Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Theater King Harold Pinter: Indira Parthasarathy

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2009

நாடகக்காரர்களின் நாடகக்காரர்
_ இந்திரா பார்த்தசாரதி

அண்மையில் கால மான, பிரித்தானிய நாடக ஆசிரியராக உலகம் அறிந்த ஹெரால்ட் பின்டர், ஒரு பன்முகச் சாதனையாளர். கவிஞர், நாவலா ஆசிரியர், கட்டுரையாளர், திஇரைக்கதை உரையாடல் படைப்பாளர், இடதுஇசாரி முற்போக்குச் சிந்தஇனையாளர். அவரை ஒரு தனிமனித இயஇஇக்கம் என்று விமர்சகர்கள் சித்இஇதிரிப்பது மிகவும் பொருந்தும். ஹெஇரால்ட் பின்டர், தொடக்கத்தில் கவிஇதைகள் எழுதினார்; என்றாலும், 1957இல் டேவிட் பேரன் (David Baron) என்ற பெயரில் எழுதிய ‘அறை’ (The Room) நாடகம்தான் அவரைக் கலை உலகில் நாடகப் படைப்பாளராக அறிமுஇகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் 29 நாடகங்களும் 22 திரைக் கதைகளும் பல தொலைக்காட்சி நாடஇகங்களும், ஒரு நாவலும் எழுதினார்.

ஹெரால்ட் பின்டர் நாடகங்களில் முக்கியமானவை,‘பிறந்த நாள் விருந்து’ (The Birthday Party), ‘வீட்டைப் பார்த்துக் கொள்ளுகின்றவர்’ (Caretaker), ‘சொந்தவீடு வருகை’ ( The Home Coming), ‘துரோகம்’ (Betrayal), ‘அமைதி’ (Silence), ‘Precisely, One for the Road’, ‘பழங்காலம்’ (Old Times) என்பன. இவற்றில் முதல் நான்கும் திரைப்இபடங்களாக ஆக்கப்பட்ட போது, அவற்றிற்குத் திரைக்கதையும் உரையாஇஇஇஇடல்களும் பின்டர் எழுதினார். ‘தம்முடைய நாடகத்துக்குத் திரைக்இகதைஇயும் உரையாடலும் எழுதி வெற்இறி அடைந்த வெகு சிலரில், பின்டர் ஒருவர்’ என்று ‘லண்டன் டைம்ஸ்’ எழுதியது. அமெரிக்க நாடக ஆசிரியர் டென்னிஸி வில்இலியம்ஸ், மிகப் பிற்காலத்தில், அதாவது, டென்னிஸியின் நாடகங்கள் மேடையேறி திரைப்படங்களாக ஆக்கப்பட்டு, அவை வெற்றி அடைந்த பிறகு, தாம் எழுதிய மூல வடிவம் அப்படியே காட்சி வடிவங்களாக ஆக்கப்இபட்டிருந்தால், அவை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று குறைப்பட்டுக் கொண்டார். அவர் இவ்வாறு தாக்குவதற்கு இலக்காக இருந்தவர், அந்நாடகங்களின் திரைப்இபடங்களின் இயக்குநராக இருந்த எலியா காஸான்.

பின்டர் தம்முடைய நாடகங்களுக்கு மட்டுமன்றி, பிறருடைய ஆக்கங்இகளுக்கும் திரைக்கதையும் உரைஇயாடலும் எழுதியிருக்கிறார். ஜான் ஃபௌல்ஸ் (John Fowles) எழுதிய ‘The French Lieutenant’s Woman’, காஃப்காவின் ‘The Trial’, Proust எழுதிய ‘Rememberance of things past’ போன்ற செவ்வியல் படைப்புகளுக்கும் திரைக்இகதை அமைத்திருக்கிறார். ‘Proust’ நாவலுக்குத் திரைவடிவம் கொடுத்தது போல் சவாலான விஷஇயம் வேறு எதுவும் இருக்கமுடியாது’ என்று பின்டர் ஒரு நேர்இகாணலில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்இலாஇவிட்டாலும், சாம்யுவல் பெக்கெட்டின் ‘Krapps Last tapes’ என்ற நாடகத் தனி மொழிக்குத் திரைஇஇவடிவம் கொடுத்தது இதைவிட பெரிய சவாலாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

பின்டரின் தந்தை வழி பெற்இறோஇர்இகள் போலிஷ் யூதர்கள். இரண்டாம் உலகப் போரின் போது, பின்டர் சிறுஇஇஇவனாக இருந்த காலத்தில், பல சமயங்களில் தனித்து இருக்கும்படி நேர்ந்இஇதிருக்கிறது. பள்ளிக்கூடத்திலும் அவர் மற்ற சிறுவர்களோடு நெருங்கிப் பழகியதில்லை. இவருடைய நாடகஇங்இகளில் இதன் பாதிப்பை நாம் அதிகம் காணமுடிகின்றது. தனிமை, ஏக்கம், அடங்கிய சீற்றம், சந்தேகம், தீர்மானித்த ஒரு தெளிவின்மை, பாதுகாப்பின்மை போன்ற பல உணர்இவுகளால் பாதிக்இகப்பட்டவர்கள் இவருடைய நாடக மாந்தர்கள். இவருடைய நாடகங்களை வகைஇசெய்வது மிகக் கடினம். ‘நாடக சிரியர்களின் நாடக சிரியர் ஹெரால்ட் பின்டர்’ என்பார் டேவிட் தாம்ஸன். மௌனத்தை இவர் தம் நாடகத்தில் ஒரு சக்தி வாய்ந்த நாடகப் பாத்திரமாகக் கையாளுகிறார். அதாவது, இரண்டு கதாபாத்திரங்கள் உரையாடும்போது, ஒரு பாத்திஇரத்தின் சொல்லாடல் மற்றைய பாத்திஇரத்தின் மனத்தில் ஏற்படுத்தும் சிந்தஇனை அலைகள் காரணமாக, சிந்தித்துப் பதில் கூறுவதற்கான இடைவெளியையும் அம்மௌனத்தின் சுமையையும், நாடகம் படிக்கின்றவர்களும் பார்க்கிஇன்இறவர்களும் உணரும்படியாக நாடஇகத்தை அமைப்பது அவருக்குக் கை வந்த கலை. இது சாதாரண வாசகனுக்கோ, அல்லது பார்வையாளருக்கோ சாத்இதியமன்று. அதனால்தான் இவரை, ‘நாடக சிரியர்களின் நாடக ஆசிரியர்’ என்றார் தாம்ஸன்.

‘என் ஆழ்மனத்துப் படிமங்கள்தாம் என் கதை மாந்தர்கள். அவர்கள் எனக்கு மட்டுமல்ல, அவர்களுக்கே அந்நியர்கள். அவர்களை அவர்இகளின் உரையாடல்கள் மூலம் புரிஇந்இதுஇகொள்ள முடியாது. அவர்கள் உரைஇயாடல்இஇகளுக்கிடையே காக்கும் மௌனம் மூலந்தான் அவர்களைப் புரிந்துகொள்ள முடியும்,’ என்று ஹெரால்ட் பின்டர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இம்மௌனம் மன இறுக்கத்தை அதிகரிக்கக் கூடியது. சொற்சிக்கனம்; சொஇஇல்இஇலிச் சொல்லி உறைந்து பொருஇளி ஆழந்துபோன வார்த்தைகளை திரு ம்பத் திரும்பச் சொல்லுதல்; அர்த்தஇமேதுமில்லாததுபோல் தோன்றும் சைகைகள் ஆகியவற்றின் மூலம் உளவியல் பாங்கான சூழ்இநிலையை உருவாக்குவதுதான் இவர் நாடகங்களின் இயல்பு. தேர்ந்த நடிகர்களும் இயக்குநருமின்றி இவர் நாடகங்களை மேடை ஏற்றுவது கடினம்.

பின்டர் நாடகங்களில் மிகவும் முக்கியமான ‘The Home Coming’, உளவியல் ரீதியாக, பாலுணர்வையும் வன்முறையையும் பூடகமான முறையில் நாடகக் கருவாகக் கொண்டது. ஐந்து ஆண்களையும் ஒரு பெண்ணையும் கதாபாத்திரங்களாகக் கொண்ட இந்நாடகத்தில், பாலுணர்வுச் சொற்சிலம்பாட்டம் நிகழ்கிறது. எழுபது வயது தந்தை, அவர் சகோதரர், மூன்று பிள்ளைகள், அவர்களில் ஒருவனுக்கு அமெரிக்க மனைவி. டெட்டி என்கிற அவனும் அவன் மனைவியும் அமெரிக்காவிலிருந்து, வடக்கு இங்கிலாந்துக்கு வந்திஇருஇக்இகிறார்கள், அவர்களுடைய மூன்று குழந்தைகளுடன். பெண்ணே இல்லாத வீட்டில் ஒரு பெண்ணின் வருகை ஒரு புதிய சூழ்இநிலையைத் தோற்றுவிக்கிறது. ரூத், டெட்டி திருமணம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்று தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ரூத், பாலுணர்வு விளையாட்டின் மூலம் (emotional and sexual games) தன் அடையாளத்தை உணர்ந்து அவ்வீட்டின் அதிகாரஇத்தைக் கைப்பற்றுகிறாள். அமெஇரிக்இகப் பெண்ணாகிய அவள் அமெரிக்கா திரும்பவில்லை. டெட்டி மூன்று குழந்தைகளுடன் அமெரிக்கா திரும்புகிறான். “அந்த வீட்டின், ‘Oedipal’ தேவை பூர்த்தியாகிறது” என்கிறார் ஜான் லாஹர் என்ற விமர்சகர்.

‘துரோகம்’ நாடகத்தில் சொல்லப்படுகின்ற நிகழ்வுகளின் காலவரிசை தலைகீழாக இருக்கிறது. அண்மைக் காலத்திய நிகழ்வு முதல் காட்சியில் சொஇல்இலப்படுகிறது. பிறகு தொடர்இகின்ற காட்சிகளில், பின்னோக்கிய நிகழ்இவுகள் பின்னோக்கியக் காலக்கணக்கில் வரிசையாகத் தொடரும். இறுதிக் காட்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி சொல்இலப்படுகின்றது. ராபர்ட்டும் எம்இமாஇஇவும் இளம் தம்பதியர். ஜெர்ரி அவர்கள் திருமணத்தில், ராபர்ட்டின் மாப்பிள்ளைத் தோழன். அவன் மணஇஇமானவன். ஆனால், அவனுக்கும் எம்மாவுக்கும் பிணைப்பு ஏற்பட்டுஇவிடுஇகின்றது. அவன் ஒரு தனி விடுதி எடுத்து அங்கு எம்மாவை மதியப் பொழுதுகளில் ஐந்தாண்டுகள் தொடர்ந்து சந்திக்கின்றான். வெனிஇஸுக்கு ராபார்ட்டும் எம்மாவும் விடுஇமுறைஇக்குச் சென்றபோது, எம்மா, ராபர்ட் சந்தேகித்ததை உறுதிசெய்து விடுகின்றாள். ராபர்ட்டுக்குத் தெரிஇயாது என்று நினைத்த ஜெர்ரி, எம்மாஇவுடன் அவனுக்கு இருந்த உறவு முறிந்த பிறகு, தன் துரோக மனச் சுமையை ராபர்ட்டிடம் இறக்கி மன்னிப்புக் கேட்க அவனடம் செல்கிறான். ஆனால், ராபர்ட் அவனிடம், எம்மா அவனிடம் ஏற்கெனவே எப்பொழுதோ சொல்லிவிட்டாள் என்று கூறியதும், அவன் அதிர்ச்சி அடைகிறான். ராபர்ட் தன்னை வென்றுவிட்டது போல் அவன் உணர்இகிறான். ‘மெலோட்ராமா’வுக்கு உரிய நிகழ்வுகள் என்றாலும், அவற்றை நிதானமாக, தினசரிச் சம்பவங்கள் போல், வேண்டுமென்றே நிகழ்வுத் தொடர்வைத் தலைகீழாக்கி பின்டர் சொல்லும் விதம் ஒரு புது நாடக உத்தி. உரையாடல்களில் மௌனந்தான் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. ஹெரால்ட் பின்டர் ஏராளமான விருதுகள் வாங்கியிருக்கிறார். அமெரிஇக்காவிடம் அவருக்குத் தீவிர வெறுப்பு இருந்தாலும், டோனி விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஃபிரான்ஸின் உயர்தர ‘லீஜியன் ஆஃப் ஹானர் விருது’ அவருக்குக் கொடுக்கப்பட்டது. இறுதியாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் நோபல் பரிசை வென்றார். நோபல் பரிசு ஏற்புரையில், ‘அப்பாவி ஈராக்கிய பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் அமெரிக்க அதிபர் புஷ்ஷும், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி ப்ளேயரும் கொலைகாரர்கள்’ என்று அவர் சித்திரித்ததை யாரும் மறக்க மாட்டார்கள்.

இந்திரா பார்த்தசாரதி, தமிழின் முக்கியமான நாடகக்காரர்களில் ஒருவர்; எழுத்தாளர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 3 Comments »

Interview with Neyveli Santhana Gopalan: Ravi Subramanian

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2009

”கொஞ்சமாவது அகம்னு வச்சுக்கலைன்னா கலைகள் பரிமளிக்காது”

நேர்கானல்: ரவிசுப்ரமணியன்

தஞ்சை மாவட்டம் குடவாசலுக்கு அருகில் உள்ள பருத்தியூர் கிராமத்தில் பிறந்த சந்தான கோபாலனுக்கு பள்ளிக் காலங்களில் தாயின் ஊரான திருச்சியோடும் பரிச்சயம் உண்டு. தகப்பனாரின் மிதிவண்டியில், பின் இருக்கையில் அமர்ந்தவாறு அவரோடு நீண்ட தூரம் பயணம் செய்யும்போது அவரது ஆறேழு வயதிலேயே இன்னதெனப் புரியாமல் பாடத் தொடங்கியவர்.

பாண்டிச்சேரி – ஸ்ரீரங்கம் ரங்கனாதனிடம் துவங்கிய ரம்பகால சிட்ஷை பின்னாளில் மதுரை சேஷகோபாலனிடம் வந்து நிறைவு கொண்டது. இடையில் பல மேதைகளின் சங்கீத சாரங்களை அறிந்துகொண்டிருந்தாலும் இவ்விருவரே பிரதான ஆசிரியர்கள்.

பாடகர்களில் – பாடல்களைப் பற்றியும், அதில் அமைந்த மொழியின் ருசி பற்றியும், ராகங்கள் பற்றியும் சாகித்திய கர்த்தாக்கள் பற்றியும் விளக்கிச் சொல்லி சாதாரணனுக்கும் புரியவைக்கும் வெகுசில ஆளுமைகளில் நெய்வேலி சந்தானகோபாலனும் ஒருவர்.

எல்லா சங்கீதக்காரர்களைப் போலவே கடவுளை அடையும் மார்க்கமே சங்இஇஇகீதம் என்று அவர் சொன்னாலும், அவரது பாடாந்தர முறைகளிலும் ராகப் பிரயோகங்களிலும், வித்தையில் லயித்து அமிழ்ந்து, கண் கிறங்கி, தன்னை இழக்கும் தருணங்களிலும் அவர் அவரை அறியாது வேறு ஏதோ ஒன்றைத் தேடி அலைகிறார் என்று சில வேளை நான் உணர்ந்திருக்கிறேன்.

அதுவே இந்த நேர்காணலுக்கான தூண்டுகோலாகவும் அமைந்தது. இனி சந்தானகோபாலனுடன்…

ரவிசுப்ரமணியன்: ஒரு தமிழ்க் கவிஞனா முதல்ல இந்தக் கேள்வியைக் கேக்கணும்னு நினைக்குறேன். சங்கீத மும்மூர்த்திகளை இசைக் கடலாத்தான் நானும் பாக்குறேன். அவங்களை வணங்குறேன். அவங்களோட இசைப் பங்களிப்பை எந்த விதத்திலயும் குறைச்சு மதிப்பிடலை. அதே சமயம் ‘தமிழிசை மூவர்’ முக்கியப்படுத்தப் படாததற்கும் தமிழிசை கவனம் கொள்ளப்படாததற்கும் என்ன காரணம்?

நெய்வேலி சந்தானகோபாலன்: தியாகராஜ சுவாமிகள்லாம் பொறக் கறதுக்கு முன்னால தமிழ்நாட்ல தமிழிசைதான் இருந்திருக்கு. அதைத்தானே நம்ம முன்னோர்லாம் பாடிண்டு இருந்துருக்கா? சரபோஜி வந்தப்புறம்தானே தெலுங்கு இவ்ளோ பிரபல்யம் ஆயிருக்கு. அந்த மொழியோட இனிமையையும் சேத்துண்டு அவர் அற்புதமா காம்போஸிஷன் பண்ணார். தீட்சிதர் அதோட வீணையையும் சேத்துண்டு லட்சணமான இசை வடிவத்தைக் கொடுத்தார். அப்படி அவாள்லாம் பண்ணினாங்கறதுனால தமிழை விட்டுட்டோம்னு அர்த்தம் இல்லயே! பண்கள் பேஸ்லதான் எல்லாம் நடந்திருக்கு. அவா சில ரூட் காட்டியிருக்கா. இவா அதுல நன்னா டிராவல் பண்ணி, புதுப்புது எல்லைகளை தொட்டிருக்கா. அதனால தமிழிசை மூத்ததுங்கறதுல யாருக்கும் அபிப்ராய பேதமில்லயே!

ரவிசுப்ரமணியன் : நான் அதைக் கேக்கல. தமிழிசை முக்கியப்படுத்தப் படாததுக்கு என்ன காரணம்ன்னு கேக்குறேன்.

நெய்வேலி சந்தானகோபாலன்: இங்க பாருங்கோ. மாட்டு வண்டி இருந்த காலத்துல சைக்கிள் வர்றது; சைக்கிள் இருந்த காலத்துல மோட்டார் வண்டி வர்றது; மோட்டார் வண்டி வந்த பின்னாடி விமானம் வர்றது; வாகனங்கள் வேற வேற, சௌ கரியங்கள் வேற வேற; ஆனாலும், பிரயாணமும் அடையவேண்டிய ஊரும் ஒண்ணுதானே?

ரவிசுப்ரமணியன்: மாட்டுவண்டி தாரத்துலேந்துதான் எல்லாம் வந்துருக்குன்னு நீங்க சொல்றது கூட இல்லையே; அதான பிரச்சினை.

நெய்வேலி சந்தானகோபாலன்: சங்கீத மும்மூர்த்திகள்னு ஒரு ஸ்தானம் குடுத்தாளே, அதுல மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளைக்கும் வீணை தனம்மா ளுக்கும்கூட ஒரு முக்கியப் பங்கு உண்டு. அவாளை எல்லாரும் ஒப்புக் கொண்டாச்சு.

ரவிசுப்ரமணியன்: அய்யோ! எனக்கு அதுல ஒரு சந்தேகமும் இல்ல சந்தானம் சார். நான் கேக்குறது, ‘பண் வழி’ போனது ஏன்?

நெய்வேலி சந்தானகோபாலன்: ஏன் போயிடுத்துன்னா இருபத்தியோரு பண்கள்லயே எல்லாத்தையும் சொல்லவேண்டியிருந்தது. தில்லானா மாதிரி புதுப்புது விஷயம் அதுல இல்ல. அப்புறம் விருத்தமா பாட வேண்டியிருக்கு. விஸ்தாரம்னு அதுல என்ன பண்ணுவேள்? விதவிதமான தாளத்துக்கு எங்க போறது? தமிழ் சங்கீதத்துல அப்படி ஒரு டெவலப்மெண்ட் வரல. அதுக்குப் பின்னாடி வந்தவா, அதை பேஸா வச்சுண்டு தெலுங்குல வித்தை பண்ணிட்டா; ராஜாங்கமும் அதை அங்கீகரிச்சுடுத்து. ஜனங்களோட மனோபாவமும் இசைக்குத்தான் முக்கியத்துவம்ங்கற மாதிரி இருந்திருக்கும் போலருக்கு. அப்போ அவா விட்டுட்டா. எல்லாமே சேர்ந்து பண் வழி கொஞ்சம் பின்னுக்கு போயிடுத்து. அப்புறம் இன்னோரு கோணத்தில சொல்றேன்… அதெல்லாம் எங்கயும் போய்டல; வேறொரு பேர்ல வளர்ச்சியடைஞ்சு இங்கதான உலவிண்டிருக்கு!

ரவிசுப்ரமணியன்: நீங்க அப்படித்தான் நினைக்குறீங்க, இல்லயா?

நெய்வேலி சந்தானகோபாலன்: என்ன கேக்கறேள் நீங்க? அதான சொல்றேன். இப்ப நான் தேவாரத்தை அப்படியே எடுத்துப் பாடலேன் னாக்கூட, மோகனம்னா அதை முதல்ல பாடின மாணிக்கவாசகர் தானே எனக்கு ஞாபகம் வர்றார்? அதோட பெருமையை முதல்ல உணர்த்இதுனது அவர்தான? அவா கொடுத்த விஷயஇத்தோட தொடர்ச்சியாத்தான் நான் பாடிண்டிருக்கேன்ற எண்ணம் என் மனசுல இருக்கு. திருவாசகத்துல ‘தாயினும் சாலப் பரிந்து’ இப்ப பாடறப்பகூட பக்தியும் அன்பும் சாத்வீகமும் திரண்டு வர்றது. இதை அவர் கொடுத்ததா நினைச்சுண்டுதான், நான் பாடிண்டு இருக்கேன். அதுக்கு அப்புறம்தான் எனக்கு ‘நன்னு பாலிம்பா…’ ரெண்டுமே எனக்கு ஒரே உணர்வைத்தான் தர்றது. இப்போ நான் என் எள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தாவ மனசுல வச்சுக்க முடியாது. ஆனா, அப்பாவை மனசுல வச்சுப்பேன் இல்லையா. அப்பா தானே எனக்கு நிதர்சனம்? அந்த நிதர்இஇசனத்து வழியா அவாளோட எஸன்ஸ் எனக்குக் கிடைச்சுடுத்தே! வழிமுறைகள் மாறி யிஇருக்கலாம், மூலத்தை மறந்திடல. மறக்கவும் முடியாது.

ரவிசுப்ரமணியன்: கேள்வியோட திசையை இப்போ கொஞ்சம் திருப்பிக்கலாம். சேஷகோபாலன் சிஷ்யனுக்கு மஹாராஜபுரம் சந்தானத்திடம் எப்படி நெருங்குன தொடர்பு கிடைச்சுது?

நெய்வேலி சந்தானகோபாலன்: மெட்ராஸ்ல பி.எஸ்ஸி. படிக்கும் போது, சைக்கிள் எடுத்துண்டு வெஸ்ட் மாம்பலத்லேந்து தி.நகர் போனேன். அங்க சிவஞானம் தெரு வழியா போறச்சே ‘மஹாராஜபுரம் சந்தானம்’னு போர்ட் போட்டிருந்தது. அவர் எங்க வீட்டுக்கு ஏற்கெனவே வந்திருக்கார். எங்க ஆத்துல பண்ற வத்தக் குழம்பும் உருளைக்கிழங்கு கறியும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். கடலூர்லேந்து கார் வச்சுண்டு நெய்வேலிக்கு வந்து ராத்திரி 9 மணிக்கு எங்க ஆத்துக் கதவைத் தட்டுவார். அந்த வத்தக் குழம்பை பண்ணச் சொல்லி சாப்ட்டு போவார். அவ்ளோ பழக்கம், அவ்ளோ அன்பு. சின்ன வயசுல அவர் முன்னால நான் பாடிக் காட்டியிருக்கேன். அதெல்லாம் ஞாபகம் வந்தது. ‘அடடே! அவர் வீடு இங்க இருக்கா’ன்னு உள்ள நுழைஞ்சுட்டேன். குசலம் விசாரிச்சு முடிஞ்ச பிற்பாடு பாடச் சொன்னார். பாடி முடிச்சதுமே, ‘இன்னிலேந்து எண்ணி எட்டாவது நாள் கிருஷ்ண கான சபால நீ என்னோட பாடறே. ‘வோக்கல் சப்போர்ட்’னுட்டார். என்ன சொல்வேள் நீங்க? ஒரு வருஷம் அவரோட இருந்தேன்.

ரவிசுப்ரமணியன்: அப்போ அதுக்குப் பிறகுதான் சேஷகோபாலன்ட்ட படிச்சீங்களா?

நெய்வேலி சந்தானகோபாலன்: அவர்ட்ட படிக்கறதா முன்னாடியே தீர்மானம் ஆயிடுத்து. ‘ப்ளஸ் டூ முடிச்சுட்டு காலேஜ் படிக்கறதுக்கு மதுரை வந்துடு. அங்க கத்துக்கலாம்னு’ சொன்னார். வீட்ல இருக்கறவா மெட்ராஸ் போன்னு சொல்லிட்டா. எங்க அண்ணாவும் அப்போ மெட்ராஸ்ல லயோலா காலேஜ்ல வேலைல இருந்தார். அதுனால மெட்ராஸ் வந்துட்டேன். வைஷ்ணவா காலேஜ்ல பி.எஸ்ஸி. படிச்சுண்டு இருந்தேன். ஒரு நாள் கச்சேரில சேஷகோபாலன் சார் பார்த்தார். ‘என்ன கத்துக்க வரேன்னே! என்ன ஆச்சு? மெட்ராஸ்ல இருந்துண்டு இருக்க?’ன்னு கேட்டார். அவ் ளோதான். காந்தம் ஒட்டிண்டுத்து. அப்புறம் மதுரைக்கே போய், அவா த்துல இருந்து, குருகுலம் மாதிரி மூணு வருஷம் கத்துண்டேன்.

ரவிசுப்ரமணியன்: கத்துகிட்டிங்க; பாடினீங்க; புகழ் அடைஞ்சிங்க. அதுக்குப் பிறகு இசைத் துறைக்கு நெய்வேலி சந்தான கோபாலன் செய்த இசைப் பங்களிப்பு என்ன?

நெய்வேலி சந்தானகோபாலன்: அதான் தினமும் டிவில பாடி விளக்கம் சொல்லிண்டு இருக்கேனே… அதே ஒரு பங்களிப்புதான்.

ரவிசுப்ரமணியன்: நான் அதைக் கேக்கல.

நெய்வேலி சந்தானகோபாலன்: புரியறது. புதுசா ஏதாவது செய்யணு ம்னு ஐடியாஸ் இருந்துண்டு இருக்கும். செய்ய மாட்டேன். நான் ஆடுபவன் இல்ல. ஆட்டுவிக்கப்பட விரும்பறவன்னு வச்சுக்கோங்களேன். நல்ல மிருதங்கம், நல்ல வயலின், பரிபூரண ரசிகர்கள்; அவாளோட உட்கார்ந்து என்ன வருதோ அதைக் கொட்டித் தீர்த்து ஆனந்தம் அடையறதைவிட, என்ன பங்களிப்பு வேண்டியிருக்கு சொல்லுங்கோ! பங்களிப்புங்கிறது பெரிய விஷயம் சார். அதுக்கு வேற என்னென்னவோ வேண்டியிருக்கு. ஐடியாஸ் வரும்னு சொன்னேன் பாருங்கோ; சொன்னா நம்பறேளோ இல்லயோ, திடீர்னு ஒரு நாள் உட்கார்ந்துண்டு 108 பாட்டு எழுதினேன். அதுல சிலது இப்போகூட நன்னா நினைவுல இருக்கு. ஏன், என் குருநாதரே அதுல சிலதை எடுத்துப் பாடவும் பாடியிருக்கார். இதை பங்களிப்புன்னு சொல்லச் சொல்றேளா? அப்புறம் ஒரு சமயம், ஒரு சுரத்துக்கும் இன்னொரு சுரத்துக்கும் இடைல இருக்குற தூரத்துல டிராவல் பண்ணிண்டே இருந்தது மனம். அது ஒரு நேரம். பிறகு, திடீர்னு விட்டுப் போயிடுத்து.

எனக்கு சில கடமை இருக்குன்னு நினைக்கறேன். ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர இசையை எப்படி நான் ஆன்மிக அனுபவமா கேட்டேனோ, தனம்மாள் வீணையை எப்படி கேட்டேனோ அதை உங்களோட ஷேர் பண்ணிக்கறேன். நான் அடைஞ்ச அனுபவத்தை நீங்க அடையணும்னு அவசியம் இல்ல. உங்களுக்கு அது வேற ஒண்ணா இருக்கும். சங்கர ஐயரைப் பத்தி சொல்லிண்டே இருக்க ணும் போல இருக்கு.

பங்களிப்பு அப்படிங்கறதை கண்டுபிடிக்கறதுன்ற அர்த்தத்துல நீங்க சொன்னேள்னா கண்டுபிடிப்புல எனக்கு ஆசையில்ல. நான் கண்டுகொண்டதை உங்களுக்குச் சொல்றதுக்குதான் நான் ஆசைஇப்படறேன். ஒரு பிரச்சாரகரா சங்கீஇதத்தைப் பத்திச் சொல்லிண்டே இருக்கறதுதான் என்னோட பொறுப்புன்னு நான் நினைக்கறேன். நீங்க சொல்றீங்களே, ஊடகம், ஊடகம்னுட்டு. அதுல எல்லாஇஇத்துலயும் இதைத்தான் நான் சொல்றேன். நம்ம ராகங்களைப்பத்தி; நம்ம சாஇகித்திய கர்த்தாக்களைப் பத்தி; ஏன் இன்இஸ்ட்ரூமெண்ட்ஸப் பத்திக்கூட எல்லாத்தையும் சொல்லிண்டுதான் இருக்கேன். இந்த அடிப்படையோட நீங்க ஒருத்தர்ட்ட சேர்த்துட்டேள்னா, நல்ல இசையை அனுபவிக்குறதுக்கு ஒரு அடித்தளம் அமைச்சுக் கொடுக்கலாம்.

இதைப் பண்ணிண்டு இருக்கறச்சே எனக்கு வரும்படி கூடப் போயிடும். அதை நான் பாக்கல. மூத்தவா குடுத்துட்டுப் போயிருக்கற சம்பத்துங்கள நீங்க சொன்னாத்தானே தெரியும்! இந்த பாத்திரம் ரொம்ப முக்கியமானதுன்னு நான் நினைக்கறேன். தமிழ்ல தெளிவா பேச, பாடத் தெரிஞ்ச சாகித்தியங்களுக்கு அர்த்தம் பிரிச்சு சொல்லக்கூடிய, அது மாதிரி பல விஷயங்கள் தெரிஞ்ச ஒரு ளுக்கான தேவை இப்போ இருக்கு. என்னமோ ஒரு கதா காலட்சேபம் பண்ற மாதிரி எனக்கு இதெல்லாம் உள்ளுக்குள்ள இன்டகிரேட்யிருக்குன்னுதான் நான் நினைக்கறேன். அப்புறம் இதுக்கு விஷயங்களை சேகரிப்பதற்கு எவ்ளோ உழைக்க வேண்டியிருக்கு தெரியுமா? பாடறதைவிட உழைக்கணும். பங்களிப்பு பங்களிப்புன்னா இது பங்களிப்பு இல்லயா சார்?

ரவிசுப்ரமணியன்: இன்னிக்கி சபாக்கள் அதிகமாயிருக்கு. ஒரு மாசத்துல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகள் நடக்குது. ஊடகங்கள் அதிகமாயிருக்கு. இந்தத் தளங்கள் விரிவடைஞ்சதை எப்படிப் பாக்குறீங்க?

நெய்வேலி சந்தானகோபாலன்: ரொம்ப நல்ல விஷயமா பாக்கறேன். இசையும் ரொம்ப நன்னா வளர்ந்துருக்கு. எல்லாருக்கும் ஈஸியா போய் சேர்றது. ரேடியோல கேக்கலாம்; இணையத்துல கேக்கலாம்; டி.வில கேக்கலாம்; நேரா போய் கச்சேரிலயும் கேக்கலாம். ஏன் உங்க செல் போன்லயே கேட்டுக்கலாம். இப்ப மார்கழியில பாத்தேள்னா எங்கெங்கு கேட்கிணும் இசையடான்னு இல்ல?

ரவிசுப்ரமணியன்: அது சரி. ஆனால், ஆழமும் நுட்பமும் போய்டாதா?

நெய்வேலி சந்தானகோபாலன்: அது எப்படி சார் போவும்? அது அங்க தான இருக்கு. மூச்சடக்கத் தெரிஞ்சவா தரையைத் தொட்டுண்டு வரலாம். கரையில உக்காந்து குளிக்கறவா இருக்கா; முங்கி முங்கி நீந்தறவா இருக்கா. ஜலம் வத்தாம ஓடிண்டு இருக்கே? இன்னும் பிரவாகமா ஓடறதே? அந்த அழகுல அதெல்லாம் அங்கேதான் இருக்கு.

ரவிசுப்ரமணியன்: அப்போ கேக்கறவங்க எண்ணிக்கை பெருகுவது மட்டுமே அந்தக் கலையின் வளர்ச்சி ஆயிடுமா?

நெய்வேலி சந்தானகோபாலன்: ஆகும். எண்ணிக்கை பெருகுனாதான் நீங்க தேர்ந்தவாளை தேர்ந்தெடுக்க முடியும். தேர்ந்தவாளெல்லாம் சேர்த்து ஒரு யூனிட்டா பண்ணிட்டேள்னா அப்புறம் அதுல ஒரு செலக்ஷன் வச்சுணுடலாம். இப்டி ரீ௬பைண்ட் ஆயிண்டே இருக்கும்போது நீங்க சொல்றேளே ஆழம், நுட்பம்னு… அதெல்லாம் தானா வந்துடும். கேட்க வைக்கணும். நிறைய பேரை கேட்க வைக்கறதுதான் இப்ப சேலஞ்சா இருக்கு. இப்ப நீங்க சொல்றேளே ஊடகங்கள் பெருகிடுத்து, சபாக்கள் அதிகமாயிடுத்துன்னு. எல்லாம் பெருகிடுத்துத்தான். ரசிகாளைத்தான் இப்ப எங்க கண்டு தேடறது தெரியல.

ரவிசுப்ரமணியன்: எது எப்படி இருந்தாலும் எல்லா பாடகர்களும் வாத்தியக்காரர்களும் மார்கழில ரொம்ப பிஸியாத்தானே இருக்காங்க?

நெய்வேலி சந்தானகோபாலன்: நேச்சுரலி. அப்புறம் எஸ்டாபிலிஷ் ஆயிட்டா கச்சேரி கூடிண்டுதான் இருக்கும். நிறையபேர் கூப்பிடுவா.

ரவிசுப்ரமணியன்: கூப்பிடறஇவங்இகள்ட்டல்லாம் ஒப்புக்கொள்இவீங்களா?

நெய்வேலி சந்தானகோபாலன்: நிச்சயமா. அது ஒரு வகை புரொ௬பஷனல் ஸ்டேட்சர் ஆச்சே!

ரவிசுப்ரமணியன்: கச்சேரியோட எண்ணிக்கை தொடர்ந்து கூடறது ஒரு பாடகனோட கிரியேட்டிவிட்டிக்கு, அதுக்கான அமைதிக்கு, சிந்தனைக்கு இடையூறா இருக்காதா?

நெய்வேலி சந்தானகோபாலன்: நிச்சயமா இருக்காது. கிரியேட்டிவி ட்டிங்கறது ஷணத்துல ஏற்படறது. கல்பிதம் வேற, கற்பனை வேற. கற்பனை எப்ப வேணா சுரக்கும். அந்தக் கற்பனை தோன்றச்சே அவனே அவனைக் கண்டு ஆச்சர்யப்படறான். அதுதான் அவனை புதுசா வச்சுருக்கு. இல்லாட்டி எத்தனை தடவை அவன் பாடினதையே பாடிண்டு இருப்பான்? ஒரு ஆர்ட்டிஸ்ட் எந்த அளவுக்கு அமைதிங்கற அமிர்தத்தைக் குடிச்சுட்டுப் போறானோ, அந்த அளவுக்கு அவனோட கிரியேட்டி விட்டி இருக்கும்ங்கறது என்னோட அபிப்ராயம். அதுக்கு ஒரு செம்மை யான மனம் வேண்டியிருக்கு. சொல்றாளே, ‘மனம் அது செம்மை யானால்’னுட்டு…

ரவிசுப்ரமணியன்: ராகம் பாடறதை ரெண்டு முறையா சொல்றாங்களே… அது என்ன முறை?

நெய்வேலி சந்தானகோபாலன்: அது என்னென்னா ஒண்ணு சாஸ்தர த்துல சொல்லப்பட்டது மாதிரி, இலக்கணப்படி பாடிண்டு போறது. அதுல ரஞ்சகத்துவம் கொஞ்சம் குறைச்சல்தான். இன்னொண்ணு அப்படியே அள்ளிப் பருகிடலாம். அதுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. இலக்கணத்தை தெரிஞ்சுண்டு ஒழுக்கமா பாடினவா அதை மீறி பாடறது ஒரு அழகு. இலக்கணம் அதுக் குள்ளயே இருக்கும். படைப்பூக்கமும் அதுக்குள்ளயே இருக்கும். அதுதான் சூட்சுமம்.

ரவிசுப்ரமணியன்: இப்ப சங்கீதத்துல பிஸினஸ் இண்டெலி ஜென்ஸி, கிரியேட்டிவ் இண்டெலி ஜென்ஸின்னு ரெண்டு செயல்படுவதை நீங்க ஒப்புக் கொள்றீங்களா?

நெய்வேலி சந்தானகோபாலன்: ஆமா. நன்னா இருக்கு. ரெண்டும் வேணும்னு நினைக்கறேன் நான்.

ரவிசுப்ரமணியன்: இந்த கிரியேட்டிவ் இண்டெலிஜென்ஸை எப்படி அடுத்த தலைமுறைக்குக் குடுக்கப் போறீங்க?

நெய்வேலி சந்தானகோபாலன்: அப்டில்லாம் கைமாத்தி விட முடி யும்னு எனக்குத் தோணல. ‘I want to carry it for the next generation”னு சொல்றது சாத்தியமில்ல. எனக்கு ஆறு குரு இருந்திருக்கா. எல்லா டிரெடி ஷனையும் காப்பாத்தி வரவா கைல குடுக்கணும்னா எனக்கு ஜென்மம் பத்தாது. நான் என்னோட சிஷ்யா ளுக்கு அறிமுகம் பண்றேன், இப்படி எல்லாம் இருந்திருக்குன்னு. நான் பாடறதையும் அவா கேக்கறா. அவா இடத்தை அவா தீர்மானிக்க வேண்டியதுதான். அடிப்படைய வேணா சொல்லித் தரலாமே தவிர, ஒவ்வொருத்தர் பாணியா சொல்லித் தர ஆரம்பிச்சா அவ்ளோதான்.

ரவிசுப்ரமணியன்: பிற கலைகளோட இணைஞ்சு – அதாவது ஓவியம், சிற்பம், நாடகம் போன்ற துறைகளுடன் – ஏதாவது பண்ணியிருக் கீங்களா?

நெய்வேலி சந்தானகோபாலன்: நான் சொன்னா ஆச்சரியப்படுவேள். நீங்க சொன்ன எது எதோடும் நான் சேரல. ஆனா, கோல்௬ப் விளையாட்டோட சேர்ந்து ஒண்ணு பண்ணியிருக்கேன். ஒரு தடவ என்னோட நண்பர் என்னை கோல்௬ப் கோர்ட்டுக்கு அழைச்சுண்டு போனார். ரொம்ப நெருக்கமான நண்பர் அவர் எனக்கு. அவர் அந்தப் பந்தைத் தட்டி ஓடறச்சே, அந்த பந்து ஓடற மாதிரில்லாம் ராகம் பாடினேன். அவரையும் என்னையும் தவிர, அதை வேற யாரும் கேக்கலைங்கறது வேற விஷயம். அவர் பந்தை அடிச்சுண்டு இருந்தார். நான் பந்து போற திசையைப் பாத்து பாடிண்டு இருந்தேன். அது ஒண்ணுதான் நம்ம பரிசோதனை. மத்த கலைகளை நான் மதிக்கறேன். அதுலயும் மனசைப் பறிகொடுக்கறேன். அது எல்லாத்தையும்விட எனக்கு உயர்வானது சங்கீதம் இல்லையா? எனக்கு யாரோட துணையும் இல்லாம அனுபவிக்கற கலை சங்கீதம்தானே? ரொம்ப பொஸஸிவா பர்சனலா இருக்கு அது.

ரவிசுப்ரமணியன்: இப்படி லயிச்சுப்பாடறதை சில பேர் பாரா ட்டும்போது ஒரு பரவசம், குதூகலம் இதெல்லாம் வரும் இல்லையா? நெய்வேலி சந்தானகோபாலன்: வருமே! நான் மனுஷன்தானே ஸ்வாமி. ரவிசுப்ரமணியன்: அதுலயே லயிச்சுடுவீங்களோ?

நெய்வேலி சந்தானகோபாலன்: மாட்டேன். புரியறது; நீங்க எங்க வர்றேள்னு புரியறது. என்னோட நண்பர் விஜய்சிவா சொல்வார்; ஒரு கச்சேரிய நன்னா பாடி முடிச்சவுடனேயே என்னமோ ‘நம்மதான் சங்கீதத்தைக் கண்டுபிடிச்சுட்டோம், நம்ம பாடற மாதிரி யாரும் பாட முடியாது’ அப்டீன்னு ஒரு ஈகோ வந்துடறது. அதை எங்க கொண்டுபோய்த் தொலைக்கறதுன்னு தெரியலம்பார். இந்த மாதிரியும் நடக்கும். நீங்க மூணு மணிநேரம் நன்னா பாடுங்கோ. மங்களம் பாடறப்ப அபஸ்வரம் வந்தா போச்சு. அதைத்தான் எல்லாம் அப்புறம் சொல்லிண்டு இருப்பா. அதனால ஈகோ இருக்கும். இல்லேன்னு சொல்லிட முடியாது. அது கலைஞனுக்கு வேணுமே! அதை மட்டுமே வச்சு கொண்டாடிண்டும் இருக்க முடியாது. அப்புறம் தூக்கிப் போட்டுடுவா.

ரவிசுப்ரமணியன்: பொதுவா நீங்க பாடும்போது வீணைக்கு அதிக முக்கியத்துவம் தர்றதுக்கு காரணம் என்ன?

நெய்வேலி சந்தானகோபாலன்: எங்க அப்பா, சங்கரய்யர், சேஷகோபாலன் சார் எல்லாருக்குமே வீணை பிடிக்கும். கிட்டத்தட்ட ஏழெட்டு வாத்தியங்கள் வாசிக்கக்கூடிய எங்க வாத்தியாரே ‘வீணை மாதிரி வேற வாத்தியம் இல்லடா’ன்னு சொல்இஇலியிருக்கார். அவர் போடாத ப்ருஹா இல்ல; அவர் பாடாத சங்கதியில்ல. ‘அப்இபுறம் என்னத்துக்கு வீணையை கட்டிஇண்டு உட்கார்ந்திருக்கார்’ அப்படின்னு என்இகிட்ட சிலபேர் கேப்பா. அதுல ஒரு விஷயம் இருக்கு. பெரிய வாள்லாம் சொல்இறாளேன்னு நாம் நம்பறது ஒண்ணு. நாமளே உணர்ற துன்னு ஒண்ணு; ‘மாசில் வீணை’ ன்னு ஆரம்பிக்கறார் அப்பர். கோளறு பதிகத்துல ‘மிக நல்ல வீணை தடவி’னு வர்றது. ‘வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்’ன்றார் பாரதியார். எதுக்கு இவாள்லாம் வீணையை மாஞ்சு மாஞ்சு சொல்லிண்டு இருக்கா? வீணைங்கறது நம்ம நரம்பு. அதுவும் இல்லாம இந்த சரீரமே அதான். அதுல வர்ற குழைவுகள், கமகங்கள், இனிமை இதுக்கெல்லாம் ஈடில்லை. வீணை இசையின் மூலமாப் போனா சுலபமா மோட்சத்தை அடையலாம்னு யாக்ஞவல்கியர் சொல்லியிருக்கார். அதுல சுலபம்ங்கிற வார்த்தைதான் வீணையோட மகத்துவத்தைச் சொல்றது.

ராஜரத்தினம் பிள்ளை, தனம்மா ளோட வீணை இசையிலருந்து சில நுணுக்கங்களை கத்துப்பாராம். தனம்மாள் கேப்பாளாம், ‘என்னப்பா தம்பி! நீ நாதஸ்வரம் வாசிச்சா வானத்து நட்சத்திரம் எல்லாம் கீழ இறங்கி வர்ற மாறி இருக்கு. நீ போய் இந்த கிழவிட்ட கத்துக்க வந் தேங்கறியே?’ அப்படின்னு. அதுக்கு ராஜரத்தினம் பிள்ளை, ‘அப்ப எனக்கு ஞானமே வேணாம்னு தீர்மானம் பண்ணிட்டீங்களா?’ன்னு பதில் சொன்னாராம். இதை அவரே ஒரு நேர்காணல்ல சொல்லியிருக்கார். இதைவிட என்ன வேணும் சொல் லுங்கோ?

ரவிசுப்ரமணியன்: ஒரு இசைக்கலைஞன் மேடையில் பாடுவது தனக்கா, தலையாட்டுகிற ரசிகனுக்கா?

நெய்வேலி சந்தானகோபாலன்: ஹா! பிரமாதமா கேக்கறேள். எல்லாருக்கும்தான். நம்மளையும் ரொப்பிக்கறோம். மத்தவாளுக்கும் விநியோகிக்கறோம். ஆனா, கேக்க வர்றவா நல்லா அமைஞ்சுட்டா, அந்தக் கச்சேரியோட லெவலே வேற. சிக்கல் பாஸ்கரன்னு ஒரு பெரிய வித்வான் இருக்கார். அவர் சொல்வார், ‘அந்தக் காலத்துல திருமழிசைநல்லூர்ல எல்லாரும் அனுஷ்டானங்களை முடிச்சுட்டு கமண்டலம், பஞ்ச பாத்தி ரத்தோட உக்காந்து அப்படியே கச்சேரி கேப்பாளாம். இவா வாசிப்பாளாம். நூறு பரமேஸ்வரன் வந்து கேட்ட மாதிரி அவ்ளோ சந்தோஷமா இருக்கும்’னு. அந்த முகத்துல தெரியற பிரதிபலிப்பு தேஜஸ் இருக்கோ, இல்லியோ அதுவே பாடறவாள வேற எங்கயோ கொண்டு வச்சுடும். இங்கயும் வர்றா. நெத்தில விபூதியிட்டுண்டுதான் வந்து உக்காந்திருக்கா. முகத்துல ஒரு களையையும் காணோம்.

கோயமுத்தூர் பக்கத்துல ஒரு ஊருக்குப் போயிருந்தேன். எல்லாரும் கௌண்டர்கள். ஒயிட் அண்ட் ஒயிட் போட்டிருந்தா எல்லாரும். சங்கீதத்துக்கும் அவாளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கறதா எனக்குத் தெரியல. ஆனா என்ன நடந்துச்சு தெரியுமா? நான் அங்கே பண்ண கச்சேரியை வேற எங்கேயும் பண்ணல. விஷயம் என்இனன்னா, ‘இவர் ஏதோ நமக்கு சொல்லப்போறார். அந்த விஷயம் புரியலன்னாக்கூட கேக்கணும்’ அப்படின்னு அவா ஒழுக்கமா உட்கார்ந்திருந்தது, அவா என் மேல வச்சிருந்த அன்பு, மரியாதை இதெல்லாம் சேர்ந்து அங்க புது விதமா ரசிகத்துவம் உருவாகியிடுத்து.

நல்ல ரசிகர்கள் கிடைக்கறதுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டியிருக்கு. கச்சேரியில சில பேர் முதல் வரிசைல உட்கார்ந்து தாளம் போட்டுண்டு இருப்பா. பாத்தவுடனே தெரிஞ்சுடும். அது வேதாளம்னு. அந்தப் பக்கமே திரும்ப முடியாது. சில பேர், வி.ஐ.பி. டிக்கெட் வாங்கிண்டு வந்திருப்பா. பக்கத்து சீட்டுக்காரி புடவைலயும் நகைலயும்தான் கண்ணு போயிண்டு இருக்கும். சிலபேர் ரிவ்யூ எழுத வந்திருப்பா. கணக்கு வாத்தியார், பஞ்சகச்சம் கட்டிண்டு, கருப்பு கோட் போட்டுண்டு முட்டைக் கண்ணாடி போட்டுண்டு கையில பிரம்போட உட்கார்ந்திருக்கற மாதிரியே இருக்கும். ‘என்ன புதுசா பாடிடப் போற நீ?’ அப்பிடிங்கற முக பாவனையோட உட்கார்ந்திருப்பா. இன்னும் சில பேர் இருக்கா. அவா கால் மேல் கால் போட்டுண்டு சிரத்தையா எதாவது படிச்சுண்டு உக்காந்திருப்பா. இப்போ தெரியுதா, பல பேர் ஏன் கண்ணை மூடி பாடிண்டு இருக்காள்னு. வேடிக்கைக்குச் சொல்லலேன்னா; இதான் எதார்த்தம். நீங்க ரொம்ப சென்ஸிபிளா கேக்கறேள். உண்மையில், உங்க சில கேள்விகளுக்கான பதில்களை எனக்குள்ளயே தேடிண்டு இருக்கேன். பொதுவா, இண்டர்வியூ செய்யறவா என்னெல்லாம் கேக்கறா தெரியுமா? போறும் போறும்னு ஆயிடறது. பத்து ராகத்துக்கு மேல கச்சேரில பாடியிருப்பேன். ரசிகப்பிரியால ‘ஏன் நீங்க ஒரு மணிநேரம் பாடல’ன்னு ஒரு கேள்வி. கச்சேரில வந்துட்டு பாதில போயிருப்பான். தமிழ் பாட்டு பாடும்போது இருந்திருக்க மாட்டான். ‘ஏன் நீங்க தமிழ்லயே பாடறதில்ல?’ன்னு ஒரு கேள்வி. ‘தியாகராஜரை தமிழ்ப்படுத்திப் பாடக்கூடாதா?’ன்னு ஒரு கேள்வி. உண்மையா அனுபவிச்சு கேட்டவா பதில் பேச முடியாம பின்னாடி நின்னுண்டு இருப்பா. இவாளுக்கும் பதில் சொல்லியாவணும். பல சமயம் இவாளுக்கு பதில் சொல்றதுக்காக நாம பொறக்கலேன்னு தோணிப் போயிடும். ஒரு ராக லாபனையை உண்மையா அனுபவிச்சான்னா அவன் ஒரு ஸ்டேட்லஸ் ஸ்டேட்டுக்கு (Stateless State) தான் போவான். அவன்கிட்டேந்து கேள்வி வராது. அமைதியாயிடுவான். இவா கச்சேரி போயிண்டிருக்கச்சயே கேள்வி ரெடி பண்ணிட்டு இருப்பா.

ரவிசுப்ரமணியன்: உங்க காலத்துல உங்களைவிட மேலா னவங்கள்லாம் இருக்காங்க. ஆனா, அவங்க நம்ம அளவுக்கு பிரபலம் அடையலையேன்னு நீங்க என்னிக்இகாவது நினைச்சிருக்கீங்களா?

நெய்வேலி சந்தானகோபாலன்: நான் எதோ சாதிச்சுட்டேன், உச்சியில உக்காண்ருக்கேன் அப்டில்லாம் நான் என்னைக்குமே நினைக்குறது இல்ல. கடவுள் ஏதோ எனக்கு ஒரு சின்ன வாய்ப்பைக் கொடுத்திருக்கார். அவ்வளவுதான். என்னைவிட எவ்ளவோ நன்னா பாடறவாளெல்லாம் இருக்கா. பரம ஞானஸ்தன்ல்லாம் அமைதியா இருக்கான். ஒதுங்கியிருக்கான். குடத்துல இட்ட விளக்கா இருக்கான். ஏதோ இதுக்கு மத்தியில எனக்கு இந்த ஸ்தானத்தைக் கொடுத்திருக்கார் பகவான். அதை நான் காப்பாத்திக்கணும். அதுக்கு பொறுப்பா நடந்துக்கணும். இதெல்லாம் இருக்கும்போதே நீங்க சொல்றேளே, ஈகோ அதுவும் சில சமயத்துல எட்டிப் பாக்கத்தான் செய்யும்.

‘கொஞ்சமாவது நீ அகம்னு வச்சுக்கலைன்னா கலைகள் பரிமளிக்காது’ அப்டின்னு ஒரு சொற்றொடர் இருக்கு. கிஞ்சித்தாவது அகம் இருக்கணும். அது இருக்கறவரைக்கும் இந்த ஈகோவும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். கோபாலகிருஷ்ண பாரதி எவ்வளோ பெரிய கவி? அவர் தன்னோட பாட்டையெல்லாம் எடுத்துண்டு போய், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைட்ட உட்காண்ட்ருக்க வேண்டியிருக்கு. அவரும் தாமதம் பண்ணிண்டே இருக்கார். அதை என்ன சொல்றது? பாத்தார் கோபால கிருஷ்ண பாரதி. அவர் வீட்டுத் திண்ணைலயே உட்கார்ந்து பாடித் தீர்த்தார். அவருக்கு மனம் உருகிப் போயிடுத்து. இவ்ளோ பெரிய வித்வானா? நம்ம மனசை உருக்கற சக்தி இவர் பாட்டுக்கு இருக்கறச்சே இவர் மகானாத்தான் இருக்கணும்னு நினைச்சு முன்னுரை எழுதிக் கொடுக்கறார். எனவே, இதெல்லாம் இருக்கத் தான் இருக்கும்.

ரவிசுப்ரமணியன்: இசைல சந்தான கோபாலனுக்குன்னு எதைச் செய்யணும்னு ஆசை இருக்கு?

நெய்வேலி சந்தானகோபாலன்: எனக்கு ஒரு ஏக்கமே இருக்கு. சங்கரய்யர் மாதிரி பழம் தின்னு கொட்டை போட்ட மகான்கள் கூடவே இருக்கணும். காது குளிர மூத்தவா கொடுத்துட்டுப் போனதை கேட்டுண்டே இருக்கணும். அதைவிட என்ன பாக்கியம் சொல்லுங்கோ. நீங்க சொன்னேளே ஈகோ. காலங்காத்தால ராஜரத்தினத்தோட தோடியை நீங்க கேட்டேள்னாக்கா, ‘நீ என்னடா தோடி பாடறே?’ன்னு அது உங்களைக் கேக்கும். அப்போ இதெல்லாம் ஒரு வகைல ஈகோவ குறைச்சுக்கறதுதான்.

ரவிசுப்ரமணியன்: சங்கீதத்தை எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு என்ன பண்றது?

நெய்வேலி சந்தானகோபாலன்: பயமுறுத்தக் கூடாது முதல்ல. எல்லாத்தையும் சுலபமாக்கிடணும். குருகுல வாசத்துக்கெல்லாம் இப்ப சாத்தியம் இல்ல. இணையத்துல எல்லாம் கொட்டிக் கிடக்கு. நல்ல ஆர்வம் உள்ளவா அதுலேர்ந்தே கத்துக்கலாம். பாடறவாள்லாம் மதுரை மணி அய்யர் மாதிரி பாடணும்னா ஒண்ணும் பண்ண முடியாது. கத்துக் கலாம் முதல்ல. வர்லன்னா ரசிக்கவாவது நமக்குத் தெரியுமே! அந்த ஞானமாவது மிஞ்சுமே? குருட்ட வர்றவாள்லாம் நன்னா பாடறான்னு சொல்ல முடியாது. ஒரு பையன்ட்ட சொன்னேன், ‘கொஞ்சம் பயிற்சி பண்ணிட்டு வாப்பா. நீ இன்னும் பழுக்க வேண்டியிருக்கு’ன்னு. ‘எப்படிப் பழுக்கணும் சார்?’ ன்னு கேக்கறான். என்ன பண்றது?

ரவிசுப்ரமணியன்: ஒரு நல்ல கலையின் நோக்கம் என்ன?

நெய்வேலி சந்தானகோபாலன்: முதல்ல அவனை திருப்திப்படுத்த ணும். அஇவஇனோட துர்குணங்களை உதறி எடுத்துட்டு, அவனை லயிக்க வைக்கணும். மனுஷன் மஇனசை மேன்மைபடுத்தறதுதானே, உயஇர்இஇஇவுஇஇ படுத்தறதுதானே ஒரு கலையோட நோக்கமா இருக்கும். என்ன சொஇல்இறேள்?

ரவிசுப்ரமணியன், வணப்பட இயக்குநர்; கவிஞர்; பத்திரிகையாளர். சென்னையில் வசித்து வருகிறார்.

Posted in Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | 6 Comments »

Interview with Director Sasi

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2009

நல்ல திரைப்படம் எடுப்பதற்கு மெளனம் போதும்!
இயக்குநர் சசி

சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘டிஷ்யூம்’, ‘பூ’ ஆகிய வெவ்வேறு களங்களைக் கொண்ட நான்கு படங் களை இயக்கியவர், இயக்குநர் சசி. எதையும் புதிதாக, இலக்கியச் சாய லோடு சொல்லவேண்டும் என்கிற துடிப்புக் கொண்டவர்; எளிமை யானவர். ‘சொல்லாமலே’ படத் துக்கு பல்வேறு முனைகளிலிருந்து விதவிதமாகத் தாக்குதல்கள் வந்தபோதும் கொஞ்சம்கூடப் பதறாமல் பொறுப்பாகத் தன் பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொன்னவர்.

சமீபத்தில் வெளியான இவருடைய ‘பூ’ படம் இவருடைய அடுத்த பட த்தைப் பற்றிய எதிர்பார்ப்பைக் கூட் டியிருக்கிறது. ‘பூ’ எழுத்தாளர் ச. தமிழ்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதோ அம்ருதாவுக்காக தமிழ்த் திரை யுலகிற்கு மகுடம் சூட்டிய சசியுடன் நேர்காணல்.

பாலு சத்யா: ச. தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையை முதலில் எப்போது படிச்சீங்க?

சசி: நான் கல்லூரி முடிச்சிட்டு ஒரு அக்ரிகல்ச்சுரல் கம்பெனில வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன். வேலை காரணமாக நிறைய கிராமங்களுக்குப் போக வேண்டியிருந்தது. அப்போது ஒரு பயணத்தில் படிச்ச புத்தகம்தான் கி.ரா. தொகுத்திருந்த ‘கரிசல் காட்டு சிறுகதைகள்.’ அதுல முதல் கதை ‘வெயிலோடு போய்.’ அதைப் படிச்சவுடனே எனக்குள்ள ஒரு பெரிய பாதிப்பை அது ஏற்படுத்திச்சு. என் நண்பன் ஒருத்தன்கிட்ட அந்தப் புத்தகத்தைக் குடுத்து அந்தக் கதைய படிக்கச் சொன்னேன். அவன், ‘அந்தக் கதையைப் படிச்சிட்டு நேத்து பூரா அழுதேன்’னு மறுநாள் வந்து சொன்னான். எனக்கு ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் இருந்தது. ஏன்னா, முதல் நாள் அந்தக் கதையைப் படிச்சுட்டு ராத்திரி பூரா நான் அழுதுக்கிட்டு இருந்தேன். எனக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு படைப்பு, அதே பாதிப்பை இன்னொருத்தருக்கும் ஏற்படுத்தும் போது, இதை எல்லா ருக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியுங்கற நம்பிக்கை ஏற்பட்டுச்சு. அப்போதே எனக்கு டைரக்டராகணும் என்கிற எண்ணம் இருந்ததால், இந்தக் கதையைத்தான் முதல்ல படமாக பண் ணணும்னு நினைச்சேன். கதைல வர்ற மாரியோட மனசு, என் டைரக்டர் கனவை நோக்கி இன்னும் தூண்டிச்சு.

பாலு சத்யா: தமிழ்ச்செல்வன் வணிகப் பத்திரிகைகளுக்குத் தன் படைப்பைத் தருவதற்கே யோசிப்பவர். அவர் எப்படி இந்தக் கதையைப் படமாக்க அனுமதி கொடுத்தார்?

சசி: இந்தக் கதையை படமா பண்ணணும்ங்கற எண்ணம் இருந்தாலும், அதுக்கான உரிமை எதையும் நான் வாங்கல. பதினஞ்சு வருஷமா என் மனசுக்குள்ளயே வச்சிருந்தேன். இதை யாரும் படமா பண்ண மாட்டாங்கங்கற நம்பிக்கைதான் காரணம். ஒரு பெண்ணோட கதையை படம் பண்ணணும்னு இங்க யாரும் அவ்வளவு சீக்கிரம் நினைக்கறதில்ல. ‘டிஷ்யூம்’ படத்துக்கு முதல்ல நான் பண்ணியிருந்த திரைக்கதை எனக்குப் பிடிக்கல. பதினேழு நாளுக்கு அப்புறம் படப்பிடிப்பை நிறுத்திட்டேன். ‘இதை வேற மாதிரி செய்யணும்’னு எனக்கே தோணிச்சு. ஒரு கட்டத்துல ‘டிஷ்யூமை’ தொடரலாமா, அல்லது வேற கதை எதையாவது புதுசா செய்யலாமான்னுகூட யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்போதான் வெயிலோடு போய் கதையை பற்றி, மறுபடியும் ரொம்ப நாளைக்கப்புறம் யோசிச்சேன். கதையோட உரிமையை முதல்ல வாங்கிடணும்னு என் உதவியாளர் மூர்த்தியுடன் சென்று தமிழ்ச்செல்வனை சந்திச்சேன். விஷயத்தைச் சொன்னதும் ரொம்ப ஆச்சரியமா பாத்தார். ‘என்னங்க கண்டிப்பா வேணுமா?’ன்னு கேட்டார். ‘ஆமாங்க வேணும். என்னை இந்தக் கதை ரொம்ப பாதிச்சிடுச்சு’னு சொன்னேன். ‘சரி எடுத்துக்கோங்க’ன்னு சொல்லிட்டார். ‘சார்… இந்த உரிமை…’ன்னு கேட்டேன். ‘அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க. நீங்க படம் பண்ணுங்க’ன்னு ரொம்ப சாதாரணமா சொன்னார். அந்த நேரத்தில் என்னால என்ன முடிந்ததோ அந்தத் தொகையை, ‘ரொம்ப சின்னத் தொகைதான் சார். என்னோட திருப்திக்காக நீங்க வாங்கித்தான் ஆகணும்’னு சொல்லி முன் பணமாகக் குடுத்து, அந்தக் கதையை வாங்கினேன்.

