Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Share Auto’ Category

Auto Rikshaw fare increase in Chennai – Madras Auto riders to pay more

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

ஆட்டோவில் எழும்பூரில் இருந்து சென்னையில் பிற இடங்களுக்கு செல்ல கட்டணம் எவ்வளவு?

குடியரசு தினமான வெள்ளிக்கிழமை முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலைய வாயிலில் இருந்து பயணிகள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நகரின் பிறபகுதிகளுக்குச் செல்லும் தூரம் (அடைப்புக் குறிக்குள்) மற்றும் கட்டண விவரம்:

1. சென்ட்ரல் (2 கி.மீ) -ரூ.14.

2. பாரிமுனை (4 கி.மீ.) -ரூ.26.

3. சேப்பாக்கம் (4 கி.மீ) -ரூ.26.

4.திருவல்லிக்கேணி (4 கி.மீ) -ரூ.26.

5. ராயப்பேட்டை (4.2 கி.மீ.) -ரூ.27.20.

6.மந்தைவெளி (7.2 கி.மீ) -ரூ.45.20.

7.நந்தனம் (8 கி.மீ) -ரூ.50.

8.சைதாப்பேட்டை (9 கி.மீ) -ரூ.56.

9.அடையாறு (13 கி.மீ) -ரூ.60.

10. பெசன்ட் நகர் தேவாலயம் (16 கி.மீ) -ரூ.98.

11.திருவான்மியூர் (17 கி.மீ) -ரூ.104.

12.விமான நிலையம் (17 கி.மீ) -ரூ.104.

13.நுங்கம்பாக்கம் (4.5 கி.மீ) -ரூ.29.

14.தி.நகர் (8 கி.மீ) -ரூ.50.

15.வள்ளுவர் கோட்டம் (5 கி.மீ) -ரூ.50.

16.வடபழனி (12 கி.மீ) -ரூ.74.

17.அசோக் நகர் (10 கி.மீ) -ரூ.62.

18.கே.கே.நகர் (12 கி.மீ) -ரூ.74.

19.புரசைவாக்கம் (3 கி.மீ) -ரூ.20.

20.கீழ்ப்பாக்கம் (5 கி.மீ) -ரூ.32.

21.அயனாவரம் -(5 கி.மீ) -ரூ.32.

22. செனாய் நகர் (6 கி.மீ) -ரூ.38.

23. அண்ணாநகர் ஆர்ச் (7 கி.மீ) -ரூ.44.

24. அண்ணாநகர் கிழக்கு (8 கி.மீ) -ரூ.50.

25.கோயம்பேடு (10 கி.மீ) -ரூ.62.

26. முகப்பேர் கிழக்கு (12.5 கி.மீ) -ரூ.77.

27. முகப்பேர் மேற்கு (13.5 கி.மீ) -ரூ.83.

சாதாரண மீட்டரில் இருந்து எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்த ரூ.3,500 செலவாகும்: ஆட்டோ டிரைவர்கள்

சென்னை, ஜன. 25: ஆட்டோக்களில் சாதாரண மீட்டரில் இருந்து எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்த ரூ.3,500 செலவாகும் என ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் ஜன.26 முதல் ஆட்டோக்களில் மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண முறை அமலாகிறது. இதற்காக சாதாரண மீட்டர் பொருத்திய ஆட்டோக்களில் 6 மாத காலத்துக்குள் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தும்படி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

“”சென்னை நகரில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு தயாரித்து வெளியே வந்த ஆட்டோக்களில் மட்டுமே எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஆட்டோக்களில் சாதாரண மீட்டரே பொருத்தப்பட்டுள்ளது. சாதாரண மீட்டரை, எலெக்ட்ரானிக் மீட்டாராக மாற்ற சுமார் ரூ.3,500 வரை செலவாகும்” என்றார் ஆட்டோ டிரைவர் சடகோபன்.

