Orissa temple bars Dalits’ entry
Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006
ஒரிசா மாநிலத்தில் தடையை மீறி கோவிலில் நுழைய தலித்துகள் முடிவு
புவனேஸ்வரம், நவ. 2-
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே உள் ளது. கரீடகார் கிராமம் இங்குள்ள ஜெகனாதர் கோவிலில் பல ஆண்டுகளாக தலித்துகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங் குள்ள உயர் அதிகாரிகள் தலித்துகள் கோவிலில் நுழைந்தால் புனிதத்தன்மை கெட்டு விடும் என்று சொல்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக் கோவிலுக்கு தலித் இன சிறுவன் ஒருவன் சாமி கும்பிட சென்றான். அப்போது அங்கிருந்த அர்ச்சகர்கள் அந்த தலித் சிறுவனை அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அவனை கோவிலுக்கு வெளியே தூக்கி வீசிவிட்டு சென்றனர்.
அர்ச்சகர்களால் கடுமை யாகத்தாக்கப்பட்ட அவனுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோவிலுக்குள் சாமிகும்பிட சென்ற தலித் சிறுவன் தாக் கப்பட்ட சம்பவம் சுற்று வட்டார கிராமங்களில் காட் டுத்தீயாய் பரவியது. உயர்சாதி அர்ச்சகர்களின் காட்டு மிராண்டித் தாக்கு தலை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தினார்கள்.
இந் நிலையில் அப்பகுதியில் உள்ள அம்பேத்கார் லோகியா விகார் மஞ்ச்முடுளி இயக்கத்தை சேர்ந்தவர்கள் 19-ந்தேதி ஜெகனாதர் கோவிலில் தடையை மீறி உள்ளே நுழைய முடிவு செய்துள்ளனர். இதற் காக ஏராளமான தலித் இளைஞர்களை திரட்டி வரு கிறார்கள்.
இப் போராட்டத்திற்கு அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தடையை மீறி கோவிலில் நுழையும் தலித்துகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறும்போது, பல ஆண்டு காலமாக தலித்துகள் ஜெகனாதர் கோவிலுக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உள்ளே நுழைந்தால் கோவிலின் புனிததன்மை கெட்டுப்போவதுடன் நாங்கள் இதுநாள்வரை காத்து வந்த கோவிலின் பாரம்பரியமும் பெருமையும் அழிந்து விடும் என்றார்.
தலித்துகள் உயர்சாதி அர்ச்சகர்கள் இடையே மோதல் உருவாகி இருப்பதால் அக் கோவிலைச்சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
bsubra said
சோத்துக்கட்சி: முதல்ல மனுசங்களா இருங்கப்பா