சீனாவின் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்காக 15 இலட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
![]() |
![]() |
பீஜிங் இல் கட்டப்படும் தேசிய ஒலிம்பிக் அரங்கம் |
சீனாவின் தலைநகர் பீஜீங்கில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்துவதற்காக, சுமார் 15 லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்று சர்வதேச வீட்டு உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் முன்பு நடத்தப்பட்ட இடங்களிலும், இனி நடத்தப்படவுள்ள இடங்களிலும் இருக்கும் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்துள்ள வீட்டு உரிமை மற்றும் வெளியேற்றம் குறித்த மையம், 1988 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் சியோல் நகரில் இருந்து 7 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளது.
ஆனால் ஒலிம்பிக் போட்டிகளுக்காக யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட ஆறாயிரம் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »