Dr Ramadas speech in PMK’s 50th anniversary of Tamil Nadu state creation
Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை வர வேண்டும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
தமிழ்நாடு உருவான 50-வது ஆண்டு விழா பா.ம.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை தி.நகரில் நடந்த இந்த விழாவுக்கு ஜி.கே.மணி தலைமை தாங்கினார். ஏ.கே.மூர்த்தி எம்.பி. வரவேற்றார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதில் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ்நாடு உருவான 25-வது ஆண்டு கொண்டாடிய பிறகு 50-வது ஆண்டில்தான் மீண்டும் கொண்டாடுகிறோம். ஆனால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் ஆண்டு தோறும் விழா நடத்துகிறது.
அடுத்த ஆண்டு முதல் பா.ம.க. ஒவ்வொரு ஆண்டும் இதை விழாவாக கொண்டாடும். தமிழ்நாடு உருவான பொன் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத் தேன். அதை அவர் ஏற்று கொண்டு அரசு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்து இருக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக எல்லையை காக்க நேசமணி, மா.பொ.சிவஞானம் போன்ற எத்தனையோ தலைவர்கள் போராடினார்கள். ராஜாஜியால்தான் சென்னை நமக்கு கிடைத்தது. தமிழ்நாட் டில் மட்டுமல்ல மத்தியிலும் தமிழ் ஆட்சி மொழியாக வர வேண்டும் என்று குரல் கொடுத்தோம்.
50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வரும் தீர்மானத்தை சி.சுப்பிரமணி யம் சட்டசபையில் அறிவித்து பிறவி பயனை அடைந்ததாக கூறினார்.
ஆனால் இன்று வரை நாம் பிறவி பயனை அடைய வில்லை. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கூச்சல் இடையில் தோன்றி மறைந்து விட்டது.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற உண்மையான நிலை உருவாக வேண்டும். தமிழ் ஆட்சி மொழியாகவும், நீதிமன்றங்களிலும் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் இடம் பெற வேண்டும். இதற் காக போராடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் போராட வேண்டும்.
தமிழை காப்பதற்காக ஆஞ்கிலம் வேலியாக அமையும் என்று கூறினார்கள். ஆனால் ஆங்கிலம் தமிழ் பயிரை மேய்கிறது. இதை சொன்னால் என் மீது பாய்கிறார்கள்.
மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வர வற்புறுத்தி வருகிறோம். விமான அறிவிப்புகள் தமிழில் வர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.
மத்திய அரசு தமிழ் அறிஞர்களுக்கு வழங்கும் விருதை தொல்காப்பியர் விருது, திருவள்ளுவர் விருது என்ற பெயரில் வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். இது நிச்சயம் நிறைவேறும். அனைவரும் சேர்ந்து தமிழை வளர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தமிழ் அறிஞர் கள் அரு.கோபாலன், தெய்வ நாயகம் உள்பட பலர் பேசி னார்கள். திருகச்சூர் ஆறுமுகம் எம்.எல்.ஏ., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெய ராமன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்