Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 1st, 2006

‘ADMK will not accept party-hoppers’ – Jayalalitha

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2006

கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் ஏற்க மாட்டோம்: ஜெயலலிதா

சென்னை, டிச. 1: கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை கூறினார்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன் திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:

மணமக்கள் உருவாக்கி இருக்கும் இந்தக் கூட்டணியின் மூலம் மணமகன் தன்னுடைய குடும்பப் பொறுப்பில் மணமகளுக்கு உரிய பங்கைத் தர வேண்டும். கட்டாயம் அவர் தருவார் என்று நம்புகிறேன். மணமகள், “நான் என்ன சாமியார் மடமா நடத்துகிறேன்?’ என்று கேட்கும் விதமாக மணமகன் நடந்துகொள்ள மாட்டார் என்று எண்ணுகிறேன்.

நம்முடைய இடத்தை நம்மிடம் இருந்து யாரும் பறித்துவிட முடியாது; களவாடி விடவும் முடியாது. ஏனென்றால் பொன்னான எதிர்காலம் நமக்குச் சொந்தமானது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் சிலர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்று கருதலாம். அது வெற்றி அல்ல; பொய்யான தோற்றம். ஜனநாயகத்தின் படுதோல்வியாகும். மக்கள் நம் மீதுதான் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

தேர்தலில் கட்சிக்கு செயற்கையான, தாற்காலிகமான பின்னடைவு ஏற்பட்டதால் சில வேடந்தாங்கல் பறவைகள் வழக்கம் போல் இடம் மாறி வேறு திசை நோக்கிப் பறந்துள்ளன. எப்போதும் போல் அவர்கள் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். இதே வேடந்தாங்கல் பறவைகள் 1996-ல் தேர்தலில் தோல்வி ஏற்பட்டபோது இதைப் போலவே தப்புக் கணக்குப் போட்டன. “இந்த அம்மாவின் கதை முடிந்தது; அதிமுகவுக்கு எதிர்காலமே இல்லை’ என்று தப்புக் கணக்குப் போட்டு, வேறு எங்கேயோ பறந்து சென்றுவிட்டன.

அந்தத் துரோகத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றி பெற்றோம். அப்போது அமைந்த மத்திய அரசில் இடத்தைப் பிடித்தோம்.

அப்போதே நம்மை விட்டுப் பறந்து போயிருந்த வேடந்தாங்கல் பறவைகள் பல திரும்பி வந்தன. தாய்ப் பறவையைப் போல் அவர்களை மன்னித்து மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டேன்.

பின்னர் 2001-ல் மீண்டும் என் தலைமையில் ஆட்சி அமைந்தது. இன்னும் பல வேடந்தாங்கல் பறவைகள் அப்போது திரும்பி வந்து, தங்களை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்தன. மறுபடியும் அவர்களைக் கட்சியில் இணைத்துக்கொண்டேன்.

ஆனால், தற்போது 2006-ல் பின்னடைவைச் சந்தித்ததும் மீண்டும் அதே வேடந்தாங்கல் பறவைகள் சில தங்கள் புத்தியைக் காட்டி, கூட்டைவிட்டு வேறு இடம் தேடி பறந்து போயுள்ளன. அவர்கள் திருந்தவில்லை; வழக்கம் போல் தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.

காலம் மாறும். மீண்டும் அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும். தேசிய அளவிலும் மத்திய அரசில் கட்சி பெரும் பங்கு வகிக்கும்.

அப்போது இந்த வேடந்தாங்கல் பறவைகள் திரும்பி வந்தால், மறுபடியும் மன்னிக்க மாட்டோம்; மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார் ஜெயலலிதா.

