Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘50’ Category

State of India – Public Policy, Planning commission goals, Regional Development: N Vittal

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

மக்களுக்காகவே நிர்வாகம்!

என். விட்டல்

இந்தியா என்ற ஒரு தேசத்தை இணைப்பது எது என்று கேட்டு தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது ஒரு பத்திரிகை. இந்தியச் சுதந்திர தினத்தின் வைர விழாவையொட்டி இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியாவை இணைப்பது அதன் கலையா, கலாசாரமா, பண்பாடா, வரலாறா என்று பல கேள்விக் கணைகளை எழுப்பின அக்கட்டுரைகள்.

சுதந்திரம் அடைந்த பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அழைக்கிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை 1. பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. 2. பிரிட்டிஷ் மகாராணியைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமாக ஆட்சி நடத்திய 600 சுதேச சமஸ்தானங்கள். 3. வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், வட-கிழக்கு மாநிலங்கள். இங்கு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி கிடையாது. ஒரு ஏஜெண்ட் மட்டும் இருந்தார். வட-மேற்கும் வட-கிழக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

மாகாணங்கள் என்ற அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்டதே சுவையான வரலாறு. வட இந்தியாவில் வசித்தவர்கள், விந்திய மலைக்குத் தெற்கில் வசித்த அனைவரையும் மதறாசி என்ற ஒரே பெயரில் அழைத்தனர். மதறாஸ் மாகாணம் என்பதில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் சேர்ந்திருந்தன. எனவே மலையாளி, தெலுங்கர், கன்னடியரைக்கூட மதறாசி என்றே வட இந்தியர்கள் அழைத்தனர்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. தங்களுடைய தாய்மொழி மீது கொண்ட பற்றினால் மக்கள் இப்படி மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதை விரும்பினர். அப்படிப் பிரித்ததே சில இடங்களில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அது, கலாசார ரீதியாகக் குறுகிய மனப்பான்மையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. இன, பிராந்திய அடையாளங்கள் புதிதாக உருவாயின.

தனி நாடு கோரிய திமுக, சீனப்படையெடுப்புக்குப் பிறகு “திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டது. அதே சமயம், “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை முன்னே வைத்தது. இப்போது மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியான காங்கிரஸýடன் இணைந்து மத்தியில் கூட்டணி அரசு அமைத்துள்ளன. திமுகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதாகக் கூட இதைக் கருதலாம்.

தேசப் பாதுகாப்பு, தனி மனிதப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய மூன்றும் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை எல்லா அரசுகளும் எல்லா தனி மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். 1991-க்குப் பிறகு பொருளாதார தாராளமயம் அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு மிகவும் அவசியம். இவற்றை அளிக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது.

அடித்தளக் கட்டமைப்பு என்றவுடன் தொலைத்தொடர்புத் துறைதான் முதலில் நினைவுக்கு வருகிறது. அது எப்படி வளர்ந்து பரவிவிட்டது! அடுத்தது ரயில்வே துறை. சரக்குகளைக் கையாள்வதில் திறமையும் வருவாய் ஈட்டுவதில் சாமர்த்தியமும் காட்டி, உபரி வருவாயைப் பெற்றுள்ளது ரயில்வேதுறை.

ரயில்வேயும் தொலைத்தொடர்புத் துறையும் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவை. இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத பல துறைகளில் வளர்ச்சி திருப்திகரமாகவும் சீராகவும் இல்லை. மின்சாரத்துறையையே எடுத்துக் கொள்வோம். என்.டி.பி.சி., பவர் கிரிட் என்ற இரு மத்திய நிறுவனங்களும் திறமையான செயல்பாடு, குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பது ஆகிய சிறப்புகளுக்காகப் புகழ் பெற்றவை. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார வாரியங்கள் நிதி நிலைமையில் மிகவும் பின்தங்கியும், ஏராளமான கடன் சுமையிலும் தள்ளாடுகின்றன. இதற்குக் காரணம் அந்த மின்வாரியங்கள் அல்ல. இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் அவற்றின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாகிவிட்டன.

வாக்குவங்கியைக் குறிவைத்துச் செயல்படும் மாநில அரசியல்கட்சிகளால் மின்சார வாரியங்கள் பலிகடாவாகிவிட்டன. மிக முக்கியமான மின்னுற்பத்தித் துறையை இப்படி விடுவது சரிதானா? ரயில்வே, தொலைத் தொடர்பு போல மின்சாரத்துறையையும் மத்திய அரசே தன் பொறுப்பில் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதற்காகக் கூறப்படும் யோசனை அல்ல. பொருளாதார வளர்ச்சிக்காகவே கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர்வளத்துறையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி நிதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு வலுவாகத் தலையிட முடியும்.

வளர்ச்சிக்கு அடுத்தபடியாக ஆனால் வளர்ச்சியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மனிதனின் உயிருக்குப் பாதுகாப்பு தருவது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் விவகாரம் அல்லது குற்றச்செயல் என்றால் உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது வழக்கமாகிவருகிறது. சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலப் போலீஸôர் மீது நம்பிக்கை இல்லை, மத்திய துணை நிலை ராணுவப் படைகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி இருக்க, மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை விசாரிக்க, ஃபெடரல் போலீஸ் படை இருந்தால் நன்றாக இருக்குமே?

மாநில உணர்வு, சொந்த அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிந்தால் அந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கக் கூடாது. நன்மை செய்யும் என்று நினைத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் தீமை அதிகம் வந்தால், எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. நிர்வாகம் என்பது மக்களுக்காகத்தானே தவிர, நிர்வாகத்துக்காக மக்கள் இல்லை.

சாலை வசதி, மின்னுற்பத்தி, தண்ணீர் வளம் ஆகிய முக்கிய பிரச்னைகளில் மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய அதிகாரத்தை மத்திய அரசுக்கு ஒப்புக்கொடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை சி.பி.ஐ. விசாரிக்க புது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது தனி மனித பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாற்றம் பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர்)

Posted in 50, 60+, 75, Andhra, AP, Bengal, Budget, Caste, Center, Centre, China, Commerce, Common, Communication, Community, Consruction, Country, Courts, Culture, Democracy, Development, Districts, Division, DMK, Economy, Electricity, Federal, Finance, Freedom, GDP, Govt, Growth, Heritage, Hinduism, Independence, India, infrastructure, Justice, Language, Law, Linguistics, National, North East, Northeast, Order, Pakistan, Patel, Planning, Power, Private, Province, Provinces, Public, Railways, Region, Religion, Resources, River, Roads, Sardar, Security, Sharing, Speak, Speech, States, TamilNadu, Telecom, Terrorism, Terrorists, TN, Tradition, Transport, Transportation, Water | Leave a Comment »

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »

Is it the treatment meted out to a 84 Year octogenarian – Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் மே 1, 2007

84 வயதில் எனக்கு இது தேவையா? கண்ணீர் விட்ட கருணாநிதி-கலங்கிய சட்டசபை

சென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது.

சட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.

கருணாநிதி பேசுகையில், தோழை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.

அதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.

இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.

என்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.

நீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தானே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.

இதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்று கூறியுள்ளார். என்னெல்லாம் பேசியிருக்கிறார்.

நடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.

ஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.

நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.

முதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.

வாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.

இரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.

ஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.

எம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.

டிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.

உடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.

அப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.

அதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.

பெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.

அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.

இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.

84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசியல் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.

இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது முதல்வரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.

முதல்வர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.

————————————————————————————————

சாதனைகள் :
– ப்ரியன்
* தமிழகம் இதுவரை 13 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களைச்
சந்தித்துள்ளது. இவற்றில் தாம் போட்டியிட்ட 11 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பவர் இந்தியாவில் கலைஞர் மட்டுமே!

* அன்றிலிருந்து இன்று வரை, சட்டமன்றத்தில் எரிமலையாகப்
பேசினாலும், எந்தக் கட்டத்திலும், சபைக் குறிப்புகளிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு, கலைஞருடைய பேச்சு அமையவில்லை.

* சென்னை மாநகராட்சியை தி.மு.க. முதன் முறையாகப் பிடித்ததற்கு முக்கியமான காரணம் அவரது திட்டமிடுதலும் உழைப்பும்.

* இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றது.

