Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Games’ Category

Ilavazhagi, the struggling world champion from Chennai

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2008

கவர் ஸ்டோரி

வெற்றி என்னை ‘ஃபாலோ’ செய்யும்

யுகன்

“சுகாதாரமா அப்படின்னா?’ என்று கேட்குமளவுக்கு இறைந்து கிடக்கும் குப்பைக் கூளங்கள். முடை நாற்றம் எடுக்கும் சென்னை, வியாசர்பாடியின் சாமந்திப்பூ(?!) காலனி. ஓர் உலக சாம்பியனின் வீடு இங்கேதான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்!

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த உலகளாவிய கேரம் விளையாட்டில் பெண்கள் பிரிவில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் இளவழகி. பத்தாவது வரை மட்டுமே படித்திருக்கும் இந்த உலக சாம்பியனை, நான்கு பேரோடு சேர்ந்து கேரம் போர்ட் கூட விளையாட முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருக்கும் அவரின் “ஹவுஸிங் போர்ட்’ வீட்டில் சந்தித்தோம்.

“”என்னுடைய அப்பா இருதயராஜ்தான் என் கேரம் போர்ட் குரு. அவர் ரிக்ஷா ஓட்டுகிறார். அம்மா- செல்வி குடும்பத் தலைவி. தங்கை, இலக்கியா, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.காம். படிக்கிறார். இன்னொரு தங்கை, செவ்வந்தி ஒன்பதாவது படிக்கிறார். என்னுடைய அப்பா, போட்டிகளில் கலந்து கொண்டு மெடல்கள் வாங்கவில்லையே தவிர, எனக்கு கேரம் விளையாட்டில் நிறைய ஆட்ட நுணுக்கங்களைச் சொல்லித் தருவார். அப்பாவின் நண்பர் ஆறுமுகம் என்பவர் எங்களின் வீட்டுக்கருகில் போர்ட்-ரூம் வைத்திருந்தார். அங்கு போய் விளையாடியும், பிறர் விளையாடுவதைப் பார்த்தும்தான் நான் என்னுடைய விளையாட்டை வளர்த்துக் கொண்டேன். நான் விளையாடும் முறையைப் பார்த்து என்னை டோர்னமென்ட்களில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்னுடைய அப்பாதான்.

நான் மாநில அளவிலும், தேசிய அளவிலும் எல்லாப் போட்டிகளிலும் பங்கெடுப்பதற்கு காரணமாக இருந்தவர், இப்போது நான் பிரான்ஸ் செல்வதற்கும் காரணமாக இருந்தவர் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். தான். அவர் அளித்த ஊக்கம்தான் நான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாகியிருப்பதற்கு அடிப்படை. என்னுடைய வெற்றியை அவருக்குத்தான் நான் சமர்ப்பிப்பேன்.

உலக அளவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே கேரம் போர்ட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாதான் சாம்பியன். அதிலும் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. இந்த வருடம் பிரான்ஸில் நடந்த உலக சாம்பியன் போட்டியில், 20 நாடுகள் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. ஆனால் இறுதியாகப் பங்கெடுத்தது 12 நாடுகள்தான். ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, கானடா, மாலத்தீவுகள், கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பங்கேற்றன. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஆண்களில் 8 வீரர்களும், பெண்களில் 8 வீரர்களும் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து சென்றவர்களில் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே 6 பேர்!

முதலில் அனைத்து நாட்டு வீரர்களையும் நான்கு பிரிவுகளாகப் பிரித்துவிடுவார்கள். ஒவ்வொரு பிரிவில் இருப்பவர்களும், இன்னொரு பிரிவினரோடு மோதுவார்கள். இது “லீக்’. இப்படி நடந்த “லீக்’ ஆட்டத்தில் ஸ்ரீலங்கா வீராங்கனையான குமாரியுடன் ஆடிய ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது.

செமி-ஃபைனல் முழுவதும் நாக்-அவுட் முறையில் நடந்தது. செமிஃபைனலில் நான் (25, 11) (25, 14) ஆகிய பாயின்ட்களில் பீகாரைச் சேர்ந்த ராஷ்மி குமாரியைத் தோற்கடித்தேன். இன்னொரு செமிஃபைனலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிர்மலா, முன்னாள் உலக சாம்பியனான ரேவதியைத் தோற்கடித்தார்.

ஆக, நான் ஃபைனலில் சக இந்திய வீரரான நிர்மலாவுடன்தான் ஆடினேன். என்னுடைய ஆட்டமுறை, “டிஃபென்ஸ்’ பற்றியெல்லாம் யோசிக்காமல், காய்களைப் பாக்கெட் செய்வதில் குறியாக இருப்பதுதான். மிக..மிக.. நெருக்கடியான போட்டியாக இது அமைந்தது. (25, 11) (25,11) ஆகிய பாயின்ட்களில் நான் வெற்றி பெற்றேன். இந்தப் போட்டியில் பங்கெடுத்த பெண்களிலேயே நான்தான் மிகவும் வயது (23) குறைவானவள். இரட்டையர் போட்டியிலும் நான் “ரன்னர்-அப்’பாக வந்தேன்.

ஸ்ரீலங்கா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடந்த கேரம் விளையாட்டுகள் பலவற்றில் நான் ஜெயித்திருக்கிறேன். தில்லியில் 2006-ல் நடந்த உலகக் கோப்பை கேரம் போட்டியிலும் நான் சாம்பியன் பட்டத்தை வென்றேன். ஏறக்குறைய 12 வருடங்களாக கேரம் போர்டில் தேசிய அளவிலும், உலக அளவிலும் சாதித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் மீது மீடியாவின் வெளிச்சம் இப்போதுதான் மிக அதிகமாகப் பட்டிருக்கிறது.

வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். இருப்பதற்கு வீடும், விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீட்டில் எனக்கு ஓர் அரசுப் பணியும்தான் என்னுடைய கோரிக்கை.

“”ரிக்ஷா ஓட்டியான உன்னோட பொண்ணுக்கு கேரம்போர்டெல்லாம் தேவையா? பேசாம ஏதாவது வேலைக்கு அனுப்புறதைப் பார்ப்பியா…” என்று என் காதுபடவே, என் அப்பாவிடம் கிண்டல் தொனிக்கப் பேசியவர்கள்… (கண்கள் கசிய… பேச்சு தடைபடுகிறது.. சமாளித்துக் கொண்டு பேசுகிறார்) எத்தனையோ பேர். அப்பா வாங்கிக் கொடுத்த “பில்லியர்ட்ஸ் பால்’ ஸ்டிரைக்கரில் தான் இப்போதும் ஆடுறேன். எட்டு வருஷத்திற்கு முன்பே இதன் விலை 300 ரூபாய்!

நான் ஒவ்வொரு முறையும் “ரெட்’ காய்னப் பாக்கெட் செய்துவிட்டு, “ஃபாலோ’வுக்குக் குறிபார்க்கும் போதெல்லாம், தொடர்ந்து எங்கள் குடும்பத்தை “ஃபாலோ’ செய்து கொண்டிருக்கும் வறுமைதான் என் நினைவுக்கு வருகிறது. வறுமையில் இருந்தாலும்… என் திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் வெற்றி என்னை “ஃபாலோ’ செய்கிறது. இனிமேலும் செய்யும். வெளிநாட்டிற்காக விளையாட எனக்கு ஐந்து வருடங்களாகவே வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. என் திறமைக்கு என் நாட்டிலேயே மரியாதை கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்…” என்றார் சென்டர்-கட் செய்து, ஃபாலோவை போட்டபடி இளவழகி!

Posted in Achievements, Carom, carrom, carroms, Champion, Chennai, Females, Finals, Games, global, Ilavalagi, Ilavazagi, Ilavazhagi, International, Lady, Medals, She, Sports, Women, World, Young, Youth | Leave a Comment »

IPL teams snapped up in $800m spree: Mukesh, Shah Rukh, Mallya win Rs 2800-cr bids

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008

Cricket IPL Sponsorships

இந்திய ஏலத்தில் சர்வதேச கிரிக்கட் வீரர்கள்

வழமைக்கு மாறான ஏல விற்பனை ஒன்று இந்தியாவின் மும்பை நகரில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

அங்கு தொலைக்காட்சி மூலமான விளம்பர வருமானத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருக்கின்ற புதிய இந்திய கிரிக்கட் லீக் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான ஆட்டக்காரர்களை, பிரபல தொழிலதிபர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்தனர்.

ஏப்ரல் மாதம் முதல் இருபதுக்கு இருபது அடிப்படையில் 6 வாரங்களுக்கும் அதிகமாக நடக்கவிருக்கின்ற இந்த போட்டிகளில், இந்தியாவின் பல நகரங்களைச் சேர்ந்த தனியார் கழகங்களுக்காக முதல் தடவையாக சர்வதேச முன்னணி கிரிக்கட் ஆட்டக்காரர்கள் ஆடவுள்ளனர்.

ஏலம் எடுக்க வந்த நடிகை பிரித்தி ஷிந்தா
ஏலம் எடுக்க வந்த நடிகை பிரித்தி ஷிந்தா

இந்தப் போட்டிகள் விளையாட்டு வீரர்களின், தேசத்தின் மீதான விசுவாசத்தைக் குறைக்கும் என்பதால், கிரிக்கட் துறையில் இவை பாதிப்பை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இதற்காக 8 கழகங்கள் இந்திய முக்கிய நகரங்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மும்பை, டில்லி, கொல்கொத்தா, பங்களூர், ஜெய்பூர், சென்னை, சண்டிகார் மற்றும் ஹைதராபாத் ஆகிய இந்த கழகங்களில் மிகவும் முக்கிய வணிக புள்ளிகளும் மும்பை நடிகர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சீமெண்ட் சிறினிவாசன் போன்ற தொழிலதிபர்களும், ஷாருக்கான் மற்றும் பிரித்தி ஜிந்தா போன்ற மும்பை திரைப்பட நட்சத்திரங்களும் இதில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான தொலைக்காட்சி உரிமம் கூட மிகப் பெரிய தொகைக்கு விலைபோயுள்ளது.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, யுவராஜ்சிங் மற்றும் வீரீந்தர் சேவாக் ஆகிய இந்திய பிரபல வீரர்கள் தமது சொந்த நகரங்களின் அணிகளுக்கே விளையாடுவார்கள். இவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் வழங்கப்படும்.

அதேவேளை இன்று நடந்த ஏலத்தில், டோணியை சென்னை லீக் 1.5 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. அதேவேளை ஆஸ்ரேலிய அடம் கில்கிறிஸ்ட் 7 லட்சம் டாலர்களுக்கும், சேர்ன் வார்ண் நாலரை லட்சம் டாலர்களுக்கும் விலை போயிருக்கிறார்கள்.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை சென்னை அணி 6 லட்சம் டாலர்களுக்கு வாங்கியுள்ளது, சனத் ஜயசூரியவை மும்மை அணி 9லட்சத்து எழுபத்தையாயிரம் டாலர்களுக்கும், மஹில ஜயவர்த்டனவை சண்டிகர் அணி 4லட்சத்து எழுபத்தையாயிரம் டாலர்களுக்கும் வாங்கியிருக்கின்றன.

இந்த லீக் அணிகளைப் பொறுத்தவரை, அவற்றில், 16 வீரர்களைக் கொண்ட அணியில், இந்தியர் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த 8 வீரர்கள் மாத்திரமே இடம்பெறமுடியும். அதிலும், முதல் பதினொருவரில், 4 வெளிநாட்டவர் மாத்திரமே இடம்பெறலாம்.

இந்த ஒவ்வொரு அணியிலும், குறைந்தது 22 வயதுக்கு உட்பட்ட 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றாக வேண்டும் என்பது விதியாகும்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கோடிகளில் புரளும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

பிரீமியர் லீக் (ஐபிஎல்) அமைப்பு வரும் மார்ச்- ஏப்ரலில் நடத்தவுள்ள 20 ஓவர்கள் போட்டியில் விளையாடப் போகும் அணிகளை பலநூறு கோடிகளைக் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர் அம்பானி, விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் பிரபலங்கள்.

இதனால் சூதாட்டம் தலைவிரித்தாடலாம் என்ற சர்ச்சை வலுத்துள்ளது.

பிசிசிஐ-க்கு எதிர் அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது எஸ்ùஸல் குழுமத்தின் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்). இந்த அமைப்பு 20 ஓவர்கள் போட்டியை சமீபத்தில் ஹரியாணா மாநிலத்தில் நடத்திக் காட்டியது.

முன்னதாக, ஐசிஎல்-லில் விளையாடும் வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அந்த அமைப்பால் ஓரங்கப்பட்டவர்களும், முன்னாள் சர்வதேச வீரர்களும் அடித்தது அதிர்ஷ்டம் என்பது போல நல்ல விலைக்கு இந்த அமைப்பில் ஒப்பந்தம் பெற்றனர்.

ஐபிஎல் உதயம்:

இந்நிலையில் அதற்குப் போட்டியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உதவியுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியை நடத்த முடிவு செய்தது.

8 அணிகள்:

44 நாள்களில் மொத்தம் 59 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 8 அணிகள் அப் போட்டியில் விளையாட உள்ளன. மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கோல்கத்தா, தில்லி, மொஹாலி, ஜெய்ப்பூர் என ஒவ்வொரு அணிக்கும் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஏலம்:

இதற்கிடையே அந்த அணிகளை யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் எனவும், குறைந்தபட்சமாக ரூ. 200 கோடி தரவேண்டும் எனவும் விலை நிர்ணயம் செய்தது பிசிசிஐ. டெண்டர் மூலம் அதற்கான தேர்வு நடைபெற்றது.

