Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rehabilitation’ Category

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »

Rehabilitation scheme for human waste cleaners – Dalit development schemes

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

மனிதக் கழிவுகளை சுத்திகரிப்போருக்கு 2009 ல் மறுவாழ்வு திட்டம் அறிமுகம்: மத்திய அரசு முடிவு

புது தில்லி, ஜன. 31:மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. 2009 ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் நிலையை மாற்றவேண்டும் என இடதுசாரிக்கட்சிகள் கோரிவந்தன. இதையடுத்து அவர்களுடைய நலனுக்காக மத்திய அரசு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு ஒரு ஆண்டு சுயதொழில் பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தொழில் துவங்க ரூ. 5 லட்சம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு, உரிய வங்கிகள் மூலம் மத்திய அரசு மானியம் அளிக்கும்.

மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி, நாடு முழுவதும் தற்போது 7 லட்சத்து 70 ஆயிரத்து 338 சுத்திகரிப்பு தொழிலாளிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களது குடும்பத்தினர் மற்றும் இவர்களைச் சார்ந்தோருடன் மொத்தம் 40 லட்சம் பேர் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய சஃபாய் கர்மாச்சாரி நிதி மற்றும் வளர்ச்சி வங்கி அல்லது குறிப்பிட்ட உயர்நிலை நிறுவனங்கள் மூலம் மானியங்கள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் அதேவேளையில் நாடுமுழுவதும் உலர் கழிவறைகள் ஏற்படுத்தப்படும். மத்திய வீட்டுவசதித்துறை மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம், மாநில நகராட்சி அமைப்புகள் ஊராட்சி அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இவை ஏற்படுத்தப்படும்.

இவர்களும் மனிதர்கள்தான்

நாட்டில் மனிதக் கழிவை மனிதனே எடுத்துச் செல்லும் கொடுமையை முற்றிலுமாக அகற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பெரும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுமார் 8 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இத்துடன் இவர்களை நம்பியுள்ள சுமார் 40 லட்சம் பேருக்குப் பலன் அளிக்கும் வகையில் இத் திட்டம் தீட்டப்படுகிறது.

இதன்படி இத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் தொடங்க மானியத்துடன் சலுகை வட்டியில் கடனுதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் தேர்வு செய்யும் தொழிலைப் பொருத்து குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். சுயஉதவிக் குழுக்கள் அல்லது என்ஜிஓவினர் மூலம் இதை வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய முறையை அகற்ற 1992ல் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆந்திரம், கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரம், திரிபுரா, மேற்குவங்க மாநிலங்களில் இத்தகைய தொழிலாளர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ. 600 கோடி செலவிட்டும் சில ஆயிரம் பேரே இதில் பலன் அடைந்தனர்.

இத்திட்டம் சரிவர அமல்படுத்தப்படாததால் 2003ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. பல மாநிலங்களில் குறிப்பாக ரயில்வேயில் இது அதிகம் காணப்படுகிறது. இதை அகற்ற மத்திய, மாநில அரசுகள் கால வரம்புடன் கூடிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரில் 92 சதவீதம் பேர் தலித்துகளில் ஒரு பிரிவினர் என்றும் குறிப்பிடப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சரியான முறையில் கணக்கெடுத்து, அவர்களின் மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

முன்னதாக, 1993ல் இந்த முறைக்குத் தடைவிதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி இத்தகைய தொழிலில் யாரையாவது ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்டவருக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரை மாற்றுத் தொழிலில் ஈடுபடுத்த ரூ.58 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத்தொழிலில் அவர்கள் தொடருவதற்கு வறுமையும் சமூக நடைமுறைகளும்தான் காரணம். பண்டைக்காலத்தில் நவீன கழிப்பறை வசதிகள் இல்லாததால் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய நவீன சூழ்நிலையிலும் இம்முறை தொடர்வது கவலை அளிக்கிறது.

நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது. அங்கு குறைந்த செலவில் மானியத்துடன் கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தனி கழிப்பறை ஏற்படுத்திக் கொள்ள வசதி இல்லாதோர்க்கு பொதுக் கழிப்பறைகள் கட்டித் தரப்படுகிறது. ஆனால் அவை சரிவர பராமரிக்கப்படுவதில்லை. அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

இதன் மூலம் கிராமங்களிலும் தூய்மையை ஏற்படுத்த முடியும். மேலும் இத்தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. இதைத் தடுக்க முறையான மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இத்திட்டம் வெற்றி பெற அரசுகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Posted in 2009, Apartheid, Clean, Cleaners, Cleanup, Dalit, Dalit Human Rights, Development, dry latrines, Government, human excrement, Human Rights, Human Rights Watch, human waste, Loans, Manual Scavengers, Opportunities, Rehabilitation, Restroom, safai karamcharis, Safai Karmachari Andolan, scavengers, Schemes, Self employment | 1 Comment »

Srilankan Eezham Refugees write Exam in Tamil Nadu

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

கல்வி ஆயுதத்துடன் வாழ்க்கையை வெல்லும் அகதிகள்

சென்னையில் திங்கள்கிழமை தேர்வு எழுதும் இலங்கை அகதி மாணவிக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்குகிறார் பள்ளிக் கல்விச் செயலர் குற்றாலிங்கம். உடன் (இடமிருந்து) இலங்கைத் துணைத் தூதர் பி.எம். அம்ஸô, இலங்கைத் தேர்வு ஆணையர் சனத் பூஜித, ஈழ ஏதிலியர் கழகப் பொருளாளர் சந்திரஹாசன். (வலது படம்) தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள்.

