Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Disaster’ Category

Raman Raja – Rain… Rain Go away! (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

நெட்டில் சுட்டதடா…: மழையைத் திருடிய மனிதர்கள்!

நடிகர் கமல்ஹாசன் நல்ல கவிஞரும்கூட என்பது அவருடைய ரசிகர் வட்டத்திற்குள் மட்டும் தெரிந்த விஷயம். அவருடைய கவிதைகளில் நான் ரசித்த ஒன்று இது:

பெய்யெனப் பெய்யுமா மழை?
மழைக்குமெனில், உன் தாயிடம் சொல்;
நாடு நனையட்டும்.

திருவள்ளுவர் காலத்தில் மழையை ஆணையிடுவதற்குப் பத்தினிப் பெண்களே போதுமானதாக இருந்தார்கள். கிரேக்கர்கள் மழை வேண்டுமென்றால் ஜீயஸ் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்துப் பார்த்தார்கள். பிறகு அமிர்தவர்ஷிணி ராகம், கழுதைக்குக் கல்யாணம் என்று பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டும் ஒன்றும் பலனில்லை. ஆனால் தற்போதைய விஞ்ஞானத்தின்படி, சில வேதிப் பொருட்களை மேகத்தில் செலுத்திச் செயற்கையாக மழை பெய்விக்க முடியும். செயற்கை மழை என்றால் செயற்கையாக மேகத்தை உற்பத்தி செய்வது அல்ல. (அவ்வளவு தண்ணீரைக் காய்ச்சவல்ல அடுப்பு கிடையாது!) இருக்கும் மேகத்தை, நம்ம ஊருக்கு நேர் மேலே வரும்போது கப்பென்று பிடித்துக் கொண்டு கையிலிருப்பதைக் கொடுத்துவிட்டுப் போ என்று சொல்ல முடியும். cloud seeding மேக விதைப்பு முறைகளை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறார்கள். விமானத்தில் பறந்து போய் மேகத்தின் அருகில் வெள்ளி அயோடைடு குச்சிகளைக் கொளுத்தி தீபாராதனை காட்டுவார்கள்; நீராவி குவிந்து மழைத் துளியாக மாறிக் கீழே வரும். சென்ற ஆண்டு சீனாவில் பயங்கரமாகப் புழுதிப் புயல் அடித்து நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன. கீழே இருந்தே ராக்கெட் மூலம் சிகரெட் சைஸ் வெள்ளி அயோடைடு குச்சிகளை விண்ணில் செலுத்தி மழையைக் கொண்டு வந்து பெய்ஜிங் நகரத்தையே சுத்தமாக அலம்பிவிட்டார்கள்.

சீனாவின் வட பகுதிகளில் பஞ்சம் போக்கவும், காட்டுத் தீயை அணைக்கவும் தேவைப்பட்ட போதெல்லாம் மழை பெய்விக்க ஓர் அரசாங்க டிபார்ட்மெண்ட்டே இயங்குகிறது. சில சமயம் வெறும் உப்பு, சில சமயம் உலர்ந்த பனி இப்படி எதையாவது மேகத்தில் தூவி மழைபெய்ய வைக்கிறார்கள். (உலர் பனி என்பது கார்பன் டை ஆக்ûஸடை அமுக்கி சுருக்கப்பட்ட பனிப் பொடி. அதை மேகத்தின் மேல் தூவினால் மேகத்துக்கு உச்சி குளிர்ந்துவிடும்.!)

ஆனால் இதெல்லாம் உண்மையிலேயே வேலை செய்கிறதா என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் செயற்கையை நம்ப மறுத்து, “”இயற்கையாக மழை பெய்யும் போதெல்லாம் அதிகாரிகள், தங்கள் முயற்சியால்தான் பெய்தது என்று வருண பகவானின் பி.ஏ. மாதிரி அறிக்கை விட்டுவிடுகிறார்கள். வடக்கு சீனாவில் விவசாயத்துக்குக் கன்னா பின்னாவென்று தண்ணீரை உபயோகிப்பதால் ஆறுகள் வறண்டு கோபி பாலைவனம் வேகமாகப் பரவி கொண்டிருக்கிறது. அதை மறைக்கத்தான் செயற்கை மழை என்று பிலிம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

இயற்கையுடன் விளையாட ஆரம்பித்தால் அது என்ன மாதிரியெல்லாம் திருப்பம் எடுக்கும் என்பதுதான் யாருக்குமே தெரியாத புதிர். 1952 -ம் ஆண்டு நம்ம ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டனில் உள்ள எக்ஸ்மூர் நதியில் கடும் மழை காரணமாக வெள்ளம். குறுகிய பள்ளத்தாக்கின் வழியே ஒன்பது கோடி டன் தண்ணீர் சீறிப் பாய்ந்து ஓடியது. பாறாங்கற்களையெல்லாம் அடித்துப் புரட்டிக் கொண்டு வந்த வெள்ளத்தின் வழியில் மாட்டிக் கொண்டது, டெவான் என்ற சிற்றூர். நிமிட நேரத்தில் வீடுகள் கடைகள் பாலங்கள் எல்லாம் இடிந்து விழ, முப்பத்தைந்து பேர் பலியானார்கள். “”கடவுளின் வினோத விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. ஆமென்” என்று அவசர அவசரமாகக் கேûஸ மூடி விட்டது அரசாங்கம்.

இதற்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து பி.பி.சி. ரேடியோவிடம் சில ரகசிய ஆவணங்கள் கிடைத்தன. அப்போது முற்றிலும் வேறு கதை விரிந்தது. வருடா வருடம் பெய்வதைப் போல 250 மடங்கு மழை திடீரென்று அன்று பெய்ததற்குக் காரணம், ராயல் விமானப்படை செய்த ஒரு சிறு திருவிளையாடல். ஆபரேஷன் க்யுமுலஸ் என்று பெயர் வைக்கப்பட்ட அந்த செயற்கை மழைப் பரிசோதனையில் பங்கு கொண்ட ஒரு விமானி சொன்னார்: “”மேகக் கூட்டத்துக்கு மேலே குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து உலர்ந்த பனியைத் தூவினோம். கொஞ்ச நேரம் கழித்து மேகத்துக்குக் கீழே வந்து பார்த்தால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது! எங்கள் தலைமையகத்திற்குத் திரும்பி உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ரேடியோவில் வெள்ளம், உயிர்ச் சேதம் பற்றிய நியூஸ் சொன்னார்கள். உடனே அத்தனை பேரும் கப்சிப் என்று கற்சிலை மாதிரி ஆகிவிட்டோம்….”