* கை ரிக்ஷாக்களை ஒழித்தது. பேருந்துகளை தேசிய மயமாக்கியது போன்ற திட்டங்கள்.

* நிலச் சீர்திருத்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது.

* தமிழ்நாடு அரசின் கீழ் பல பொதுத்துறை நிறுவனங்கள் வரக் காரணமாக இருந்தவர். சிப்காட் தொழிற் பேட்டைகள் தமிழகத்தில் உருவாகக் காரணமாக இருந்தவர்.

* சேலம் உருக்காலை மற்றும் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை வரக்காரணமாக இருந்தவர்.

* மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெற, நீதிபதி ராஜ மன்னார் கமிஷனை அமைத்தது.

* தமிழ்மொழி, ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வகை செய்யும் விதத்தில் முனைந்து பணியாற்றி வருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவரது முயற்சியால் வந்ததுதான். தமிழுக்குச் செம்மொழி பெற முனைந்தது.

* குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உண்டாக்கியவர்.

* பெண்களுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்கிற புரட்சிகரமான சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர். பெண்களுக்குத் திருமண உதவித்திட்டம், பேறுகால உதவி போன்றவையும் அமுல்படுத்தியவர்.

* காவிரி நடுவர் மன்றம் நியமிக்க முழு மூச்சாகச் செயலாற்றினார்.

* பெரியார் சமத்துவபுரம், உழவர் சந்தை ஆகியவை இவரது
திட்டங்களே.

* சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

* கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குப் விநியோகித்தது.

* சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் மறைந்த தலைவர்களுக்கு
நினைவில்லங்கள், மணி மண்டபங்கள் கட்டியது.

பின்னடைவுகள்:

* 1983-ல் இலங்கைத்தமிழர்கள் பிரச்னையில் ராஜினாமா செய்த
பின்னரும் மற்றும் 1986-ல் எம்.ஜி.ஆர். மேலவையைக் கலைத்துவிட்ட பின்னரும் கிட்டத்தட்ட நான்கு வருட காலம், சட்டமன்றத்திலோ மேலவையிலோ உறுப்பினராக இல்லாமல் இருந்திருக்கிறார் கலைஞர்.

* 1991-ல் துறைமுகம் தொகுதியில் வென்றபோதும், தி.மு.க.வின் தோல்வியை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்து விட்டார்.

* 2001-ல் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றாலும், அவைக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் இருந்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.

* எமர்ஜென்சியைத் தொடர்ந்து, இவர் மீது போடப்பட்ட

  • வீராணம்,
  • பூச்சி மருந்து,
  • கோதுமை பேரம் ஆகிய ஊழல் வழக்குகளை பின்னர் மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டாலும், இவை கரும்புள்ளிகளாக அமைந்துவிட்டன.

* எம்.ஜி.ஆர்.கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, சட்டசபையை இரு சபாநாயகர்கள் நடத்தும் சூழல் உருவானது இந்தக் காலகட்டத்தில்தான்.

* சட்டசபையில் இவரது கையில் இருந்த பட்ஜெட் புத்தகத்தை
ஜெயலலிதா பறிக்க முயன்றபோது துரைமுருகன் ஜெயலலிதாவை மிக அநாகரிகமான முறையில் தாக்கியது களங்கமாய் அமைந்துவிட்டது.

* 1996-ல் இவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தென்
மாவட்டங்களில் ஜாதிமோதல்கள் நடந்தன.

* மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் வீட்டுக்குச் சென்று கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் ஒரு தலைமுறைக்கு
அறிமுகமில்லாத கள், சாராயத்தை தமிழகத்தில் கொண்டு வந்து அந்த அவலம் இன்று வரை தொடர்வதற்குக் காரணமானவர்.

* அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது, மாணவர்கள் மீது போலீஸ் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவர் இறந்து விட்டார். பின்னர் விடப்பட்ட மிரட்டல்கள் காரணமாக, உதயகுமாரின் தந்தையே பெற்ற மகனை “தன் மகன் இல்லை” என்று சொல்ல நேர்ந்த கொடுமை.

* திருச்சி மற்றும் பாளையங்கோட்டையில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்.