சென்னை, டிச. 10: குண்டு சத்தம். இலங்கை ராணுவத் தாக்குதல், போராளிகளுடன் இலங்கைப் படைகள் மோதல், ரணகளம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கைகளில் பிடித்துக் கொண்டு நகர்ந்த பள்ளி மாணவர்கள் புதிய போர்க்களத்தில் இறங்குகிறார்கள். அங்கே ஆயுதமாக இருப்பது பேனா.

களமாக இருப்பது தேர்வுக் களம்.

உள்நாட்டுப் போரினால், படிப்பும் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி தமிழகம் வந்துள்ள அந்த மாணவர்கள் சென்னையில் இருந்தபடியே “ஓ’ லெவல் எனப்படும் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதப் போகிறார்கள்.

சாந்தோம் ரோசரி சர்ச் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் குற்றாலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் சனிக்கிழமை வழங்கினார்.

இலங்கை மாணவர்கள் தங்களது நாட்டுப் பொதுத் தேர்வை வெளிநாட்டில் எழுதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள 98 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இலங்கையில் நடைபெறும் மோதல் காரணமாக அங்குள்ள மாணவர்களால் பள்ளிப் படிப்பை முடிக்க இயலவில்லை. பொதுத் தேர்வும் எழுத இயலாது.

இந்நிலையில், அவர்களுக்குக் கை கொடுக்க முன்வந்தது எஸ்.சி. சந்திரஹாசன் தலைமையிலான ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்.

தமிழகத்தில் உள்ள அகதிகள் தேர்வு எழுத அனுமதிக்கும்படி சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் பி.எம். அம்ஸô அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சயவிடம் அனுமதி கேட்டுப் பெற்றார்.

அதையடுத்து, அந்நாட்டிலிருந்து 6 ஆசிரியர்கள் தமிழகம் வந்தனர். அவர்களுடன் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத் தொண்டர்களும் இணைந்து பயிற்சி அளித்தனர். 24 ஆசிரியர்கள் இங்கு அவர்கள் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளை 45 நாளில் நடத்தி முடித்தனர். இத் தேர்வுக்கான புத்தகங்களை இலங்கை அரசு அனுப்பியுள்ளது.

இவர்களுக்கான தேர்வு டிசம்பர் 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், சமூகவியலும் வரலாறும் ஆகிய முக்கிய பாடங்களும் சுகாதாரம், சமயங்கள், கலைப் பாடங்கள், சுருக்கெழுத்து ஆகிய விருப்பப் பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

“”தேர்வுக்கு நன்றாகத் தயாராகியுள்ளதால், தேர்ச்சி பெறுவேன்” என்றார் ஒரு மாணவி. அடுத்த கட்டமாக “ஏ லெவல்’ (12-ம்) வகுப்புத் தேர்வையும் முடித்துவிட்டு, உயர்கல்வியைத் தொடர விருப்பம் என்று தெரிவித்தார் சுரேஷினி என்ற மாணவி.

இலங்கைத் தேர்வு ஆணையர்

“”இலங்கையில் பள்ளி இறுதிப் பொதுத் தேர்வுகள் டிசம்பர் மாதம்தான் நடைபெறும். இத்தேர்வு ஒரே சமயத்தில் நடைபெறும். இந்த ஆண்டு 5,25,000 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

இவர்களில் சென்னையில் 98 பேர் எழுதுகிறார்கள்.

அவர்களில் 63 பேர் மாணவிகள்.

இத் தேர்வுக்கான முடிவு 3 மாதத்தில் வெளியாகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 சதவீதம் ஆகும். தேர்வு விடைத்தாளை மறுமதிப்பீடு, மறு ஆய்வு செய்வதற்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்றார் இலங்கை தேர்வு ஆணையர் பி.சனத் பூஜித.

இத் தேர்வை முடிப்பவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வை இலங்கையில் தொடரலாம்.

இலங்கை திரிகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பல்வேறு இடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இத் தேர்வை எழுதுகிறார்கள்.

“”இலங்கை அகதிகள் தமிழகத்தில் மாநில அரசுக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து படிக்க அனைத்து ஏற்பாடுகளும் எளிமையாக உள்ளன. தாங்கள் அகதிகள் என்று சொன்னால் உடனடியாக அவர்களைப் பள்ளியில் சேர்த்து, படிப்புச் சொல்லித் தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் குற்றாலிங்கம் தெரிவித்தார்.

Posted in +2, Chennai, Eelam, Eezham, Exams, Higher Secondary, HSS, Madras, Refugees, Rehabilitation, School, Sri lanka, Srilanka, Tamil Nadu, Tamils, Thamizh | Leave a Comment »