பருவ நிலையைச் சீண்டி விளையாடுவதில் அமெரிக்க ராணுவத்துக்கு என்றுமே ஆர்வம் உண்டு. “”உலகத்தின் தட்பவெப்ப நிலை என்பது காட்டுக்குதிரை மாதிரி கட்டுக்கடங்காததோடு, எல்லாருக்கும் பொதுச்சொத்தாக வேறு இருக்கிறது. அதை முழுவதும் நம் கண்ட்ரோலில் கொண்டு வந்துவிட்டுத்தான் மறுவேலை” என்று கோடிக்கணக்கில் செலவழித்தார்கள். அலாஸ்கா மாநிலத்தில் ஹார்ப் ( HAARP ) என்று மாபெரும் ரேடியோ ஆன்டெனா வயல் ஒன்று அமைத்தார்கள். சக்தி வாய்ந்த ரேடியோ அலைகளை அனுப்பி வானத்தில் இருக்கும் அயனோஸ்பியர் என்ற மின்சாரப் போர்வையை மெல்லச் சூடாக்கி, என்ன ஆகிறது என்று பார்க்கும் ஆராய்ச்சி இது. மைக்ரோவேவ் அடுப்பில் நெருப்பில்லாமல் உருளைக்கிழங்கு வேக வைப்பது போலத்தான்; ஆனால் அவர்கள் சமைத்தது, வானத்தை! அந்தச் சூட்டில் அயனோஸ்பியர் போர்வையை ஒரு மாபெரும் பபிள் கம் மாதிரி உப்பிக் கொண்டு டன் கணக்கில் காற்றை உள்ளிழுக்கும். இந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு எதிரி நாட்டின் ஏவுகணைகளையும் விமானங்களையும் அப்படியே உறிஞ்சித் துப்பிவிடலாம்; விண்ணையே மின்சார விரிப்பினால் மூடி, எதிரியின் சாட்டிலைட் செய்தித் தொடர்புகளைத் துண்டிக்கலாம் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். பிறகு ஹார்ப்புக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய, இன்னும் ஐம்பது வருடம் காத்திருப்போமாக.

இருபதாம் நூற்றாண்டின் நடுவில் அமெரிக்காவின் கிழக்குக் கரையை அடுத்தடுத்துப் பல புயல்கள் தாக்கிப் பலத்த சேதம். “”விஞ்ஞானிகள் எல்லாம் தண்டச் சம்பளம் வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே, இந்தப் புயல் பயலை அடக்க ஏதாவது செய்யக்கூடாதா?” என்று எரிச்சல்பட்டார் ஜனாதிபதி ஐசன்ஹோவர். அப்படித்தான் ஆரம்பித்தது அமெரிக்காவின் புயல் பரிசோதனைகள். விஞ்ஞானி லாங்ம்யூர் என்பவர் தைரியமாகப் புயலின் கண்ணில் புகுந்து புறப்பட்டு உலர் ஐûஸத் தூவினார். புயலில் உள்ள தண்ணீரையெல்லாம் வடிய வைத்துவிட்டால் அதன் வீரியம் குறைந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் கடலில் மையம் கொண்டிருந்த புயல், ஒரு டைவ் அடித்துத் திசைமாறி ஜியார்ஜியாவைப் போய்த் தாக்கியது! பக்கத்து வீட்டுக் கண்ணாடியைப் பந்தடித்து உடைத்த சிறுவன்போல, வீட்டுக்கு ஓடிப் போய்ப் போர்த்திப்படுத்துவிட்டார் லாங்ம்ப்யூர்.

ப்ராஜெக்ட் புயல் வெஞ்சினம் ( storm fury ) என்று அறுபதுகளில் ஆரம்பித்து, ஓர் இருபது வருடம் புயல்களுடன் மல்லாடினார்கள் அமெரிக்கர்கள். ஆனால் இவர்கள் செய்யும் ஆராய்ச்சிகளுக்கு ஏதாவது பலன் இருக்கிறதா, அல்லது தானாகவேதான் புயல் பலவீனமடைந்துவிட்டதா என்பதைக் கடைசி வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சில தடவை புயலடைத்தது; சில சமயம் பிசுபிசுத்தது. கடைசியில் இதெல்லாம் கதைக்குதவாது என்று ஆர்வம் இழந்துவிட்டார்கள். ஆனால் சீனா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சீனாவில் விவசாயிகள் ஆடிப் பட்டம் தேடி விதைத்துவிட்டு, தண்ணீருக்கு விமான எதிர்ப்பு பீரங்கிகளை நாடுகிறார்கள். அவற்றில் கெமிக்கல் குண்டுகளை நிரப்பி, மேகங்களை அடித்துக் கீழே வீழ்த்த முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். இதில், “”எங்க ஊருக்கு வர இருந்த மழையை உங்க ஊரிலேயே தடுத்துத் திருடி விட்டீர்களே” என்று ஒரு பேட்டைக்கும் மற்றொரு பேட்டைக்கும் சண்டை நடக்கிறது. ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் சண்டை நடக்கிறது. (வேறு எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?)

மழையைக் கொண்டு வருவது ஒரு புறமிருக்க, கிரிக்கெட் மாட்ச்சுக்கு ஐநூறு ரூபாய் தந்து டிக்கெட் வாங்கியிருக்கும் நாட்களில் மழையை வராமல் தடுக்கவும் வழிகள் யோசித்திருக்கிறார்கள். ரஷ்யாவில் விளையாட்டுப் போட்டிகள், வி.ஐ.பி பொதுக்கூட்டங்களின் போது மழையை முளையிலேயே கிள்ளுவதற்கு ஏற்பாடுகள் இருக்கின்றன. 2008-ல் சீனாவில் ஒலிம்பிக்ஸ் நடக்கப்போகிறது. மழை பெய்து ஆட்டத்தைக் கலைத்து விடக்கூடாதே என்பதற்காக இப்போதே ஓர் அரசாங்க இலாகா அமைத்து ஆள் படைகளுக்கெல்லாம் சம்பளம் கொடுத்து உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், என்னதான் மனிதன் முயன்றாலும், “”நமக்கு மேலே இயற்கைன்னு ஒண்ணு இருக்கில்லே?” என்றுதான் சொல்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

ஆர்.கே. லட்சுமணனின் புகழ் பெற்ற கார்ட்டூன் ஒன்று; பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. மழை நிறைந்த காலை நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் ஏழெட்டு பேர் குடை, ரெயின் கோட்டுடன் நிற்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் குடையில்லாமல் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு நிற்கிறார்.

“”அட, ஆமாம் நான் வானிலை இலாகாவிலேதான் வேலை செய்யறேன். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

————————————————————————————————————————————————

மக்களும் மழைநீரும்!

கி. சிவசுப்பிரமணியன், அறிவியல் ஆய்வாளர்


சூரியனால் வெளிப்படுத்தப்படும் வெப்பம் சுமார் 6,000 டிகிரி சென்டிகிரேட். இதில் ஒரு சிறு பகுதியே பூமிக்கு கிடைக்கிறது.

இந்த வெப்பநிலையே கடல்நீரை ஓரளவு ஆவியாக்கி மேகங்கள் மூலம் நமக்கு மழையாகக் கிடைக்க உதவுகிறது. இந்த வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்பொழுது பருவகால மாற்றம் ஏற்படுகிறது. எனினும் எந்த ஆண்டிலும் மழையே இல்லாமல் அறவே பொய்த்துப் போவது இல்லை. இதுவே இயற்கை.

தமிழகம் தவிர இந்தியா முழுமையும் தென்மேற்குப் பருவகாலத்தில் ஏறத்தாழ 80 சதவிகித மழை கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் வடகிழக்குப் பருவகாலத்தில் அதிக அளவு மழை கிடைக்கிறது. இது இயற்கையின் நியதி.

தமிழகத்தின் சராசரி மழையளவு ஏறத்தாழ 960 மி.மீ. இதில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மழை இரு முக்கிய பருவ காலங்களான தென்மேற்கு (332 மி.மீ) மற்றும் வடகிழக்கு (465 மி.மீ) பருவகாற்றினால் கிடைக்கிறது.

வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் – டிசம்பர்) இந்த ஆண்டு தமிழகத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கியது. ஆண்டின் மொத்த மழையில் பாதியளவு இம்மூன்று மாத காலத்திலேயே பெய்துவிடுகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் இப்பருவ மழையின்போதுதான் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு அதிகரிக்கிறது.