பாலு சத்யா: மலையாளத்தில் எழுத்தாளர் தகழியோட மூணு சிறுகதைகளைத்தான் அடூர் கோபாலகிருஷ்ணன் ‘நாலு பொண்ணுகள்’ படமா பண்ணியிருந்தார். ஏற்கெனவே, சத்யஜித்ரேவும் சிறுகதைகளைத் தழுவி படம் பண்ணியிருக்கிறார். ‘பூ’ படத்துக்கு, இந்த மாதிரி ஏதாவது படங்கள் தூண்டுதலாக இருந்ததா?

சசி: எனக்கு ‘மதிலுகள்’ தான் பெரிய தூண்டுதல். மத்த படங்களைவிட அதுலதான் அடூர் கோபால கிருஷ்ணனோட கொஞ்சம் வேகமான முகம் இருக்கும். அதோட அதுக்குள்ள ஒரு காதல் இருக்கும். மறக்கவே முடியாத ஒரு காதல். ரெண்டு பேருமே பார்த்துக்காத ஒரு காதல் கதை. கடைசியில ஒரு குச்சி மேல மேல போய்ட்டு வர்ற அந்த காட்சியை இன்னும் என்னால மறக்க முடியல.

பாலு சத்யா: ‘மதிலுகள்’ சிறுகதை இல்ல; அது ஒரு குறுநாவல்.

சசி: ஆமாம். புதுமைப்பித்தனோட ‘சிற்றன்னை’யை தழுவி மகேந்திரன் ‘உதிரிப்பூக்கள்’ எடுத்த மாதிரி. ஆனா, இன்னொருத்தர் இப்படி பண்ணியிருக்காங்க, நாமளும் அப்படிப் பண்ணுவோம்னு இல்ல; ‘பூ’ படத்துக்கான தூண்டுதல் முழுக்க முழுக்க ‘வெயிலோட போய்’ சிறுகதை என்னை பாதிச்சதில் இருந்து வந்தது என்பதுதான் உண்மை.

பாலு சத்யா: ஒரு நாவலை சினிமாவுக்கு ஏற்ற திரைக்கதையாக பண்ற தேகஷ்டமான விஷயம். கேரளாவுலயும் மேற்கு வங்காளத்துலயும் இந்த முயற்சியில வெற்றி பெற்றிருக்காங்க. ஆனாலும், அவற்றின் மேல விமர்சனங்களும் இருக்கு. ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதா’வுல கூட விபூதி பூஷன் பந்தோபாத்யாவோட நாவலை முழுசா சத்யஜித்ரே கொண்டு வரலைங்கற மாதிரியான குறைகள் எல்லாம் இருக்கு. அப்படி இருக்கறப்போ, ஒரு சிறுகதையை திரைக்கதை பண்றது சாதாரண விஷயம் இல்ல. சிறுகதைல ஒரு சம்பவம், அதற்கான பின்புலம் மட்டும்தான் இருக்கும். நீங்க எப்ப ‘வெயிலோட போய்’ சிறுகதையை திரைக்கதையா வடிவமைச்சீங்க?

சசி: என்னைப் பொறுத்தவரைக்கும் படம் பண்றதுக்கு ஒரு சிறுகதை யேகூடத் தேவையில்ல. ‘வெயிலோட போய்’ சிறுகதை அஞ்சரைப் பக்கம் இருக்கு. ஒரு தூண்டுதல் கிடைக்கறதுக்கோ, அதுல ஒரு உயிர் இருக்குன்னு தெரிஞ்சிக்கறதுக்கோ அஞ்சரைப் பக்கம் தேவையில்ல. ரெண்டு பாத்திரங்களுக்கு இடையே இருக்கற மௌனம் போதும். அந்த மௌனத்துலருந்தேகூட கதையை எடுக்கலாம். அதை உணருகிற சக்தி, ஞானம் ஒரு படைப்பாளனுக்கு வேணும்; அவ்வளவுதான். ‘வெயிலோடு போய்’ சிறுகதையில ‘மாரி’ங்கற பாத்திரத்தைப் பற்றி, அதற்கான விவரணங்கள் மட்டும்தான் இருக்கும். அப்புறம் அவளது அம்மா மற்றும் அண்ணன்காரனோட உணர்வும் இருக்கும். எனக்கு மாரியோட உணர்வுகள்தான் வேணுங்கறப்போ அதுல சினிமாவுக்கு என்ன தடை இருக்குன்னு பார்த்தேன். மாரி, மாமன் மகனைக் காதலிக்கறா. சின்ன வயசுலருந்தே காதலிச்சுட்டு வர்றா. படம்னு வர்றப்போ ஒரு எதிர்மறை பாத்திரம், முக்கியப் பாத்திரம் வேணும் இல்லையா? அதுக்கு மாரியுடைய கனவையும், தங்கராஜ் அப்பாவோட கனவையும் வச்சுக்கிட்டேன். தங்கராஜோட அப்பா ஒரு மாட்டு வண்டிக்காரர். சுயமரியாதை உள்ள ஆளா, மரியாதையை எதிர்பார்க்கிற ஆளா காண்பிக்கப்பட்டுக்கிட்டே வந்து, மரியாதை பணத்தின் மூலமாத்தான் வருதுன்னு உணர்றாரு. ‘என் பையனை எஞ்சினியரிங் படிக்க வச்சிருக்கேன். அவன் சம்பாதிக்கிற பணத்தின் மூலமா எனக்கான மரியாதை கிடைக்கும்’ன்னு நினைக்கிறார். பையன் சொல்றான்: ‘நீங்க நினைக்கிற மாதிரி நான் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிக்கல. மெக்கானிக்கல் எஞ்சினியரிங்தான் படிச்சிருக்கேன். எனக்கு சம்பளம் கம்மியாத்தான் கிடைக்கும்.’ உடனே அவர் உடைஞ்சு போறார். அவரோட கனவுக்கோட்டை தகர்ந்த பிறகு, அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வருது. அவரோட முதலாளி, தன் பையன் சரியில்லைங்கறதால இவரோட மகனை மருமகனா ஆக்கிக்க விரும்பறார்; தன்னோட சொத்தை காப்பாத்திக்கறதுக்கு. அப்போ பையனுக்கும் அவருக்கும் முரண்பாடு வருது. இப்படி நான் ஒவ்வொரு கனவையும் வளத்துக்கிட்டே போறேன். மாரியோட கனவு எப்படி நேர்மையானதாகவும் உறுதியானதாகவும் இருந்ததோ, அதே மாதிரி தங்கராஜ் அப்பாவோட கனவும் நியாயமானதா இருக்கும். இந்த ரெண்டு கனவும் சந்திச்சுக்குற புள்ளிதான் தங்கராஜ். அவனுக்குப் பணக்காரப் பொண்ணும் தேவையில்ல; மாரி மாதிரி பொண்ணும் தேவையில்ல. படிச்ச, கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ணத் தெரிஞ்ச ஒரு சராசரிப் பொண்ணுதான் அவனுக்குத் தேவை. இந்த மூன்று புள்ளியும் எப்படி இணையுது, அதுக்கப்புறம் என்ன நடக்குதுங்கறதுதான் கதை. எனக்கு இந்த கரு கிடைச்சதுமே இது போதும், படத்துக்கான எல்லாம் கிடைச்சிடுச்சுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் ஒரு படத்துக்கு மௌனம் போதும்னு சொல்றேன்.

பாலு சத்யா: தமிழ்ச்செல்வன் படத்தைப் பாத்துட்டு என்ன சொன்னார்?

சசி: நான் படம் முடிஞ்சு வெளில வரும்போது பாத்தேன்; அவர் கண்ணுல கண்ணீர் வந்துக்கிட்டு இருந்துது. ‘என்னோட சிறுகதையை கௌரவப்படுத்திட்டீங்க; என்னை கௌரவப்படுத்திட்டீங்க. இனிமே இது என்னுடைய மாரி இல்ல. நம்முடைய மாரி’ன்னு சொன்னார். பெரிய வார்த்தை சார் அது. நான் இந்தப் படத்தை பண்றப்போ, இது மக்கள்ட்ட எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறப் போகுதுன்னு கவலப்படல. எனக்கு இருந்த ஒரே குறிக்கோள், ஒரு படைப்பாளி என்னை பாதிச்சிருக்கார்; அந்தப் படைப்பாளியை நான் எந்த விதத்துலயும் அசிங்கப்படுத்திடக் கூடாது; அவரை எந்த விதத்துலயும் குறைச்சு மதிப்பிட்டிடக்கூடாது; அவ்வளவுதான். இந்தப் படம் நல்லா வரலைன்னா, அது நான் ச. தமிழ்ச்செல்வன்ங்கற படைப்பாளிக்குப் பண்ற துரோகம். அதுனால, இந்தப் படத்தால் எந்த விதத்துலயும் யாரும் அவரை குறைச்சு மதிப்பிட்டுடக்கூடாது; அவருக்கு இந்தப் படத்துல திருப்தி வரணுங்கறதுலதான் ரொம்பக் குறியா இருந்தேன். அதுல நூறு சதவிகிதம் வெற்றி அடைஞ்சுட்டேன்ங்கறதுதான் என்னோட சந்தோஷம்.

பாலு சத்யா: மோகமுள் படத்தையும் சொன்னாங்க, படிச்ச மாதிரி இல்ல படம்னு. அது மாதிரி ‘பூ’வைப் பற்றி யாராவது…?

சசி: இதுவரைக்கும் எத்தனையோ பேர் இந்தப் படத்தைப் பாராட்டி இருக்காங்க. ஆனா, ஒரே ஒருத்தர்கூட குறையா சொல்லலை. அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் படத்தைப் பாத்துட்டு சொன்னார்: ‘படத்தைப் பாத்துட்டு மறுபடியும் போய் நான் ‘வெயிலோடு போய்’சிறுகதையைப் படிச்சேன். மாரி எங்க உக்காரணும்னு நினைச்சேனோ, அந்த இடத்துலதான் அவங்க உக்காந்தாங்க. நீங்க பண்ணினது மிகச் சரியானது. எப்பிடி சார் எழுத்துக்கு நடுவுல போய் கேமராவை வச்சீங்க?’ எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமா நான் இதை நினைக்கிறேன்.

பாலு சத்யா: இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் ஒரு உறவு இருக்கு, இல்லியா? அதைத்தானே நீங்க படமாக்கியிருக்கீங்க?

சசி: ஆமா, கண்டிப்பா. சினிமாவை மட்டுமே பாத்து படம் பண்ற இயக்குநர்கள் நிறைய பேர் வந்திருக்காங்க. ஆனா, என்னால அப்படி முடியாது. எனக்கு, கத்துக்கறதுக்காக சினிமா பாக்கறது முக்கியம். அதே சமயம், இயல்பா இருக்கணும். இதுல ஏதாவது ஒரு விஷயம் போய், என் ஆழ்மனசுல இருக்கும். அதே மாதிரி தான் இலக்கியமும். நான் சின்ன வயசுலருந்தே படிச்ச புத்தகங்களோட தாக்கம் எனக்குள்ள இருக்கு. படிப்பு என் படைப்புக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருக்குது. அதனோட செழு மைக்கும் அழகுக்கும் அடிப்படையா இருக்கறது இலக்கியம்தான். படிக்கறது, பாக்கறது, கவனிக்கறது, யோசிக்கறது… இது எல்லாமே சினிமா சார்ந்த ஒரு படைப்பாளனுக்கு ரொம்ப முக்கியம்.

பாலு சத்யா: ‘சொல்லாமலே’, ‘டிஷ்யூம்’, ‘ரோஜாக்கூட்டம்’ போன்ற படங்களுக்கு நீங்க படிச்ச இலக்கியம் எப்படி உதவி இருக்கு?

சசி: என்னுடைய எந்தப் படமும் இலக்கிய பாதிப்பு இல்லாம வந்ததே கிடையாது. ஏதாவது ஒரு காட்சியில, ஏதாவது ஒரு வசனத்துல, ஏதாவது ஒரு கோணத்துல இலக்கியம் அடிநாதமா உதவியிருக்கு. இலக்கிய வாசிப்பால் சேர்ந்த அழகியல் மறைமுகமா என் படைப்புல வந்துக்கிட்டு இருக்கு. அது வெளியில சொல்லமுடியாத ஒரு விஷயம். இதையெல்லாம் படிச்சதுனால இப்படி பண்ணியிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லமுடியாது. வெளிப்படையா சொல்ற மாதிரியும் சில விஷயங்கள் இருக்கு.

பாலு சத்யா: உங்களைப் பத்தி, உங்க குடும்பப் பின்னணியையும் நீங்க சினிமாவுக்கு வந்ததையும் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

சசி: நான் பொறந்தது மேட்டூர். அங்க ஏழாம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன். அப்பா ஒரு பவர் லூம் வீவர். ஒரு மில்லுல வேலை பாத்துக்கிட்டு இருந்தவர், வயித்து வலி காரணமா அந்த வேலையை விட்டுட்டு, சேலத்துக்கு வந்து ஒரு மளிகைக் கடை வச்சார். எனக்கு ரெண்டு தம்பி, ரெண்டு தங்கச்சிங்க. நாங்க முதல் தலைமுறையா படிக்கற குடும்பம். ப்ளஸ்டூ வரைக்கும் சேலம் குகை ஹைஸ்கூல்ல படிச்சேன். பிறகு அஞ்சல் வழியில் டிகிரி படிச்சேன். அப்புறம் ஒரு அக்ரிகல்ச்சுரல் கம்பெனில எனக்கு வேலை கிடைத்தது. அங்க ஒரு நாலு வருஷம் போச்சு. அப்போ நான் எழுதின, என்னோட முதல் சிறுகதையை ஆனந்த விகடன்ல சிறப்புச் சிறுகதையா போட்டாங்க. அது எனக்குப் பெரிய அங்கீகாரம். ஒரு தைரியம் வந்துடுச்சு. அந்த சந்தர்ப்பத்துல ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ வந்தது. படத்தைப் பாத்துட்டு வந்து என்னோட நகத்தை கட் பண்ணினேன்; புத்தக அலமாரியை சுத்தமா அடுக்கி வச்சேன். ஒரு நல்ல சினிமா என்னை சந்தோஷப்படுத்துது; என்னை நல்லவனா வச்சிருக்குது. அதனால என்னோட இலக்கு சினிமாதான்னு முடிவு பண்ணினேன். அதுக்கப்புறம்தான் ‘வெயிலோடு போய்’ படிச்சேன். இந்த மாரியை உலகம் பூரா கொண்டு போகணும்ங்கற வெறி வந்தது. நான் இயக்குநராக முயற்சி பண்றேன்னவுடனே எங்க அப்பாவுக்கு ஒரு பயம் வந்துச்சு. அவர் கேட்டார்: ‘அடுத்த மாசம் வாடகையை யாரு குடுப்பாங்க?.’ அப்படிக் கேட்டுட்டாலும் பையனுக்கு உதவணுங்கற எண்ணம் அப்பாவுக்கு இருந்தது. ‘நான் பாத்துக்கறேன். நீ போய்ட்டு வா’ன்னு என் தம்பி சொன்னான். சென்னைக்கு வந்து, எல்லா சினிமாக்காரர்களுக்கும் இருப்பது போல் ஒரு நீண்ட போராட்டத்துக்கு பிறகு, இயக்குநர் வஸந்த்கிட்ட உதவி இயக்குநரா ஆயிட்டேன். பொதுவா டைரக்டர்ங்க எல்லாருமே இப்பிடி பண்ணணும், அப்படி எடுக்கணும்னு கனவுகளோடதான் சினிமாவுக்கு வருவாங்க. ஆனா, சினிமா உலகம் வேற மாதிரி இருக்கும். நீங்க நினைக்கிற சினிமாவுக்கும் இங்க இருக்கறதுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கு. இந்த சினிமா உங்களை கன்னத்துல அறையும்; பொல்யூட் பண்ணும். ஆனாலும், இன்றைக்கு வரைக்கும் நான் என் அடையாளத்தை இழக்காம இருக்கறதுக்கு வஸந்த் சார் ஒரு காரணம். அவர் காரணமாகத்தான் நான் இன்னும் அழகியலோட, நல்ல படம் பண்ணணுங்கற தாக்கத்தோட இருக்கேன். அவருக்குப் பிறகு, டைரக்டர் பாக்யநாதன்கிட்ட ‘என்றும் அன்புடன்’ படத்துல பணியாற்றினேன். அதுக்கப்புறம் கதிர் சார்கிட்ட ‘உழவன்’ படத்துல வேலை பார்த்தேன். அப்போ என் தங்கச்சி கல்யாணத்துக்கு என் அப்பா பணம் கேக்கறார். உன்னுடைய பங்கா நீ ஒரு தொகையைக் குடுக்கணும். தம்பிங்களை மட்டும் செலவு செய்யச் சொல்றது நல்லா இல்லன்னு சொன்னார்.

பாலு சத்யா: தம்பி என்ன வேலை பாத்துக்கிட்டு இருந்தார்?

சசி: அவர் ஒரு எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர். அப்போ கட்டாயமா நான் ஏதாவது ஒரு படத்துல கமிட் பண்ணியே ஆகணுங்கற சூழல். நான் பாக்கறதுக்கு ரொம்பச் சின்னப் பையன் மாதிரி இருப்பேன். அதனால, யார் கதை கேட்டாலும் என்னதான் கதை சொன்னாலும் இவன் படம் பண்ணமாட்டான்னுதான் நினைப் பாங்க. அதனாலயே கண்ணாடி போட ஆரம்பிச்சேன். அப்போ சௌத்ரி சார் தான் இளைஞர்களுக்கு படம் பண்ற வாய்ப்பைக் குடுத்துக்கிட்டு இருந்தார். ‘லவ் டுடே’ பாலசேகரன் என்னை சௌ த்ரி சார்கிட்ட கூட்டிட்டுப் போனார். கதையை சொல்லி முடிச்சதும், நீங்க படம் பண்ணுங்கன்னு சொல்லிட்டார். இதுதான் சினிமாவுக்கு வந்த கதை.

பாலு சத்யா: ‘சொல்லாமலே’ படத் தைப் பத்தி, காதலுக்காக நாக்கை எல்லாம் வெட்டிக்கணுமான்னு ஒரு கருத்து இருக்கே?

சசி: ஒருவரை உண்மையா நேசிச்சோம்னா, அவரை ஏமாத்த முடியாது; அது உண்மையாத்தான் இருக்க வைக்குதுங்கறதைதான் நான் இந்தப் படத்துல சொல்லியிருக்கேன். சரி, காதலை விட்டுடுவோம். ஒரு ஆசிரியர், அவர்கிட்ட ஒரு பையன் வந்து சேர்றான். ஏதோ ஒரு காரணத்துக்காக, அவர்கிட்ட அவன் ஊமை ன்னு நடிச்சிக்கிட்டு இருக்கான். கடைசியில அவரோட உண்மையான அன்பு புரிஞ்சு போய், அப்போ தன் நாக்கை கட் பண்ணிக்கிட்டான்னு வச்சுக்கோங்களேன். அப்போ இதுல எந்தவிதமான தப்பும் தெரிஞ்சிருக்காது. காதல்னு சொன்னவுடனேதான் உங்களுக்குத் தவறாப்படுது. குரு பக்திக்கும் காதலுக்கும் எந்த வித்தியா சமும் கிடையாது. ரெண்டுமே ஒரே மாதிரியான உறவு முறைதான்.

பாலு சத்யா: திரைக்கதை முழுவதையும் நீங்களே எழுதிடுவீங்களா?

சசி: ஆமாம். இதுக்கு முன்னாடி நான் எடுத்த மூணு படங்களுக்கும் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே நான்தான் எழுதினேன். சில இடங்கள்ல கதை லாக் ஆகி நிக்கும். அப்போ, உதவியாளர்களுடன் விவாதிப்பேன். ஒரு கதாபாத்திரம் தவறான கோணத்துல போய்க்கிட்டு இருக்கோன்னு பாக்கறதுக்காக டிஸ்கஸன் வச்சுக்குவேன்.