* காவிரி பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு போட்ட வழக்கை வாபஸ் வாங்கியது இன்று வரை தொடர்
பிரச்னைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது.

* தி.மு.க. ஆட்சியில் சென்னையில் ஈழப் போராளி பத்மநாபா மற்றும் அவர் தோழர்களைக் கொன்ற புலிகள், கோடியக்கரை வழியாக
தப்பிச் சென்றது.

* மின்சாரக் கட்டண உயர்வுக்காகப் போராடிய விவசாயிகள் காவல் துறையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்.

* 1972-ல் கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது.

* மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கியதில் மூன்று ஊழியர்கள் இறந்தது.

– ப்ரியன்

Posted in 50, 84, ADMK, Advani, AIADMK, Allegations, Anna, Annadurai, Assembly, Backgrounder, Barnala, Biography, Biosketch, Chandrababu, Chandrababu Naidu, Communist, Congress, DMK, EVR, Faces, Gandhi, History, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Kamaraj, kamarajar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Lament, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MGR, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Naidu, Narasimha Rao, Narasimharao, Nayudu, Party, people, Periyaar, Periyar, PMK, Politics, Rajeev, Rajiv, Speech, Statistics, Vajpayee, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Vituthalai Chiruthaigal | Leave a Comment »

Mu Mariyappan – Language based State Formation’s Golden Anniversary

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

மாநிலங்களின் பொன்னாள்!

மு. மாரியப்பன்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாளை வழக்கம்போல் இந்த ஆண்டும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் வெகு சிறப்புடன் கொண்டாடுகின்றன. மாநிலங்கள் உருவான பொன் விழா ஆண்டாகவும் இவ்வாண்டு அமைந்திருக்கின்ற காரணத்தால், மேற்கண்ட மாநிலங்களில் இன உணர்வுடன் கூடிய நிகழ்ச்சிகள் களைகட்டும் என்பது உறுதி.

இந் நாளை “ராஜ்யோத்சவ தினமாக‘க் கொண்டாடும் கர்நாடக அரசு, இந்த ஆண்டு கூடுதலாக, மாநில உருவாக்கத்திற்குத் துணை நின்ற எஸ்.ஆர். பொம்மை, ரங்கநாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் 36 பேருக்கு கட்சி வேறுபாடுகளுக்கு இடமின்றி மரியாதை செலுத்துகிறது.

மலையாள மொழிக்கும், கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மரியாதை செலுத்துவதோடு, நவம்பர் மாதம் முழுவதும் பல்வேறு விழாக்களுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுவரை இந்த நாளை, சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த பிற மாநிலங்கள் மட்டுமே விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தன. பொன் விழா ஆண்டான இந்த ஆண்டுதான் தமிழகத்தில் இந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக தற்போது இருந்து வரும் பெல்காம் மாவட்டத்தை மராட்டிய மாநிலத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கிளர்ச்சி, மொழிவாரி மாகாணங்கள் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் அது கர்நாடகத்தின் ஒரு பகுதி எனக் கூறி, அதனை ஒருபோதும் மராட்டியத்தோடு இணைக்க விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு, மிகச் சமீபத்தில் மாநிலம் முழுவதும் கடையடைப்பினை நடத்தியதோடு, பெல்காமை கர்நாடகத்தின் மற்றுமொரு தலைநகராக மாற்றுவதற்குத் திட்டமிட்டும் வருகிறது.

மராட்டியத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பெல்காம் வாழ் மக்களோடு இணைந்து, மராட்டிய மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்ட அங்குள்ள அரசியல் தலைவர்கள் பெரும் ஆதரவு காட்டி வருகின்றனர். பெல்காம் மாவட்டத்தின் மராட்டிய அமைப்பான “ஏக் கிரண் சமிதி‘க்குத் தற்போது கர்நாடக சட்டசபையில் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும், பெல்காம் மாநகராட்சியின் மேயராக இவ்வமைப்பைச் சேர்ந்த மராட்டியரே இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொழிவாரி மாகாணங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, கர்நாடக மாநிலத்தின் வடக்கெல்லையாய்த் திகழும் பெல்காமிலுள்ள மராட்டியர்கள் மொழி வழி இன உணர்ச்சியின் அடிப்படையில், கன்னடர்களுக்குச் சற்றும் குறையாமல் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு மாநில மக்களின் அடி மனத்தில் கனன்று கொண்டிருக்கும் மொழி வழி இன உணர்வினையே இது காட்டுகிறது.