எனவே, இக்குறுகிய காலத்தில் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு மழைத்துளியையும் மிகச்சிறந்த முறையில் நிலத்திலும் (குளம், குட்டை, ஏரி போன்றவை) மற்றும் நிலத்திற்கு கீழும் (கசிவுநீர்க் குட்டைகள், மழைநீர் அறுவடை, கிணறுகள் போன்றவை) சேமிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

“மகேசனை நம்பலாம் ஆனால் மழையை நம்ப முடியாது’. இது கிராமப்புற மக்களின் கூற்று. நகர்ப்புறங்களில் மழை குறைந்தாலும் பாதிப்புகள் அதிகம் இல்லை. ஆனால் விவசாயத்தையே நம்பியுள்ள கிராமங்களுக்கு மழையே உயிர் மூச்சு. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சென்னைக்கு மிக அதிக அளவு மழையை அளித்துள்ளது. ஆனால், வடகிழக்குப் பருவமழை அந்த அளவுக்கு சிறப்பாகப் பெய்யவில்லை.

எனினும், அடைமழைபோல் அவ்வப்போது தூறலுடன் பெய்த தொடர் சிறுமழை நிலத்தடிநீர் மேம்பாட்டிற்கு மிகவும் உகந்ததாகும்.

பெய்கின்ற சிறுதூறல் மழையில் பெரும்பகுதியை பூமி நிதானமாக உள்வாங்கி மண்ணுக்கு அடியில் எங்கெல்லாம் துவாரங்கள் உள்ளதோ அங்கெல்லாம் நீரைப்புகுத்தி நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அடிப்படையாக அமைய வழிவகுத்தது இந்த சிறுதூறல் மழையே. இக்கருத்தின் வெளிப்பாடே “சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதாகும்.

உதாரணமாக, சென்னையில் அக்டோபர் மாதத்தின் சராசரி மழையளவு 270 மி.மீ. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 15 நாள்களில் 257 மி.மீ. மழை பெய்தது. ஆனால் ஒரே நாளில் மட்டும் (அக்டோபர் 28) 140 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே மீதமுள்ள இந்த ஒருமாதத்தில் பெய்கின்ற மழைநீரைச் சிறப்பாகச் சேமிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் அமைந்துள்ள மழைநீர் சேமிப்பு அமைப்புகளான ஏரிகள் மூலம் ஓரளவுக்கு மேல் பெய்கின்ற பெருமழைநீரைத் தேக்கினால் அது மழையற்ற கோடைகாலத்திற்கு பெரிதும் உதவும்.

எக்காரணத்தைக் கொண்டும் ஏரிகளை எவரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. அவை எதிர்காலத்தின் நீர் ஆதாரங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

நகரங்களில் வீடுகளுக்கு மழைநீர் சேகரிப்பு எவ்வளவு கட்டாயமோ அவ்வளவு கட்டாயம் கிராமங்களில் மழைநீர் சேகரிப்பதும் ஆகும். எனவே கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளையும், குளங்களையும் மராமத்து செய்து அவற்றின் முழு கொள்ளளவுக்கு தயார் செய்வது அரசு மற்றும் அனைத்து மக்களின் இன்றியமையாத கடமையாகும். ஆனால் இவைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டாலும், செயல்பாடுகள் மிகவும் குறைவே. இதுவே ஒட்டுமொத்த நீர்ப்பற்றாக்குறைக்கு அடிப்படைக் காரணமாகும்.

ஆண்டுதோறும் கிடைக்கின்ற மழை நம் தேவைக்கும் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் அதை உரியமுறையில் சேமித்துவைக்க நாம் தவறிவிடுகிறோம் என்பதே உண்மையாகும்.

“காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைக்கின்ற மழைநீரை உரிய முறையில் சேகரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

பருவகாலங்களில், மிகக் குறுகிய நாள்களில் அளவுக்கு அதிகமாக பெருமழை பெய்து, பேரளவு வெள்ளம் வீணாகக் கடலில் கலக்கிறது. இப்படி அதிகமாகப் பெய்யும் மழைநீரை முடிந்தவரையில் சேமித்து, அதை வறட்சி மற்றும் பற்றாக்குறைக் காலங்களில் பயன்படுத்திக்கொள்ளும் முறையே நீர் மேலாண்மையின் அடிப்படையாகும்.

இக்கருத்து விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீர் சேமிப்பிற்கும் பொருந்துவதாகும். இம்மழைநீரைப் பயன்படுத்திக்கொள்ள மழைநீர் தேங்கும் இடங்களில் சிறிய குளம், குட்டைகளை அமைக்க அரசும், மக்களும் முயற்சிக்க வேண்டும். இவற்றையே கசிவுநீர்க் குட்டைகள் என்கிறோம்.

இக்குட்டைகளுக்கு மழைநீர் வரத்தொடங்கியதும் நிலத்தால் அது உறிஞ்சப்படுகிறது. எங்கெல்லாம் நீர் பூமியில் வேகமாக உறிஞ்சப்படுகிறதோ அங்கெல்லாம் நிலத்தடி நீர் வளம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு அதன் உவர்நீர்த் தன்மையும் மாறி நன்னீர் பெறத் துணைபுரிகிறது. இக்கருத்துகளின் அடிப்படையில் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை மக்களும், அரசும் முழுமையாக உணர்ந்து ஆக்கபூர்வ வழியில் செயல்பட வேண்டும்.

ஆண்டுதோறும் நமது தேவைக்கு அதிகமாகவே மழைநீர் கிடைக்கிறது. ஆனால் அதை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்வது இல்லை. உதாரணமாக, ஒரு கிரவுண்டு (2400 சதுர அடி) நிலத்தில் 1 மி.மீ. மழை பெய்தால் அது 223 லிட்டர் நீருக்குச் சமம்.

சென்னையில் ஆண்டுதோறும் சராசரியாக 1300 மி.மீ. மழை பெய்கிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 677 மி.மீ. மழையும் அக்டோபர் முதல் நவம்பர் வரை 354 மி.மீ. மழையும் பெய்தது. டிசம்பர் மாதம் 150 மி.மீ. மழை பெய்தது.

எனவே எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிமனிதரும் தத்தம் வீடுகள் மற்றும் நிலங்களில் இயன்ற அளவு மழைநீரைச் சேமித்து பூமிக்குள் செலுத்த வேண்டியது முக்கிய கடமையாகும். மேலும் பொது இடங்களில் கிடைக்கும் பேரளவு மழைநீரைச் சேமிக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆண்டுதோறும் தவறாமல் இத்தகைய செயல்பாடுகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டால் நமது நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்துக்கே இடமிருக்காது.

Posted in Agriculture, Backgrounder, cloud seeding, Clouds, Cyclones, Disaster, Drought, Dry, Environment, Facts, Farming, Floods, groundwater, History, Monsoon, Pollution, Rain, River, storms, Thunderstorms, Tsunami, Twisters, Warming, Water | Leave a Comment »

Quadripartite dialogue not against China: PM

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

சீனா பயப்படத் தேவையில்லை: மன்மோகன்

புதுதில்லி, ஜூன் 29: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டணியினால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என சீனா பயப்படத் தேவையில்லை என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.

தில்லியில் புதன்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.

நான்கு நாடுகள் கூட்டணி, போர் தொடர்பான கூட்டணியல்ல, இது யாருடைய நலனுக்கும் எதிரானதும் அல்ல என்று கூறிய பிரதமர், இது குறித்து அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜி-8 மாநாட்டின் போது சீன அதிபரிடம் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்தார்.

பேரிடர்களைக் கையாளுவது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் அண்மையில் உடன்பாடு செய்து கொண்டன.

