Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 3rd, 2006

Indian navy chief says the country needs to project power across the world’s oceans

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

இந்தியாவைச் சுற்றிலும் சீன கடற்படை தளங்கள்: இந்திய கடற்படை தலைமை தளபதி தகவல்

புதுதில்லி, டிச. 3: இந்தியாவின் அண்டை நாடுகள் உதவியுடன் இந்திய கடற்பகுதியைச் சுற்றிலும் சீனா தனது கடற்படை தளங்களை அமைத்து வருவதாக இந்திய கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

சீனாவின் இத்தகைய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்தியாவின் நலனுக்கு பாதகமாகவே இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

கடற்படை தினத்தையொட்டி, தில்லியில் சனிக்கிழமை நிருபர்களிடம் பேசிய தலைமை தளபதி சுரேஷ் மேத்தா மேலும் கூறியதாவது:

மியான்மர் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகள் உதவியுடன் தனது கடற்படை தளத்தை சீனா அமைத்து வருகிறது. மியான்மர் போன்ற நாடுகள் இப்போது இந்தியாவுக்கு எதிரான நாடுகளாக இல்லை. இருப்பினும் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு எதிராக மாற வாய்ப்பு உண்டு.

பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுடனும் கடற்படை தொடர்பாக சீனா நல்ல உறவை கடைப்பிடித்து வருகிறது. நமது கடற்படை கட்டமைப்பு திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. இதனால் நம்மிடம் உள்ள நுட்ப தகவல்களை அவர்கள் (சீனா) தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

நமது கடற்கரை பகுதியில் சீன நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக்கூடாது. சீன பொருள்களை வாங்காத நாடுகள் அரிது. இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதி வாயிலாக சீனாவுக்கு பொருள்கள் ஏற்றுமதி ஆவதால் அந்நாட்டின் பொருளாதார வளம்தான் மேலும் மேலும் வலுவடையும்.

பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல்கள் வங்கதேசத்துக்கு விற்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் வங்காள விரிகுடாவில் முக்கிய பகுதிகளில் நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவ வேண்டும்.

Posted in Admiral Sureesh Mehta, armed forces, Bangaladesh, Bangladesh, Burma, China, Defense, Eezham, LTTE, Military, Myanmar, Navy, Pakistan, Ports, Sri lanka, Submarines, Suresh Mehta, Suresh Mehtha | Leave a Comment »

Medha Patkar likens Left and Tata Motors Project with Bush and Iraq

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

சமூக சேவகி மேதா பட்கர் கைது

கோல்கத்தா, டிச. 3: மேற்குவங்க மாநிலம், சிங்குரில் டாடா கார் நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்தும் இடத்தைப் பார்வையிட சனிக்கிழமை சென்ற சமூக சேவகி மேதா பட்கர் கைது செய்யப்பட்டார்.

சிங்குரில் கார் நிறுவனத்துக்காக 1000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதாகவும், அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை போலீஸôர் துன்புறுத்துவதாகவும் தகவல்கள் வந்தன.

இதனால், நிலைமையை ஆராய்வதற்காக மேதா பட்கர், மனித உரிமைக்காக போராடும் தீபங்கர் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சிங்குருக்கு சென்றுகொண்டிருந்தனர். காசர்பேரி அருகே சென்றபோது அவர்களை போலீஸôர் தடுத்துநிறுத்தினர்.

இதையும் மீறி செல்ல முயன்ற அவர்களை கைதுசெய்தனர்.

———————————————————————————————-

டாடா கார் ஆலைக்கு எதிர்ப்பு: கிராமத்தினர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

சிங்குர் (மேற்குவங்கம்), டிச. 3: டாடா நிறுவனத்தின் சிறிய கார் தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீது போலீஸôர் ரப்பர் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலம் சிங்குர் பகுதியில் ஜாய்மொல்லா கிராமத்தில் டாடா சிறிய கார் தயாரிப்பு ஆலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் ஆலையைத் தொடங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சனிக்கிழமை முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் சிலர் போலீஸôர் மீது கற்களை வீசினர். அவர்களைக் கலைக்க போலீஸôர் தடியடி நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் பதற்றம் அதிகமாகி மேலும் பலர் அங்கு வரத்தொடங்கினர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸôர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர், ரப்பர் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டனர்.

போலீஸôர் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து அடித்ததாகவும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாகவும் கிராமத்தினர் சிலர் கூறினர். டிஐஜி தலைமையில் பெரும் போலீஸ் படை அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

———————————————————————————————-

மேற்குவங்க பேரவையில் திரிணமூல் வன்முறை: ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ – சோம்நாத் சட்டர்ஜி

கோல்கத்தா, டிச. 3: மேற்கு வங்க சட்டப்பேரவைக்குள் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரங்கேற்றிய வன்முறைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும் என மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் டாடா கார் தொழிற்சாலை அமைக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தயாரித்து விற்பனை செய்ய டாடா முடிவெடுத்துள்ளது. இந்தத் தொழிற்சாலைக்கு மேற்கு வங்க மாநில அரசு நிலம் கையகப்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு விளைநிலத்தை கையகப்படுத்தக் கூடாது என திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தவிர்க்க முடியாமல் சிறிதளவு விளைநிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது என மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் திட்டத்தை மக்கள் ஆதரிப்பதாகவும் விவசாயிகளை தூண்டிவிட்டு குளிர்காய திரிணமூல் காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் மாநில அரசு கூறியது.

இந்நிலையில் வியாழக்கிழமை பேரவைக்குள் அத்துமீறி மம்தா நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவரது கட்சி உறுப்பினர்கள் பயங்கர வன்முறையை அரங்கேற்றினர். மைக்குகளை பிடுங்கி தாக்கினர். நாற்காலிகள் பெஞ்ச்சுகளை உடைத்து நொறுக்கினர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலை நேரில் பார்வையிட வரும்படி மக்களவைத் தலைவருக்கு மேற்கு வங்கப் பேரவைத் தலைவர் ஹாசிம் அப்துல் ஹலீம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சனிக்கிழமை பேரவையை சோம்நாத் சட்டர்ஜி பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:

பேரவைக்குள் நடந்துள்ள தாக்குதல் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். காட்டுமிராண்டித்தனமாக செயல்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றுவது அனுமதிக்கக் கூடியதுதான்.

ஆனால் சம்பந்தப்பட்ட பேரவைகளின் தலைவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்யவேண்டும். பேரவைத் தலைவர்களின் அமைப்பில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம்.

மேற்கு வங்க பேரவைக்கு பெருமைமிகு வரலாறும் பாரம்பரியமும் உண்டு. பேரவை என்பது மக்களுக்கு சொந்தமானது. அரசுக்கு சொந்தமானதல்ல என்பதை தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசுக்கு எதிராக குறைகள் இருக்கலாம். ஆனால் பேரவைமீது தாக்குதல் நடத்தி அதை நியாயப்படுத்த முடியுமா? பேரவையை பாதுகாக்க முடியாவிட்டால் மேற்கு வங்க ஜனநாயகத்தின்மீது கறைபடிந்து விடாதா?

பேரவை நடத்தை விதிகளை கடைப்பிடிக்காத உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் நம்பிக்கையை அவமதிக்கிறார்கள். உறுப்பினர்களின் இத்தகைய நடவடிக்கைகள்தான் சாதாரண கிரிக்கெட் பயிற்சியாளர்கூட மக்கள் பிரதிநிதிகளை நோக்கி குறைகூறும் நிலையை உருவாக்குகிறது என்றார் சோம்நாத்.

Medha Patkar Interview in Kalki (March first week issue)

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க அண்மையில் கன்னியாகுமரிக்கு வந்திருந்த சமூகப் போராளி மேதாபட்கர். நமது கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார்…

நாடு முழுவதும் ஏற்கெனவே எட்டு அணு உலைகள் உள்ள
நிலையில் கூடங்குளத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

‘‘இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கூடங்குளத்தை மட்டுமல்ல, அனைத்து அணு உலை நிலையங்களையும் தடைசெய்ய வேண்டும் என்பதே எங்கள் போராட்டத்தின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக, வரும் மார்ச் 19ஆம் தேதி புதுதில்லி ஜந்தர் மந்திரில் அணு உலை எதிர்ப்பு நடவடிக்கை ஒரு தொடர் போராட்டமாக நடக்க உள்ளது. அதற்கு முன்பான அடையாள எதிர்ப்புதான் கூடங்குளத்தில் நடைபெறுகிறது. அணு ஆயுதங்களும், அணுசக்தியும் நாட்டுக்குப் பெரும் ஆபத்து. ஜார்க்கண்ட் மாநிலம் சடுகுடாவில் யுரேனியம் எடுப்பதால் அங்குள்ள ஆதிவாசி மக்கள் புற்றுநோய், வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் அணு ஆயுத ஒப்பந்தத்தைப் புறக்கணித்து வரும் நிலையில்
அமெரிக்காவுடன் நாம் கையெழுத்துப் போட்டுள்ளது தவறு. அதைத் தவிர்த்து, ‘அணு உலை’ என நினைவுச் சின்னமாக்குவதற்கு ஆவன செய்யலாமே!’’

சிங்கூர் பிரச்னையில் உங்கள் போராட்டமும், அரசின் அணுகுமுறையும் எதிரெதிர் திசைகளில் உள்ளனவே?

‘‘மேற்கு வங்காளத்தின் தொழில் துறை அமைச்சர் நிரூபன்சென்கூட எங்கள் தரப்பு நியாயத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் என்ன செய்வது? அதை அமல்படுத்தும் அதிகாரம் அவரிடம் இல்லையே. காரணம், அரசுக்குப் பெரும் பணக்காரர்களின், ஒப்பந்தக்காரர்களின் பணம் தேர்தல் நேரத்தில் தேவைப்படுகிறதே!

சிங்கூர் பிரச்னையின்போது மேற்கு வங்கக் காவல்துறை என்னை ஒரு சமூக விரோதியைப் போல் நடத்தியது. அன்றைய ஜெயலலிதாவின் காவல்துறையையும், நரேந்திர மோடியின் காவல்துறையையும் விட புத்ததேவின் காவல்துறை நடவடிக்கை மோசமானது. ஒரே வாரத்தில் என்னை மூன்று முறை கைது செய்தார்கள். கொல்கத்தாவுக்கு உள்ளே வரக்கூடாது என்றார்கள். கொல் கத்தாவுக்கு வெளியே என் நண்பர் இல்லத்தில் இருந்தேன். அங்கேயும் வந்து கைது செய்தார்கள். நான் நீதிமன்றத்தை நாடினேன். என்னைக் கைது செய்தது தவறு என்றது நீதிமன்றம். மேற்கு வங்காளத்தில் நான் எங்கும் சுதந்திரமாகச் செல்லலாம் என்றது.

சிங்கூரில் தினம்தோறும் மோதல்கள் ஏற்படுகின்றன. நிலத்தை
விற்றவர்கள், நிலத்தை விற்காதவர்கள் எனப் பிளவுபட்டுக்
கிடக்கிறார்கள். புத்த தேவ் பட்டாச்சாரியாவை அவர் கட்சியினரே சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அவர்களே போராட்டத்தில் ஈடுபட்டது, தொழிற்சங் கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது,
மாநிலத்தில் ஐ.டி. துறை உட்பட பல்வேறு துறைகளை ஸ்தம்பிக்கச் செய்தது எல்லாம் எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான்.’’

இன்றைக்கு, பெரும் நகரம் முதல் சிற்றூர் வரை விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றனவே…

‘‘இது ஒரு சமூகக் கொடுமை. எதிர்கால விளைவு பற்றித் தெரியாமல் நடக்கும் அக்கிரமம். நம்முடைய விவசாய விளைநிலங்கள் அரசின், அதிகாரவர்க்கத்தின், ஒப்பந்தக்காரர்களின் வேட்டைக் காடுகளாக மாறி வருகின்றன. ஒரு விவசாயியின் விவசாயத்தில் முதலீடு அதிகம். ஆனால், விளைபொருட்களுக்கு அதற்கான விலை இல்லை. கொள்ளை வியாபாரிகள் விவசாயிகளின் வறுமைச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களுடைய நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கிவிடுகின்றனர். விவசாயியின் ஏழ்மை நிலையைப் போக்க வேண்டிய அரசு, அதிகாரத் தரகர்களுக்கு ஆதரவாகக் செயல்படுகிறது.’’