பிரிவினைக்கு முன்னதாக, சென்னை ராஜதானி என்றழைக்கப்பட்ட இன்றைய தமிழகம் உருவான வரலாற்றைச் சற்றே பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்ப் பகுதிகளைத் தவிர சென்னைக்கு வடக்கே விசாகப்பட்டினம் வரையில் ஆந்திரப் பகுதியும், மேற்குக் கடற்கரையில் கோகர்நாத்திலிருந்து காசர்கோடு வரையிலுள்ள கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட தென் கன்னடமும், அதோடு காசர்கோட்டிலிருந்து பாலக்காடு வரை மலையாளம் பேசும் பகுதியும் அன்றைய சென்னை ராஜதானியில் தான் இருந்தன.

இவையனைத்திற்கும் மேலாக விசாகப்பட்டினத்திற்கு வடக்கே ஒரிய மொழி பேசும் கஞ்சம் மாவட்டமும்கூட சென்னையோடு இணைந்திருந்தது.

பிரிவினைக் கிளர்ச்சி எழுந்த நேரத்தில் நீதிபதி பசல்அலி தலைமையில் உருவான “ராஜ்ய புனர் அமைப்பு கமிஷன்‘, மாநிலங்களுக்கான எல்லைகளை வரையறை செய்தது. அவ்வமைப்பு, ஹைதராபாத் சமஸ்தானத்திலுள்ள கன்னட மொழி பேசும் மாவட்டத்தையும், சென்னை மாநிலத்திலுள்ள தென் கன்னட மாவட்டத்தையும், மன்னர் ஆட்சியிலிருந்த மைசூரையும் சேர்த்து கர்நாடக மாநிலம் அமையப் பரிந்துரை செய்தது.

அதோடு தமிழகத்தோடு இணைந்திருந்த மலபார் மாவட்டத்தையும், மன்னர் ஆட்சியின் கீழிருந்த திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தையும் சேர்த்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. ஹைதராபாத் சமஸ்தானத்தில் தெலுங்கு மொழி பேசும் ஜில்லாக்களைப் பிரித்து ஹைதராபாத் ராஜ்யம் அமைக்கவும், பின்னர் தமிழகத்திலிருந்த தெலுங்கு மொழி பேசும் பகுதியை இணைத்து பரந்து விரிந்த ஆந்திரப்பிரதேசம் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு எஞ்சியிருந்த நிலப்பகுதி சென்னை ராஜ்யம் என்று அழைக்கப்பட்டது.

தமிழகத்தின் வடக்கெல்லையும், தெற்கெல்லையும் சரியான முறையில் வரையறுக்கப்படாத காரணத்தால், தமிழ் மொழி பேசும் மக்கள் மிகுதியாக வாழ்ந்த திருப்பதி, ஆந்திரத்தோடு இணைந்துவிட்டது.

அதேபோல் தெற்கே தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய பகுதிகளையும் செங்கோட்டை தாலுகாவையும் தமிழகத்தோடு இணைக்க ராஜ்ய புனரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. ஆனால் தமிழ்நாட்டோடு இப்பகுதிகளை இணைப்பதற்கு அன்றைய திருவாங்கூர், கொச்சி அரசுகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தன.

அன்றைக்கு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் தெற்கு மற்றும் வடக்கு எல்லைகளைக் காப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திராவிடர் கழகத் தலைவராக இருந்த பெரியாரும்கூட,

“ஆந்திரத்தில் இருந்தாலென்ன, தமிழ்நாட்டில் இருந்தாலென்ன மொத்தத்தில் திராவிடத்தில் தானே இருக்கின்றன’ என்று குடியரசில் எழுதினார்.

தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சி., தமிழகத்து எல்லைகளை மீட்க மாபெரும் இயக்கத்தை நடத்தினார். தமிழகத்திலுள்ள எந்தக் கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் மக்களை நம்பிக் களத்தில் இறங்கியது தமிழரசுக் கழகம். தமிழக மக்களும் பெரும் ஆதரவை நல்கினர். தலைநகரான சென்னையைக் காத்து, தமிழகத்தின் எல்லைகளையும் மீட்டு தமிழரசுக் கழகம் பெரும் வெற்றி கண்டது.

வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை மீட்பதற்காக தமிழகம் கொடுத்த விலை மிகவும் நெகிழ்ச்சிக்குரியது. இது குறித்து ம.பொ.சி. தனது “புதிய தமிழகம் படைத்த வரலாறு’ எனும் நூலில், 1946 தொடங்கி பத்து ஆண்டுகள் நடைபெற்ற எல்லைப் போராட்டங்களைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். தொடர்ச்சியான, அதேசமயத்தில் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக திருவாங்கூர் ராஜ்யத்தின் தென்பகுதியிலுள்ள ஐந்து தாலுகாக்களும், வடபகுதியில் திருத்தணி தாலுகா முழுவதும் தமிழகத்தோடு இணைக்கப்பெற்றன. மேலும், ஆந்திரத்திலிருந்து 394 கிராமங்கள் தமிழகத்தோடு இணைந்தன. 1960ஆம் ஆண்டு திருத்தணியின் இணைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது.

தமிழக எல்லைப்புறங்களில் இணைப்புக் குறித்த வெற்றி விழாக் கூட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. அந்தச் சமயத்தில் தமிழரசுக் கழகத்தின் போராட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அண்ணா,

“தமிழர்கள் முயன்றால் குன்றத்தை மட்டுமல்ல, திராவிட நாடு என்ற பெரும் நிலப்பரப்பையே மீட்க முடியும்’ என்று கூறியதோடு, “அவர்கள் (தமிழரசுக் கழகத்தார்) ஏன் நம் பக்கம் வரவில்லை என்ற எண்ணம் எனக்குப் பிறக்கிறது. சிறிய குன்றோடு நின்றுவிடாமல் மலை போன்ற அந்தக் கட்சி, நம்மோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று மனதாரப் பாராட்டி மகிழ்ந்தார்.

அந்த நேரத்தில் தி.மு.க., திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிடவில்லை என்பதையும் நினைவிலிருத்த வேண்டும்.

தமிழக எல்லைகளைக் காப்பாற்ற நடைபெற்ற போராட்டங்களில் பல உயிர்களை இழந்துதான் இன்றைய தமிழகம் உருவாகியிருக்கிறது. பிற மாநிலங்களைக் காட்டிலும் எல்லைப் போர்த் தியாகிகள் தமிழகத்திலே அதிகம். ஆனால் அவர்களுக்காகத் தமிழகம் என்ன செய்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்.

(இன்று மொழிவாரி மாநிலங்கள் அமைந்த நாள்)

Posted in 50, Anna, Anniversary, EV Ramasamy, EVR, India, Karnataka, Kerala, Language, Malayalam, Periyar, States, Tamil Nadu | Leave a Comment »

Golden Jubilee of Tamil Nadu state formation – History & Memoirs

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

பொன் விழா கொண்டாடும் தமிழ் மாநிலம்: எல்லை காக்க 50 ஆண்டுகளுக்கு முன் நடத்திய போராட்டம்

பா. ஜெகதீசன்

சென்னை, நவ. 1: “தமிழ் மாநிலம்’ அமைந்த பொன் விழாவை தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தற்போது கொண்டாடுகின்றன.

சென்னையையும், தனது எல்லைகளையும் காக்க சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் நடத்திய போராட்டங்களும், அவற்றில் ஈடுபட்டவர்கள் செய்த தியாகங்களும் மறக்க முடியாதவை.

சுதந்திரம் அடைந்தபோது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் தமிழகப் பகுதிகளும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்டவற்றின் சில பகுதிகளும் இடம் பெற்றிருந்தன.

தமிழகத்தின் வடக்கு எல்லை திருப்பதி வரை பரவி இருந்ததாகப் பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு காலகட்டம் வரை வடார்க்காடு மாவட்டத்தில் தான் திருப்பதி இருந்தது.