கடந்த மாதம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 4 நாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கெனவே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பலதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக இந்தியா அக் கூட்டத்தில் தெரிவித்தது.

கடந்த 2005 டிசம்பரில் சுனாமி தாக்கியபோது 4 நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றின. அந்த அனுபவத்தைக் கொண்டு முழுமையான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே மணிலா பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என ஏற்கெனவே அமெரிக்கா தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்திய-யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிரதமர், “அது விரைவில் அமலுக்கு வரும், ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டுமே இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது’ என்றார்.

“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலையையும் நான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறேன். இதுபோன்று இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை’ என்றார் பிரதமர்.

அணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியதைத் தொடர்ந்தே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.

Posted in America, Army, Asean, Australia, Beijing, Brazil, Canberra, Cooperation, Coordination, defence, Defense, Disaster, Earthquake, EU, External, Flood, Foreign, G8, Germany, International, Japan, Manmohan, Military, NATO, Navy, Nuclear, Peking, PM, Relations, SA, SAARC, South Africa, Southafrica, Tokyo, Tsunami, US, USA, Washington | Leave a Comment »

Rains toll in Karnatata, Kerala, Andhra Pradesh and Maharashtra reaches 157

Posted by Snapjudge மேல் ஜூன் 26, 2007

மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தில் மழையின் வேகம் தணிந்தது: சாவு எண்ணிக்கை 157 ஆக உயர்வு

மும்பை, ஜூன் 26: கடந்த சில நாட்களாக பெரும் பொருள் சேதத்தையும், உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்திய மழையின் தீவிரம் திங்கள்கிழமை குறைந்தது. இதையடுத்து, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன. இருப்பினும், அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களான கட்ச் மற்றும் ஜாம்நகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை திங்கள்கிழமை பெய்தது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மிகவும் கனமழை இன்றும் (செவ்வாய்க்கிழமை) பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கனமழை, வெள்ளத்துக்கு 4 மாநிலங்களிலும் பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.

புணே அருகில் தக்லி-ஹாஜி என்ற கிராமத்தில், 6 முதல் 8 வயது நிரம்பிய சிறார்கள் 4 பேர் மழை நீரால் நிரம்பியிருந்த சாக்கடைப் பள்ளத்தில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

கர்நாடகத்தில் தண்ணீர்பாவி கடலோரம் மூழ்கிய சரக்குக் கப்பலின் மாலுமி சடலம் கரையோரம் ஒதுங்கியது. இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாள்களில் பெய்த மழைக்கு கர்நாடகத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்; 4500 பேர் வீடிழந்துள்ளனர் என அம் மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். கேரளத்தில் 59 பேரும் ஆந்திரத்தில் 37 பேரும் மகாராஷ்டிரத்தில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளிலும், தாற்காலிக முகாம்களிலும் அதிகாரிகள் முழுவீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Center, Dam, dead, deaths, Disaster, Environment, Flood, Govt, Gujarat, Health, Homes, Houses, HR, Insurance, Karnatata, Kerala, maharashtra, Monsoon, Mumbai, Nature, NGO, Ocean, people, Rains, relief, Rivers, Sea, service, TN, victims, Volunteer, Water, Winds | Leave a Comment »

Koodankuam is waiting for a disaster – Nuclear Energy or Uranium Enrichments?

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

அணுசக்தி மூலம் மின்சாரம் :: கூடங்குளம் பயங்கரம் (கல்கி)
Kalki 24.06.2007
– ஜி.எஸ்.எஸ்.

“பூச்சி மருந்தில்கூட அனுமதிக்கப்பட்ட அளவு என்பது (permissible level) உண்டு. ஆனால், கதிரியக்கத்தைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு (safe dose) என்பதே கிடையாது.” அணுக் கதிரியக்கத்தின் விளைவுகள் தொடர்பாக ஐ.நா. அறிவியல் குழு இவ்வாறு அறிக்கை அளித்திருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை மீண்டும் முழு வீச்சோடு தலையெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, அங்குள்ள இரண்டு அணு உலைகள் போதாதென்று மேலும் நான்கு அணு உலைகள் அமைக்க முடிவெடுத்துச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.

கூடங்குளம் என்று குறிப்பிடப்பட்டாலும் அதற்கு அருகே உள்ள கிராமமான இடிந்தகரையில்தான் அணுமின் நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்படும் இந்த அணுமின் நிலையம் கடல் நீரைக் கொண்டு அணு உலைகளைக் குளிர்ப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் இதை நிறுவியிருக்கிறார்கள்.

கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்க, அரசும் தன் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

“இதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நான்கு அணு உலைகளுக்குமான அனைத்து திட்டங்களையும் எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்துவிட்டது. இதற்கான ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிகாரிகளுடன் கையெழுத்திடப்பட்டுவிட்டன. பிறகென்ன கருத்துக் கேட்புக் கூட்டம்?” என்று கொதிக்கிறார்கள் மக்கள்.

இது குறித்துச் சுற்றுப்புற ஆய்வாளரும் லயோலா கல்லூரிப் பேராசிரியருமான டாக்டர் வின்சென்ட்டைக் கேட்டபோது “நம் நாட்டில் மின்சாரம் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. மரபுசார்ந்த எரிபொருட்கள் (பெட்ரோல், டீசல் போன்றவை) மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. மரபுசாராத சக்திகள் – காற்றாலைகள், சூரியசக்தி போன்றவை மிக அதிக தயாரிப்புச் செலவு பிடிப்பவை. தவிர பொது மக்களால் இவை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

வளர்ந்து வரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அணுசக்தியை மாற்றாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது ஏற்கத்தக்கது தான். பாதுகாப்பு உணர்வு, வீண் பொருட்கள் வெளியேற்றம் இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த இரண்டையும் கவனித்து கண்காணிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எனவே, கவலை வேண்டாம். அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரை அணு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நம் நாடும் சுயச் சார்போடு விளங்க அணுசக்தி உற்பத்தி அவசியம்தான் என்றார். ஆனால், கல்பாக்கம் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மருத்துவக் குழு’வின் உறுப்பினரான டாக்டர் புகழேந்தி இந்தக் கருத்திலிருந்து
வேறுபடுகிறார்.

“தமிழகம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. வரவிருக்கும் அணு உலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இரண்டிலுமாகச் சேர்ந்து, மொத்தம் பத்து அணு உலைகள் தமிழகத்தில் செயல்படப் போகின்றன.

“அணுமின் நிலையம் தேவையா? என்பது முதல் கேள்வி. இதனால் பாதிப்பு உண்டா? என்பது அடுத்த கேள்வி.

“அணுசக்தியின் மூலம் மின்சாரம் என்று கூறப்படுவதே ஒரு பொய். அணுகுண்டு தயாரிக்கதான் இந்த உலைகள் உருவாக்கப்படுகின்றன. மின்சாரம் என்பது இதில் ஒரு உபரிப் பொருள், அவ்வளவு தான். தவிர, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது அதிக செலவு பிடிப்பது. இதனால் மக்களுக்குப் பயன் இராது.

“மாறாக, கதிரியக்கம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தாக இருக்கப் போகிறது.

“2005 ஜனவரி 31 அன்று அமெரிக்காவின் பொது சுகாதாரத் துறை அளித்த அறிக்கையின்படி எக்ஸ்ரே, நியூட்ரான், காமா கதிர்கள்
ஆகியவை கார்சினோஜின்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கார்சினோஜின் என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணி. இதுவரை இவற்றால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதுபோல் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பாதிப்புகள் நிச்சயம் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

கல்பாக்கத்தில் அறிவியல் பூர்வமான ஒரு சோதனையை மேற்கொண்டோம். ‘மல்டிபிள் மைலோமா’ என்ற நோய் குறித்த
ஆராய்ச்சியை மேற்கொண்டோம். இது கதிரியக்கத்தால் எலும்பு மஜ்ஜையில் உருவாகக் கூடிய ஒரு வகை புற்றுநோய். கல்பாக்கம் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் அணு உலைகளில் பணியாற்றிய இரண்டு பேரும், கல்பாக்கம் நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகம் ‘ஆண்களில் ஒரு லட்சத்தில் 1.7 பேரும், பெண்களில் ஒரு லட்சத்தில் 0.7 லட்சம் பேரும் இதனால் இறக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஒரு லட்சத்துக்கு 2.4 நபர்கள்.

ஆனால் கல்பாக்கத்தின் மக்கள் தொகை அதிகபட்சம் 25,000தான். பாதிப்போ மூன்று பேருக்கு – அதாவது, பொதுவான விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகம்!

“மேலும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிப்பார்கள். அமெரிக்காவில் இதற்கெனவே ஒரு (எனர்ஜி எம்ப்ளாயீஸ் ஆக்ட்) சட்டம் உண்டு. இங்கே சட்டமும் கிடையாது. இழப்பீடும் கிடையாது” என்று குமுறினார்.

இந்த வாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சோவியத் யூனியனின் (இன்றைய உக்ரைன்) செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அணுசக்தி இல்லாமலேயேகூட விஷவாயுவின் கோரத் தாண்டவத்தை போபாலில்
அனுபவித்திருக்கிறோம். மார்ச் 1999-ல் கல்பாக்கத்தில் கனநீர்க் (heavy water) கசிவு ஏற்பட்டபோது ‘அதெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள்தான்’ என்றனர் அதிகாரிகள்.

‘இன்னும் எதையெல்லாம் அனுமதிக்கப் போகிறோம்?’ என்பதுதான் அச்சுறுத்தும் கேள்வி.

– ஜி.எஸ்.எஸ்.

—————————————————————————————-

நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை தொடக்கம்
ஜாம்ஷெட்பூர், ஜூன் 26: நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜாம்ஷெட்பூர் அருகேயுள்ள டுராம்டியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் ஆலையை தொடங்கி வைத்தார்.

நாள் ஒன்றுக்கு 3000 டன் யுரேனியம் தாதுவை பதப்படுத்தும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை, இந்திய யுரேனியம் நிறுவனத்தால் ரூ.350 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் யுரேனியம் தாது இந்த புதிய தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.

முன்னதாக இந்திய யுரேனியம் நிறுவனத்தால் கடந்த 1967-ம் ஆண்டு முதல்முதலாக யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜடுகோராவில் துவங்கப்பட்டது.

————————————————————————————————————–

அணுமின் நிலையங்களால் ஆபத்தா?

வீர. ஜீவா பிரபாகரன்

அணுசக்தியை ஆக்க சக்தியாகவும் பயன்படுத்த முடியும்; அழிவு சக்தியாகவும் பயன்படுத்த முடியும். அணுசக்தியால் பாதிப்புக்கு உள்ளான ஜப்பான், அதே அணுசக்தியால் முன்னேற்றமும் கண்டது என்று பலரும் சுட்டிக் காட்டுவது உண்டு.

ஆனால், ஜப்பானில் தற்போது நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவடைந்துள்ளது. அணுமின் நிலையத்தில் ஏராளமான கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

தற்போது நில நடுக்கத்தால் ஜப்பான் நாட்டில் சேதம் அடைந்துள்ள அணுமின் நிலையம் உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம். நில நடுக்கத்துடன், கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1986-ம் ஆண்டு ரஷியாவில் செர்னோபில் விபத்தில், அணுக்கதிர் வீச்சு வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம். இவ்விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்தின் பாதிப்பு இன்றளவும் தொடர்கிறது.

2007 ஜனவரி 31 நிலவரப்படி நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 1 லட்சத்து 28 ஆயிரத்து 200 மெகாவாட். இதில் அனல்மின் நிலையங்கள் மூலம் 84 ஆயிரத்து 150 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, சுமார் 34 ஆயிரம் மெகாவாட் நீர் மின் நிலையம் மூலமும் 3,900 மெகாவாட் அணு மின்நிலையம் மூலமும், இதர புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலம் 6190 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

1969-ம் ஆண்டு முதல் இதுவரை 17 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் 7 அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் நமது நாட்டின் அணுமின் உற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி, மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இருப்பினும், இன்றளவும் அணுமின் உற்பத்தி அவசியமா, ஆபத்தானதா என்ற விவாதம் தொடர்கிறது.

ஒரு நாட்டின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை மின்சாரம். அனைத்து வளர்முக நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், மின் உற்பத்திக்குத் தேவையான நீர், நிலக்கரியின் வளம் குன்றி வருகிறது. காற்று, சூரியசக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல வகையிலான விசை ஆதாரங்களின் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தினாலும், அவற்றின் உற்பத்தி போதுமானதாக இல்லை. எனவே, மின் தேவையைப் பூர்த்திசெய்வதில் அணுமின் நிலையங்களின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது என்கின்றனர் ஒருசாரார்.

அதேநேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் உயிர்ப்பலி பெருமளவில் இருக்கும்; பல தலைமுறைகளுக்கும் பாதிப்பு தொடரும்; அணுமின் கழிவு அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும். இது உலகின் அழிவுப்பாதைக்கு வித்திடும்; அணுமின் உலைகள் அமைப்பதற்கான நிர்மாணச் செலவும் மிக அதிகம்; அணுக்கழிவைக் கையாளுவது குறித்து வெளிப்படை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்கின்றனர்.

ஆனால், அணுமின் அவசியத்தை வலியுறுத்துபவர்களோ, ரயில் விபத்து, சாலை விபத்தில்கூட ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். அதற்காகப் பயணங்களை எவரும் தவிர்ப்பதில்லை. நவீனமுறை விமானப் பயணங்கள், கப்பல் பயணங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர். அதுபோன்று அணுமின் தயாரிப்பும் தவிர்க்க இயலாதது.

கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் கொந்தளிப்பு, நில நடுக்கம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படாது. இது நவீனத் தொழில்நுட்பத்தில் அமைந்தது என அதன் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவசியமான அடிப்படைத் தேவையில் மின்சாரம் பிரதானமாக உள்ளது. மின் உற்பத்தியில் அணுசக்தியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் அணுமின் நிலையங்கள் உள்ளன.

ஒவ்வோர் அணு உலை அமைக்கும்போதும் அந்த நாடுகள் மிகவும் எச்சரிக்கையோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.

ஆனால், உலைகள் அமைக்கும்போது வெவ்வேறான தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் ஒன்றில் ஏற்படும் குறைபாடு, பாதிப்பு மற்றோர் இடத்தில் அதை நீக்கப் பயன்படுகிறது.

அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்பது உண்மைதான் என்றாலும், பெருகிவரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டால், வேறு வழியில்லை என்கிற நிலையில், அது தவிர்க்க முடியாத விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

Posted in Agni, Arms, Atom, Banduhurang, Bhatin, bhopal, Bombs, Capacity, Chernobyl, Compensation, dead, Development, Disaster, DMK, Economy, Electricity, emissions, Employment, energy, Enrichments, Environment, Growth, GSS, Industry, infrastructure, Jadugora, Jamshedpur, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jobs, Kalki, Kharswan, Koodangulam, Koodankulam, Koodankulam Nuclear Power Project, Kremlin, Manufacturing, Mineral, mining, mishap, Missiles, Mohuldih, Narwapahar, Nature, Nuclear, Op-Ed, Payload, Pollution, Precautions, Prithvi, Project, Research, Russia, Safety, Saraikela, Saraikela-Kharswan, Science, Sciences, Singhbhum, Technology, Tragedy, Turamdih, Uranium, USA, Warhead, Weapons | 1 Comment »

Exposing the double standards of Kerala Govt – Inaction, Hypocrisy, Bureaucracy

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

கடிதங்கள் | காலச்சுவடு

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

சக்கரியாவின் ‘மாயாவித் திருடர்கள்’ என்னும் கட்டுரை குறித்து:

கேரளாவில் மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன.

  • கெல்ட்ரான்,
  • ரேயன்ஸ் மில்,
  • புனலூர் காகித ஆலை,
  • அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ்,
  • அப்போலோ டயர் தொழிற்சாலை

ஆகிய அனைத்தும் மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில் மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள். அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள்.

அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும் நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4 டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்?

ஒரு வேளை மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில் மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது.

எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப் போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள்.

கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர் என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14 நினைவுகூரத்தக்க தினம்தான்.

பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

—————————————————————————

தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள்

பா. ஜெகதீசன்

தமிழகமும், கேரளமும் கடந்த பல தலைமுறைகளாகவே அண்ணன் – தம்பியைப் போன்ற உறவுடன் பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சமீபகாலத்தில் எழுந்த பிரச்னை விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைப் போல, மேலும் பல பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே “இழுபறி’யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையை தொடருகின்றன.

கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்த வரலாற்றை முறியடிக்கும் வகையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறைக்கும் மேல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தவும் 9.11.1958 முதல் செயல்படக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.

அதேபோல, பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்த நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்கிற இடத்தில் அரபுக் கடலில் இந்த நதி சங்கமம் ஆகிறது.

இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது.

புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தக் கனவு எப்போது நனவாகும் என்று தெரியவில்லை.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.

பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இந்தத் திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா – அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே.

மேலும் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.

ஆனால், இதர திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்தையும் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கண்ணகி கோயில் பிரச்னை அமைந்துள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியில்தான் கண்ணகி கோயில் உள்ளது.

ஆனால், கண்ணகி கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழக மக்களை கேரள அரசு தடுத்து, பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. இதில் சுமார் 250 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர்.

கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

கேரளத்துடன் நல்லுறவை வளர்க்கவே எப்போதும் தமிழகம் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் ஈடேறத் தடைகற்களாக இத்தனை பிரச்னைகள் அமைந்துள்ளன. இந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு, நல்லுறவு மேம்பட கேரளத்தின் பெருந்தன்மையான ஒத்துழைப்பு அவசியம்.

———————————————————————————————————————————

முல்லைப் பெரியாறும்-கேரளமும்!

என். சுரேஷ்குமார்

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோனி ஆறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு சுமார் 300 கி.மீ. தூரம் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது.

பெரியாறு தமிழக எல்லைக்குள் 56 கி.மீ. தூரமும் கேரள எல்லைக்குள் 244 கி.மீ. தூரமும் பாய்கிறது.

மக்களின் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்காகவும் பெரியாறு திட்டத்திற்கு முதன்முதலில் செயல்வடிவம் கொடுத்தது ஆங்கிலேயர்கள்.

அதன்படி, 1808-ம் ஆண்டு ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்டத்தை ஆய்வு செய்து 1862-ல் 162 அடி உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1882-ம் ஆண்டு 175 அடி உயரத்தில் அணை கட்ட பென்னி குயிக் நியமிக்கப்பட்டார். அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி முல்லை ஆறும், பெரியாறும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டப்படவிருந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். தற்போதும் அப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் தமிழர்களே.

இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசு, அணை கட்டப்பட உள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி எனக் கொண்டு, 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்தது.

மேலும், இந்த அணை நீரானது தமிழகத்திற்கு காலகாலத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்டது.

அதன்படி 1241 அடி நீளத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடி.

இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி. ஆனால், திடீரென வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டது.

இந்த அணையில் தேங்கும் நீரை, கிழக்குத் திசையில் 5765 அடி நீளமும், 60 அடி ஆழமும், 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டுவந்து பின்பு அந்த நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அதற்குப் பிறகு 78 கி.மீ. நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளியே எடுக்க முடியும்.

மேலும், 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடிவரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும்.

பின்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அந்த அணையின் நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர்தான் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, 1956-ம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரளத்தோடு இணைக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தது. அதன்மூலம் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் அணை பலப்படுத்துவது தொடர்பாக கேரள- தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அணை பலப்படுத்தப்படும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளை கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கேரளம் குறைத்தது.

இதனால் ஒரு போகம் சாகுபடி செய்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின.

1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1985-ம் ஆண்டே முடித்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்தது.

இதனால் இப்பிரச்னையை தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியது. மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அரசு சொன்ன காரணங்கள் பொய்யானவை என்று ஆணையம் தெளிவாகக் கூறியது.

அதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், கேரள அரசு 1979-ம் ஆண்டு தமிழகத்தோடு செய்த ஒப்பந்தத்தை மீறியதோடு, நிபுணர் குழு அறிக்கையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தியது.

தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம், நீர்வளம் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பெரியாறு அணையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இதன்மூலம் கேரள அரசு மேற்கொள்ளும் ஒரு தலைப்பட்சமான முடிவு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக விடப்பட்டிருக்கும் அறைகூவல்.

மேலும், தற்போது பழைய அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு கேரள அரசு கட்டினால் தமிழகத்தின் உரிமை முழுமையாகப் பறிபோகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Posted in Agriculture, Apollo, Bureaucracy, Cauvery, Coke, cola, Communism, Communist, Communist parties, Communist Party of India, Congress, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Dam, Disaster, Drinking, Economy, Employment, Exports, Finance, Flood, GDP, Govt, Growth, Guruvaioor, Guruvaiyoor, Guruvaiyur, Guruvayoor, Guruvayur, Harbor, Harbour, Headquarters, Hype, Hypocrisy, Imports, Incentives, Industry, infrastructure, Integration, Irony, Irrigation, Jobs, Kaviri, Keltron, Kerala, Kozhikode, Labour, Literacy, Madurai, Malaappura, Malappura, Malappuza, Malappuzha, Malayalam, Manufacturing, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Mills, Mullai, Mullai Periyar, MullaiPeriyar, National, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakode, Periyaar, Periyaaru, Periyar, Periyaru, Politics, Port, Prevention, Producation, promises, Railways, River, Salem, SEZ, Shipping, State, Tax, Textiles, THIRUVANANTHAPURAM, TMC, TN, Trains, Trivandrum | Leave a Comment »

Ooty – Smoking Earth

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

நிலத்தில் வெளியேறும் புகை: பீதி வேண்டாம் புவியியல் துறை அதிகாரி தகவல்

உதகை, ஜூன் 5: தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியிலிருந்து வெளிவரும் புகை 2 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தலைக்குந்தா வனப்பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதியிலிருந்து நிலத்திற்கடியிலிருந்து தொடர்ந்து புகைவெளிவருகிறது. இதில் கடந்த 2 நாட்களாக புகையுடன் தீக்கனல்களும் வெளிவந்ததால், அருகிலிருந்த செடி, கொடிகளும் அவ்வப்போது திடீரென தீப் பிடித்து எரிந்தன. இதனால், உதகை பகுதி மக்கள் பெரும் பீதியடைந்திருந்தனர்.

இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியில் படிந்த ஒரு வனப்பகுதி நாளடைவில் மட்கி ஒரு படிமம்போல உருவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீயின் வெப்பத்தால் இப்பகுதி தூண்டப்பட்டு அதிலிருந்து தற்போது புகை வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய படிமங்கள் நிலத்திற்கடியில் சுமார் 300 மீட்டர் நீளம் வரை உள்ளது.

தற்போது நடத்தப்பட்ட சோதனையில் 2 மீட்டர் ஆழத்திற்கு கீழே நெருப்பு, சுட்ட மண் எதுவும் வராததால் அதற்கு கீழே புகை வர வாய்ப்பில்லை. எனவே, மொத்தமுள்ள 300 மீட்டர் நீள பரப்பளவிலிருந்தும் நிலத்திற்கடியிலேயே எரிந்து புகை வரும். அதன்பின்னரே இது முழுமையாக அணையும் என்றார் அவர்.

——————————————————————–

நெருப்புகிரியானதா நீலகிரி?
எரிமலை பீதியால் ஏற்பட்ட பரபரப்பு
குமுதம் ரிப்போர்ட்டர்
03.06.07

மூடுபனி முக்காடு போட்டிருக்கும் இடம் நீலகிரி. குளுகுளுவென குளிர் கூடாரம் போட்டுத் தங்கியிருக்கும் அங்கே நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விபரீதம் நிகழ்ந்து வருகிறது. அங்கே பூமிப்பிளவு ஒன்று திடீரென கரியையும், புகையையும், சாம்பலையும் கக்கத் தொடங்கியிருப்பதால் எரிமலை பீதியில் உள்ளனர் நீலகிரி மக்கள். இது நீலகிரியா? நெருப்பு கிரியா? என்ற சந்தேகம் அவர்களிடம் உழன்று வருகிறது.

நீலிகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தலைகுந்தா. இங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் மீப்பி வனப்பகுதி. இதற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் முத்தநாடு மந்து, அத்திக்கல் நீபி ஆகிய மலைவாழ் மக்களின் கிராமங்கள் உள்ளன.

மீப்பி வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அப்போது இந்தப் பகுதியில் அடர்ந்த கரும்புகை வருவதை மலைவாழ் மக்கள் பார்த்திருக்கிறார்கள். ‘கோடைக்காலம் இல்லையா? ஏதாவது காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும்!’ என்று, அவர்கள் அலட்சியமாக இருந்து விட்டனர்.

வழக்கமாக மழைக்குப் பிறகு காட்டுத்தீ அணைந்து விடும். ஆனால், இந்த மர்மப்புகை விடாமல் தொடர்ந்திருக்கிறது. கூடவே கடந்த 24_ம் தேதி பெய்த மழையின் போது காதைப் பிளக்கும் இடிச்சத்தம் கேட்டதோடு தீப்பிழம்பும் தெரிந்து, புகைமூட்டம் அதிகமாகியிருக்கிறது.

இதனால் பயந்துபோன முத்தநாடு மந்துவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அடுத்த நாள் அந்தப் பகுதிக்குப் போய் பார்த்திருக்கிறார்கள். அங்கு நடந்திருந்த பயங்கரத்தை அவர்களது கண்களே நம்ப மறுத்துவிட்டன. அங்கே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மரங்கள் வேரோடு சரிந்து பூமிப்பிளவுக்குள் சிக்கியிருக்க, அதிலிருந்து அக்னி குண்டம் போல புகையும், நெருப்பும் வந்து கொண்டிருந்தது. அரண்டு போன இளைஞர்கள், அதுபற்றி பக்கத்து ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரும் இதை நேரில் பார்த்து விட்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

‘‘இது நிச்சயம் எரிமலைதான்!’’ என்று முடிவு கட்டிய அவர், ஊட்டியில் உள்ள தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் ஓட்டமாய் ஓடி வந்திருக்கிறார்கள். பூமிப்பிளவுகளில் இருந்து வெளிவரும் புகையை ஒருவித மிரட்சியுடன் பார்த்த அவர்கள், அது கக்கிய கரி, மண் ஆகியவற்றை எடுத்து ஆராய்ந்திருக்கின்றனர். அந்த மண் சுண்ணாம்புப் பவுடர் போலவும், கரிக்கட்டைகள் நிலக்கரி போலவும் இருப்பதைப் பார்த்து நிலைகுலைந்த அவர்கள், மாவட்ட கலெக்டருக்கும், புவியியல்துறை நிபுணர்களுக்கும் தகவல் அனுப்பினார்கள்.

அதையடுத்து, குன்னூரில் உள்ள புவியியல்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார். அவர் நடத்திய முதல் கட்ட ஆய்வில் தெளிவாக எதையும் அறிவிக்க முடியவில்லை. அந்தப் பாறை இடுக்குகளிலிருந்து கந்தகம் போன்ற ஒருவித துர்நாற்றம் வீசியதால், ஒரு தீக்குச்சியை நீட்டி பாலசுப்ரமணியம் ஆராய்ந்திருக்கிறார். அது ‘பக்’கென பற்றிக் கொண்டு ஜூவாலை விட்டு எரிந்திருக்கிறது. ஆகவே, அங்கு மீத்தேன் வாயு கசிந்து கொண்டிருக்கலாம்’ என்றார் பாலசுப்பிரமணியம்.

அதுமட்டுமல்ல! ஒருவேளை உயரழுத்த மின்கம்பிகள் மண்ணில் புதைந்திருந்து அதன் காரணமாகக்கூட பூமி இப்படி புகை கக்கலாம் என்று இரண்டு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். இதனால், அங்கு நின்ற இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் குழம்பிப் போனார்கள். ‘‘இது நிச்சயம் எரிமலைதான். மக்கள் பீதியடையக் கூடாது என்பதற்காகத்தான், இந்தத் தகவலை மறைக்கிறார்கள்’’ என அடித்துப் பேசினார்கள் அவர்கள்.

‘‘இங்குள்ள முத்தநாடு மந்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உசில்மேடு என்ற குன்று உள்ளது. அது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எரிமலையாக இருந்து அணைந்து போனது. அது நிச்சயம் ஒருநாள் மீண்டும் வெடித்து தீக்குழம்பைக் கக்கும். அதன் ஆரம்ப அறிகுறிதான் இது’’ என்றார் இயற்கை ஆர்வலர் ஒருவர். இதுபற்றி நிலவியல் நிபுணர்கள் உரிய விளக்கம் எதையும் சொல்லாததால், ‘இது எரிமலைதான்’ என்று மீடியாக்கள் எழுத, இந்தப் பகுதியில் பதற்றம் பந்தி போடத் தொடங்கி விட்டது.

