Archive for the ‘Fire’ Category
Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2007
 |
 |
எரிக்கப்பட்ட பத்திரிகை அச்சகம் |
இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை
இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
அத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு
 |
 |
அகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம் |
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.
அண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.
ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
 |
 |
வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் |
வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
இந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
மேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
ஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.
Posted in Airforce, Arms, Asia Tribune, Attack, Blasts, Bombs, Burnt, Colombo, dead, Death, Deface, defence, Defense, Democracy, Dhileepan, Displaced, Editor, Eelam, Eezham, equipment, Extremism, Extremists, Fire, Freedom, Govt, HSZ, IDP, Independence, Irudina, Jaffna, Journal, journalism, journalist, Karuna, Lasantha, Law, Leader, LTTE, Mag, magazine, Magazines, Magz, Media, Military, Morning Leader, News, Newspaper, Office, Opposition, Oppression, Order, owner, paramilitary, Passport, Pillaiaan, Pillaian, Pillaiyaan, Pillaiyan, Police, Press, Propaganda, Rajapaksa, Rajapakse, Rajasingam, Rajasingham, Rajasinkam, Ransack, Rathmalana, Ratmalana, Rebel, Refugees, Reporter, Samarasinghe, Security, Sinhala, Sonali, Statue, Sunday, Sunday Leader, Suppression, Terrorism, terrorist, Terrorists, Thamilselvan, Thileepan, Triconamalee, triconmalee, Vavuniya, wavuniya, Weapons, Wikramatunga | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007
விதிமுறை மீறல்கள்!
ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.
இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?
உஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது?
உஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா?
இல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா?
- கோடம்பாக்கம் சேகர் எம்போரியமும்,
- உஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,
- ரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,
- ரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்
ஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்?
முறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.
இதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.
முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!
தவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.
Posted in authority, Biz, Bribery, Bribes, Buildings, Business, Cars, Chennai, Citizen, City, Commerce, Congestion, Construction, Consumer, Corruption, Crackers, Customer, Deepavali, Deepavalli, Departments, Dept, Discount, Diwali, DMK, Dress, Economy, Finance, Fire, Fireworks, Floors, Gold, Hassle, Hazards, Illegal, Incentives, Industry, infrastructure, Jewelery, Jewels, Jewlery, kickbacks, Lanes, Law, License, Madras, Malls, Metro, MMDA, multi storey, Multi story, officers, Order, Parking, Permits, Ranganathan st, Ranganathan street, Rebates, Renganathan st, Renganathan street, retail, Safety, Saravana, Saravana Gold House, Saravana GoldHouse, Saravana Selvarathanam, Saravana Selvarathanam Stores, Saravana Stores, Sarees, Saris, Season, Sector, Sekar Emporium, Shopping, Shops, Sri sankarapandian, Sri sankarapandian Stores, Srisankarapandian, Srisankarapandian Stores, Suspend, Trade, Traffic, Usman Road | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007
நிலத்தில் வெளியேறும் புகை: பீதி வேண்டாம் புவியியல் துறை அதிகாரி தகவல்
உதகை, ஜூன் 5: தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியிலிருந்து வெளிவரும் புகை 2 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தலைக்குந்தா வனப்பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதியிலிருந்து நிலத்திற்கடியிலிருந்து தொடர்ந்து புகைவெளிவருகிறது. இதில் கடந்த 2 நாட்களாக புகையுடன் தீக்கனல்களும் வெளிவந்ததால், அருகிலிருந்த செடி, கொடிகளும் அவ்வப்போது திடீரென தீப் பிடித்து எரிந்தன. இதனால், உதகை பகுதி மக்கள் பெரும் பீதியடைந்திருந்தனர்.
இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தலைக்குந்தா வனப்பகுதியில் நிலத்திற்கடியில் படிந்த ஒரு வனப்பகுதி நாளடைவில் மட்கி ஒரு படிமம்போல உருவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீயின் வெப்பத்தால் இப்பகுதி தூண்டப்பட்டு அதிலிருந்து தற்போது புகை வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய படிமங்கள் நிலத்திற்கடியில் சுமார் 300 மீட்டர் நீளம் வரை உள்ளது.
தற்போது நடத்தப்பட்ட சோதனையில் 2 மீட்டர் ஆழத்திற்கு கீழே நெருப்பு, சுட்ட மண் எதுவும் வராததால் அதற்கு கீழே புகை வர வாய்ப்பில்லை. எனவே, மொத்தமுள்ள 300 மீட்டர் நீள பரப்பளவிலிருந்தும் நிலத்திற்கடியிலேயே எரிந்து புகை வரும். அதன்பின்னரே இது முழுமையாக அணையும் என்றார் அவர்.
——————————————————————–
நெருப்புகிரியானதா நீலகிரி?
எரிமலை பீதியால் ஏற்பட்ட பரபரப்பு
குமுதம் ரிப்போர்ட்டர்
03.06.07
மூடுபனி முக்காடு போட்டிருக்கும் இடம் நீலகிரி. குளுகுளுவென குளிர் கூடாரம் போட்டுத் தங்கியிருக்கும் அங்கே நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விபரீதம் நிகழ்ந்து வருகிறது. அங்கே பூமிப்பிளவு ஒன்று திடீரென கரியையும், புகையையும், சாம்பலையும் கக்கத் தொடங்கியிருப்பதால் எரிமலை பீதியில் உள்ளனர் நீலகிரி மக்கள். இது நீலகிரியா? நெருப்பு கிரியா? என்ற சந்தேகம் அவர்களிடம் உழன்று வருகிறது.
நீலிகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தலைகுந்தா. இங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் மீப்பி வனப்பகுதி. இதற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் முத்தநாடு மந்து, அத்திக்கல் நீபி ஆகிய மலைவாழ் மக்களின் கிராமங்கள் உள்ளன.
மீப்பி வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அப்போது இந்தப் பகுதியில் அடர்ந்த கரும்புகை வருவதை மலைவாழ் மக்கள் பார்த்திருக்கிறார்கள். ‘கோடைக்காலம் இல்லையா? ஏதாவது காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும்!’ என்று, அவர்கள் அலட்சியமாக இருந்து விட்டனர்.
வழக்கமாக மழைக்குப் பிறகு காட்டுத்தீ அணைந்து விடும். ஆனால், இந்த மர்மப்புகை விடாமல் தொடர்ந்திருக்கிறது. கூடவே கடந்த 24_ம் தேதி பெய்த மழையின் போது காதைப் பிளக்கும் இடிச்சத்தம் கேட்டதோடு தீப்பிழம்பும் தெரிந்து, புகைமூட்டம் அதிகமாகியிருக்கிறது.
இதனால் பயந்துபோன முத்தநாடு மந்துவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அடுத்த நாள் அந்தப் பகுதிக்குப் போய் பார்த்திருக்கிறார்கள். அங்கு நடந்திருந்த பயங்கரத்தை அவர்களது கண்களே நம்ப மறுத்துவிட்டன. அங்கே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மரங்கள் வேரோடு சரிந்து பூமிப்பிளவுக்குள் சிக்கியிருக்க, அதிலிருந்து அக்னி குண்டம் போல புகையும், நெருப்பும் வந்து கொண்டிருந்தது. அரண்டு போன இளைஞர்கள், அதுபற்றி பக்கத்து ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரும் இதை நேரில் பார்த்து விட்டு அதிர்ந்து போயிருக்கிறார்.
‘‘இது நிச்சயம் எரிமலைதான்!’’ என்று முடிவு கட்டிய அவர், ஊட்டியில் உள்ள தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் ஓட்டமாய் ஓடி வந்திருக்கிறார்கள். பூமிப்பிளவுகளில் இருந்து வெளிவரும் புகையை ஒருவித மிரட்சியுடன் பார்த்த அவர்கள், அது கக்கிய கரி, மண் ஆகியவற்றை எடுத்து ஆராய்ந்திருக்கின்றனர். அந்த மண் சுண்ணாம்புப் பவுடர் போலவும், கரிக்கட்டைகள் நிலக்கரி போலவும் இருப்பதைப் பார்த்து நிலைகுலைந்த அவர்கள், மாவட்ட கலெக்டருக்கும், புவியியல்துறை நிபுணர்களுக்கும் தகவல் அனுப்பினார்கள்.
அதையடுத்து, குன்னூரில் உள்ள புவியியல்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார். அவர் நடத்திய முதல் கட்ட ஆய்வில் தெளிவாக எதையும் அறிவிக்க முடியவில்லை. அந்தப் பாறை இடுக்குகளிலிருந்து கந்தகம் போன்ற ஒருவித துர்நாற்றம் வீசியதால், ஒரு தீக்குச்சியை நீட்டி பாலசுப்ரமணியம் ஆராய்ந்திருக்கிறார். அது ‘பக்’கென பற்றிக் கொண்டு ஜூவாலை விட்டு எரிந்திருக்கிறது. ஆகவே, அங்கு மீத்தேன் வாயு கசிந்து கொண்டிருக்கலாம்’ என்றார் பாலசுப்பிரமணியம்.
அதுமட்டுமல்ல! ஒருவேளை உயரழுத்த மின்கம்பிகள் மண்ணில் புதைந்திருந்து அதன் காரணமாகக்கூட பூமி இப்படி புகை கக்கலாம் என்று இரண்டு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். இதனால், அங்கு நின்ற இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் குழம்பிப் போனார்கள். ‘‘இது நிச்சயம் எரிமலைதான். மக்கள் பீதியடையக் கூடாது என்பதற்காகத்தான், இந்தத் தகவலை மறைக்கிறார்கள்’’ என அடித்துப் பேசினார்கள் அவர்கள்.
‘‘இங்குள்ள முத்தநாடு மந்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உசில்மேடு என்ற குன்று உள்ளது. அது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எரிமலையாக இருந்து அணைந்து போனது. அது நிச்சயம் ஒருநாள் மீண்டும் வெடித்து தீக்குழம்பைக் கக்கும். அதன் ஆரம்ப அறிகுறிதான் இது’’ என்றார் இயற்கை ஆர்வலர் ஒருவர். இதுபற்றி நிலவியல் நிபுணர்கள் உரிய விளக்கம் எதையும் சொல்லாததால், ‘இது எரிமலைதான்’ என்று மீடியாக்கள் எழுத, இந்தப் பகுதியில் பதற்றம் பந்தி போடத் தொடங்கி விட்டது.
இந்தச் செய்திகள் வெளியானதையடுத்து வெளிமாநில விஞ்ஞானிகள், சுற்றுலா வாசிகளின் படையெடுப்பு அங்கே தொடங்கி விட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டமும் களை கட்ட ஆரம்பித்து அவர்கள் மண் மாதிரிகளையும், கரிக்கட்டிகளையும் ஓடி ஓடிச் சேகரிப்பதும், ஆராய்வதுமாக இருந்தனர். நில வெடிப்புகளில் இருந்து வெளிவந்து விழும் கரிக்கட்டிகளும் சாம்பலும் படுபயங்கர சூடாக இருந்தன. அவற்றைத் தொடக்கூட முடியவில்லை. அத்துடன் அந்தப் பகுதி நிலம் வெப்பத்தால் தகதகத்தது. பலர் புகையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மயக்கமடைந்து விழுந்து விட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போலீஸ் காவல் போடப்பட்டு அந்நியர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா ஓர் அறிக்கை வெளியிட்டார், அதில் ‘‘நீலகிரியில் எரிமலை ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. பூமியில் ஏற்பட்ட இந்த மாறுதல் குறித்து புவியியில் ஆய்வு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.
‘‘சரி! நீலகிரியில் தோன்றியிருப்பது எரிமலையின் அறிகுறியா?’’ இப்படியரு கேள்வி நம் கழுத்தைப் பிடித்து உந்த, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் பேராசிரியர் மணிமாறனிடம் இதுபற்றிப் பேசினோம். அவர் அழுத்தம் திருத்தமாக சில விவரங்களைத் தந்தார்.
‘‘நீலகிரியில் எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. பூமியில் அடித்தட்டுகள் இரண்டு ஒன்றையன்று முட்டக்கூடிய இடத்தில்தான் எரிமலை ஏற்படும். ஆனால் நீலகிரி ஒரு மலைப்பகுதி என்பதுடன், அது நிலத்தட்டுகளுக்கு வெகு தூரத்தில் உள்ளது. ஆகவே அங்கு எரிமலை ஏற்பட நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை.
ஆனால், நீலகிரியில் இப்போது புகை வெளியாகிக் கொண்டிருக்கும் பகுதியில் நிலக்கரி, லிக்னைட் போன்றவற்றுக்கு முந்தைய கரிப்படிவம் இருக்க வாய்ப்புள்ளது. பூமியில் புதையும் மரங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் வெப்பத்தால் இறுகி நமக்கு நிலக்கரியாகக் கிடைக்கிறது. நிலக்கரிக்கு முந்தைய லிக்னைட் படிவமாகவும் நமக்குக் கிடைக்கிறது.
இப்படி பலகோடி ஆண்டுகளாக பூமிக்கு அடியில் இருக்கும் நிலக்கரி, லிக்னைட் போன்றவை எளிதில் தீப்பற்றக் கூடிய பாஸ்பரஸ், ஸல்ஃபர் போன்ற வேதியியல் பொருட்களை உருவாக்குகிறது. பூமிக்குள் கிடைக்கும் வெப்பத்தால் சிலவேளைகளில் இவை எரியவும் ஆரம்பிக்கின்றன. கோடை மழையின் போது பூமி நன்றாகச் சுருங்கி விரியும். அந்தத் தருணத்தில் எங்கே இடைவெளி கிடைக்கிறதோ அங்கே இவை பொத்துக் கொண்டு புகையாகவும், நெருப்பாகவும் தலைகாட்டுகின்றன.
இதை வைத்து, இந்தப் புகை வரும் இடத்துக்கு நேர் கீழே நிலக்கரி இருப்பதாகக் கருதிவிட முடியாது. நிலக்கரி, லிக்னைட் படிவங்கள் பல மைல்களுக்கு அப்பால் இருந்து பீறிட்டால் கூட புகையும் நெருப்பும் அந்தப் பகுதியில் தரைக்கு மேலே தலை நீட்ட முடியாமல் பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஓரிடத்தில் தலைகாட்ட வாய்ப்புள்ளது.
நிலத்துக்கு வெளியே இந்த மாதிரி வெளியாகும் புகையும், நெருப்பும் இரண்டு மாதங்கள் வரை கூட நீடிக்கும். அதன் பிறகு தானே அடங்கி விடும். பூமிக்குள் இப்படி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை, வெளிநாடுகளில் செயற்கைக் கோள் மூலம் படம்பிடித்துத் தெரிந்து கொள்கிறார்கள்!’’ என்றார் அவர். ஸீ
– கா.சு. வேலாயுதன்
Posted in Aravenu, Blue Mountains, Coimbatore, Disaster, Disasters, Dodabetta, Earth, Earthquake, Environment, Fire, Forest, Gudalur, industrialisation, Kattabettu, Kodanadu, Kotagiri, Kunjapanai, Land, Marlimundh, Mettupalayam, Mountain, Mudumalai, Munnamachi, Nature, Nilgiris, Ootacamund, Ooty, Padanthorai, Perar, Pollution, Protection, Recovery, Smoke, Srimadurai, ST, Thalaigunda, Thalaigundha, Thalaikunda, Thalaikundha, Thalaikuntha, theppakadu, Thorapalli, Threat, tribal, Ubrrani Hada, UDHAGAMANDALAM, Volcano, Warming, Water, WetLand, Wetlands | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 31, 2007
தேவை திரும்ப அழைக்கும் உரிமை!
பி. சக்திவேல்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் தவறிழைத்தாலோ அல்லது அவர்களது கடமையில் தவறினாலோ அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கூறியுள்ளார்.
இது மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவராலும் வரவேற்கக்கூடிய கருத்தாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமையானது ஒரு சில மக்களாட்சியின் சிறப்பு அம்சமாகும். மக்கள் பிரதிநிதிகள் சரிவரச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிரேக்க காலத்திலிருந்து இன்றுவரை பல நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.
நம் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் வாக்குக் கேட்டு வரும் பிரதிநிதிகளை மீண்டும் அடுத்த தேர்தலில்தான் நம்மால் பார்க்க முடிகிறது!
இந்த ஐந்து ஆண்டுகள் அவர்கள் சரிவரச் செயல்படவில்லை என்றாலும், லஞ்சம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டாலும் நாம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மேலும் நாடாளுமன்ற ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது அவசியமானது. அத்துடன்அத்தியாவசியமான உரிமையும் ஆகும்.
மேலைநாடுகளில் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள சில மாகாணங்களிலும் சுவிட்சர்லாந்து, ஜமைக்கா, வெனிசுலா போன்ற நாடுகளிலும் இந்த உரிமையானது வாக்காளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
2003-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மாநில ஆளுநர் சரியாகச் செயல்படவில்லை என்கிற காரணத்திற்காக பதவியிலிருந்து மக்களால் திரும்ப அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்
இந்தியாவில் சமீபகாலமாக இந்தக் கோரிக்கை எழுவதற்கான காரணங்கள்:
நம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லாதது; இந்த ஆண்டு தொடக்கத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக 11 எம்.பி.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டது; போலி பாஸ்போர்ட் மோசடியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; அதிக அளவு குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் சில மாநில சட்டப்பேரவைகளில் இடம்பெற்ற சம்பவங்கள்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் கிரிமினல் மற்றும் குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 136. இவர்களில் சுமார் 26 பேர் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இந்தச் சூழ்நிலையில்தான் சரிவர செயல்படாத மற்றும் குற்றம்புரிந்த பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையானது மேலும் வலுப்பெற்றுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை நடவடிக்கைகள் 73 மணி நேரம் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. தனிநபர் விமர்சனம் மற்றும் முக்கியமில்லாத பிரச்னைகளுக்காக அமளியை உருவாக்குவதால் மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் விவாதிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
பட்டினியை எவ்வாறு நம் நாட்டிலிருந்து நீக்குவது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் மே 5-ஆம் தேதி நடைபெற்றது. ஆரம்பத்தில் 6 உறுப்பினர்களோடு விவாதம் தொடங்கி மொத்தம் 12 உறுப்பினர்களோடு விவாதம் முடிவடைந்தது. இது மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் இரண்டு சதவீதம் மட்டுமே ஆகும். கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் ஆவர்.
அதேசமயம் மற்ற நேரங்களில் தங்களது கட்சித் தலைவரை கைது செய்தாலோ அல்லது அரசியல் லாபத்திற்காக ஏதேனும் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் எனில் அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகி விடுகின்றனர்.
எதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தேர்தல் நடத்தி நாம் நம்முடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றோம்? மக்களுக்காக, மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய உறுப்பினர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவை. அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மூலமாக இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையும் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் சரிவர செயல்படாத மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரத்தையும் அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த உரிமை வழங்கப்படுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும். பிரதிநிதிகள் மக்களுக்குக் கட்டுப்பட்டவராகவும் மக்களுக்குப் பொறுப்பானவர்களாகவும் மாறக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.
இதன் மூலம் மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை மற்றும் அதிக அளவில் பங்கேற்கக்கூடிய நிலை உருவாகும். பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பது நிரந்தரமல்ல; சிறப்பாகச் செயல்பட்டால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகும். இது நிச்சயமாக இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்தும்; மேலும் வலுப்படுத்தும்.
(கட்டுரையாளர்: இணைப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)
Posted in Assembly, Attendance, Carrot, Corruption, Courts, Criminal, Democracy, discussion, Elections, Fire, Governor, Impeach, Impeachment, Incentives, Judge, Justice, kickbacks, Law, Lok Saba, Lok Sabha, LokSaba, LokSabha, Member, Minister, MLA, MP, Order, Performance, Politics, Polls, Quality, Removal, Representation, Stick, Suspension, Vote, voter | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007
செய்தி வெளியீடு எண்.187 நாள் 30.3.2007
செய்தி வெளியீடு
31.3.2007(சனிக்கிழமை) அன்று பொது வேலை நிறுத்த நாளாக தமிழகத்தில் அனுசரிப்பதையொட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு கீடிநடிநடிநடிநக்கண்ட உத்தரவுகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
• பொது வேலை நிறுத்த நாளான 31.3.2007 (சனிக்கிழமை) அன்று, மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாள் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
• மாநில போக்குவரத்துக் கழகங்கள், நாட்டில் செயல்பட்டுவரும் இதர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாளன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
• பொது வேலை நிறுத்தத்திலிருந்து,
- தொலைபேசி,
- தொலைத் தொடர்பு,
- குடிநீர் விநியோகம்,
- பால் விநியோகம்,
- மின் விநியோகம்,
- தீயணைப்பு சேவை,
- செய்தித் தாள்கள்,
- மருத்துவமனைகள்,
- கருவூலங்கள்,
- பட்டியல் இன வங்கிகள் ஆகிய அத்தியவசியப் பணிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது,
• 31.3.2007 அன்று காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை , பேருந்துகளும், இரயில்களும், தமிழகத்தில் ஓடாது. 30.3.2007-அன்று புறப்படும் பேருந்துகள் அனைத்தும், 31.3.2007 அன்று அதிகாலை 5.00 மணிக்கு முன்பாக பாதுகாப்பான இடத்தை சென்றடைந்து நிறுத்தப்பட வேண்டும்.
• 31.3.2007 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விமானம் மற்றும் இரயில்களின் இயக்கம் இல்லாதவாறு நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
• மதுபானக் கடைகளும், வெடிமருந்து கிடங்குகளும், திரையரங்கங்களும், 31..3.2007 அன்று மூடப்பட்டிருக்கும்.
• பொது வேலை நிறுத்தம் முடிவுற்றதும், 31.3.2007-அன்று மாலை 6.00 மணிக்கு மேல் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
+++++
வெளியீடு இயக்குநர், செய்ய்ய்ய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை – 9
Posted in Alcohol, Bandh, Bus, Cinema, Communications, Electricity, Essential, Fire, Flights, Government, Govt, Hospital, job, Lazy, Media, milk, Movies, Newspapers, Official, Police, Politics, Railways, Services, Strike, Telecom, Telephone, Theater, TN, Trains, Transportation, Water Supply, Wine, Work, Worker | 2 Comments »
Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007
துயிலெழ வேண்டும் தொழிலாளர் துறை
எஸ். சம்பத்
தொழிலாளர்களுக்கும், தொழிலக நிர்வாகிகளுக்கும் இடையே பாலமாக, சமரச அலுவலராக, நீதித்துறை இணை அதிகாரத்துடன் செயல்பட்டு பிரச்சினைகளை விரைவாக தீர்த்துவைக்க வேண்டியது தொழிலாளர் நலத்துறை.
அந்த அமைப்பு இப்போது “”அதிகாரமற்ற அமைப்பு போல” தூக்கத்தில் இருப்பதால் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிவிட்டது.
தொழிலாளர் நலச் சட்டங்களிலேயே முக்கியமானது 1947-ல் இயற்றப்பட்ட தொழில் தகராறுகள் சட்டம்தான்.
தொழிலாளர்கள் தரப்பில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி எளிதாகப் பலன்களைப் பெற முடிகிறதா என்று பார்த்தால், இல்லை என்ற பதிலே விடையாகக் கிடைக்கும். இது கடந்த பத்தாண்டு காலமாக தமிழகத்தில் நிலவும் நிலைமை.
தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுவது, தொழிலகத்தில் அமலில் உள்ள நடைமுறைகளை முன் அறிவிப்பின்றி மாற்றுவது, தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்துவது, நிர்வாகத்துக்கும் தொழிலாளிக்கும் இடையே வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தொழிலாளியை வேலை நீக்கம் செய்வதாக இருந்தால் (தொழிலாளர் நலத்துறையிடம்) முன் அனுமதி பெறுவது, நியாயமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன் நிலுவையைக் கோருவது போன்றவை தொடர்பாகத்தான் அடிக்கடி தகராறுகள் எழுகின்றன.
சமீப கணக்கெடுப்புகளின்படி சென்னையில் மட்டும் கடந்த ஆண்டில் சுமார் 7,600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்தால் நூற்றுக்கணக்கில் வருகின்றன.
தொழில் தகராறு சட்டங்கள் பொருந்தி வருகிற நிறுவனங்களில் பணிபுரிகிற தொழிலாளர்கள், தங்கள் பிரச்சினைகளுக்காக நேரடியாக உயர் நீதிமன்றம் செல்ல முடியாது.
மாறாக, சமரச அலுவலர் முன்பு இப் பிரச்சினையை எழுப்பி அதில் சமரச முறிவு ஏற்பட்ட பின்னர், இதை நீதிமன்றத் தீர்ப்புக்கு விடலாமா, கூடாதா என்று அரசின் தொழிலாளர் துறை முடிவு செய்த பின்னரே வழக்கு தொடுக்க முடியும். அப்படியே தொடுத்தாலும் அந்த வழக்கில் தீர்ப்பு வர பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
அப்படியே தொழிலாளர் நீதிமன்றமோ, தீர்ப்பாயமோ ஒரு தீர்ப்பை தொழிலாளருக்குச் சாதகமாக வழங்கிவிட்டாலும், உடனடியாக நிர்வாகத்தின் தரப்பில் அதற்கு மேல் முறையீடு செய்யப்பட்டு நியாயம் கிடைப்பது மேலும் தாமதப்படுத்தப்படும்.
நடுநிலையான தொழிலாளர்துறை ஆணையர்கள் பணியில் இருந்தபோது தொழிலாளி மீதும் நிர்வாகத்தின் மீதும் தமது அதிகாரத்தை சரியாகப் பிரயோகப்படுத்தும் நிலைமை முன்னர் இருந்தது. அவற்றை நிர்வாகங்களும் ஏற்கும் நிலைமையும் இருந்தது.
இப்போது தொழிலாளி தரப்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டால், எதிர் மனுதாரராகிய நிர்வாகத்திடம் ஒருமுறைக்கு இருமுறை கேட்டுக் கொண்ட பிறகே வழக்கை விசாரணைக்கு எடுப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யப்படுகிறது.
இதையெல்லாம் மீறி ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று பல வருடங்கள் வாதிட்ட பிறகு, “”அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று தீர்ப்பு வருவது தொழிலாளர்களுக்கு பேரிடியாக அமைகிறது. சமீப காலத்தில் இப்படிச் சில தீர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.
அரசு போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 23 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995-ல் பொது நிலையாணைகள் உருவாக்கி சான்றிடப்பட்டது. அதில் சில அம்சங்களை எதிர்த்து நிர்வாகமும், தொழிற்சங்கங்களும் தனித்தனியே மேல்முறையீடு செய்தன.
கடந்த 11 வருடங்களாக தொழிலாளர் துறையால் அவை விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வராததால், போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 34 ஆண்டுகள் ஆனபிறகும் பொது நிலையாணை ஏற்படாத அவல நிலை தொடர்கிறது.
2001-ல் போனஸ் தொடர்பான வழக்கு நிலுவையிலிருக்கும்போது போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் அனைத்திலும் சுமார் 600 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அது தொடர்பாக, தொழில் தகராறு சட்டப்பிரிவு 33 (1) (ஏ)-ன்படி வேலை நீக்கத்துக்கு ஒப்புதல் கேட்ட மனுக்கள் மீது இன்னமும் முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. இதனால் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்த உதாரணம் அரசுத்துறை நிறுவனத்தைப் பொறுத்தது. தனியார் துறை தொடர்பாக எப்படி இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
தொழிலாளர் நலத்துறையை தட்டி எழுப்பி, நிலுவையிலிருக்கிற வழக்குகளை முடித்து வைத்தால் மட்டுமே, “”தொழில் தாவா சட்டம்” இயற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.
(கட்டுரையாளர்: தொழிற்சங்க நிர்வாகி).
Posted in Benefits, Biz, Commerce, Communism, Communist, employee, Employer, Employment, Factory, Finance, Fire, HR, Human Resources, Industry, Insurance, Jobs, Judge, Justice, Labor, Labour, Law, Layoff, Management, Minister, Ministry, Order, Permanent, Strike, Temporary, Union, Wages, workers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007
தொலைத் தொடர்புத்துறை ஆணையால் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இழப்பு!
