Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘crimes’

Sex allegations: Malaysia’s Anwar Ibrahim seeks refuge at Turkish embassy after sodomy claim – Denounces new sex charges as ‘fabrication’

Posted by Snapjudge மேல் ஜூன் 30, 2008

முன்னாள் மலேஷியப் பிரதமர் துருக்கியத் தூதரகத்தில் தஞ்சம்

முன்னாள் மலேஷியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் கோலம்பூரிலுள்ள துருக்கியத் தூதரகத்தில் அடைக்கலம் தேடியுள்ளார்.

தகாத பாலுறவுக் குற்றச்சாட்டுகளுடன் அவர் மீது புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் தன்னைப் பிடித்து தடுத்து வைத்திருக்கும் சமயத்தில் ஏற்படக் கூடிய தனக்கு ஆபத்து குறித்து தான் அஞ்சுவதாக பி.பி.சி.யிடம் தெரிவித்த அன்வர் அவர்கள், தான் துருக்கியிடம் அரசியல் தஞ்சம் எதுவும் கேட்கவில்லை என்றும், மாறாகத் தன்னுடைய பாதுகாப்புக்கு மலேசிய அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதத்தையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தன் மீது மீண்டும் அபாண்டமாகப் பழிசுமத்த அரசாங்கம் குற்றச்சாட்டுகளைச் சோடிக்கிறது என்றார்.

ஆனால் மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி அவர்கள் அதை மறுக்கிறார்.

1998இல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட அன்வர் அவர்கள் முறையற்ற பாலுறவு மற்றும் ஊழல் தொடர்பாக ஐந்தாண்டு சிறைவாசம் கண்டவர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் அவர், அவை அரசியல் காரணங்களுக்காகத் தன் மீது சுமத்தப்பட்டவை என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

இவ்வாண்டு முற்பகுதியில் மீண்டும் வெளி அரசியலில் பெரிதாகப் புகுந்து கொண்டார்.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

Tamil political activist assassinated by LTTE gunmen: Maheswari Velautham shot dead in Jaffna

Posted by Snapjudge மேல் மே 15, 2008

LTTE Hunts Down Human Beings – Ms. Velautham Funeral Todayமகேஸ்வரி வேலாயுதம் படுகொலை செய்யப்பட்டார்

மகேஸ்வரி வேலாயுதம்
மகேஸ்வரி வேலாயுதம்

இலங்கையின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சக ஆலோசகரும், மனித உரிமைகள் சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் யாழ்ப்பாணம் கரவெட்டியில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாயைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த மகேஸ்வரி வேலாயுதத்தை, அங்கு இராணுவ உடையில் வந்த விடுதலைப்புலிகளே சுட்டுக்கொலை செய்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.

இறக்கும் போது மகேஸ்வரிக்கு வயது 53. அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்த போதிலும், அவர் எந்தவிதமான பாதுகாப்பையும் கோரியிருக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகளின் தரப்புக் கருத்தை உடனடியாகப் பெறமுடியவில்லை.

TamilNet: EPDP TAMIL TRAITOR Maheswari Velayutham shot dead in Jaffna – Eelam Justice Dispensed!

Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »