”பெரும் அரசியல் தலைவர் ஜெ”
தி.மு.க. தீடீர் ஆதரவு
விஜயகாந்திற்கு எதிராக அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் காய் நகர்த்தத் தொடங்கிவிட்டன. தமிழக அரசியலில் “நாங்கள்தான் என்றுமே பிக் பிரதர்ஸ்’ என்பதை அவ்வப்போது “டிக்ளேர்’ செய்வதில் இரு கட்சித் தலைமையுமே “கில்லாடிகளாக’ இருக்கின்றனர்.
1972ல் தி.மு.க. பிளவுபட்டு அ.தி.மு.க. உருவாகிய காலத்திலிருந்து இன்று வரை தமிழக பாலிடிக்ஸின் எதிர்கட்சி, ஆளுங்கட்சி அந்தஸ்தை தங்களுக்குள் அச்சுப்பிசகாமல் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதோடு இவர்களிடமிருந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்த “மூன்றாவது சக்திகளை’ இவர்கள் கடந்த 40 வருடங்களில் வெற்றிகரமாகவே முறியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை உடைத்த பிறகு, 67ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தது. இதனால் 1977 சட்டமன்றத் தேர்தலில் மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தல் களத்தை சந்தித்தன.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ பிரதான எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாமல் வெறும் 27 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 48 இடங்களைப் பெற்ற தி.மு.க. பிரதான எதிர்கட்சியானது. இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க.வே என்பது உறுதியானது.
1980 தேர்தலில் தி.மு.க.வுடன் “சமபங்கு’ கூட்டாளியாக காங்கிரஸ் போட்டியிட்டுக்கூட ஆட்சியையும் பிடிக்க முடியவில்லை; பிரதான எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற முடியவில்லை. இம்முறையும் “எம்.ஜி.ஆர்.ஸ்ள். கருணாநிதி’ என்ற ஃபைட்டில் எம்.ஜி.ஆரே வென்று ஆட்சியை அமைத்தார்.
“இனியும் காங்கிரûஸ வெளியேவிட்டால் நம்மைத் தோற்கடித்துவிடுவார்கள்’ என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். 1984ல் காங்கிரஸýடன் கூட்டணி வைத்தார். இந்த முறைதான் ஏறத்தாழ 17 வருடம் கழித்து காங்கிரஸýக்கு தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்தது.
இதைப் பலமாகக் கருதியது காங்கிரஸ். அது மட்டுமின்றி எம்.ஜி.ஆர். மறைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தைச் சாதகமாக வைத்துக் கொண்டு “ஆட்சியைப் பிடித்துவிட வேண்டியதுதான்’ என்று 1989ல் தனியாகக் களம் இறங்கினார் மூப்பனார். இதற்காக ராஜீவ் காந்தியை 13 முறை தமிழகத்திற்கு அழைத்து வந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
பலமான தி.மு.க., எதிரே “ஜா-ஜெ’ அணிகள் என்று பிளவுபட்ட அ.தி.மு.க. -இப்படி 89 தேர்தல் களம் களை கட்டியது. ஆனால் அப்போதும் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி, பிரதான எதிர்கட்சி வாய்ப்பைக்கூட இழந்தது. பிளவுபட்ட அ.தி.மு.க.வில் எதிர்கட்சி அந்தஸ்துக்கு வந்தது ஜெயலலிதா தலைமையில் அன்று இருந்த “ஜெ-அ.தி.மு.க.’ காங்கிரûஸ விட ஒரு எம்.எல்.ஏ. அதிகம் பெற்று (காங்கிரஸ் 26, ஜெ. அ.தி.மு.க. 27) எதிர்கட்சித் தலைவியாக அமர்ந்தார் ஜெ. ஆகவே அ.தி.மு.க.வுக்கு புதிய சக்தியாக வந்த ஜெ., தி.மு.க.வுக்கு மாற்றாக உருவானார்.
1996 சட்டமன்றத் தேர்தலின்போது இதே போன்றதொரு முயற்சியை மூப்பனார் மீண்டும் செய்தார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தயாராகிக் கொண்டிருந்தபோது ரஜினி போன்றவர்களை எல்லாம் அனுப்பி ராவை சமாதானப்படுத்திப் பார்த்தார். “ரஜினி தமிழக காங்கிரஸ் தலைவராக வரட்டும்.
நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றே க்ரீன் சிக்னல் கொடுத்தார் மூப்பனார். தி.மு.க. மீது ஏற்கெனவே வெறுப்பு. அ.தி.மு.க. மீதோ அதைவிட மக்களுக்கு வெறுப்பு. இந்த நேரத்தில் ரஜினியை களம் இறக்கினால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் என்று கணக்குப்போட்டார் அவர்.