மும்பை, மார்ச் 9: தங்கள் துறையிடம் நேரடியாகப் பதிவு செய்து கொள்ளாத, வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனங்களின் (பி.பி.ஓ.) இன்டெர்நெட் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துவிடுமாறு தொலைத் தொடர்புத்துறை பிறப்பித்த உத்தரவு காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படும் ஆபத்து நேரிட்டிருக்கிறது.
இந் நிலை நீடித்தால், இந்திய நிறுவனங்களிடம் “”அயல்பணி ஒப்படைப்பு” (அவுட்-சோர்சிங்) சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு நாடுகளை நாடிச் செல்லக்கூடிய ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு சிறிய பிரச்சினைக்காக, மிகப்பெரிய தண்டனை நடவடிக்கையை துறை அதிகாரிகள் மின்னல் வேகத்தில் எடுத்துள்ளனர். இதன் விளைவுகள் மிகப் பெரிதாக இருக்கும் என்று தோன்றுகிறது.
நடவடிக்கை ஏன்? கோல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பி.பி.ஓ. நிறுவனம், அமெரிக்காவில் வசிக்கும் போதைப்பொருள் உபயோகிப்பாளர்களுக்காக போலியான மருந்துச் சீட்டுகளை ஆன்-லைனில் தயாரித்து அனுப்பியதாம். இது தொலைத்தொடர்புத்துறையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. உடனே அந்த நிறுவனத்தின் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
அதிகாரிகள் இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், இதே போல தங்களிடம் முறையாகப் பதிவு செய்யாமல் இன்டெர்நெட் தொலைபேசி இணைப்புகள் மூலம் அயல்பணி சேவை செய்யும் அனைத்து நிறுவனங்களின் இணைப்புகளையும் துண்டித்துவிடுமாறு உத்தரவிட்டது. இத்தகைய நிறுவனங்கள், இன்டெர்நெட் சேவை அளிக்கும் சிறு நிறுவனங்கள் மூலம் இந்த இணைப்புகளைப் பெற்று தொழில் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய பி.பி.ஓ. நிறுவனங்கள் இப்படி, தொலைத்தொடர்புத் துறையிடம் பதிவு செய்யாமல் பணிபுரிந்து வருகின்றன. ஒவ்வொன்றிலும் 50 முதல் 100 பேர் வரை நேரடியாக பணி புரிகின்றனர். இவர்களைத் தவிர இதில் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை பல மடங்கு. இனி இவர்கள் அனைவரும் வேலை இழப்பர்.
இன்டெர்நெட் தொலைபேசி இணைப்பு தொடர்பாக அரசு இன்னமும் தெளிவான கொள்கையை வகுக்கவில்லை என்று பி.பி.ஓ. வட்டாரங்கள் கூறுகின்றன.
அதில் இறுதி நிலை என்ன என்று தெரியும்வரை, துறையிடம் நேரடியாகப் பதிவு செய்வதைத் தவிர்த்து, இச்சேவையை அளிப்பவர்களிடம் பெற்று, அயல்பணி வேலையைச் செய்வதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு பி.பி.ஓ. நிறுவனங்களுடன் கால்-சென்டர்களையும் பாதிக்கும். கால் சென்டர்கள் பாதிக்கப்பட்டால் அரசுக்கு ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை வருவது அறவே நின்றுவிடும்.
பதிவு செய்யாமல் இருப்பதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், படிப்படியாக அதைச்செய்ய துறை அவகாசம் அளித்திருக்க வேண்டும், இப்படி இணைப்பைத் துண்டிப்பது நல்லதல்ல என்று வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
Posted in Biz, BPO, Business, Business Process Outsourcing, Calcutta, Comapny, Customer, Downturn, employees, Employer, Employment, Fire, Foreign, Government, Guidelines, Internet, IP, job, Jobless, Law, Layoff, Loss, Order, Outsourcing, Permission, Phones, Policy, Registration, Restriction, Sanjay Kedia, service, Telephony | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007
37 போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதால் அரசுக்கு ரூ.2091 கோடி இழப்பு
புது தில்லி, மார்ச் 9: இந்திய விமானப்படையைச் சேர்ந்த 37 போர் விமானங்கள் 2003 ஏப்ரல் 1 தொடங்கி, 2007 மார்ச் 1 வரை விழுந்து நொறுங்கியுள்ளன. இதனால் அரசுக்கு ரூ.2,091 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி இதை மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.
அவர் தெரிவித்த இதர தகவல்கள் வருமாறு:
ரஷியாவின் கிராஸ்னபோல் நிறுவனத்திடமிருந்து ரூ.520 கோடி கொடுத்து வாங்கிய 3,000-க்கும் மேற்பட்ட பீரங்கிக் குண்டுகள் திருப்திகரமாக இல்லை.
மலைப் பகுதிகளில் இவற்றைப் பயன்படுத்தி பார்த்தபோது, எதிர்பார்த்தபடி அவை செயல்படவில்லை. இந்த பீரங்கிக் குண்டுகளுக்கு வழிகாட்டும் லேசர் கருவிகளுக்கும் சேர்த்து ரூ.522.44 கோடி தரப்பட்டிருக்கிறது.
இந்த குண்டுகளின் திறனைக் கூட்டவும், அவற்றின் ஆயுளை நீட்டிக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சப்ளையரிடம் கூறப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே நாம் வாங்கியுள்ள “மிக்-29′ ரக போர் விமானங்களின் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்துவதற்கான தொழில்நுட்ப திட்டம் ரஷியாவின் மிக் நிறுவனத்திடம் தரப்பட்டிருக்கிறது. இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.
126 போர் விமானங்கள்: இந்திய விமானப் படைக்காக 126 போர் விமானங்களை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்தவகை போர் விமானத்தை வாங்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
எதை வாங்குவதாக இருந்தாலும், அதை இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கு அந்த நிறுவனம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது உடன்பாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும்.
ராணுவத்தின் தரைப்படைப் பிரிவை நவீனப்படுத்துவதும் அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும்தான் 2002-07 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு திட்டம். அத்துடன் எந்தெந்த சாதனங்கள் அல்லது கருவிகள் அறவே இல்லையோ அவற்றை உடனே வாங்குவதும் முக்கிய லட்சியமாக இருக்கும்.
11-வது ஐந்தாண்டு திட்ட காலத்துக்கான பாதுகாப்புத் துறை திட்டம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதமே அளிக்கப்பட்டுவிட்டது.
நிதி அமைச்சகம்தான் அதைப் பரிசீலித்துவிட்டு ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டும்.
ராணுவச் செலவு வீணாகலாமா?
இரா. இரத்தினகிரி
இந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், நமது நாட்டின் பாதுகாப்புச் செலவினங்களுக்கு ரூ.96 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ராணுவத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி, கடற்படைக்கு ரூ.7 ஆயிரம் கோடி, விமானப்படைக்கு ரூ. 10 ஆயிரம் கோடி, புதிய நுண்கருவிகள், சாதனங்கள், விமானங்கள் ஆகியவற்றை வாங்க ரூ.42 ஆயிரம் கோடி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மேம்பாட்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஆகியவை அடங்கும்.