பாலு சத்யா: பூ படத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

சசி: இது மக்களுக்கான சினிமா. மாரியோட மனசை நிறையா பேர்கிட்ட கொண்டுபோய் சேக்கணுங்கறதுக்காகவே நிறைய விஷயங்கள்ல சமரசம் பண்ணிக்கிட்டு தான் எடுத்திருக்கேன். பாலச்சந்தரின் ‘கல்கி’ படத்துக்கு அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு வர்ற, பெண்ணைப் பத்தின படம் இது. திருமணமான ஒரு பெண், தன்னுடைய பழைய காதலை அசைபோடுற மாதிரி இதுவரைக்கும் வந்ததே இல்லைன்னுதான் நினைக்கறேன். மாரி எந்த கலாசார குறைவும் இல்லாத, அப்பழுக்கில்லாத பெண். அந்தப் பெண்ணோட மனசு எல்லாருக்கும் போய்ச்சேரும் அப்படிங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. மக்கள்கிட்ட வரவேற்பு இருக்குன்னுதான் நினைக்கறேன்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 1 Comment »

Fiction by Annadurai: Lit Review by Imaiyam

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2009

அண்ணாதுரை சிறுகதைகள்
இமையம்

இலக்கியம் என்னுடைய பிரச்னையல்ல; வாழ்இக்கைதான் என்னு டைய பிரச்னை. வாழ்க் கையில் இன்பத்தைப் பெருக்க வேண்டும்; வேதனையைக் குறைக்க வேண்டும். இதுதான் என் இறுதி லட்சியம். ஒரு தெளிவான சமூகக் குறிக்கோள் உள்ள எழுத்தாளன் நான். இந்தச் சமூக உறவுதான் என்னை எழுதவைக்கிறது”

– அண்ணாதுரை நாவல் வடிவத்தைப் போலவே சிறு கதை வடிவமும் ஆங்கில இலக்கிய வாசிப்பின் வழியே தமிழுக்கு பெறப்பட்டதுதான். தமிழில் இவ் வடிவத்தின் முன்னோடியாக வ. வெ.சு.ஐயரைக் குறிப்பிடலாம்.

ஐயரை அடுத்து பி.எஸ்.இராமையா, கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன். சி.சு.செல்லப்பா, கா. சிவத்தம்பி, இளங்கோவன், சிதம்பர சுப்ரமணியன், பி.எம்.கண்ணன், மௌனி போன்றவர்கள் சிறுகதைகளை மட்டுமல்லாமல் பரி சோதனை ரீதியிலான கதைகளையும் எழுதினார்கள்.

அடுத்து இவர்களுடைய வரிசையில் கு.அழகிரிசாமி, லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமன் போன்றவர்களும் சிறுகதை வடிவத்தை தமிழில் வளப்படுத்தினார்கள். இந்த எழுத்தாளர்கள், சிறுகதையின் வடிவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் மொழிக்கும் நடைக்கும் பரிசோதனைக்கும் முன்னுரிமை தந்து எழுதியவர்கள். பெரும்பாலும் இவர்கள் தனிமனித சிக்கல், புலம்பல், குழப்பம், குடும்ப உறவுகளுக்கிடையிலான மோதல்களையே பிரதானப்படுத்தி எழுதினார்கள்.

ஒருவகையில் இவர் கள் அனைவரையும் ஆச்சாரத்தை கடைப்பிடித்து மிகவும் ஆச்சாரமான முறையில் எழுதிய எழுத்தாளர்கள் எனலாம்.

இவர்கள் எழுதிய அதே காலக் கட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பல எழுத்தாளர் களையும் சிந்தனையாளர்களையும் போராட்டக்காரர்களையும் உருவாக் கியது. இவர்களை காலமும் சமூகமும் உருவாக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லலாம். சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இயக்கங்களின் கொள்கை அடிப்படையிலும் இவர்கள் எழுதினார்கள்.

சமூகத்தில் நிலவிய மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் பரம்பரை தொழில்களுக்கு எதிராக கருத்துப் பிரசாரம் செய்யவேண்டிய – கிட்டத்தட்ட கலகம் செய்யவேண்டிய -சூழலில் இவர்கள் இருந்தார்கள். இப்படி இனம், மொழி, திராவிட இயக்கச் சிந்தனைகள், பழமைக்கு எதிரான குணம், அறியாமை, மடமை, மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதி ரான நிலைப்பாட்டுடன் எழுத வந்த வர்களில், முக்கியமானவராகவும் முதன்மையானவராகவும் பேரெழுச்சியை உருவாக்கியவராகவும் இருந்தவர் அண்ணாதுரை.

இவரது எழுத்து தமிழகத்தில் ஒரு இயக்கமாக வளர் ந்தது. ஒரு புதியவகை எழுத்து இயக்கத் தை மட்டுமல்ல, ஒரு அரசியல் இயக்கத்தையும் உருவாக்கியது. அண்ணாவினுடைய எழுத்து தமிழ் மொழியில், தமிழ்ச் சமூக வாழ்வில் பாய்ச்சலான பெரிய மாற்றத்தை உருவாக்கியது என்பது வரலாறு.

அந்த வரலாறு எளிதில் அழிக்கக்கூடிய வரலாறாக இல்லை. அவருடைய எழுத்தின் தாக்கம் இன்றும் இருக்கிறது.

அண்ணாவுக்கு மேடைப் பேச்சாளர், அரசியல் தலைவர், நாடக ஆசிரியர் என்று பல முகங்கள் உண்டு. மற்ற முகங்களைவிட சிறுகதை ஆசிரியர் என்ற முகம் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

1934 முதல் 1966 வரையிலான காலத்தில் அவர் மொத்தம் நூற்று பதிமூன்று சிறுகதைகளை எழுதியுள்ளார்.

11-12-1934இல் வெளிவந்த ‘கொக்கரக்கோ’ அண்ணாவின் முதல் சிறுகதை.

14-01-1966இல் வெளிவந்த ‘பொங்கல் பரிசு’ அவருடைய கடைசி சிறுகதை.

கொக்கரக்கோ என்பது தமிழ்ப் பண்பாட்டில், கலாச் சாரத்தில், நம்பிக்கையை மையப் படுத்துவது; பொங்கல் என்பது மகிழ்ச்சியை, ஆனந்தத்தை, கொண் டாட்டத்தை, நிறைவை மையப்படுத் துவது. அண்ணா, சிறுகதைகளை கொக் கரக்கோவில் ஆரம்பித்து பொங்கல் பரிசில் முடித்துள்ள ஒற்றுமை இயற்கையாக அமைந்த ஆச்சரியம்.

அண்ணாவுக்கு ஒரு நோக்கம் இருந்தது; அந்த நோக்கத்திற்காகத்தான் அவர் எழுதினார். கறுப்பினப் போராளி மார்ட்டின் லூதர் கிங், “எனக்கொரு கனவு இருக்கிறது” என்று சொன் னதுபோல, “எனக்கொரு நோக்கம் இருக்கிறது, லட்சியம் இருக்கிறது” என்று அண்ணா சொன்னார். தமிழ்ச் சமூகத்தை இருட்டிலிருந்து வெளிச்சத் திற்குக் கொண்டு வரவேண்டும் என்பது அண்ணாவின் லட்சியம்; சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வான முரண்பாட்டை ஒழிக்க வேண்டும் என்பது அவருடைய கனவு.

இதனடிப் படையில் வாழ்விற்கான உரிமையையும் அதற்கான வேட்கையையும் முன் னிறுத்தியே அவர் எழுதினார். தமிழ்ச்இசமூகம் மகிழ்ச்சியை, கொஇண்இடாட்இடத்தை இழந்ததற்கான கார ணங்கள் என்ன, அவற்றை அடை வதற்கான வழிவகைகள் என்ன என்று தன் சிறுகதைகளில் அவர் ஆராய்ந்தார். ஒரு எழுத்தாளனுடைய நோக்கம்தான் அவன் எழுத்துக்கு வலிமையான பலமாக அமைகிறது.

இந்த வலிஇமைஇதான் எழுத்தினுடையவும் எழுத்இதாளஇனுடையவும் மேன்மையாக அமைஇ கிறது.அரை நூற்றாண்டு காலம் முடி ந்துஇவிட்ட பிறகும், இன்றும் நாம் அண்ணாவினுடைய சிறுகதைகளைப் பற்றி பேசுவதற்குக் காரணம் அக் கதைகளினுடைய வலிமையும் மேன்மையும்தான்.

கருத்தைப் பரப்புவதற்காக, பிரசாரம் செய்வதற்காக எழுதப்பட்டதுதான் அண்ணாவினுடைய சிறுகதைகள் அனைத்தும். அவருடைய இயக்க செயற்பாடுகளில் ஒன்றாகத்தான் அவருக்கு எழுத்தும் இருந்தது. ஆனால், பிரசாரத்திற்காக எழுதப்பட்டி ருந்தாலும் அவருடைய கதைகள், சிறுகதைகளுக்குரிய எல்லாக் குணங்களையும் கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

குழப்பமில்லாத தெளிவான நடை, குறிப்பாக உணர்த்துதல், நுட்பமான சித்தரித்தல், எள்ளல், அங்கதம், ஒப்பீடு, நகைச்சுவை, உருவக, கவிதை குணம் கொண்ட வாக்கியமைப்புகள் என்று அனைத்துக் கூறுகளும் நிறைந் திருப்பதை இன்றும் காணமுடியும். அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாகியும் அவருடைய கதைகளை எளிதாக படிக்க முடிகிறது; ரசிக்க முடிகிறது என்பதோடு அக்கதைகள் இக்காலத்திற்கும் பொருத்தமானதாக, தேவையானதாக இருக்கிறது என்பது ஆச்சரியமான விசயம்.

அண்ணா, கதை எழுத ஆரம்பித்த காலத்திலும் எழுதிக் கொண்டிருந்த காலத்திலும் நான்கு விதமான கதை எழுதும் போக்குகள் இருந்தன. தனி மனித பிரச்னைகள், சிக்கல்கள், பிடுங்கல்கள், மனப்போரட்டங்கள், உளவியல் பிரச்னைகள்; குடும்ப உறவுகளுக்கிடையிலான மோதல்கள், சிடுக்குகள், விரக்தி, நம்பிக்கையின்மை, மனக்குழப்பங்களை, சீர்குலைவு களை பதிவு செய்வது என்று ஒரு பிரிவினர் இருந்தனர், இவ் வகையான எழுத்துகளையே இலக்கியமாக இலக்கியவாதிகள் அங்கீகாரம் செய்தனர்.

தனிமனித பிரச்னைகளையும் சமூகப் பிரச்னை களையும் அப்பட்டமாக பதிவு செய் வதுதான் எழுத்தாளனின் வேலை; அதில் குறுக்கீடு செய்வதோ, விமர்சனம் செய்வதோ அல்ல என்பது மற் றொரு பிரிவினர்களுடைய போக்கு. மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம், நாட்டுப்பற்று, விடுதலைப் போராட்டம், தேசிய இயக்கம், காந்திய சிந்தனைகளின் அடிப்படையில் எழுதுவது மூன்றாவது பிரிவினருடைய எழுத்து வகை.

நடைமுறை சமூக வாழ்வில் இருக்கக்கூடிய அசலான பிரச்னைகளையும் பிரச்னைகளுக் கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் முன் வைத்து எழுதி யவர்கள் நான்காவது வகையினர். அண்ணா, நான்காவது வகையைச் சார்ந்த எழுத்தாளர்.

சமூகத்தை முன்னேற்றுவதற்கு, விமர்சனம் செய்வதற்கு – முக்கியமாக பிரசாரம் – செய்வதற்கான கருவியாகவும் தன்னுடைய கருத்தை, சிந்தனையை, எண்ணத்தை பரப்புவதற்கு தகுந்த ஆயுதமாகவும்தான் கலைப் படைப் புகளை அண்ணா கருதினார்; இதே நோக்கத்திலேயே சிறுகதை என்ற வடிவத்தை பயன்படுத்தினார்.

அதோடு, இலக்கியம் மக்களுக்கானது, அது மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சமூகத்தின் மீதான தன்னுடைய விமர்சனத்தை சிறுகதைகளின் வழியே செய்தார். தேவையான இடங்களில் விமர்சனத்தைக் கடுமையாகவும் வைத்தார். அவர் வாழ்வை நான்கு சுவர்களுக்குள் காணவில்லை; மாறாக தெருவில் கண்டார்.

இதனால், அண்ணா கதைகள் சராசரியான கதைகளாக இல்லாமல் கலகக் குரலாக இருந்தது. முதல் கதையிலிருந்து கடைசி கதை வரை இந்தக் கலகக் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஏனென்றால் வாழ்வினுடையதும் சமூகத்தினுடையதுமான நெருக் கடிகளில் இருந்து உருவானது அவருடைய சிறுகதைகள்.

அண்ணாவினுடைய சிறுகதைகளின் மையமான கரு – மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பிரசாரம்; சாதியப் பிரச்னைகளுக்கு, மத மோதல்களுக்கு, சமயப் பூசல்களுக்கு, புராண இதிகாசக் கட்டுக் கதைகளுக்கு, பெண்ணுரிமை, வரதட்சணை கொடுமைக்கு எதிரானது; குருட்டுத்தனத்திற்கு, பழமைக்கு எதிரானது; சமூகத்தின் மேல் அடுக்கில் இருப்பவர்கள் சமூகத்தின் கீழ் அடுக்கில் இருப்பவர்கள் மீது செலுத்திய குரூரமான ஒடுக்குமுறைக்கு, சித்ர வதைக்கு எதிரானது. சமூக மேம்பாடும் சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும்தான் அவருடைய மொத்தக் கதைகளின் சாரமும் நோக்கமுமாக இருக்கிறது.

அண்ணா, தமிழ் மரபின் பிரதிநிதி என்பதால் தமிழ் வாழ்வுக் குறித்த மதிப்பீடுகளே அவருடைய கதைகள் என்றும் சொல்லலாம்.

அண்ணாவினுடைய 113 சிறு கதைகளையும் மொத்தமாக படித்து முடிக்கும் போது, அவருடைய பரந்துட்ட அறிவு வீச்சு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதோடு அவர் தொடாத விசயங்கள் எதுவுமில்லை என்பதும், ஒரு கதையினுடைய சா யலை மற்றொரு கதையில் காண முடியாது என்பதும், அவருடைய எழுத்தின் மேன்மைக்கு சான்றாக இருக்கிறது.

  • மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ‘பரிசு’ என்ற கதையையும்;
  • சாதிகள் இந்த மண்ணில் எவ்வளவு ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது என்பதற்கு ‘சிங்கள சீமாட்டி‘ (1939) என்ற கதையையும்;
  • மதப்பூசல்களுக்கு எதிராக ‘மதுரைக்கு டிக்கட் இல்லை’ (1945) என்ற கதையையும்;
  • பேய் பிசாசு போன்ற கட்டுக்கதைகளுக்கு எதிராக ‘யார் மீது கோபித்துக் கொள்வது’ (1955) என்ற கதையையும்;
  • மாந்திரிகத்தினால் ஏற்படும் கேடுகளுக்கு எதிராக ‘விழுப்புரம் சந்திப்பு’ (1965) என்ற கதையையும் எழுதியுள்ளார்.
  • முதலாளித்துவத்தின் சுரண்டல் போக்குகளை, கோரச் செயல்பாடுகளை பல்வேறு நிலைகளிலிருந்தும் ஆராய்ந்து ‘செவ் வாழை’ (1949),
  • ‘ரொட்டித்துண்டு’,
  • ‘பக்த பக்காத் திருடன்’ (1950)
  • ‘பூபதியின் ஒரு நாள் அலுவல்’ (1946)
  • ‘பொய் – லாப நஷ்டம்’ (1945)
  • ‘நாடோடி’ (1945)
  • ‘உடையார் உள்ளம்’ (1966) போன்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
  • இந்த நாட்டில் வரத ட்சணை கொடுமையினால் எத்தனை பெண்களுடைய வாழ்க்கை சீர்கெட்டுப் போகிறது என்பதற்கு ‘சோணாச்சலம்’ (1947) என்ற கதையை எழுதியுள்ளார்.
  • பெண்களும் மனித உயிர்களே; அவர் களுக்கும் சகல உரிமைகளோடு வாழ்வ தற்கு உரிமை உண்டு என்பதோடு பெண்கள் படும் அல்லல்களை துன்பங் களை விவரிக்கும் விதமாக
  • ‘வாலிப விருந்து’,
  • ‘சுடு மூஞ்சி’ (1946),
  • ‘கன்னி விதவையானாள்’ (1961) ஆகிய கதைகளை எழுதியுள்ளார்.
  • இந்த மண்ணில் ஏற்பட்டுள்ள, ஏற்படுகிற சகல விதமான மூடத் தன ங்களுக்கும், சமயப்பூசல்களுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும், கட்டுக்கதைகளுக்கும், கீழ்மைத் தனங்களுக்கும், மோசடி கபட நாடகங்களுக்கும் பிராமணியமே அடிப்படையான காரணம் என்பதைத் தோலுரித்து காட்டும் விதமாக
  • ‘அறுவடை’ (1955),
  • ‘பேரன் பெங்களூரில்’,
  • ‘மேலதிகாரி’ (1956),
  • ‘சொல்வதை எழுதேண்டா’ (1946) ஆகிய சிறுகதைகளை எழுதியுள்ளார்.
  • காதல் என்ற பெயரால் நடக்கும் மோசடிக்கும், கபட நாடகத்திற்கும் ஆளாகி அவதிப்படும் பெண்களுடைய வாழ்வை சித்தரிக்கும் விதமாக
  • ‘தங்கத்தின் காதலன்’ (1939),
  • ‘புரோகிதனின் புலம்பல்’,
  • ‘அவள் மிகப் பொல்லாதவள்’ (1939) போன்ற கதைகளை எழுதியுள்ளார்.
  • பணக்காரர்களுடைய ஏழைகளின் மீதான அன்பு, இரக்கம் பச்சாதாபம் என்பதெல்லாம் நாடகமே என்பதை ‘இரு பரம்பரைகள்’ (1946) என்ற கதையில் காட்டுகிறார்.
  • பெண்களுடைய உரிமைக்காகவும் வாழ்விற்காகவும் குரல் கொடுப்பதோடு பெண்ணிய நோக்கில்
  • ‘அவள் விபச்சாரியானாள்’ (1946)
  • ‘வழுக்கி விழுந்தவள்’ (1965) ஆகிய கதைகளை எழுதியுள்ளார்.
  • வரலாறுகளையும் வரலாற்றில் நடந்து ள்ள மோசடிகளையும், ஏமாற்று சித்து வேலைகளையும் தர்க்கப்பூர்வமாக ஆராய்ந்து
  • ‘புலிநகம்’ (1946),
  • ‘பிடி சா ம்பல்’ (1947),
  • ‘திருமலை கண்ட திவ்விய ஜோதி’ (1952),
  • ‘தஞ்சையின் வீழ்ச்சி’,
  • ‘வெளியூரில் கொலம்பசு’ போன்ற கதைகளை எழுதிஇயுள்ளார்.
  • உளவியல் சா ர்ந்த கதைகளான
  • ‘ராஜபார்ட் ரங்கத்துரை பாகவதத்’ (1948),
  • ‘மரத்துண்டு’ போன்றவற்றையும் எழுதினார்

கரு, அமைப்பு, நோக்கம், உள்ளடக்கம், வெளிப்பாட்டுத்திறன், ஆளுமை, மொழி போன்றவற்றை வைத்து அண்ணா சிறுகதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும். தொடக்ககாலக் கதைகள் பசி, வறுமை, நோய், அறியாமை, சாதி மற்றும் பொருளாதார ரீதியிலான ஏற்றத் தாழ்வுகள், உழைப்பு மற்றும் பொருளாதாரச் சுரண்டல்கள் போன்ற பிரச்னைகளை நேரிடையாகவும் அப்பட்டமாகவும் பேசியதோடு அதற் கானத் தீர்வுகளையும் முன்வைக் கின்றன.

பொதுவாக தமிழ் இலக்கிய உலகம் பிரச்னைகளையும் பிரச்னைகள் உருவாவதற்கான காரணிகளையும் ஆராயும். ஆனாலும், முடிவை வாசகனுடைய தீர்மானத்திற்கு விட்டு விடும். இதற்கு நேர்மாறான குணத் தை அண்ணாவினுடைய தொடக்கக்கால கதைகள் கொண்டிருப்பது கவனத்திற்குரியது.

இடைக்காலக் கதைகள் பிரச்னைகளை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து, தீர்வை முன் வைப்பதற்குப் பதிலாக விவாதத் தையும் தர்க்கத்தையும் முன்வைத்தன. கடைசிக்காலக் கதைகளில் கருவுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் வடிவம், செய்நேர்த்தி, சொல்முறை, நுட்பம், செறிவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இக்கால கதைகளில் முதிர்ச்சியையும் தேர்ச்சியையும் காண முடிகிறது. இதே காலத்தில்தான் ஓப்பீட்டு முறையிலான கதைகளையும் எழுதியுள்ளார். ஒரு எழுத்தாளனுடைய வாழ்க்கையில் வளர்ச்சிப் படிநிலைகள் தவிர்க்க முடியாதவை; இந்த வளர்ச்சிப் படி நிலைகள்தான் அந்த எழுத்தாளனுடைய எழுத்தின் வலிமையைக் காட்டுகிறது என்ற கோட்பாடு அண்ணாவின் கதைகளுக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.

மரபுகளை உதறித்தள்ளி புதிய மரபுகளை உருவாக்கிய சிறுகதைகள் அண்ணாவினுடையது. திரித்துக் கூறுதல், சுற்றி வளைத்துப் பேசுதல் என்பது அண்ணாவின் சிறுகதைகளில் காண முடியாத ஒன்று.