Posted in Agriculture, Automotive, Becharam Manna, Cars, Communism, Communist, Communist parties, Communists, CPI, CPI (M), CPI(M), Dankuni, Factory, Farming, Farmlands, Hooghly, Industry, Interview, Kalki, Koodangulam, Koodankulam, Mamata Banerjee, Medha Patkar, Narmada Bachao Andolan, Nuclear, peasants, Rabindranath Bhattacharya, Singur, Singur Krishijami Bachao Committee, Somnath, Somnath Chatterjee, Tata Motors Project, TMC, Trinamool Congress, West Bengal | Leave a Comment »

New scheme from Tamil Nadu Government named after Dhayalu Ammal

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

தயாளுஅம்மாள் – கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு திட்டம்: குறைந்த செலவில் சிகிச்சை

கரூர், டிச. 3: கரூரில், தயாளுஅம்மாள் கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்புத் திட்டம் எனும் புதிய திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்தார் கே.சி. பழனிசாமி எம்பி.

இது தொடர்பாக அவர் கூறியது:

உதயம் அறக்கட்டளை மற்றும் ஜி.சி. மருத்துவமனை ஆகியவை இத்திட்டத்தைச் செயலாக்கும். ஏழை, நடுத்தர கர்ப்பிணிப் பெண்கள் 4-வது மாதத்திலிருந்து உதயம் அறக்கட்டளையில் ரூ. 2000 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். இதில், தனிப்பட்ட எனது பங்களிப்பு ரூ. 500. எனவே, பெண்கள் ரூ. 1,500 செலுத்தினால் போதுமானது.

இவர்களுக்கு 6-வது மாதம் முதல், ஸ்கேன், பரிசோதனை, சிகிச்சை என அனைத்தும் இலவசமாக கிடைக்கும். சுகப்பிரசவம் எனில் இத்தொகையே போதுமானது.

அறுவை சிகிச்சை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதற்கு ரூ. 5000 ஆயிரம் செலவாகும். இதில், ஏற்கெனவே பெற்ற 1,500 போக, கூடுதலாக ரூ. 3,500 செலுத்த வேண்டும். இந்த ரூ. 3,500லும் எனது சொந்த தொகை ரூ. 1000 பங்களிப்பாக அளிக்கப்படும் என்றார்.

Posted in abuse, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dhayaalu Ammaal, Dhayalu Ammal, Government, Govt, Karur, KC Pazhanisami, misuse, Naming, Palanichaamy, Pazhanisaamy, Pregnancy, Pregnant Ladies Protection, Scheme, Spouse, Tamil Nadu, TN, Wife | Leave a Comment »

Manipur capital Imphal shutsdown, as PM arrives

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

மன்மோகன்சிங் வருகையை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு

இம்பால், டிச.3- பிரதமர் மன்மோகன்சிங், மணிப்பூர் மாநிலத்தில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அவருடைய வருகையை ஒட்டி, இரு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

`திபாய்முக்’ அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழு சார்பிலும், மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஆயுத சட்டம் அமலில் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, புரட்சிகர மக்கள் முன்னணி என்ற தீவிரவாத அமைப்பு சார்பிலும் இந்த போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டம் காரணமாக, மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. வாகனங்கள் ஓடாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கான வாகன போக்குவரத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டது.

Posted in ACATP, Action Committee Against Tipaimukh Project, Armed Forces Act, Bandh, Churachandpur, Dam, Impala, Imphal, Manipur, Manmohan Singh, PM, Prime Minister, Protest, Revolutionary People's Front, RPF, Strike, Tipaimukh Dam | Leave a Comment »

Rajini – ‘I thought Vivek was Brahmin!’

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

அறிவுக்கும் ஜாதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற “சொல்லி அடிப்பேன்‘ பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) இசையமைப்பாளர் தேவா, இயக்குநர்கள் ஷங்கர், கே.பாலசந்தர், ரஜினிகாந்த், நடிகர் விவேக், பட இயக்குநர் ராம்கி ராமகிருஷ்ணன், நடிகை சாயாசிங், தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்

சென்னை, டிச. 3: ஒரு மனிதனுடைய அறிவுத் திறனுக்கும் அவருடைய ஜாதிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நகைச்சுவை நடிகர் விவேக் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம் “சொல்லி அடிப்பேன்’. இந்தப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமையேற்ற இவ்விழாவில் படப் பாடலின் முதல் கேசட்டை இயக்குநர் கே.பாலசந்தர் வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். அதேபோல் முதல் ஆடியோ சி.டி.யை ரஜினிகாந்த் வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:

நான் “சிவாஜி’ படம் ரிலீஸôன பிறகுதான் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் விவேக் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் இவ்விழாவில் கலந்துகொண்டேன்.