Posted in ADMK, AIADMK, Anita Radhakrishnan, Anitha Radhakrishnan, Comedy, Fun, Jayalalitha, Politics, Statements | Leave a Comment »

S Malathi appointed new TN Home Secretary

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2006

தமிழக உள்துறைச் செயலர் பொறுப்பை ஏற்கும் 3-வது பெண்

சென்னை, டிச. 1: தமிழக அரசின் உள்துறைச் செயலர் பதவிக்கு நியமிக்கப்படும் மூன்றாவது பெண் அதிகாரி எஸ். மாலதி (52). அவர் வியாழக்கிழமை புதிய பொறுப்பை ஏற்றார்.

சாந்தா ஷீலா நாயர், ஷீலா ராணி சுங்கத் ஆகியோருக்குப் பிறகு உள்துறைச் செயலர் பதவியை ஏற்கும் 3-வது பெண் மாலதி என்பது குறிப்பிடத்தக்கது.

எத்திராஜ், பச்சையப்பன் கல்லூரி மாணவி: மாலதியின் சொந்த ஊர் தஞ்சாவூர்; சென்னையில் பிறந்தவர். எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்ஸி. (விலங்கியல்) பட்டப் படிப்பு, பச்சையப்பன் கல்லூரியில் எம்.எஸ்ஸி. (விலங்கியல்) பட்ட மேற்படிப்பு படித்தார். 1977-ம் ஆண்டின் “ஐஏஎஸ் அணி’யைச் சேர்ந்தவர். திருச்சி உதவி ஆட்சியராக 1978-ல் பணியைத் தொடங்கினார்.

சென்னை மாநகராட்சி உதவி ஆணையர், வேலூர் மாவட்ட ஆட்சியர் (1987) உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்தவர். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் (1996-2001) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலராக சிறப்பாகப் பணியாற்றினார். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையராகவும் இருந்துள்ளார்.

பஞ்சாயத்து ஆட்சி முறை மூலம் முதன் முதலில் நகராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் எந்தெந்த வரிசையில் அமர வேண்டும், மேயருக்கு எந்த இடம் ஒதுக்க வேண்டும் என்பதற்கு உரிய அரசாணையை வடிவமைத்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. தற்போது சென்னை மாநகர காவல் துறை ஆணையராக லத்திகா சரண் உள்ள நிலையில், காவல் துறையை உள்ளடக்கிய உள்துறைச் செயலர் பதவிக்கு ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted in Commercial Taxes, Home Secretary, IAS, Maalathi, Malathy, Pavan Raina, Santha Sheela Nayar, Sheela Rani Sungath, Special Commissioner, Tamil Nadu, TN | Leave a Comment »

Olympic winners and wannabes gather at Doha for Asian Games

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2006

15 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகிறது

தோஹா ஆசியப் போட்டியின் சின்னம்
தோஹா ஆசியப் போட்டியின் சின்னம்

15 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை டிசம்பர் மாதம் 1 ம் தேதி மேற்காசிய நாடான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் தொடங்குகிறது.

கத்தார் ஆசியாவில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் நாளை அங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் போது , 55 ஆண்டு கால ஆசிய விளையாட்டில் இருந்திராத வகையில் இந்தப் போட்டிகள் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

எண்ணை வளம் நிறைந்த இந்த வளைகுடா நாடு, இந்தப் போட்டிகளுக்காக கிட்டத்தட்ட மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.

இந்தப் போட்டிகளில் இது வரை இருந்திராத அளவில் அதிகப்படியான அளவில் நாடுகள், வீரர்கள் அதிக அளவிலான போட்டிகளிள் பங்கு பெறுவார்கள்.

தோஹா ஆசிய விளையாட்டில், மொத்தம் 39 விளியாட்டுகளில் 46 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறும். போட்டிகளில் 45 நாடுகள் பங்குபெறவுள்ளன. 10,000 க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவார்கள்.

இந்த 15 வது தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் , கோல்ஃப், ஒருங்கிணைந்த நீச்சல், செஸ் உட்பட பல புதிய விளையாட்டுப் போட்டிகள் இடம் பெறுகின்றன.

கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவிற்கு வெளியே எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கலீஃபா அரங்கில் தொடக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளும், தடகள போட்டிகளும் நடைபெறும். இந்த அரங்கம் 50,000 பேர் உட்காரும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பதினைந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டி தோஹாவில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்குகிறது.

வரும் 16-ம்தேதி வரை நடைபெறும் இப் போட்டியில் 45 நாடுகளிலிருந்து 13 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 39 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.

வழக்கம் போல இம்முறையும் அதிகமான பதக்கங்களை சீனா அள்ளிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், புத்தாக்கம் பெற்றுள்ள கொரியா, ஜப்பான் மற்றும் மத்திய மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள சில நாடுகள் இந்தியாவுக்கு கடும் போட்டியளிக்கும் எனத் தெரிகிறது.

இந்தியா: இந்தியாவிலிருந்து, அதிகாரிகள் உள்பட 350-க்கும் அதிகமானோர் 24 வகையான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஆனால், தோஹா போட்டி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பட்டியலில் 165 வீரர், வீராங்கனைகள் மட்டுமே இந்தியாவிலிருந்து பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடகளம்: அதிகபட்சமாக, தட களப் போட்டிகளில் 46 வீரர், வீராங்கனைகள் இந்தியாவிலிருந்து பங்கேற்கின்றனர். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட 13 வீரர், வீராங்கனைகள் இப் போட்டிக்கான இறுதிக் கட்ட பயிற்சியை மஸ்கட்டில் பெற்றுவருகின்றனர். அவர்கள் டிசம்பர் 3-ம் தேதி தோஹா சென்றடைகின்றனர்.

டென்னிஸ் மங்கை சானியா மிர்சாவும் இப் போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

புசான் ஆசிய விளையாட்டில் 11 தங்கம், 12 வெள்ளி உள்பட 35 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது நினைவு கூறத்தக்கது. தடகளத்தில் மட்டும் 7 தங்கங்களை வென்றது.

மத்திய அரசின் ஒப்புதலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுப்பிய பட்டியலில், 9 வகையான விளையாட்டுகளுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை. கூடைப்பந்து, கால்பந்து, டென்பின், செபக்தக்ரா, வாள்வீச்சு, ரக்பி, ஹேண்ட்பால் உள்ளிட்ட விளையாட்டுகள் அதில் அடங்கும். ஆனால், கால்பந்து அணி, அரசின் செலவில்லா ஒப்பந்தத்துடன் தோஹா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடக்க நிகழ்ச்சி: போட்டியின் தொடக்க நிகழ்ச்சி, இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமாக நடத்த தோஹா போட்டி அமைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

தொடக்க நிகழ்ச்சி குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் டேவிட் அட்கின்ஸ் கூறியது:

தொடக்க நிகழ்ச்சிகள் இதுவரை யாரும் காணாத வகையில் 3 மணி 20 நிமிஷங்கள் நடைபெற உள்ளன. இதில் 7 ஆயிரம் கலைஞர்கள் நிகழ்ச்சிக்கு மெருகேற்ற உள்ளனர்.

40 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலீஃபா ஸ்டேடியத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஆசியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலேயே தோஹா போட்டியே சிறப்பாக பேசப்படும் வகையில் நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. (முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவில் 1951-ல் நடைபெற்றது).

சீனா, கொரியா. இந்தியா, உள்ளிட்ட ஒவ்வொரு நாடும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கு கொள்கின்றன. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தென் கொரிய, வட கொரிய வீரர்கள் இணைந்து வருவது, சிறப்பம்சமாக இருக்கும்.

சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியை விட, ஆசிய போட்டியின் தொடக்க நிகழ்ச்சிகள் அனைவரையும் பிரம்மிக்கவைக்கும் என்றார் அட்கின்ஸ்.

Posted in 2006, Asian Games, Beijing, Doha, India, Kabaddi, Kabadi, sepak takraw, Sports | Leave a Comment »