ஆனால், எதிர்பார்த்ததற்கும் மேலாக ஏலம் மூலம் கோடிகளைச் சேர்த்துள்ளது இந்திய வாரியம்.

உரிமை பெற்றவர்களது பெயர்களை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் லலித் மோடி மும்பையில் வியாழக்கிழமை அறிவித்தார்.

மும்பை அணிக்கு ரூ 436 கோடி:

அதிகபட்சமாக, மும்பை அணி ரூ. 436 கோடிக்கு விலை போனது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அதை வாங்கியுள்ளார்.

அடுத்து, பெங்களூரு அணியை ரூ. 435 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார் மதுபான தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் விஜய் மல்லையா.

ஹைதராபாத் அணியை ரூ. 419 கோடிக்கு டெக்கான் கிரானிக்கல் நிறுவனமும், சென்னை அணியை ரூ. 354 கோடிக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளன.

ஷாருக்கான்:

கோல்கத்தா அணியை, ஜுஹி சாவ்லா, ஜெய் மேத்தா ஆகியோருடன் இணைந்து ரூ. 312 கோடிக்கு பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் வாங்கியுள்ளார்.

மற்றொரு நடிகை பிரித்தி ஜிந்தா, தனது காதலர் நெஸ் வாடியாவுடன் சேர்ந்து மொஹாலி அணியை ரூ. 296 கோடிக்கு உரிமை பெற்றுள்ளார்.

தில்லி அணியை ரூ. 328 கோடிக்கு ஜி.எம்.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனமும், ஜெய்ப்பூர் அணியை ரூ. 261 கோடிக்கு எமர்ஜிங் மீடியா நிறுவனமும் பெற்றுள்ளன.

ஐசிஐசிஐ, சஹாரா, ஃபியூச்சர்ஸ் குழுமம் ஆகிய பெரும் நிறுவனங்களின் டெண்டர் நிராகரிக்கப்பட்டதாக மோடி தெரிவித்தார்.

இந்த ஏலத்தால் மொத்தம் ரூ. 7 ஆயிரம் கோடிவரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வருமானம் கிடைத்துள்ளது.

தவிர 80 வீரர்கள் இப் போட்டிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் விலைக்கு வாங்குவோர் வாங்கிக் கொள்ளலாம். அதற்கான ஏலம் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஏகப்பட்ட கோடிகள் பிசிசிஐ-க்கு கிடைக்கும்.

தீவிர கண்காணிப்பு:

இதுவரை இல்லாத அளவு ஆயிரக்கணக்கான கோடிகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால், சூதாட்டம் தலைவிரித்தாடலாம் என்ற சர்ச்சை வலுத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊக்கமருந்து தடுப்பு பிரிவும், லஞ்ச ஒழிப்பு பிரிவும் தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

————————————————————————————————————–
ஐபிஎல் போட்டி நாயகன் கில்கிறிஸ்ட்

மெல்போர்ன், பிப். 19: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் அதிகமான தொகைக்கு ஏலம் போகும் வாய்ப்பை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் புதன்கிழமை நடைபெறுகிறது. அதில், ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகளை ஏலத்துக்கு எடுத்துள்ளவர்கள் கோர உள்ளனர்.

எந்த வீரரையும் ஏலம் கேட்க ஓர் அணிக்கு ஒருமுறைதான் வாய்ப்பு. இரண்டாவது முறையாக அதே வீரரைக் கேட்க வாய்ப்பு கிடையாது. ஆதலால், யார் முதலாவதாக ஏலம் கேட்கும் வாய்ப்பை பெறுகின்றனரோ, அவர்கள் முதல் ஏலத்திலேயே கில்கிறிஸ்டுக்கு சில கோடிகளை வாரி வழங்கலாம் எனத் தெரிகிறது.

ரூ. 3.5 கோடி:

இதற்கிடையே, ஐபிஎல் போட்டியில் விளையாடப்போகும் ஆஸ்திரேலிய வீரர்களில் கில்கிறிஸ்டுக்குத்தான் மவுசு அதிகம் என்ற பேச்சும் வலுத்துள்ளது. அவரை ஏலத்தில் எடுக்க ஷாருக்கானின் கோல்கத்தா, பிரீத்தி ஜிந்தாவின் மொஹாலி அணிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றன.

6 வார காலம் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்கு கில்கிறிஸ்டுக்கு ரூ. 3.5 கோடிவரை கொடுக்க அணிகள் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே சமயம் இக்கருத்தை மறுத்துள்ள ஐபிஎல்-லின் ஆஸ்திரேலிய ஏஜென்ட் மாக்ஸ்வெல், அவர் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் ஆகப்போகிறார் என எனக்குத் தெரியாது. ஆனால் பை நிறைய பணத்துடன் திரும்புவார் என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

கங்குலி ஆதரவு:

இதற்கிடையே கோல்கத்தா அணியின் கேப்டன் செüரவ் கங்குலியும், கில்கிறிஸ்ட்டை சேர்க்க ஆதரவு காட்டி வருகிறார். கோல்கத்தா அணி உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கானும் கில்கிறிஸ்டை சேர்க்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் ஆஸ்திரேலியா சென்றுவந்ததாகவும் தெரிகிறது.

மொஹாலி அணியின் பயிற்சியாளர் டாம் மூடியும், கில்கிறிஸ்ட்டை எடுத்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்.

இதற்கிடையே கில்கிறிஸ்ட்டை அணியில் சேர்ப்பது ஆட்டத்துக்காக மட்டுமல்ல, இக்கட்டான நிலையில் வீரர்களை ஒருங்கிணைத்து ஆடவைக்கும் தந்திரம் அவரிடம் உண்டு என்பதற்காகவே அணிகள் அவர் மீது கண் வைத்துள்ளன என்ற கருத்தும் வலுத்துள்ளது.

Posted in Ambani, BCCI, betting, bids, Bribery, Bribes, Corruption, Cricket, Deccan Chronicle, Gambling, Games, India Cements, Indian Premier League, IPL, Jaipur, Jay Mehta, Juhi Chawla, Kapil, kickbacks, Kolkata, Mallya, Match fixing, Matchfixing, Money, Mukesh, Mumbai, Ownership, Preity Zinta, Reliance, Shah Rukh, Shah Rukh Khan, Shahrukh, Sponsorships, Sports, teams, Twenty20 | 2 Comments »

Jallikkattu in Tamil Nadu: Supreme Court ban on bullfight, Alanganallur jallikattu, Bull-taming festival

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2008

அலங்காநல்லுõர் ஜல்லிகட்டில் சீறி பாய்ந்தன 302 காளைகள்

அலங்காநல்லுõர்: உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லுõர் ஜல்லிகட்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நேற்று சிறப்பாக நடந்தது. இதில் 302 காளைகள் அவிண்ழ்த்து விடப்பட்டன. 347 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிகட்டை காண நேற்று அதிகாலையிலேயே அலங்காநல்லுõரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் குவிந்தனர். மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாடிவாசலில் வரிசையாக நிறுத்தப்பட்டன. அவற்றை கால்நடை டாக்டர்கள் சோதித்தனர். மாடுபிடி வீரர்களுக்கு நீலக்கலரில் பனியன், டிரவுசர் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி.,க்கள், சுற்றுலா பயணிகள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களுக்கு தனித்தனி காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

வீரர்களுக்கு எச்சரிக்கை:

முத்தாலம்மன், முனியாண்டி மற்றும் காளியம்மன் கோயில்களில் கலெக்டர் ஜவஹர், மூர்த்தி எம்.எல்.ஏ., அன்பு எஸ்.பி., நகர் நல கமிட்டி தலைவர் ரகுபதி, செயலாளர் பெரியசாமி, பேரூராட்சி தலைவர் அழகு உமாதேவி, துணைத்தலைவர் செல்வராணி மற்றும் கிராம கமிட்டியினர் வழிபாடு செய்தனர். கலெக்டர் ஜவஹர் முதல் காளையினை அவிழ்த்து ஜல்லிகட்டை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “தமிழக பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இந்த ஜல்லிகட்டு, பெரிய போராட்டத்திற்கு பிறகு நடக்கிறது. இதனை மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் இந்த ஜல்லிகட்டை பார்த்து கொண்டுள்ளனர். மாடுபிடி வீரர்களை தவிர வேறு யாரும் மைதானத்திற்குள் நுழைய கூடாது. மாடுகளின் வாலை பிடிக்கவோ, மண்ணை துõவவோ கூடாது. சுப்ரீம் கோர்ட், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலை பின்பற்றினால் மட்டுமே தொடர்ந்து ஜல்லிகட்டை நடத்த முடியும்’ என்றார்.

காளையரிடம் சிக்காத காளைகள்:முதலில் கோயில் காளைகளும் பிறகு மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை பிடிக்க மாடு பிடி வீரர்கள் முயன்றனர். குறிப்பாக பல்லவராயன்பட்டி கண்ணன், ஜெய்ஹிந்துபுரம் முருகேசன் போன்றோரது மாடுகள் வீரர்களிடம் சிக்காமல் மைதானத்திற்குள் 10 நிமிடங்கள் போக்கு காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தின. சில வீரர்களை காளைகள் முட்டி துõக்கி எறிந்தன. இருப்பினும் சில மாடுகளை வீரர்கள் 15 மீட்டர் வரை பிடித்து சென்று பரிசுகளை பெற்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வீரர்கள் வெளியேற்றம்:

காளைகளின் மீது மண்ணை துõவியவர்களை பார்த்த கலெக்டர், மைதானத்திற்குள் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். பார்வையாளர்கள் காலரியில் இருந்து மாடுகளை பிடிக்க முயன்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்த விடப்பட்ட காளைகள் வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட மூங்கில் தடுப்புகளால் ஊருக்கு வெளிப்புற தோப்புகளுக்கு சென்றன. பார்வையாளர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதனை கூடல்புதுõர் எஸ்.ஐ., முருகன் மற்றும் போலீசார் தடுக்க முயன்றனர். அவர்கள் மீது கூட்டத்தினர் கல் வீசியதில் எஸ்.ஐ.,க்கு காயம் ஏற்பட்டது.

கலெக்டர் பேட்டி:

கலெக்டர் ஜவஹர் கூறுகையில், “கடந்தாண்டு மாடுகளை பிடிக்க முயன்ற 100 பேர் வரை காயமுற்றனர். இந்தாண்டு 4 பேர் மட்டும் காயமுற்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 பேர் சிறுகாயம் அடைந்தனர். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஜல்லிகட்டு சிறப்பாக நடந்தது’ என்றார். சிங்கப்பூரை சேர்ந்த லிங் ஜியா என்ற மாணவி கூறுகையில், “மாடுகளை துன்புறுத்தாத அளவு நடந்த ஜல்லிகட்டை பார்க்கும்போது திரில்லாகவுள்ளது. மாடுபிடி வீரர்கள் மிக நேர்த்தியாக மாடுகளை பிடிக்கின்றனர். பசுமையான இந்தஊரில் நடந்த ஜல்லிக்கட்டை மறக்க முடியாது’ என்றார்.

வாடிவாசலில் இருந்து…:

காளையை 2 பேர் பிடித்தால் பரிசுகள் வழங்கப்படவில்லை. வாடிவாசலில் இருந்து 15 மீட்டர் துõரம் வரை காளையின் திமிலை பிடித்து ஒருவராக அடக்குவோருக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்பட்டன. பார்வையாளர் காலரிக்கும் மைதானத்திற்கும் 2 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாகவும் நடந்தது. பிராணிகள் நலச்சங்கத்தினரும் கண்காணித்தனர்.

* ஜல்லிக்கட்டை பார்க்க காலரி கட்டணம் ரூ.100 நிர்ணயம் செய்து அங்குள்ள தியேட்டரில் அதற்கான டிக்கெட் வழங்கப்பட்டது. அவற்றை மொத்தமாக வாங்கிய சிலர் ரூ. 400 வரை விற்றனர்.

*வீட்டு உரிமையாளர்கள் சிலர் பார்வையாளர்களிடம் கட்டணம் வாங்கி கொண்டு மாடிகளில் நின்று ஜல்லிகட்டை பார்க்க செய்தனர். வாகனங்களை நிறுத்தவும் கட்டணம் வசூலித்தனர்.

* முடுவார்பட்டியை சேர்ந்த மூத்த மாடு பிடி வீரர் முனியசாமி வீரர்களுக்கு அடிக்கடி காளைகளை அடக்கும் விதம் குறித்து “டிப்ஸ்’ வழங்கிக்கொண்டு இருந்தார்.