சாதாரண மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களின் எண்ணிக்கை 16,948 ஆகும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஷேர் ஆட்டோக்களுடன் பிரச்சினை: சென்னையில் உள்ள திருவான்மியூர், முகப்பேர், அண்ணா நகர், மீனம்பாக்கம் பகுதிகளில் உள்ள ஷேர் ஆட்டோக்களால் தங்களுக்கு வருவாய் பாதிக்கப்படும் என்று ஆட்டோ டிரைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்துடன், வேன் மற்றும் உரிமம் இல்லாமல் இயங்கும் ஆட்டோக்களினால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

“”ஷேர் ஆட்டோ இயங்கும் பகுதிகளுக்குச் செல்லும்போது அங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அரசு தான் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இத்துடன், ஆட்டோ தொழிலை நம்பி லட்சக் கணக்கானோர் உள்ளனர். அவர்களின் நலனுக்கான ஆட்டோ நல வாரியம் அமைக்க வேண்டும்” என்றார் உமாபதி என்ற ஆட்டோ டிரைவர்.

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டிரைவர்கள் மீது புகார் தெரிவிக்க ஏற்பாடு

சென்னை, ஜன. 25: ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் டிரைவர்கள் மீது புகார் தெரிவிக்க “கட்டுப்பாட்டு அறை’ அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஆட்டோக்களில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதில் 2 கிலோ மீட்டருக்கு ரூ.14 என்றும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.6 கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

5 நிமிஷத்துக்கு காத்திருக்கும் கட்டணமாக 40 பைசாவும், இரவு நேர கட்டணமாக கூடுதலாக 25 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் 16,498 ஆட்டோக்களில் சாதாரண மீட்டரும், 32,595 ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டரும் உள்ளன. சாதாரண மீட்டர் உள்ள ஆட்டோக்களில் 6 மாதத்துக்குள் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோ கட்டணம் தொடர்பான விவரங்கள் குறித்து பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட 34 முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் எந்த இடத்தில் இருந்து எங்கு செல்வதற்கு எவ்வளவு கிலோ மீட்டர் என்ற விவரமும், அதற்கு வசூலிக்கப்படும் கட்டணத் தொகை குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த கட்டுப்பாட்டு அறை இயங்கும். ஜன.26-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாட்டு அறைகள் எந்நேரமும் இயங்கும்.

10 கட்டுப்பாட்டு அறைகள்: அனைத்துப் பகுதியிலும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம்:

1. கிழக்கு -26670993.

2.மேற்கு- 24898240.

3.மத்திய சென்னை -26445959.

4.வடக்கு -26732525.

5.வட மேற்கு -26215959.

6.தெற்கு -24450404.

7.தென் மேற்கு -24867733.

8.மீனம்பாக்கம் -22325555.

9.போக்குவரத்து துறை இணை ஆணையர் அலுவலகம் -26445511, 26444445.

10.சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை -103, 9841808123.

புகார் கொடுத்தவுடன் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Auto, Auto Rikshaa, Auto Rikshaw, Chennai, fare, Madras, Share Auto, Transport, Transportation | Leave a Comment »

Train rams into auto, 18 killed – Railway Ministry will not construct Underpass or Flyover

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

தரம் உயர்த்த தகுதி இல்லாததால் 17 பேர் பலியான புதுப்பாக்கத்தில் ரெயில் கேட் அமைக்க இயலாது: ரெயில்வே அதிகாரி விளக்கம் 

காஞ்சீபுரம் அருகே உள்ள புதுப்பாக்கம் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை ஷேர் ஆட்டோ கடந்தபோது ரெயில் மோதி 17 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை உலுக் கியது. சாவு வீட்டுக்கு போனவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் விபத்தில் உயிர் இழந்தனர்.

17 பேரை பலி கொண்ட புதுப்பாக்கம் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அதிகாரி கள் பார்வை யிட்டனர். இனி வரும் காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு ரெயில்வே கேட் அமைக்க வாய்ப்பு உள்ளதா என்று ஆலோசனை செய்தனர்.