நமது நாட்டின் பாதுகாப்புக்காக, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ஆண்டுக்கு, ஆளுக்கு ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது என்பது இதன் பொருளாகும்.
இச்செலவு நமது நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு மட்டுமன்றி, காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, இன்னும் பயனுடையதாக அமையவேண்டியதன் அவசியம் குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பு என்பது ராணுவத்தின் பொறுப்பு மட்டும் அல்ல. குடிமக்கள் அனைவருடைய கடமையும் ஆகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானாலும் அதை நிறைவேற்ற இயலாத நிதிப் பற்றாக்குறை அரசுக்கு இருந்து வருகிறது.
இப்போது ராணுவத்தில் பணியாற்றி வருவோரில் மிகத் தேவையானவர்களை மட்டும் வைத்துக்கொண்டு, பத்தாண்டுகள் பணி முடித்த இதர வீரர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து விடுவிக்கலாம். அரசு மீண்டும் எப்போது அழைத்தாலும் உடனடியாக ராணுவ சேவைக்குத் திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்களை அனுப்பிவைக்க வேண்டும். இதனால் ஏற்படும் காலி இடங்களில் பல லட்சம் புதிய இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்து பணியாற்றச் செய்யலாம். இதன் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பு அளவில் நம் ராணுவம் வலிமை பெறும்.
ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விடுவிக்கப்பட்டு வெளியில் வருவோரில் கல்வித் தகுதி உடையவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து கல்வித்துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் மத்திய, மாநில அரசுத் துறைகளில் மதிப்பு ஊதியத்தில் வேலைக்கு நியமிக்கலாம்.
அவர்கள் ஆசிரியர்களானால் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் இல்லாத சிறந்த மாணவர்களை உருவாக்க இயலும். நமது நாட்டின் ஆறு லட்சம் கிராமங்களில் ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலான மக்கள் மனத்தளவிலும் உடல் அளவிலும் பலவீனமாக இருந்து வருவதை அறியலாம். அவர்களை தன்னம்பிக்கையும் மனஉறுதியும் கொண்டவர்களாக உருவாக்கும் பொறுப்பை முன்னாள் படை வீரர்களுக்கு அளிக்கலாம்.
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பது என்பது எவ்வளவு கடினமான வேலை என்பது அந்தத் தேர்வுக்குப் போய் வந்தவர்களுக்குத்தான் தெரியும். உடல் திறன் தேர்வுக்கு நூறுபேர் வந்தால் அதில் ஒருவரே தேர்வு செய்யப்படுவார். அப்படித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏராளமான பணம் செலவிடப்படுகிறது.
அவர்கள் பெற்ற பயிற்சி, நாட்டு மக்களை எதிரிகளிடமிருந்து, வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து பாதுகாப்பது என்ற அளவில் முடிந்துவிடக் கூடாது. நாட்டு மக்களைக் கடமையுணர்ச்சி உள்ளவர்களாக மாற்றும் முக்கியப் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது. பாதுகாப்புத் துறைக்குச் செலவிடப்படும் ரூ.96 ஆயிரம் கோடியும், “மன்னர்களின் பட்டத்து யானை அலங்கரிப்பு’ போல இருந்துவிடக் கூடாது.
பிற நாடுகளில், ராணுவத்தினர் காடு வளர்ப்பதற்கும், பாலைவனங்களை சோலைவனங்களாக மாற்றுவதற்கும், கடற்கரையோரங்களில் அலையாற்றிக் காடுகளை வளர்ப்பதற்கும், நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கும், பாலங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றனர்.
இத்தகைய நடைமுறையை நமது நாட்டிலும் அமல்படுத்த வேண்டும். கட்டாயப் பணி முடித்து விருப்ப ஓய்வில் வரும் ராணுவ வீரர்களை கிராமப்புற நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தலாம். இதன்மூலம் கிராமங்கள் அபரிமித வளர்ச்சியை எட்ட முடியும்.
கடற்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுவோர், கடல் வளங்களை கடற்கரையோர கிராம மக்கள் பயன்பெற பயிற்றுவிக்கலாம். கப்பல் கட்டும் தளங்களிலும் அவர்களுக்குப் பணியாற்ற வாய்ப்பளிக்கலாம்.
தரிசு நில மேம்பாடு, மரம் வளர்ப்பு, குளம் வெட்டுதல், மீன் வளர்ப்பு போன்ற நிர்மாணப் பணிகளுக்கும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன்மூலம் பாதுகாப்புத் துறைக்கான நிதிச் செலவின் முழுப் பயனும் கிராமங்களைச் சென்றைடையும். இதுகுறித்து மத்திய அரசு சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.
(கட்டுரையாளர்: நிறுவனர், சிந்தனையாளர் மன்றம், தஞ்சாவூர்).
========================================================
ராணுவத்திலிருந்து “சீட்டா’, “சேட்டக்’ ரக ஹெலிகாப்டர்களை விலக்க முடிவு
புது தில்லி, மார்ச் 22: இந்திய ராணுவப் பணியிலிருந்து இலகு ரக வகையைச் சேர்ந்த சீட்டா மற்றும் சேட்டக் ஹெலிகாப்டர்கள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன.
இத்தகவலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, புதன்கிழமை மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: 1960 மற்றும் 1970-ம் ஆண்டு வகையைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இல்லாததால் அவற்றை விலக்கிக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்திய ராணுவத்துக்கு ரூ.3600 கோடி மதிப்பில் 197 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
உலகில் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் இரு பெரிய நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன.
————————————————————————————————–
“மிக்-21′ போர்விமானம் விழுந்து நொறுங்கியது?
ஜம்மு, மே 23: இந்திய விமானப்படையின் மிக்-21 ரக போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 2 விமானிகளின் நிலை குறித்த விவரம் தெரியவில்லை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் விமானதளத்தில் இருந்து வழக்கமாக மேற்கொள்ளப்படும் போர் பயிற்சிக்காக மிக்-21 ரக விமானம் புறப்பட்டு சென்றது. ஆனால் ரியாசி மாவட்டம் வசந்த்கல்-மஹோர் மலைப்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானக் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது.
இதனால் விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. விமானப்படையினர் அப்பகுதியில் விபத்துக்குள்ளான விமான பாகங்கள் மற்றும் விமானிகளை தேடி வருகின்றனர்.
Posted in Accidents, Air Force, Aircrafts, Airforce, AK Antony, Allocations, Analysis, Antony, Arms, Army, Attacks, Backgrounder, Biz, Bofors, Bombs, Budget, Business, Cavalry, Cheeta, Cheetah, Chetak, Chethak, Chopper, Commerce, Company, crash, Death, Defense, Economy, Expenses, Fighter, Finance, Fire, Flights, Funds, Growth, Helicopter, HR, Human Resources, Imports, Infantry, J&K, Jammu, Jets, Kashmir, Loss, Maintenance, MIG, MiG-29, Military, Navy, Planning, Procurements, Rathnagiri, Ratnagiri, Rural, Russia, Safety, Sea, Security, Soviet, Tanks, Udhampoor, Udhampur, USSR, Uthampoor, Uthampur, Villages | 1 Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007
லண்டன் டைரி: நெருப்பின் சின்னம்!
இரா. முருகன்
நினைவுச் சின்னத் தெருவும் மீன் தெருவும் சந்திக்கிற தெருவில் இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். எதிரே நீட்டி நிமிர்ந்து நிற்கிறது 1666-ம் வருடத்து லண்டன் தீவிபத்தின் நினைவாக எழுப்பப்பட்ட கோபுரம். அறுபத்தொன்று மீட்டர் உயரம். அருகே, துல்லியமாகச் சொல்லவேண்டுமென்றால், கோபுரத்திலிருந்து அதே அறுபத்தொன்று மீட்டர் தொலைவில் தீ தொடங்கிய இடமான புட்டுச்சந்து ரொட்டிக்கடை இருந்த இடம் சிமென்ட் கோபுரத்தின் உச்சியில் நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. நிஜ நெருப்பு இல்லை. கோபுரக் கலசத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் சிற்பம்.
“”மேலே போகமுடியுமா?” வாசலில் காவலரை விசாரிக்கிறேன். “”ரெண்டு பவுண்ட் டிக்கெட் எடுத்து, முன்னூத்துப் பதினோரு படி ஏறினா, உங்க மாமா பேரு பாப்” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கிறார் அவர். அத்தனை படி ஏறி மேலே போனால் என் மாமா பெயர் ஏன் திடீர் என்று மாறவேண்டும் என்று குழப்பத்தோடு அவரைப் பார்க்கிறேன். “”Bob’s your uncle” என்ற பிரிட்டீஷ் சொலவடைக்கு, “அம்புட்டுத்தான், ரொம்ப ஈஸி’ என்ற அர்த்தம் என்று அப்புறம்தான் நினைவு வருகிறது.
மூச்சு வாங்க, அந்தக் குறுகிய படிகளில் ஏற ஆரம்பிக்கிறேன். மனம் இன்னும் பற்றி எரிந்துகொண்டிருக்கும் லண்டன் மாநகர நெருப்பிலேயே பிடிவாதமாகப் படிந்து கிடக்கிறது. நான்கு நாள் தொடர்ந்து எரிந்த பெருந்தீ அது.
பிரெஞ்சுக்காரர்கள்தான் தீவைத்ததாக வதந்தி பரவ, எதிர்ப்பட்ட பிரெஞ்சுக்காரர்களை எல்லாம் அடித்து உதைத்துச் சிறையில் வைத்தார்கள். கடியாரத் தயாரிப்பாளரான ஒரு பிரெஞ்சுக்காரரைச் சித்தரவதை செய்து அவர்தான் புட்டுச் சந்தில் தீவைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவைத்து, பகிரங்கமாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றினார்கள். அந்த அப்பாவி மனிதர் தீவிபத்து தொடங்கி இரண்டு நாள் கழித்துதான் லண்டன் நகருக்குள் நுழைந்தார் என்ற விஷயம் அப்புறம்தான் தெரியவந்தது.
தீ பிடித்த மூன்றாம்நாள் லண்டன் பங்கு சந்தை, பக்கத்து சீப்சைட் பகுதியில் பெரிய கடைகள் இருந்த அங்காடி. நாடு முழுக்க தபால் போக்குவரத்தை நடத்தும் ஊசி நூல் தெரு தபால் ஆபீஸ் என்று வரிசையாகத் தீக்கிரையாகிக் கொண்டிருந்தன. பிரம்மாண்டமான செயிண்ட் பால் தேவாலயத்திலும் தீ நுழைந்தது. வீடு இழந்து ஓடி வந்த குடிமக்கள் பலரும் எரியும் நெருப்பிலிருந்து காப்பாற்றி எடுத்து வந்த மூட்டை முடிச்சுகளோடு அங்கே தஞ்சம் புகுந்திருந்தார்கள். முக்கியமாக, தேவாலயப் பக்கத்துத் தெருக்களில் இருந்த புத்தக விற்பனையாளர்கள் ஸ்டாக்கில் இருந்த புத்தகம் முழுவதையும் மாதா கோவிலுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள். காகிதம், துணி என்று இருந்த இந்தக் குவியலில் தீ பரவி, ஒரு மணி நேரத்தில் கோவிலின் உலோகக் கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. ஜனக்கூட்டம் தேம்ஸ் நதிக்கரைக்கு ஓட, கோவில் கூரையிலிருந்து ஈயம் உருகித் தெருமுழுக்க உலோக ஆறு. தேவாலயத்துக் கருங்கல் பாளங்களும் வெடித்துச் சிதறி நாலு திசையிலும் விழ, உக்கிரமான உஷ்ணத்தோடு நெருப்பு முன்னேறிக் கொண்டிருந்தது.
இந்தக் களேபரத்துக்கு நடுவிலும் ஊசிநூல் தெரு அரசாங்க அச்சகத்தில் மும்முரமாக அச்சுக்கோர்த்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கம் வெளியிடும் வாராந்திர செய்தித்தாளான “லண்டன் கெசட்’ பத்திரிகை அந்த வாரம் அச்சுக்குப் போகவேண்டிய தினம். துரைகள் மற்றும் சீமாட்டிகளின் போக்குவரத்து, வீட்டு விசேஷங்களை ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்ல நடத்தப்பட்ட பத்திரிகை லண்டன் கெசட். எந்தத் துரை எந்தச் சீமாட்டியை எப்போது கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார். கல்யாணமான சீமாட்டிக்குக் குழந்தை பிறந்த விவரம், காலமானார் பட்டியலில் புதிதாகச் சேர்ந்த மேட்டுக்குடிப் பிரமுகர்கள் பற்றிய தகவல் என்று தலைபோகிற செய்திகளைப் போட்டு நிரப்பி, கடைசிப் பக்கத்தில் ஓரமாக “லண்டன் மாநகரத்தில் தீவிபத்து. ஊர் முழுக்க எரிந்து கொண்டிருக்கிறது’ என்று சம்பிரதாயமாக இரண்டு வரி சேர்த்து அச்சடித்து இறக்கி எடுத்துக்கொண்டு பத்திரிகையின் ஆசிரியரும் மற்ற ஊழியர்களும் வெளியே ஓடும்போது, பத்திரிகை ஆபீஸ் வாசலில் தீ பரவிக்கொண்டிருந்தது. சுடச்சுட செய்திகளைத் தருவது 1666-லேயே தொடங்கிவிட்டது என்பது நினைவில் வைக்கவேண்டிய சங்கதி…
மாநகரத் தீயணைப்புப்படை தீயணைப்பு முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி அடைய, சார்லஸ் மன்னன் ராணுவத்தை மாநகராட்சிக்கு ஒத்தாசையாக அனுப்புவதாகச் சொன்னபோது நகரப் பிரமுகர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். அரசவை இருந்த வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இருந்த வொய்ட்ஹால் பகுதிகளுக்கும் தீ பரவும் அபாயம். இனியும் தாமதித்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று அதிரடி நடவடிக்கை எடுத்தான் அரசன். ராணுவம் நகருக்குள் நுழைந்து, தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சார்லஸ் மன்னன், “வாய்யா ஜேம்ஸ்’ என்று அவன் சகோதரன் ஜேம்ûஸயும் கூட அழைத்துக்கொண்டு போய் நேரடியாக மேற்பார்வை செய்ய ஆரம்பித்தான். அவன் கட்டளைப்படி, லண்டன் டவரில் ஏகப்பட்ட வெடிமருந்தைக் கொளுத்தித் தீயைத் தீயால் அணைக்க எடுத்த நடவடிக்கை பெருவெற்றியில் முடிந்தது.
