Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 11th, 2006

TN Govt announces cash award to Santhi Soundarajan – 800 Meters Race Silver Medalist

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006

ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் பரிசு: முதல்வர்

சென்னை, டிச. 11: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி, புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளி.

போட்டியின் போது சாந்தி

போட்டியின் போது சாந்தி

தற்போது தோஹாவில் நடைபெற்றுவரும் 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தடகளத்தில் இந்தியா தனது பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது. அத்துடன் தமிழகத்திலிருந்து பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் சாந்தி ஏற்படுத்தியுள்ளார்.

இத்தகைய சாதனை படைத்துள்ள சாந்தியின் பெற்றோர்கள் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிய அளவில் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ள விளையாட்டு வீராங்கனை சாந்தியின் சாதனையைப் பாராட்டி அவருக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

சாந்திக்கு தமிழக முதல்வர் பரிசு வழங்குகிறார்

சாந்திக்கு தமிழக முதல்வர் பரிசு வழங்குகிறார்இப்போட்டியில் பந்தய தூரத்தை 2 நிமிடம் 3.16 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் என்ஜினியரிங் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதமியில் பயிற்சி பெற்றவர்.

வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து சாந்தி கூறுகையில், “”தகுதிச் சுற்றில் நான் சற்று பின்தங்கியிருந்தேன். இருப்பினும் இறுதிப் போட்டியில் நம்பிக்கையுடன் பங்கேற்றேன். பயிற்சியாளர் நாகராஜனின் ஆலோசனைப்படி புதிய உத்திகளைப் பயன்படுத்தினேன். இதனால் வெள்ளிப் பதக்கம் வசமானது,” என்றார் சாந்தி.

25 வயதான சாந்தி இதற்கு முன்னர் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதேபோல 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தி விவகாரம் குறித்து விளையாட்டுத் துறையினரின் கருத்துகள்

சாந்தியின் குடும்பத்தினர் பணியாற்றும் செங்கல் சூளை
சாந்தியின் குடும்பத்தினர் பணியாற்றும் செங்கல் சூளை

இந்த சர்ச்சை குறித்து இது வரை இந்திய தடகள சங்கத்திற்கோ அல்லது தமிழ்நாடு தடகள சங்கத்திற்கோ எந்த வகையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை என அகில இந்திய தடகள சங்கத்தின் துணைத் தலைவர் வால்டர் தேவாரம் கூறுகிறார்.

அவ்வாறு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கிடைக்க பெற்றால் பிறகு அவரால் மகளிர் பிரிவில் பங்குபெற முடியாது எனவும் அவர் கூறுகிறார். மேல் முறையீடு செய்வது தனிப்பட்ட வீரர் வீராங்கனையின் பொறுப்பு எனவும், சங்கத்திற்கு அதில் எந்த பொறுப்பும் கிடையாது என்றும் கூறினார் தேவாரம்.

இந்த வருடம் கொரியாவிலும், இலங்கையிலும் இரண்டு சர்வதேச போட்டிகளில் அவர் பங்கு பெற்றிருந்தாலும், இவ்வாறான பிரச்சினை ஏதும் எழவில்லை எனவும் கூறும் தேவாரம், ஒரு போட்டியில் பங்குபெற ஒரு வீராங்கனை வரும் போது அவர் ஆணா அல்லது பெண்ணா என்று பார்ப்பது ஒழுங்கற்ற செயல் எனவும் அவர் மேலும் கூறினார்.

சாந்தியின் செம்மண் வீடு
சாந்தியின் செம்மண் வீடு

1986 வரை பாலியல் தொடர்பான சோதனை நடத்தப்பட்டன எனவும், அது பெண்மைக்கு இழுக்கு எனக் கருதப்பட்டதால், அதன் பிறகு அந்தச் சோதனை நடத்தப்படுவதில்லை எனக் கூறுகிறார் தோஹா போட்டிகளுக்கு தொழிற்நுட்ப நடுவராக சென்றிருந்த சி.கே.வல்சன். போட்டியில் பங்கு பெற்ற யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பெண்மை குறித்த இந்த பாலியல் சோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். ஆனால் சாந்தி விடயத்தில் அவ்வாறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தம்மால் உறுதியாக் கூறமுடியும் எனவும் மேலும் கூறினார் வல்சன்.

அறிவியல் ரீதியாக ஹார்மோன்களின் அளவின் அடிப்படையிலேயே ஆணா பெண்ணா எனத் தீர்மானிக்கப்படும் எனக் கூறுகிறார் விளையாட்டு மருத்துவ வல்லுநர் டாகடர். கண்ணன் புகழேந்தி.

