Andhra Pradesh Polls: Chiru vs Jeevitha; TRS Rao vs Azhar
Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2009
சிரஞ்சீவி Vs ஜீவிதா; ராவ் Vs அசார்!
ஹைதராபாத்:
ஆந்திர சட்டசபைத் தேர்தலில் நடிகர் சிரஞ்சீவியை எதிர்த்து நடிகை ஜீவிதாவையும், மக்களவைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவை எதிர்த்து அசாருதீனையும் நிறு்த்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இங்கு ஏப்ரல்16,23 தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இம் முறை ஆந்திராவில் 4 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜக, சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
காங்கிரசும், பாஜகவும் அனைத்து தொகுதியிலும் போட்டியிடவுள்ளன. மற்ற கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை.
சிரஞ்சீவி திருப்பதி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரை எதிர்த்து சினிமாவைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
நடிகர்-இயக்குனர் ராஜசேகரின் மனைவியான நடிகை- இயக்குனர் ஜீவிதாவை காங்கிரஸ் நிறுத்தலாம் என்று தெரிகிறது.
ஏற்கனவே தெலுங்கு பட உலகில் சிரஞ்சீவிக்கும் ராஜசேகருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. சிரஞ்சீவி அரசியலுக்கு வருவதை ராஜசேகர் கண்டித்தபோது அவரை சிரஞ்சீவி ரசிகர்கள் தாக்கிய சம்பவமும் நடந்தது. இதைடுத்தே காங்கிரசில் இணைந்தார் ராஜசேகர்.
ராவை எதிர்த்து அசார்?:
அதே போல மேடக் நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
இந்தத் தொகுதியில் முஸ்லிம் ஓட்டுக்கள் கணிசமாக உள்ளன. அசாருதீனை நிறுத்தினால் ராவின் வெற்றியை தடுத்துவிடலாம் என காங்கிரஸ் கருதுகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்