* ஐ.ஜி., சஞ்சீவ்குமார், போலீஸ் கமிஷனர் நந்தபாலன், டி.ஐ.ஜி., ஜெயந்த் முரளி மேற்பார்வையில் 1200 போலீசார் மற்றும் 85 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

*வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த ஒரு காளையின் திமிலை பிடித்து அடக்கிய வீரர் நாகராஜனுக்கு மு.க.அழகிரி மகன் தயாநிதி ரூ.500 பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

*முத்தையா, சுரேஷ், சரவணன், மகாராஜன் போன்றவர்கள் பல காளைகளை மடக்கி பரிசுகளை பெற்றனர். தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, மிக்ஸி, அண்டா போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

*எஸ்.ஐ., மீது கல்வீச்சையடுத்து ஜல்லிகட்டு சிறிதுநேரம் தடைப்பட்டது. கூட்டத்தினரை போலீசார் அமைதிப்படுத்தியதையடுத்து தொடர்ந்த ஜல்லிகட்டு மாலை 5 மணியுடன் முடிக்கப்பட்டது. அவிழ்த்து விடாத சில மாடுகளுக்கு கிராம கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

42 காளைகளுக்கு அனுமதி மறுப்பு:

அலங்காநல்லுõர் ஜல்லிகட்டில் மொத்தம் 427 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 42 காளைகள் மருத்துவ சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை. இந்த காளைகள் மது ஊட்டப்பட்டது மற்றும் திமில்களில் விளக்கெண்ணெய் பூசிய காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. மாலை 5 மணிக்குள் ஜல்லிகட்டை முடிக்க வேண்டும் என்பதால் 302 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை பிடிக்க 370 பேர் பதிவு செய்தனர். அவர்களில் 23 பேருக்கு மருத்துவ மற்றும் உடற்கூறு காரணங்களால் காளைகளை பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இவர்களில் சிலர் போதையில் இருந்தது தெரிந்தது.

kutramtop.jpgஒரு லட்சம் பேர் பார்வையிட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
மாடுகள் முட்டி 66 பேர் காயம்

மதுரை, ஜன.18-

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இதில், மாடுகள் முட்டி 66 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா? என்ற சந்தேகத்தில் குழம்பிப்போய் இருந்த மக்களுக்கு ஆறுதலான முடிவு பொங்கல் அன்று வெளியானது. ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு விலக்கியது. இதனை அடுத்து நேற்று முன்தினம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்தது. அதன்பின்னர் நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடந்தது.

இதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் கோட்டை மாரியம்மன் கோவில் திடலில் வாடிவாசலுக்கு முன்பு இருபுறமும் கம்புகளால் 400 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதன்மீது 5 அடி உயரத்துக்கு கம்பி வலை கட்டப்பட்டு இருந்தது.

அதே போல் வாடிவாசலுக்கு உள்ளே மாடுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தவும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதியாக மரக்கட்டைகளால் ஆன காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஜல்லிக்கட்டு மாடுகளை அதன் உரிமையாளர்கள் நேற்று முன்தினம் மாலையே லாரிகளிலும், டிராக்டர்களிலும் கொண்டு வந்து பெயரை பதிவு செய்தனர். மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் வந்து இருந்தன. அதேபோல் மாடு பிடி வீரர்களும் மதுரை மட்டுமின்றி சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வந்து தங்கள் பெயரை பதிவு செய்தனர்.

500 காளைகள்

நேற்று காலையில் டாக்டர் காமராஜ் தலைமையில் 24 கால்நடை டாக்டர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழுவினர் மாடுகளை பரிசோதித்தனர். மாடுகள் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனவா? சாராயம், பிராந்தி போன்ற போதை தரும் பொருள் எதுவும் கொடுக்கபட்டு உள்ளனவா? என்று பரிசோதித்தார்கள்.

சில மாடுகளுக்கு கூர்மையான கொம்புகள் இருந்தன. அந்த கொம்பினால் யாருக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்க அதை சீவி மட்டுப்படுத்தினர். சிலர் தங்கள் மாட்டின் கொம்புகளுக்கு எண்ணை தடவி வந்தனர். அதிகாரிகள் அதை துடைத்து அப்புறப்படுத்தச் சொன்னார்கள். பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாடுகளுக்கு முத்திரை குத்தி அனுமதி வழங்கினார்கள். மொத்தம் 500 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. கால்கடைகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையை இந்திய பிராணிகள் நல உறுப்பினர் எல்லப்பன், புளு கிராஸ் அமைப்பைச் சேர்ந்த பனிமா, ராஜேஷ் ஆகியோர் கண்காணித்தனர்.

மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர் கிருஷ்ணன் தலைமையில் 50 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து மாடுபிடிக்க அனுமதி அளித்தனர். குறிப்பாக அவர்கள் மது அருந்தி இருக்கிறார்களா? என்று சோதனை செய்தனர். மொத்தம் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாடுபிடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீல நிற பனியனும், கால்சட்டையும் சீரூடையாக வழங்கப்பட்டது.

ஒரு லட்சம் பேர்

ஜல்லிக்கட்டை காண நேற்று காலை முதலே பார்வையாளர்கள் திரண்டு வந்தனர். காலரிகள் நிரம்பி வழிந்தன. தடுப்புகளுக்கு வெளியே ஏராளமானோர் கூடி நின்றனர். அந்த பகுதியில் உள்ள மொட்டை மாடிகளிலும் பலர் குவிந்து இருந்தனர். எங்கும் இடம் கிடைக்காத சிலர் அருகில் உள்ள மரங்கள் மீது ஏறி இருந்தனர்.

அமெரிக்கா, ஜப்பான் உள்பட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுமார் 200 பேர் ஜல்லிக்கட்டை காண வந்திருந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு காலரி ஒதுக்கப்பட்டு இருந்தது. மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து இருந்தனர்.

பயமுறுத்திய காளைகள்

பகல் 11-30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் முத்தாலம்மன் முனியாண்டி கோவில் மாடு வாடிவாசலில் இருந்து விடப்பட்டது. அது கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் தனியார் மாடுகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. காளைகளை வாடிவாசலில் இருந்து விடும்போது அதன் மூக்கணாங்கயிறையும் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ஜலங்கையையும் அவிழ்த்து விட்டனர். சிலர் தங்கள் காளையின் கழுத்தில் புது துணியை கட்டி அதனுள் பணத்தை வைத்திருந்தனர்.

மாடு வாடிவாசலில் இருந்து வெளியே வரும்முன்னர் அந்த மாடு யாருடையது? அதன் தோற்றம் எப்படி? கொம்புகள் எப்படி வளர்ந்துள்ளன? என்பன போன்ற விவரங்களை அறிவிப்பாளர்கள் அறிவித்தார்கள். ஒரு மாட்டை ஒருவரே அடக்க வேண்டும் என்பதால் வீரம் செறிந்த மாடு வந்தபோது புதுமுக வீரர்கள் ஒதுங்கி விட்டனர்.

பந்தாடிய காளைகள்

ஓங்கிய திமிலுடன் கூடிய காளைகள் வீரர்களை பயமுறுத்தியபடி வந்தன. அவை சிறிது நேரம் வாடிவாசலில் நின்று கால்களால் மண்ணை கிளரி நோட்டம் பார்த்த பின்னரே சீறிப்பாய்ந்தன. அந்த காளைகளையும் அடக்குவதற்கு வீரர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் மைதானத்துக்குள் சுழன்று சுழன்று வந்து முட்டி தள்ளின. இன்னும் சில காளைகள் பிடிக்க வந்த வாலிபர்களை கொம்புகளால் குத்தி பந்தாடியது. அவர்கள் சினிமா சண்டை காட்சியில் வருவதுபோல் தூக்கி வீசப்பட்டனர்.

அதேநேரம் வீரர்களும் சளைக்காமல் காளையை துரத்திச் சென்று அதன் திமிலை பிடித்து அடக்கினர். ஒருசில வீரர்கள் பாய்ந்து வந்த காளையை நேர் எதிரே நின்று அடக்க போரிட்டனர். இந்த காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மாடுகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக் காசு, பீரோ, கட்டில், அண்டா மற்றும் பணமுடிப்புகள் வழங்கப்பட்டன. காளைகளை யாரும் அடக்காவிட்டதால் அந்த பரிசு மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.

கல்வீச்சு

ஜல்லிக்கட்டை காண நிமிடத்துக்கு நிமிடம் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலை 4 மணி அளவில் பார்வையாளர்கள் நிற்க இடம் இல்லாமல் மைதானத்தைவிட்டு மாடுகள் வெளியே வரும் இடத்துக்கு வந்துவிட்டனர். அவர்களை ஒதுங்கி நிற்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள தடுப்பு கம்புகள் உடைந்தன. இதனால் கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். லத்தியை சுழற்றியபடி போலீசார் வந்தனர்.

அப்போது சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசினார்கள். இதில் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூக்கன் மற்றும் கனிராஜ், ஜெயக்கொடி, கணேசன் உள்பட 6 போலீசார் காயம் அடைந்தனர்.

காயம்

பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மொத்தம் 66 பேர் காயம் அடைந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை நீங்கியதால் மகிழ்ச்சி
மதுரை அருகே பாலமேட்டில்
ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது
அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் விழா

சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை நீங்கியதால், மதுரை அருகே உள்ள பாலமேட்டில் ஜல்லிக்கட்டு உற்சாகத்துடன் நடைபெற்றது. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் விழா நடைபெற்றது.

மதுரை, ஜன.17-

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மற்றும் சுற்றுப்பகுதியில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

பட்டாசு வெடித்து

உலக பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. இதனால் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தமிழக அரசு எடுத்த உடனடி நடவடிக்கையின் பேரில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டு தடை நீங்கியதால், சோர்ந்து கிடந்த கிராமங்கள் சுறுசுறுப்படைந்தன. பட்டாசுகளை வெடித்தும், தெருவில் ஆடிப்பாடியும் கிராம மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

பாலமேட்டில் கோலாகலம்

ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களில் ஆயத்த பணிகள் உடனடியாக தொடங்கிவிட்டன. நேற்று மதுரையை அடுத்த பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. அனுமதி பெறப்பட்ட காளைகள் மட்டுமே களத்தில் இறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

மதுரை, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, நத்தம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சை, உள்பட பல்வேறு பகுதியில் உள்ள மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை டிராக்டர்-லாரிகளில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலையே பாலமேடு வந்துவிட்டனர்.

டாக்டர்கள் பரிசோதனை

அங்கு கால்நடை டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஒவ்வொரு மாட்டையும் பரிசோதித்தனர். அந்த மாடு ஜல்லிக்கட்டுக்கு தகுதியானதுதானா? அதற்கு மது ஏதும் ஊட்டப்பட்டதா? என்பன போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.

பின்னர் தகுதியான காளைகளுக்கு அனுமதி அளித்து அதன் முதுகில் சீல் குத்தினர். மொத்தம் 400-க்கு மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

நீல நிற சீருடை

இதேபோல் அனுமதி பெறப்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே காளைகளை அடக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தனர். இதனால் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் நேற்று முன்தினமே அனுமதி பெறுவதற்காக பாலமேடு வந்தனர்.

அவர்களின் உடல் தகுதியை டாக்டர்கள் பரிசோதித்து அனுமதி வழங்கினர். இறுதியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாடுகளை பிடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீல நிற பனியனும், கால்சட்டையும் சீருடைகளாக வழங்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சள்மலை ஆற்று திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாடுகளை திறந்துவிடும் வாடிவாசலுக்கு இருபுறமும் சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு கம்புகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. யாரும் தடுப்பை தாண்டி உள்ளே நுழைந்துவிடாதபடி இருக்க தடுப்புக்கு மேலே கம்பி வலை அமைக்கப்பட்டு இருந்தது.

மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.எஸ்.ஜவகர் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். போலீஸ் சூப்பிரண்டு அன்பு, துணை சூப்பிரண்டு தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாடுகள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகின்றனவா? என்பதை கண்காணிக்க பிராணிகள் நல வாரிய உறுப்பினர் எல்லப்பன், `புளூ கிராஸ்’ அமைப்பை சேர்ந்த பி.டி.மணிமா, ரமேஷ் ஆகியோர் வந்து இருந்தனர்.

வெளிநாட்டு பயணிகள்

நேற்று காலையிலேயே ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து இருந்தனர்.

அவர்கள் தடுப்பு வேலிக்கு இருபுறமும் திரளாக கூடி இருந்தனர். இதுதவிர ஆங்காங்கே சிலர் பரண் அமைத்து அதன்மீது ஏறி அமர்ந்திருந்தனர். அருகே உள்ள மொட்டை மாடிகளிலும், மரங்களிலும் பலர் ஏறி அமர்ந்திருந்தனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

காலை 11 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மைதானத்துக்குள் மாடுபிடி வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து முதலில் கிராமங்களில் உள்ள கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

கோவில் காளைகள் என்பதால் அவைகள் சுதந்திரமாக விடப்பட்டன. அதன்பின் தனியார் காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த அந்த காளைகளை பலர் வீராவேசத்துடன் அடக்க முனைந்தனர். சில காளைகள் யாரின் பிடியிலும் அடங்காமல் திமிறி ஓடியபடி பந்தய மைதானத்தை கடந்து சென்றன. சில மாடுகளுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மைதானத்தில் கடுமையாக போட்டி நிலவியது. பலர் காளையின் கால்களுக்கு இடையே சிக்கி மிரண்டனர்.

பரபரப்பான காட்சிகள்

காளைகள் சீறினாலும் சிலர் அதன் திமிலை பிடித்து அடக்கினார்கள். மாடுகளின் திமிலை பிடிக்க முடியாத சிலர் அதன் வாலை பிடித்தபடி ஓடினார்கள்.

சில காளைகள் மைதானத்தில் நின்று அடக்கவந்தவர்களை சுழற்றி எறிந்து பந்தாடின. நீண்ட நேரம் பாய்ச்சல் காட்டி யாரிடமும் பிடிபடாமல் மைதானத்தில் இருந்து வெளியேறின. சில காளைகள் தங்கள் பார்வையாலும், பாய்ச்சலாலும், கால்களை தரையில் பிராண்டியும் மிரள வைத்தன. நிமிடத்துக்கு நிமிடம் மைதானத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியதால் ஒரே ஆரவாரமாக கணப்பட்டது.

மைதானத்துக்கு வெளியே

ஜல்லிக்கட்டு மைதானத்தில் 300 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அப்பாலும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் மைதானத்தைவிட்டு வெளியே வந்த பின்னர் பொதுமக்களை கண்டு மிரண்டு மீண்டும் மைதானத்துக்குள் புகுந்தன.