ஆனால் அதிலும் வெற்றி கிட்டவில்லை. பிறகு காங்கிரஸில் இருந்துகொண்டு காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியாது என்று கருதி வெளியேறினார் மூப்பனார். புதிதாக தமிழ் மாநில காங்கிரûஸ தோற்றுவித்தார். உடனே “வருங்கால முதல்வர் மூப்பனார்’ என்ற பேச்சு தொடங்கியது.
கட்சி ஆரம்பித்தவுடன்கூட்டணியாக தேர்தல் களத்தில் புகுந்து 40 இடத்தில் போட்டியிட்டு 39 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றார் மூப்பனார். இந்த வெற்றியால் இளம் தலைமுறையினர் (இன்று விஜயகாந்திடம் போயிருப்பவர்கள்) அன்று மூப்பனார் பின்னால் நின்றனர். மூப்பனாரும் “கிராம தரிசனம்’ செய்து மக்களிடம் சென்றடைய முயற்சித்தார்.
ஆனால் ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதியோ, “எனக்கு எதிரி அ.தி.மு.க.வே’ என்ற ரீதியில் ஜெயலலிதாவை அரெஸ்ட் பண்ணி, “கருணாநிதி ஸ்ள். ஜெயலலிதா’ என்று அரசியல் ரூட்டை மாற்றினார்.
இன்னும் சொல்லப்போனால், 96ல் நடைபெற்ற மோசமான ஆட்சியால் அ.தி.மு.க.வும், 91ல் ராஜீவ் கொலைப் பழியால் தி.மு.க.வும், வாக்கு வங்கி ரீதியாக “வீக்’ ஆகியிருந்த நேரம்.
இந்த நிலையில் மூப்பனார் போன்ற தலைவர்கள் மூன்றாம் அணிக்குத் தலைவராகிவிடக் கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் அதிரடியாகக் கைது செய்தது அன்றைய தி.மு.க. அரசு.
இந்நிலையில் தி.மு.க.- த.மா.கா கூட்டணியை முறியடிக்க “மெகா கூட்டணி’ அமைக்கும் முதல் முயற்சியை மேற்கொண்டார் ஜெ! அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கி, 1998 பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை தோற்கடித்தார்.
ஆனால் 98ல் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் காங்கிரûஸ ஏறக்குறைய “ஜீரோ’ நிலைக்குக் கொண்டு வந்தவர் ஜெ. இதே ரூட்டை 1999 பாராளுமன்றத் தேர்தலில் கடைப்பிடித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அன்று “உண்மையான காங்கிரஸ்’ என்ற நிலையில் மூப்பனார் தலைமையில் இருந்த த.மா.கா.வை தனியே விட்டார்.
இதனால் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று த.மா.கா. என்ற இமேஜுக்கு பங்கம் வந்தது. ஆகவே 2001 சட்டமன்றத் தேர்தலில் வேறு வழியின்றி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார் மூப்பனார். அது வெற்றிக் கூட்டணி என்ற பெயரும் வாங்கியது.
ஆனால் 23 இடங்களில் வெற்றி பெற்ற மூப்பனாரையோ, 20 இடங்களில் வெற்றி பெற்ற டாக்டர் ராமதாûஸயோ ஒரு பொருட்டாக நினைக்காமல், 31 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.வைப் பலப்படுத்தவே ஜெ. விரும்பினார்.
அதனால் நள்ளிரவில் திடீரென்று கருணாநிதியைக் கைது செய்து, தி.மு.க. ஊர்வலத்தில் வெட்டு, குத்து என்றெல்லாம் வந்து தோல்வியில் துவண்டு கிடந்த தி.மு.க.காரனை உசுப்பி விட்டார் ஜெ. ராமதாஸ், மூப்பனார் போன்ற தலைவர்கள் இருந்தாலும், மீண்டும் “ஜெ ஸ்ள். கருணாநிதி’ என்று தமிழக அரசியல் பயணிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் மூப்பனாரும், காங்கிரஸýம் இழந்த “மூன்றாவது சக்தி’ ஸ்தானத்தைப் பிடிக்கவே விஜயகாந்த் களமிறங்கினார். 2006 சட்டமன்றத் தேர்தலில் அதற்கு அமோக ஆதரவு மக்கள் மத்தியில் இருந்தது. தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெறாமல் போனதற்கும், அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனதற்கும் விஜயகாந்தே காரணம் என்ற நிலை உருவானது.
