Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Naidu’

Nielsen ORG Marg survey gives AP to Congress: Chiru gets only 30-35 seats: Andhra Pradesh Assembly Poll Surveys

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2009

ஆந்திர சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கருத்துக்கணிப்பில் தகவல்

நகரி, மார்ச்.10-

ஆந்திர சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்து இருக்கிறது.

ஆந்திர சட்டமன்ற தேர்தல்

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தல் ஏப்ரல் 16, மற்றும் 23-ந் தேதிகளில், இரு கட்டமாக நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி ஏதும் இன்றி தனியாக போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, ஓரணியாக போட்டியிடுகின்றன.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

கருத்து கணிப்பு

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி நீல்சன் ஓ.ஆர்.ஜி. அமைப்பு, என்.டிவி.யுடன் இணைந்து, மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அதன் முடிவுகளை அறிவித்து இருக்கிறது.

அதன்படி, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

காங்கிரசுக்கு 155 இடங்கள்

மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு 155 முதல் 169 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 92 முதல் 110 இடங்களும், சிரஞ்சீவியின் கட்சிக்கு 30 முதல் 35 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பு கூறுகிறது.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு 4 முதல் 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

வட ஆந்திர பகுதியில்

காங்கிரஸ் கட்சிக்கு, வட ஆந்திர பகுதி எனப்படும் கடற்கரை பகுதியில் மட்டும் 77 முதல் 88 தொகுதிகளும், ராயல சீமா பகுதியில் 35 முதல் 41 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ராயல சீமா பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 13 முதல் 15 இடங்களும், சிரஞ்சீவியின் கட்சிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. வட ஆந்திர பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணி 20 முல் 24 தொகுதிகளிலும், சிரஞ்சீவியின் கட்சி 21 முதல் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்றும் கருதப்படுகிறது.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Andhra Pradesh Polls: Chiru vs Jeevitha; TRS Rao vs Azhar

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2009

சிரஞ்சீவி Vs ஜீவிதா; ராவ் Vs அசார்!

ஹைதராபாத்:

ஆந்திர சட்டசபைத் தேர்தலில் நடிகர் சிரஞ்சீவியை எதிர்த்து நடிகை ஜீவிதாவையும், மக்களவைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவை எதிர்த்து அசாருதீனையும் நிறு்த்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இங்கு ஏப்ரல்16,23 தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இம் முறை ஆந்திராவில் 4 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜக, சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

காங்கிரசும், பாஜகவும் அனைத்து தொகுதியிலும் போட்டியிடவுள்ளன. மற்ற கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை.

சிரஞ்சீவி திருப்பதி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரை எதிர்த்து சினிமாவைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நடிகர்-இயக்குனர் ராஜசேகரின் மனைவியான நடிகை- இயக்குனர் ஜீவிதாவை காங்கிரஸ் நிறுத்தலாம் என்று தெரிகிறது.

ஏற்கனவே தெலுங்கு பட உலகில் சிரஞ்சீவிக்கும் ராஜசேகருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. சிரஞ்சீவி அரசியலுக்கு வருவதை ராஜசேகர் கண்டித்தபோது அவரை சிரஞ்சீவி ரசிகர்கள் தாக்கிய சம்பவமும் நடந்தது. இதைடுத்தே காங்கிரசில் இணைந்தார் ராஜசேகர்.

ராவை எதிர்த்து அசார்?:

அதே போல மேடக் நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

இந்தத் தொகுதியில் முஸ்லிம் ஓட்டுக்கள் கணிசமாக உள்ளன. அசாருதீனை நிறுத்தினால் ராவின் வெற்றியை தடுத்துவிடலாம் என காங்கிரஸ் கருதுகிறது.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »