Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூன் 11th, 2007

Mooligai Corner: Herbs & Naturotherapy – Kothamalli (Coriander)

Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007

மூலிகை மூலை: சாராய வெறி நீங்க…

விஜயராஜன்

ஒழுங்கற்ற வடிவ அமைப்பைக் கொண்ட இலையைக் கொண்ட சிறு செடி இனமாகும். இதன் இலையும் விதையும் மருத்துவக் குணம் கொண்டவை. கார்ப்புச் சுவையைக் கொண்டது. சீத வெப்பத்தை அதிகரிக்கும். பசியைத் தூண்டி வெப்பமுண்டாக்கி சிறுநீரைப் பெருக்கும். இதனை உண்பதால் உடல் சூடு, காய்ச்சல், பைத்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, பெரு ஏப்பம், புண் போன்றவை நீங்கும்.

வேறு பெயர்கள்:

  • தனியா,
  • உருள் அரிசி.

ஆங்கிலத்தில்:

  • coriandrum sativum,
  • linn;
  • Umbelliferae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

கொத்தமல்லி விதையை 5 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 150 மில்லியளவாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்து 2 வேளை குடித்துவர இதய பலவீனம், மிகுதாகம், நாவறட்சி, மயக்கம், இரத்தக் கழிச்சல், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப் போக்கு குணமாகும்.

கொத்தமல்லியைச் சிறிது காடியில்(வினிகரில்) அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும்.

கொத்தமல்லி விதை 100 கிராம், நெல்லிவற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் எடுத்துப் பொடியாக்கி அத்துடன் 200 கிராம் சர்க்கரை கலந்து 2 வேளை 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரத் தலைசுற்றல், நெஞ்செரிச்சல், வாய் நீர் ஊறல் ஆகியவை குணமாகும்.

கொத்தமல்லி 300 கிராம், சீரகம், அதிமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்ன இலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50 கிராம் இள வறுவலாய் வறுத்துப் பொடியாக்கி அத்துடன் வெள்ளைக் கற்கண்டை 60 கிராம் பொடிசெய்து கலந்து 2 வேளை 1 தேக்கரண்டியளவு சாப்பிட்டுவர உடல் சூடு, குளிர்காய்ச்சல், பைத்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்செரிவு, நெஞ்சுவலி குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர பலவாறான தலைநோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி, உட்காய்ச்சல், சிந்தனைத் தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல், வாய்குளறல் குணமாகும்.

கொத்தமல்லி, சுக்கு, மிளகு, திப்பிலி, போராமுட்டி வகைக்கு 20 கிராம் எடுத்துச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மிலியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை கொடுக்கக் காய்ச்சல் குணமாகும்.

கொத்தமல்லி இலையை எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம், கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை சீக்கிரம் கரையும் அல்லது பழுத்து உடையும்.

கொத்தமல்லி விதையை வறுத்துச் சாப்பிட இரத்தக் கழிச்சலும் செரியாமைக் கழிச்சலும் நீங்கும்.

கொத்தமல்லி விதையைச் சோம்புடன் கலந்து சாப்பிட ஏப்பம் நீங்கி, இருதயம் வலிமை அடையும்.

கொத்தமல்லி விதையை அரைத்துப் பற்றிட தலைவலி, மண்டையிடி(கபால சூலை) குணமாகும்.

கொத்தமல்லி விதையை 10 கிராம் சந்தனத்துடன் அரைத்துப் பூச பித்த தலைவலி குணமாகும். கொத்தமல்லி விதையைச் சந்தனத்துடன் அரைத்துக் கட்ட நாள்பட்ட புண், பிளவைகள் குணமாகும்.

கொத்தமல்லி, சந்தனம், நெல்லி வற்றல் வகைக்கு சம அளவாக எடுத்து நீரில் ஊறவைத்து குடிக்க தலை சுற்றல் நீங்கும்.

கொத்தமல்லி விதையை வாயிலிட்டு மெல்ல வாய் நாற்றம் நீங்கும்.

Posted in AA, Addiction, Alcoholism, Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Coriander, coriandrum sativum, Detox, Health, Healthcare, Herbs, Kothamalli, Kothumalli, Linn, medical, Mooligai, Naturotherapy, Umbelliferae | Leave a Comment »

Rubber industry park – Kanyakumari plantations are forest areas

Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007

இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவு கலைகிறது: குமரி மாவட்டத்தில் கனரக ரப்பர் ஆலை அமையுமா?

நாகர்கோவில், ஜூன் 12: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக ரப்பர் ஆலை அமைவது கனவாகிப்போவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

ரப்பர் பூங்கா என்று தற்போது பேசிவரும் திட்டச் செயல்பாடும் ஆமை வேகத்தில் இருக்கிறது. இதன்மூலம் எதிர்பார்க்கும் அளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரமுடியாது என்பது அதிர்ச்சியான விஷயம்.

நாட்டின் ரப்பர் உற்பத்தியில் 8 சதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. நாட்டிலேயே தரம் உயர்ந்த ரப்பர் இங்குதான் கிடைக்கிறது என்று தேசிய ரப்பர் வாரியமே சான்று அளித்துள்ளது.

மாவட்டத்தில் தமிழக அரசுக்குச் சொந்தமான 5 ஆயிரம் ஹெக்டேர் வன பூமியில் ரப்பர் மரங்களால் 2,500 தொழிலாளர்கள் நேரடியாக வேலை பெற்று வருகிறார்கள். தனியார் பதிவு தோட்டங்களும், சிறு தோட்டங்களுமாக மேலும் 15 ஆயிரம் ஏக்கரிலும் ரப்பர் பயிர் செய்யப்படுகிறது.

குறிப்பாக கல்குளம், விளவங்கோடு, தோவாளை வட்டங்களும், மலையோரப் பகுதிகளில் ஆறுகாணி முதல் காட்டுப்புதூர் வரை சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது.

ரப்பர் மரத்திலிருந்து பால் வடிப்புத் தொழிலில் மட்டும் 2,500 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் சுமார் 40 டன் “ரப்பர் லாக்டஸ்’ கிடைக்கிறது. ஒரு வாரத்தில் ரூ.2 கோடிக்கான ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாவட்டத்திலிருந்து ரப்பர் லாக்டஸ் தமிழகத்தின் பிற தொழில் மையங்களுக்கும், இதர மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. டயர், டியூப். பலூன்கள், ஸ்பாஞ்சுகள், கையுறைகள் உள்ளிட்ட பொருள்கள் இவற்றில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்திலேயே இந்த ரப்பரை பயன்படுத்தி கனரக ரப்பர் ஆலை அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இயற்கை அளித்த கொடையான இந்த ரப்பரை பயன்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்று படித்த இளைஞர்கள் ஆண்டாண்டு காலமாகக் காத்திருக்கிறார்கள்.

கனரக ரப்பர் ஆலைத் திட்டம் குறித்து தொழிற்சங்கங்கள் தரப்பில் பேசப்பட்டு வந்தாலும், அதைச் செயல்படுத்த பிள்ளையார் சுழி போடக் கூட ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் முன்வரவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆலை அமைக்கப்படும் என்று, கடந்த 1991-ம் ஆண்டே முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிகள் மாறிமாறி வந்தும் அதைச் செயல்படுத்தவோ, அதுகுறித்த ஆய்வு நடத்தவோ, நிதி ஒதுக்கவோ யாரும் முன்வரவில்லை.

கனரக ரப்பர் ஆலைத் திட்டம் குறித்து சட்டப் பேரவையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் பேசியும் அரசுத் தரப்பிலிருந்து சாதகமான பதில்கள் தெரிவிக்கப்படவில்லை.

இச் சூழ்நிலையில்தான் செண்பகராமன்புதூரில் ரப்பர் பூங்கா திட்டம் குறித்து சமீபகாலமாகப் பேசப்படுகிறது. ஆனால், அதற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆமைவேகத்தில் இருக்கின்றன.

இளைஞர்கள் நலன் கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆலை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Posted in Aini, balloons, cardamom, Chenbagaraman, Chenbakaraman, coffee, Construction, CPI, CPI (M), CPI(M), Development, DMK, Economy, Employment, Environment, Estates, Exports, Factory, Forest, Gloves, Industry, Jobs, Kaattuputhoor, Kaattuputhur, Kalkulam, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Lactex, Leather, Manufacturing, marudam, Marxists, Mountains, Nagarcoil, Nagarkoil, Nagarkovil, Nagercoil, Nagerkoil, Nagerkovil, Natural, Opportunity, plantations, Planters, Preservation, Resource, rosewood, Rubber, Senbagaraman, Senbakaraman, Sponges, Tea, Teak, thomba, Thovaalai, Thovalai, Trade, Trees, Tubes, Tyres, Vilavancode, Vilavangode, Youth | Leave a Comment »

Mayavathi’s corruption supported by TR Balu with Congress Blessings – Presidential Elections

Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007

அரசியல் பேரமா, அதிகார துஷ்பிரயோகமா?

மத்தியில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை என்கிற நிலைமை 1989-ல் எழுந்தது முதல் அரசியல் என்பது தினசரிப் பேரங்களுக்கு உட்பட்ட வியாபாரமாகிவிட்டது என்பதுதான் யதார்த்த நிலைமை. அமைச்சர் பதவியைப் பெறுவது முதல் எந்தவொரு விஷயத்திலும் எனக்கு இவ்வளவு, உனக்கு இவ்வளவு என்கிற வகையில்தான் ஆட்சியில் அமரும் கூட்டணிக் கட்சிகள் செயல்படுகின்றன என்பது ஊரறிந்த உண்மை.

உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி இருப்பது இந்த வியாபார நாடகத்தில் மற்றுமொரு காட்சி. முதல்வர் மாயாவதியின் மீது வழக்குத் தொடர மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாநில ஆளுநர் ராஜேஸ்வர் அனுமதி மறுத்திருப்பது வேடிக்கையாக இருந்தாலும், அது ஒரு வாடிக்கையான விஷயம்தான் என்றுதான் கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தரப்பட்டிருக்கும் விலைதான் இது என்பது பள்ளிக் குழந்தைக்குக்கூடத் தெரியும்.

இந்தியாவின் புராதன சரித்திரச் சின்னங்களாகக் கருதப்படும் இடங்களைப் பாதுகாக்க 1958-ல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம், புராதனச் சின்னங்களாகக் கருதப்படும் கட்டடங்களைச் சுற்றிலுமுள்ள நூறு மீட்டர் தூரத்திற்கு எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. அந்த சரித்திரச் சின்னங்கள் சிதைந்து விடாமல் இருக்கவும், அதன் அழகு கெட்டுவிடாமல் இருக்கவும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. இந்தச் சட்டத்தை முறையாக அமல் நடத்தும் பொறுப்பு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திடமும் (Archeaological Survey of India), மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி, தாஜ் கலாசார வணிகவளாகம் (Taj Heritage Corridor்) என்கிற பெயரில் தாஜ்மஹாலைச் சுற்றியும் ஆக்ரா கோட்டையைச் சுற்றியும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வணிக வளாகம் அமைத்து மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் ஒன்றைத் தீட்டினார். சுமார் 175 கோடி ரூபாய் முதலீட்டில் நிறைவேற்றப்பட இருந்த இந்த வணிக வளாகத்துக்கு, அன்றைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதியும் வழங்கினார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.

மத்திய அரசு தனது பங்குக்கு முதல் தவணையாக சுமார் 17 கோடி ரூபாயை இந்த வணிக வளாகத் திட்டத்திற்கு வழங்கியது. அதுவும் எப்படி? முறையாக எந்தவிதத் திட்ட வரைமுறைகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்படாமல், சுற்றுச்சூழல் அமைச்சரகமும் எந்தவொரு சோதனைகளையும் நடத்தாமல், மாயாவதியின் நிர்பந்தத்தின் பேரில் பணம் தரப்பட்டு, வேலையும் தொடங்கியது. தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் எச்சரிக்கைகள் சட்டை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் விஷயம் உச்ச நீதிமன்றத்தை அடைந்தது. தாஜ்மஹாலின் அழகைக் கெடுக்கும் வண்ணம் அந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றி வணிக வளாகம் எழுப்பப்படுகிறது என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட, இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் ஏதாவது நடந்திருக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய ஊழல் தடுப்புக் கமிஷனை விசாரிக்க, அதன் விளைவாகத்தான் இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கை மூடி மறைக்க மத்தியப் புலனாய்வுத் துறை 2005-ல் முயன்றும் அது முடியாமல் போய்விட்டது. இப்போது, மாயாவதியின் மீதும், அவரது அன்றைய அமைச்சரவை சகா நஜீமுதீன் சித்திக் மீதும் எத்தகைய குற்றமும் தனக்குத் தென்படவில்லை என்று கூறி, இந்த விசாரணையை மேலும் தொடரவோ, வழக்குப் போடவோ மத்தியப் புலனாய்வுத் துறைக்கு அனுமதி வழங்க ஆளுநர் ராஜேஸ்வர் மறுத்திருக்கிறார்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சிக்கு ஆளுநர் துணை போயிருக்கிறார். ஆளுங்கட்சியின் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளரை ஆதரிக்க சோனியா காந்திக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதிக்கும் இடையே நடைபெற்றிருக்கும் இந்தப் பேரத்தில் களங்கப்பட்டிருப்பது ஆளுநரின் மரியாதை.

அதிகார துஷ்பிரயோகம் என்று வரும்போது அது ஆளுநராக இருந்தால் என்ன ஆட்சியாளர்களாக இருந்தால் என்ன? அரசியல் பேரத்தில் இதுவும் ஒரு பரிணாமம் என்று கருதி நம்மை நாமே தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

———————————————————————————————-

கட்சித் தொண்டர்கள் வழங்கிய பணத்தில் சேர்ந்தது எனது ரூ. 52 கோடி சொத்து: உ.பி. முதல்வர் மாயாவதி

லக்னெü, ஜூன் 28: தன்பேரில் உள்ள ரூ. 52 கோடி சொத்து பகுஜன் சமாஜ் கட்சித்தொண்டர்கள் நன்கொடையாக அனுப்பிய பணத்தில் சேர்க்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.

தனக்கு ரூ. 52 கோடி சொத்து இருப்பதாக மாநில சட்ட மேலவை உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவில் அளித்த தகவலில் முதல்வர் மாயாவதி கூறியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த விளக்கத்தை தந்துள்ளார் மாயாவதி.

நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: இதற்கு முன்னர் தொண்டர்கள் நன்கொடையை கட்சிக்கு அனுப்பினார்கள். இப்போது என்னிடம் பணம் இல்லை என்று கருதி எனக்கு நேரடியாக அனுப்புகிறார்கள். அந்த பணத்தை முதலீடு செய்யலாம். அல்லது தில்லியில் பங்களா கூட கட்டலாம். அந்த அளவுக்கு எனக்கு அவர்கள் சுதந்திரம் தந்துள்ளனர்.

நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. வரி அனைத்தையும் கட்டி வருகிறேன். எல்லா விவரமும் வருமான வரிக்கணக்கில் உள்ளன. வருமான வரி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள நான் அப்பீல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஆதாரம் இல்லாதது.

முலாயம் அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை: முலாயம் சிங் தலைமையிலான முந்தைய அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 28 மாவட்டங்களில் இந்த ஊழல் நடந்துள்ளது. இதை சிறப்பு விசாரணைக் குழு ஆராயும். இந்த முறைகேடு பற்றி 3 மாதங்களில் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும்.

ஊழலில் போக்குவரத்து காண்ட்ராக்டர்களுக்கு தொடர்பு இருந்ததா? வேறு மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் திருப்பிவிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணைக் குழு ஆராயும்.