இதனால் ஒரே நேரத்தில் 2 காளைகள் மைதானத்தில் களம் இறக்கப்பட்டது போல் காணப்பட்டது. ஆனாலும் பாதுகாப்பு வீரர்கள் அந்த மாட்டை உடனே வெளியேற்றினர்.

மாடுபிடிக்க அனுமதி இடைக்காத சிலர் மைதானத்துக்கு வெளியே வந்த காளைகளை அடக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று இந்த இடத்தில் மாடுகளை அடக்கக் கூடாது என்று எச்சரித்தனர்.

காயம்

மாலை 5-30 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் உயிர்சேதம் ஏதும் இன்றி ஜல்லிக்கட்டு இனிதே முடிந்தது.

ஆனாலும் காளைகளை அடக்க முயன்றபோது மாடுகள் முட்டியும், அதன் கால்களுக்கு இடையே சிக்கியும் 85 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பாலமேட்டைச் சேர்ந்த கோபால், கண்ணனேந்தல் பாண்டி, முடுவார்பட்டி முனியாண்டி, புதுக்கோட்டை கார்த்திக் உள்பட 14 பேர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு பாலமேடு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

மைதானத்தை விட்டு வெளியே மாடுகள் அந்த கூட்டத்தினரை பார்த்து மிரண்டு ஓடியது. அப்போது மாடு முட்டி நாகர்கோவிலைச் சேர்ந்த புவனேஷ், பாறைப்பட்டியைச் சேர்ந்த பூச்சிதேவர், சிச்சிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன், நத்தம் மணக்காட்டூரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பாலமேடு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசு

போட்டியின் இறுதியில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, டிவி, மற்றும் ரொக்கப்பணம் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன. அதேபோல் யாரிடமும் பிடிபடாமல் வந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் போலீசாரால் வீடியோ படம் எடுக்கப்பட்டது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சூரிïர் ஜல்லிக்கட்டு

திருச்சி அருகே உள்ள சூரிïரிலும் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 300-க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஜல்லிக்கட்டு விழாவை கண்டு ரசித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், 46 வீரர்கள் காயம் அடைந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல்
ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்குமா?
நாளை தெரியும்

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தடை உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நீக்குமா? என்பது நாளை (செவ்வாய்க்கிழமை) தெரியும்.

சென்னை, ஜன.14-

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

தமிழக அரசு மனு

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன் தலைமையில் உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை விமானம் மூலம் டெல்லி விரைந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் வீட்டிற்கு சென்று, தமிழக அரசின் வக்கீல் வி.ஜி.பிரகாசம் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார். நேற்று இரவு 7 மணி அளவில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாளை தெரியும்

இந்த மனு நாளை (செவ்வாய்க்கிழமை) தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது என்று தமிழக அரசின் வக்கீல் வி.ஜி.பிரகாசம் தெரிவித்தார்.

எனவே, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை நீங்குமா? என்பது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி முன்னிலையில் நாளை நடைபெறும் விசாரணையின்போது தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை

சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவில், பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர், உளவுத் துறை போலீஸ் ஐ.ஜி. ஜாபர்சேட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நேற்று காலை அவர்கள் டெல்லி புறப்படுவதற்கு முன்பாக, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மற்றும் உயர் அதிகாரிகள், சட்டநிபுணர்களுடன் அப்பீல் மனு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

டெல்லியில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியனிடமும் ஆலோசனை நடத்தியபின்பு மறு ஆய்வு மனு இறுதி செய்யப்பட்டது.

மனு விவரம்

கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, எந்த சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது? என்று நீதிபதிகள் தமிழக அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

எனவே, அதற்கான சட்டபூர்வ ஆதாரங்கள் தமிழக அரசு சார்பில் திரட்டப்பட்டு அதன் விவரங்கள் மறு ஆய்வு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளன. காலம் காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை மதித்து நடக்கவேண்டும் என்று, பாரம்பரிய பண்பாட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதும் ஒரு ஆதாரமாக மனுவில் எடுத்துக் கூறப்பட்டு இருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1909-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கலெக்டராக பதவி வகித்த தேர்ஸ்டன் என்பவர் எழுதிய புத்தகத்தில் 400 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதாகவும், அதனை தடை செய்ய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த தகவலும் மனுவில் ஆதாரமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத நல்லிணக்கம்

மதம், மொழி, இன மாறுபாடு இல்லாமல், அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டாண்டு காலமாக இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. மத அடிப்படையில் நடைபெறும் சடங்குகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று, சர்வதேச சட்டம் வலியுறுத்தி உள்ளது.

அதன் அடிப்படையில், மதச்சடங்குகள், மதம் சார்ந்த வழிபாடு தொடர்புடைய கொண்டாட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட உரிமை இல்லை என்று உரிமையியல் நடைமுறை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை
சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

தமிழர்களின் வீர விளையாட்டான `ஜல்லிக்கட்டு’ போட்டிக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. தடையை நீக்க கோரும் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

புதுடெல்லி, ஜன.12-

தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகையின்போது `ஜல்லிக்கட்டு’ போட்டி நடத்தப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு தடை

மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, பிரசித்தி பெற்றதாகும்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தடை விதித்தது. இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.

தமிழக அரசு அப்பீல்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் முன்னிலையில் இந்த அப்பீல் மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

தடை நீடிப்பு

தமிழக அரசு மற்றும் விலங்குகள் நல வாரிய தரப்பின் விவாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீடித்து உத்தரவிட்டனர். தடையை நீக்க கோரும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில், அதிகாரிகளின் மேற்பார்வையில் தகுந்த பாதுகாப்புடன் ரேக்ளா போட்டி நடத்த நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “பாரம்பரிய வழக்கம் என்ற பெயரில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை தொடர அனுமதிக்க முடியாது. ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க விரும்பவில்லை. மனித நேயத்துடன், மேலும் நாகரீகமான முறையில் இந்த போட்டியை மாற்ற முயற்சிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் கேள்வி

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அந்திஅர்ஜ×னா, தனது வாதத்தின்போது “ஜல்லிக்கட்டு, கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டுவரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை” என்று குறிப்பிட்டார்.

விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் வேணுகோபால் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கூடாது என்று வாதாடினார். விவாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த போட்டியின் போது யாரும் காயம் அடையாமல் பார்த்துக் கொள்வதாக தமிழக அரசு சார்பில் உறுதியளிக்க முடியுமா? அதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவாதம் அளிக்க தயாரா?” என்று கேள்விக்கணை தொடுத்ததுடன், அதுபற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர்.

வீடியோ ஆதாரம்

போட்டியின் போது சிலர் காயம் அடையலாம் என்பதால் அதுபற்றி உத்தரவாதம் அளிக்க இயலாது என்று தமிழக அரசின் வக்கீல் அந்தி அர்ஜ×னா கூறினார். மராட்டிய மாநிலத்தில் `ஜென்மாஷ்டமி’ பண்டிகையின்போது நடத்தப்படும் `உறியடி’ நிகழ்ச்சியின் போது ஒருவர் மீது ஒருவர் ஏறும்போது சிலர் காயம் அடைவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த நிகழ்ச்சியின்போது விலங்குகள் எதுவும் கொடுமைப்படுத்தப்படுவதில்லை என்று பதில் அளித்தனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது, ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின்படி யாருக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி போட்டி நடைபெற்றதற்கு ஆதாரமான வீடியோ மற்றும் பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை மதுரை மாவட்ட கலெக்டர் சார்பில் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பற்றி தமிழக அரசு சார்பில் எடுத்துச்சொல்லப்பட்டும் தடையை நீக்குவதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

ஒரு மாவட்டத்திலாவது

தங்கள் வாதத்தில் நீதிபதிகள் திருப்தி அடையாததை புரிந்து கொண்ட தமிழக அரசின் வக்கீல் குறைந்த பட்சம் ஒரு மாவட்டத்திலாவது ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தடையை நீக்கும்படி கோரி மனு தாக்கல் செய்துள்ள ஒரு கிராம கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சட்டத்தில் தடை செய்யப்படாத ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இதனால் கோபம் அடைந்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், “எந்த சட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக சொல்கிறீர்கள்? எந்த சட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. மனிதர்களுக்கும், காளைகளுக்கும் எந்தவித மோதலும் இருக்கக்கூடாது. காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றால், விலங்குகள் நல வாரியத்தினர் ஏன் கோர்ட்டுக்கு வருகிறார்கள்?” என்றார்.

கண்களில் மிளகாய்ப்பொடி

விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் வாதாடிய வக்கீல் கே.கே.வேணுகோபால் கூறியதாவது:-

“ஜல்லிக்கட்டு நடத்துவது விலங்குகள் கொடுமைப்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை மீறுவதாகும் என்பதால், அதை தடை செய்வது மாநில அரசின் கடமை. அது பாரம்பரியமான நிகழ்ச்சி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், விதிமுறைகளை மீறி அந்த போட்டியை நடத்துவதை நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானதுதான்.

போட்டி நடைபெறுவதற்கு முன்பு காளைகளுக்கு ஆக்ரோஷம் வருவதற்காக மது (சாராயம்) கொடுக்கப்படுவதுடன் கண்களில் மிளகாய்ப்பொடியும் தூவப்படுகிறது. பல கிலோமீட்டர் தூரத்துக்கு காளைகள் விரட்டப்படுவதுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்களால் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன.”

இவ்வாறு வக்கீல் வேணுகோபால் வாதாடினார்.

மேனகா காந்தி மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீடித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை, முன்னாள் மத்திய மந்திரியும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி மகிழ்ச்சியுடன் வரவேற்று இருக்கிறார். “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, விலங்குகளை வதைக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றகரமான ஒரு நடவடிக்கை. பல உயிர்களை பலிகொண்ட ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்ட விலங்குகள் நல வாரியத்தை பாராட்டுவதாக” அவர் குறிப்பிட்டார். என்றாலும் ரேக்ளா போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கியதற்கு மேனகா வருத்தம் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி போராடி வெற்றி பெற்றுள்ள விலங்குகள் நல வாரிய தலைவர் டாக்டர் கர்ப், தீர்ப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். “ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிரந்தர தடை விதிக்கவேண்டும் என்று, சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் தாராராவ் வற்புறுத்தி இருக்கிறார்.

`மிருகம்’ படத்தில்
ஜல்லிக்கட்டு காட்சி நீக்கத்தை எதிர்த்து படஅதிபர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை, ஜன.12-

சாமி டைரக்ஷனில் உருவான `மிருகம்’ படத்தில் ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று படஅதிபர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு காட்சி

சாமி டைரக்ஷனில் உருவான படம் `மிருகம்’. நடிகர் ஆதி கதாநாயகனாகவும், நடிகை பத்மபிரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த படத்தின் நிர்வாக இயக்குனர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

`எய்ட்ஸ்’ விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் `மிருகம்’ படம் தயாரிக்கப்பட்டது. `எய்ட்ஸ்’ நோயாளி என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறார் என்பதை இப்படத்தில் சித்தரித்து காட்டியுள்ளோம். கதாநாயகன் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதாக காட்சியை உருவாக்கினோம். இதற்காக பிராணிகள் நல வாரியத்திடம் தகவல் தெரிவித்தோம். படப்பிடிப்பு முடிந்ததும் தணிக்கை சான்றிதழ் பெற பிராணிகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் கேட்டோம். கடைசி நேரத்தில் சான்றிதழ் தர வாரியம் மறுத்துவிட்டது.

காட்சி நீக்கம்

இந்த படத்தில் ஜல்லிக்கட்டு காட்சி முக்கியம் என்று கூறியும், பிராணிகள் நல வாரியம் கேட்கவில்லை. ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் அதை நீக்கிவிட்டோம். இந்த காட்சியை நீக்கிய பிறகுதான் தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. இதன் பின்னர் இந்த படத்தை வெளியிட்டோம்.

இந்த காட்சியை நீக்கியதால் படத்தின் ஒட்டுமொத்த கதையும் மாறிவிட்டது. இந்த காட்சியை நீக்கியதால் எங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை இக்கோர்ட்டு ரத்து செய்யவேண்டும். மீண்டும் அந்த காட்சியை இணைத்து திரையிட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நோட்டீசு

இந்த மனுவை நீதிபதி வி.தனபாலன் விசாரித்தார். இதுபற்றி வருகிற 22-ந் தேதிக்குள் பதில் தருமாறு பிராணிகள் நல வாரியத்திற்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Posted in 4213917, abuse, Alanganalloor, Alanganallur, Alankanalloor, Alankanallur, Animals, Ban, Beef, Bull, Bull-taming, bullfight, Chauvinism, Cinema, Courts, Culture, Custom, Customs, Euthanasia, Festival, Films, Games, Heritage, Hindu, Hinduism, Inhumane, jallikattu, Jallikkattu, Judges, Justice, Law, Literature, Maadu, Males, Maneka, Meat, Men, Menaka, milk, Mirugam, Movies, Order, Padmapriya, Palamedu, Pathmapriya, Pongal, Prime ribs, Religion, RSS, Rural, Sallikattu, Sallikkattu, Sangam, SC, Society, SPCA, Sports, Steak, Steakhouses, Tamil Nadu, TamilNadu, taming, TN, Torture, Tradition, Vegans | Leave a Comment »

Dyslexia & Taare Zameen Par – Raman Raja

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்!


எலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகையில் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.

பச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவே சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்!)

டிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது!

சொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.

சொற்சிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு! இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.

சொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம்? படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம்? அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. (  reading disability) என்று கூப்பிடலாமே?” என்கிறார்கள்.

டிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:

விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன், எடிசன்?

பிரதமர் சர்ச்சில்?

எழுத்தாளர் அகதா கிறிஸ்டி?

ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்?

போதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

டிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்!) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும் வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்? பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே?”

Posted in +2, 10, Aamir, Aamir Khan, Achievements, Achievers, Arts, Biz, Books, Business, Challenged, Child, Children, Cinema, Cognition, Colleges, Commerce, Communication, disability, Dyscalculia, Dyslexia, English, entrepreneurs, entrepreneurship, Fashion, Films, Fun, Games, Grades, IIM, IIT, Innovation, Ishaan, Ishan, Khan, Kids, Learn, Learning, Marks, Maths, Merit, Movies, Painting, Professors, Raman Raja, Rank, Reading, Schools, Shrewd, Sports, Students, Teachers, Value | 2 Comments »

Sports in 2007 – Recap, Timeline, Incidents, News, Flashback: Cricket, India, Hockey

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

விளையாட்டு

ஜனவரி

ஜன.1: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் லாங்கர் ஓய்வு.

* 2700 ஈலோ புள்ளிகளை கடக்கும் இந்தியாவின் 2 வது செஸ் வீரர் என்ற சாதனையை சசிகிரண் படைத்தார்.

ஜன.3: சர்வதேச கிரிக்கெட்டில் ஷேன் வார்ன் 1000 விக்கெட்டுகளை எட்டினார்.

ஜன.5: ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 50 என கைப்பற்றியது.

ஜன.6: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 21 என வென்றது.

ஜன.7: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பட்டத்தை பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ் கைப்பற்றினார்.

* பிரிமியர் ஹாக்கி லீக் பட்டத்தை பெங்களூரு லயன்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டது. பைனலில் 30 என ஐதராபாத் சுல்தான்சை வென்றது.

ஜன.18: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா 36, 26 என்ற செட்களில் ஜப்பானின் அய்கோவிடம் வீழ்ந்தார்.

ஜன.20: தேசிய பெண்கள் ஜுனியர் கால்பந்து கோப்பை இறுதி போட்டியில் மணிப்பூர் 50 என தமிழகத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

ஜன.21: 19 வயதுக்குட்பட்டோருக்கான வினு மன்கட் கிரிக்கெட் கோப்பையை 96 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து மகாராஷ்டிரா கைப்பற்றியது.

ஜன.26: ஈரானை 1929 என வீழ்த்தி இரண்டாவது கபடி உலக கோப்பையை இந்திய அணி வசப்படுத்தியது.

* மூனிச்சில் நடந்த ஆண்கள் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் 10 மீ.,ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜாகிர்கான் தங்கம் வென்றார்.

* யு.ஈ.எப்.ஏ.,தலைவர் தேர்தலில் பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் மைக்கேல் பிளாட்டினி வெற்றி பெற்றார்.

ஜன.27:ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வென்றார்.

பிப்ரவரி

பிப்.3: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த”டுவென்டி20′ போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

பிப்.8: பாரிஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் வென்றார்.

பிப்.9: 33 வது தேசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தியில் துவங்கியது.

பிப்.17: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 21 என வென்றது.

பிப்.18: தேசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்தன.

* பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரில் யரோஸ்லோவா சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

பிப்.21: ஐ.சி.சி.,ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தோனி 2 ம் இடத்துக்கு முன்னேறினார்.

மார்ச்

மார்ச் 1: வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் புறப்பட்டு சென்றனர். பயங்கரவாதிகளின் மிரட்டலையடுத்து முதன் முறையாக வீரர்கள் தேசிய பாதுகாப்பு படையுடன் சென்றனர்.

மார்ச் 4: ஸ்குவாஷ் தர வரிசையில் இந்தியாவின் சவுரவ் கோஷல் 45 வது இடத்துக்கு முன்னேறினார்.

மார்ச் 6: நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 182 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மார்ச் 8: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு போட்டிகளை “டிடி’யில் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்ற மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப் பட்டது.

மார்ச் 9: வெஸ்ட் இண்டீசுக்குஎதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மார்ச் 12: உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் துவங்கின.

* செஸ் தரவரிசையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதலிடத்தை கைப்பற்றினார்.

மார்ச் 13: உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 54 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மார்ச் 16: வங்கதேச கிரிக்கெட் வீரர் மஞ்சுரல் இஸ்லாம், பைக் விபத்தில் பலியானார். மிகக் குறைந்த வயதில் (22) பலியான டெஸ்ட் வீரர் இவர்தான்.

* நெதர் லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடித்து சாதனை.

மார்ச்17: வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

* உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் கத்துக்குட்டி அயர்லாந்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வென்றது.

மார்ச் 19: சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்சமாம் அறிவித்தார்.

*பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் 413 ரன்கள் எடுத்த இந்திய அணி உலக கோப்பையில் அதிக பட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனை நிகழ்த்தியது.

மார்ச் 23: இலங்கைக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

மார்ச் 24: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 66 பந்தில் சதம் அடித்த ஆஸ்திரேலியாவின் ஹைடன், உலக கோப்பையில் அதி வேக சதம் அடித்த வீரர் என்ற சாதனை.

மார்ச் 29: உலக கோப்பையில் படுதோல்வியடைந்த இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்.

* அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மார்ச் 30: ஒரு நாள் போட்டிகளிலிருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் கும்ளே ஓய்வு.

ஏப்ரல்

ஏப்.4: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை சாப்பல் ராஜினாமா.

ஏப்.14: ஏ1 கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில் இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் ஐந்தாம் இடம் பிடித்தார்.

ஏப்.21: தேசிய அளவில் நடத்தப்பட்ட அறிமுக “டுவென்டி20′ தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஏப்.27: நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை பிளமிங் ராஜினாமா செய்தார்.

ஏப்.28: உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. பைனலில் இலங்கை அணியை வென்றது.

* பீஜிங் ஒலிம்பிக் தொடருக்கான ஜோதி மும்பை வந்தடைந்தது.

மே

மே 2: உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தபால் தலை வெளியிடப்போவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு.

மே 5 : முதல் தரப் போட்டிகளிலிருந்து தமிழக வீரர் சரத் ஓய்வு.

மே 6 : சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் ஓய்வு.

* இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த முறையை ரத்து செய்த பி.சி.சி.ஐ., செயல்பாடுகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்போவதாக அறிவிப்பு.

மே 13: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஜான் ஹோவர்ட் தடை விதித்தார்.

மே 14: இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டாம்மூடி விலகல்.

மே 15: வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 20 என கைப்பற்றியது.

* ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.

மே 21: பிரேசில் கால்பந்து வீரர் ரொமாரியோ டி சவுசா ஆயிரம் கோல் அடித்த இரண்டாவது கால்பந்து வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

மே 23: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 21 என வென்றது.

* போதை மருந்து பயன்படுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மணிந்தர் சிங் கைது.

மே 26: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தினேஷ் கார்த்திக், ஜாபர், டிராவிட், சச்சின் என நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்சில் சதம் கடந்து புதிய சாதனை படைத்தனர்.

மே 27: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.

மே 29: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரேக் புளுவட் சர்வதேச போட்டிகளியிலிருந்து ஓய்வு.

ஜூன்

ஜூன் 8: ஐ.சி.சி., தற்காலிக தலைவராக தென் ஆப்ரிக்காவின் ரே மாலி தேர்வு.

ஜூன் 9: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூன் 10: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரெஞ்சு ஓபன் தொடரை வென்று, ஸ்பெயினின் ரபேல் நடால் சாதனை.

ஜூன் 11: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க கிரஹாம் போர்டு மறுப்பு.

ஜூன் 12: சேவக், ஹர்பஜன் மற்றும் முனாப், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணியிலிருந்து நீக்கம். தோனி துணைக் கேப்டனாக நியமனம்.

ஜூன் 16: இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்தில் தோனி மற்றும் யுவராஜ் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம். சேவக், ஹர்பஜன், லட்சுமண் மற்றும் பதான் “பி’ பிரிவுக்கு தள்ளப்பட்டனர்.

ஜூன் 18: ஆசிய தடகள கிராண்ட்பிரிக்சில் இந்தியா 3 தங்கம் உட்பட 12 பதக்கம் வென்றது.

ஜூன் 19: இங்கிலாந்து தொடரில் பேட்டியளிக்க இந்திய வீரர் களுக்கு தடை.

* 30 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி., டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான “டாப்10′ பட்டியலுக்குள் நுழைந்த முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மான்டி பனேசர் பெற்றார்.

ஜூன் 21: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் பாட்டீல், இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் இணைந்தார்.

ஜூன்28: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வி.

ஜூலை

ஜூலை1: அயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்றது.

* பெல்ஜியத்தில் நடந்த சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு வெண்கலம்.

ஜூலை 2: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக் கான பாகிஸ்தான் அணியி லிருந்து முன்னணி வீரர்கள் முகமது யூசுப், அப்துல் ரசாக் நீக்கம்.

ஜூலை 3: ஸ்காட்லாந்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்த ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து.

ஜூலை7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்க போவதில்லை என சச்சின், கங்குலி, டிராவிட் அறிவிப்பு.

* விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன்.

ஜூலை8: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனை.

ஜூலை 9: ஸ்பெயினில் நடந்த லியோன்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் “ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூலை 13: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வென்ற ஒரு நாள் தொடர் கோப்பை காணாமல் போனது.

ஜூலை 16: பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஜெப் லாசன் நியமனம்.

ஜூலை 17: டெஸ்ட் போட்டிக்கான ஐ.சி.சி., தரவரிசை பட்டியலிலிருந்து ஜிம்பாப்வே நீக்கப்பட்டது.

ஜூலை 20: இத்தாலி கால்பந்து வீரர் பிரான்சிஸ்கோ டோட்டி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

ஜூலை 28: இங்கிலாந்துக்கு எதிரான டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்டில் சச்சின் 11,000 ரன்கள் கடந்தார். இச்சாதனை செய்யும் மூன்றாவது வீரராவார்.

ஜூலை 29: இங்கிலாந்தின் சிறந்த விளையாட்டு வீரராக இந்திய வம்சவாளி வீரர் மான்டி பனேசர் தேர்வு.

ஆகஸ்ட்

ஆக.5: <உலக கோப்பை வில்வித்தை தொடரில் இந்தியாவின் டோலா பானர்ஜி “ரிகர்வ்’ பிரிவில் தங்கம் வென்றார்.

ஆக. 7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

ஆக.11: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கேப்டன் மைக்கேல் வானை வீழ்த்தி சர்வதேச அரங்கில் 900 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை கும்ளே பெற்றார்.

ஆக.13: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.

ஆக.16: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அனுப் ஸ்ரீதர் முன்னேற்றம்.

ஆக.20: ஐம்பதாவது ஏ.டி.பி., பட்டம் வென்று பெடரர் அசத்தல்.

ஆக.23: ரயில்வே மைதானங்களை ஐ.சி.எல்., அமைப்பு பயன்படுத்தி கொள்ள மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஒப்புதல்.

ஆக.24: ஐ.சி.எல்., அமைப்புக்குசவாலாக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,), இந்திய கிரிக்கெட் போர்டு அறிமுகப்படுத்தியது.

ஆக. 26: ஐ.பி.எல்., அமைப்பில் தமிழக வீரர் பதானி இணைந் தார்.

ஆக. 29: அஞ்சும் சோப்ரா(கிரிக்கெட்), சுனிதா குல்லு (ஹாக்கி), கே.எம்.பீனு (தடகளம்), விஜய குமார்(துப்பாக்கி சுடுதல்), சேட்டன் ஆனந்த (பாட்மின்டன்) உள்ளிட்ட 14 பேருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அர்ஜுனா விருது வழங்கினார்.

செப்டம்பர்

செப். 2: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 20 கோல் அடித்து இத்தொடரில் புதிய சாதனை படைத்தது.

* தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ஹால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

செப். 4: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை வீரர் உபுல் சந்தனா ஓய்வு.

செப். 7: சகவீரர் ஆசிப் தொடையில் தாக்கிய அக்தர் “டுவென்டி20′ உலக கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கம்.

செப். 8: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 34 என பறி கொடுத்தது.

செப். 9: யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.

செப். 10: யு.எஸ்., ஒபனில் கோப்பை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 12வது கிராண்ட்ஸ்லாம் வென்றார்.

செப். 11: முதல் “டுவென்டி20′ உலக கோப்பை தொடர் தென் ஆப்ரிக்காவில் துவங்கியது. துவக்க ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல், “டுவென்டி20’ல் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

* ஐ.சி.சி.,யின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி தட்டிச் சென்றார்.

செப். 12: நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு.

செப். 13: “டுவென்டி20′ உலக கோப்பையில் வங்கதேசத்திடம் தோல்விய டைந்த வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலே வெளியேறியது.

செப். 14: கேப்டன் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் திடீர் ராஜினாமா.

செப். 18: ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு.

செப். 26: உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு.

* கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு குவிய, ஆசிய கோப்பை ஹாக்கி வென்ற இந்திய வீரர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிப்பு.

செப். 27: பி.சி.சி.ஐ.,யின் புதிய சம்பள ஒப்பந்த அறிவிப்பில் ஜாகிர் கான் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம்.

செப். 28 : ஆசிய கோப்பை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலா ரூ. 5 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு.

* தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய தலைவராக ரவி சாஸ்திரி நியமனம்.

அக்டோபர்

அக். 1: இந்தியன் கிரிக்கெட் போர்டு நடத்தும் ஐ.பி.எல்., அமைப்பில் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா இணைந்தார்.

அக். 3: பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் பவுச்சர் (396)அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார்.

அக். 4: இலங்கை அதிரடி மன்னன் ஜெயசூர்யா 400வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

அக். 5: உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் பரிசு .

அக். 6: ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

அக். 8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடிய சச்சின் ஒரு நாள் போட்டிகளில் அதிக அரைசதம் கடந்தவர் என்ற சாதனை படைத்தார்.

அக். 11: சகவீரர் ஆசிப்பை தொடையில் தாக்கிய விவகாரத்தில் பாகிஸ்தானின் அக்தருக்கு 13 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

அக். 12: சர்வதேச போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஓய்வு.

அக். 17: இந்தியாவுடனான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 42 என வென்றது.

அக். 21: உலக ராணுவ விளையாட்டு போட்டியில் இந்தியா 19வது இடம்பிடித்தது.

அக். 27: பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து டிராவிட் நீக்கம்.

நவம்பர்

நவ.1: இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆசிப் விலகினார்.

* ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது தொடர்பாக சர்ச்சை வெடிக் கவே, சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து சுவிட் சர்லாந்தின் ஹிங்கிஸ் ஓய்வு.

நவ.2: மக்காவ் நகரில் நடந்த ஆசிய உள்ளரங்கு போட்டிகளின் செஸ் பிரிவில் இந்தியாவின் சசிகிரண் தங்கம் வென்றார்.

நவ.3: ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு வார்ன் முரளிதரன் கோப்பை என பெயரிடப் பட்டது.

நவ.5: இந்தியபாகிஸ்தான் அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் கவுகாத்தியில் துவங்கியது.

* பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரை அர்ஜென்டினாவின் நள்பாந்தியன் கைப்பற்றினார். பைனலில் ஸ்பெயினின் நாடலை வீழ்த்தினார்.

நவ.6: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சச்சின் மறுப்பு.

* இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப் பட்டன.

நவ.8: டெஸ்ட் அணிக்கான இந்திய கேப்டனாக கும்ளே நியமிக்கப்பட்டார்.

நவ.12: மாட்ரிட் ஓபன் தொடரில் பெல்ஜியத்தின் ஹெனின் பட்டம் வென்றார்.

* முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கே.சி.இப்ராகிம் மரணமடைந்தார்.

நவ.13: தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக உலகின் “நம்பர்1′ டென்னிஸ் வீரராக சுவிட்சர்லாந்தின் பெடரர் தேர்வு செய்யப்பட்டார்.

நவ.17: டெஸ்ட் அரங்கில் 100 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கில்கிறிஸ்ட் படைத்தார்.

நவ.20: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 20 என கைப்பற்றியது.

நவ.24: பாகிஸ்தான் வீரர்களுக்கு பயங்கரவாதிகள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

நவ.30: இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகள் பஞ்சகுலாவில் துவங்கின.

டிசம்பர்

டிச. 5: லால் பகதுõர் பெண்கள் ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

டிச. 6: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் துவங்கின.

* ஐ.சி.சி.,டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சங்ககரா முதலிடம் பிடித்தார்.

டிச. 7: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

டிச. 10: காமன்வெல்த் வலுதுõக்குதல் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டிச. 12: 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்திய அணி கைப்பற்றியது.

அ. சிறப்பு தகவல்கள்

1. உல்மர் மரணம்

முன்னாள் இங்கிலாந்து வீரரும், பாகிஸ் தான் பயிற்சியாளருமான பாப் உல்மர், மார்ச் 18 ம் தேதி கிங்ஸ்டனில் உள்ள ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2. முடி சூடா மன்னன்

ஆஸ்திரேலிய ஓபன் தொடரை தொடர்ந்து மூன்றாம் முறையாக “நம்பர்1′ வீரரான சுவிட்சர்லாந்தின் பெடரர் கைப்பற்றினார். இறுதி போட்டியில் சிலியின் பெர்னாண்டோ கோன்சாலசை வீழ்த்தினார். டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னனாக வலம் வருகிறார்.

3. கபில் தலைமையில் ஐ.சி.எல்.,

வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து, பி.சி.சி.ஐ.,அமைப்புக்கு சவாலாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,)என்ற அமைப்பை “ஜீ’ டிவி உருவாக்கியது. இதன் செயற்குழு தலைவராக முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டார்.

4. கோப்பை உற்சாகம்

உள்ளூரில் சூரப்புலிகள் என்பதை இந்திய அணி மீண்டும் ஒரு முறை நிரூபித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரை 31 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. வதோதராவில் நடந்த நான்காவது போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கோப்பையுடன் டிராவிட்.

5. சைமண்ட்ஸ் சர்ச்சை

இந்தியாவுக்கு எதிரான வதோதரா போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கறுப்பு இன வீரரான சைமண்ட்சை “குரங்கு’ என ரசிகர்கள் கேலி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. அடுத்து நடந்த நாக்பூர் போட்டியிலும் ரசிகர்களின் கேலி தொடர, கிரிக்கெட்டில் மீண்டும் இனவெறி சர்ச்சை வெடித்தது.

6. முதன் முறையாக…

அயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் அன்னிய மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை முதன் முறையாக வென்று சாதித்தது. கோப்பையுடன் உற்சாக “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.

7. உயரிய விருது

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் மானவ்ஜித் சிங் சாந்து 2006ம் ஆண்டு நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். இவரை கவுரவிக்கும் வகையில் 200607ம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் பதக்கத்தை பெற்றுக் கொள்ளும் மானவ்ஜித்.

8. கும்ளே சதம்

ஓவல் டெஸ்டில் பிரமாதமாக பேட் செய்த கும்ளே முதல் சதம் கடந்து அசத்தினார். தலைசிறந்த பேட்ஸ்மேனை போல் விளையாடிய இவர் 110 ரன்கள் எடுத்து டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள் வரிசையில் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

9. விடைபெற்றார் ஜோன்ஸ்

ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் அதற்காக அமெரிக்க மக்களிடமும் தனது ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

10. தங்க மங்கை

பெண்கள் செஸ் அரங்கில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பியின் ஆதிக்கம் தொடர்ந்தது. மக்காவ் நகரில் 22 நாடுகள் பங்கேற்ற இரண்டாவது ஆசிய உள்ளரங்கு செஸ் போட்டிகள் நடந்தன. இதில் உலகின் “நம்பர்2′ வீராங்கனையான ஹம்பி தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.

11. ஹாக்கியில் கலக்கல்

சென்னையில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, கொரியாவை 72 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்று, கோப்பை கைப்பற்றியது. தேசிய விளையாட்டான ஹாக்கியில் கோப்பை வென்ற உற்சாகத்தில் “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.

12. சென்னை சூப்பர்ஸ்டார்ஸ்

அரியானா மாநிலம் பஞ்சகுலாவில் ஐ.சி.எல்., அமைப்பு நடத்திய “டுவென்டி20′ தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் லயன்சை வீழ்த்தி கோப்பை வென்றது. மகிழ்ச்சியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணியினர்.

Posted in 20, 20-20, 2007, 2020, America, athletics, Aus, Australia, baseball, Century, championships, Chronology, Commonwealth, Cricket, Cup, Dhoni, Disqualify, Dope, Faces, Flashback, Football, Games, Ganguly, Hockey, ICC, ICL, Incidents, Jones, Kapil, Kumble, Lara, Losers, Matches, Mirza, Monkey, Murali, Muralidharan, Muthiah, News, Notable, ODI, people, Players, Race, racism, Racists, Recap, Records, Sachin, Sania, Soccer, Spectator, Sports, steroids, Symonds, T20, Tendulkar, Tennis, Tests, Timeline, TV, US, USA, Warne, Winners, Zee | Leave a Comment »

‘Vidhyarambam’ V Renganathan: Volunteering for the rural poor with Educational toys

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

சேவை: வந்தாச்சு…பொம்மை வேன்!

அந்த கிராமத்தின் பள்ளம் மேடான சாலையில் புழுதி பறக்க ஒரு வேன் விரைகிறது. அங்குள்ள ஆரம்பப் பள்ளியின் முன் பிரேக் அடித்து நிற்கிறது.

“”வந்தாச்சு, பொம்மை வேன் வந்தாச்சு” படிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கூச்சலிடுகின்றனர். ஆசிரியராலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொம்மை வேன் வருவதை நேற்றே கேள்விப்பட்டதால் நேற்று இரவு முழுக்க பொம்மை வேன் வருவதாகக் கனவு கண்டு தூக்கம் கெட்ட குழந்தைகள், கண்முன் அது வருவதைப் பார்த்ததும் உற்சாகத்துடன் கத்துகிறார்கள். அவர்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியைப் பார்த்து ஆசிரியர்கள் மெüனமாகிவிடுகிறார்கள்.

“வித்யாரம்பம்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நடமாடும் பொம்மை நூலக வாகனம்தான் அது. இரண்டாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கல்வியறிவூட்டும் பொம்மைகளை விளையாடக் கொடுத்து அறிவூட்டும் பணியைச் செய்து வருகிறது அந்த நிறுவனம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் வி.ரங்கநாதனைச் சந்தித்துப் பேசினோம்.

குழந்தைகளுக்குப் பொம்மைகளை விளையாடக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

சுனாமியின் போது நாகப்பட்டினம் பகுதியில் பல குழந்தைகள் தங்கள் தாய், தந்தையை, அன்புக்குரியவர்களை இழந்துவிட்டார்கள். அந்தத் துயரம் அவர்கள் மனதைவிட்டு அகலவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு வருவது மிகவும் குறைந்துவிட்டது. எல்லாவற்றையும் பறிகொடுத்த அந்தக் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் படிக்க வைப்பதே மிகுந்த சிரமமாகிவிட்டது. ஸ்கூலுக்குப் போவதற்கே பயந்தார்கள். அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவைப்பதற்காக, அவர்களுடைய மனநிலையை மாற்ற பொம்மைகளை அந்தப் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்றோம். அங்கு எங்களுக்குக் கிடைத்த வெற்றி, பிற பள்ளிகளுக்கும் பொம்மைகளைக் கொண்டு செல்லும் எண்ணத்தை ஏற்படுத்தியது.

பொம்மைகள் என்றால் விளையாட்டுப் பொம்மைகளா?

விளையாட்டுப் பொம்மைகள்தாம். ஆனால் அதேசமயம் அவற்றின் மூலம் குழந்தைகளின் அறிவை வளர்க்க முடியும். பொம்மைகளை வைத்து கணக்குப் போடக் கற்றுக் கொடுப்பது, அறிவியல் அறிவை வளர்ப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.

இப்போது கல்வி கற்பிக்கும் முறைகள் மாறிவிட்டன. “விளையாட்டுப் போல கல்வி’ என்பது நகர்ப்புறத்தில் உள்ள வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதைக் குக்கிராமங்களில் உள்ள குழந்தைகள் பெறுவது எப்படி? நாளை இந்தக் குழந்தைகள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு என்று வரும்போது நகர்ப்புறக் குழந்தைகள்தானே வேலைவாய்ப்பைப் பெற முடியும்? நகர்ப்புறக் குழந்தைகளுக்குச் சமமாக கிராமத்துக் குழந்தைகளையும் படிக்க வைப்பதுதான் எங்கள் நோக்கம்.

ஆண்டுக்கு ஒரு முறை ஒரு கிராமத்துப் பள்ளிக்குப் போய் சில மணி நேரங்கள் பொம்மைகளைக் காட்டுவதால் அவர்கள் அறிவு வளர்ந்துவிடுமா?

எங்களுக்கும் ஆசைதான், எல்லா ஊர்ப் பள்ளிகளிலும் நிரந்தரமாக இப்படிப் பொம்மைகளை வைத்துக் குழந்தைகளின் கல்வியறிவை வளர்க்க வேண்டும் என்று. சுமார் 250 பொம்மைகளை வைத்துக் கல்வி கற்றுக் கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு எப்படி எங்களால் நிரந்தரமாகப் பொம்மைகளை வழங்க முடியும்?

இப்போது எங்களிடம் மூன்று பொம்மை வேன்கள் உள்ளன. ஒரு வேனில் நான்கு பேர் போவார்கள். குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து விளையாட்டும் அதேநேரத்தில் கல்வியும் கற்றுத் தருகிறோம். பாட்டு, நடனம் போன்றவற்றையும் அரை மணி நேரம் சொல்லிக் கொடுக்கிறோம்.

நாங்கள் ஒரு பள்ளிக்குப் போய் பொம்மைகளைக் காட்டிவந்தபின்னால் அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர் போன்றவர்கள் பொம்மைகள் எங்கே கிடைக்கும்? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம். அவர்கள் தங்கள் பள்ளிக்கென்று பொம்மைகளை வாங்குகிறார்கள்.

எங்களுக்குப் பொம்மை வாங்க உதவுவது ரேயுகாய் – Reiyukai என்ற ஜப்பானிய நிறுவனம். அவர்களின் பிரதிநிதிகள் இங்கே நேரில் வந்து எங்களின் செயல்பாடுகளைப் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, எங்களின் செயல்பாடுகளைக் கேள்விப்பட்ட பிற வெளிநாட்டவரும் எங்களை வந்து பார்க்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன்ட்ரியா என்பவர் கூட அதுபோல இங்கே வந்து பார்த்தார்.

பொம்மைகளைக் குழந்தைகள் உடைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?

