏற்க மறுத்தார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

“குட்கா நிறுவனம் தொடர்பான ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரயிலில் இந்தூருக்கு சென்று கொண்டு இருக்கும்போது, போரிவிலி ரயில் நிலையம் அருகே அவை தொலைந்து விட்டதாக போலீஸில் புகார் தெரிவிக்கும்படியும், அந்த ஆவணங்களை அழித்துவிடும்படியும் ஜன்ராவுக்கு ஆலோசனை வழங்கினோம்’ என்று கைது செய்யப்பட்ட ரயில்வே போலீஸ் தாவியர்வாலா கூறினார்.

Posted in 5 Lacs, Azad Maidan, Azad Maidhan, Corruption, five lakhs, Good, Gutkha, Honesty, Incident, India, maharashtra, Mahendra Janrao, Money, Mumbai, Pan, Police, RR patil | Leave a Comment »

Two rupees as Fees – 60 year Doctor practice & service by VS Jayaraman in Vellore

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

60 ஆண்டு மருத்துவ சேவையில் “2 ரூபாய் டாக்டர்’

வேலூர், டிச.21: வேலூர் அடுத்த காந்தி நகரில் வசிக்கும் டாக்டர் வி.எஸ். ஜெயராமன் (85) ரூ.2 என்ற குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

காந்தி நகரில் 2 ரூபாய் டாக்டர் என்றால் ஜெயராமனை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு இவர் பிரபலம்.

1946-ல் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து தனது சேவையைத் தொடங்கிய இவர் இன்று வரை மாலை நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதித்து மருந்துகளை வழங்குகிறார்.

சாதாரண ஜுரம், சளி, இருமல் உள்ளிட்ட வியாதிகளுக்கு இவரே மாத்திரை, மருந்துகளை வழங்குகிறார். இதற்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கும் அவர் பரிசோதனைக்கு பணம் பெறுவதில்லை. மஞ்சள் காமாலை, டைஃபாய்டு உள்ளிட்ட தொடர் சிகிச்சைக்கு மருந்தளித்து ரூ.3 கட்டணம் பெறுகிறார்.

தவிர்க்க இயலாத நிலையில் மட்டுமே மருந்துக் கடைகளில் சற்று கூடுதலான விலையில் கிடைக்கும் மருந்துகளை எழுதித் தருகிறார். அவையும் ரூ.10-க்கு மிகாமல் கிடைத்து விடும். இவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சில மருந்துக் கடைக்காரர்கள் தனியாக வரவழைத்து விற்பனை செய்வதும் உண்டு.

“மருந்துக் கடைகளில் மிகக் குறைந்த விலையில் பல வீரியமாக செயல்படக்கூடிய மருந்துகள் கிடைக்கின்றன. அதனால் நான் குறிப்பிட்டு எழுதிக் கொடுக்கும் மருந்துகளுக்கு பதில் மாற்று மருந்துகளை தருவதற்கு மருந்துக் கடைக்காரர்கள் தயங்குவதுண்டு’ என்கிறார் ஜெயராமன்.

மருத்துவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருந்துகளை மருந்து நிறுவனங்கள் அளிப்பதுண்டு. அந்த முறையில் அவற்றை வாங்கி நோயாளிகளுக்கு தருவதால் ரூ.2 கட்டணம் எனக்கு கட்டுப்படியாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Posted in +2, 60+, Aashish Vithiyaarthi, Aashish Vithyarthi, Cool, Doctor, E, Good, Health, medical, Medicine, Noble, PCP, people, profile, Quote, Read, service, Tamil, Theomen, Unknown, Vellore, VS Jayaraman | Leave a Comment »

65 Year old Youth imbibes invigorating new spirit among Village Youth

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஒரு வழிகாட்டி: கிராமங்களில் “அறிவு விதை’ விதைக்கும் 65 வயது “இளைஞர்’

ப. இசக்கி

திருநெல்வேலி, டிச. 10: கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் புத்தகக் கட்டுகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று விற்பனை செய்து பொருள் ஈட்டி வருகிறார் 65 வயது “இளைஞர்’ ரா.சண்முகவேல் (65).