ஆள் இல்லாத ரெயில் கேட் வழியாக தினசரி 6 ஆயிரம் வாகனங்களுக்கு மேலாக கடந்து சென்றால்தான் அதன் தரத்தை உயர்த்த முடியும். அந்த வழியாக வாகனங்கள் செல்லும் அளவை பொறுத்துத்தான் அங்கு ஆள் போட்டு கேட் அமைக்கவோ, தானியங்கி கேட் அமைக்க ரெயில்வே விதிமுறையில் உள்ளது.

அதன் அடிப்படையில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டில் தினம் சுமார் 3 ஆயிரத்திற்கும் குறைவான அளவில் வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதனால் அங்கு ரெயில்வே கேட் அமைக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதுப்பாக்கம் லெவல் கிராசை தரம் உயர்த்த தகுதி இல்லை. அங்கு ஆள் போட்டு கண்காணிக்கவோ, கேட் அமைக்கவோ வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Posted in dead, flyover, Jaffer Sharief, Kanchipuram, level crossing, mishap, Puthupakkam, Rail accident, Share Auto, Tamil Nadu, Train Accident, underpass | Leave a Comment »

Customer Service – User is Intelligent : Seethalai Saathan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 18, 2006

“மிதப்பை மேல் கண்’

சீத்தலைச் சாத்தன்

தூண்டில்காரனுக்கு மிதப்பை மேல் கண் என்று சொல்வார்கள். ஏன்? மீன் தூண்டிலில் சிக்கி விட்டால் கனம் இழுக்கும். அந்த மீன் தப்பி ஓடுவதற்குள், கண் சிமிட்டும் நேரத்திற்குள் இலாவகமாக இழுத்தால்தான் அவருக்கு தொழில் வெற்றி!

எந்த ஒரு செயலிலும், தொழிலிலும், வடிவமைப்பிலும், வாழ்க்கைப் போராட்டங்களிலும், யார் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள் என்பது கண்கூடு.

உழைப்பு, திறமை, முயற்சி, ஏன் அதிர்ஷ்டம் இத்தனையுடனும் கண்காணிப்புத் திறனும் வெற்றிக்கு மிகவும் முக்கியம்!

அண்மையில் தெய்வ தரிசனத்துக்காக சென்னையில் இருந்து ஆந்திர அரசின் பேருந்தில் காளகஸ்திக்கு குடும்பத்துடன் சென்றேன். திரும்பி வரும்பொழுது காளகஸ்தி பேருந்து நிலையத்தில் இருந்தவர் சொன்னார். “”இப்பொழுது சென்னைக்குத் தமிழக அரசின் பேருந்துதான் உள்ளது. கட்டணம் கூடுதல். கால்மணி நேரம் கடந்தால் ஆந்திரப் பேருந்து புறப்படும். கட்டணம் குறைவு. ஒரே பாதைதான். பத்து நிமிட இடைவெளியில் சென்னை சேரலாம். நாங்கள் பத்துப் பேர். 40 ரூபாய் மிஞ்சும்” என்றார். உண்மையா என்று பார்க்க தமிழ்நாடு அரசுப் பேருந்தில் ஏறினோம்.

கட்டணம் கூடுதல்தான். சென்னை கோயம்பேடை நான் அடைந்த சில மணித்துளிகளில், அந்த நண்பர் ஆந்திரப் பேருந்தில் குடும்பத்துடன் வந்து இறங்கினார்! சிறு துளியையும் மிதவைக் கண்ணால் கவனிக்கும் அவருடைய கணக்கைப் பாராட்டினேன். அப்படியானால், ஏன் இந்தக் கட்டண ஏற்றத்தாழ்வு? சம்பந்தப்பட்டவர்கள் சீர் செய்ய வேண்டும். காரணம் என்னவாக இருப்பினும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது.