இந்தச் செய்திகள் வெளியானதையடுத்து வெளிமாநில விஞ்ஞானிகள், சுற்றுலா வாசிகளின் படையெடுப்பு அங்கே தொடங்கி விட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டமும் களை கட்ட ஆரம்பித்து அவர்கள் மண் மாதிரிகளையும், கரிக்கட்டிகளையும் ஓடி ஓடிச் சேகரிப்பதும், ஆராய்வதுமாக இருந்தனர். நில வெடிப்புகளில் இருந்து வெளிவந்து விழும் கரிக்கட்டிகளும் சாம்பலும் படுபயங்கர சூடாக இருந்தன. அவற்றைத் தொடக்கூட முடியவில்லை. அத்துடன் அந்தப் பகுதி நிலம் வெப்பத்தால் தகதகத்தது. பலர் புகையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மயக்கமடைந்து விழுந்து விட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போலீஸ் காவல் போடப்பட்டு அந்நியர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா ஓர் அறிக்கை வெளியிட்டார், அதில் ‘‘நீலகிரியில் எரிமலை ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. பூமியில் ஏற்பட்ட இந்த மாறுதல் குறித்து புவியியில் ஆய்வு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

‘‘சரி! நீலகிரியில் தோன்றியிருப்பது எரிமலையின் அறிகுறியா?’’ இப்படியரு கேள்வி நம் கழுத்தைப் பிடித்து உந்த, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் பேராசிரியர் மணிமாறனிடம் இதுபற்றிப் பேசினோம். அவர் அழுத்தம் திருத்தமாக சில விவரங்களைத் தந்தார்.

‘‘நீலகிரியில் எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. பூமியில் அடித்தட்டுகள் இரண்டு ஒன்றையன்று முட்டக்கூடிய இடத்தில்தான் எரிமலை ஏற்படும். ஆனால் நீலகிரி ஒரு மலைப்பகுதி என்பதுடன், அது நிலத்தட்டுகளுக்கு வெகு தூரத்தில் உள்ளது. ஆகவே அங்கு எரிமலை ஏற்பட நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை.

ஆனால், நீலகிரியில் இப்போது புகை வெளியாகிக் கொண்டிருக்கும் பகுதியில் நிலக்கரி, லிக்னைட் போன்றவற்றுக்கு முந்தைய கரிப்படிவம் இருக்க வாய்ப்புள்ளது. பூமியில் புதையும் மரங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் வெப்பத்தால் இறுகி நமக்கு நிலக்கரியாகக் கிடைக்கிறது. நிலக்கரிக்கு முந்தைய லிக்னைட் படிவமாகவும் நமக்குக் கிடைக்கிறது.

இப்படி பலகோடி ஆண்டுகளாக பூமிக்கு அடியில் இருக்கும் நிலக்கரி, லிக்னைட் போன்றவை எளிதில் தீப்பற்றக் கூடிய பாஸ்பரஸ், ஸல்ஃபர் போன்ற வேதியியல் பொருட்களை உருவாக்குகிறது. பூமிக்குள் கிடைக்கும் வெப்பத்தால் சிலவேளைகளில் இவை எரியவும் ஆரம்பிக்கின்றன. கோடை மழையின் போது பூமி நன்றாகச் சுருங்கி விரியும். அந்தத் தருணத்தில் எங்கே இடைவெளி கிடைக்கிறதோ அங்கே இவை பொத்துக் கொண்டு புகையாகவும், நெருப்பாகவும் தலைகாட்டுகின்றன.

இதை வைத்து, இந்தப் புகை வரும் இடத்துக்கு நேர் கீழே நிலக்கரி இருப்பதாகக் கருதிவிட முடியாது. நிலக்கரி, லிக்னைட் படிவங்கள் பல மைல்களுக்கு அப்பால் இருந்து பீறிட்டால் கூட புகையும் நெருப்பும் அந்தப் பகுதியில் தரைக்கு மேலே தலை நீட்ட முடியாமல் பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஓரிடத்தில் தலைகாட்ட வாய்ப்புள்ளது.

நிலத்துக்கு வெளியே இந்த மாதிரி வெளியாகும் புகையும், நெருப்பும் இரண்டு மாதங்கள் வரை கூட நீடிக்கும். அதன் பிறகு தானே அடங்கி விடும். பூமிக்குள் இப்படி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை, வெளிநாடுகளில் செயற்கைக் கோள் மூலம் படம்பிடித்துத் தெரிந்து கொள்கிறார்கள்!’’ என்றார் அவர். ஸீ

– கா.சு. வேலாயுதன்

Posted in Aravenu, Blue Mountains, Coimbatore, Disaster, Disasters, Dodabetta, Earth, Earthquake, Environment, Fire, Forest, Gudalur, industrialisation, Kattabettu, Kodanadu, Kotagiri, Kunjapanai, Land, Marlimundh, Mettupalayam, Mountain, Mudumalai, Munnamachi, Nature, Nilgiris, Ootacamund, Ooty, Padanthorai, Perar, Pollution, Protection, Recovery, Smoke, Srimadurai, ST, Thalaigunda, Thalaigundha, Thalaikunda, Thalaikundha, Thalaikuntha, theppakadu, Thorapalli, Threat, tribal, Ubrrani Hada, UDHAGAMANDALAM, Volcano, Warming, Water, WetLand, Wetlands | Leave a Comment »

China considering property protection: Tax Issues

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

சீனாவில் சொத்து குறித்து புதிய சட்டம் கொண்டு வர அரசு ஆலோசனை

சீன நாடாளுமன்றம்
சீன நாடாளுமன்றம்

சீனாவில், அரசிடமிருந்து நிலத்தை தனியார்கள் குத்தகைக்கு பெறவேண்டிய நிலை உள்ளது பற்றிய கோபம் அதிகரித்து வருவதால், ஒரு புதிய தனியார் சொத்து சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது குறித்து சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.

கிராமப்புறங்களில், தங்களது நிலங்களை, புதிய வீடுகள் மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்களைக் கட்டுவோருக்குப் பறிகொடுத்த மக்களின் பிரச்சினைகள் காரணமாக, அங்கு பரவலான சமூக அதிருப்தி நிலவுகிறது.

கம்யூனிஸ்ட் சீனா, ஒரு அதிகரித்து வரும் அளவில், முதலாளித்துவ நாடாக மாறிக்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய சட்டம், சொத்து பறிமுதல் செய்யப்படுவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு எதிராக பாதுகாப்பளிக்கும். இந்த சட்டத்திற்கு அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

—————————————————————————-

சீனாவில் வறட்சி: உணவு உற்பத்தி பாதிப்பு

பெய்ஜிங், ஜூன் 13: சீனாவில் 6 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் 3 கோடி டன் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது.

சீன வேளாண்மைத் துறை துணை அமைச்சர் வீ சோ கூறியது: நாட்டின் மொத்த தண்ணீர் உபயோகத்தில் விவசாயத்திற்கு 64 சதவீதம் செலவிடப்படுகிறது. நீரை சேமிப்பது சமுதாயத்திற்கு அவசியமானது.

வேளாண்மைத் துறையில் நீர் சேமிப்பு உத்திகளை கையாளுவதும், நீர் சேமிப்பை சிறந்த முறையில் செயல்படுத்துவதும் கடினமான பணி.

மேலும் சீனாவில் 30 கோடி ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள முடியாத அளவுக்கு 3000 கோடி கனஅளவு மீட்டர் நீர் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சீன அரசு தற்போது ரூ. 364 கோடிக்கும் அதிகமான செலவில் 16 லட்சத்து 47 ஆயிரத்து 415 ஏக்கர் நிலத்தில் நீர் சேமிப்பு உத்திகளை செயல்படுத்தியுள்ளது.

இதனால் ஆண்டுக்கு 270 கோடி கனஅளவு மீட்டர் மழை நீரும், ஏக்கருக்கு 1260 கனஅளவு மீட்டர் நீரும் சேமிக்கப்படுகிறது.

Posted in Agriculture, Arid, Assets, Capitalism, China, commercial, Communism, Communist, Dams, Disaster, Drought, Economy, Farming, Flood, Food, Government, individuals, industrial, Industry, Irrigation, Issues, Land, Law, Nature, Paddy, Poor, Poverty, Private, Production, Property, Protection, rice, Rural, Stats, Tax, Water | 1 Comment »