இதில் என்ன இருக்கிறது? என நினைப்பவர்களுக்கு புதைந்திருக்கும் செய்தி ஒன்றல்ல, இரண்டு உண்டு. “வேலை இல்லை’ என முடங்கி கிடக்கும் சில இளைஞர்களுக்கு, இப்படியும் ஒரு வேலை இருக்கிறது என்பது முதல் பாடம்; தற்போதைய தொலைக்காட்சி யுகத்தில் கிராமத்து மக்களையும் படிக்கத் தூண்டும் வகையில் புத்தம் புது புத்தகங்களை அவர்களது இல்லங்களுக்கே கொண்டு சேர்த்து அறிவுப் பசியாற்றும் ஒரு வகை சேவை என்பது இரண்டாவது பாடம்.

ஒரு பாடத்தையும் போதித்து, “சேவை’யையும் செய்து வருபவர், ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த இடதுசாரி இயக்கத் தொண்டரான ரா.சண்முகவேல்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பள்ளி படிப்பு மட்டுமே படித்துள்ள இவர், இளம் வயதில் இயக்கப் பணிகளையும், குடும்பத் தொழிலான விவசாயத்தையும் பார்த்து வந்தார். இடதுசாரி இயக்கத்தில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக, “சோவியத் ரஷ்யா’ வெளியீடுகளுக்கு சந்தாதாரராகி புத்தகங்களைப் பெற்றார். அதைக் கொண்டு உள்ளூரில் ஜீவா படிப்பகத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து புத்தகங்கள் மீது ஏற்பட்ட நாட்டத்தால், அருகில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று இடதுசாரி சிந்தனை புத்தகங்களை விற்றார். நாள்கள் செல்லச்செல்ல வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்கும் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒரு பிடிப்பு ஏற்படவே அதுவே அவரது நிரந்தர தொழிலாகிவிட்டது.

சண்முகவேல், கிராமம் கிராமமாக சைக்கிளில் சென்று புத்தகம் விற்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் 25 வயது இளைஞர் போல நாளொன்றுக்கு 100 முதல் 120 கி.மீ. தூரம் சைக்கிளில் சுற்றி வந்து புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார் இந்த “செஞ்சட்டை’ சண்முகவேல். இதில் இவருக்கு மாத வருமானம் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கிடைக்கிறதாம்.

“”பாலியல் புத்தகங்கள் தவிர அனைத்து வகை புத்தகங்களையும் வாங்கி விற்கிறேன். ஆசிரியர்கள், பெரிய மனிதர்கள், வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் என்னிடம் புத்தகங்களை வாங்குவார்கள். நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. பெண்கள் அதிக புத்தகங்களை வாங்குவார்கள். கடனும் உண்டு, சில வேளைகளில் தள்ளுபடியும் உண்டு. காந்திஜியின் “சத்திய சோதனை’க்கு இன்னும் கிராக்கி உள்ளது.

வாடிக்கையாளர்கள் கேட்கும் புத்தகங்கள் திருநெல்வேலி, மதுரை என எங்கிருந்தாலும் அதையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். பள்ளி, கல்லூரிகளிலும் விற்பனை செய்வேன்.

புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, நகரங்களுக்குச் சென்றால்தான் புத்தகங்கள் கிடைக்கும் என்றல்ல. அவர்களது வீட்டுக்கே புதிய புதிய புத்தகங்களை கொண்டு சேர்க்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் புத்தகங்களைப் படித்துவிடுவேன். அப்போதுதான் வாடிக்கையாளர்களிடம் பேச முடியும்.

இத் தொழிலை நான் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். ஒரு குறையும் இல்லை. எனது 2 மகள்களை படிக்கவைத்து திருமணமும் முடித்துவிட்டேன் என் மனைவி லட்சுமி, உள்ளூர் அஞ்சல் நிலையத்தில் கிளை அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.

இத் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கிறது. வேலை இல்லை, வேலை இல்லை என சொல்பவர்கள் இப்படி புத்தகங்களை வாங்கி ஊர் ஊராகச் சென்று விற்றாலே நிறைய சம்பாதிக்கலாம். இந்தக் காலத்து இளைஞர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்” என மடை திறந்த வெள்ளமாய் பேசிவிட்டு புத்தக விற்பனைக்குப் புறப்பட்டார் சண்முகவேல்.

Posted in Action, Bicycle, Bike, Books, Bookseller, City, Doer, Gandhi, Good, Great, Icon, Inspiration, Jobs, Leader, Mahathama Gandi, Mahatma, MK Gandhi, Motivation, Old, Shanmugavel, Suburban, True, unemployment, Village, Words, Young | Leave a Comment »