சிறுகதைக்குரிய எல்லா குணங்களும் சிறப்பாக இருந் தும், ஆச்சாரமான இலக்கிய விமர்சகர்கள் அவரது சிறுகதைகளை கொள் கை முழக்கங்களாக பார்த்ததின் விளைவு அவருடைய கதைகள் பர வலாகாமலேயே போய்விட்டது.

நம் முடைய விமர்சகர்கள் ஒரு படைப்பை அதனுடைய தரத்தை வைத்து மதிப்பிடாமல், அந்த படைப்பை எழுதிய எழுத்தாளனுடைய சாதி, சார்ந்துள்ள கட்சி, அவனுடைய பின்னணி போன்றவற்றை வைத்தே மதிப்பிடுகிறார்கள் என்பதால் நிகழ்ந்த துயரம் இது. ஆனால், விமர்சகர்களால் உதவாக்கரை என்று ஒதுக்கப்பட்ட அண்ணாவின் சிறுகதைககள்தான் இன்று அதிகமாகப் பேசப்படுகின்றன.

அண்ணாவுக்கு தெளிவான நோக்கம் இருந்தது; அந்த நோக்கத்திலும் லட்சி யத்திலும் இருந்துதான் அவருடைய சிறுகதைகள் உருப்பெற்று வந்தன. இந்நிலையில் ஆய்ந்து அண்ணா வினுடைய சிறுகதைகளை மதிப்பிட வேண்டும்.

அண்ணா எந்தெந்த பிரச் னைகள் தீரவேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்று எழுதினாரோ அந்தப் பிரச்னைகள் இன்றுவரை ஒழி ந்தப்பாடில்லை. சாதிக்கொடுமை, தீண்டாமை, பசி, பிணி, வறுமை, அறியாமை, பொய்மை, போலித்தனம், சமயப்பூசல், இளமை மணம், காதலுக்குத்தடை, தெய்வத்தின் பெயரால் ஏற்பட்ட கட்டுக்கதைகள், புராண – இதிகாசப் புரட்டுகள் இந்த மண்ணில் இருக்கும்வரை; சூழ்ச்சியின் பிடியில் தமிழ்ச் சமூகம் சிக்கி தவிக்கும் வரை; பிரச்னைகள் மடிவதற்குப் பதிலாக வேகம் பெற்று வளர்ந்து கொண்டிருக்கின்ற வரை; அண்ணாவினுடைய சிறுகதைகளும் இருக்கும்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 2 Comments »

Subam – Sivam: MS Subbulakshmi: Kalki Rajendran: 70 to 7: Part II

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 15, 2009

சுபம்-சிவம் – கல்கி ராஜேந்திரன்: 70 முதல் 7 வரை II


கணேச சாஸ்திாிகள், புது வருஷ பஞ்சாங்கத்துடன் என்னை யும் விஜயாவையும் காண்பதற்கு வந்தார். விஜயா அடிக்கடி பஞ்சாங்கம் பார்த்து பல்வேறு சுபதினங்களை நினைவில் வைத்துக் கொள்வாள். நானோ வெகு அபூர்வமாகத்தான் பஞ்சாங்கம் பார்ப் பேன். ஆனால், “தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புக்கு கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க வேண்டாம்” என்று தி.மு.க. அரசின் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டதால், “பஞ்சாங்கத்தைப் படித்தே தீருவது” என்று கையில் வாங்கியதும் பிாித்தேன். பிாித்த பக்கத்தில் எனக்குப் புாியாத லிபியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது!

“இது என்ன, கிரந்த எழுத்தா?” என்று கணேச சாஸ்திாிகளைக் கேட்டேன். “ஆமாம்” என்றார். “கொஞ் சம் படிங்களேன், கேட் போம்” என்றேன். அவர் சில வாிகள் படித்து நிறுத்தி னார்.

“அம்மாவுக்கு கிரந்த எழுத்து நன்றாகப் படிக்கவும் எழுதவும் தாிெயும்” என்றாள் விஜயா.

“நிஜமாகவா?” என்று நான் ஆச்சர் யத்துடன் அவளைப் பார்த்தேன். ‘எம்.எஸ். அம்மா பற்றி தாிெந்து கொள்ள வேண்டி யது இன்னும் எவ்வளவோ இருக்கிறது போலிருக்கே’ என்று தோன்றியது “எப் போது கற்றுக் கொண்டாள்?”

“எப்போது, யாாிடம் என்பதெல்லாம் தாிெயாது. சிறுமியாக மதுரை யில் இருந்த போதே எழுதப் படிக்க பழகி இருக்கிறாள்.”

கணேச சாஸ்திாிகளுக்கு சன்மானம் செய்து அனுப்பி விட்டு, விஜயாவிடம் பேச் சைத் தொடர்ந்தேன். “பள்ளிக்கூடம் போயிருக் காளா, அம்மா? எதுவரை படித்தாள்?”

“ஆறாவது வகுப்பு வரை. அப்போது ஒரு சமயம் வகுப் பாசிாியர் பலமாக அவள் தலையில் குட்டி விட்டார்! வலியை விட அதிக மாக அம்மாவுக்கு பயம் உண்டாகி விட்டது. அதன் விளைவாகக் கக்குவான் இருமல் (தீடணிணிணீடிணஞ் ஞிணிதஞ்ட) வந்து விட்டது! குணமாக ரொம்ப நாளாயிற்று. அன்று முதல் பாட்டி (சண்முகவடிவு) ‘பள்ளிக் கூடம் போக வேண்டாம்; வீட்டோடு இருந்து பாட்டுக் கற்றுக் கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டாள்.”

“பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தலையில் குட்டிய அந்த வகுப்பாசிாியரைக் கை கூப்பித் தொழ வேண்டும்” என்றேன். “நம் தேசத்துக்கு எவ்வளவு பாிெய தொண்டாற்றியிருக்கிறார்! பள்ளிக்கூடம், கல்லூாி என்று தொடர்ந்திருந்தால் அம்மாவின் வாழ்க்கை எப்படி திசை மாறிப் போயிருக்குமோ, யார் கண்டது?”

விஜயா என்னுடன் சேர்ந்து சிாித்தாள். “அபூர்வமாக அம்மா, பழைய நினைவு களில் ஆழ்ந்து பேசுவாள். மதுரையில் சிறுமி சுப்புலக்ஷ்மியுடன் விளை யாட அடிக்கடி ஒரு சிறுவன் வருவான். யார் தாிெயுமா?…”

“ரொம்ப ஆவலைத் தூண் டாதே, சீக்கிரம் சொல்லு!”

“மணி! பின்னாளில் மதுரை மணி அய்யர் என்று பிரசித்தி பெற்றவர்தான்!”

“அட! என்ன விளை யாடுவார்கள்?”

“சங்கீதம் தொடர்பான விளையாட்டுகள்தான். யார் அதிக நேரம் கார்வை நிற்க முடியும் என்பதில் படு போட்டி!”

“ஜெயித்தது யார்?”

“அதை அம்மா சொல்லவில்லை; நானும் கேட்கவில்லை.”

“அப்புறம்? வேறென்ன விளை யாட்டு?”

“போட்டிக்குள் ஒரு போட்டி! தம்புரா மீட்டியபடியே பாடி கார்வை யில் நிற்பார்கள்; தம்புரா மீட்டு வதை நிறுத்தி விடு வார்கள்; சற்று நேரம் சென்று மறுபடி தம்புரா மீட்டி சுருதி சேர்ந்திருக்கிறதா என்று பார்ப்பார்கள்!”

“அம்மாவுக்கு படிக்கவில்லையே, பட்டம் பெறவில்லையே என்ற வருத்தம் இருந்ததுண்டா?”

“அப்படி எண்ணிப்பார்த்து வருந்து வதற்குக் கூட அவளுக்கு நேரமிருந்த தில்லை. சங்கீத உலகில் அவள் வளர்ச்சி வேகம் அப்படி இருந்தது. மேலும், படிக்க வில்லை என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படாமலிருக்க அப்பாவும் ரொம்ப முயற்சி எடுத்துக் கொண்டார்.”

“அம்மா, குட் ஷெப்பர்ட் கான் வென்டுக்கு தினசாி போய் ஆங்கிலம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது” என்றேன்.

“ஆங்கிலம் தாிெந்த ஒருவர் டியூஷன் எடுத்தால் போதாது; ஆங்கிலத்தையே தாய் மொழியாகக் கொண்ட ஒருவர் டியூஷன் எடுக்க வேண்டும் என்பதால் அப்பா செய்த ஏற்பாடு அது. அங்கே மதர் ஜோன், மதர் பேஷன் (கச்ண்ண்டிணிண), மதர் ஆன் என்று பல கன்னிகா ஸ்திாீகள் இருந்தார்கள். பிாிட் டனிலிருந்து வந்தவர்கள். எல்லோருக்கும் ‘எம்.எஸ். ஆங்கிலம் கற்க வருகிறார்’ என்பதில் ஒரே சந்தோஷம். ஆனால், மதர் சுசீலியாவுக்குத்தான் அம்மாவுக்குக் கற்றுத் தரும் வாய்ப்பு கிடைத்தது.”

“கன்னடமும் தெலுங்கும் அம்மாவுக் குத் தாிெந்திருக்குமே?”

“அர்த்தம் புாியும்; பேசவும் முடியும். ஆனால் எழுதிப் படிக்கப் பழகவில்லை. சமஸ்கிருதம் படிக் கவும் எழுதவும் கற்றுத் தர அப்பா ஒரு பண்டிதரை ஏற்பாடு செய்தார். நானும் ராதாவும் கூட அம்மா வுடன் சேர்ந்து உள்ளாவூர் ராமமூர்த்தி சாஸ்திாிகளிடம் படித்தோம்.”

“ஹிந்தி மீரா படப்பிடிப்பின்போது ஹிந்தி வகுப்பு எடுக்க வீழிநாதன் வரு வாாில்லையா? பின்னால் கல்கியில் உதவி ஆசிாியராகவே சேர்ந்து, பல ஹிந்தி நாவல் களை மொழி பெயர்த்தாரே ரா.வீழி நாதன்.”

“ஆமாம்; டயலாக் பேசினால் போதாது; அந்த பாஷையையே தாிெந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான ஈடுபாடு ஏற்படும் என்பது அப்பாவின் கருத்து. அதே போல்தான் சங்கீத விஷயத்திலும். தீக்ஷிதர் கிருதியைப் பாடினால் போதாது; காளிதாசனையும் ரசிக்க வேண்டும்!”

“அம்மாவுடைய விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டுவிட்டு, ‘பல வருஷங்கள் வேத அத்யயனம் பண்ணினவர்கள் கூட இப்படி ஸ்பஷ்டமாக உச்சாிக்க முடியாது’ என்று அக்னிஹோத்ராம் ராமானுஜ தாத்தாச் சாாியார் சொன்னதில் ஆச்சர்யமில்லை” என்றேன்.

“அவர் சுலபமா சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டார்; அதன் பின்னால் இருந்த உழைப்பு பற்றி அவருக்குத் தாிெய வாய்ப்பில்லையே” என்றாள் விஜயா. “ாிகார்ட் ாிலீஸ் ஆவதற்கு முன் அவாிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார்.”

“அம்மா அதற்கு முன்பே வேங்கடேச சுப்ரபாதம் ாிகார்ட் கொடுத்து விட்டாள்; அதுதான் ஆரம்பம். அப்புறம்தான் விஷ்ணு சகஸ்ரநாமம், காமாட்சி சுப்ரபாதம், காசி ராமேஸ்வரம் சுப்ரபாதம், மதுரை மீனாட்சி சுப்ரபாதம் எல்லாம் தொடர்ந்தன. கச்சாிேகள் செய்து கொண்டிருந்த அம்மாவின் வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை. எப்படி ஆரம்பித்தது இந்தப் போக்கு?”

“ஒரு சமயம் திருப்பதியில் சுப்ரபாத தாிசனத்துக்குப் போயிருந்தோம். அப்போது தான் வேங்கடேச சுப்ரபாதத்தை அம்மாவின் குரலில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்பாவுக்கு ஏற்பட்டது. ஆனால், தேவஸ்தானத்தில் அவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்ட வில்லை. சில காலம் சென்று அப்பா மகா பாிெயவாளை சந்தித்த சமயம் தன் எண்ணத்தை வெளியிட்டார். பாிெயவா அருட்கரம் காட்டி, “ராயல்டியை தேவஸ் தானத்துக்கே தந்துவிடு; அவா வேத பாடசாலை நடத்தறா; அதற்குப் பயன் படுத்திக்கட்டும்” என்றார். பாிெயவா சம்மதம் கொடுத்துவிட்டதாகத் தாிெந்த உடனே திருப்பதி தேவஸ்தானத்திலும் பூரண ஒத்துழைப்பு கிடைச்சுது. கோயிலில் சுப்ரபாதம் சொல்கிற தலைமை பட்ட ரையும் இன்னும் இருவரையும் சென் னைக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சுப்ரபாதம் சொல்லக் கேட்டு அம்மா கிரகித்துக்கொண்டாள்.”

காஞ்சி முனிவாின் அருளாசியுடன் எம்.எஸ். அவர்களின் குரலில் பதிவான வேங்கடேச சுப்ரபாதம், இன்று இமயம் முதல் குமாி வரை ஒலிக்கிறது. விற்பனை யில் எல்லா சாதனைகளையும் முறியடித்து திருப்பதி தேவஸ்தானத்துக்கு ராயல்டியை இன்றும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக் கிறது.

Posted in Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Kalki Therthal Editorial: India Parliament Elections 2009

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 15, 2009

அச்சுறுத்தும் இரட்டை அபாயம்! – கல்கி தலையங்கம்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுள் ஒன்றுகூட, நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை களைக் குறித்துப் பேசவில்லை. முதல் பிரச்னை பொருளாதார வளர்ச்சியில் அபாயகரமான பின்னடைவு. இரண்டாவது பிரச்னை, அண்டை நாடான பாகிஸ்தானில் வளர்ந்து வரும் தலிபான் ஆதிக்கம்.

உலகம் முழுவதுமே பொருளாதார நலிவைச் சந்தித்து வருவதால் அது குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என நம் அரசியல் கட்சிகள் முடிவு செய்துவிட்டன போலும்! அதனால்தான் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பற்றியோ வேலை வாய்ப்பு பெருக்கத்துக்கான திட்டங்கள் குறித்தோ பேசுவதற்குப் பதிலாக, மேலும் பல இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் பற்றி அறிக்கைகள் வருகின்றன.

கடந்த பிப்ரவாி மாதத்தில் மட்டுமே ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 22 சதவிகிதம் குறைந்துள்ளன. ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் அடைந்து வரும் நஷ்டத்தால் இதுவரை பத்து மில்லியன் நபர்கள் வேலை இழந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை மேலும் துாிதமாக அதிகாிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதமாகக் குறையும் என்றும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதல பாதாளத்துக்குச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இவை யாவுமே, சராசாி இந்தியனின் வாழ்க்கை, சொல்ல முடியாத அளவுக்குக் கடினமாகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள். ஆனால் இவை பற்றியெல்லாம் ஆலோசிக்க நமது அரசியல்வாதிகளுக்கு ஏது நேரம்? அவர்கள் தங்களுடைய சகிப்புத்தன்மையற்ற பேச்சிலும் நடத்தையிலும் தலிபானுடன் போட்டி போடத் தயாராகிவிட்டார்கள்!

தலிபான், பாகிஸ்தானில் காலூன்றியிருப்பதால் நாம் எதிர்கொள்ளப் போகும் அபாயம் என்னவென்று நம் அரசியல்வாதிகள் சிந்திக்காவிட்டாலும் நாம் விழிப்புற்று எச்சாிக்கை கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் தலிபான் கை ஓங்கினாலும் இந்தியாவுக்கு ஆபத்து (ஏற்கெனவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதியில் அவர்கள் ஊடுருவி விட்டார்கள்); அந்நாட்டில் தலிபான் ஒடுக்கப்பட்டாலும் நமக்கு ஆபத்து – அங்கிருந்து விரட்டப்படுவோர் அண்டை நாடான இந்தியாவுக்குத்தான் வேகமாக வந்து சேர்வர்.

சகிப்புத்தன்மைக்கே இடங்கொடாத, அடிப்படைவாதமும் பிற்போக்குச் சிந்தனையும் வன்முறையும் காட்டுமிராண்டிச் சட்டங்களும் கொண்ட தலிபான், இந்த நாட்டின் அழகான மதச்சார்பின்மை கவசத்தை நொடியில் தகர்த்துவிடும். இங்கு தழைக்கும் பலமத கலாசாரத்தை நாசமாக்கிவிடும்.

ஒரு பக்கம் பொருளாதாரச் சீர்குலைவு அச்சுறுத்தல்; இன்னொரு பக்கம் இந்தத் தலிபான் அபாயம். இதை உணர்வதற்கு, பாிெய தீர்கதாிசனமெல்லாம் தேவையில்லை; சராசாி கவனமும் எச்சாிக்கை உணர்வும் போதும். ஆனால், நம் அரசியல்வாதிகளிடம் அதைக்கூட இனி எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.

ஒரே தீர்வுதான் உள்ளது: இந்தியாவெங்கிலும் உள்ள மூத்த சான்றோர்கள் ஒன்றுகூடி, நாட்டு நலனில் அக்கறை உள்ள ஐம்பது தனி நபர்களை, அரசியல் ஆதாய நோக்கு இன்றி தேர்தலில் நிறுத்தி, அவர்கள் மூலம் நாட்டுக்கான நல்ல திட்டங்களை எடுத்துரைக்கலாம். அந்த நேர்மையாளர் களுள் 25 பேர் வென்றால்கூட அது இந்திய அரசியலில் திருப்புமுனையாக அமையும். ஊழலில் ஊறிப்போன சுயநல அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சாிக்கையாகவும் விளங்கும்.

Posted in Economy, Govt, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

‘Why people are afraid of my son Mu Ka Alagiri in Madurai?’: Karunanidhi Explains to Marxists

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 8, 2009

‘அழகிரியை கண்டு ஏன் இப்படி அஞ்சுகிறார்கள்?’ – கருணாநிதி கேள்வி

சமீபத்திய (இரண்டு வருடம் பழைய) செய்தி:

1. Attack Pandi – Sun TV & Dinakaran Madurai office ransacking: How the innocent employees got butchered? « Tamil News: “மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி?”

2. Kalainjar Karunanidhi & Sun TV Maran bros: Oh Pakkangal – Njaani in Kumudham: “தன் அரசியலுக்காக தன் குடும்பத்தை கலைஞர் பயன்படுத்துவதும், குடும்பம் தன் நலனுக்காக அந்த அரசியலைப் பயன்படுத்திக் கொள்வதும் தொடர் நிகழ்ச்சிகளாகிவிட்டன.”

அழகிரியை கண்டு ஏன் இப்படி அஞ்சுகிறார்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூனி குறுகி…

வீட்டோரத்தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப்பறவைகள் பதம் பார்த்து விடாமல் இருப்பதற்காக ஒரு கலயத்தில் கண்ணும் மூக்கும் எழுதி-அதை ஒரு கொம்பில் குத்தி -அந்தக் கொம்பை ஒரு பானையில் பொருத்தி, அதற்கு ஒரு கிழிந்த சட்டை போட்டு; அந்தப் பூச்சாண்டிப் பொம்மையை தோட்டத்து நடுவில் சிலர் நாட்டி வைப்பார்கள்.

அதாவது அதைப் பார்த்து பயந்து போய், பழங்களைக் கொத்த வரும் பறவைகள் அருகில் நெருங்காமல் அஞ்சி நடுங்கிப் பறந்து போய் விடும் என்பது அந்தச் சில பேரின் எண்ணம். ஆனால் அதற்கு மாறாகத் தோட்டத்துப் பக்கம் பறந்து வரும் சில பறவைகள் காவலுக்கு வைக்கப்பட்ட அந்தப் பூச்சாண்டிப் பொம்மையின் மீதே உட்கார்ந்து எச்சமிட்டுக் கொண்டிருக்கிற காட்சிகளையும் கண்டிருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி பற்றி ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்; இப்போது தான் திக்கித் திணறி, தெண்டனிட்டு – “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்று `சவடால்’ அடிக்கும் சில வீராதி வீரர்கள் – துளியோண்டு தொகுதிகளைப் பெறுவதற்கு அம்மையாரிடம் அலையாய் அலைந்து- கூனிக் குறுகி – கும்பிட்டுத் தொழுது-பெற்று விட்டு பெருமூச்சு விடக் கூட நேரமில்லை!

முன் கூட்டியே முடிவு

ஆசுவாசப்படுத்தி களைப்பு நீக்கிட அருகில் ஆள் கூட இல்லை-அதற்குள் தொகுதி தரும் தோட்டத்துப் பழங்களை, காய்கறிகளை எந்தப்பறவையாவது கொத்தி விடுமென்று “பூச்சாண்டி” பொம்மை காட்டிக் கூத்தடிக்கிறார்கள்.

அய்யோ பாவம், முன்கூட்டியே முடிவை அறிந்து கொண்டு விட்டதால்; பழியை யார் மீது போடலாம் என்று ஆள் தேடுகிறார்கள் – அவர்கள் யார் தெரிகிறதா? ஆம்; ஆலவாயப்பனுக்கும், அன்னை மீனாட்சிக்கும் வைகைக் கரையோரம் அமைந்த தங்கக்கோபுரக் கலசம் போல் தகதகவெனப் பளபளக்கும் கோடிச் செல்வர் குமார மங்கல மாளிகையில் மழலைகளாய்த் தவழ்ந்து; பாட்டனார்- தந்தையார் – மகனார் என்று வம்ச வழி வழித் தோன்றல்களாய் வாய்த்தவர்களுக்குத் தளகர்த்தராய் வாய்த்தவர்கள்.

மறக்க முடியுமா?

பொன்மலை குவித்த பொதுவுடைமை வாதிகள் – நம் தயவினால் புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி பெற்றிருந்த போது; அந்தப் புனிதர்கள், புத்தர்கள்; கணக்கின்றி வாரி யிறைத்த கரன்சி காகிதங்களில் காந்தியடிகள் உருவம்; படமாகத் திகழ்ந்து சிரித்த காட்சி இன்னமும் பசுமையாகத் தெரிகிறது.

மதுரையில் சங்கரராக நின்று சவுராட்டிரர்களின் வாக்குகளைப் பெற்றிட அள்ளிக் கொட்டிய வெள்ளிப்பணம் பற்றித் தெரியாதா யாருக்கும்-அந்தத் தொகுதியில் மனம் கூசாமல் இஸ்லாமியர் வாக்குகளைப் பெற்றிட குல்லாய் அணிந்து சென்ற காட்சியை மதுரை மக்கள் தான் மறக்க முடியுமா?

ஏன் அஞ்சுகிறார்கள்

நமது அழகிரி அங்கே போட்டியிட விரும்பித் தலைமையிடம் விண்ணப்பித்திருக்கிறார் என்றதும்; ஏ யப்பா; என்ன குதி குதிக்கிறார்கள்-அழகிரி; பாவம் அந்தப் பிள்ளையைக் கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள்?

அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா; பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!

அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும்.

“இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே” என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

Posted in Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Renowned economist Raja Chelliah passes away

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 8, 2009

பொருளாதார மேதை ராஜா செல்லையா காலமானார்

தமிழகத்தின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான ராஜா செல்லையா (86) சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

1991-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வரிச் சீரமைப்புக் குழுவின் தலைவராக பணியாற்றினார். தாராளமயமாக்கல் கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கத் தொடங்கிய பிறகு வரிச் சீரமைப்பில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய வரிச் சீரமைப்பு குழுவின் தலைவராக இருந்து பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற செல்லையா, இந்தியா திரும்பியவுடன் பொருளாதாரத்துக்கான தேசிய கவுன்சிலில் முதுநிலை பொருளாதார நிபுணராகப் பணியாற்றினார்.

இவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கெüரவித்துள்ளது. பல பொருளாதார புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

சர்வதேச செலாவணி நிதியத்தில் (ஐஎம்எஃப்) நிதி விவகாரத்துறையின் தலைவராக பணியாற்றியுள்ளார். 1976-ம் ஆண்டு முதல் தேசிய பொது நிதி நிர்வாக மையத்தின் நிறுவன இயக்குநராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

9-வது ஐந்தாண்டு திட்டக் குழுவின் உறுப்பினராகவும் மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிப் பற்றாக்குறை ஆலோசகராகவும், சென்னை பொருளாதார கல்வி மையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை?

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 7, 2009

கருணாநிதி விளக்கம்

ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுமுகம்

2009-ம் ஆண்டு மே திங்கள் 13-ம் நாள் நடைபெறும் 15-வது நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற 21 வேட்பாளர்களின் பட்டியலை-பரபரப்பு எதுவுமின்றி-பத்திரிகையாளர் சந்திப்பு இன்றி-தட்டச்சு செய்து ஏடுகளுக்கு அனுப்பப்பட்டு-அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. நமது அணியின் தோழமைக் கட்சிகள் சார்பில் மற்ற 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுவதும்- செய்தியாளர்கள் அதனை ஒரு கேள்வியாகக் கேட்பதும்- புது முகங்களும் இருப்பார்கள் என்று பதில் சொல்வதும் வாடிக்கையான ஒன்று. இந்த முறையும் அந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டு, புது முகங்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு அளிக்கப்படும் என்று பதில் கூறியிருந்தேன்.

தேர்தலையொட்டி நான் கூறிய இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதை பட்டியலைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆமாம், 21 பெயர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் 13 பேர் 14-வது நாடாளுமன்றத்தில் இடம் பெறாதவர்கள்- கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 15 பேர்களில் 8 பேர்கள் மட்டுமே தற்போதைய பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். அதாவது பழைய முகம் 8 – புதிய முகம் 13.

வருத்தம் அளிக்கிறது

கடந்த முறை பட்டியலிலே இடம் பெற்றிருந்த ஏழு பேர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப் படவில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தம்தான். இதற்கும் அண்ணா கூறிய உவமையைக் கூற வேண்டுமென்றால்- பீரோ நிறைய ஏராளமான பட்டுப் புடவைகள் இருந்த போதிலும்- இன்று செல்லும் இந்தத் திருமணத்திற்கு இந்தக் கலர் பட்டுப் புடவையை எடுத்துக் கட்டிக்கொள்கிறேன் என்றால், அடுத்து இன்னொரு திருமணத் திற்குச் செல்லும்போது மற்றொரு புடவையை எடுத்துக் கட்டிக்கொள்வேன். இன்று இதனைக்கட்டிக்கொள்வதால் மற்றது எல்லாம் பிடிக்காது என்று அர்த்தமல்ல என்று சொன்னதைப் போல இந்தத் தேர்தலுக்கு இவர்கள் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த முறை உறுப்பினர்களாக இருந்த ஏழு பேர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவில்லை என்று எழுதியதில்- தம்பி ரகுபதி, தம்பி வேங்கடபதி, தங்கை சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கை ராதிகா செல்வி ஆகியோர் அமைச்சர்களாகவே பங்கேற்று திறம்பட செயல்பட்டவர்கள்.

இவர்களில் தங்கை சுப்புலட்சுமி ஜெகதீசன் தேர்தலுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே என்னைச் சந்தித்து- “இந்த முறை குடும்ப சூழ்நிலை காரணமாக நான் போட்டியிடவில்லை, வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம்” என்று கைப்பட கடிதமே எழுதி கொடுத்தபோது-இப்படியே ஒவ்வொருவரும் இருந்தால் என்று ஒரு கணம் நினைத்தேன்.

அமைச்சராக இருந்த தம்பி ரகுபதியின் புதுக்கோட்டை தொகுதியே இந்த முறை காணாமல் போய்- புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியே திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குப் போய்விட்டது. அதோடு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி- தம்பி வேங்கடபதி போட்டியிட்ட கடலூர் நாடாளுமன்றத் தொகுதி- தங்கை ராதிகாசெல்வி கோரிய திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி ஆகிய மூன்றும் தொகுதி உடன்பாட்டின்போது காங்கிரஸ் கட்சிக்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்டது.

பெண்களுக்கு முக்கியத்துவம்

இவர்கள் தவிர கடந்தமுறை நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் தலைவர்- பாட்டாளிகளின் நம்பிக்கை நட்சத்திரம் தம்பி குப்புசாமிக்கு; வயது, உடல் நிலை காரணமாகவும்-ஒரு பெண்ணுக்கு இத்தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக தம்பி கிருஷ்ணசாமிக்கும் – புதியவர் ஒருவருக்கு ராமனாதபுரம் தொகுதியிலே வாய்ப்பு தர வேண்டுமென்பதற்காக; தங்கை பவானி ராஜேந்திரனுக்கும் இம்முறை வாய்ப்பளிக்க முடியாமல் போய் விட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் இப்போது பயன்படுத்தப்படாவிட்டாலும், வருங்காலத்தில் அடுத்தடுத்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இவர்கள் வாய்ப்புக்கு உரியவர்களாவார்கள். குறிப்பாக தம்பி கிருஷ்ணசாமி நேற்று காலையில் என்னை சந்தித்து வாய்ப்பு கேட்டபோது- இந்தமுறை பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க முடியாமல் இருக்கிறது, உன் தொகுதியிலாவது உனக்குப் பதிலாக ஒரு பெண்ணை நிறுத்தலாம் என்று நினைக்கிறேன், யாரை நிறுத்தலாம் என்று நீயே யோசனை கூறு என்று சொன்னவுடன், சரி அண்ணே, அழைத்து வருகிறோம் என்று கூறி அவரும் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சிவாஜியும் சென்று- தற்போது நிறுத்தப்பட்டுள்ள சகோதரி காயத்ரி ஸ்ரீதரனை அழைத்து வந்தார்கள்.

அந்தக் காயத்ரி யார் தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும், பிறகு என்னுடனே சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பழம்பெரும் கழக நண்பர் கிண்டி கோபாலின் பேத்தி என்கிறபோது நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எந்த அளவிற்கு தம்பி கிருஷ்ணசாமி பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் என்பதை எண்ணி நான் எனக்குள்ளேயே பெருமைப்பட்டுக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவரது செயல்பாட்டில் எனக்கோ, கழகத்திற்கோ எந்தவிதமான குறைபாடும் இல்லை. இருந்தாலும் தனக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்பதை அவர் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார்.

தூத்துக்குடி

இது போலவே தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பெரியசாமியின் புதல்வர் போட்டியிட மனு செய்திருந்தார். அந்தத் தொகுதியிலிருந்து வந்திருந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் எல்லாம் அவரைத்தான் பரிந்துரையும் செய்திருந்தார்கள். அதற்குப் பக்கத்து தொகுதியான திருநெல்வேலிக்கு மனு செய்திருந்த சகோதரி ராதிகா செல்விக்கு அந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்குப் பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்ட காரணத்தால்-தூத்துக்குடி தொகுதியிலாவது வாய்ப்பு தரலாமா என்றும் யோசிக்கப்பட்டது. அவரிடமும் அதுபற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

அவர் தனக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பதைவிட, அந்தத் தொகுதியிலே கழகம் வெற்றிபெற வேண்டியது முக்கியம் என்பதை நினைவூட்டினார். பின்னர் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பெரியசாமியை வரவழைத்துப் பேசினேன். அப்போது அவர் அண்ணே, நானோ மாவட்டக் கழகச் செயலாளர், என் பெண்ணோ அமைச்சராக இருக்கிறார், இதிலே என் மகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்றால் ஒரு சிலர் அசூயை கொள்ள நேரிடும் என்று அவரே முன்வந்து கூறியதோடு எழுதியும் கொடுத்தார்.

வாய்ப்பு

பின்னர் நான் அவரிடம் நீயே யோசனை சொல், யாரை நிறுத்தலாம் என்று கேட்டபோது, அவரே ஒருவரை அழைத்து வந்து, இவரை நிறுத்தலாம், வெற்றிக்கனியைக் கொண்டு வருகிறேன் என்று சொன்னதின் பேரில்-தன் குடும்ப நலனைவிட, கழகத்தின் நலனைப் பெரிதாகக் கருதிய அந்தத் தம்பியை வாழ்த்திவிட்டு, அவர் அழைத்து வந்தவரையே அந்தத் தொகுதியிலே வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம்.

அவரைப் போலவே வாய்ப்பு கிடைக்காத மற்றவர்களும் பெருந்தன்மையாக இந்தமுறை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அடுத்தமுறை நிச்சயம் கிடைக்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் 1999-ம் ஆண்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தம்பி ஆதிசங்கருக்கு 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக தம்பி வேங்கடபதிக்கு அந்தத் தொகுதியிலே வாய்ப்பு தரப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார்.

கடந்தமுறை வாய்ப்பு தரப்படவில்லை என்பதற்காக தம்பி ஆதிசங்கர் கோபித்துக் கொண்டு சோர்வுற்றுவிடவில்லை. முறையாக கழகப் பணிகளை ஆர்வமுடன் தொடர்ந்து ஆற்றி வந்தார். இப்போது மீண்டும் ஆதி சங்கருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. எனவே அண்ணா சொன்னதைப் போல மாறி மாறி வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும்.

தாங்க முடியாத வலி

நேர்காணல் பணிக்காக இரண்டு நாட்கள் காலை முதல் இரவு வரை சக்கர நாற்காலியை விட்டு நான் இறங்காமல் உட்கார்ந்திருந்ததை உடன்பிறப்பே, நீ நன்கறிவாய். பேராசிரியர் போன்றவர்கள், நீங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பார்க்கிறோம் என்று சொன்னபோது கூட, நான் கேட்கவில்லை. ஏனென்றால் தகுந்தவர்களை தேர்வுசெய்து வேட்பாளர்களாக உன்முன் கொண்டு வந்து நிறுத்தினால், நீ மக்களிடம் சென்று அவர்களுக்காக வாக்குகளை முறையாகச் சேர்க்க முடியுமென்பதற்காகத் தான் என் சிரமத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அமர்ந்திருந்தேன்.

அப்படி அமர்ந்திருந்ததின் விளைவை நேற்று அதிகாலை 3 மணி அளவில் என்னால் உணர முடிந்தது. ஆமாம், அறுவை சிகிச்சை செய்துகொண்ட இடத்திற்கு கீழே இடுப்பு மற்றும் கால் பகுதியில் கடுமையான வலி. வீட்டாரிடமும், மருத்துவரிடமும் வலி பற்றி கூறினால்- தொடர்ந்து பலமணி நேரம் உட்கார்ந்திருந்ததைக் கூறி; அவர்கள் நம்மைத் தான் கோபிப்பார்கள் என்பதற்காக வலியைப் பொறுத்துக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. வலியையும் பொறுத்துக் கொண்டு-இரண்டு மூன்று தொகுதிகளுக்கு சரியான வேட்பாளரை நிர்ணயிக்க முடியவில்லையே என்பதற்காக அந்த இரவு நேரத்தில் தம்பி துரைமுருகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரையும், சில மாவட்டக் கழகச் செயலாளர்களையும் வரச்செய்து பேசினேன். தொடர்ந்து அதே நேரத்தில்தான் திருவள்ளூர் தொகுதி பற்றி சிந்தித்து, மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சிவாஜியையும், தம்பி கிருஷ்ணசாமியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை நேரில் வரச்செய்து, அந்த தொகுதி பற்றி முடிவெடுத்து அறிவித்தோம்.

பட்டதாரிகள்

கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 21 வேட்பாளர்களில் ஒருவரைத் தவிர அனைவருமே பட்டதாரிகள்- ஒரு சிலர்பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். கழகத் தலைமையின் சார்பில் தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி தொகுதி உடன்பாடு கண்டு-தேர்தல் அறிக்கை வெளியிட்டு-வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்துவிட்டோம். வாக்காளர்களிடம் சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளைப் பட்டியலிட்டு-இத்தகைய சாதனைகள் மேலும் தொடர்ந்திட இந்த அணியினை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டு வெற்றியைத் தேடித்தர வேண்டிய பொறுப்பு கூட்டணிக் கட்சிகளின் முன்னணி தோழர்களுக்கும் இருக்கிறது. அந்தப் பணியிலே அவர்கள் எல்லாம் ஈடுபட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கான உந்து சக்தியை நமது தோழமைக் கட்சிகளான அனைத்துக் கட்சி உடன்பிறப்புகளுக்கும் வழங்க வேண்டிய பொறுப்பு உனக்கு உண்டு என்பதை மறவாதே – தேர்தல் களம் அழைக்கிறது, புறப்படு!

இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Panruti Ramachandran thwarted merger of DMK with MGR’s ADMK: Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 1, 2009

திமுக, அதிமுக இணைவதைக் கெடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் – கருணாநிதி

திமுகவும், அதிமுகவும் இணைய பிஜூ பட்நாயக் மேற்கொண்ட முயற்சிகள் கூடி வந்த வேளையில், பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர். மனதை மாற்றி அதைக் கெடுத்து விட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் 2008-ம் ஆண்டுக்கான கலைஞர் விருது மற்றும் முரசொலி மாறன் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் சோலை மற்றும் புகைப்பட நிபுணர் யோகா ஆகியோருக்கு கலைஞர் விருதுகளையும், முரசொலி மாறன் சிறப்பு விருதினை நடிகர் தியாகுவுக்கும் கருணாநிதி வழங்கினார்.

விருது பெற்ற அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. முன்னதாக, ஈழத்தந்தை செல்வாவின் 112-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்தையும் கருணாநிதி திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,

வீரமணி சொன்ன புதிய செய்தி

உங்களுக்கெல்லாம் ஒரு புதிய செய்தியை இங்கே வீரமணி சொன்னார். ஆனால் அவர் சொல்லும் வேகத்திலே ஒன்றிரண்டை விட்டுவிட்டார் என்று கருதுகின்றேன்.

திமுக-அதிமுக இணைப்பு முயற்சி..

திராவிட இயக்கம் ஒன்றாக விளங்க வேண்டும் என்று, அதனை இரண்டாக ஆக்கியவர் (எம்ஜிஆர்) எண்ணினார்- அதற்கு முயற்சி மேற்கொண்டோம் என வீரமணி குறிப்பிட்டார். ஒன்றாக ஆகவேண்டும் என்று அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முயற்சி மேற்கொண்டு, அதற்கு தமிழர் தலைவர் வீரமணியை நீங்கள் அந்த காரியத்தை செய்ய வேண்டுமென்று கேட்டபோது, நடந்த சில விஷயங்களை முழுமையாக சொல்ல விரும்புகிறேன்.

அப்படி ஒரு முயற்சியை ஒரு தேர்தல் நேரத்தில்-நம்முடைய அன்புக்கும், மதிப்புக்கும் உரிய பிஜு பட்நாயக் அந்த முயற்சியை மேற்கொண்டு, ஏன் திமுகவும், அதிமுகவும் ஒன்றாகக் கூடாது என்று கேட்டார். இது யாருடைய சிந்தனை என்று கேட்டபோது, நான் எம்ஜிஆரிடம் பேசிவிட்டேன். உன் நிபந்தனை என்ன என்று கேட்டார்? நீங்கள் பேசியதும் நண்பர் எம்ஜிஆர் ஒப்புக்கொண்டதும் உண்மை என்றால் என் நிபந்தனையை கேளுங்கள் என்றேன்.

எனது நிபந்தனைகள்

இரண்டு கட்சிகளுக்கும் தலைவராக நான் இருப்பேன்.

ஏன் என்றால் இந்த இரண்டு கட்சிகளின் ஆரம்பகாலத்தினுடைய அடிப்படை கொள்கைகளை- கட்டிக்காக்க கூடிய அந்தத் தலைமை என்னிடத்திலே இருந்தால்தான்- அதை கட்டிக் காக்க முடியும். இப்போது இருப்பதைப் போலவே முதல்வர் பொறுப்பில் அவரே நீடிக்கட்டும் என்றேன்.

அப்படியா என்று கேட்ட அவர், பிறகு என்ன நிபந்தனை என்று கேட்டார். ஒன்றும் பெரிய நிபந்தனை அல்ல. கொடியிலே அண்ணாவின் படம் போட்டிருக்கிறார்கள். அது நீடிக்கட்டும். திடீரென அண்ணா படத்தை எடுக்கச் சொன்னால், அண்ணா படத்தை வேண்டுமென்றே கருணாநிதி எடுத்துவிட்டான் என்று சிலர் கோள் மூட்டுவார்கள், ஆகவே அண்ணா படம் கொடியில் அப்படியே இருக்கட்டும் என்று சொன்னேன்.

வேறு என்ன நிபந்தனை என்றார்? பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ, உரிமை பெற, சலுகைகளை அனுபவிக்க, எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய நன்மைகள், அவர்களுக்குக் கிடைக்க, கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்கள் சமூகரீதியாக இன்று பெற்று வருகிற இடஒதுக்கீடு-கல்லூரிகளில், பள்ளிகளில், பல்கலைக் கழகங்களில் பெறுகின்ற இடஒதுக்கீடு- இப்போது எம்.ஜி.ஆர். திடீரென கொண்டு வந்திருக்கிற பொருளாதார அடிப்படையில் பாழ்படுகிறது.

ஆகவே, 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளவன் ஒரு சாதி. அதற்கு கீழே வருமானம் உள்ளவன் ஒரு சாதி என்று பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வது கூடாது, சமூக அடிப்படையில் அவர்களுடைய தகுதியை பிரித்து இந்த, இடஒதுக்கீடு தரப்படவேண்டும்,

அதற்கு ஒத்துக் கொள்கிறாரா? என்று கேளுங்கள் என்றேன்.