குழந்தைகள் விளையாடுவதால் பொம்மைகள் உடையும் என்று முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை அதற்கென ஒதுக்கித் திட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான அளவே சேதம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் என்றால் விளையாடுவார்கள். விளையாடினால் உடைந்து போகும். இதெல்லாம் சகஜம்தானே?

உங்கள் நிறுவனத்தை சுனாமியின் போதுதான் ஆரம்பித்தீர்களா?

இல்லை. நாங்கள் வித்யாரம்பத்தை ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகின்றன. நான் பல தனியார் நிறுவனங்களில் பல பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்றவன். நான் எனது சொந்தக் கிராமத்துக்கு என் குழந்தைகளுடன் போகும்போதெல்லாம் அங்குள்ள குழந்தைகளுக்கும் என் குழந்தைகளுக்கும் அறிவுத்தரத்தில் நிறைய வேறுபாடுகள் இருப்பது எனக்கு உறுத்தலாக இருந்தது. கிராமத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதே தோன்றியது. என் குழந்தைகள் இப்போது வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். என்றாலும் என் எண்ணம் அப்படியேதான் இருக்கிறது.

பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நான் செய்த முதல் காரியம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டக் கோட்டை என்ற கிராமத்துக்குப் போனதுதான்.

அங்குள்ள சிறு குழந்தைகள் கல்வி கற்பதற்காகப் பள்ளிக்குச் செல்வதில்லை. அங்குள்ள சத்துணவுக் கூடத்திற்கு உணவு உண்பதற்காகச் செல்கிறார்கள் என்பதையறிந்து மனம் வேதனைப்பட்டேன். அவர்களுக்கு கல்வி கற்றுத் தர நான் தனிப்பட்ட முறையில் சிறு உதவிகள் செய்தேன். பின்னர் சென்னைக்கு வந்து நண்பர்களுடன் இதைப் பற்றிக் கலந்தாலோசித்ததின் விளைவாக 2002 இல் உருவானதுதான் வித்யாரம்பம் அறக்கட்டளை. எங்களுக்கு முதன் முதலில் ஐந்து லட்சம் ரூபாய்க்கான செக் நன்கொடையாகக் கொடுத்து உதவினார் ஏஇக நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார். இதை எங்களால் மறக்கவே முடியாது.

வித்யாரம்பம் அறக்கட்டளையின் மூலமாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு “உறுதுணைக் கல்வி’ என்ற பெயரில் கற்றுத் தருகிறோம். 2 – 3 வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி. 4 – 5 வது வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி என்று எடுக்கிறோம். குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், சிலேட்டு போன்றவற்றையும் வழங்குகிறோம். எங்களிடம் பயிற்சி பெறும் குழந்தைகள் அவர்கள் படிக்கும் பள்ளியில் மிகத் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.

என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்?

முதலில் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். காலணியைக் கழற்றிச் சரியாக வைக்கிறார்களா? புத்தகப் பைகளை ஒரு பக்கமாக அடுக்கி வைக்கிறார்களா? என்பதையெல்லாம் கண்காணித்துக் கற்றுக் கொடுப்போம். வணக்கம், குட்மார்னிங், தேங்க்யூ சொல்லுதல் போன்றவற்றைச் சொல்லிக் கொடுப்போம். பிறகு பொம்மைகளை வைத்து விளையாட்டுக் கற்றுக் கொடுப்போம். மணிகளைக் கோர்க்கச் சொல்லிக் கற்றுக் கொடுப்போம். மணிகளை வைத்து கணக்குப் போடச் சொல்லித் தருவோம். கணிதம் சொல்லித் தரும் எங்கள் முறையே விளையாட்டுடன் தொடர்புடையதாகத்தான் இருக்கும். மிக எளிய கூட்டல், கழித்தலில் ஆரம்பிக்கும் எங்கள் குழந்தைகள், கோடி மதிப்புள்ள எண்களைக் கூடக் கொஞ்சமும் பயமில்லாமல் கூட்டிக் கழித்துவிடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஒரு வித்யாரம்ப மையத்தில் 20 குழந்தைகள் இருப்பார்கள். ஓர் ஊரில் 30 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் இரண்டு மையங்களை ஏற்படுத்திவிடுவோம். தமிழ்நாட்டில் இப்போது 600 மையங்கள் செயல்படுகின்றன. கிட்டத்தட்ட 50 ஆயிரம் குழந்தைகள் எங்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

இதுதவிர குழந்தைகளுக்கான நூலகங்களையும் நடத்தி வருகிறோம்.

Posted in Child, Children, Education, Faces, Games, Instructors, Interview, Japan, Kids, Library, Metro, NGO, people, Play, Poor, Professors, Read, Reiyukai, School, service, Students, Teachers, Tots, Toys, Tsunami, Vidhyaarambam, Vidhyarambam, Village, Vithyarambam, Volunteer | Leave a Comment »

Champion India in Asia Cup Hockey – Indian coaches & Sports Minister Mani Shankar Aiyar

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

ஆசியக்கோப்பை: மணிசங்கர் அய்யர் மெüனம் காப்பது ஏன்?

வி. துரைப்பாண்டி

சர்வதேச அளவிலான போட்டியில் இதற்கு மேல் ஒரு வெற்றி வேண்டுமா என வியக்கும் அளவுக்கு எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஏழாவது ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய ஹாக்கி அணி, திறமையை வெளிப்படுத்தியது.

தொடர்ச்சியாக 7 நாடுகளை வீழ்த்தியது! இலங்கைக்கு எதிராக 20 கோல் போட்டு, அதிக கோல்கள் அடித்த சாதனையை சமன் செய்தது உள்பட 57 கோல்கள் இந்திய அணியின் கணக்கில். இவ்வளவுக்கும் பெனால்டி கார்னரில் இந்தியா “ஹீரோ’ அல்ல, ஏறக்குறைய ஜீரோதான். தட களத்தில்தான் வினாடிக்கு வினாடி எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், குழு விளையாட்டுப் போட்டியில் அதுமாதிரியான தருணத்தை காண்பது அரிது. ஆனால் இளமையும் முதுமையும் கலந்த இந்திய அணியினர், ஹாக்கியை தட களமாக மாற்றி, ரசிகர்களுக்கு உச்சக்கட்ட விருந்தளித்தனர். அனுபவ வீரர் பிரப்ஜோத் சிங், வேகத்தில் தன்ராஜ் பிள்ளையாகவே காணப்பட்டார். அவரது “ரிவர்ஸ் பிளிக்’ கோல் முயற்சி, நிச்சயம் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்து.

நீண்ட போட்டிகளுக்குப் பிறகு ஓர் அணியாக விளையாடியது இந்தியா. உச்சக்கட்டமாக, ஆசியாவில் புலியாகத் திகழும் கொரியாவை 7-க்கு 2 என்ற கோல் வித்தியாசத்தில் இறுதி ஆட்டத்தில் தோற்கடித்து உலக ஹாக்கி வட்டாரத்தை தலைதூக்கிப் பார்க்கச் செய்துள்ளது பிரப்ஜோத் திர்கே தலைமையிலான இந்திய அணி. இல்லை, பயிற்சியாளர் ஜோஹிம் கார்வலோ பார்வையிலான இந்திய அணி என்று சொல்வதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.

ஹாக்கியை “தேசிய விளையாட்டு’ எனக் கூறிவருகிறோம். ஆனால் அதற்கு சட்டபூர்வமாக எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் 1960-80-களில் இந்தியா குவித்த வெற்றிகளால், அப்போதிருந்த 80 கோடி மக்கள் இவ் விளையாட்டை ஜனரஞ்சகமான ஆட்டமாக ஏற்று, போற்றத் தொடங்கினர். அதனால், மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் ஹாக்கி ஓங்கி ஒலித்தது, விளையாடப்பட்டது, மக்களும் ஏற்றுக்கொண்டனர், பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு காலப்போக்கில் அந்த அணி தீனி போடமுடியாதது வருத்தமான விஷயம்தான்.

கடைசியாக தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5-ம் இடம். அதற்கு முன்னர் வரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் ஏதாவது ஒரு பதக்கத்தைப் பெற்றுவந்த இந்திய அணியினர், நம்மிடம் பயின்ற சீனாவிடம் பெற்ற தோல்வி, அப் போட்டியில் அதளபாதாளத்துக்குத் தள்ளியது.

உதை மேல் உதை. ச்சீ… இதைப் போய் தேசிய விளையாட்டு என்று எப்படிச் சொன்னார்கள் என எள்ளிநகையாடாதவர்கள் குறைவு. 100 கோடிக்கும் மேலான மக்களைக் கொண்ட இந்தியாவில், ஐரோப்பிய நாடுகளை, ஏன் ஆசிய நாடுகளைக்கூட தோற்கடிக்கும் அளவுக்கு வலுவான, வீரமான 11 வீரர்கள் கிடைக்கவில்லையா என்ற ஆதங்கம் கடைக்கோடி மக்களிடம்கூட இருந்தது.

அதற்காக, இந்திய ஹாக்கி அமைப்பு என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டன. 1976-வரை கட்டாந்தரையிலேயே விளையாடி பழக்கப்பட்ட இந்தியர்களுக்கு, அதன் பிறகு வந்த ஆஸ்ட்ரோ டர்ப்பில் (செயற்கை புள்தரை) விளையாடுவதுதான் இந்த பின்னடைவுக்குக் காரணம் என்றார்கள். ராஜீந்தர் (சீனியர்), ஜெரால்டு ராச், ராஜீந்தர் (ஜூனியர்), கடைசியாக வி. பாஸ்கரன் என எத்தனையோ பயிற்சியாளர்கள் இந்திய அணியை சீர்தூக்கிப் பார்க்க முயற்சித்தனர். ஆனால் ஏற்றத்துக்குப் பதிலாக ஏமாற்றம்தான்.

ஆனால், பாஸ்கரனுக்குப் பிறகு அணியை செம்மைப்படுத்திவரும் முன்னாள் ஒலிம்பியன் கார்வலோ, தான் பொறுப்பேற்றது முதலே ஆக்கப்பூர்வமான முன்னேற்றம். கோலாலம்பூர், பூம் ஆகிய நகர்களில் நடந்த சர்வதேச போட்டிகளில் வெண்கலப் பதக்கம். தற்போது ஆசியக் கோப்பையில் தங்கப் பதக்கம். 9 மாத காலத்தில் நம்பிக்கையான பார்வை.

உலக மக்கள் தொகையில் இரண்டாவது மிகப் பெரிய நாடு என்ற பெயரைப் பெற்ற இந்தியா, ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இதுவரை ஒரு தங்கப் பதக்கத்தையும் பெறமுடியவில்லை. அதே சமயம் குழுப் போட்டியான ஹாக்கி, 8 முறை இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை தேடிக் கொடுத்துள்ளது.

ஆசியக் கோப்பையை மீண்டும் வென்றுள்ள இந்தியாவுக்கு அடுத்த இலக்கு பெய்ஜிங்கில் 2008-ம் ஆண்டில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதே. உலகத் தரவரிசையில் தற்போது 8-வது இடத்தில் இருந்தாலும் அதில் விளையாடுவதற்கு இன்னும் தகுதியைப் பெறவில்லை. ஆனால், சிரமம் இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ள கார்வலோ, அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 12 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. ஏற்கெனவே 8 நாடுகள் அதற்கான தகுதியைப் பிடித்துவிட்டன. மற்றைய நாடுகள் எவை என்பதைத் தீர்மானிக்க சிலி, நியூஸிலாந்து, ஜப்பான் ஆகிய இடங்களில் தகுதிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அவற்றில் ஒரு போட்டியில் இந்தியாவும் விளையாட உள்ளது.

இந்தியாவிலிருந்து அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரே ஒலிம்பிக் விளையாட்டாகத் திகழும் ஹாக்கியை, முதன்மைப் பிரிவிலிருந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் அண்மையில் பொதுப் பிரிவுக்கு மாற்றியுள்ளது. ஆனால் ஹாக்கி வீரர்கள் அது குறித்து கவலைப் படவில்லை என்பதற்கு ஆசியக் கோப்பை வெற்றியே சாட்சி.

கோலாலம்பூரில் 2003-ல் முதன்முதலாகப் பெற்ற ஆசியக் கோப்பையை, இம்முறையும் இந்திய அணியினர் யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. அதற்காக பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் இந்திய அணியைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய விளையாட்டு அமைச்சகத்தை கையில் வைத்துள்ள மணி சங்கர் அய்யர் மட்டும் மெüனம் காப்பது ஏன் என்பதுதான் ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்படும் கேள்வி.

Posted in Asia, Asiad, Chakde, Champion, Chennai, Coach, Cricket, Cup, Games, Goals, Hockey, Madras, Mani, ManiShankar, match, Minister, Olympics, Play, Players, Shahrukh, Sports | Leave a Comment »

China Olympics evict 1.5 million

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

சீனாவின் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்காக 15 இலட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

பீஜிங் இல் கட்டப்படும் தேசிய ஒலிம்பிக் அரங்கம்
பீஜிங் இல் கட்டப்படும் தேசிய ஒலிம்பிக் அரங்கம்

சீனாவின் தலைநகர் பீஜீங்கில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்துவதற்காக, சுமார் 15 லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்று சர்வதேச வீட்டு உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் முன்பு நடத்தப்பட்ட இடங்களிலும், இனி நடத்தப்படவுள்ள இடங்களிலும் இருக்கும் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்துள்ள வீட்டு உரிமை மற்றும் வெளியேற்றம் குறித்த மையம், 1988 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் சியோல் நகரில் இருந்து 7 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளது.