அமைச்சர் மிஸ்ரா விலகுகிறார்: மாநில அமைச்சரும் கட்சியின் பொதுச்செயலருமான எஸ்.சி.மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். 2009-ல் மக்களவைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் நாடு முழுவதிலும் உள்ள உயர் சாதியினரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஈர்க்கும் பணியில் மிஸ்ரா ஈடுபடுவார்.

அமைச்சர் பதவியில் அவருக்கு நாட்டம் இல்லவே இல்லை. நான் அவரை கட்டாயப்படுத்தி அமைச்சர் பதவி வழங்கினேன். இன்னும் சில மாதங்கள் மட்டுமே அவர் அமைச்சர் பதவியில் இருப்பார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்து சட்ட ஆலோசனைகள் உள்பட பலதரப்பட்ட ஆலோசனைகள் எனக்கு தேவைப்படுகிறது.

மிஸ்ரா குடும்பத்தாருக்கு நான் எந்த சலுகையும் காட்டவில்லை. இது பற்றி பத்திரிகைகள் தவறான தகவல்களை வெளியிடுகின்றன.

கஷ்டமான கால கட்டத்தில் எனக்கு உதவியுள்ளார் மிஸ்ரா. அவரது சகோதரிக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் பதவியும், மைத்துனருக்கு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியும் அளித்ததில் தவறில்லை. அவர்களின் தியாகத்துக்கு நான் தந்த வெகுமதி அது.

மிஸ்ரா எனக்கு எதிரான வழக்குகளில் ஆஜரானபோது, அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்து இருவரும் அவரை கவனித்துக் கொண்டதால் எனக்கு எதிரான வழக்கில் மிஸ்ரா ஆஜராக முடிந்தது. அதற்கு வெகுமதியாக அந்த இருவருக்கும் பதவி அளித்தேன். இதில் தவறு இல்லை.

மேலும் பதவி நியமனம் என்பது எனக்கு உள்ள சிறப்புரிமை. இதில் எனக்கு ஆணையிட பத்திரிகைகளுக்கு என்ன உரிமை உள்ளது என்றார் மாயாவதி.

Posted in abuse, Alagiri, Alakiri, Alliance, APJ, Archeaological Survey of India, ASI, Azagiri, Azakiri, Azhagiri, Baalu, Balu, Bribery, Bribes, Business, CBI, Coalition, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, DMK, Environment, Governor, Interrogation, Investigation, Kalam, kickbacks, Law, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, nexus, Order, Party, Pollution, Power, President, support, Taj Heritage Corridor, Taj mahal, Tajmahal, TR Balu, UP, Uttar Pradesh, UttarPradesh | Leave a Comment »

Helmets, Plus One Admissions – Justice Intervention Required

Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007

திறமையின்மைக்குச் சான்றிதழ்

சமீபகாலமாக அரசியல்வாதிகளும் பத்திரிகைகளும் அடிக்கடி எழுப்பும் கூக்குரல், நீதிமன்றம் அநாவசியமாக நிர்வாக விஷயங்களில் தலையிடுகிறது என்பதுதான். சொல்லப்போனால், அது உண்மையும்கூட. நீதிமன்றத் தலையீடு என்பது “ஹெல்மெட்’ அணிவதா, வேண்டாமா என்பதுவரை தொடர்வது துரதிருஷ்டவசமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதுபோல, நீதிமன்றம் அன்றாட நிர்வாக விஷயங்களில் தலையிடுவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்த்தால், அதற்கான விடை கிடைக்கும். தங்களது கடமையில் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறும்போது நீதிமன்றத்தின் மூலம்தான் நியாயம் கிடைக்கும் என்கிற நிலைமைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். நீதி கேட்டு ஒரு சராசரி குடிமகன் நீதிமன்றத்தைச் சரணடையும்போது அவனுக்கு நியாயம் வழங்க வேண்டிய நிர்பந்தம் நீதிபதிகளுக்கும், நீதித்துறைக்கும் ஏற்பட்டு விடுகிறது.

ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாவதுவரை படித்த மாணவன் அதே பள்ளிக்கூடத்தில் 11 ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது இயற்கை நியதி. இதை அனைத்து பள்ளிக்கூட நிர்வாகங்களும் கடைப்பிடித்தாக வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டிய கடமை மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு உண்டு.

சி.பி.எஸ்.இ. முறையில் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாவது வகுப்பில் படித்த மாணவனை பிளஸ் ஒன் வகுப்பில் சேர்த்துக் கொள்ள நுழைவுத் தேர்வு மற்றும் புதிய நன்கொடை என நிபந்தனைகள் விதிக்கக்கூடாது என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகாவது, மாநில கல்வித் துறை தங்களது அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதா என்று உறுதி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஓர் அரசாணை பிறப்பித்து அத்தனை பள்ளிக்கூட நிர்வாகத்தையும் கட்டுப்பட வைத்திருக்க வேண்டும்.

அரசு இந்த விஷயத்தில் எந்தவித முடிவும் எடுக்காமல், குறைந்தபட்சம் அரசாணைகூட பிறப்பிக்காமல் இருந்தது எதனால் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னை எழும்பூரிலுள்ள டான் பாஸ்கோ பள்ளி நிர்வாகம் தனது பள்ளியில் பத்தாவது படித்துத் தேறிய முகமது வாசிப் என்ற மாணவனுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் தராமல், அதிக நன்கொடை அளித்த, அவரைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்ற வெளிப்பள்ளிக்கூட மாணவனுக்கு இடம் அளித்தபோதுதான் பிரச்னை வெடித்தது. முகமது வாசிப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதன் பேரில் நீதிமன்றம் தலையிட நேர்ந்தது.

பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் கொடுத்த பிறகுதான் மற்ற பள்ளி மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது, கட் – ஆஃப் மதிப்பெண் நிர்ணயிப்பது, புதிய அட்மிஷனாகக் கருதி நன்கொடை பெறுவது போன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நீதிமன்றம்.

தான் செய்ய வேண்டிய கடமைகளைத் தட்டிக் கழிக்க அரசு ஏன் முயல வேண்டும் என்பதுதான் புரியவில்லை. அதிகார வர்க்கம் எப்போதுமே எந்தப் பொறுப்பையும் சுமக்காமல் முடிந்தவரை தட்டிக் கழிக்கப் பார்க்கும் என்பது தெரிந்த விஷயம். ஆனால், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் அப்படி இருந்துவிட முடியாது. பொதுமக்கள் நன்மையைக் கருதி தைரியமாக முடிவெடுக்க வேண்டிய கடமை அமைச்சர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு.

அளவுக்கு அதிகமான நன்கொடை வசூலிக்கும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கைகளும் இல்லை. தெருவுக்குத் தெரு காளான்போலப் பெருகி வரும் நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்படுவதில்லை. இதைப்பற்றி அரசின் கல்வித்துறை கவலைப்படுவதாகவே இல்லை. எந்தவிதப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்ளாமல், நீதிமன்றத் தீர்ப்பாக உத்தரவுகள் வருவதற்குக் கல்வித் துறை காத்திருக்கிறது என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

திறமைசாலி என்று கருதப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விஷயங்களில் ஏன் தடுமாறுகிறார் என்பது புரியவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு அரசின் திறமையின்மைக்குத் தரப்பட்டிருக்கும் சான்றிதழ்.

Posted in +1, abuse, Admissions, Ban, Bar, Bikes, Business, CBSE, Courts, Cutoff, Disqualify, Don bosco, Donations, Donbosco, Education, Extortion, Helmet, Helmets, HSC, Industry, Judges, Justice, Law, Marks, Matric, Matriculation, Merit, Minister, Needy, Order, Plus1, PlusOne, Poor, Power, Price, Quality, revenue, Rich, Safety, School, Schools, seats, State, Study, Thangam Thennarasu, Thenarasu, Thennarasu, Wealthy | Leave a Comment »