பதிமூன்றாயிரம் வீடுகள், எண்பது தேவாலயங்கள், கடைவீதிகள், அரசாங்க அலுவலகங்கள் என்று கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் லண்டன் நகரை அழித்துவிட்டுத் தீ அடங்கியபோது வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இவற்றோடு நகரை ஒட்டி இருந்த கீழ்த்தட்டு மக்களின் இருப்பிடங்கள் மட்டும் மிச்சம் இருந்தன. அடுத்த எட்டு ஆண்டுகளில் அந்த அரசன் குடிமக்களின் ஒத்துழைப்போடு நகரத்தை திரும்ப உருவாக்கினான். பழைய அமைப்பிலேயே தெருக்கள், மாதாகோவில்கள் இவற்றோடு செயிண்ட் பால் தேவாலயமும் திரும்பக் கம்பீரமாக எழுந்து நின்றது. இந்தத் தேவாலயமும் தீவிபத்தை நினைவுகூர எழுப்பிய நினைவுச் சின்னமும் கிறிஸ்டோஃபர் ரென் என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் கட்டப்பட்டவை.
நினைவுச் சின்னத்தின் கடைசிப்படி ஏறிக் கோபுர உச்சிக்குப் போய் மூச்சுமுட்ட நிற்கிறேன். கிழக்கே லண்டன் டவர், டவர் பாலம், நங்கூரம் பாய்ச்சி நிற்கும் எச்.எம்.எஸ் பெஸ்பாஸ்ட் கப்பல் எல்லாம் பொம்மை மாதிரி தெரிகின்றன. மேற்கே செயிண்ட் பால் தேவாலயம் வெயிலில் பிரகாசிக்கிறது. என் பக்கத்தில் பைனாகுலரை வைத்துச் சுற்றிலும் உன்னிப்பாகப் பார்த்தபடி இருந்த முதியவர் என்னைப் பார்த்து, “”இந்தியாவா?” என்று கேட்கிறார். பாகிஸ்தான்காரர் அவர். கணிதப் பேராசிரியர். அடுத்த வருடம் ரிடையர் ஆகிச் சொந்த ஊர் லாகூரில் செட்டில் ஆக உத்தேசமாம். “”எப்படி இருக்கு நம்ம பக்கமெல்லாம்?” என்று அந்நியோன்னியத்தோடு கேட்கிறார். சென்னைக்கு வெகு அருகில் லாகூர் இல்லை என்பதை அவருக்கு அன்போடு நினைவூட்டுகிறேன். “”யார் சொன்னது? ஒரு காலத்துலே, அதாவது 1929-ல் லாகூருக்கும் மேட்டுப்பாளையத்துக்கும் நடுவிலே ரயில் ஓடினது தெரியுமா? இப்ப உங்க சென்னைக்கும் தில்லிக்கும் இடையே ஓடுற கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்தான் அது”. பாகிஸ்தானியப் பேராசிரியர் சொல்கிறதை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு கேட்கிறேன். லாகூரில் இருந்த பிரிட்டீஷ் துரைகள் மேட்டுப்பாளையத்தில் இறங்கி ஊட்டிக்குப் போக ஏற்படுத்தியதாம் அந்த ரயில் பாதை.
சென்னையிலிருந்து லாகூருக்கு ரயிலில் போவதாகக் கற்பனை செய்துகொண்டு மெல்லப் படி இறங்குகிறேன் நான்.
Posted in Dinamani, Era Murugan, Era Murukan, Fire, Guide, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London Diary, Memorial, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, Tourist, Travelogue, UK | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006
ஐ.டி. காரிடார் சாலைச் சந்திப்புகளில் பிரம்மாண்டமான பஞ்சபூத சிற்பங்கள்
பா. ஜெகதீசன்
சென்னை, அக். 23: சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்கி மாமல்லபுரம் வரை அமைக்கப்படும் ஐ.டி. காரிடார் சாலையின் முக்கிய சந்திப்புகளில் பஞ்சபூதங்களைச் சித்திரிக்கும் பிரம்மாண்டமான சிற்பங்கள் இடம் பெறுகின்றன.
திருவான்மியூர் பகுதியில் “அக்னி‘யை உருவகப்படுத்தும் வகையிலான அழகிய சிற்பம் உருவாக்கப்படுகிறது.
ஐ.டி. காரிடார் சாலை அமைக்கும் பெரும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மத்திய கைலாஷில் இருந்து சிறுசேரி வரை 20 கி.மீ. தூரத்துக்கு ரூ.205 கோடி மதிப்பீட்டுச் செலவில் சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. இச்சாலை 10 வழித்தடங்களைக் கொண்டதாக இருக்கும்.
இச்சாலையில் சோழிங்கநல்லூரில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்குச் செல்ல சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணியும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிறது.
2-வது கட்டமாக சிறுசேரியில் இருந்து மாமல்லபுரம் வரை 25 கி.மீ. தூரத்துக்கு சூப்பர் சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.150 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 சந்திப்புகளில்…: இச்சாலையின் 5 சந்திப்புகளில் தலா ஒன்று வீதம் மொத்தத்தில் 5 பஞ்சபூதங்களைச் சித்திரிக்கும் பிரம்மாண்டமாண சிற்பங்கள் நிறுவப்படுகின்றன என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரோஹித் மோதி, துணைத் தலைவர் கே. மால்மருகன் ஆகியோர் தெரிவித்தனர்.
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை பஞ்சபூதங்கள்.
இவற்றில் நெருப்பை உருவகப்படுத்தும் வகையில், பிரம்மாண்டமான வண்ண ஜுவாலைகளைப் போல காட்சி தரும் 30 அடி உயர சிற்பம் திருவான்மியூர் பகுதி சந்திப்பில் உருவாக்கப்படுகிறது. கான்கிரீட்டில் இச்சிற்பம் உருவாக்கப்படுகிறது.
இதற்கு ரூ.30 லட்சம் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல சிறுசேரி பகுதியில் “நீரை’ உருவகப்படுத்தும் சிற்பம் உருவாக்கப்படுகிறது.
சுரங்கப் பாதைகள்: தரமணி -சிறுசேரி இடையேயான 17 கி.மீ. தூரத்தில் முக்கிய இடங்களில் பாதசாரிகளுக்கான நவீன சுரங்கப் பாதைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Posted in Agni, Air, Arts, Chozhinganallur, Earth, East Coast Road, Exhibits, Fire, Kizhakku Kadarkarai Saalai, Madhya Kailash, Mahabalipuram, Mathya Kailaash, Sculpture, Siruseri, Sky, Sozhinganalloor, Statues, Thiruvanmiyur, Water | Leave a Comment »