ஆனால் ஒலிம்பிக் போட்டிகளுக்காக யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட ஆறாயிரம் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Posted in Asset, Beijing, China, Evictions, Freedom, Games, Homeless, Homes, Houses, Korea, Land, Olympics, Peking, Property, Seoul, South Korea, venues | Leave a Comment »

PCB insists it was a heart attack, but rumours give murder spin to Woolmer case

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப்உல்மர் சாவில் மர்மம் நீடிப்பு

கிங்ஸ்டன், மார்ச். 19-

உலககோப்பை போட்டி யில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்ததன் மூலம் பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இது பாகிஸ்தான் அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. கேப்டன் இன்சமாமும், பயிற்சியாளர் பாப்உல்மரும் வேதனையுடன் காணப் பட்டனர்.

இரவு அனைவரும் தூங்க சென்றனர். பாப்உல்மர் அவரது அறையில் தனியாக தங்கினார். அங்கு அவர் வாந்தி எடுத்த நிலையில் தரையில் மயங்கி கிடந்தார். முக்கில் ரத்தம் வடிந்தது. உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தோல்வியுடன் வேதனையில் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் பாப்உல்மர் மரணம் அடைந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் சாவு இயற்கையானதா? அல்லது வேறு காரணமாக இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அணி தோற்றால் முழு பொறுப்பும் பயிற்சியாளர் தலையில்தான் விழும். எனவே மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அணி இந்தியா வந்த போது பாகிஸ்தான் வீரர் அக்தர், பாப்உல்மரை தாக்கியதாக புகார் எழுந்தது. அதே போல நேற்று பாப் உல்மருக்கும் வீரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வீரர்கள் அவரை தாக்கி இருக்கலாம். இது மரணத்தில் முடிந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு அவருக்கு ஏற்கனவே இருந்த நோய்தான் காரணமாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் நாசிம் அஷரப் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:- பாப் உல்மர் தனது உடல் நிலை குறித்து என்னிடம் கூறிஇருந்தார். அவர் நீரழிவு நோயுடன் பல்வேறு உடல் உபாதை நோயினாலும் அவதிபட்டு வந்தார். தூங்கும் போது மூச்சுவிடுவதில் பிரச்சினை இருந்தது. எனவே முகத்தில் துணியை கட்டி தூங்கும் பழக்கத்தை வைத்து இருந்தார். எனவே இது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம்.

அவரது மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பால்உல்மர் உடல் ஐமைக்கா வில் உள்ள கிங்ஸ்டன் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. மரணத் திற்கான இறுதியான காரணம் குறித்து இன்னும் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. நீரழிவு மற்றும் மூச்சுதிணறல் காரண மாக இறந்து இருக்கலாம் என்று மட்டும் டாக்டர்கள் கூறினார்கள்.

எனவே உண்மையான காரணத்தை முழுமையாக கண்டறிய இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்புதான் உண்மை தெரியும்.

பாப்உல்மருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் இருக்கிறார். அவர் ஜமைக்காவுக்கு புறப்பட்டுள்ளார். அவரிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. மனைவி தரப்பில் இருந்தும் தகவல் எதுவும் வரவில்லை. அவரை வந்து பார்த்த பிறகு ஏதாவது கருத்து கூற வாய்ப்பு உள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு பாகிஸ்தான் அதிபர் முஷரப், பிரதமர் சவுகத் அஜீஷ் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அவருடன் அடிக்கடி மோதிக்கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் அக்தரும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “பாப்உல்மர் என்னை மகன் போல் பாவித்தார் அணிக்காக தீவிரமாக உழைத்தார்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறும்போது, தோல்விக்கு பால்உல்மர் பொறுக்கு ஏற்க முடியாது. கேப்டன்தான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் மோசமாக ஆடியதன் மூலம் பால்உல்மரை கொன்று விட்டனர்” என்றார்.

வீரர்கள் அனைவரும் ஓட்டல் அறைக்கு திரும்பிய பிறகு ஏதோ ஒரு சம்பவம் நடந்து உள்ளது. அது என்ன என்பது மர்மமாக உள்ளது.

===============================================

தோல்வி விரக்தியால் ஊல்மர் தற்கொலை?: கிரிக்கெட் உலகமே துயரத்தில் மூழ்கியது

கராச்சி, மார்ச் 20: ஜமைக்காவில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் ஊல்மர் திடீரென உயிரிழந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“”அவருடைய மரணம் சந்தேகத்துக்குரியது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்” என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கராச்சியில் திங்கள்கிழமை வெளியான “ஜேங்’ பத்திரிகை, “ஊல்மர் தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும்’ என்று மே.இ.தீவுகளின் கிங்ஸ்டனில் உள்ள தங்கள் பத்திரிகையின் செய்தியாளர்கள் கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

“”இருப்பினும் இவ்விஷயம் தொடர்பாக இப்போதே எந்தவித முடிவுக்கும் வர முடியாது. விசாரணைகள் ஆரம்பக் கட்ட நிலையிலேயே உள்ளன” என்று பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

துக்கத்தில் பாக். அணியினர்: ஊல்மரின் மரணம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஒரு குடும்ப உறுப்பினர் போல் ஊல்மர் தங்களுடன் பழகிவந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

“”வீரர்கள் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி ஆட்டத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியவில்லை என்றால் அதற்கு பயிற்சியாளர் காரணமில்லை. அவர் மீது குறைகூற முடியாது” என டிவி சேனல் ஒன்றிடம் பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

“டான்’, “நியூஸ்’ போன்ற பத்திரிகைகள் ஊல்மரின் மறைவுக்கும், பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்துக்கும் முடிச்சுப் போட்டு செய்திகளை வெளியிட்டன.

“விரக்தி அடைந்த உல்மர் சாவைத் தழுவினார்’ என்று “டான்’ பத்திரிகையும், “அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னர் ஊல்மர் மரணம்’ என்று “நியூஸ்’ பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளன.

பாக். அணியின் தோல்விக்கு காரணமானவர்கள் என முக்கிய பொறுப்பில் உள்ள பலரையும் குறிப்பிட்டு சில பத்திரிகைகள் தலையங்கமே வெளியிட்டன.

பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் அஷ்ரபின் பெயரும் நிந்தனைக்கு உள்ளாகியுள்ளது.

ஊல்மரின் திடீர் மறைவு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகையே துயரத்தில் ஆழ்த்தியது.

பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப், பிரதமர் ஷெüகத் அஜீஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஊல்மர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

உலக கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்களும் ஊல்மர் மறைவால் பெரிதும் துயரமடைவதாக தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் மைதானத்தில் ஊல்மர் பயிற்சி அளித்த காட்சிகளை திங்கள்கிழமை பல டிவி சேனல்களும் தொடர்ந்து ஒளிபரப்பின.

Posted in Assassination, Casino, Coach, Cricket, Cronje, diabetes, Gambling, Games, ICC, insulin, Inzamam, Inzi, Ireland, Loss, Manager, Match fixing, medical, Murder, Pakistan, Poison, SA, South Africa, Stroke, Suicide, Trainer, WC2007, Woolmer, World Cup | Leave a Comment »

Indian campaign ends in Olympic qualifiers

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

கொரியாவிடம் இந்தியா மீண்டும் தோல்வி

சென்னை, பிப். 26: ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுவதற்கான தகுதி கால்பந்துப் போட்டியில் இந்திய மகளர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது கொரிய அணி.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இப் போட்டி நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு அணிகளும் கோல் அடிக்க கடும் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் கொரிய மகளிர் முந்தினர். 25-வது நிமிஷத்தில் லீ கீ அபாரமாக கோல் அடித்து கொரியாவை முன்னிலைப்படுத்தினார்.

அதன் பின் இந்திய மகளிர் அணி கோல் அடிக்க கடும் முயற்சி மேற்கொண்டனர், அந்த முயற்சியை கொரிய மகளிர் தகர்த்தெறிந்தனர்.

38-வது நிமிஷத்தில் பார்க் ஹீ யங்கும், 39-வது நிமிஷத்தில் மூன் சுலே ஆகியோரும் அடுத்தடுத்து கோல் அடித்து, கொரியாவை வலுப்படுத்தினர்.

பிற்பாதியில் இந்திய அணியினர் நிறைய தவறுகள் செய்தனர். இதனால் கிடைத்த வாய்ப்புகள் பறிபோயின.

முடிவில் 3-0 என்ற கணக்கில் இந்தியவை வென்றது கொரியா.

தென் கொரியாவின் மாசானில் கடந்த மாதம் 17-ம் தேதி நடந்த போட்டியில் இந்தியாவை 5-0 என கொரியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in 2008, Asia, Beijing, Busan, Chennai, Football, Games, Jawaraharlal Nehru Stadium, League, Madras, Masan, match, Medal, Nehru Stadium, Olympics, Qualification Rounds, qualifiers, Republic of Korea, Soccer, South Korea, Sports, Stadium, teams, Victory, Win, Women | Leave a Comment »

33rd National Games in Guwahati – No Place for TN athlete Santhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

தேசிய விளையாட்டு: தமிழக வீராங்கனை சாந்திக்கு இடம் இல்லை

சென்னை, பிப்.1-

33-வது தேசிய விளையாட்டுப் போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் வருகிற 9-ந் தேதி முதல் 18ந் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் 40 பேர் இடம்பெற்று உள்ளனர். 20 வீரர்களும், 20 வீராங்கனைகளும் தேர்வாகி உள்ளனர்.

தோகாவில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்த சாந்தி தமிழக அணியில் இடம் பெறவில்லை.

பெண் தன்மை சோத னையில் தோல்வி அடைந்த அவரது பதக்கம் பறிக்கப் பட்டதா இல்லையா என்ற மர்மம் இன்னும் நீடித்து இருக்கிறது. சாந்தியின் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்று தமிழ்நாடு அமைச்சூர் தடகள சங்கத்தின் செயலாளர் சி.நீலசிவலிங்கசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முதலில் அறிவிக்கப்பட்ட பட்டியலில் சாந்தியின் பெயரை சேர்த்து இருந்தோம். திடீரென இந்திய தடகள சம்மேளனத்தில் இருந்து அவரது பெயரை நீக்கி விட்டு பட்டியல் அனுப்பவும் என்று கடிதம் வந்தது. ஆனால் விவரம் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. இந்த அடிப்படையில் சாந்தியை நீக்கி உள்ளோம்.

இவ்வாறு நீலசிவலிங்கசாமி கூறினார்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் இடம் பெற்ற தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் வருமாறு:-

ஆண்கள்:

அரவிந்த், மாணிக்க வாசகம், விஜய குமார், சத்யா, சரவணகுமார், ரகுநாத், முத்துசாமி, கருப்பசாமி, விக்டர், ஜெபசிங், புயல் பாலச்சந்தர், பெனடிக்ட் ஸ்டார்லி, நிகில், சித்தரசு, வெய்ன் பெபின், வினோத்ராஜ், சந்திரசேகர், ரஞ்சித்குமார், வடிவேலு, பார்த்தீபன், பிரேமானந்த், பிரசாந்த்,

பயிற்சியாளர் அண்ணாவி,

மானேஜர் செந்தில்.

பெண்கள்:

அஞ்சு ஜார்ஜ், சாரதா நாராயணா, அன்பு விமலா, பிரதீபா, மோகனாள், இளவரசி, சூர்யா, மகேஸ்வரி, சங்கரி, காயத்ரி, லீலாவதி, லட்சுமி, சுரேகா, சரஸ்வதி, அணிச்சம், கற்புரா மாலா, ஜெயந்தி, மோகன பிரியா, மலர் விழி, சரண்யா பிரகாஷ்,

பயிற்சியாளர்:- சுகந்தி,

மானேஜர்:- பார்வதி.

Posted in 33, Asiad, Asian Games, athlete, athletics, Contestants, Controversy, Games, India, Medals, National Games, Olympics, Santhi, Santhi Soundarajan, Santhi Sounthararajan, Santhy, Sports, Track and field | Leave a Comment »

Zidane’s Head Games

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2006

தீவிரவாதி ஜிடேன் பாவம் பிச்சைப்பாத்திரம் தொடங்கி குட்டி பூர்ஷ்வா வரை அனுதாப அலை வீசும் இந்த நேரத்தில், வாசிம் அக்ரமுக்கும் அசராத அஞ்சாநெஞ்சன் க்ருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மால்கம் மார்ஷலுடன் மல்லுக்கட்டிய காவஸ்கர் போன்றோர் என்ன ஆலோசனை சொல்லி இருப்பார்கள்?

1. Yo Mama Jokes – Funny Clean Jokes about Yo Mama :: எசப்பாட்டு படித்திருக்கலாம். ‘உங்க அம்மா காதலில் விழுந்தால், காதலே உடைந்து போகும்; அத்தனை குண்டாக இருக்கிறாள்’

2. Headbutting for Self-Defense: The Conventional Wisdom is Wrong :: இது பல்கலைக்கழக திறனாய்வின் முடிவு. தலையால் பிறரை முட்டினால், உங்களுக்குத்தான் கேடு அதிகம் என்று ஆராய்ந்து விளக்குகிறார்.

3. Zidane Head Butt Game – Presented by Addicting Games :: ஆசை தீர மார்கோ மாடேராட்சியை முட்ட முடிகிறது. எனக்கு 1500 புள்ளிகள் ஒரு தடவையும், இன்னொரு முறை 1280 மதிப்பெண்ணும் பெருமளவு வெறி தீர நெட்டித் தள்ளினேன். நீங்களும் ஆடிப் பாருங்க. அதுதான், இன்று ப்ளாக்ஸ்பாட் கிடையாதே… விளையாடுங்க.

Posted in Football, Fun, Games, Materazzi, Satire, Soccer, Tamil, Zidane | Leave a Comment »