திருச்சி நகரத்தில் பெரும்பாலும் தனியார் நகர்ப் பேருந்துகள்தான். சரியான நிறுத்தத்தில் ஓட்டுநர் நிறுத்துகிறார். ஏறும் பயணிகளை உள்ளிருக்கும் பணியாளர் கூவி அழைக்கிறார். நடத்துநர் இன்ன இடம் என்று சொல்லி விடுவது புதுப் பயணிகளுக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல. ஒரு பேருந்துக்கு இரு நடத்துநர்கள். கூட்டம் நெரிசல் இருந்தும் பயணக் களைப்பு இல்லை. நம்மிடமே வந்து பயணச் சீட்டு தருகிறார்கள். சென்னையில் பழகிய எனக்கு இது புதுமையாக இருந்தது. விசாரித்த போது தெரிந்தது. வசூலுக்குத் தனிப்படி என்று! சேவை செய்தால் வருவாய் கூடுகிறது!

அதேநேரத்தில் சென்னை ஷேர் ஆட்டோக்களில் பயணித்ததும், அந்த ஆட்டோ ஓட்டுநர்களின் மிதப்பை மேல் கண் பாங்கும் என்னை ஈர்த்தது! பயணிகள் ஏறுகிறார்களோ இல்லையோ, ஒவ்வொரு நிறுத்தத்திலும், யார் பயணம் செய்யக் கூடும் என்று கணித்து கூப்பிடும் திறம் பாராட்டுக்கு உரியது!

ஒரு பதிப்பகத்தார். வளரும் எழுத்தாளர்களின் உள்ளத்தைப் புரிந்து, அவர்களை அவர்களின் எழுத்துகளை, தங்கள் பதிப்பகம் மூலம் “கூட்டு முயற்சியாக’ வெளியிட அழைக்கிறது. எழுத மட்டுமே தெரிந்த எழுத்தாளன், மற்ற நுணுக்கங்கள் தெரியாத நிலையில் அந்தப் பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியிடுகிறார்! பதிப்பகத்திற்கு வருவாய்! எழுத்தாளனுக்கும் புகழ்! பதிப்பகத்தின் திறன் பாராட்டுக்கு உரியது!

என்னைப் போலவே பங்குச் சந்தை தொழில் புரிபவர், மிகப் பெரிய நிறுவனம். என்னைப் போல் உள்ளவர்கள் இரண்டு டெர்மினல்கள் வைத்திருப்பார்கள். அவரிடம் பத்து டெர்மினல்கள். பணியாளரும் அதிகம். எப்படி நிர்வகிக்கிறார்? பேசிய போது அவர் சொன்ன தொழில் இரகசியம் ஆச்சரியப்பட வைத்தது. மிதப்பை மேல் கண்ணுக்கு இவர்தான் மொத்த உதாரணம். பட்டம் படித்த இளைஞர்கள், யுவதியர். மாதச் சம்பளம் மிகச் சொற்பம்!

அதேசமயம் வாடிக்கையாளரை விட்டுவிடாமலும் புதிய வாடிக்கையாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊகச் செய்திகள் அடிக்கடி தெரிவித்தும், அந்தந்த டெர்மினல்களில் அன்றைய வியாபாரத்தைக் கூட்டிக் கொண்டே இருப்பார்கள். காரணம், வியாபாரத்திற்கு ஏற்ப அவர்களுக்கு ஊக்கத்தொகை மிக மிகக் கணிசமான அளவுக்குக் கிடைக்கிறது.

இதனால் கனிவான, பணிவான, உடனுக்குடன் திறமையான சேவைகளைச் செய்து பணம் பார்க்கிறார்கள். நிறுவனத்துக்கும் வருவாய் கூடுகிறது!

மிதப்பை மேல் கண் என்பது சாதாரண சொற்றொடர் அல்ல. உயரத் துடிக்கும் அத்தனை பேருக்கும் வெற்றி பெறச் செய்யும் தாரக மந்திரம் இது!

Posted in Advices, Andhra Pradesh, Bus, Cheethalai Saathanaar, Chennai, Customer Service, Kizhakku Pathippagam, Management, Marketing, Private Enterprises, Share Auto, Tamil, Tamil Nadu, Tips, Transportation, User Experience | Leave a Comment »