சாதாரணமாக சிறுநீர் தான் பரிசோதிக்கப்படும் எனவும் இது போன்ற சிக்கலான சூழலில் ரத்தப் பரிசோதனை அவசியம் எனவும், அதில் தான் ஹார்மோன்களின் அளவு தெரியவரும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இவ்வாறான சோதனைகளுக்கு அப்பாற்பட்டு மரபணு சோதனை நடத்தப்பட்டால் அதன் மூலம் ஒருவரது பாலியல் தன்மை உறுதியாக தெரிந்துவிடும் எனவும் அவர் கூறினார்.

 

 

சாந்தியின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சாந்திக்கு ஏற்பட்ட சரிவு
சாந்திக்கு ஏற்பட்ட சரிவு

அண்மையில் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி சவுந்திரராஜனின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் கடிதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மூலம் தமக்கு கிடைத்திருப்பதாக இந்திய தடகள சங்கத்தின் செயலர் லலித் பானோட் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் யாரும் தனிப்பட்ட பொறுப்பேற்க முடியாது எனக் கூறும் அவர், சாந்தியின் பிறப்புச் சான்றிதழில் அவர் பெண் என்று குறிபிடப்பட்டுள்ளது எனவும், அவரது கடவுச்சீட்டிலும் அவ்வாறே உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபருக்கும், சங்கத்திற்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், இதனால் நாட்டிற்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

போட்டியாளரின் பாலியல் குறித்து கண்டறிய சர்வதேச சங்கம் தடைவிதித்துள்ள காரணத்தால், இது குறித்து போட்டிக்கு முன்னர் சோதிக்க இயலாது எனவும் கூறுகிறார் பானோட். ஒரு ஆணிடம், அவர் ஆடவர் தானா எனக் கேட்க முடியாத போது எப்படி ஒரு பெண்ணிடம் அப்படி கேட்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் இனிவரும் காலங்களில் இது போன்ற அசாதாராண விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

 

 

 

தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ.15 லட்சம்- டெலிவிஷன் பரிசு கருணாநிதி வழங்கினார்

சென்னை, டிச. 18-

கத்தார் நாட்டில் நடந்த 15-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழ் நாட்டை சேர்ந்த 4 பேர் பதக்கம் வென்றனர்.

அதில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்று உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பாராட்டும், பரிசும் குவிந்த நிலையில் சாந்தி பாலின சோதனையில் தோல்வி அடைந்ததாக திடீர் சர்ச்சை எழுந்தது. அவருக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் திரும்ப பெறப்படக்கூடும் என்று தகவல் வெளியானது.

இதனால் அவருக்கு தமிழக அரசின் ரூ.15 லட்சம் பரிசு கிடைக்குமா என்ற கேள்விக் குறி எழுந்தது. ஆனால் தங்களுக்கு இது தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை என்று அறிவித்த தமிழக அரசு, இன்று திட்டமிடப்படி சாந்திக்கு ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தோஹாவில் நடைபெற்று முடிந்துள்ள பதினைந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்றுத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு சாதனைகள் படைத்த வீரர்களில், தடகளப் பிரிவில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட் டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சாந்திக்கு 15 லட்சம் ரூபாயும், சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த வீரர் சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயும், வீராங்கனை அஞ்சு பி. ஜார்ஜ் நீளம் தாண்டுதல் போட் டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மைக்கு 15 லட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் ஒற்றையர் போட் டியில் வெண்கலப் பதக் கம் வென்ற வீரர் சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யும் பரிசுத் தொகையாக வழங் கப்படும் எனத் தமிழக அரசினால் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின்படி இன்று தலைமைச் செயலகத்தில், தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைத்த தமிழக விளையாட்டு வீரர்களான சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயையும், அஞ்சு பி. ஜார்ஜ×க்கு 15 லட்சம் ரூபாயையும், சாந்திக்கு 15 லட்ச ரூபாயையும், சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை சாந்தியின் பெற்றோர்கள் தம்வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் தமது மகள் தோஹாவில் நிகழ்த்திய சாதனையைக் காண முடியாமல் போனது எனக்கூறியதன் அடிப்படையில், வீராங்கனை சாந்திக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும் முதல்-அமைச்சர் கருணாநிதி பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வின் போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், விளையாட் டுத் துறை செயலாளர் அம் பேத்கர் ராஜ்குமார், தமிழ் நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் -செயலர் அபூர்வா ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

சாந்திக்கு பரிசு வழங்கியது பற்றி அமைச்சர் மொய்தீன் கான் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீராங்கனை சாந்தி குறித்து வேறுவிதமான செய்திகள் வந்துள்ளன. என்றாலும் ஆசிய விளையாட்டு போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.

சாந்திக்கு மனிதாபிமான அடிப்படையில் முதல்-அமைச்சர் அறிவித்த பரிசை கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் ஆசிய அளவில் பரிசு பெற்று வந்து இருப்பதை நாம் பாராட்டி, வாழ்த்தி, ஊக்குவிக்க வேண்டும். இதை விடுத்து எதற்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேட்கக்கூடாது.

இவ்வாறு அமைச்சர் மொய்தீன்கான் கூறினார்.

 வெள்ளிப்பதக்கம் என்னிடம்தான் உள்ளது: வீராங்கனை சாந்தி பேட்டி

முதல் அமைச்சர் கருணாநிதியிடம் பரிசு பெற்று திரும்பியதும் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- முதல் அமைச்சரை சந்தித்து இருக்கிறீர்களே…?

பதில்:- முதல் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவர் தந்த பரிசையும் பெற்றுக் கொண்டேன்.

கேள்வி:- ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ் நாட்டுக்கு பெருமை தேடி தந்ததாக நேற்று வரை செய்திகள் வந்தன. இன்று உங்கள் பதக்கத்தை திரும்ப பெறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதே?

பதில்:- தோகாவில் நான் வெள்ளிப்பதக்கம் பெற்றது பெருமையாக இருந்தது. அந்த வெள்ளிப்பதக்கம் இப்போதும் கூட என்னிடம்தான் இருக்கிறது. பத்திரிகைகளில் இன்று வந்த செய்திகளை நானும் படித்தேன். ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் எனக்கு வரவில்லை.

இவ்வாறு சாந்தி கூறினார்.

தோகாவில் நடந்த பாலின சோதனை குறித்து சாந்தியிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஆனால் எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.

இது தொடர்பாக இப்போது நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். முன்னதாக பரிசு பெற வந்த சாந்தியிடம் கருணாநிதி அக்கறையுடன் விசாரித்தார். டிவி பெட்டி கொடுத்து இருப்பதாக கூறி உற்சாகப்படுத்தினார். அவருக்கு சாந்தியின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Posted in 800 M, 800M, Allegation, Answers, Asiad, Asian Games, Asian Grand Prix, athletics, championships, Charges, Committee, Doha, Doping, Gender, Interview, IOA, Karunanidhi, Kathakurichi, Manimekelai, Mariam Yusuf Jamal, Operation, Opinion, Puthukottai, Saanthi, Santhi Soundarajan, Santhi Sounthararajan, Santhy, Santhy Soundararajan, Sex, Shaanthi, silver medal, South Korea, Sports, St. Joseph’s College of Engineering, Stripped, Tamil Nadu, Test | 10 Comments »

Right to Information Act ‘in action’ – Officer reprimanded

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006

தகவல் தராத அதிகாரிக்கு அபராதம்

புதுதில்லி, டிச. 11: தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரருக்கு தகவல் தராத தகவல் அதிகாரிக்கு, மத்திய தகவல் ஆணையம் ரூ. 1,750 அபராதம் விதித்தது. மேலும் ஒரு வாரத்துக்குள் தகவல் அளிக்க உத்தரவிட்டது.

“”வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அதற்கான குத்தகை உரிமையை மாற்றித்தரும் பணி எந்த நிலையில் உள்ளது” என்று பவன்குமார் ஜெயின் என்பவர் தகவல் அதிகாரிக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.

ஒரு வாரத்துக்குள் தகவல் தரவேண்டிய அதிகாரி, ஓரிரு மாதங்கள் ஆகியும் தரவில்லை. இதையடுத்து தகவல் கமிஷனரை அணுகிய பவன்குமார், பின்னர் தில்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையத்தில் புகார்மனு அளித்தார்.

இம்மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா தலைமையிலான பெஞ்ச், விண்ணப்பதாரர் கேட்ட தகவல் குறிப்பாகவும், எளிமையாகவும் உள்ளது என்றது.

வேலைப்பளுவே இதற்கு காரணம் என குறிப்பிட்ட தகவல் அதிகாரி மன்னிப்பு கோரியதை அடுத்து, அபராதம் (ரூ. 1,750) மட்டுமே விதிப்பதாக கூறி பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் அத்தொகையை அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிட்டது.

Posted in chief information commissioner, Compensation, DDA, Fines, Information Commission, Law, Order, PIO, Public Information Officer, Right to Information Act, RTI, Salary | Leave a Comment »

Sibu Soren & Sasinath Jha Murder – History, Background & Information

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006

சிபு சோரன் தனிச்செயலர் கொலை செய்யப்பட்டது ஏன்?

புதுதில்லி, டிச. 11: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனின் ஊழல் விவகாரங்கள் உள்ளிட்ட ரகசியங்களை சதிநாத் ஜா தெரிந்துவைத்திருந்ததால் அவரை திட்டமிட்டு கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.