ஜாதியும், அறிவுத்திறனும்:

விவேக் பெரிய அறிவாளி. அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. அனைத்துத் துறைகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார். எனக்கு ஜாதி மீது என்றைக்கும் நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தால்தான் சொந்த ஜாதியினர்கூட மதிப்பார்கள். அதேபோல இந்த இந்த ஜாதிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு தவறான நம்பிக்கை நிலவுகிறது. அது தவறு.

விவேக்கின் அறிவுத்திறன், செயல்பாடுகளைப் பார்த்து அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் அவர் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. அதனால் ஒருவருடைய அறிவுத் திறனுக்கும் அவர் சார்ந்திருக்கும் ஜாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

புகழ் ஒரு சுமை:

புகழ் என்பது நம்முடைய தலையில் வைக்கப்பட்டிருக்கும் 1000 கிலோ எடையுள்ள பாறை போன்றது. அதைச் சரியாக பேலன்ஸ் செய்தால்தான் நீடிக்கும். இல்லாவிட்டால் கீழே சரிந்து நமக்கு பாதிப்பை உண்டாக்கி விடும். அதை விவேக் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் காமெடியனாகவும் நடித்தால்தான் எங்கள் வண்டியும் ஓடும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் இயக்குநர்கள் கே.பாலசந்தர், ஷங்கர், தரணி, ராம்கி ராமகிருஷ்ணன், நடிகர் தனுஷ், நடிகை சாயாசிங், இசையமைப்பாளர் தேவா, தயாரிப்பாளர்கள் கிருஷ்ணகாந்த், கேயார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

From Maalaimalar.com:

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

டைரக்டர் பாலசந்தர் படத்தில் நடித்தபோது பயந்தேன். ஷாட் ஓ.கே. ஆகுமா என்கிற தவிப்பு எனக்குள் இருக்கும். அவர் படங்களில் நடித்து 30 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சிவாஜியில் நடிக்கும்போதும் அதே பயம் இருக்கிறது. ஷாட் ஓ.கே. ஆகுமா, ஷங்கர் ஏத்துக்கிட்டாரா என்றெல்லாம் யோசிக்கிறேன்.

இதில் விவேக்கும் என்னோடு நடிக்கிறார். சிவாஜி ரிலீசுக்கு பிறகுதான் விழாக்களில் கலந்துக்கணும் என்று முடிவு எடுத்திருந்தேன். விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். சில விஷயங்களுக்கு விதிவிலக்கு உண்டு. இந்த விழாவையும் விதிவிலக்கா கருதி கலந்துக்க சம்மதித்தேன்.

`வீரா‘ படத்தில் விவேக் என்னோடு நடித்தார். அப்ப அவர் சின்ன பையன் மாதிரி இருந்தார். வசனம் நல்லா பேசினார். திறமைசாலி. அதன் பிறகு இப்போது `சிவாஜி’யில் முழு படத்திலும் விவேக்குடன் நடிக்கிறேன். எனக்கு ஷாட் முடிந்ததும் விவேக்குக்கிட்டே போய் உட்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பேன். அவர் மிகப்பெரிய அறிவாளி. விஞ்ஞானம், கம்ப்ïட்டர், வரலாறு, புவியியல் என்று எல்லாவற்றையும் தெரிஞ்சி வச்சிருக்கார்.

எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க.

இந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. பாலசந்தர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். எல்லார்கிட்டேயும் நல்லா பழகுவார்.

விவேக்குடன் சூட்டிங் போகும்போது அறிவாளியா பேசுவார். லைப்ரரி, புத்தகங்கள் என்றுதான் இருப்பார். சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது. அதன் பிறகுதான் தேவர் என்று புரிந்தது.

புகழின் உச்சியில் இருந்தாலும் ஒரே மாதிரி இருக்கணும். புகழ் ஆயிரம் கிலோ பாறை மாதிரி. அதை `பேலன்ஸ்’ ஆக வச்சிக்கணும். கொஞ்சம் ஆடினால் காலில் விழுந்து விடும். விவேக் கதாநாயகனாக நடித்த இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் டைரக்டர் ஷங்கர் பேசியதாவது:-

விவேக்கை வைத்து காமெடி படம் எடுக்க நீண்ட நான் முயன்றேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது சிவாஜியில் முழு நீள காமெடியனாக வருகிறார். காமெடியில் அவர் கலக்கி உள்ளார். அவரோடு இன் னொருத்தரும் காமெடியில் கலக்கி உள்ளார்.