இன்று “கருணாநிதி ஸ்ள்.. ஜெயலலிதா ஸ்ள். விஜயகாந்த்’ என்று அரசியல் ரூட் பயணித்துக் கொண்டிருக்கிறது. விஜயகாந்தை விட்டால் 67க்குப் பிறகு உருவாகாமல் தடுக்கப்பட்டு வரும் மூன்றாவது புதிய சக்தி தோன்றி விடும் என்றே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நினைக்கின்றன. அதனால்தான் இரு கட்சிகளுமே விஜயகாந்த் விஷயத்தில் பாலிடிக்ஸ் பண்ணுகின்றன.
திருமண மண்டப விவகாரம், விஜயகாந்த் வீட்டில் இன்கம்டேக்ஸ் ரெய்டு என்று எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. எதிர்க்கவில்லை. விஜயகாந்த் “குடிகாரர்’ என்ற குற்றச்சாட்டை முதலில் முன்னாள் முதல்வர் ஜெ. சொன்னார். பிறகு இந்நாள் முதல்வர் கருணாநிதியும் அதையே கூறினார்.
சென்னை மாநகராட்சி தேர்தலைப் புறக்கணித்தார் ஜெ: தேர்தல் களத்தில் தி.மு.க.வை விஜயகாந்தால் சமாளிக்க முடியாது என்று மக்கள் மத்தியில் நிரூபிப்பதற்காக ஜெ. செய்த முயற்சி அது. அதில் அவர் வெற்றியும் கண்டார். ஏனென்றால் பல தே.மு.தி.க. மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்தலிலேயே நிற்க முடியாமல் தடுமாறினார்கள். வெற்றி பெற்றவர்களில் சிலர் கூட, தி.மு.க. பக்கம் போனார்கள்.
ஜெ.வின் ரூட்டை அப்படியே ஃபாலோ பண்ணிய முதல்வர் கருணாநிதி, ராஜ்ய சபா தேர்தலில் அ.தி.மு.க.வுடன் சமாதானமானார். “நமக்குள் போட்டி வேண்டாம். நாம் விஜயகாந்தின் ஓர் ஓட்டிற்காகத் தேடி அலைய வேண்டாம்’ என்பது முதல்வர் அதில் விடுத்த மெùஸஜ். அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, “இதுதான் நியாயமான தேர்தல்’ என்று டிக்ளேர் செய்தார் முன்னாள் முதல்வர் ஜெ.
தே.மு.தி.க.வில் உள்ள உள்கட்சி குழப்பங்களால் அங்குள்ள பழைய நிர்வாகிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு தே.மு.தி.க.வை “க்ளோஸ்’ பண்ண முயற்சி செய்கின்றன.
அதன் வெளிப்பாடுதான் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் அட்டாக் பண்ணி வெளியிட்ட விஜயகாந்த்தின் அறிக்கைக்கு “ஆர்க்காடு’ என்ற தலைப்பில் தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது. அதுவும் முரசொலியில் ஜெயலலிதாவை “பெரிய அரசியல் கட்சியின் தலைவர்’ என்று முதல் முறையாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அறிக்கையில், “”இரண்டு கட்சிகளும் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக் கொள்ளும். இடையிலே நாம் பயன்பெறலாம்’ என்று எண்ணுவது, “காட்டில் இரண்டு மான்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் போது, அதன் காரணமாக ரத்தம் வடியும்; அதனை நாம் குடிக்கலாம்’ என்று காத்துக் கொண்டிருக்கும் ஓநாயின் மனநிலையைப் போலத்தான் அமையும்” என்று கடுமையாகச் சாடிவிட்டு,
“”தன்னுடைய ஒரு வாக்குக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதே என்ற வயிற்றெரிச்சலோடு, தமிழ்நாட்டிலே உள்ள இரண்டு பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை “உளுத்துப் போன அரசியல்வாதிகள்’ என்று இந்தத் தலைவர் வர்ணித்திருப்பது “கொழுத்துப் போன’ காரணத்தால் எழுதப்பட்ட வார்த்தைகள்” என்று அ.தி.மு.க.வுக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆக, “பெரிய அரசியல் கட்சியின் தலைவர்’ என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முரசொலியிலேயே பாராட்டியுள்ளார்கள். அதுவும் “ஆர்க்காடு’ என்ற பெயரில் பாராட்டியுள்ளதைப் பார்த்து தி.மு.க. -அ.தி.மு.க.வினர் மட்டுமில்லை, விஜயகாந்தே திகைத்துப் போய்தான் இருக்கிறார்.
எம். காசிநாதன்
********************