மேலும் ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என சசிநாத் ஜா அடிக்கடி சிபுசோரனை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

சசிநாத் ஜா கொலை வழக்கில் சிபு சோரன் மற்றும் 4 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அண்மையில் தீர்ப்புக் கூறியுள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனின் தனிச் செயலராக இருந்த சசிநாத் ஜா, 1993-ம் ஆண்டு சிறுபான்மை அரசாக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் அரசைக் காப்பாற்ற சிபு சோரன் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களைத் தெரிந்துவைத்திருந்தார்.

1993-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான சிறுபான்மை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நரசிம்மராவ் அரசை காப்பாற்ற சிபுசோரன் கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றார். இதில் ரூ.30 லட்சத்தை அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நௌரோஜி நகர் கிளையில் டெபாசிட் செய்திருந்தார். இந்த தொகையில் ரூ.15 லட்சத்தை சசிநாத் ஜா கேட்டார். ஆனால் இதற்கு உடன்பட சோரன் மறுத்துவிட்டார்.

சசிநாத் ஜாவின் இரு மகள்களான கவிதா, ப்ரீத்தி ஆகிய இருவரையும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவை ஏற்றுக்கொள்ள சிபுசோரன் முன்வந்துள்ளார்.

தனக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற கொலையுண்ட சசி நாத் ஜாவின் சகோதரர் விஜயநாத் ஜாவுக்கு ரூ.4 லட்சம் தர சிபுசோரன் முன்வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

சிபுசோரன், தில்லியில் எமஸ்ஸர்ஸ் சிமெக்ஸ் இன்டர்நேஷனல் என்ற வர்த்தக நிறுவனத்தை முதல் போட்டு தொடங்கினார். இதில் சசிநாத் ஜா, அவரது மனைவி, சுசில் குமார் என்பவர், மகன் ஹேமந்த் ஆகியோர் பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஆனால் 1994-ல் இந்நிறுவனத்திலிருந்து ஜா நீக்கப்பட்டார்.

இதையடுத்து ரகசியங்களை அம்பலப்படுத்தப்போவதாக சிபு சோரனை மிரட்டி சசிநாத் ஜா பணம் பறித்து வந்தார். ஒரு கட்டத்தில் பணம் தர மறுத்த சோரன், அவரை கடத்திச் சென்று தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார் என்று தில்லி நீதிமன்ற கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.ஆர்.கெடியா தனது 191 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Ajay Kumar Mehta, Ashish Thakur, Bihar, CBI, Congress (I), Corruption, Dhaula Kuan, Dumka, Durga Soren, Howrah-Rajdhani Express, Jharkhand, JMM, Nand Kishore Mehta, Narasimha Rao, no-confidence motion, Pashupati Nath Mehta, PV Narasimma Rao, Ranchi, Sasinath Jha, Shailendra Bhattacharya, Shashi Nath Jha, Shibu Soren, Simex International, Sunil Khaware | Leave a Comment »

Gaza Gunmen Kill 3 Sons of Palestinian Fatah Official

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006

பாலஸ்தீன அதிகாரியின் மூன்று சிறுவயது மகன்மார் கொலை

பாலஸ்தீன பாதுகாப்புத்துறை அதிகாரியின் மூன்று சிறுவயது மகன்மார் காசாவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பத்து வயதுக்கும் குறைவான இந்த மூன்று சிறுவர்களும், தமது தந்தையின் காரில் பள்ளிக்கூடத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, மற்றுமொரு வாகனத்தில் வந்தவர்கள், அந்த வாகனத்தின் மீது பல தடவைகள் சுட்டுள்ளனர்.

அந்த வாகனத்தின் ஓட்டுனரும் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை. பாலஸ்தீனக் குழுக்களான பத்தா மற்றும் ஹமாஸ் ஆகியவற்றுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

பாலஸ்தீன அரசாங்கத்துக்கு தற்போது தலைமையேற்றிருக்கும் ஹமாஸ் அமைப்பு இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

அதேவேளை, பாலஸ்தீன அதிபர் மஹமுத் அப்பாஸின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான, பத்தா அமைப்பைச் சேர்ந்த, சாஹிப் எரகத் அவர்கள், இந்த சிறுவர்களின் மரணம், பாலஸ்தீனர்களிடையே பெரும் ஆபத்தான, உள்மோதலுக்கு வழிவகுக்கலாம் என்று கூறியுள்ளார்.

Posted in Balousheh, Fatah, Gaza, Haartez, Hamas, Ismail Haniya, Israel, Mahmoud Abbas, Mahmoud Zahar, Mid-east, Middle East, Muhammad Dahlan, President, Yasir Arafat | Leave a Comment »