நாடு சுதந்திரம் அடைந்த மறுநாள் (16.8.1947) ம.பொ. சிவஞானம் தனது ஆதரவாளர்களுடன் திருப்பதிக்குச் சென்றார். “திருப்பதி தமிழர்களுக்கே சொந்தம்’ என முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் ம.பொ.சி.க்கு எதிராகப் பதில் போராட்டம் நடத்தினர்.

“தமிழகத்திடம் இருந்து சென்னையையும் மீட்போம்’ என ஆந்திரத் தலைவர்களில் ஒருவரான என்.ஜி.ரங்கா அப்போது பிரகடனம் செய்தார்.

ஒருமித்த எதிர்ப்பு: சென்னை ராஜதானியில் இருந்து ஆந்திரப் பகுதிகளைப் பிரித்து தனி மாநிலத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

சென்னை நகரத்தைத் தங்களுக்குத் தரும்படி ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்தது.

தங்களது இடைக்காலத் தலைநகராக சிறிதுகாலத்துக்கு சென்னையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி ஆந்திரம் கேட்டது. அதை தமிழகம் ஏற்கவில்லை.

ம.பொ.சி. நடத்திய வடக்கு எல்லைப் போராட்டம்: தனி ஆந்திர மாநிலம் உருவானபோது அதுவரை தமிழகத்தில் இடம் பெற்றிருந்த சித்தூர் மாவட்டம் ஆந்திரத்தின் வசம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் செய்தார். காவல் துறையின் தடியடியையும் பொருட்படுத்தாது, எல்லையை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் அவர். பின்னர் ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தைத் தாற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே, திருத்தணியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆந்திரத்தைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் புகுந்து, பொருள்களை உடைத்தனர். ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். வன்முறையை ஒடுக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

பின்னர் ம.பொ.சி. விடுத்த வேண்டுகோளையடுத்து, அங்கு வன்முறை நின்றது.

தமிழகத்தின் வடக்கு எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணாததைக் கண்டித்து, அதே ஆண்டு ஜூலை 3-ம் தேதி திருத்தணியில் ம.பொ.சி. தடையை மீறி மறியல் செய்தார். கைது செய்யப்பட்ட அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கமிஷன்கள் அமைப்பு: அப்போது பிரதமராக இருந்த நேருவிடம் முதல்வராக இருந்த ராஜாஜி பேசினார். “இரு மாநிலங்களின் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எல்லைக் கமிஷன் அமைக்கப்படும். எனவே, போராட்டங்களை நடத்த வேண்டாம்’ என நேரு வேண்டுகோள் விடுத்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, சில நாள்கள் சிறை வாசத்துக்குப் பிறகு ம.பொ.சி. விடுதலை ஆனார்.

எல்லைப் பிரச்சினையை தமிழகமும், ஆந்திரமும் சுமுகமாகப் பேசித் தீர்க்க முன் வந்தன. எனவே, எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க முதலில் அமைக்கப்பட்ட பசல் அலி கமிஷன் எத்தீர்வையும் தரவில்லை.

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே, புதிதாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. 1.4.1960-ல் அக்கமிஷன் தனது தீர்ப்பை அளித்தது. அதன்படி திருத்தணி தாலுகா அப்படியே தமிழகத்துக்கு கிடைத்தது. அதேபோல, ஆந்திரத்தின் புத்தூர், சித்தூர் ஆகிய தாலுகாக்களில் இருந்தும் சில பகுதிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன.

தெற்கு எல்லைப் போராட்டம்: அக்காலத்தில் திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் இடம் பெற்றிருந்த தமிழர் வாழும் பகுதிகளை மீட்க பெரும் போராட்டம் நடைபெற்றது.

1954 ஜூனில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நேசமணி தலைமை ஏற்று, போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். அவரது அழைப்பை ஏற்று, ம.பொ.சி. மூணாறுக்குச் சென்றார். அவரது முன்னிலையில் எல்லை மீட்கும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தது.

11 பேர் உயிர்த் தியாகம்: நேசமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 11.8.1954-ல் தென் திருவிதாங்கூரில் கல்குளம் தாலுகாவில் பேரணி நடைபெற்றது. மலபார் ரிசர்வ் போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பேரணியைக் கலைத்தனர். இதில் 11 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

இதையடுத்து திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.