அவர்தான் ரஜினி. சினிமாவுக்கு காமெடி முக்கியம். அது இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும்.

டைரக்டர் பாலசந்தர் பேசியதாவது:-

விவேக்கை முக்கிய கேரக்டராக வைத்து படமெடுக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்குள் `சொல்லி அடிப்பேன்’ படத்தில் கதாநாயகனாகி விட்டார். ஹீரோ ஆனதால் காலரை தூக்கி விட்டுக் கொண்டு போகக்கூடாது. எல்லாவற்றையும் சமமாக பாவிக்க வேண்டும். விவேக் சிறந்த அறிவாளி.

இவ்வாறு அவர் பேசினார்.

Posted in Assumption, Balachander, Caste, Chaaya Singh, KB, Quote, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shivaji, Sivaji, Sivaji the Boss, Solli Adippen, Speech, Superstar, Talk, Veera, Vivek | 12 Comments »

Cuba’s Fidel Castro nowhere to be seen on 50th anniversary of rebel landing

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோஜுலை மாதத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல்நலன் குறித்து சந்தேகம்

கியூபாவின் தலைநகர் ஹவானாவில் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ அணிவகுப்பு ஒன்று, அந்நாட்டின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இல்லாமல் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் உடல்நலன் குறித்து மேலும் பல ஊகங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஜுலை மாதத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு பாரிய அறுவை சிகிச்சை நடந்த பின்னர், தற்காலிகமாக அதிகாரத்தினை ஏற்று இருக்கும் அதிபரின் சகோதரர் ராவூல் காஸ்ட்ரோ, பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

தன்னுடைய உரையில் பல தசாப்த காலங்களாக மோதலில் இருக்கும் அமெரிக்கர்களுடன் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக ராவூல் காஸ்ட்ரோ கூறினார்.

எண்பது வயதான ஃபிடல் காஸ்ட்ரோ அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளி உலகத்தின் பார்வையில் தென்படவில்லை. எனினும் அவர் நன்றாக குணமடைந்து வருவதாக கியூபாவின் அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

நாட்டை விட்டு வெளியேறி இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ, மீண்டும் நாட்டிற்குள் திரும்பி புரட்சியினை முன்னின்று நடத்திய ஐம்பதாவது வருடத்தினை குறிக்கும் வகையில் இன்றைய அணிவகுப்பு நடைபெற்றது. இந்த புரட்சி ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து ஃபிடல் காஸ்ட்ரோ அதிகாரத்தில் அமர்ந்தார்.

Posted in America, Bolivia, Communism, Cuba, Daniel Ortega, Democracy, Dictator, Evo Morales, Fidel Castro, Gabriel Garcia Marquez, Haiti, Havana, Hereditary, Military, Nicaragua, Nobel, Raul Castro, Rene Preval, Revolutionary Armed Forces | 1 Comment »

Bridge collapses on train in Bhagalpur (Bihar), 47 killed

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

பீகார் மாநிலத்தில் ரயில் மீது மேம்பாலம் இடிந்து வீழ்ந்து பலர் பலி

E – Tamil : ஈ – தமிழ் – பிண அரசியல்

விபத்து நடைபெற்ற இடம்
விபத்து நடைபெற்ற இடம்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் வைத்து, ரயிலின் மீது பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் அகப்பட்டுக்கொண்ட பல பயணிகளை மீட்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

140 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் ஒன்று, பஹல்பூர் ரயில்வே நிலையத்தில், ரயில் ஒன்றின் பெட்டியின் மீது விழுந்ததில் அந்தப் பெட்டி முழுமையாக இடிபாடுகளால் மூடப்பட்டதாக இந்தியாவின் கிழக்குப் பிராந்திய ரயில்வேயின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை வேளையில் இந்த விபத்து நிகழ்ந்த போது அந்தப் பெட்டியில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக இந்திய உள்ளூர் ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன.

குறைந்தது 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

Posted in Accident, Bhagalpur, Bihar, Bridge, dead, Fatal, Howrah-Jamalpur Express, Lalu prasad Yadav, Nitish Kumar, Railways, Train, ulta pul | Leave a Comment »