என்ன ஆண்டவரே…

நான் இப்போதே போய் எம்.ஜி.ஆரிடம் போய் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லி- இவர் சென்று, சேப்பாக்கம் கெஸ்ட் அவுசுக்கு எம்ஜிஆரை அழைத்துக் கொண்டு வந்தார். அங்கு நான் ஒரு அறையில் இருக்கிறேன். மற்றொரு அறையில் எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியன், இன்னொருவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இருந்தாலும் சரித்திரம் முழுமையாகாது. பண்ருட்டி ராமச்சந்திரன். இவர்கள் இன்னொரு அறையில் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு

எம்ஜிஆர் என்னுடைய அறைக்கு வந்தார். அவர் என்னை பார்த்தால் என்ன முதலாளி? என்பார், இல்லாவிட்டால் என்ன ஆண்டவனே? என்பார். இப்படித்தான் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். அவர் என்னை பார்த்ததும், என்ன ஆண்டவரே? பிஜு பட்நாயக்கிடம் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார்.

நான் சொன்னேன்- இந்த இரு கழகங்களும் ஒன்றாக இணைந்தால், அண்ணா இட்ட பெயரே, தி.மு.கவே நீடிக்க வேண்டும் என்று சொன்னேன். கொடியை பொறுத்தவரையில் நீங்கள் வைத்த அண்ணாவின் உருவம், நீடிக்கட்டும் என்றேன். நீங்களே முதல்வராக நீடிக்கலாம் என்று சொன்னேன். இந்த 9,000 ரூபாய் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை உடனே வாபஸ் பெறவேண்டும் என்றேன்.

அதற்கு அவர், நான் இன்று வேலூர் போகிறேன். நாளைக்கு பக்கத்தில் ஒரு ஊரில் எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. நீங்களும் சென்னையில் அதே நேரத்தில் அவசர செயற்குழுவைக் கூட்டுங்கள். அங்கே, எங்கள் செயற்குழு நடைபெறும் நேரத்தில் நாளை மறுநாள் உங்கள் செயற்குழுவும் இங்கே நடைபெறட்டும்.

நாம் பேசிக் கொண்ட நிபந்தனைகளை வைத்து, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை தொலைபேசியில் எங்களுக்குச் சொல்லச் செய்யுங்கள். நாங்களும் அதே தீர்மானத்தை நிறைவேற்றி, இரு கட்சிகளும் ஒன்றாக ஆகலாம் என்று சொன்னார்.

காரியத்தைக் கெடுத்த பண்ருட்டி ராமச்சந்திரன்…

சொல்லிவிட்டு வேலூர் சென்றார். காரில் சென்றபோது என்ன நடந்ததோ எனக்கு தெரியாது. காரிலே அவரோடு சென்றவர், காதுக்குள்ளே புகுந்தார். கருத்தை மாற்றினார். வேலூர் பொதுக்கூட்டத்திலே எம்ஜிஆர் பேசும்போது, மாலை பத்திரிகையில் நானும், கருணாநிதியும் இணைய போகிறோம். திமுகவும், அதிமுகவும் இணையப்போகின்றன என்று வந்துள்ள செய்தியை யாரும் நம்பாதீர்கள் என்று ஒரு செய்தியை அங்கே வெளியிட்டார்.

காரில் நடந்த மர்மம்

நான் உங்களுக்கு சொல்கிறேன். இது எப்படி விளைந்தது என்று கேட்டால் அப்போதே சொன்னேன்-நான் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் என்று- அவரும் அந்த காரில் சென்றார். அதனுடைய விளைவு இந்த முடிவுக்கு காரணமாக ஆனது.

ஆக, திராவிட இயக்கம் என்பது ஒரு கொள்கை அடிப்படையில்தான் இயங்க முடியும். ஆனால் ஒரு கொள்கை, ஒரு லட்சியம் இவற்றுக்காக பாடுபடுகின்ற இந்த இயக்கம்-அந்த போரிலே வெற்றி பெறுகிற வரையில் யாருக்கும், எந்த நேரத்திலும் கொள்கையிலே ஒரு துளியும் விட்டுத் தராது, லட்சியத்திலே ஒரு துளியும் விட்டுத் தராது, லட்சியத்திலே சிறிதும் துவண்டுவிடாது.

ஈழத்தந்தை செல்வா

இந்த இனிய விழாவில் நம்முடைய நண்பர் தந்தை செல்வா அவர்களுடைய புதல்வர் சந்திரஹாசன் வருகை தந்து நமக்கெல்லாம் பெருமையை ஏற்படுத்தியிருக்கிறார். தந்தை செல்வா அவர்கள் 1972ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். எதற்காக? இலங்கையிலே அவதிப்படுகிற மக்களுக்கு- இலங்கையிலே அடிமைப்படுத்தப்பட்டிருக்கிற தமிழ் இனத்துக்கு- உரிமைகளைக் கேட்க-அதற்காக துணைபெற இங்கே பெரியாரை காண, அதைத் தொடர்ந்து என்னைக் காண இங்கே வந்தார்.

அவர் அன்றைக்கு புரிந்த தொண்டின் காரணமாக- ஆற்றிய பணியின் காரணமாக- அடிமைப்பட்டு கிடக்கிற இலங்கை தமிழர்களுக்கு சுதந்திர உணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் உருவாக்கிய தமிழ் ஈழம் என்ற அந்த கொள்கை பரவுவதற்காக இங்கே வந்தார். ஆனால் 72ம் ஆண்டிலே வந்தார். பிறகு, ஐந்தாண்டுகளுக்கு பிறகு அவர்கள் மறைந்தார்.

ஈழ வரலாறு தெரியாதவர்கள்

அவர்கள் மறைந்தபோது அதாவது 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய உடன்பிறப்பு கடிதத்தில், செல்வா மறைந்துவிட்டார். எனினும் அவரால் உருவாக்கப்பட்ட ஆற்றல் மிகு தலைவர்கள், தளபதிகள், வீரக்கவிஞர்கள், இலட்சிய காளைகள் பலர் இருக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக செல்வா ஆற்றிய பணியை அவர் வழியில் மற்றவர்கள் தொடர்வார்கள்.

அவர் காத்திட்ட அமைதி அதேநேரத்தில் தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழி அமைத்திட அவர் ஓயாது வழங்கிய உழைப்புஇவை என்றென்றும் அந்த தியாக செல்வத்தை உலகத் தமிழர்களின் நெஞ்சத்தில் அணையாத தீபமாக ஆக்கி வைத்திருக்கும் என்பது மட்டும் உறுதி என்று எழுதினேன்.

இந்த வரலாறு தெரியாதவர்கள் செல்வா மறைந்த செய்தி புரியாதவர்கள் செல்வா பட்ட பாடு என்னவென்று படிக்காதவர்கள் இன்றைக்கு இலங்கையை பற்றி நமக்கு என்ன தெரியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை, ராவணன் ஆண்ட பூமி மாத்திரமல்ல என் தமிழனும் ஆண்ட பூமிதான். அந்த இலங்கையிலே ஈழத் தமிழர்கள் மீண்டு வாழ எந்த ஏற்பாடுகளை உலக நாடுகள் ஒன்று கூடிச் செய்தாலும் அதற்கு வழி வகுக்க, ஆலோசனைகளைக் கூற, அறிவுரைகளை வழங்க, பக்கத் துணை நிற்க என்றென்றும் தமிழகம் தயாராக இருக்கின்றது, திமுகவும் தயாராக இருக்கிறது என்றார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர் விருப்பம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது ஏற்புரையில், “என்னை பாராட்டி மு.க. ஸ்டாலின் பேசும்போது மணப்பெண் போல் தலை குனிந்திருந்தேன். மிசா காலத்தில் சிறையில் நாங்கள் அடைபட்டிருந்தபோது இரவு 9 மணி அளவில், போலீசார் தாக்கி என் மீது ரத்தம் தோய்ந்த நிலையில் தள்ளப்பட்ட ஒரு உருவம்தான் ஸ்டாலின். இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் கூட்டணி சேர வேண்டும் என்பதற்காக வந்தவர்கள் அல்ல. தி.மு.க.வுடன் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரான பிறகு தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் இணைக்க விரும்பினார். அதற்காக நான் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் தூது சென்றேன். அவரிடமும் பேசினேன். ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. இந்த விழாவில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள ரூ.1 லட்சத்தை, பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறந்த இதழியலாளர்களை உருவாக்குவதற்காக அவர்களுக்கு பயிற்சி வகுப்பினை தொடங்குவதற்காக, வழங்குகிறேன். அந்த பயிற்சி வகுப்புக்கு கலைஞர் புரவலராக இருப்பார்” என்றார்.

மு.க.ஸ்டாலின்

முன்னதாக, பேசிய முரசொலி அறக்கட்டளைத் தலைவர் ஸ்டாலின், “ஒவ்வொரு ஆண்டும் முரசொலி சார்பில் கலைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் முப்பெரும்விழாவையொட்டி, பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவிப்புப் போட்டியை மாணவர்களுக்கும் நடத்தி பரிசு வழங்கி வருகிறோம். இதுவரை 5,594 மாணவர்கள் பரிசு பெற்றுள்ளார்கள். இதுபோல் இதுவரை 238 சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ரூ.10.5 லட்சம் பரிசும், விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் கலைஞர் விருது பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு இதுவரை ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த விழாவுக்கு நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விருது பெற்றவர்களின் சாதனைக் குறிப்பை வாசித்து, வாழ்த்துரையை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். எஸ்.ஏ.எம். உசேன், நன்றியுரை வழங்கினார். இதில், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், டி.ஆர். பாலு உள்ளிட்ட மத்திய மந்திரிகள், கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜாத்தி அம்மாள் மற்றும் முரசொலி அறக்கட்டளை உறுப்பினர் செ.குப்புசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | 7 Comments »

Traffic Ramasamy attacked for asking Lawyers to Return to work: Public interest writ petition filed by social activists

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

டிராபிக் ராமசாமியை தாக்கியதாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸôருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலை அடுத்து, வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அனுமதிக்கப்படாத இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு புகார் தந்தி அனுப்பியுள்ளார்.

இது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | 1 Comment »

‘Self Immolations for Tamil Eelam: Congress is Responsible’ – Pazha Nedumaran on 14 dead

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

14 பேர் உயிரிழந்ததற்கு மத்திய அரசே பொறுப்பு: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர்களுக்காக 14 பேர் தீக்குளித்து இறந்ததற்கு மத்திய அரசுதான் பொறுப்பாளி என்று குற்றம்சாட்டினார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

அரியலூர் மாவட்டம், தத்தனூர் கீழவெளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை, இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளித்து இறந்த பாமக தொண்டர் செ. ராஜசேகரனின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் பழ. நெடுமாறன் மேலும் பேசியது:

“”தியாகிகளின் தியாகங்களை மதிக்காவிட்டாலும் கொச்சைப்படுத்தக்கூடாது.

தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் 14 பேரின் உயிரிழப்புக்கும் பொறுப்பாளி மத்திய அரசுதான். இதன் விளைவு வரும் மக்களவைத் தேர்தலில் உணர்த்தப்படும். ராஜசேகரனின் மரணம் ஈடுசெய்ய முடியாததுதான் என்றாலும், அவரது குடும்பச் சூழல் கருதி சிறு உதவியாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் விரைவில் வழங்கப்படும்” என்றார் பழ. நெடுமாறன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்: “”இவையெல்லாமும் சகித்துக் கொள்ள முடியாத கொடுமை என்றாலும்கூட, தீயில் வெந்து சாக வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவு, அவர்களது மன வேதனையின் உச்சத்தைக் காட்டுகிறது.

பாமக தலைவர் கோ.க. மணி: முத்துக்குமார் தொடங்கி ராஜசேகரன் வரை தீக்குளித்து உயிரிழந்தவர்களின் நோக்கங்கள் நிறைவேறும் வரை வீரமுள்ள, மானமுள்ள தமிழர்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

Posted in Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

Bihar raw deal: Tit for tat: Cong seals deal with JMM in Jharkhand: Shibu Soren to fight both LS and assembly polls

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

ஜார்க்கண்டில் பங்கீடு: காங்கிரஸ்-7, ஜே.எம்.எம்.-5

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 7 மக்களவைத் தொகுதியிலும், சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 5 இடங்களிலும் போட்டியிடும். லாலு பிரசாத் கட்சிக்கு எஞ்சிய 2 தொகுதிகள் விடப்பட்டுள்ளன. இம் மாநிலத்தில் மொத்தமே 14 மக்களவைத் தொகுதிகள்தான்.

பிகாரில் காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் அதற்கு 3 தொகுதிகளை மட்டுமே விட்டுவைத்துவிட்டு எஞ்சியவற்றை லாலு பிரசாதும் ராம்விலாஸ் பாஸ்வானும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். அதற்குப் பதிலடி தருவதைப்போல இந்த ஒதுக்கீடு அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு நடந்த பேச்சில் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளும் லாலு கட்சிக்கு 3 தொகுதிகளும் தரப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இப்போது லாலு கட்சிக்கு ஓரிடத்தைக் குறைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடத்தை அதிகப்படுத்திவிட்டனர்.

லாலு இதை ஏற்பாரா என்று தெரியவில்லை.

கோதர்மா, ஹஸôரிபாக் ஆகிய இரு தொகுதிகள் யாருக்கு என்பதில்தான் காங்கிரஸ் ஆர்ஜேடி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி இருந்தது. கடந்த முறை கோதர்மாவில் பாபுலால் மராண்டியும், ஹஸôரிபாக் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றன. பாபுலால் மராண்டி முன்னாள் பாஜக தலைவர். சுயேச்சையாக கோதர்மாவில் வென்றார். ஹஸôரிபாக்கில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே இல்லை. எனவே இத் தொகுதிகளைப் பெறுவதில் இரு கட்சிகளுக்கும் இடையில் போட்டி நிலவியது.

இந்த இரண்டைத் தவிர எஞ்சிய 12 தொகுதிகளும் காங்கிரஸ் ஜேஎம்எம் ஆர்ஜேடி ஆகிய 3 கட்சிகளுமே போட்டியிட்டு வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Reporters Woes in covering the upcoming India Elections 2009: Media Pass from EC

Posted by Snapjudge மேல் மார்ச் 18, 2009

நிருபர்களுக்கு தடை போடுகிறது தேர்தல் ஆணையம்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான கெடுபிடிகளை அமல்படுத்தி வருகிறது.

வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை நியாயமாக, நேர்மையாக நடக்கிறதா என்பதற்கு பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் சாட்சி. ஆனால், மே மாதம் நடக்கும் மக்களவைத் தேர்தலில் அந்த சாட்சிகள், முன்பு போல வாக்குச் சாவடிக்குள்ளோ, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள்ளோ எளிதில் சென்று எதையும் பார்க்க முடியாது.

ஒரு தொகுதிக்கு ஒரு நிருபர், ஒரு புகைப்படக்காரர் என்ற அளவில் முன்பு தேர்தல் ஆணையம் அங்கீகார அட்டை கொடுத்ததால் பல பகுதிகளுக்குச் சென்று செய்தி சேகரிக்க முடிந்தது. நிருபர்கள், புகைப்படக்காரர்கள் நடமாட்டம் இருக்கும் என அரசியல் கட்சிகளும் சற்று கவனமாகவே இருந்தன.

ஆனால், இப்போது ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருபர் அல்லது புகைப்படக்காரர் மட்டும்தான் இந்த அங்கீகார அட்டை பெற முடியும்.

சென்னை மாவட்டத்தில் 3 தொகுதிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை வெவ்வேறு இடங்களில் நடக்கும். ஆனால் ஒருவர் மட்டும் எல்லா இடங்களையும் பார்ப்பது சிரமம்.

இது அரசியல் கட்சிகளுக்கு மிகவும் வசதியான ஏற்பாடாக அமைந்துவிடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதிலும்கூட தொலைக்காட்சிகளுக்கு இரண்டு பேருக்கு அங்கீகார அட்டை தர முன்வந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

நியாயமான, நேர்மையான தேர்தல் நடப்பதை உறுதி செய்கிறோம் என்று கூறி, வேட்பாளருடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு, செலவுக்கு வரம்பு, பிரசாரத்துக்கு வரம்பு என அறிவித்துவிட்டு, அதைக் கண்காணிப்பதில் உதவியாக இருக்கும் செய்தியாளர்களுக்கு தடை விதித்ததைப் போன்ற நிலையை உருவாக்குவது சரியில்லை என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையம் இதுபற்றி மறு பரிசீலனை செய்து முன்புபோல தாராளமாக வாக்குச் சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை தருவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கலாமே தவிர, எண்ணிக்கையைக் குறைப்பது சரியாக இருக்காது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

Posted in Govt, India, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 1 Comment »

CPI(M) Election Manifeto released

Posted by Snapjudge மேல் மார்ச் 17, 2009

ஆட்சியில் பங்கு பெறுவோம்: காரத்

தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத். உடன் கட்சியின் முன்னணித் தலைவர்கள் (இடமிருந்து) பிருந்தா காரத், சீதாராம் யெச்சூரி, எம்.கே. பாண்டே, முகமது அமின்.

புது தில்லி, மார்ச் 16: மத்தியில் மூன்றாவது அணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தால், அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

மத்தியில் பாஜக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக கூறிய அவர், அதை விவரிக்க மறுத்து விட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டு அவர் மேலும் கூறியது:

மூன்றாவது அணி ஆட்சியமைத்தால் வழக்கம்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தருமா? அல்லது அமைச்சரவையில் இடம்பெறுமா? என்று கேட்டதற்கு, அமைச்சரவையில் சேரும் வாய்ப்புகளை புறக்கணிக்க முடியாது என்றார்.

இதற்கு முன்னர் ஏற்பட்ட காங்கிரஸ் அல்லாத மத்திய அமைச்சரவையில் (தேவ கெüட மற்றும் ஐ.கே. குஜ்ரால்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) இடம்பெறவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றது.

மூன்றாவது அணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று குறிப்பிட்ட காரத், இந்த அணிக்கு யார் வருவார்கள், யார் வரமாட்டார்கள் என்பதை இப்போதே கூற முடியாது. மூன்றாவது அணி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அதேபோல இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது நாட்டை பாதிக்கும் விஷயங்கள் மாற்றப்படும்.

ஸ்விட்சர்லாந்து வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டுள்ள இந்தியர்களின் பட்டியலை வெளிக் கொணர காங்கிரஸ் அரசு முயற்சிக்க வேண்டும். மூன்றாவது அணியில் ஒன்று திரண்டுள்ள கட்சிகள் அனைத்தும் ஒரு பொது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இணைந்துள்ளன. தில்லியில் மாயாவதி ஞாயிற்றுக்கிழமை அளித்த விருந்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்றாலும், விருந்தில் பேசப்பட்ட விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளில் அவருக்கு முழு உடன்பாடு உள்ளது.

மதச்சார்பின்மையைக் காப்பது, கட்டுப்படுத்தப்பட்ட தாராளமயம், சுயசார்புடனான வெளியுறவுக் கொள்கை ஆகியன மூன்றாவது அணி ஏற்றுக் கொண்ட முக்கியமான கொள்கைகளாகும்.

குறைந்தபட்ச செயல்திட்டத்தை அமல்படுத்தும் ஒரு அணியாக மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தபோதிலும், தொடர்ந்து எதிர்ப்பையும் மீறி பணக்காரர்களுக்கு சாதகமான கொள்கைகளையே மன்மோகன் சிங் செயல்படுத்தினார் என்று கடுமையாக சாடினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகிவிட்டனர். குறைந்தபட்ச செயல்திட்டத்திலிருந்து விலகியதே இதற்குக் காரணம். நாட்டில் ஏழை, பணக்காரர்களிடையிலான இடைவெளி அதிகரித்ததற்கு மன்மோகன் சிங் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணமாகும்.

இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால்தான் தனியார் வங்கிகளின் முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்தாமல் விட்டனர். அதேபோல காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய முதலீடு 49 சதவீதமாக உயர்த்துவது தடுக்கப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே தேர்தலை சந்திப்பது புதிய விஷயமல்ல. இந்த முடிவை கடந்த செப்டம்பரிலேயே மாயாவதி கூறிவிட்டார். மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கூட்டு சேருமா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் காரத்.

சந்தர்ப்ப வசத்தால் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருந்த தெலுங்கு தேசம் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முந்தைய கூட்டணியிலிருந்து பாடம் கற்றுவிட்டன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நிச்சயம் இருக்கும்.

ஜார்க்கண்ட் விகாஸ் மஞ்ச் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் தற்போது மூன்றாவது அணியில் இணைந்துள்ளது மேலும் வலுசேர்த்துள்ளது என்றார் காரத்.

பொது விநியோகத் திட்டம் நாடு முழுவதும் ஒரே சீராக அமல்படுத்தப்படும். பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படும். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழைவது தடுக்கப்படும். காப்பீட்டுத் துறை தனியார் மயமாகாது. ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். தேர்தலுக்கு தனி நிதியம் ஏற்படுத்தப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நிதி அளிப்பது தடுத்து நிறுத்தப்படும். ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Posted in Economy, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | 1 Comment »