மாநிலங்களின் எல்லைகளைத் திருத்தி அமைக்க மத்திய அரசு அமைத்திருந்த பசல் அலி கமிஷன் 1955-ல் தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்தது. கல்குளம், செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு ஆகிய தாலுகாக்களை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என அந்த கமிஷன் கூறியது.

தமிழர்கள் அதிகம் வாழும் பீர்மேடு, தேவிகுளம் ஆகிய தாலுகாக்களைத் தமிழகத்துக்கு அளிக்க அந்த கமிஷன் மறுத்து விட்டது.

நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக நாட்டின் தெற்கு எல்லையான குமரி முனை தமிழகத்துக்குக் கிடைத்தது.

Posted in 50, Andhra Pradesh, Chithoor, History, Kanniyakumari, Kerala, Kumari, Ma Po Si, Ma Po Sivanjaanam, Nesamani, Puthoor, Rajaji, State, Tamil Nadu, Thirupathy, Thiruthani, TN | Leave a Comment »

Dr Ramadas speech in PMK’s 50th anniversary of Tamil Nadu state creation

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை வர வேண்டும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு 

தமிழ்நாடு உருவான 50-வது ஆண்டு விழா பா.ம.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை தி.நகரில் நடந்த இந்த விழாவுக்கு ஜி.கே.மணி தலைமை தாங்கினார். ஏ.கே.மூர்த்தி எம்.பி. வரவேற்றார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதில் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழ்நாடு உருவான 25-வது ஆண்டு கொண்டாடிய பிறகு 50-வது ஆண்டில்தான் மீண்டும் கொண்டாடுகிறோம். ஆனால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் ஆண்டு தோறும் விழா நடத்துகிறது.

அடுத்த ஆண்டு முதல் பா.ம.க. ஒவ்வொரு ஆண்டும் இதை விழாவாக கொண்டாடும். தமிழ்நாடு உருவான பொன் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத் தேன். அதை அவர் ஏற்று கொண்டு அரசு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்து இருக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக எல்லையை காக்க நேசமணி, மா.பொ.சிவஞானம் போன்ற எத்தனையோ தலைவர்கள் போராடினார்கள். ராஜாஜியால்தான் சென்னை நமக்கு கிடைத்தது. தமிழ்நாட் டில் மட்டுமல்ல மத்தியிலும் தமிழ் ஆட்சி மொழியாக வர வேண்டும் என்று குரல் கொடுத்தோம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வரும் தீர்மானத்தை சி.சுப்பிரமணி யம் சட்டசபையில் அறிவித்து பிறவி பயனை அடைந்ததாக கூறினார்.

ஆனால் இன்று வரை நாம் பிறவி பயனை அடைய வில்லை. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கூச்சல் இடையில் தோன்றி மறைந்து விட்டது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற உண்மையான நிலை உருவாக வேண்டும். தமிழ் ஆட்சி மொழியாகவும், நீதிமன்றங்களிலும் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் இடம் பெற வேண்டும். இதற் காக போராடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் போராட வேண்டும்.

தமிழை காப்பதற்காக ஆஞ்கிலம் வேலியாக அமையும் என்று கூறினார்கள். ஆனால் ஆங்கிலம் தமிழ் பயிரை மேய்கிறது. இதை சொன்னால் என் மீது பாய்கிறார்கள்.

மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வர வற்புறுத்தி வருகிறோம். விமான அறிவிப்புகள் தமிழில் வர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.

மத்திய அரசு தமிழ் அறிஞர்களுக்கு வழங்கும் விருதை தொல்காப்பியர் விருது, திருவள்ளுவர் விருது என்ற பெயரில் வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். இது நிச்சயம் நிறைவேறும். அனைவரும் சேர்ந்து தமிழை வளர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தமிழ் அறிஞர் கள் அரு.கோபாலன், தெய்வ நாயகம் உள்பட பலர் பேசி னார்கள். திருகச்சூர் ஆறுமுகம் எம்.எல்.ஏ., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெய ராமன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Posted in 50, Anniversary, Creation, Dr Ramadass, Language, PMK, Ramadas, Ramadoss, Speech, State, Tamil Nadu, Thamizh | Leave a Comment »