Train rams into auto, 18 killed – Railway Ministry will not construct Underpass or Flyover
Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006
தரம் உயர்த்த தகுதி இல்லாததால் 17 பேர் பலியான புதுப்பாக்கத்தில் ரெயில் கேட் அமைக்க இயலாது: ரெயில்வே அதிகாரி விளக்கம்
காஞ்சீபுரம் அருகே உள்ள புதுப்பாக்கம் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை ஷேர் ஆட்டோ கடந்தபோது ரெயில் மோதி 17 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை உலுக் கியது. சாவு வீட்டுக்கு போனவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் விபத்தில் உயிர் இழந்தனர்.
17 பேரை பலி கொண்ட புதுப்பாக்கம் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அதிகாரி கள் பார்வை யிட்டனர். இனி வரும் காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு ரெயில்வே கேட் அமைக்க வாய்ப்பு உள்ளதா என்று ஆலோசனை செய்தனர்.
ஆள் இல்லாத ரெயில் கேட் வழியாக தினசரி 6 ஆயிரம் வாகனங்களுக்கு மேலாக கடந்து சென்றால்தான் அதன் தரத்தை உயர்த்த முடியும். அந்த வழியாக வாகனங்கள் செல்லும் அளவை பொறுத்துத்தான் அங்கு ஆள் போட்டு கேட் அமைக்கவோ, தானியங்கி கேட் அமைக்க ரெயில்வே விதிமுறையில் உள்ளது.
அதன் அடிப்படையில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டில் தினம் சுமார் 3 ஆயிரத்திற்கும் குறைவான அளவில் வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதனால் அங்கு ரெயில்வே கேட் அமைக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதுப்பாக்கம் லெவல் கிராசை தரம் உயர்த்த தகுதி இல்லை. அங்கு ஆள் போட்டு கண்காணிக்கவோ, கேட் அமைக்கவோ வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
This entry was posted on நவம்பர் 1, 2006 இல் 11:38 முப and is filed under dead, flyover, Jaffer Sharief, Kanchipuram, level crossing, mishap, Puthupakkam, Rail accident, Share Auto, Tamil Nadu, Train Accident, underpass. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
பின்னூட்டமொன்றை இடுக